Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaigai Nadhi Orathiley!
Vaigai Nadhi Orathiley!
Vaigai Nadhi Orathiley!
Ebook108 pages54 minutes

Vaigai Nadhi Orathiley!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Got “Izanthamilaringnar” award from Bharathiyar Manavar Tamil Mandram at 2001. Participating in Children’s Science Congress Conference in 2003. Submit Project in National Children’s Science Congress in 2003 under the title “ FOOD SYSTEMS – Towards Nutrition for all". Got 1st prize in Zone Level Drawing Competition by Temple Jaycees in 2005. District Level 2nd Prize in Tamil Poem Writing in 2006. Medical Transcription Training Academy’s EXCELLENCE AWARD Shield in 2007. District Level Prize in Tamil Short Story Writing in 40th National Library week Function.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110501484
Vaigai Nadhi Orathiley!

Read more from Shrijo

Related to Vaigai Nadhi Orathiley!

Related ebooks

Reviews for Vaigai Nadhi Orathiley!

Rating: 4.4 out of 5 stars
4.5/5

10 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaigai Nadhi Orathiley! - Shrijo

    http://www.pustaka.co.in

    வைகை நதி ஓரத்திலே!

    Vaigai Nathi Oorathiley!

    Author :

    ஸ்ரீஜோ

    Shrijo

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shrijo

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    வைகை நதி ஓரத்திலே!

    அத்தியாயம் - 1

    ஆரஞ்சு நிற

    மேகக் கூட்டம்!

    ஆதவன் சற்றே

    மேலேறினான்!

    அவனைக் கண்டு வெட்கி

    ஆரஞ்சு மேகங்கள்

    அலைப்புற்று மறைந்தன!

    ஆழ் துயில் கொண்ட

    சேவலும்

    ஆதவன் வருகையை உணர்ந்ததோ!

    மெல்ல கண்விழித்து

    வேகமாக அறிவித்தது!

    புதிய நாள்!

    புதிதாகப் பிறந்திருக்கின்றதென!

    ஊரே

    உதயத்தை வரவேற்க

    உடனடியாகக் கிளம்ப

    நான் மட்டும்

    உறக்கத்தை தொடர்கின்றேன்!

    என் கனவுகளைத் தொடந்து!

    அந்த அதிகாலை நேரம், சோம்பலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று, வைகை நதிக்கரையில் அமைந்து இருந்த வாடிப்பட்டி என்ற சிற்றூரின் மக்கள், அன்றைய விடியலை உற்சாகத்தோடு ஆரம்பித்துக்கொண்டு இருந்தனர்.

    ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சத்தம் என்றால், நம் கதையின் நாயகி வீட்டில், அவளுடைய அம்மா தங்கம் அவளை எழுப்புவதற்கு கத்திக்கொண்டு இருந்தார்.

    ஏலே செல்வி.. எந்திரில.... உம்ம அப்பத்தா பார்த்தா இன்னிய பொழுதுக்கு உம்ம பேர் தாம்ல அவுக வாயில அறபடும்.

    ப்ச். என்னம்மா நீ. கொஞ்ச நேரம் தூங்குறேனே

    நீ மொதல்ல எந்திரி... கால வேல முடிச்சுட்டு பொறவு படுத்து தூங்கு

    ச்சே.. இதுக்கு ஹாஸ்டல்லயே இருந்துருக்கலாம்

    என்னல மொனகுற?

    ஒண்ணுமில்ல. என்றவள் கைகளினால் தலையணைக்கு அடியில் துழாவி, விநாயகர் படம் ஒன்றை எடுத்து அதில் கண்விழித்தாள்.

    விநாயகா. குட் மார்னிங். இந்த அப்பத்தாகிட்ட மட்டும் மாட்டி விட்டுடாத. மறுபடியும் நைட் மீட் பண்ணுவோம் என்றவள் எழுந்து உட்கார்ந்துப் போர்வையை மடிக்க ஆரம்பித்தாள்.

