Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abhaya Malli
Abhaya Malli
Abhaya Malli
Ebook117 pages1 hour

Abhaya Malli

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai. He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu. Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
LanguageUnknown
Release dateMay 2, 2016
ISBN6580100700130
Abhaya Malli

Related categories

Reviews for Abhaya Malli

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abhaya Malli - Indira Soundarrajan

    http://www.pustaka.co.in

    அபாய மல்லி

    Abhaya Malli

    Author :

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    வன மகோத்சவம் என்று ஒரு நூல்! சேர்வராயன் மலைக்காட்டில் தவம் செய்த சிந்தாமணி சண்முகனார் என்பவர் எழுதியது.

    எல்லோரும் எழுத்தாணியால் பனை ஓலையில் தான் எழுதி வைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் அது கால காலத்துக்கும் வருங்கால சந்ததிக்கும் பயன்படும். ஆனால் சிந்தாமணி சண்முகனாரோ அந்த நூலை ஒரு வெண்பட்டு வஸ்திரத்தில் தனது உதிரத்தையே மசியாகக் கொண்டு எழுதினார் நூறு முழு நீளமுள்ள அந்த வஸ்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி எழுதியும் முடித்தார்! எழுதியதை நன்றாக மடித்து ஒரு தேக்கு மரத்தாலான பெட்டிக் குள்ளும் வைத்தார். பின் அந்த பெட்டியை என்னிடம் தான் ஒப்புவித்தார்!’

    திருவேளுர் சங்கரன

    சென்னை விமான நிலையம்!

    ரன்வேயில் மலேசிய விமானம் ஒன்று பறந்தது போதும் என்பது போல இறங்கியிருந்தது.

    அந்த இரும்புப் பறவை வானில் நீந்தி வந்து தரைதொட்டு வளைந்து ஓடி. பின் ஏராள இரைச்சலோடு தேங்கி நின்றதை இமைக்கக் கூட மறந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.

    சற்றைக்கெல்லாம் நகரும்படி வண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு போய் அதன் கதவருகே பொருத்தினார்கள்.

    ஆனந்தியிடம் ஆவல் கூட ஆரம்பித்தது.

    விமானத்தின் நுழைவுக் கதவு திறந்து கொள்ள உள்ளிருந்து பயணிகளும் வெளிப்பட தொடங்கினார்கள்.

    ஆனந்தி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    மனதில் தேன் நிரம்பியிருந்தான் அவளது அத்தை மகன்!

    அவளை ஏமாற்றாதபடி அவனும் அதிலிருந்து உதிர ஆரம்பித்தான். எந்த சினிமா டைரக்டர் பார்த்தாலும் ‘நடிக்க விருப்பமா?’என்று கேட்கும் இளமை ததும்பும் உடல்வாகு….! அமிதாப்பச்சன் போல ட்ரிம் செய்த தாடி மீசை,‘ஐ ஆம் ஆல்வேஸ் செர்ச்சிங் யூ!’ என்னும் வாசகம் பதிந்த இறுக்கமான் டி-ஷர்ட். ஒரு பெர்முடாஸ் டவுசர் என்று மேல்நாட்டு நாகரீகத்தின் கொத்தான தாக்கத்தோடு காதுகள் தேவையில்லை மூக்கின் மேலுள்ள ஒடுக்கே போதும் அதை கவ்விப் பிடித்துக்கொண்டு அமர்ந்து கொள்வேன் என்னும் படியான ஒரு ரூபாய் நாணயம் போன்ற வட்டவடிவ கூலிங்கிளாஸ் சகிதம் அவன் நடந்து வருவதைப் பார்த்த, ஆனந்தி ஏனோ படபடக்கத் தொடங்கினாள்.

    க்ளியரன்ஸில் லக்கேஜ் பேக்குகளை அடையாளம் கண்டு அள்ளிக் கொண்டு வந்தவன் முன்னால். அந்தப் படபடப்பு குறையாமல் அத்தான்…. என்று கூவியபடி போய் நின்றாள். அவனிடமும் திகைப்பு.

    யாரு ஆனந்தியா?

    ஆனந்தியே தான்….

    Is it True

    ஹண்ட்ரட் பர்சன்ட்!

    ஏய் இனி நீ என்னைப் பார்க்க முடியாது. நானும் உன்னைப் பார்க்க முடியாது. உனக்கு கல்யாணம் ஆயிடிச்சு அப்படி இப்படின்னு சொன்னாங்களே….?

    அவன் கண்ணாடியை விலக்கியபடியே அவளைப் பார்த்து கேட்ட கேள்விகள் அவளை கண்கலங்க வைத்துவிட்டன.

    கலக்கத்தோடு அவனை ஏறிட்டாள்.

