Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jamuna Jakkirathai
Jamuna Jakkirathai
Jamuna Jakkirathai
Ebook150 pages31 minutes

Jamuna Jakkirathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Jamuna Jakkirathai

Read more from Rajeshkumar

Related to Jamuna Jakkirathai

Related ebooks

Related categories

Reviews for Jamuna Jakkirathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jamuna Jakkirathai - Rajeshkumar

    21

    1

    கேட்டதையெல்லாம் நம்பாதே!

    நம்பியதையெல்லாம் சொல்லாதே!

    பைப்பில் புகையிலைத் தூளை நிரப்பி சிகரெட் லைட்டர் வெளித்தள்ளிய தீப்பிழம்பின் சிறிய நாக்கால் அதைப் பொசுக்கி, பைப்பை ஆழமாய் உறிஞ்சி மெலிதாய் புகைவிட்ட டி.ஜி.பி.ஹரிஹரசுதன் தன் உதவியாளர் ராஜகாந்தன் கதவுக்கு அப்பால் தயக்கமாய் நிற்பதைப் பார்த்ததும் நெற்றியின் பரப்பளவைச் சுருக்கினார்.

    வாங்க... ராஜகாந்தன்...! என்ன விஷயம்...?

    ராஜகாந்தன் கையில் செல்போனோடு உள்ளே வந்தார்.

    சார்...! பெங்களூரிலிருந்து டி.ஜி.பி.கெம்பண்ணா பேசறார். நீங்க பிஸியாய் இருந்தா அப்புறமா பேசறேன்னு சொன்னார்.

    செல்போனைக் கொண்டாங்க... நான் புகை விடறதுக்கா கவர்ன்மெண்ட்ல சம்பளம் தர்றாங்க... ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கப்போய்த்தான் போன் பண்ணியிருக்கார்... சொன்ன ஹரிஹரசுதன் செல்போனை வாங்கி காதுக்கு ஒற்றினார்.

    குட்மார்னிங்... மிஸ்டர் கெம்பண்ணா...

    குட்மார்னிங்... மிஸ்டர் ஹரிஹரசுதன்... எப்படி இருக்கிறீர்கள்...?

    ஃபைன்...! நீங்கள்...?

    கெம்பண்ணா சிரித்தார். நான் எப்படி இருப்பேன் என்று பேப்பர், டி.வி. செய்திகளைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்து இருக்குமே...? பெங்களூரில் சர்வதேச சாஃப்ட்வேர் கம்பெனிகள் வந்ததில் இருந்து தினசரி ஏதாவது ஒரு பிரச்னை. போனவாரம் நடந்த ‘பென்னர்கட்டா’ வெடிகுண்டு விபத்தில் ‘இட்டாலி’ சாஃப்ட்வேர் கம்பெனியின் கட்டிடம் தரைமட்டமானது உங்களுக்குத் தெரியும். நல்லவேளையாக முன்கூட்டியே தகவல் தெரிந்ததால் கம்பெனியில் இருந்த அத்தனை பேர்களையும் வெளியேற்றிக் காப்பாற்ற முடிந்தது. வெடிகுண்டு இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து டிப்யூஸ் செய்வதற்குள் வெடிகுண்டு தன் வேலையைக் காட்டி விட்டது. ஐநூறு கோடி ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த அந்த சாஃப்ட்வேர் நிறுவனம் இப்போது உடைந்துபோன ஒரு கண்ணாடி டம்ளராகிவிட்டது. நான் சரியாய்த் தூங்கி நான்கு நாட்களாகி விட்டது. இன்வெஸ்ட்டிகேஷன் ஈஸ் கோயிங் ஆன்...

    வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்ததா...?

    ஒரு க்ளூ கிடைத்துள்ளது. அது சம்பந்தமாய் உங்களுடன் பேசத்தான் செல்போனில் அழைத்தேன்...

    சொல்லுங்கள்... என்ன க்ளூ...?

    உங்கள் தமிழ்நாட்டில் ‘ப்ளாக் ஃப்ளேம்ஸ்’ என்ற பெயரில் அதாவது ‘கரும்புகை’ என்ற அர்த்தத்தில் இயக்கம் ஏதாவது உள்ளதா?

    ப்ளாக் ஃப்ளேம்ஸ்...?

    எஸ்...

    அப்படி ஒரு இயக்கம் இருக்கிற மாதிரி தெரியவில்லையே...?

    உங்களுடைய உளவுத்துறையிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?

