Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Not out
Not out
Not out
Ebook81 pages26 minutes

Not out

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603304
Not out

Read more from Devibala

Related to Not out

Related ebooks

Reviews for Not out

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Not out - Devibala

    http://www.pustaka.co.in

    நாட் அவுட்

    Not out

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    "நான் புறப்பட்டேன் மஞ்சு! பதிலே வரவில்லை உள்ளேயிருந்து. குகன் பேசாமல் போயிருக்கலாம். அதை அவன் செய்ய வில்லை. மனது கேட்காமல் உள்ளே வந்தான் மறுபடியும்.

    கட்டிலில் முதுகு காட்டிக் கொண்டு படுத்திருந்தாள் மஞ்சு.

    நான் கோர்ட்டுக்குக் கிளம்பியாச்சு மஞ்சு!

    சடாரென எழுந்தாள். அவனைப் பார்த்துத் திரும்பினாள். அவள் முகத்தில் தணல். ஒரு ஆவேசப் பார்வை பார்த்தாள்.

    அவளும் வர்றாளா?

    யாரு?

    தெரியாத மாதிரி நடிப்பா?

    தபாரு! மூடி வச்சுப் பேசாதே! கம் அவுட்! நீ என்ன சொல்றேனு எனக்குப் புரியலை!

    நீங்க சினிமால நடிக்கலாம். அத்தனை அற்புதமா நடிப்பு வருது உங்களுக்கு!

    மஞ்சு! பொறுமையிழந்து வெளிப்பட்டது அவன் குரல்.

    ஏன் கோபம் வருது எங்கிட்ட மட்டும்? இதே அவளா இருந்தா தலைலேருந்து கால் வரைக்கும் சிரிப்பு பீறிக்கிட்டு வருமா?

    கம்மான் ஐஸே! நேரா வா!

    வர்றான்! எழுந்து அவனருகில் வந்தாள் மஞ்சு. உங்க ஜூனியர் சசிகலாவைச் சொல்றேன். கோர்ட் வட்டாரமே நாறுது. எனக்குத் தெரியாதா?' கட்டின பெண்டாட்டி நான் இருக்கும்போது, இன்னொரு பொம்பளைகூட...

    முகம் சிவந்தது அவனுக்கு.

    என்ன உளர்ற மஞ்சு? தொழில் ரீதிபா ரெண்டு பேரும் தினமும் சந்திக்கறம். பழகறம். என்ன உனக்கு இப்படியொரு ஆபாச சிந்தனை?

    வரவர உங்க போக்கே சரியில்லை!

    லுக்! உங்கிட்ட பேசிட்டு நிக்க இப்ப எனக்கு நேரமில்லை. இன்னும் அரை மணி நேரத்துல நான் கோர்ட்ல இருக்கணும், முக்கியமான கேஸ் இருக்கு. சாயங்காலம் பேசிக்கலாம்!

    வேகமாக நடந்தான் வாசலை நோக்கி.

    நில்லுங்க!

    மஞ்சு...!

    எனக்கு இப்ப ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாக. ணும்!

    அவளை ஒரு புழுவைப்போல பார்த்து விட்டு, வேகமாக தன் காரில் ஏறி கதவை அடித்துச் சாத்தினான்.

    இக்னிஷனை உசுப்பி வேகமெடுத்தான்.

    மனது நிலை கொள்ளவில்லை.

    முதல்நாள் இரவே அன்று நடக்கவிருக்கும் வழக்கை நன்றாக ஸ்டடி செய்திருந்தான். இப்போது மனது பெருமளவு குழம்பிக் கிடந்தது.

    உயர்நீதிமன்றத்துக்குள் காரை நிறுத்திவிட்டு 16வது கோர்ட்டுக்குள் நுழைய படியேறினான். மன்றம் தொடங்க இன்னும் பத்து நிமிட நேரம் இருந்தது.

    குட் மார்னிங் ஸார்!

    சசிகலா எதிரே வந்து நின்றாள்.

    குட்மார்னிங் சசி. கேஸை ஸ்டடி பண்ணிட்டீங்களா?

    ம்!

    தனியா நடத்துவீங்களா?

    ஏன் சார்?

    எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. நீங்க பார்த்துக்க முடியுமா?

    சரி சார்!

    நான் சேம்பர்ல இருக்கேன். முடிச்சிட்டு வந்து சேருங்க! சொல்லிவிட்டு குகன் படியிறங்கி வெளியே வந்து விட்டான். சசிகலா சற்றே குழப்பத்துடன் நின்றாள். தோளைக் குலுக்கிக் கொண்டு கோர்ட்டுக்குள் போனாள்.

    குகன் சேம்பருக்குள் நுழைந்து சற்றே தனியான இடமாகத் தேடி அமர்ந்து கொண்டான்.

    மஞ்சுவை நினைத்தபோது ஆத்திரமாக வந்தது.

    குகன் மஞ்சுவைத் திருமணம் செய்து கொண்டு மூன்று வருடம்தான் ஆகிறது. ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை. மஞ்சு குகனுக்கு சொந்த மாமன் மகள்தான்.

    பத்தாவதுகூடத் தாண்டாத பெண். மாமா வியாபாரம், கள்ளக்கடத்தல், நிலத்தடி, பண்டமாற்று என்று பல வகைகளிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1