Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusamy Padam Edukkirar
Appusamy Padam Edukkirar
Appusamy Padam Edukkirar
Ebook261 pages2 hours

Appusamy Padam Edukkirar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580112301622
Appusamy Padam Edukkirar

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Appusamy Padam Edukkirar

Related ebooks

Related categories

Reviews for Appusamy Padam Edukkirar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusamy Padam Edukkirar - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமி படம் எடுக்கிறார்

    Appusamy Padam Edukkirar

    Author :

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For other books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அப்புசாமி படம் எடுக்கிறார்

    1

    அப்புசாமிக்குச் சீதாப்பாட்டி சில கடைசி நிமிஷ எச்சரிக்கைகள் செய்து கொண்டிருந்தாள். அவரும் நல்ல பிள்ளைபோல எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்.

    'இங்கே பாருங்கள், நீங்கள் கொஞ்சம் கேர்ஃபுல்லாக இருக்கணும்.'

    'நான் எப்பவுமே ஃபுல்கேர்தான்.'

    'வெளியிலேயிருந்து கன்னாபின்னாவென்று கூட்டம் வரும். கேட்டைப் பூட்டிடுங்க. டோண்ட் அலவ் அவுட்ஸைடர்ஸ்.'

    'நான் கேட் கிட்டயேதான் இருக்கப்போறேன்.'

    'கேட் கிட்டயே இருக்கணும்னு கஸாப்ளாங்கா மாதிரி அங்கேயே நின்னுடாதீங்க. உள்ளேயும் ஒரு கண் இருக்கட்டும்.'

    'ஒரு கண் என்ன, ஒன்றரைக் கண்ணை உள்ளே வைச்சுட்டு, அரைக் கண்ணைக் கேட்டுலே வச்சுக்கறேன்!'

    'நான் சீரியஸாப் பேசறேன்.'

    'நான் மட்டும்?'

    சீதாப்பாட்டி குரலைச் சற்றுத் தாழ்த்திக் கொண்டாள். 'லிஸன் டு மி. வர்றவங்களிலேயே நல்லவர்களும் இருப்பார்கள், ஒண்ணு ரெண்டு க்ளெப்டோமேனியாக்கும் - ஐ மீன் கை நீளமாகவும் இருக்கும். நீங்க கவனமாக இருக்கணும்.'

    'கையை ஒடிச்சிடறேன், புடலங்காய் மாதிரி!'

    'சேச்சே! அப்படிக் கிப்படி பண்ணி வைக்காதீங்க. ஐயம் மச் வொரீட் அபெளட் தீஸ் லாம்ப்ஸ், க்ளாக்ஸ் அண்ட் வீடியோ. சொல்ல மறந்துட்டேன். காஸெட்ஸ் எல்லாம் கன்னாபின்னா வென்று போட்டுக் கிடக்கிறது. யாராவது உங்ககிட்டே எடுத்திட்டுப் போறேன் கீறேன்னு கேட்டால், ஸே நோ. வால் பேப்பர், போஸ்டர்ஸ் எல்லாம் அழுக்கு பண்ணிடப் போறாங்க. அதையும் பார்த்துக்குங்க.'

    'சீதே!' என்றார் அப்புசாமி காதைக் குடைந்துகொண்டு. 'இதெல்லாம் நீ எனக்குச் சொல்லித் தரணுமா சீதே! முக்கியமாக எதைச் சொல்லணுமோ அதைச் சொல்லலையே? நம்ம ரஜினி வாத்யார் வர்றாரா? சிலுக்கு கிலுக்கு உண்டா? யாரோ அனுராதாவாமே? சிலுக்குக்கும் அவளுக்கும்தானாமே போட்டி? நைலக்ஸ் நளினி, கதர் கருப்பாயி, கைத்தறி கெளசல்யா - இப்படி ஏதாவது அயிட்டம் உண்டா? டைரக்டர் யாரு - பாலச்சந்தரா, பாரதிராஜாவா, பாக்யராஜாவா? எல்லிஸ் ஆர். டங்கனா? டி.ஆர். சுந்தரமா? ராஜா ஸாண்டோவா?'

