Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anna Karenina
Anna Karenina
Anna Karenina
Ebook202 pages2 hours

Anna Karenina

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books are published.
LanguageUnknown
Release dateJun 18, 2016
ISBN6580103700868
Anna Karenina

Reviews for Anna Karenina

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anna Karenina - Sivan

    http://www.pustaka.co.in

    அன்னா கரெனினா

    Anna Karenina

    Author:

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓர் அறிமுகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    ஓர் அறிமுகம்

    ‘போரும் அமைதியும்’என்கிற மகத்தான இதிகாசத்தைப் படைத்த டால்ஸ்டாய்தானா இந்த ‘அன்னா கரெனினா’வையும் படைத்தவர் என்கிற வியப்பு மேலிடவே செய்கிறது. இரண்டும், வெவ்வேறு வகையான நாவல்கள், முந்தைய நாவல் சமூகம் மற்றும் அரசியல் பின்னணி கொண்ட, உயரிய ஒரு படைப்பு;பிந்தையது மிகவும் நுட்பமான மனித உணர்வுகள் மென்மையாகவும் மேன்மையாகவும் பின்னிப்பிணைந்துள்ளதை உள்முகமாகப் பார்க்கும் வாழ்வியல் சித்தரிப்பு.

    ரஷ்ய மக்கள் முக்கியக் கதாபாத்திரங்களாக உலவி, தேசிய வரலாற்றின் முக்கியமான ஒரு காலகட்டத்தை ஒன்றிணைந்து விவரிக்கும் போரும் அமைதியும் ஒருபுறம். நாவலின் பெயரே அதன் பரிணமாப் போக்கை சூசகமாகத் தெரிவிக்கிறது. கதாநாயகியின் பெயரையே தலைப்பாகக் கொண்ட அன்னா கரெனினாவோ வீட்டின் உட்புறங்களையும், படுக்கையறைகளையும், கணவன்-மனைவி உறவு, காதல் போன்றவற்றையும் மையமாகக் கொண்டிருக்கிற ஒன்று. டால்ஸ்டாய் என்கிற மகத்தான கலைஞனின் வித்தியாசமான கலை வெளிப்பாடுகளாகவே இதைக் கொள்ளலாம். பிறர் பின்பற்ற முடியாத மாதிரியான காட்சியமைப்புகளும், அவற்றை விவரிக்கும் முறையும் டால்ஸ்டாயின் மற்றொரு சிறப்பு எனலாம்.

    1828 மாஸ்கோ நகருக்குத் தெற்கிலுள்ள தூலய் பகுதியில் யாஸ்னாயா போல்யானா என்ற இடத்தில் பிறந்தவர் டால்ஸ்டாய். இவரது தாய்வழி மற்றும் தந்தைவழி உறவினர்களில் பெரும்பாலானவர்கள் இவரது பிற்காலப் படைப்புகளில் கதாபாத்திரங்களாக மறுபிறப்பெடுத்து இருக்கிறார்கள். பிரெஞ்சுகாரரான ஆசிரியரிடம் கல்வி பயிலத் தொடங்கிள டால்ஸ்டாய், கஸான் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தாலும் பட்டம் எதுவும் பெறவில்லை. மூன்று வருட காலத்தைப் பல்கலைக்கழகத்திலேயே செலவழித்தார். கொஞ்ச காலம் சோம்பியிருந்தே காலம் கடத்தினார். பின்னர் ராணுவத்தில் சேர்ந்து காகசஸ் மலைப்பகுதிகளில் நீண்ட நாள் தங்கியிருந்தார். புகழ்பெற்ற கிரிமியன் போரில் பங்குகொண்டார். போர் முறைகள் பற்றிய அறிவை, இந்தக் காலகட்டத்தில்தான் அவர் பெற்றார். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்த பிறகு யாஸ்னாயா போல்யானாவுக்குத் திரும்பி வந்த டால்ஸ்டாய் மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்தார்.

    தத்துவர் சிந்தனையாளராகவும், சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்டவராகமிருந்த டால்ஸ்டாய் ரஷ்யாவின் விவசாயக் குடியினர் நாகரிகத்தில் ஏனையவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுடன், நாகரிகத்தில் மிகவும் முன்னேறியவர்களிடமுள்ள ஏனைய குறைகள் அவர்களைப் பாதிக்கவில்லை என்றும் நம்பினார். எனவே தனது பண்ணையில் வேலை செய்யும் குடியானவர்கள் மற்றும் ஏழை எளியோருக்காகப் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவினார்.

