Appusamyum Africa Azhagiyum
5/5
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Appusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsCome on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Appusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Virumbiya Arputha Kattalaigal Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsSirippum Sinthanaiyum Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsKurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsAndha 37 Varudangal Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsRajini Illathil Ragalai Rating: 0 out of 5 stars0 ratingsSirithe Ahavendiya Chinna Chinna Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamikkul Kuppusami Rating: 0 out of 5 stars0 ratingsDabbaji Bansleyudan Appusami Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratings
Related to Appusamyum Africa Azhagiyum
Related ebooks
Appusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Hee… Hee… Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Divorce Ketkirar Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsManathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsThai Maasam...! Poo Vaasam...! Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vaanvavil Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsKadakadanu padinga.. kalakalanu siringa.. Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsகொசு Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Minmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Hassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsPadagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Appusamyum Africa Azhagiyum
1 rating0 reviews
Book preview
Appusamyum Africa Azhagiyum - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
Appusamyum Africa Azhagiyum
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For other books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
பாக்கியம் ராமசாமி
1
அன்றைய தபாலில் வந்திருந்த ரீடர்ஸ் டைஜஸ்டும் கையுமாக, சீதாப்பாட்டி அப்போது தான் குளியலறைக்குள் நுழைந்து கால்மணி ஆகியிருக்கும்.
ஸம்மர் ஸிஸனுக்காகக் குளியலறையில் சீதாப் பாட்டி ஒரு பிரத்தியேக பாத்டப் கட்டிக்கொண்டாலும் கட்டிக் கொண்டாள், அனேகமாகத் தினசரி மூன்று வேளை குளிக்கப் போய்விடுவாள். (பாத் டப் ஸ்ட்ரிக்ட்லி பர்ஸனல். அப்பு சாமி நாட் அலவ்)
கழுத்தளவு ஜிலுஜிலுவென்ற தண்ணிரில் படுத்துக் கொண்டு மாலை 4மணிக்கு டைஜஸ்ட் படிக்கிற சுகத்தில் சீதாப்பாட்டிக்கு நேரம் போனதே தெரியவில்லை.
பக்கங்கள் புரண்டு கொண்டிருந்தன. ‘தீஸ் குட் ஒல்ட் பார்ட்டீஸ்’ என்ற கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததும்தான் அவளுக்குச் சடாரென்று ஞாபகம் வந்தது. ஓ மை காட்!
என்று அலறினாள். அடடா! இன்றைக்குச் சரியாக ஐந்தரை மணிக்கு ஆபட்ஸ்பரியில் ஒரு பஃபே பார்ட்டி இருக்கிறதே!
என்று துள்ளிக் குதித்து எழுந்தவள், அவசர அவசரமாக மஞ்சளைத் தேடினாள்.
சே சே! என்கேஜ்மெண்ட் டைரி மெய்ன்டெய்ன் பண்ணாதது என்ன மடத்தனம். ஓ! மை காட். இப்போது மட்டும் ஞாபகம் வரவில்லையென்றால் அந்த மிஸஸ் பொன்னம்மா டேவிட் எவ்வளவு தப்பாக மிஸ்டேக் பண்ணிக்கொள்வாள்... வாட் ஹாப்பண்ட் டு தட் மஞ்சள் பீஸ்...
சீதாப்பாட்டி அங்குமிங்கும் தேடினாள். ‘பொன்னம்மா டேவிட்டை மயிலாப்பூர் லேடீஸிலிருந்து பா.மு.கழகத்துக்கு எப்படியாவது இழுத்துவிட வேண்டுமென்று பிளான் வேறு இருக்கிறது. நன்றாகத்தான் மறந்தேன் போ...’
மஞ்சள் துண்டு அகப்படவில்லை.
‘தேர் இஸ் ஹார்ட்லி தர்ட்டி மினிட்ஸ். அச்சோ! வாட் ஹாப்பண்ட் டு தட் மஞ்சள் பீஸ்...’
தலைபோகிற அவசரமானாலும் சீதாப்பாட்டி மஞ்சளை மிஸ் பண்ணமாட்டாள்.
இங்குமங்கும் தேடினாள். "வாட் ஹாப்பண்ட் டு தட் மஞ்சள் பீஸ்?’
நேரமோ பறந்து கொண்டிருந்தது.
ஹலோ! உங்களைத்தானே? இஃப் யூ டோண்ட் மைண்ட்...
என்று பாத்ரூமுக்குள்ளிருந்து கணவனுக்கு அவசரக் குரல் கொடுத்தாள். சமையல் ரூமில் அந்தப் பச்சை பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து இப்படி மேல் ஜன்னல் வழியாக வீசிப்போடுகிறீர்களா?
ஊஹூம். பதிலில்லை. சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டு ஈரப் புடைவையுடன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்து வீட்டிலில்லாத கணவனை ‘கண்டெம்’ செய்துகொண்டு, சமையலறையை ஈரமாக்கியவாறு மஞ்சளை எடுத்துக்கொண்டு திரும்பிக் குளியலறைக் கதவைத் தாளிட்டுக்கொண்டு, ஒரு பத்து உரை உரைத்து இருக்கமாட்டாள்.