    'எனக்கு அதெல்லாம் நோ ஐடியா. ஏதோ ஸம் ப்ரொடக்ஷன்ஸ். நம்ம அகல்யா சந்தானத்துக்கிட்டே பேசிட்டிருந்திருக்கிறாள் அந்த டைரக்டரோட மனைவி.'

    'அதுதான் கேட்கிறேன் எந்த டைரக்டர்னு? சீதே! நம்ம வீட்டை முதன் முதல்லே ஷூட்டிங்குக்கு விடறோம். ஒரு பிரபல டைரக்டர் வந்து டைரக்ட் பண்ணி, படமும் நூறு நாள் ஓடினால் நம்ம வீட்டுக்கு நல்ல பெயர்.'

    'சேச்சே!' என்றாள் சீதாப்பாட்டி, 'வாட் ஆர் யூ டாக்கிங் யா? நாம என்ன நம்ம வீட்டை பர்மனென்ட்டாகவா ஷூட்டிங் ப்ளேஸாகப் பண்ணப் போகிறோம்? சின்ன பங்களாவுக்குள்ளே ஒரு ஸீன் நடக்கிறதாம். நம்மது க்யூட் லிட்டில் பங்களாவாக இருக்கிறதால் அகல்யா ஸஜஸ்ட் செய்திருக்கிறாள். நானும் ஒப்புக்கொண்டு விட்டேன். அவர்கள் வந்திருக்கிறபோது வீட்டை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.'

    அப்புசாமி, 'சீதே, ஹி ஹி!' என்றார். உன்கிட்டே ஒரு சின்ன விஷயம். ஷூட்டிங் பார்க்க பீமாவும் ரசமும் ரொம்ப ஆசைப்படுவாங்க. கூட இருந்தாங்கன்னா எனக்கும் வீட்டைப் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்!'

    'ஐ டோண்ட் மைண்ட்!' என்ற சீதாப்பாட்டி, காரில் ஏறிக் கொண்டு பா.மு.கழக வேலையாகப் புறப்பட்டுவிட்டாள்.

    தலைப்பிரசவப் பெண்ணின் தாயார்க்காரி மாதிரி அப்புசாமியும் பீமாராவும் ரசகுண்டுவும் வாசலுக்குச் சென்று அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    நாய் பிடிக்கிற நகரசபை வண்டி, டெலிஃபோன் இலாகா ஊர்தி, சத்துணவு லாரி, குப்பைகளைத் தெருவில் தூவும் லாரி, 'தண்ணி' வண்டி, அசல் தண்ணி வண்டி இந்த மாதிரி வாகனங்கள்தான் தெருவில் வருகை போகை தந்தனவே தவிர சினிமாப் படப்பிடிப்பாளர்களின் வண்டியைக் காணோம். அலுத்துப்போய் 'ரிடையர்ட் ஹர்ட் ஆட்டக்காரர்கள்' மாதிரி அப்புசாமியும் ரசகுண்டுவும் உள்ளே திரும்பினார்கள். அப்புசாமி குளிக்கிற காரியத்தையாவது செய்யலாம் என்று துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்கப் புறப்பட்ட சமயம், பீமாராவ் மூச்சிரைக்கக் குரல் கொடுத்தான் தெருப்பக்கமிருந்து. 'தாத்தா! தாத்தா! பந்தாயித்து! பந்தாயித்து! வேன் பந்தாயித்து! கேட்டை ஒபன் மாடு! ஒபன் மாடு! சொன்னா ஓபன் மாடு!' என்று ஏராளமான மாடுகளை அவசரமாக ஏவினான்.

    சில தெலுங்கு, சில மலையாள, சில தமிழ் எழுத்துகள் தீட்டப்பட்ட ஒரு பெரிய மூடுவண்டி, காம்பவுண்டு கேட்டையும் சுவரையும் எந்தக் கோணத்திலிருந்து உடைக்கலாம் என்று முன்னும் பின்னுமாக வந்து முயற்சி செய்து கொண்டிருந்தன.