    1852-ல் ‘குழந்தைப் பருவம்’ என்ற சிறுகதை மூலமாக ஓர் எழுத்தாளராக அறிமுகமானார். பின்னர் ‘சிறுவயது’, ‘இளமை’ என்ற புத்தகங்கள் வெளியாகின. 1863-ம் ஆண்டில் டால்ஸ்டாய் எழுதிய ‘கொஸ்ஸாக்குகள்’ நாவலில் காகசஸ் மலைப்பகுதியின் ராணுவவாழ்க்கை சித்திரிக்கப்பட்டது. 1865-69 காலகட்டத்தில்தான் இவரது குறிப்பிடத்தக்க படைப்பான ‘போரும் அமைதியும்’ நாவல் எழுதப்பட்டது. 1875-77 காலக்கட்டத்தில் எழுதப்பட்ட மற்றொரு மகத்தான நாவல் ‘அன்னா கரெனினா’

    1876-ம் ஆண்டில் டால்ஸ்டாயிடம் மகத்தான ஒரு மனமாற்றம் ஏற்பட்டது. இளமைப் பருவத்தில் கருணையுடன் சுதந்திரமாகச் செயல்பட்டபோதிலும், அவருள் மற்றொரு மனவோட்டம் நெடுங்காலமாக நிகழ்ந்திருக்க வேண்டும். நடுவயதைத் தாண்டும் காலகட்டத்தில் கிறிஸ்தவ மதக் கொள்கையை ஒட்டி உலகை நேசிக்கும் அன்புக் கொள்கையால் கவரப்பட்டார். தீமையை எதிர்ப்பதற்குப் பதிலாகக் களங்கமற்றதும், எளிமையானதுமான ஆன்மீக நம்பிக்கைகளின் அடிப்படையில் சாதாரண விவசாயியைப்போல் வாழ விரும்பினார். அப்போது ஏராளமானவர்கள் டால்ஸ்டாயிடம் சீடர்களாகச் சேர்ந்தனர். அகிம்சைக் கொள்கையை டால்ஸ்டாய் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கினார். இந்தக் கொள்கைதான் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் மீது பேரன்பு கொள்ளக் காரணமானது.

    1862-ம் ஆண்டில் தன்னுடைய 34-வது வயதில், அவரைக் காட்டிலும் மிகவும் வயது குறைந்த ஓர் இளம்பெண்ணைத் திருமணம் புரிந்தார். இந்தத் திருமணம் இன்றும்கூட ஒரு விவாதப் பொருளாகவே தொடர்கிறது. தனது இளம்பருவ வாழ்க்கையின் போது அவர் எழுதி வைத்த டைரியை இளம் மனைவியிடம் கொடுத்தார். அது, டால்ஸ்டாய் மீது அந்தப் பெண்ணுக்கு வெறுப்பு ஏற்படக் காரணமானது. பிற்கால வாழ்க்கையில் பிரம்பச்சரிய விரதத்தைக் கைக்கொண்ட டால்ஸ்டாய்க்கு, இளம்பருவத்தில் அதைத் தாறுமாறாகச் சிதைத்தவர் என்ற உணர்வு இருந்தது. பதின்மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான பிறகே அவர் லட்சியக் காதலைப் பற்றி வாய் ஓயாமல் பேசத் தொடங்கினார் என்று அவரது சமகாலத்தவர் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

    ஐம்பதாவது வயதை எட்டிய டால்ஸ்டாய், மத நம்பிக்கைகளுக்குத் திரும்பி வந்தார். அப்போத தூய்மைப் படுத்தப்பட்ட புதியதொரு ஆன்மீக முறையை உருவாக்கினார். செயின்ட் பால் போன்றவர்களின் சித்தாந்தங்களை முழுமையாக நிராகரித்த அவர் புத்தர், சாக்ரட்டீஸ் போன்றவர்களின் கருத்துக்களையொட்டி அமைந்த புதிய கிறிஸ்தவ மதம் ஒன்றில் ஈடுபாடு காட்டினார். அகிம்சை மற்றும் உலக அளவிலான அன்பு என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தனது கொள்கையைப் பரப்புவதில் தீவிர ஈடுபாடு காட்டினார். கூடவே, ஆட்சியாளர்களின் போக்கு பற்றியும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தார். வஞ்சகம், மோசடி, சுரண்டல் போன்றவற்றுடன் ஆயுதபலத்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான் ஆட்சியாளர்களின் இயல்பு. எனவே, அரசின் எல்லாவித அமைப்புகளும் தீமைகளின் இருப்பிடங்கள் என்று பிரகடனம் செய்தார் டால்ஸ்டாய். அரசியல், சொத்துகள், நீதி-நீயாயம் - நேர்மை போன்ற எல்லாமே தார்மீகத்தை மீறியவை என்று வாதிட்டார். தார்மீக லட்சியங்கள்தான் கலையின் அடிப்படை என்று வெளிப்படையாகக் கூறினார். இதைத் தெளிவுபடுத்தவில்லை என்று ஷேக்ஸ்பியரையே அவர் குற்றம் சாட்டினார்.