    உளவுத்துறையிடம் கேட்க வேண்டியதே இல்லை மிஸ்டர் கெம்பண்ணா! தினசரி அவர்களிடமிருந்து எனக்கு அறிக்கைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் சொல்வது போல் ‘ப்ளாக் ஃப்ளேம்ஸ்’ என்ற பெயரில் எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை... என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

    மறுமுனையில் கெம்பண்ணா மெல்லச் சிரித்தார். ஸாரி மிஸ்டர் ஹரிஹரசுதன்...! நான் இதைச் சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்...

    என்ன...?

    உங்களுடைய தமிழ்நாட்டு உளவுத்துறை விழிப்போடு செயல்படவில்லை என்று நினைக்கிறேன். ‘ப்ளாக் ஃப்ளேம்ஸ்’ என்ற இயக்கமொன்று திருச்சியைத் தலைமையிடமாக வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது.

    ஹரிஹரசுதன் நிமிர்ந்து உட்கார்ந்தார். இந்தத் தகவலை உங்களுக்கு யார் சொன்னது...?

    எங்களிடம் பிடிபட்ட ஒரு பெண்...

    பெண்ணா...?

    ஆமாம்...! அவளுடைய பெயர் கோப்பெருந்தேவி என்று சொன்னாள். அவளைப் பெண் கான்ஸ்டபிள்களிடம் ஒப்படைத்து ஒரு நாள் முழுவதும் ரெட் செல்லில் வைத்து விசாரித்தபோது அவள் சொன்ன தகவல்கள் இது.

    அந்தப் பெண்ணின் பெயர் என்ன என்று சொன்னீர்கள்?

    கோப்பெருந்தேவி...

    அவள் எப்படி போலீஸ் கையில் மாட்டினாள்...?

    பெங்களூரில் இருக்கும் எல்லா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களையும், சாதாரண ஹோட்டல்களையும் சோதனை போட்டபோது அவள் மாட்டினாள். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில்களைச் சொன்னாள். போலீசார்க்குச் சந்தேகம் வந்தது. அப்போது அவளுடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போலீஸார் அந்த செல்போனை எடுக்க முயன்றபோது அவள் சட்டென்று எடுத்து அதை ஜன்னல் வழியே வீசிவிட்டாள். ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்த அந்த செல்போனை போலீஸார் கண்டுபிடிக்க முயன்றார்கள். அது கிடைக்கவில்லை. யார்க்காவது அது கிடைத்து எடுத்துப் போயிருக்கலாம் என்று நினைத்த போலீஸார் அவளிடம் செல்போன் நம்பர் என்ன என்று கேட்டார்கள். அவள் வாயைத் திறக்கவில்லை. அதற்குப் பிறகு அவளைக் கைது செய்து ரெட் செல்லுக்குக் கொண்டு வந்து விசாரித்தபோதும் செல்போன் நம்பர் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டாள். அவள் தன்னுடைய இயக்கத்தைப் பற்றிப் பேசும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துகிறாள். அவளை இன்னமும் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டுமாம். இல்லாவிட்டால் பெங்களூரில் உள்ள இன்னொரு சாஃப்ட்வேர் கம்பெனி தூள் தூளாகும் என்று எச்சரிக்கை செய்து கொண்டு இருக்கிறாள்.

    ஹரிஹரசுதன் ஆச்சர்யப்பட்டார்.

    மிஸ்டர் கெம்பண்ணா...! நீங்கள் சொல்கிற செய்திகள் எல்லாம் அதிர்ச்சியாக உள்ளன. அந்தத் தீவிரவாதிப் பெண் கோப்பெருந்தேவி இப்போது யார் கஸ்டடியில் இருக்கிறாள்?

    சி.பி.சி.ஐ.டி.போலீஸார் கஸ்டடியில்! அவளிடமிருந்து மேற்கொண்டு உண்மைகளை விசாரிக்க தமிழக போலீஸாரின் உதவி தேவைப்படுகிறது. புலன் விசாரணையில் அனுபவமுள்ள ஒரு க்ரைம் போலீஸ் அதிகாரியை உடனடியாய் பெங்களூர்க்கு அனுப்பி வைக்க முடியுமா...?

    அனுப்பி வைக்கிறேன்...

    ஃப்ளைட்டில் அனுப்பி வையுங்கள்... மதியம் ஒரு மணிக்குள் அவர் பெங்களூர் வந்து சேர்ந்துவிட வேண்டும்.

    சேர்ந்து விடுவார்... - சொன்ன ஹரிஹரசுதன் செல்போனை அணைத்துவிட்டு எதிரில் நின்றிருந்த தன் உதவியாளர் ராஜகாந்தனைப் பார்த்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1