Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanikka Naagam
Maanikka Naagam
Maanikka Naagam
Ebook136 pages2 hours

Maanikka Naagam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583314
Maanikka Naagam

Read more from Indira Soundarajan

Related to Maanikka Naagam

Related ebooks

Related categories

Reviews for Maanikka Naagam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanikka Naagam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மாணிக்க நாகம்!

    Maanikka Naagam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    மாணிக்க நாகம்!

    1

    அன்று சித்திரை பௌர்ணமி. வானில் சந்திர ராஜ்ஜியம்! வெள்ளிக்கதிர் மழை எங்கணும். பொலபொலவென்று சிந்தும் வெளிச்சமான இரவுக்காலம். அந்த வேளையிலும் மைய வானில் ஒரு நாரைக் கூட்டம் கிழக்கு திக்கை குறி வைத்து இலகுவாக பறந்து கொண்டிருந்தது.

    இலேசாய் குளிர் வாட்ட, காதோரம், மடலுக்குள் மோதிக் குசுகுசுக்கும் ஊதல் காற்றில் உச்சந்தலை முடியெல்லாம் கலைந்து பறக்க, எதிரே தெரியும் அந்த மலை நாட்டின் சமதள வயல்பரப்பையும் பலா மரம் கூட்டத்தையும், ஒரு பத்து டிகிரி சரிவில் முள்ளுக் கொண்டையோடு கொழித்துக் கிடைக்கும அன்னாசித் தோட்டத்தையும் ஒரு சேர பார்த்தபடி பாறை ஒன்றின் மேல் நின்றுவிட்ட ஃபாரஸ்டர் சிவகுருநாதனுக்கு அந்த இயற்கை சூழ்நிலை மிகப் பிடித்திருந்தது. ரெய்டு வந்த இடத்தில்.

    என்ன ஒரு இன்பமான சூழ்நிலை? என்ற சிலாகிப்போடு அண்ணாந்தார். உருட்டி விட்ட வெள்ளிதத்தட்டு மாதிரி நிலவு உடனேயே நினைவில் ஏக தூரம் பின்னோக்கி செல்லத் தொடங்கி விட்டது அவர் மனது.

    இந்த கொல்லிமலைக்கு ஃபாரஸ்ட்ரேஞ்ச் ஆபீஸராக வந்த நாளிலிருந்தே இந்த மலைநாடு ஒவ்வொரு நாளும் அவரை இப்படி வியக்க வைத்துக் கொண்டுதானிருக்கிறது.

    எவ்வளவோ மலைப்பிரதேசங்களில் இந்த உத்தியோகத்தில் காலம் கடத்தியிருந்த போதிலும், கொல்லிமலை மட்டும் சார்ஜ் எடுத்துக்கொண்ட அன்றே தனது வித்தியாசத்தை அவருக்கு உணர்த்தி விட்டது.

    சேலத்து ஹெட் குவார்ட்டர்ஸில் உயர் அதிகாரிகளைப் பார்த்து பேசி முடித்துவிட்டும் ஜீப்பிலேயே ராசிபுரம், காளப்பநாயக்கன்பட்டி என்று முப்பது நாற்பது கிலோ மீட்டர்களை ஓடிக் கடந்தும் வளைந்த மலைப்பாதையில் ஏறும் வரை வித்தியாசமாய் ஒன்றும் தெரியவில்லை.

    மலையில் ஒரு பதினைந்து கிலோ மீட்டர் வரை ஏறிக் கடந்தாயிற்று. பாய்லரின் அதீத கொதிப்போடு தண்ணீர் தந்தால்தான் மேற்கொண்டு ஏறுவேன் என்று அடம்பிடித்து அவரது ஜீப் நின்று போன போதுதான் அந்த மலைநாடு தனது வித்தியாச முகத்தை அவருக்கு காட்டியது.