    ‘நான் எதை நம்புகிறேன், நாம் எப்போது என்ன செய்ய வேண்டும்?, கடவுளின் ராஜ்யம் உனக்குள்தான், எதுகலை?’ போன்ற புத்தகங்களில் டால்ஸ்டாயின் பிந்தைய கால சித்தாந்தங்கள் தெளிவாக இடம் பெற்றுள்ளன. விவசாயியின் பாணியில் தனக்கென்று சொந்தமான சொத்துக்கள் எதையும் வைத்துக் கொள்ளாமல், அசைவ உணவைத் துறந்து யாஸ்னாயா போல்யானாவில் வாழ்ந்த டால்ஸ்டாய் இறுதிக்கட்டத்தில் வீட்டையும், குடும்பத்தையும் துறந்து அலையத் தொடங்கினார். இப்படி 82-வது வயதில் ஆரோக்கியம் குன்றி, நிமோனியக் காய்ச்சலால் பிடிக்கப்பட்டு, மிகச் சிறிய ஒரு ரயில்வே ஸ்டேஷனில் 1910, நவம்பர் மாதம் 9-ம் தேதி அவர் இறந்தார். ஒரு மகத்தான் வாழ்க்கையில் முடிவு சோகத்துக்குரியதாக இருந்தது.

    சென்னை – 600 078

    தொலைபேசி: 4837681

    தோழமையுடன்

    சிவன்

    அன்னா கரெனினா

    லியோ டால்ஸ்டாய்

    -தமிழில் சிவன்

    1

    மகிழ்ச்சி நிறைந்த குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை. ஆனால், மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றும் அதனதன் வழியில் வெவ்வேறு வகைகளில் மகிழ்ச்சியல்லாதவைதான்.

    ஆப்லான்ஸ்கியின் வீட்டில் எல்லாமே பிரச்சினைகள்தான். ஆப்லான்ஸ்கியின் மனைவி, அவளது வீட்டில் வேலை செய்யும் பிரெஞ்சுப் பெண்மணியுடன் தனது கணவன் தகாத உறவு வைத்திருப்பதைப் கண்டுபிடித்தாள். அந்த விநாடியிலிருந்து அந்த வீட்டில், தன் கணவருடன் குடும்பம் நடத்த முடியாதென்று அவள் வெளிப்படையாகவே கூறிவிட்டாள். கடந்த மூன்று நாட்களாக நிலைமை அப்படியேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டிலிருப்பவர்களுக்கெல்லாம் இந்த விஷயம் தெரிந்து விட்டதால், அவர்கள் ஆங்காங்கே நின்று அதைப் பற்றி ரகசியமாகப் பேசவும் தொடங்கினர். மனைவியோ, தனது அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தாள். ஆப்லான்ஸ்கி வீட்டுக்கு வந்து மூன்று நாட்களாக்கிவிட்டன. குழந்தைகள் வீட்டுக்குள் கண்டபடி அலைந்து திரிந்தன. வேலைக்காரர்கள் தங்களுக்குள் அடிதடி ரகளை வரை நடத்திவிட்டு வெவ்வேறு வீடுகளுக்குச் சென்று வேலை பார்க்கத் தொடங்கினர்.

    ஸ்டீவா என்ற செல்லப்பெயரில் குறிப்பிடப்படும் பிரபு ஸ்டைப்பான் ஆர்க்கடைவிச்சின் வீட்டின் சண்டை நடந்து முடிந்த மூன்றாவது நாளன்று வழக்கம்போல் காலையில் எட்டு மணிக்குத் கண்விழித்த போதுதான், தான் படுத்திருப்பது தன் மனைவியின் படுக்கை அறையில் அல்ல் தனது அலுவலக அறையில் - வெறும் சோஃபாவில் என்பது விளங்கியது. படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தவர் கண்களைத் திறந்தார். ‘ச்சே… எப்படிப்பட்ட கனவுகள்! எவ்வளவு அருமையாக இருந்தன? நான் ஏன் இங்கு வந்து படுத்தேன்? ஓகோ… இப்போது நினைவுக்கு வருகிறது. அவள் என்னை மன்னிப்பாளா? மாட்டாள்! எல்லாமே என்னுடைய தவறுகள்தான். ஐயோ… தாங்கமுடியவில்லையே.’ அவர் யோசனையில் ஆழ்ந்தார். சினிமா பார்த்துவிட்டு எவ்வளவு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பிவந்தோம்? மனைவி கண்ணிலேயே தட்டுப்படவில்லை. கடைசியில் படுக்கையறையில், ஒரு கடித்தத்தை பிடித்துக்கொண்டு அவள் தலைகுனிந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் திகைத்துப் போனோம். தன் டாலிக்கு என்ன நேர்ந்தது? தான் சிரிக்க முயன்றோம். ஆனால், டாலியோ கோபம் தாங்காதவளாகத் துள்ளிக் குதித்து எண்ணிக்கையற்ற கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசினாள். ஸ்டைப்பான் ஏமாற்றமடைந்தார். ‘மேற்கொண்டு என்ன செய்வது?’ என்று புரியமால் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டார். அது ஒரு முணுமுணுப்பாக ஒலித்தது.