    'பார்த்து! பார்த்து! பார்த்து!' என்று பதற்றத்துடன் அப்புசாமி கேட்டருகே விரைந்தார். 'உடைச்சிடாதீங்கப்பா கிழவியை! காம்பவுண்டு வந்து கத்துவாள்!' என்று குளறியபடியே, 'ரைட்! ரைட்! டேய் ரசம்! அந்தப் பக்கம் பார்ரா. லெப்டுலே ஒடிப்பா. ரைட்லே வலிச்சிக்க. ரைட்! ரைட்! டபுள் ரைட்!' என்று வண்டி உள்ளே வர உதவி செய்தார்.

    மேலும் பல கடமுட லொட லொடச் சத்தங்கள். அவுட்டோர் யூனிட் வந்தாகிவிட்டது. ஜூனியர், சீனியர் லைட்டுகள், கேமரா, உடைகள் அது இது வந்து இறங்கின.

    அப்புசாமி திறந்தவாய் திறந்தபடி கவனித்துக்கொண்டிருந்தார். கர்நூல் - மந்திராலயம் - மகாநந்தி - அகோபிலம் டுரிஸ்ட்கள் போல சில அவசர ஈக்கள் அவர் வாய்க்குள் குட்டிச் சுற்றுலா செய்து திரும்பின.

    சீட்டுக் கம்பெனியின் வசூல் ஆள் மாதிரி ஒருத்தர் கையில் சின்ன அழுக்குப் பையுடன் நெடுநெடுவென்று கருவலாக உயரமாக அப்புசாமியிடம் வந்தார். அவர் வருவதற்குள் அவர் கழுத்து அப்புசாமியருகே வந்துவிட்டது.

    அப்புசாமிக்கு வினயமாக ஒரு சலாம் செய்தார் வந்தவர். 'நாம நியூமூன் புரொடக்ஷ்ன்ஸுங்க. நீங்கதானுங்களே பங்களா ஒனர்? சலாம்.'

    அப்புசாமிக்குப் பெருமையாக இருந்தது. 'ரொம்ப சலாம்' என்று பதில் மரியாதை செய்தார். அந்த ஆளை அப்புசாமிக்கு நொடியில் பிடித்துவிட்டது. 'நீங்க வந்து டைரக்டரா?' என்று கேட்டு வைத்தார்.

    'அய்யோ! பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க ஸாப். நான் புரொடக்ஷன் மானேஜருக்கு அசிஸ்டெண்டுங்க. லத்தீப் பாய்.'

    'லைட் பாயா?'

    'இல்லீங்க லத்தீப் பாய். அதோ அங்கே வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு ஃபுல் சட்டையிலே இருக்கிறாரே, அவருதாங்க அசிஸ்டெண்ட் டைரக்டர் சங்குமணி!

    அந்த ஆள் அப்புசாமியிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, உதவி டைரக்டர் சங்குமணியிடமிருந்து ஒரு கத்தல் வந்தது.

    'எங்கேய்யா! யோவ் லத்தீப் பாய்! எங்கேய்யா ஒழிஞ்சு போயிட்டே? வந்ததுமே எங்கேய்யா தொலைஞ்சே? தம் அடிக்கப் போயிட்டியா? ஜெனரேட்டருக்குச் சொல்லியிருக்கு தாய்யா?'

    லத்தீப் பாய் நடுக்கத்துடன், 'இதோ சொல்லிடறேன் சார். ஆனால், வேண்டியிருக்காதுங்க!' என்றார்.

    'மூடுய்யா வாயை! முட்டாள்தனமாய் பேசாதே! சொன்னதைச் செய்யிய்யா.'

    அப்புசாமியிடம் லத்தீப் பாய் வந்து தயக்கத்துடன், 'சலாம் சார். டெலிபோன் பண்ணணுங்க!' என்றார் வியர்வையை ஒற்றிக் கொண்டே.

    அப்புசாமி டெலிபோன் இருக்குமிடத்தைக் காட்டிவிட்டு, 'என்ன கோபித்துக் கொள்கிறார் அவரு?' என்று விசாரித்தார்.

    'தப்புதாங்க என்மேலே. சார் சொல்லியிருந்தாரு ஜெனரேட்டருக்கு. நான்தான் மறந்துட்டேன்.

    'சரி, கொண்டு வரேன்னாத் தீர்ந்து போச்சு. அந்த ஆள் எக்கச்சக்கமா கத்தறாரே. ஏய்யா கத்தறேன்னு திருப்பி ஒரு அதட்டல் நீங்க போட்டிருக்கணும்.'

