Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisivarai Yaaro
Kadaisivarai Yaaro
Kadaisivarai Yaaro
Ebook88 pages38 minutes

Kadaisivarai Yaaro

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465766
Kadaisivarai Yaaro

Read more from Devibala

Related to Kadaisivarai Yaaro

Related ebooks

Reviews for Kadaisivarai Yaaro

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisivarai Yaaro - Devibala

    14

    1

    படுத்த பத்து நிமிடங்களில் தொடங்கிய மூச்சிரைப்பு அம்மாவுக்கு அதிகமாகி விட்டது!

    படுக்க முடியாமல் அம்மா எழுந்து உட்கார, பத்மினி அரைத் தூக்கத்தில் இருந்தாள்.

    பப்பிமா, பப்பிமா!

    அம்மா குரல் கொடுக்க, பத்மினி படக்கென எழுந்து விட்டாள்.

    மு... முடியலைமா!

    பத்மினி விளக்கைப் போட்டாள்.

    என்னம்மா?

    மூச்சு... வி... ட... முடியலை...ம்மா!

    மாத்திரை போட்டுக்கலையா நீ?

    சாப்பிட்டேன்மா! - அம்மாவுக்கு பேச முடியாமல் இளைத்தது! பத்மினி சமையல் கட்டுக்குப் போய் வெந்நீர் வைத்து எடுத்து வந்தாள். குடிக்க வைத்தாள். ஒத்தடம் கொடுத்தாள். எதற்கும் கட்டுப்படவில்லை.

    வேறு வழியில்லை! ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டியதுதான். அண்ணனின் பெட்ரூமை நெருங்கினாள்.

    கதவைத் தட்ட கை கூசியது! வேறு வழியில்லை!

    தட்டி விட்டாள். சில நிமிடங்களுக்குப் பிறகு அண்ணன் தூக்கக் கலக்கத்தோடு திறந்தான்.

    அம்மாவுக்கு ரொம்ப முடியலைண்ணே!

    இப்ப மணி என்ன?

    பத்தரை!

    எந்த டாக்டரைப் போய் தேடறது? காலைல பாத்துக்கலாம்!

    இல்லைண்ணே! விபரீதமா ஏதாவது ஆயிட்டா? 24 மணிநேர க்ளினிக்ல பாக்கலாம்.

    அண்ணி எழுந்து வந்தாள்.

    என்ன பத்மினி இது? டபுள் ட்யூட்டி பாத்துட்டு வந்து அவர் படுத்திருக்கார். உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லையா?

    ஸாரி அண்ணி! ரொம்ப முடியலை அம்மாவுக்கு!

    அண்ணன் தியாகு எரிச்சலுடன் உள்ளே போய் சட்டையை மாட்டிக் கொண்டான்.

    சரி! ஆட்டோ கொண்டு வர்றேன்!

    வெளியேறினான்!

    இந்த வீட்ல நிம்மதியா தூங்கக் கூட முடியாது! மத்தவங்க கஷ்டங்களப் புரியாத ஜென்மங்க!

    அண்ணி முனங்கத் தொடங்கி விட்டாள்.

    தியாகு ஆட்டோவுடன் வந்து விட்டான்.

    அம்மாவைக் கூட்டிட்டு வா!

    பத்மினி அம்மாவை மெல்லப் பிடித்து அழைத்து வந்தாள். ஆட்டோவில் ஏற்றினாள்.

    சுசிலா! கதவை சாத்திக்கோ!

    தியாகு சொல்லி விட்டு ஆட்டோவில் ஏறினான்!

    ஆட்டோ, 24 மணி நேர க்ளினிக் வாசலில் நிற்க, பத்மினி அம்மாவை தாங்கிப் பிடித்து அழைத்து வந்தாள்.

    டாக்டர் பரிசோதித்தார்!

    உடனே அட்மிட் பண்ணிடுங்க!