‘தடதடதட’ என்று பாத்ரூம் கதவு தட்டப்பட்டது.
தட்டியவர் அப்புசாமிதான்.
சீதே!
என்றார் உற்சாகமாக, "இன்னுமா குளித்தாகவில்லை? நீர் யானை கெட்டுது போ?
எரிச்சலுடன் சீதாப்பாட்டி, எங்கே திடீரென்று அப்ஸ்காண்ட் ஆகிவிட்டீர்கள்? கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கரடியாகக் கத்தினேன்?
என்றாள்.
எங்கே போயிருந்தேனா? ஹி ஹி!
என்றார் அப்புசாமி. இன்றைக்கு டீ பார்ட்டியில்லே... என்னவோ பஃப் பஃப்’வோ வஃப் வஃப்’வோ சொல்லிக் கொண்டிருந்தாயே? எண்ணி ஒரே ஒரு சலவை ஜிப்பா வீட்டிலே கிடையாது. விழுந்தடித்துக் கொண்டு பழைய ஜிப்பா ஒன்றை எடுத்துக்கொண்டு லாண்டி ரிக்கு ஒடி... அந்தப் பாவி சாமான்யமாகப் போடுகிறேன் என்கிறானா... அதை ஏன் கேட்கிறே... ஹஹஹ! ‘என்ன சார், அழுக்கு ஜிப்பாவைத் தூக்கியாந்து இஸ்திரி போடக் கொண்டாந் துட்டே’ என்று தூக்கி எறிந்தான். எனக்குக் கெட்ட கோபம் வந்துட்டுது.
சற்று நேரத்தில் சீதாப்பாட்டி குளித்து முடித்து, டிரஸ் செய்துகொண்டு வெளியே வந்தாள்
அப்புசாமி தனது லாண்டிரி சாகஸத்தைத் தொடர்ந்தார். "நீ மீதியையும் கேட்கலையே... ஒரே லடாய்தான் ‘அழுக்குக் சட்டைக்கு இஸ்திரியாவது இன்னொன்றாவது...என்றான். நான் ஒரே வார்த்தைதான் பேசினேன்...
லாண்டிரிக்கு அக்கம்பக்கத்திலிருந்து அத்தனை பேரும், ‘சபாஷ் பெரீவரே! நல்லாப் போடு போட்டீங்க’ன்னு பாராட்டினார்கள். நான் வேறொன்றும் கேட்கவில்லை. ‘ஏம்பா, உனக்கு வேண்டியது காசு. அழுக்கு ஜிப்பாவோ கந்தல் ஜிப்பாவோ போட்டுக் கொண்டு போகிறவன் நான் பதினைந்து பைசாவைக் கொடுத்து என் முதுகிலே இஸ்திரிப் பெட்டியைத் தேய்னாக்கூட நீ தேய்க்க வேண்டியதுதானே’ன்னு ஒரு போடு போட்டேன் அப்புறம்தான் போட்டுக்கொடுத்தான். சுடச்சுட அங்கேயே மாட்டிக்கொண்டு ஒடிவந்தேன் என்று வை! நல்ல கூத்துடாப்பா..."
சீதாப்பாட்டியின் கண்கள் இடுங்கின, விரிந்தன. வாட் ஆர் யூ டிரைவிங் அட்? நான் பார்ட்டிக்குப் புறப்படுவதற்கும் நீங்கள் லாண்டரியில் போய் அடித்த மட்டரகமான கூத்துக்கும் என்ன சம்பந்தம்? ஐ காண்ட் காச் யூ...
என்றவாறு கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு எழுந்தாள்.
சீதே!
என்றார் அப்புசாமி திடுக்கிட்டு. அடுத்த கணம் கபகப வென்று சிரித்தவர். சரியாப் போச்சு போ! இழவு வீட்டிலே பாடைகட்ட மறந்த மாதிரி, உனக்கு என்ன இவ்வளவு மறதி சீதே? டீ பார்ட்டிக்கு நானும் தானே உன்னோடு வருகிறேன்!
என்றார்.
சீதாப்பாட்டி லைவ் ஒயரை மிதித்தவள்போல், என்னது? நீங்களும் பார்ட்டிக்கு வருகிறீர்களா? வாட் ஃபார்?
என்றாள்.
அப்புசாமியின் குரல் திடீர்ச் சூடு அடைந்தது. இந்தா சீதே... இதெல்லாம் விளையாடுகிற சமாசாரம் இல்லை. அழைப்பிதழில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் அப்புசாமி என்று போட்டிருந்ததா இல்லையா?
அதெல்லாம் ஒரு ஃபார்மாலிடிக்குப் போடுகிறது. பார்ட்டிக்கு வருகிற மூஞ்சியைப் பார்க்கவில்லை!
அப்புசாமியின் உஷ்ணமானியில் பாதரசம் கிடுகிடு என்று ஏறிக்கொண்டு வந்தது. மெனக்கெட்டு லாண்டிரிக்கு ஓடி, ஜிப்பாவை இஸ்திரி போட்டு, அங்கேயே மாட்டிக்கொண்டு ஓடிவந்தவன் மடையனா?