    செல்வி என்ற தாமரைச் செல்வி. தங்கம் மற்றும் பொன்னரசுவின் ஒரே மகள். மூன்றாம் ஆண்டு கணித இளங்கலைப் பட்டம் படித்துக்கொண்டு இருக்கின்றாள்.

    பள்ளியிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றாலும், ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின்பு தான் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள். அதுவும் அவர்களது குடும்ப நிலைமைக்கு, அவளுக்கு சீட் மதுரையில் இலவசமாகக் கிடைக்க, அதைச் சொல்லியேப் படிக்கக் கிளம்பினாள்.

    பழமை மாறாத அவளுடைய அப்பத்தா அவளுக்கு எப்போதும் வில்லி தான். இந்த விஷயத்திலும் அவர் மறுத்து நிற்க, பொன்னரசுவை சரி கட்டி காரியம் சாதித்துக் கொண்டாள்.

    போக வரும் தூரம் நேரம் கணக்கிட்டு ஹாஸ்டலில் சேர்ந்துகொண்டாள். இப்போதைக்கு அவளுக்கு முதுகலைப் பட்டம் படிக்க வேண்டும், நல்ல வேலைக்குப் போக வேண்டும். அவ்வளவே.

    அந்த விடிந்தும் விடியாதக் காலையில், மாற்றுடை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுத் தோழி வள்ளியுடன் ஆற்றுக்கு குளிக்கக் கிளம்பினாள்.

    ஏல செல்வி. இன்னிக்கு என்ன உங்க வீட்ல உங்க அம்மா சத்தம் ஊருக்கே கேட்டுச்சு

    எழுந்திரிக்க லேட் பண்ணிட்டேன் புள்ள. அதான்

    உங்க அப்பத்தா கண்ணுல படலைல

    பின்வாசல் வழியா உங்க வீட்டுக்கு வந்துட்டேன் புள்ள

    சரி சரி. வெரசா வா.

    ஆற்றில் முங்கி எழுந்து குளிக்க குளிக்க செல்விக்கு உற்ச்சாகம் பீறிட்டது. தினமும் ஹாஸ்டலில், லைனில் நின்று, ஒரு பக்கெட் நீரில் குளித்துக் குளித்து பிறந்தது முதல் ஆற்றில் குளித்துப் பழகிய செல்விக்கு எழுந்து வர மனமில்லை.

    ஏல. வெரசா வா. எங்கய்யங்கிட்ட என்ன மாட்டி விட்டுடாத

    இருபிள்ளை என்றவள் மனமின்றி எழுந்து வந்தாள்.

    குளித்து முடித்து வீட்டிற்கு திரும்ப, வாசலிலேயே அவளுடைய அப்பத்தா உட்கார்ந்து காய் நறுக்கிக்கொண்டு இருந்தார்.

    என்னல. குளிச்சு வர இம்புட்டு நேரமா?

    அவள் மருகிக்கொண்டே நிற்க,

    மச மசன்னு நிக்காம போயி வேலையைப் பாரு

    சரி அப்பத்தா

    வீட்டிற்குள் நுழைந்து, உடைகளை பின்னால் இருந்த கொடியில் காயப்போட்டவள், தங்கத்திற்கு வீட்டு வேலையில் உதவப் போனாள்.

    அன்று என்னவோ அவளுடைய அப்பத்தா அவளை எதுவும் சொல்லவில்லை, அதுவே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

    அதுவும் அன்று மாலை வரைதான் நீடித்தது.

    அத்தியாயம் - 2

    மதியம் உறங்கிக் கொண்டு இருந்தவளை வீட்டின் உள்ளிருந்து வந்த பலகார வாசம் தட்டியெழுப்பியது.

    உறக்கம் கலைந்து எழுந்தவள், மெல்ல சமையலறையில் எட்டிப் பார்க்க, தங்கமும், வள்ளியின் அம்மாவும் பலகாரம் செய்வதில் முனைப்பாக இருந்தனர்.

    "என்னம்மா என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1