    என்னாச்சு ஆனந்தி…. ஓய் டு யூ க்ரை?

    பயணிகள் பலருக்கு நடுவில் தேவனும் சற்றுப் பதற.

    ஹலோ மிஸ்டர் தேவன்…என்று ஒரு குரல் சற்று தள்ளி ஒலித்தது. திரும்பிப் பார்த்தான்.

    உயரமாய் ஒல்லியாய் அதே சமயம் பார்க்க லட்சணமாக ஒரு இளைஞன் தெரிந்தான். தேவனை நெருங்கி வந்தான்.

    "ஐ ஆம் காந்தன். என்றபடி கைகளை நீட்டினான். தேவனும் நாகரிகம் கருதி கைகளை நீட்டி குலுக்கினான்.

    வெரி கிளாட் டு மீட் யூ… நீங்க எப்ப இந்தியா வருவீங்க. எப்ப உங்க கைல ஆனந்தியை ஒப்படைப்போம்னு தான் துடிச்சிட்டு இருக்கேன்.

    அவன் சொல்லவும் தேவனுக்கு மெல்ல அர்த்தமாகத் தொடங்கியது.

    யூ….மீன்….!

    யெஸ்….நான்தான் ஆனந்தியோட பொம்மை புருஷன்!

    வாட்?

    ப்ளீஸ்… இங்க எதையும் பேசவேண்டாம். வீட்டுக்கு போய் பேசுவோமே…

    வீட்டுக்கா… நான் ஹோட்டல்ல ரூம் போட்ருக்கேனே…?

    நாட் நெசசரி…. நீங்க முதல்ல எங்க வீட்டுக்கு வர்றீங்க. பிறகுதான் மத்ததெல்லாம்….

    ….காந்தன் தேவனை மென்மையான குரலில் வற்புறுத்தினான். தேவனின் பார்வை ஆனந்தியின் பக்கம் தொடங்கியது.

    அவள் கண்களில் ஈரப்படர்ச்சி.

    அதை அவள் யாரும் பார்க்காதபடி துடைத்துவிட்டுக் கொண்டாள்.

    முகம் நிறைய சோகம் அப்பிக்கிடந்தது.

    பார்க்கவும் பரிதாபமாக இருந்தது.

    தேவனுக்கு புரிந்துவிட்டது.

    நடக்கக்கூடாத ஏதோ நடந்திருக்கிறது!

    என்ன அது?

    2

    ‘இந்த பெட்டியை என்னிடம் ஏன் தருகிறீர்கள் என்று கேட்டேன். காரணமாகத்தான் உன்னிடம் தருகிறேன். பத்திரமாக வைத்திரு என்றார். இந்த பட்டு வஸ்திரத்தை பிரித்து நீங்கள் எழுதியுள்ளதை நான் படிக்கலாமா என்று கேட்டேன்.

    "அது நீ படிப்பதற்காக அல்ல’ என்றார் சித்தாமணி சண்முகனார் அப்படியானால்….?’

    -திருவேளுர் சங்கரன்

    காந்தனின் பங்களாவில் அந்த கார் அடங்கியது.

    எழுபதுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும். பழைய கறுப்பு வெள்ளை படங்களில் வரும் பணக்காரர்களின் வீடுபோல போர்ட்டிகோ முன்னால் தோட்டம், அதில் இரு மாடுகள் முட்டிக்கொள்வது போல சிலை என்று பங்களாவில் பழமையின் மணம்.

    இது எங்க அக்காவோட பங்களா. ஆனா இதை அவங்க எனக்கு எழுதி வெச்சுட்டாங்க….என்றபடியே தேவனை உள்ளே அழைத்துச் சென்றான் காந்தன். அவர்கள் பின்னாலேயே ஒரு சேடிப்பெண் போல மௌனமாகத் தொடர்ந்தாள் ஆனந்தி.

    உள்ளே நல்ல விஸ்தாரம்.

    நிலைக் காலில் இருந்து, ஹாலில் கிடைக்கும் ஃபர்னிச்சர் வரை சர்வமும் தேக்கு வார்னீஸ் பளபளப்பில் கண்ணைப் பறித்தது.

    உக்காருங்க தேவன்… காந்தன் இருக்கையை காட்டினான். தேவனும் அமர்ந்தான். ஆனந்தியைப் பார்த்தான். அவள் கழுத்தில் காந்தன் கட்டியிருக்கும் தாலிச்சரடு. தேவன் பார்க்கவும் ஆனந்தி அதை சேலைத் தலைப்பில் மூடப் பார்த்தாள்.

    என்ன சாப்பிடறீங்க?- காந்தன் கேள்வி உபசரிப்பில் நுழைந்தது.

    "நான் இப்ப எதையும் சாப்பிடற மூட்ல இல்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1