ஸெர்ட்டன்லி
சீதாப்பாட்டி காரில் ஏறி உட்கார்ந்துவிட்டாள்.
ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வந்தது. சரிதான்டி கிழவி. யாரோ விருந்து தருகிறார்கள். எவனெவனோ எடுத்து வைத்துக் கொண்டு தின்னப் போகிறான். நானும்தான் அனுபவிக்கிறேனே? வரக்கூடாதாமே வரக்கூடாது! உங்க பாட்டன் வீட்டு ஜிலேபி என்ன பாழாய்ப் போகிறது?
ஏனா?
சீதாப்பாட்டியின் கண்கள் லேஸர் கிரணம் போல் அப்புசாமியை ஊடுருவியது. போய் பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணாடியிலே. நான் வேறு எக்ஸ்ப்ளெய்ன் பண்ண வேண்டுமா? முகத்திலே எட்டு நாளைய தாடி மீசை பார்ட்டிக்கு அட்டெண்ட் பண்ணுகிறதென்றால் ஃபன்டமென்ட்டலாகச் சில டீஸன்ஸிஸ், எடிகெட்ஸ் இருக்கிறது... அதையெல்லாம் உங்கள் முள்ளம்பன்றி பிராண்ட் முகத்துக்கு என்னால் இப்போ விளக்கிக்கொண்டிருக்க முடியாது!
இதைவிட அப்பனான தாடி மீசைக்காரனெல்லாம் பார்ட்டிக்கு வருவான். இது ஒரு தாடியா? இது ஒரு மீசையா? ஒரே ஒரு வாரத்துத் தாடி!
என்று வாதாடினார் அப்புசாமி.
இப்போதுதான் ஜஸ்ட் நெள ஆஸ்பிடலிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பேஷண்ட் மாதிரி இருக்கிறது! இந்தக் கோலத்திலே வந்தால் என்ட்ரன்ஸிலேயே நிறுத்திக் கையில் சில்லறை போட்டு அனுப்பிவிடுவார்கள்
என்றாள் சீதாப்பாட்டி எரிச்சலுடன்.
அதாவது...
என்றார் அப்புசாமி. நான் பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறேன் என்கிறாய்.
டெஃபனட்லி. ஐ மீன் தட்.
நான் பிச்சைக்காரனானால் நீ பிச்சைக்காரி. அதுவும் லட்டும் ஜிலேபியும் பாதாம்கீருமாகப் பொறுக்கித் தின்னப்போகிற பிச்சைக்காரி!
ஷட் ஆப்! என்று வெடித்தாள் சீதாப்பாட்டி. தினமும் ஷேவ்கூடச் செய்துகொள்ளாமல் வாட் எல்ஸ் ஆர் யூ டூயிங்? ஐ ரியலி வொண்டர்.
நன்றாக ஒண்டு! யார் வேண்டாமென்றது? தினமும் சிரைத்துக்கொள்வதும், கொள்ளாததும் என் இஷ்டம் இது என் மூஞ்சி. இதை நான் எப்படியோ வைத்துக் கொள்வேன்.
தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் பெரிய பெரிய ‘வி.ஐ.பி’ஸும், கவர்னர் போன்றவர்களும் கலந்து கொள்கிற பார்ட்டியில் வந்து, உங்கள் அன்ஷேவ்ட் அக்லி ஃபேஸைக் காட்ட வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
‘படீர்’ என்றது காரின் கதவு. அவர் முகத்தில் வந்து பறந்தது ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று. கோ அண்ட் கெட் ஷேவ்ட் பர்ஸ்ட். ஷேவிங்குக்கும் ராத்திரிச் சாப்பாட்டுக்கும் சேர்த்துத்தான் பணம்.
அப்புசாமி மோவாயைத் தடவிக்கொண்டார். உண்மைதான். அவர் ஷேவிங் செட்டைத் தொட்டு சரியாக எட்டு நாள் ஆகிறது தான். ஆனால், ஏன் தொடவில்லை. ஆராய வேண்டாமா? பிச்சைக்காரனாமே பிச்சைக்காரன்!
ஒரு வாரத்துக்கு முன், அப்புசாமிக்கும் அப்புசாமிக்குமே நடந்த ரத்தக் களறியான ஒரு போராட்டத்தில் அதாவது ஷேவிங்கின்போது - அவர் வீராவேசமாக ரேஸரை நாற்புறமும் இழுத்த இழுப்பில், வழக்கமாக ஏற்படும் பதினெட்டுக்கு மேற்பட்ட சிராய்ப்புகளைத் தவிர, போனஸ் மாதிரி ‘சரக்’ என்று கொஞ்சம் பெரிய வெட்டும் விழுந்துவிட்டது. ரத்தம் கொஞ்சம் கூடவே வந்துவிட்டது.
மோவாய்க் காயத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், ஒரு வாரம் அப்புசாமி வேலை நிறுத்தம் செய்திருந்தார்.
அது ஒரு தப்பா?