    இன்ஜெக்ஷன் போட்டுக் கட்டுப்படுத்த முடியாதா? - தியாகு கேட்க,

    இல்லை சார்! நெபிலைசர் வைக்கணும். எங்க பார்வைல இருக்கணும். சாதாரணமா விட்டா லங்க்ஸ் பாதிக்கும். மேலும் நாளைக்கு டெஸ்ட்டுகள் எடுத்துட்டுத்தான் ட்ரீட்மெண்ட் என்னானு தீர்மானிக்க முடியும்!

    சரி!

    காலைல வந்து மூவாயிரம் ரூபா பணம் கட்டிடுங்க. அப்புறமா சொல்றேன். சிஸ்டர்! பெட் ஏற்பாடு பண்ணு! கூட இருக்கப் போறது யாரு?

    நானிருக்கேன் டாக்டர்! - பத்மினி சொல்ல,

    அம்மா படுக்க வைக்கப்பட்டு, நெபிலைசர் பொருத்தி, ட்ரிப்ஸ் போட்டு, ஊசியும் போட்டார் டாக்டர்!

    பத்மினி பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள்.

    சரி பப்பி! நான் வீட்டுக்குப் போயிட்டு காலைல வர்றேன்!

    அண்ணே! அம்மாவுக்கு மாற்றுப் புடவை, முடிஞ்சா காபி கொண்டு வர்றியா?

    ம்! பாக்கலாம். காலைல மூவாயிரம் பணம் கட்டணும். தவிர, இன்னும் எத்தனை இருக்கப் போகுதோ?

    அம்மாவுக்கு உன்னைத் தவிர யார் இருக்காங்க அண்ணே?

    சரி பப்பி! நானும் எத்தனைதான் சமாளிக்க முடியும்? முதல்ல உங்கண்ணியை சமாளிக்கணுமே! சரி! நான் பண்ணின பாவம்!

    வேகமாக வெளியே வந்தான்.

    ஒரு ஆட்டோவைத் தேடிப் பிடித்து அவன் வீடு வந்து சேரும் போது நள்ளிரவு 12 மணி!

    சுசீலா கதவைத் திறந்தாள். அவன் மட்டும்.

    எங்கே அவங்க ரெண்டு பேரும்?

    ரொம்ப அதிகமா இருக்கு. அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க!

    அப்புறம்?

    காலைல மூவாயிரம் முன்பணம் கட்டணும்! அப்புறமா டெஸ்ட்டுகள் எடுத்துட்டு ட்ரீட்மெண்ட்!

    எப்படியும் மூணு நாள் வச்சுகிட்டு பத்து ரூபா கறந்துடுவாங்க!

    ம்!

    ம்’னு சொன்னா எப்படி? பணத்துக்கு எங்கே போறது?

    செஞ்சுதானே ஆகணும் சுசி?

    அவன் சட்டையைக் கழட்டி விட்டு கட்டிலில் வந்து உட்கார்ந்தான்.

    அவர்களது ஐந்து வயது மகள் பவித்ரா உறக்கத்தில்!

    இந்த ரேஞ்சுல போனா, நம்ம குழந்தை தெருவுலதான் நிக்கணும்!

    சரி சுசி! விட்ர முடியுமா? அம்மாவாச்சே?

    விடாதீங்க! கெட்டியா புடிச்சுக்குங்க! ஆனா கட்டின பொண்டாட்டி, பெத்த மகள் ரெண்டு பேரையும் நீங்கதான் பாத்துக்கணும்!

    இப்ப உங்க ரெண்டு பேருக்கும் என்னடீ கஷ்டம்?

    "என்னதா? வாடகை வீடு - மாசக் கடைசில பற்றாக்குறை! நம்ம புள்ளை கான்வென்ட்லயா படிக்குது? இல்லை... தங்கமும் வைரமுமா என்னை இழைச்சிருக்கீங்களா?

    Enjoying the preview?
    Page 1 of 1