Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naane Varuvean
Naane Varuvean
Naane Varuvean
Ebook90 pages47 minutes

Naane Varuvean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603383
Naane Varuvean

Read more from Devibala

Related to Naane Varuvean

Related ebooks

Reviews for Naane Varuvean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naane Varuvean - Devibala

    http://www.pustaka.co.in

    நானே வருவேன்

    Naane Varuvean

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அம்மாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

    நிம்மதியாக மகள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு, வைத்ததுதான்சட்டம் என்று அதிகாரப்ப டுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வந்து விடுமோ என்று பயம்.

    மாதவன் அழைத்து விட்டான்.

    நம்ம வீட்டுக்குப் போகலாம்! வாம்மா!

    மாது... நான்..... நானா...?

    "நீதான். நீ இல்லாம நான் எப்படீம்மா சமாளிப்பேன்? வீட்ல குழந்தைகளைப் பார்த்துட்டு நீ இருந்துட்டா, நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.

    வந்துரும்மா!"

    அதில்லப்பா! என் உடம்புல ஆயிரம் வியாதிகள். மாத்திரை, மருந்துல. வாழ்ந்துகிட்டிருக்கேன் நான். என்னையும் சேர்த்துச் சுமக்கணும் நீ வேண்டாம் ராஜா! கஷ்டம்.

    என்னம்மா பேசற நீ! உன்னை என்னிக்கு நான் சுமையா நெனச்சிருக்கேன். மஞ்சு இருக்கும்போதே, ரெண்டு பேருமா உன்னை அழைக்காத நாளில்லை! அப்ப நீ வரலை. போகட்டும்! இப்ப நானும், குழந்தைகளும் மட்டும்தான் வாயேன்மா!

    அம்மா ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.

    அதற்குள் தங்கை வீட்டுக்காரர் வந்துவிட, பேச்சு. தடைபட்டது! மாதவன் வெளியே போய் விட்டான்.

    மாதவன் வாழ்க்கை எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாகத்தான் இருந்தது.

    மாதவனுக்கு மத்திய அரசாங்கத்தில் வேலை! நல்ல சம்பளம்! மஞ்சுவை அவன் கல்யாணம் செய்து கொண்ட சமயத்தில் மஞ்சுவும் ஒரு பள்ளிக்கூடத்திலடீச்சராக இருந்தாள்.

    அந்த சமயத்தில் அப்பாவும் உயிரோடு இருந்தார்.

    ஒரு வருட காலத்தில் அப்பா இறந்தார். மஞ்சுவின் ராசி என்றெல்லாம் அம்மா வசை பாடித் தீர்த்தாள்.

    மாதவனுக்கு ரெண்டு சகோதரிகள்.

    ஒருத்தி உள்ளூரில் அடுத்தவள் திருநெல்வேலியில்! அம்மாவுக்குமகளிடம் இருக்கத்தான் பிடிக்கும்.

    இத்தனைக்கும் மஞ்சு எதிர்த்து ஒரு வார்த்தைபேச மாட்டாள். அம்மா வைத்ததுதான் சட்டம்.

    முதல் குழந்தை, பிறந்து மஞ்சு வீட்டுக்கு வந்ததும், அம்மா, தங்கை வீட்டுக்குக் கம்பி நீட்டி விட்டாள்.

    குழந்தையை பார்த்துக் கொள்ள ஆளில்லை!

    மாதவன் கெஞ்சிப் பார்த்தான். அம்மா மசிவதாகத் தெரியவில்லை. உன் பெண்டாட்டி சம்பாதிக்க ணும். உனக்குக் கைநிறைய காசு வேணும்னு வயசான என்னை கஷ்டப்படுத்தறியா?

    மாதவன் அதன்பிறகு அழைக்கவில்லை,

    மஞ்சு முடிந்தவரை லீவெடுத்தாள்.

    அதன்பிறகு வேலையை விடும் நிலைமை!"

    குழந்தையை க்ரச்ல விட்ரலாமா?

    வேண்டாம் மஞ்சு! எனக்குப் பிடிக்கலை. நீ வேலையை விட்ரு!

    மாசம் ரெண்டாயிரம்...

    போகட்டும். நான் ஓவர் டைம் செஞ்சு அதை ஈடுகட்டிக்கறேன். நீ ராஜினாமா பண்ணிரு!

    மஞ்சு விவாதம் பண்ணவில்லை. விட்டு விட்டாள்.

    ரெண்டு வருஷம் கழித்து அடுத்த குழந்தை!

    அதற்கு ஒரு வயதாகும்போது மஞ்சுவின் அப்பா இறந்து போனார். அம்மா அண்ணன் வீட்டுக்குப் போய்விட்டாள்.

    மஞ்சுவின் குழந்தைகளும் நல்ல குழந்தைகள். நாலு வருட வாழ்க்கை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் இருந்தது.

    யார் கண் பட்டதோ, என்ன கஷ்டகாலமோ... மஞ்சுவுக்கு அந்தக் காய்ச்சல் வந்தது.

    அது சாதாரண ஜூரம்தான் என்று மாதவன்'நினைத்தான்.

    ஆனால் மருந்துகளுக்கு அடங்கவில்லை.

    லோக்கல் டாக்டரின் மருந்து செல்லுபடியாகவில்லை!

    ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பார்த்தார். இது ஒரு மாதிரி விஷஜுரம். ஆஸ்பத்திரில சேர்த்துடுங்க

    மாதவன் பதறிவிட்டான்.

    மஞ்சுவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அம்மாவுக்குத் தகவல் தந்தான்.

    அம்மா வரவேயில்லை.

    மாமியாருக்கு விவரம் தெரிவிக்க, மூன்றாவது நாளே மாமியார் வந்து விட்டாள்.

    அத்தே! குழந்தைகளை நீங்கள் பார்த்துக்குங்க, மஞ்சுகூட ஆஸ்பத்திரில நான் இருக்கேன்.

    'சரி மாப்ளை!" மஞ்சு கூடவே இருந்தான்.

    டாக்டரின் சிகிச்சையில் தேறி ஒரு வாரத்தில் மஞ்சு வீடு திரும்பி விட்டாள்.

    மாதவன் ஆபீஸ் பேரகத் தொடங்கிவிட்டான்.

    மாமியாரை மறுநாள் பஸ் ஏற்றிவிட வேண்டும். அன்று

    Enjoying the preview?
    Page 1 of 1