கிராதகி,
என்று பல்லை நறநறத்தார் அப்புசாமி. ‘பிச்சைக்காரன் என்று சொன்னதோடு பிச்சைக்காரனுக்கு எறிகிற மாதிரி ராச்சாப்பாட்டுக்கு ரூபாயை எறிந்து விட்டுப் போகிறாளே. என்ன ஒரு திமிர்!’
சரக்! சரக்! சரக்!
அப்புசாமி ஐந்து ரூபாய் நோட்டைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தார். அப்புறமும் அவர் ஆத்திரம் அடங்கவில்லை. அருகிலிருந்த ஒரு கல்லில் வைத்துக் கொட்டு கொட்டென்று கொட்டினார். மேலும் கூழாகிற மாதிரி அதைச் சாணக்கியப் பொடியாக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் விட்டுக் கரைத்துக் குடித்திருப்பார். ஆனால், அதற்குள் துரதிருஷ்டவசமாக அவருடைய சுண்டுவிரல் மீது கல் பட்டுவிட்டது. ஆ! அம்மாடி!
என்று விரலை வாயில் வைத்துக் கொண்டார்.
சிவப்பு உப்பு ரத்தம்!
ஆனால், அப்புசாமிக்கு வலிக்கவில்லை. காரணம், அந்தச் சிவப்பு ரத்தத்துளி அவரைப் பார்த்து, ஹ ஹ ஹ!
என்று கேலியாகச் சிரித்துக் கூறியது: ‘அப்புசாமி, நீர் ஓர் ஆண் பிள்ளையா? சிங்கத்துக்குப் பிடரி மாதிரி, ஆண்களுக்கு மீசை தாடி. அது கொஞ்சம் வளர்ந்து விட்டதற்காக, உம்மைப் ‘பிச்சைக் காரன்’ என்று சொல்லிப் பார்ட்டிக்குச் கூட்டிப் போகாமல், தான் மட்டும் தின்னப் போய்விட்டாளே உமது மனைவி?’
சீதே!
என்று பல்லை நறநறத்தார் அப்புசாமி. ரத்தத் துளியை விரல் நுனியில் எடுத்து இசுக் பிசுக்கென்று அழுத்திப் பார்த்தார். ரத்தம் கொட்டியது.
சீதே! என்ற அடிபட்ட சுண்டுவிரலைக் கண்ணுக்கு முன் வைத்துக்கொண்டு கர்ஜித்தார்... இதோ... இந்தச் சுண்டுவிரல் மேல் துளிர்விட்டு நிற்கிற ரத்தப் பொட்டின் மேல் ஆணை. இந்த அப்புசாமி இனிமே அப்புசாமி அல்ல. தாடிசாமி! வெறும் தாடிசாமி கூட அல்ல, அடர்ந்த பயங்கர ஆயுள்தாடி அப்புசாமி! ஒருமாச தாடியில்லை... ஒரு யுகத்துக்குத் தாடி வளர்த்து... அதே தாடிமீசையோடு... ஒரு பார்ட்டியில்லை... ஒன்பது புது பார்ட்டியிலே நான் சாப்பிடவில்லையானால் என் பேர் அப்புசாமி, இல்லை...
சுண்டு விரலில் துளிர்த்த அடுத்த துளி ரத்தத்தைச் சரக் சரக்கென நெற்றியில் இட்டுக்கொண்டார்.
இதுதான் அப்புசாமி தாடியின் முன் கதை.
பா.மு.கழகத்துக்குள் சீதாப்பாட்டியின் கார் சிந்தனையோடு நுழைந்தது.
வழக்கமாக போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே இறங்கிப் போகும் சீதாப்பாட்டி, மனத்தில் கடந்த சில நாள்களாகவே ஏதோ உறுத்திக்கொண்டிருந்த விவகாரத்தினால், காரைத் தனியாக ஒரு மரத்தடியில் கொண்டு போய் நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே சிறிது நேரம் காற்றாட உட்கார்ந்திருந்தாள்.
தான் அரும்பாடுபட்டு ஸ்தாபித்த ‘பாட்டிகள் முன்னேற்றக் கழகம்’ இயங்கி வரும் அழகைத் தூரத்திலிருந்து தனித்திருந்து பார்ப்பதில் அவள் மனத்துக்குள் ஒர் ஆனந்தம் ஏற்பட்டது.
இந்தக் கழகத்துக்கு என்று மைதானத்தோடு கூடிய சொந்தக் கட்டடம் ஒன்று உருவாக்கத் தான் பட்டபாடுகளும், பற்பல பிரமுகிகளை உரிய விதத்தில் ‘கெட்டா’ செய்து பிடித்துப் போட்ட நிகழ்ச்சிகளும், அவள் உதடுகளில் புன்னகையை வரவழைத்தன.
கண்ணெதிரே சற்றுத் தொலைவில் ஏழெட்டு அங்கத்தினர்கள் உற்சாகமாகப் ‘பாட்டி மிண்ட்டன்’ விளையாடிக் கொண்டிருந்தனர். புதிய அங்கத்தினராகச் சில மாதங்களுக்கு முன் ஆபட்ஸ்பரி பஃபே பார்ட்டியின் மூலம் இழுத்துப் போடப்பட்ட மிஸஸ் பொன்னம்மா டேவிட் கூட வந்து ஆடுகிறாளே... வெரி குட்... புது அங்கத்தினர் தன் மட்டையைச் சுழற்றிப் பந்தை ஓர் அடி அடித்தாள். புதிய சப்ஸ்கிரைபரை உற்சாகப் படுத்துவதற்காக, காரிலிருந்தவாறே சீதாப்பாட்டி, மார்வலஸ் வெல்டன்!