    'அய்யய்யோ!' என்றார் லத்தீப் பாய். 'அவர் கோபிச்சுக்கறது நியாயம்தானுங்களே. நான் செய்தது தப்புதானுங்க. யூனிட் டோடு ஜெனரேட்டரையும் நான் போட்டுக்கிட்டு வந்திருக்கணுங்க.'

    ரசகுண்டு அப்புசாமியின் விலாவில் விருட்டென்று இடித்தான். 'தாத்தாவ்! அருகே, அங்கே பாருங்க!' என்றான் கிசுகிசு குரலில்.

    கதாநாயகியும், தாயாரோ சித்தியோ ஒரு தடி உருவமும், வேலைக்காரி - கம் - டச் அப் பெண் ஒருத்தியும் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்புசாமி ரசகுண்டைப் பதிலுக்கு ரகசியமாக இடித்தார். 'காரட் மாதிரி இன்னா நிறம்டா? ஏண்டா ரசம், அசலா இல்லே ஏதாவது பவுடராடா?'

    'நீங்க கொஞ்சம் சும்மாயிருங்க தாத்தா!' என்று அவரிடமிருந்து கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான் ரசகுண்டு.

    கதாநாயகியின் பெயர் என்ன என்று உடனடியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் அப்புசாமியின் தலை வெடித்துவிடும் போலிருந்தது. ரசகுண்டுவிடம், 'டேய்! என்ன பேராம்டா? பரவாயில்லையில்லே. லட்சணமாகத்தான் இருக்கிறாள். பீமா நீ என்ன நினைக்கிறே?' என்றார் பீமாராவிடம் கிரிக்கெட் விமரிசகர், பக்கத்திலுள்ள எக்ஸ்பர்ட் ஆட்டக்காரரைக் கேட்பது போல.

    அதற்குள் கதாநாயகி, அப்புசாமி அருகேயே வந்துவிட்டாள். சின்னப்பெண். குள்ளம். வயது பதினாறுக்குள் இருந்தாலும் அதிகச் செயற்கையால் கவர்ச்சி எக்கச்சக்கமாகத் திணறிக் கொண்டிருந்தது.

    உதவி டைரக்டர் சங்குமணி ஓடிவந்தார் கதாநாயகியிடம்.

    'வாங்கம்மா. நீங்க இருங்கம்மா. இதோ வந்து டயலாக்கைப் படிச்சுக் காட்டறேன்! என்றவர், யோவ் ஆர்ட்டிஸ்ட் வந்தாச்சு. எங்கேய்யா ஸ்கிரிப்ட் ரீடர்?' என்று ஒரு கத்தல் போட்டார்.

    ஸ்கிரிப்ட் ரீடர் அவரிடம் வசன ஃபைலுடன் விரைந்து வந்தார். 'டயலாக் ரெடி நான் படிச்சுக் காட்டிடட்டுமா? ஹீரோயின் படுக்கையிலே இருக்கிறாள். காதலன் வந்தார் சடனாக. கதவு டொக்குனு அடிக்கிற சத்தம். கவிழ்ந்து படுத்திருந்த ஹீரோயின் நிமிர்ந்து பார்க்கிறாள். 'நீயா?' என்று திடுக்கிடுகிறாள்.

    உதவி டைரக்டர் அலறினார்: 'என்னய்யா வளவளன்னு! டயலாக் மட்டும் சொல்லுய்யான்னா, ஹோல் எபிஸோடையே எடுத்து வுடுவே போலிருக்கு. உன்னையெல்லாம் கட்டிக்கிட்டு மாரடிக்கணும்னுயிருக்கு.'

    'ஸாரிங்க! என்றார் டயலாக் ரீடர். வந்து... வந்து... நீயா? என்கிறதுதாங்க மொத்த டயலாக்கே.'