    ஜீப் நின்றுபோன இடத்திற்குச் சொல்ப தொலைவில் ஒரு குட்டி அருவியாட்டம் தென்பட கார்பாய் சகிதம் அந்த அருவியோட்டத்தை குறிவைத்து நடந்தார்.

    அருவியை நெருங்கியபோதுதான் அதில் அனேக மூங்கில்கள் ஊறப்போட்டிருப்பதே தெரிந்தது. அதற்கு காவலாய் ஒரு சிறுமி.

    குடைபோல் கவிழ்ந்து கிடைக்கும் பாறை ஒன்றின் இடுக்கில் ஐயப்ப சாமி போல் காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

    சிவகுருநாதன் கார்பாய் சகிதம் வருவது பார்த்து சற்று மிரண்டாள். அவரின் காக்கிச்சட்டையும் கணத்த ஷூவும் அந்த பெண்ணை இலேசாய் கலக்கின.

    எங்கே இந்த மனிதர் மூங்கிலை தொட்டுத் தூக்கிப் பார்ப்பாரோ என்ற கவலை அவள் கண்ணில் படபடப்பது நன்றாகத் தெரிந்தது.

    ஆளரவமற்ற பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கில் மூங்கில் கழிகள் மிதப்பதைப் பார்த்து சற்று ஆச்சரியப்பட்டு அதில் ஒரு மூங்கிலை தொட்டுத் தூக்கியவருக்கு தூக்கிவாரிப் போட்டது.

    மூங்கிலின் முகப்புறத்து துவாரத்திலிருந்து ஒரு அடி நீளத்திற்கு குறையாத பாம்பு மீன் ஒன்று துள்ளிக்குதித்து அருவி நீர் ஓட்டத்தில் விழுந்து ஓடி மறைந்தது.

    ஐய்ய….. அந்த மூங்கிலை எடுக்காதீங்க…………… சிறுமியும் கூட அதைப் பார்த்து கத்திவிட்டாள். அப்பொழுதுதான் அவரேகூட அந்த சிறுமியைப் பார்த்தார்.

    "பாம்பு மீன் பிடிக்க மூங்கில போட்ருக்கோம். மூங்கிக்குள்ள பாசியும் பொரியும் இருக்குது. பாம்பு மீன் தூண்டிலுக்கோ, வலைக்கோ அம்புடாது. நீர்ச்சந்துகள்ல நுழைஞ்சுகிட்டு வெளியே வராத சாதி மீனுங்க அதுங்க…….

    மூங்கிப் பொத்துல ஆப்பிட்டுக்கிட்ட மீனுங்களை அப்படியே பாந்தமா தொட்டுத் தூக்கி நெருப்புல மூங்கிலோட போட்டு சுட்டுப் பொரிச்சுத் தின்னா அவ்ளோ ருசியா இருக்கும். குறிப்பா, மாலைக்கண் வியாதி உள்ளவங்களுக்கு இதான் மருந்தே!"

    சிறுமி விளக்கத்தோடு அந்த பாறை நிழலைவிட்டு வந்தபோது அவளோடு கூட வந்த விளக்கம் சிவகுரு நாதனுக்கு சிலிர்பையே உண்டு பண்ணி விட்டிருந்தது.

    மாலைக்கண் நோய்க்கு இப்படி ஒரு மருந்தா? ஆச்சிரியத்தில் புருவம் அம்பில்லாத வில்லாக உருமாறியிருந்தது.

    அந்த ஆச்சரியம் இன்று வரை ஒவ்வொரு கட்டத்திலும் படிப்படியாக கூடிக் கொண்டேதான் இருக்கிறது.

    இயற்கைக்கு ஈடுசொல்ல உலகில் எதுவுமில்லை என்கிற கருத்து அவர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

    அடர்ந்த மலைக்காட்டை சுற்றி வரும் சமயங்களில்தான் எத்தனை ஆச்சரியமான அனுபவங்கள்! வீசும் காற்றில்கூட உன்னிப்பாய் முகரும் பட்சத்தில் மூலிகை மணம் இழையோடுவது புரிபடுகிறது.