என்று குரல் கொடுத்தாள்.
ஓ! பிரசிடெண்ட்ஜி!
என்று மிஸஸ் டேவிட், பாட்டியை நோக்கி வந்தாள்.
நீங்க பார்த்திட்டிருந்தீங்களா? நான் கவனிக்கவே இல்லீங்க... சுமாரா ஆடறேனா?
என்றாள்.
ரொம்ப ரொம்ப...
புது அங்கத்தினர் என்ற முறையில் மிஸஸ் டேவிட்டுக்குச் சீதாப்பாட்டி, கழகத்தின் ஆரம்ப காலத்தில் எப்படிச் சொந்த இடம் இல்லாமல், எல்லா அங்கத்தினர்களும் தன் வீட்டுக்கே வந்து ஆடுவார்கள் என்பதை விவரித்தாள். பை த பை... நீங்க நம்ம கழகத்திலேயிருந்து வருகிற மன்த்லி புல்லடினைப் பார்த் தீர்களா... அதனுடைய எடிடோரியல் கமிட்டியிலே ஒய் நாட் நீங்களும் ஒரு பங்கெடுத்துக்கொள்ளக்கூடாது என்று எனக்குத் தோன்றியது...
என்றாள்.
புதிய அங்கத்தினர் வளைந்து நெளிந்தாள். மன்த்லி புல்லடினா? நான் பார்த்ததில்லையே...
சிரித்தாள் சீதாப்பாட்டி, ஆமாம் ‘ரூமர்ஸ்’ என்ற பெயரில் காதில் விழுகிற வம்புகளையெல்லாம் போட்டு இன்டரஸ்டிங்கா வந்து கொண்டிருக்கிறது. முன்பு தமிழில் மட்டும் வந்துகொண்டிருந் தது. இப்போது இங்கிலீஷிலும் கொண்டு வருகிறோம். கொஞ்சம் ஃபினான்ஷியல் டிரபிள்தான்... இருந்தாலும் பா.மு.க.வின் பெருமைப் படத்தக்க ஆக்டிவிடிஸில் இந்த புல்லடினும் ஒன்று.
ஓ! அப்படியா? உடனே அதைப் பார்க்கணும்போல எனக்கு இச்சையாயிருக்கிறது. உங்கள் புல்லடினுக்கு என்னவாவது நிதி உதவி வேண்டுமானால் தாராளமாகச் செய்யக் காத்திருக்கிறேன்.
சீதாப்பாட்டி அங்கத்தினரைச் சரியானபடி ‘ப்ளேஸ்’ பண்ணி விட்ட திருப்தியுடன், தேங்க்யூ வெரிமச்... நீங்க போய் விளையாடுங்க... உங்களை நான் அனாவசியமாக டிஸ்டர்ப் பண்ணி விட்டேன்
என்று சொல்லிவிட்டுக் கழகக் கட்டடத்துள் நுழைந்து தன் ஸிட்டுக்குச் சென்றாள். கழகத்தின் அந்த மாதத்திய ‘ரூமர்’ அவளுடைய மேஜை மேலிருந்தது.
சுவாரசியமாக அதைக் கையிலெடுத்தவள், அடுத்த வினாடி, ஒ மை காட்!
என்று அதிர்ச்சியுற்றவள், அகல்யாதேவி!
என்று
புல்லடின்-இன்-சார்ஜின் பெயரைச் சொல்லி அலறியிருப்பாள், ஒரு நிமிடம் மட்டும் கட்டுப்பாட்டை இழந்திருந்தால்.
பா.மு.க.வின் அந்த மாதத்திய ‘வம்பு’பகுதியில் சீதாப்பாட்டியின் தலையையே அங்கத்தினர்கள் உருட்டி வைத்திருந்தார்கள்.
செய்தியின் சாரமாவது. நமது அங்கத்தினர்களுக்கோர் மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நெடுநாள்களாகக் குழந்தைகள் ஏதும் இல்லாத நம்முடைய பிரசிடெண்ட்ஜி வெகுசீக்கிரத்திலேயே அந்த பாக்கியத்தை அடையப் போகிறார் என்று நம்பப்படுகிறது. அவருடைய கணவர் மிஸ்டர் அப்புசாமி, கொஞ்ச நாளாகத் தீட்சை வளர்ப்பதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று ஊர்ஜிதமாகாத செய்திகள் கூறுகின்றன.
சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக்கொண்டாள். கொஞ்ச நேரம் நிதானமாக மூச்சு வாங்கித் தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டு அகல்யாதேவியை அழைத்தாள்.
புன்சிரிப்புடன் வந்து நின்றாள் புல்லடின்-இன்-சார்ஜ்.
