Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilam Cholai Poothadha
Ilam Cholai Poothadha
Ilam Cholai Poothadha
Ebook119 pages58 minutes

Ilam Cholai Poothadha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351173
Ilam Cholai Poothadha

Read more from Devibala

Related to Ilam Cholai Poothadha

Related ebooks

Related categories

Reviews for Ilam Cholai Poothadha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilam Cholai Poothadha - Devibala

    http://www.pustaka.co.in

    இளம் சோலை பூத்ததா?

    Ilam Solai Pooththatha?

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    சார்! ஒரு முந்நூறு ரூபா பணம் கைமாத்தா தர முடியுமா? வட்டி கட்டிர்றேன்!

    கேட்ட பார்கவியை ஏற இறங்கப் பார்த்தார் பரமசிவம்.

    அந்தப் பார்வையில் கூசிப் போனாள் பார்கவி.

    'நீயும் நேத்துதானே சம்பளம் வாங்கினாய்? அதற்குள் பணம் தீர்ந்துவிட்டதா? என்ன செலவு உனக்கு மட்டும் அப்படி?'

    கேட்கப்படாத கேள்விகள்.

    ஆனால் பார்வையில் அத்தனை கேள்விகளும் இருக்க, பார்கவியால் அதைத் தாள முடியவில்லை.

    அவரது பதிலுக்குக் காத்திராமல் தன் இருப்பிடத்தில் வந்து உட்கார்ந்து விட்டாள்.

    தனியார் நிறுவனமொன்றில் ஸ்டெனோகிராபர் பார்கவி!

    வயது இருபத்தி ஆறு! அழகான பெண்!

    பட்டப்படிப்பை முடித்த ஒரு வருடத்தில் இந்த வேலை கிடைத்தது.

    கடந்த ஐந்து வருடங்களாக இங்கே வேலை. பெரிய சம்பளம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு குடும்பம் சௌகரியமாகப் பிழைக்குமளவுக்குச் சம்பளம்!

    அப்பா ரிடையர் ஆனவர். சர்க்கரை, உப்பு என சகலத்துக்கும் உடம்பில் இடம் தந்தவர். நித்ய நோயாளி.

    அம்மா குடும்பத்தில் மாடாய் உழைப்பவள்.

    ஒரு அக்கா காலம் கடந்து, போன வருடம்தான் சுமாரான ஒரு இடத்தில் அவளுக்குக் கல்யாணம் முடிந்தது. அதனால் பார்கவி ஏகப்பட்ட கடன் வாங்கி விட்டாள்.

    அதற்கு முன்பு வரைகூட குடும்பம் சுமாராக ஓடிக்கொண்டுதான் இருந்தது.

    அக்காவை எப்படியும் ஒரு இடத்தில் ஒப்படைத்து விட வேண்டும் என்ற வெறியில் அப்பா வைத்திருந்த கொஞ்ச பணத்தோடு, ஆபீசில் சகல லோன்களையும் போட்டு, வெளியிலும் கடன் வாங்கி, கல்யாணத்தை முடித்தாகி விட்டது.

    பலன், ஏகப்பட்ட கடன்.

    வீட்டில் பார்கவி மட்டும் சம்பாதிக்கும் பெண்.

    பிடித்தம் நிறையப் போவதால் கைக்கு வரும் சம்பளம் போதவில்லை.

    வாங்கிய கடனுக்கு வெளியிலும் வட்டி.

    அதனால் மேலும், மேலும் கடன்!

    நிம்மதி தொலைய ஆரம்பித்து விட்டது. கடன் கேட்கக் கூசுகிறது. ஆனால் குடும்பம் நடந்தாக வேண்டுமே!

    இதே ரீதியில் போனால் யார் கடன் தருவார்கள்?

    எத்தனை சிக்கனமாக அம்மா குடித்தனம் நடத்தினாலும், மாதம் எண்ணூறு ரூபாய் வரை குடும்ப பட்ஜெட்டில் பற்றாக்குறை!

    எப்படிச் சரிக்கட்டுவது?

    ப்யூன் வந்து அழைத்தான்.

    எம்.டி. கூப்பிடறார்மா!

    நோட்டுப் புத்தகத்துடன் எழுந்து உள்ளே போனாள்.

    நீ டைப் பண்ணின இந்த லெட்டரைப் பாரு பார்கவி!

    வாங்கினாள் கை நடுங்க.

    எட்டு மிஸ்டேக்! ஏன் பார்கவி? என்னாச்சு உனக்கு?

    தலை குனிந்து நின்றாள்.

    ஒரு வருஷமா நீ சரியாவே இல்லை. அதுவும் இந்த அஞ்சாறு மாசமா ரொம்ப மோசமா இருக்கே! என்ன பிரச்னை உனக்கு?