    இந்த மலையில் ஏறிய நாளிலிருந்தே தேகம் வியர்ப்பதேயில்லை. வியர்த்தால் வந்து ஒட்டிக்கொள்ளும் களைப்புக்கும் இடமில்லாமல் போய்விட்டது. தலைவலி, காய்ச்சல், குளிர் என்று ஏழைக்கு வரும் வரிசையான இடைஞ்சல்களும் இல்லாமல் போய்விட்டது.

    இலேசாய் ஒரு நாள் காலில் காயம் பட்டது. ஆயின்மெண்டை வாங்கி தடவ வேண்டும் அல்லது டிஞ்சர் போட வேண்டும் என்று நினைத்தவரை அந்த மலைக் காட்டை சேர்ந்த உப்பில் என்கிற விறகுவெட்டி தடுத்து நிறுத்தி ஒரு உதிய மரப்பட்டையை வைத்து கட்டி அனுப்பி வைத்தான்.

    எண்ணி இருபத்து நாலு மணி நேரத்தில் அந்த காயம் செத்து அங்கே வலியற்ற சகஜ நிலையைப் பார்த்த போது சிவகுருநாதன குதூகலித்துப் போனார்.

    ஏம்பா! இங்க இங்கிலீஷ் வைத்தியமே யாரும் பார்த்துக்க மாட்டீங்களா?: கேட்டார்.

    "அதுக்கு அவசியம் என்னங்க வந்தது? காச்ச குளிரே முதல்ல வராது வந்தாலும் துளசிச்சாறு. பிரண்டைக் கஷாயம்னு எத்தையாவது ஒண்ணைக் குடிச்சாலும் சரியாயிடும்.

    அதுக்கும் மீறின உபத்திரவம்னா பௌர்ணமிக்கு பௌர்ணமி நம்ம அறப்பளீசுவர் கோயிலுக்கு சில சாமியாருங்க வருவாங்க. அவங்களை போய்ப் பார்ப்போம். அவங்க பொடி மாதிரி எத்தையாச்சம் தருவாங்க. அதை ஆட்டுப்பால்ல தட்டிப் போட்டு சாப்பிட்டா வியாதியாவது வெக்ககையாவது….."

    நாட்டு மருத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அதனால ஆபரேஷன் பண்ணாத்தான் சரியாகும்ங்கற கேஸையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுப்பா. முட்டாள்தனமா இருந்துடாதீங்க என்று சற்று கண்டிப்பான குரலில் பதில் சொன்னபோது? ஆதை கேட்ட அந்த விறகுவெட்டிக்கு கோபம் முன்மண்டையைப் புடைத்துக் கொண்டு வந்தர்.

    செத்து அடக்கம் பண்ணின உடம்பை வெளியே எடுத்துப் போட்டு உசுர் கொடுத்துருக்காருங்க ஒரு சாமியார். பெரிசா சொல்ல வந்துட்டீங்க. ஆபரேஷனாம் ஆபரேஷன். உலகத்துக்கே சவால்விடும் ஒரு அசாதாரண செய்தியோடு சிவகுருநாதனை எதிர் கொண்டான் இந்த விறகுவெட்டி. முதலில் அதை கேட்க சிவகுருநாதனுக்கு சிரிப்புதான் வந்தது. அவன் மிகையாக பேசுவதாக உணர்ந்து….. உம், அப்புறம்! என்று நிமிண்டினார்.

    இந்த மலைக்கரடி ஒண்ணு ஒருத்தனை அறைஞ்சு காதைப் பிச்சுடிச்சு. துண்டான அந்த காதை மறுபடியும் ஒடடவெச்சுருக்காரு அந்த சாமியார்! என்று உப்பிலி என்னும் அந்த விறகுவெட்டி தொடர்ந்து போது சிவகுருநாதன் சற்று பலமாக சிரித்துவிட்டார்.

    Enjoying the preview?
    Page 1 of 1