    ஸ்டாப்பானுக்கு வயது முப்பத்துநான்கு. ஐந்து குழந்தைகளுக்குத் தாயான தன் மனைவி மீது தனக்கு அபாரமான அன்பு எதுவும் இல்லையென்று அவருக்கே நன்றாகத் தெரியும். இருப்பினும் தனது மோசமான நடவடிக்கைகளை அவளிடமிருந்து மறைத்து வைத்தார். மனைவியின் எந்த ஒரு விஷயத்திலும் அவர் தலையிடுவதில்லை. எல்லாமே அவளது விருப்பப்படிதான் நடந்தன. ‘ஒரு வேலைக்காரியை அமர்த்தியது குற்றமா என்ன? ஆனால், அந்த வேலைக்காரியிடம் தான் நடந்து கொண்டது நேர்மையானது தானா? இனிமேல் என்ன செய்வது?’ வெகுநேரம் யோசித்தார். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு நிம்மதியாகக் கொஞ்ச நேரம் தூங்கினால் தேவலாம் என்று தோன்றியது. ஆனால், அதுவும் முடியவில்லை. அவர் உடை மாற்றிக்கொண்டு அறைக்கு வெளியே வந்தார். மேஜைமீது கிடந்த காகிதங்கள் சிலவற்றைப் புரட்டிப் பார்த்தார். அங்கிருந்த ஒரு தந்தியை எடுத்து, உறையைப் பிரித்து வாசித்தார். பிறகு வேலைக்காரனை அழைத்து என் தங்கை அன்னா ஆர்க்கடைவ்னா நாளைக்கு வருகிறாள் மாட்வி… என்றார்.

    அவரது கணவரும் உடன் வருகிறாரா? அல்லது தனியாகத்தானா? வேலைக்காரன் கேட்டான்.

    தனியாகத்தான்! என்று பதிலளித்தார்.

    அங்கு நடந்த சண்டையைச் சமரசம் செய்து வைப்பதற்காகத்தான் அவள் வருகிறாள் என்று மாட்வி நினைத்தான்.

    ஸ்டைப்பான் ஆப்லான்ஸ்கிக்கு நண்பர்கள் ஏராளம். அவர்களில் கான்ஸ்மாண்டின் லெவின் மிகவும் நெருக்கமானவர். அவர்கள் இருவருமே சமவயதினர்தான். மாறுபட்ட பார்வையுள்ளவர்களாக இருப்பினும் பரஸ்பரம் நெருங்கிய நட்புக்கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தனது வாழ்க்கைதான் சரியென்று தோன்றியது. ஆப்லான்ஸ்கி லெவினை எப்போதும் மிகவும் இளக்காரத்துடன்தான் பார்ப்பார். ஸ்டைப்பான் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. லெவின் அடிக்கடி மாஸ்கோவுக்கு வருவான். லெவினது அறைக்குள் ஸ்டைப்பான் நுழைந்தபோது. லெவின் தனது நண்பர்களுடன் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தான்.

    என்ன சௌக்கியம்தானே? நான் உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். நிறைய விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது. உங்கள் சௌகரியம் எப்படி? லெவின் கேட்டான்.

    நாம் வெளியில் எங்காவது போய்ச் சாப்பிடலாம். அப்படியே பேசிக் கொள்ளலாமே? ஸ்டைப்பான் சொன்னார்: இப்போது எனக்கு வேலை எதுவும் இல்லை.

    ஐயோ… அது முடியாது! வேறு ஓர் இடத்துக்குப் போக வேண்டியிருக்கிறது. நான் ரொம்பவும் கொஞ்சமாகத்தான் பேச வேண்டியிருக்கிறது. லெவின் பதிலளித்தான்.

    "அப்படியானல்

    Enjoying the preview?
    Page 1 of 1