    ஸாரி சார்!

    உக்காரும்மா! உன்னைத் திட்டறதுக்காக நான் இப்பக் கூப்பிடலை! உன் பிரச்னைகளைத் தெரிஞ்சுக்கத்தான் வரவழைச்சேன்!

    நாற்காலி நுனியில் உட்கார்ந்தாள்.

    சொல்லலாம்னா சொல்லு!

    தன் பிரச்னையை மெல்லிய குரலில் சொன்னாள். முகம் வேதனையால் சிவந்து போயிருந்தது.

    ஸோ, நாளைக்கு உனக்கொரு கல்யாணம்னா, சல்லிக்காசு கையில கிடையாது இல்லையா?

    பார்கவி சிரித்தாள்.

    ஏம்மா சிரிக்கிறே?

    அதுக்காக நான் கவலைப்படலை சார். அதைப் பத்தியெல்லாம் யோசிக்கிற மன நிலைல நான் இல்லவும் இல்லை! இப்ப இந்த நிமிஷம் குடும்பம் ஒழுங்கா நடக்கணுமேங்கற கவலைதான். வயசான பெத்தவங்களை பட்டினி போட்றக் கூடாதில்லையா?

    சரிம்மா. நீ போய் வேலையைப் பாரு!

    சார்! உங்களால எனக்கு உதவ முடியுமா?

    எந்த வகைல பார்கவி?

    நான் என் சம்பளத்தை உயர்த்திக் கொடுங்கனு உங்களைக் கேக்கலை! அது இங்கே முடியாதுன்னு எனக்குத் தெரியும். எனக்கொரு பார்ட் டைம் வேலை ஏற்பாடு பண்ணித் தர முடியுமா?

    பார்ட் டைம்னா? ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் போய் வேலை செய்வியா?

    அப்படியில்லை சார்! நம்ம ஆபீஸ் டைம் அஞ்சுனா டவுன்ல எங்கேயாவது கிடைச்சா, ஆறு மணிலேருந்து ஒன்பது வரைக்கும் பார்ட் டைம் பார்க்கலாம் இல்லையா?

    நீ வீடு போய்ச் சேர பத்தாகும்!

    பரவாயில்லை! அப்படியெல்லாம் பார்த்தா முடியுமா? இந்த மூணு மணி நேரமும், முடிஞ்சா ஞாயிற்றுக் கிழமையும் வேலை பார்க்கறேன். துண்டு விழுற பட்ஜெட்டை சரிக்கட்டியே ஆகணும் சார். இனிமே யாரும் எனக்குக் கடன் தர மாட்டாங்க!

    சரிம்மா! நீ போ! நான் பார்க்கறேன்!

    பார்கவி தன் இருப்பிடம் வந்தாள் வேலைகளைத் தொடங்கினாள்.

    அஞ்சரை மணிக்கு ஆபீஸ் முடிந்து பஸ் பிடித்து சென்ட்ரல் வரவேண்டும். அங்கிருந்து ரயில் பிடித்து அம்பத்தூர் வருவதற்குள் ஏழு மணியாகிவிடும்.

    வீட்டை அடையும்போது ஏழேகால். இருட்டிவிடும்!

    பார்ட் டைம் வேலை கிடைத்தால் பத்து பத்தரை ஆகிவிடும்.

    'தனியாக அந்த நேரத்தில் வரலாமா?'

    'வந்துதான் ஆக வேண்டும்!'

    'கழுத்திலும், கையிலும் கவரிங் நகைகள்தான். இடது கையில் ஒரு பழைய வாட்ச். கைப்பையில் அதிகபட்சம் இருபது ரூபாய் இருந்தால் அதிகம்.'

    'யாரும் என்னிடம் கொள்ளையடிக்க எதுவும் இல்லை.'

    ஆபீஸ் முடிந்து வீடு திரும்பினாள்.

    முகம் கழுவி, ட்ரஸ் மாற்றிக் கொண்டு வந்தாள்.

    சாப்பிட உட்கார்ந்தாள்.

    தட்டில் விழுந்த சாதம் பயங்கரமான நாற்றம் எடுத்தது.

    ரேஷன் அரிசியாம்மா?

    வேற இல்லை பார்கவி! மளிகைக்கடைல பாக்கி! இந்த மாசம் பணத்தை வச்சிண்டு, மளிகை வாங்கிக்கோனு சொல்லிட்டான்.

    அப்பாவுக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல். இந்த சாதத்தையா போட்டே?"

    "அப்பா சாப்பிடலை.

    Enjoying the preview?
    Page 1 of 1