சீதாப்பாட்டி, அகல்யா கன்கிராஜசலேஷன்ஸ். உன் டிபார்ட்மென்ட் ரொம்பச் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது பற்றிச் சந்தோஷம... ஆனாலும்...
ஒரு நிமிட மெளன இடைவெளி. மேட்டர் பிரஸ்ஸுக்குப் போகிறதற்கு முன்னால் பிரசிடெண்ட் என்கிற முறையில் என்கிட்டே ஓ.கே. வாங்கி அனுப்பினால், என்னுடைய ஸிட்டைக் கொஞ்சம் மதித்ததாகும்...
வந்து... வந்து... ஸாரி பிரசிடெண்ட்ஜி. அவசரத்தில்...
என்று அகல்யாதேவி அசடு வழிய வெளியில் வருத்தப்பட்டாலும், உள்ளுக்குள் ‘பிரசிடெண்ட்டுக்குத் தன்னைப்பற்றிய செய்தி வந்திருப்பது பெரிய ஷாக் போலிருக்கிறது’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டாள். ‘வம்பு’ பத்திரிகையின் அங்கத்தினர்களில் யார் தலை உருண்டாலும் சண்டைக்கு வரக்கூடாது என்பது எல்லாரும் ஒப்புக்கொண்ட உடன்படிக்கை.
சீதாப்பாட்டி பா.மு.கழகத்திலிருந்து வீடு திரும்பிய போது ஒரே கோபாவேசமாக இருந்தாள்.
கடந்த மூன்று மாதமாக அவளும் அப்புசாமியிடம் அவருடைய அசிங்கமான தாடி விஷயமாக எத்தனையோ ‘டயலாக்குகள்’ நடத்திவிட்டாள். ஆனால், அப்புசாமி கொஞ்சமும் இணங்கி வருவதாகத் தெரியவில்லை. ‘நூறு கொடு, இருநூறு கொடு!’ என்று தாடியை வைத்துப் பிளாக் மெயில் பண்ணவே, சீதாப் பாட்டி அந்தப் பேச்சைத் தொடரவில்லை.
இப்போது மானக்கேடாகவல்லவா வதந்திகள் பரவி இருக்கிறது?
சீதாப்பாட்டி காரை ஓசைப்படாமல் ஷெட்டில் நிறுத்தி விட்டு மேலே வந்தபோது கண்ணில்பட்ட காட்சி அவளை ஆயிரம் லைவ் ஒயரை மிதித்த மாதிரி அலறவைத்தது.
அவளுடைய அருமையான ப்ரிக்லி ஹிட் பவுடர் டப்பாவில் இருந்து அப்புசாமி கை நிறையப் பவுடர் கொட்டிக்கொண்டு அரிப்புத் தாங்காத தன் தாடிக்கு வைத்து தேய்த்துக் கொண்டு இருந்தார்.
வயதான காலத்தில் வெண்ணெய் திருடியிருந்தால் கிருஷ்ணன் இப்படித்தான் விழித்திருப்பார்.
ஹி ஹி! சீதே!
என்றார்.
சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டு அவரை ஏற இறங்கப் பார்த்து, என்ன ஒரு இது இருந்தால் உங்க நாஸ்ட்டி தாடிக்கு இவ்வளவு காஸ்ட்லி பவுடரைப் போடத் துணிவீர்கள்?
என்று கூவினாள்.
அப்புசாமி! ஹி ஹி! ஒரே பிய்ப்பு தாடிக்குள்ளே வியர்க்குரு! என்ன பண்ணச் சொல்றே? நீயா பின்னே வந்து சொறிந்துவிடப் போகிறாய்?
சீதாப்பாட்டியின் முகத்தில் திடீர்க் குளுமை. எக்ஸாக்ட்லி! இப்போதுதான் நீங்கள் புத்திசாலித்தனமாகப் பேசுகிறீர்கள்! என்னத்துக்கு இந்த நாஸ்ட்டி தாடி ரிமூவ் பண்ணித் தொலையுங்கள்... வேண்டுமானால் காம்பன்ஸேஷனாக டென் ரூபீஸ் தருகிறேன்!
‘இந்த நமைச்சல் பிடித்த தாடி விவகாரத்தை எடுத்து விடுவோமா’ என்று அப்புசாமி அரிக்கும் தோறும் நினைத்ததுண்டு. இப்போதும் நினைத்தார்.
ஆனால் மறுகணமே வீர சபதம் நினைவுக்கு வந்தது.
ஹ ஹ!
என்றார் அப்புசாமி இளக்காரமாக. தாடியை அனாயாசமாக உருவிக்கொண்டார். ‘பத்து ரூபாய் விலைக்கு என் தாடியை உன் காலடியில் மண்டிபோடச் சொல்கிறாயா? பத்தல்ல.. பத்தாயிரம் கொடுத்தாலும் தாடியை எடேன்!’
சீதாப்பாட்டி கண்களில் கண்டிப்புத் தோன்ற, அயம் டாக்கிங் டெட் ஸிரியஸ்... உங்கள் தாடியை நீங்கள் எடுக்காத வரைக்கும் இந்த வீட்டிலே இனிமேல் அயம் நாட் கோயிங் டு குக் ஸ்டார்வேஷன் ஒன்றுதான் உங்களை வழிக்குக் கொண்டுவரும். பாக்கெட் மணியும் ஹன்ட்ரட் பர்சண்ட் கட்!
