Are you sure?
This action might not be possible to undo. Are you sure you want to continue?
Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
http://www.pustaka.co.in
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
'இறைவன் இருக்கிறான்' என்று சொல்பவனை நம்புங்கள். 'இறைவன் இல்லை' என்று சொல்பவனைக் கூட நம்புங்கள். ஆனால், நான்தான் இறைவன் என்று சொல்பவனை மட்டும் நம்பாதீர்கள்.
விஷ்ணு...!
ரூபலா குரல் கொடுத்துக் கொண்டே சோபாவில் வந்து உட்கார்ந்தாள். விஷ்ணு செல்போனை உசுப்பி இன் பாக்ஸில் இருந்த ஒவ்வொரு எஸ்.எம்.எஸ். ஸையும் பார்த்துத் தேவையானவற்றை வைத்துக் கொண்டு மற்றதை டெலிட் செய்து கொண்டிருந்தான்.
விஷ்ணு...
ரூபலா இரண்டாவது தடவை குரல் கொடுத்ததும்தான் தலை நிமிர்ந்தான். பொய்யாய் முறைத்தான்.
டிஸ்டர்ப் பண்ணாதீங்க மேடம்...
செல்போன்ல அப்படி என்னத்தைப் பார்த்துட்டு இருக்கே...? ஏதாவது டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட மெஸேஜ்ஜஸா...?
மேடம்... இது என்னோட பர்சனல் செல்போன். மெஸேஜ் இன்பாக்ஸ் ரொம்பி வழியுது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சுத்தம் பண்ண வேண்டியிருக்கு..
உன்னோட செல்ஃபோன் நெம்பரை ஏன் எல்லார்க்கும் தர்றே...? கண்டவங்களுக்கு எல்லாம் செல்ஃபோன் நெம்பரைக் கொடுத்தா இப்படித்தான்... எல்லா வேலையையும் விட்டுட்டு இப்படி இன்பாக்ஸை சுத்தம் பண்ணிட்டு இருக்கணும்...
மேடம்... நீங்க கண்டவங்கன்னு சொன்னதை நான் ஆட்சேபிக்கிறேன். அவங்க ஒண்ணும் கண்டவங்க கிடையாது....
பின்னே யாராம்...?
என்னோட ரசிகைகள்... எப்படியோ என்னோட செல் நெம்பரைத் தெரிஞ்சுக்கிட்டு எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி என்னைக் குளிப்பாட்டறாங்க... அந்தக் குளியலில் மூச்சுத் திணறிட்டு இருக்கேன் தெரியுமா...? போற போக்கைப் பார்த்தா டிபார்ட்மெண்ட்ல எனக்கு பிரமோஷன் கொடுத்து, பாஸை எனக்கு அசிஸ்டண்டா போட்டுடுவாங்க போலிருக்கு மேடம்!
டேய்...!
ஸா.. ஸாரி... மேடம்... ஏதோ உளறிட்டேன் போலிருக்கு...!
டேய்...! தயிர் வடையும் காராபூந்தியும் பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிருக்கேன். உனக்கும் ரெண்டு தரலாம்ன்னு போன நிமிஷம் வரைக்கும் நினைச்சுட்டு இருந்தேன். அது இப்போ கான்ஸல்...
அய்யோ மேடம்... இந்த மேட்டரை மொதலிலேயே சொல்லக்கூடாதா..? தயிர் வடையும் காராபூந்தியும் என்னோட பால்ய காலத்து சிநேகிதர்கள் மேடம்! வாரத்துல ரெண்டு தடவையாவது ஏதாவது ஒரு ஹோட்டல்ல அவங்க ரெண்டு பேரையும் பார்த்துடுவேன். இன்னிக்கு அவங்க நம்ம வீட்லயே இருக்கும்போது நான் மிஸ் பண்ணலாமா..?
என்னடா சொன்னே...? பாஸை உனக்கு அசிஸ் டண்ட்டாப் போட்டுடுவாங்களா...?
அய்யோ... மேடம்... வடநாட்டுல லாலு பிரசாத் யாதவ் பேசறதையும் தமிழ்நாட்டுல சுப்ரமண்ய சுவாமி பேசறதையும் யாரும் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க... அவங்க மாதிரிதான் இந்த விஷ்ணுவும்... ஏதோ தத்து பித்துன்னு உளறிட்டேன். அதுக்காக தயிர் வடையில் கையை வெச்சுடாதீங்க.... எனக்குண்டான 33 சதவீத தயிர் வடை கிடைச்சேயாகணும். இல்லேன்னா என்னோட போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்... பின் விளைவுகள் ரொம்பவும் மோசமாய் இருக்கும்.