    'அப்படிச் சொல்லி இழ வெடுத்துட்டுப் போயேன். சரி, சரி. அதைப் போய் அந்தம்மாகிட்டே படிச்சுக்காட்டு. எங்கேய்யா தொலைஞ்சான் அந்த லத்தீப்பு? சரஸம்மாகாருக்கு சாத்துக்குடி ஜூஸ் ரெடி பண்ணியா? டைம் ஆயிட்டே போகுது! அடி என் பிச்சாவரம் நொச்சியாத்தா! எப்படி நான் ஷூட் பண்ணி முடிக்கப்போறேன் நாலு மணிக்குள்ளாற? யாருய்யாது! லைட்டை ரெடி பண்ணுங்க. ஒரு ஜூனியரை இங்கே போடு. ஸீனியரை பெட் ரூம்லே போடு. பாத் ரூமிலே, ஷவர் வேலை செய்யுதா பாரு. லாஸ்ட் மினிட்லே தண்ணி இல்லேம்பாங்க.

    ஒவர் ஹெட்டுலே தண்ணி இருக்குதா கேளு. யாருய்யாது ஹெளஸ் ஒனர்? நீங்க யாருய்யா, தோட்டக்காரரா? மசமசன்னு நிற்காதேய்யா. எங்கேய்யா ஒழிஞ்சான் லத்தீப்! தண்ணி இருக்குதா ஒவர் ஹெட்லே…'

    ரசகுண்டு களுக்கென்று சிரித்தான். 'தாத்தோவ்! உங்களைத்தான் டைரக்டர் கேட்கிறார். நீங்கதான் தோட்டக்காரனாம்! துண்டைக் கட்டிக்கிட்டு நிற்கிறீங்க இல்லையா?'

    அப்புசாமிக்கு அந்த உதவி டைரக்டரைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதுவும் சாதுவான லத்தீப் பாயை அந்த விரட்டு விரட்டியதால் அடியோடு பிடிக்கவில்லை.

    'சரியான காட்டுப் பயல் போலிருக்குது!' என்று முணுமுணுத்துக் கொண்டார் ரசகுண்டுவிடம்.

    சங்குமணி தூள் பரத்திக் கொண்டிருந்தார். 'கன்டினியூட்டி யாருய்யா? ஹீரோயின் டிரெஸ் செக் பண்ணியாச்சா?

    அப்புசாமியின் கலையுள்ளம் 'கோ'வென்று அழுதது. கசாப்புக் கடைக்காரனாட்டம் இருக்கிற இந்த ஆளா இவ்வளவு மெல்லிசான அழகிய பெண்ணை டைரக்ட் பண்ணப்போறான்? ஆளைப் பார்த்தால் கைதி கண்ணாயிரம் மாதிரி இருக்கிறான்.

    ஒரு டைரக்டர்னா எப்படி நளினமாயிருக்கணும். எவ்வளவு நாசூக்காகப் பேசணும். ஈயப் பாத்திரக்காரன் மாதிரி என்ன கூவு கூவுறான்?

    அப்புசாமி படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்று ஒரமாக நின்றுகொண்டு கவனித்தார்.

    கதாநாயகி படுக்கையில் படுத்திருந்தாள். உதவி டைரக்டர் சங்குமணி கட்டிலருகே போய் நின்றார். 'இங்கே பாரும்மா. நீ என்ன பேசணும்னா ரொம்பச் சுருக்கம்தான். ஒரே ஒரு வோர்டுதான். நீயா அப்படிங்கறே. இவ்வளவுதான். என் லிப்பைக் கவனி! நீயா?ன்னு நான் எத்தினி விதமாச் சொல்றேன் பாரு!'

    அப்புசாமியும் கவனித்தார். சங்குமணி அப்படி ஒன்றும் விசேஷமாக அந்த வார்த்தையை உச்சரித்ததாகவோ அவர் உதடுகள் பிரமாதமாக அசைந்ததாகவோ அவருக்குப் புலப்பட வில்லை.

    கதாநாயகி பரிதாபமான குரலில், 'செரி சேர். நான் சொல்றேன். சேர்!' என்றவள், தன் வாத்துக் குஞ்சு வாயைத் திறந்து, 'நீயா?' என்று உச்சரித்துக் காட்டினாள்.

    'இல்லேம்மா! இன்னும் காத்து குடுங்க. உதடு பிரியணும். வாய் அசிங்கமாத் தெரியக்கூடாது. உங்களுக்குத் தெற்றுப் பல் வேறு.'