என்றாள்.
சரிதான் போய் வேலையைப் பாரும்மே... உன்னைப் போல் ஆயிரம் கிழவியைச் சமாளிக்கும் இந்த தாடி!
என்று அப்புசாமி மீசைமேல் கைபோட்டார்.
முதல் இரண்டு மூன்று நாளைக்கு அப்புசாமி தன் தோழனான ரசகுண்டுவிடம் கொஞ்சம் சில்லறை வாங்கிச் சமாளித்து விட்டார்.
மூன்றாம் நாள் அவனிடம் சில்லறைக்கு அடிபோட்ட போது, ‘தாத்தா. எதற்குத் தாத்தா வீணாக இந்த இழவை வளர்த்துக் கொண்டு? நன்றாகவும் இல்லை... வளர்த்த வரைக்கும் நாம் வீணடிக்க வேண்டாம். அம்பத்தூரில் இருக்கிறதே விக் ஃபாக்டரி! அங்கே கொண்டு போய் உங்கள் தாடியைப் போட்டுவிட்டு ஜாலியா காபி டிபன் சாப்பிட்டு வரலாம்!’ என்றான்.
அப்புசாமியின் மனத்துக்குள் பொடுக் பொடுக் என்ற சத்தம் கேட்டது.
என்ன தாத்தா சத்தம்?
என்றான் ரசகுண்டு.
என் மனசு ஒடிந்துபோகிற சத்தம்டா. அந்த சீதேக் கிழவிதான் என் எதிரி என்று நினைத்தேன். நீயும் கூடவா?
அதற்கில்லை தாத்தா. மாசக் கடைசியாயிருக்கிறது... நானே டிபனுக்கு லாட்டிரி அடித்துக் கொண்டு இருக்கிறேன்.
அப்புசாமி தன் இன்னொரு நண்பனான பீமாராவிடமாவது ஏதாவது சில்லறை பெயர்கிறதா பார்ப்போம் என்று பெருமூச்சுவிட்டபடி பெருஞ்சாலை வழியே நடந்து கொண்டிருந்தார்.
வெயில் தாங்க முடியவில்லை. வயிற்றில் கிர்ர்ர் என்று ஐஸ் க்ரீம் மிஷின் மாதிரி எதுவோ கடைந்து கொண்டு இருந்தது.
ஒரு கட்டடத்தின் நிழலில் இளைப்பாறுவதற்காகக் கொஞ்சம் நின்றார்.
இரண்டு நிமிடம் நின்றிருப்பார். அந்தக் கட்டடத்துக்குள்ளிருந்து லுலூண்டா! லுலூண்டா!
என்ற கூக்குரலுடன் யாரோ முன்பின் தெரியாத ஓர் உருவம் வந்து அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டது.
அப்புசாமி அடுத்த கணம், ஐயோ! நீ யார்?
என்று வீறிட்டார்.
அவரைக் கைப்பிடித்த கருகருவென்ற ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி அழகான தமிழில், சாமி!
என்றாள். அதற்கு மேல் அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. கறுத்த உதடுகளுக்குள்ளிருந்து பளிச்சிட்ட அவளது வெண்ணிறப் பற்கள் பசிமிகுந்த அப்புசாமிக்கு இட்லியை ஞாபகப்படுத்தின.
ஆ1 ஆ! ஆப்பிரிக்கப் பெண்... இடீலி இடீலி... என்ற வார்த்தைகளுடன் தலை சுற்றப் பசி மயக்கமாக விழுந்தார்.
அவர் அடுத்தாற்போல் கண்விழித்தபோது ஹோட்டல் கன்னிமராவில் ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறை ஒன்றில் நுரை ரப்பர் மெத்தையில் பூப்போலப் படுத்து இருந்தார்.
அவருடைய நெற்றியை யாருடைய கையோ வருடிக் கொண்டு இருந்தது - அந்த ஆப்பிரிக்கப் பெண்தான்!
2
அப்புசாமி தனது காடராக்ட் படிந்த கண்களால் விசாலமான அந்தக் குளுமை நிறைந்த அறையை ஒருதரம் பார்த்தார். பழக்கம் காரணமாகக் கை, தாடியை ஒருதரம் உருவிக்கொண்டது.
பசி மயக்கத்தால் தலை கிர்ர்ரடித்துப்போய் விழுந்தது நினைவிருந்தது. அப்புறம் இந்த மெதுவடை போன்ற மெத்தைக்கு எப்படி வந்து படுத்துக் கொண்டோம்!
ஒருகால் கனவோ?
கனவாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் சீதே இப்படிக் கன்னங்கரேலென்று அடியோடு உருமாறிக் கவுன் அணிந்துகொண்டு நிற்பாளா? அப்படியே நின்றாலும் தலையை இதமாக இப்படிப் பிடித்து விடுவாளா!