விஷ்ணு வலது கையை தலைக்குமேல் உயர்த்தி கோஷம் போட்டுக் கொண்டு இருக்கும்போதே கம்ப்யூட்டர் அறைக் கதவைத் திறந்து கொண்டு விவேக் வெளிப்பட்டான். நிதானமான குரலில் கேட்டான்:
விஷ்ணு... எதுக்காக இந்தப் புலம்பல்....
என்னது... இது புலம்பலா? இது என்னோட வீராவேச மான கோஷம் பாஸ்! இது புலியோட உறுமல். பூனையின் முனகல் அல்ல.
ரூபி...! இவனுக்கு என்னாச்சு...?
நான் சொல்றேன்... பாஸ்... நான் சொல்றேன்... மேடத்துகிட்டே எதையும் கேட்காதீங்க... உங்களோடு என்னை கம்பேர் பண்ணி ஒரு கவிதை எழுதி படிச்சுக்காட்டினேன். அந்தக் கவிதை மேடத்துக்குப் பிடிக்கலை.... சரியான பொறாமை பாஸ்!
ரூபலா டீபாயின் மேல் இருந்த செய்தித்தாளைச் சுருட்டிக்கொண்டு அவனை அடிக்க எழுந்தாள்.
நீ என்ன சொன்னேன்னு உன்னோட பாஸ்கிட்டே சொல்லு... கவிதை அது இதுன்னு கதை விடாதே!
ரூபி... அவனை மிரட்டாதே.... அவன் எழுதின கவிதையைச் சொல்லட்டும்...!
தொண்டையைக் கனைத்துக் கொண்டே விஷ்ணு சோபாவுக்குப் பின்னால் போய் நின்று கொண்டு கவிதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
பாஸ்...!
நீங்கள் புதிதாய் நாசிக் பிரஸ்ஸிலிருந்து
அச்சடித்து வந்த
ஆயிரம் ரூபாய் நோட்டு.
நானோ...
செல் டேப்பால் ஒட்டப்பட்டு
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்
கிழிந்து போன
ஐந்து ரூபாய் நோட்டு.
ரூபலா தன் தாடையில் கையை வைத்தாள். டேய்...! ரெண்டு தயிர் வடைக்காக அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியேடா...? உன்னை எப்படிடா நம்பி வீட்டுக் குள்ளே சேர்க்கிறது...?
சொல்லி ரூபலா சிரித்துக் கொண்டிருக்கும்பொழுதே, விஷ்ணுவின் செல்ஃபோன் 'என் பேரு மீனாகுமாரி போவோமா கன்னியாகுமரி' என்ற பாடலை ரிங் டோனாய் வெளியிட்டது.
விஷ்ணு செல்போனை எடுத்து காதுக்கு ஒற்றினான்.
எஸ்....
பதிலுக்கு மறுமுனையில் ஒரு ஆண்குரல் வெடித்தது.
நாயே... யாருக்கடி போன் பண்றே..?
விட்றா....
ஒரு பெண் குரல் மூச்சிரைப்போடு வீறிட்டது.
அந்தப் பேச்சைத் தொடர்ந்து யாரோ ஓடும் சத்தம்... தப்தப்பென்று கேட்டது.
விஷ்ணு தன் செல்போனிலிருந்து மைக்கை ஆன் செய்துவிட்டு கத்தினான். ஹலோ... ஹலோ... பேசறது யாரு...?
பதிலுக்கு மூச்சிரைப்பு சத்தம். இரண்டு பேர் ஓடுகின்ற காலடிச் சத்தம்.
விஷ்ணு போன்ல யாரு...?
தெரியல்ல பாஸ்... யாரோ ஒரு பொண்ணு எனக்கு போன் பண்ணிப் பேச முயற்சி செய்யறா... யாரோ அதைத் தடுக்கறாங்க...
உன்னைக் கூப்பிட்டது யார்ன்னு தெரியலையா?
தெரியலை பாஸ்... நெம்பரும் எனக்கும் பரிச்சயம் இல்லாத நெம்பர்.
விவேக் செல்போனை வாங்கிக் கத்தினான்.
ஹலோ ஹலோ
………….
யார் பேசறது...?
பதிலுக்கு மூச்சிரைப்பு சத்தமும், அதன் பின்னணியில்
This action might not be possible to undo. Are you sure you want to continue?