    அப்புசாமியின் கலை ரத்தம் கொதித்தது. 'அடப் பாவிப்பயலே! நீ இன்னாடா கசுமாலம் டைரக்ட் பண்ணறே. அந்தப் பல்லு எவ்வளவு அழகா இருக்குது. இன்னும் நல்லாத் தெரியற மாதிரி சொல்லச் சொல்லுடா முண்டம்!' என்று கத்தத் தோன்றியது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்.

    கதாநாயகி, 'நீயா' வைப் பலவிதங்களில் கடைந்து காட்டிக் கொண்டிருந்தாள். ஒரோரு தடவையும் மேலும் மேலும் அழகாகத்தான் அவள் உச்சரிப்பதுபோல அப்புசாமிக்குத் தெரிந்தது. கொஞ்சம்கூட ரசனையற்ற சங்குமணிக்குப் பெயரா உதவி டைரக்டர்?

    சங்குமணி மோவாயைத் தடவிக் கொண்டார். 'நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கம்மா! என்றவர், எங்கேய்யா தொலைஞ்சான் அந்த லத்தீப்பு! ஜூஸ் கொண்டுவரச் சொல்லுய்யா. செத்துப் போயிட்டானா, உசிரோட இருக்கானா? எங்கேய்யா தொலைஞ்சான்?'

    சங்குமணி சலிப்புடன் சற்று அந்தப் பக்கமாகச் சென்றார். கதாநாயகி படுக்கையிலேயே இன்னும் படுத்திருந்தாள் - டைரக்டர் வந்து மறுபடி டைரக்ட் பண்ணுவாரென்று.

    அப்புசாமியின் உள்ளேயிருந்த சத்யஜித்ரே உயிர் பெற்றுத் திடீரென எழுந்தார். 'அடே அப்புக் கலைஞனா! போ! போ! எப்படி டைரக்ட் பண்ண வேண்டுமென்று அந்தச் சங்குமணியும் ஏன் இந்த ஜெகம் முழுதும் தெரிந்துகொள்ளட்டும். விழி எழு! புறப்படுடா கலைஞா!'

    அப்புசாமி தடாலென்று கதாநாயகியின் கட்டிலருகே சென்றார். நின்றார்.

    ரசித்தார். கதாநாயகியின் கண்கள் மிரண்டதை அவர் லட்சியம் செய்யவில்லை.

    கலை, கலை, கலை.

    அவள் வழவழா முகத்தைத் தனது கொழ கொழா விரல்களால் பஞ்சு மிட்டாயை ஸ்பரிசிப்பது போலத் தொட்டார்.

    அடுத்த விநாடி கதாநாயகி ஏதோ ஒரு காண்டாமிருகம் தன்னைக் கற்பழிப்பு செய்ய வந்துவிட்டதைப் போல அலறினாள். 'ஆ! ஐயோ! என்னைக் காப்பாத்துங்களேன்!

    2

    அகாரணமாய்ப் பெண்களைத் தொடுகிற ரகமல்ல அப்புசாமி. கண் தெரியவில்லை என்ற சாக்கில் சில கிழவர்கள் லேடீஸ் ஸ்பெஷலில் ஏறிக் கொஞ்ச நேரம் ஜாலியாகக் கலர் பார்த்து விட்டு அடுத்த ஸ்டாப்பிங்கில் நல்லவர்கள் போல் இறங்கிக் கொள்வார்களே! அது மாதிரியெல்லாம் அவர் ஏறினதுமில்லை; இறங்கினதுமில்லை.

    படப்பிடிப்புக்குத் தயாராக நடிகை பாப்புஸ்ரீ கட்டிலில் படுத்திருந்த போஸ் ஏறக்குறைய அந்தக்கால சாரங்கதாரா இளவரசி போஸில் இருக்கவும், அப்புசாமியின் ரசிக உள்ளம் அவிழ்த்துக் கொண்ட கன்றுக்குட்டியாகி விட்டது.

    பாப்புஸ்ரீயின் மோவாயைத் தொட்டாரே தவிர, அது கடற் பஞ்சு போலிருந்ததா நிலப் பஞ்சு போலிருந்ததா என்று

    Enjoying the preview?
    Page 1 of 1