அப்புசாமியின் கண்கள் மறுபடியும் பசிச் சோர்வினால் மூடிக்கொண்டன. எண்ணங்கள் ஒரே சாம்பாராயின. வெறும் சாம்பாரா? இட்லி சாம்பார். வெறும் இட்லி சாம்பாரா? நாலு ஸ்பூன் எண்ணெயும் சேர்ந்த இட்லி சாம்பார்.
தான் எங்கு, ஏன், எதற்கு இருக்கிறோம் என்று எதுவும் அவருக்குப் புரியவில்லை. வயிற்றில் பசி மட்டும் ரெளடித்தனமாக இரண்டொரு விசில்களை எழுப்பிக் கொண்டிருந்தது. தாடி மறைவுக்குள்ளிருந்த அவரது உதடுகள் வயிற்றுக் கிளர்ச்சி தாங்காமல் முணு முணுத்தன.
இட்லி! இட்லி!
அடுத்த வினாடி, லுலூண்டா! லுலூண்டார்!
என்ற உற்சாகக் குரல் அவர் காது ஜவ்வு கிழிபடுவது மாதிரி ஒலித்தது.
லுலூண்டா! உங்கள் இட்லி இதோ, இங்கே பாருங்கள்.
எங்கே இட்லி!
இதோ இங்கே!
கழுத்து சுளுக்கினாலும் பரவாயில்லை என்று அப்புசாமி விருட்டென்று திரும்பி நோக்கினார்.
அவரது நெற்றியில் ஒடிக்கொலோனைப் பஞ்சில் நனைத்து மெதுவே ஒற்றிக்கொண்டிருந்த ஆப்பிரிக்கப் பெண் தனது வெண் பற்களைக் காட்டி லேசாகச் சிரித்தபடி, கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டாள். லுலூண்டா! உங்கள் இட்லி இதோ இங்கிருக்கிறேன். இளவரசி இட்லியின் மரியாதையான வணக்கம்
என்று கை குவித்தாள்.
இளவரசி இட்லியாவது? ஸ்பெஷல் மசாலா தோசை மாதிரி இட்லியில் இது ஒரு ரகமா?
அப்புசாமி அந்த ஆப்பிரிக்கப் பெண்ணை இப்போதுதான் நெருக்கமாகவும், மயக்கமடையாமலும் பார்த்தார். யா நீ?
என்றார். அவரது மிகுந்த பசி ‘ர்’ ஐ விழுங்கி விட்டது. ஏன் இவ்வளவு கருப்பு மையைப் பூசிக் கொண்டு வந்திருக்கிறாய்? நான் அப்புசாமிதானே? இதெல்லாம் கனவா? நீ சீதேயா?
லுலூண்டா!
என்றாள் அந்தப் பெண் மரியாதையுடன். இந்த இளவரசியை உங்களுக்கு குளிர்ந்த பானம் ஏதாவது கொண்டு வந்து தர அனுமதிப்பீர்களா?
அப்புசாமி திருதிருதிருதிருதிருவென்று விழித்து விட்டு, குளிர்ந்த பானமெல்லாம் சரி. நீ யாரு? நான் யாரு? ஜிலு ஜிலு அறையில் சொய்ங் சொய்ங் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறேனே? இதெல்லாம் ஏன் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்!
என்றார்.
அந்த ஆப்பிரிக்கப் பெண் தன்னுடைய கதையைச் சுருக்கமாக விவரித்தாள்.
வட ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு குட்டி ராஜ்யத்தின் இளவரசி அவள். பெயர் இடீலி.
தமிழ்நாட்டின் மீது அவளுக்கு ஒரே பித்து. காரணம் ஆப்பிரிக்கா வில் நிறவெறியை ஒழிப்பதற்காக வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடிய காந்திஜிக்குத் துணை நின்றவர்கள் தமிழர்கள் அல்லவா! எப்படியாவது ஒருதரம் இந்தியாவுக்குச் சென்று தமிழ்நாட்டைப் பார்த்துவிட வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தாள்.
இளவரசியை மணம் செய்துகொள்ள எத்தனையோ ஆப்பிரிக்க அழகர்கள் போட்டியிட்டுத் துடிதுடித்தாலும் அவள் மனம் அவர்களில் யாரையுமே நாடவில்லை.
மணந்தால் ஒரு தமிழரைத்தான் மணப்பேன்
என்று அவள் தீர்மானம் செய்துகொண்டு ஆண்டுகள் பலவாகி விட்டன.
சமீபத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்ட அறிஞர் கோஷ்டியில் எப்படியோ இடம் பிடித்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்துவிட்டாள்.
இந்தியா பூராவையும் சுற்றிப் பார்த்துவிட்டுத் தமிழ்நாட்டிலேயே தங்கிவிடும் திட்டத்துடன் வந்திருந்தாள்.
தன்னுடைய திருமண விஷயமாக அவளுக்கு மனத்தில் சதா ஒரு குழப்பம் இருந்து வந்தது. முதல் குழப்பம்: கல்யாணமே நடக்குமா நடக்காதா?
மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ் அறிஞர் ஒருவருக்கு இளவரசியின் அந்தரங்கக் கவலை தெரிந்தது. அவருக்கு ‘நாடி