Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mella Varum Boogambam
Mella Varum Boogambam
Mella Varum Boogambam
Ebook93 pages1 hour

Mella Varum Boogambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Mella Varum Boogambam

Read more from Rajeshkumar

Related to Mella Varum Boogambam

Related ebooks

Related categories

Reviews for Mella Varum Boogambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mella Varum Boogambam - Rajeshkumar

    16

    1

    சுகுமார் தீவிர யோசிப்பில் இருந்தான்.

    அருகே குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்த சபாபதி, தன் ரோமம் மண்டிய மோவாயைச் சொறிந்து விட்டுக் கொண்டே சுகுமாரின் தோளைத் தட்டினான்.

    என்ன சுகுமார் யோசிக்கிறே? உனக்கு பயமாயிருந்தா வேண்டாம்... நம்ம இயக்கத்துல வேறு யாரையாவது கூப்பிட்டுக்கிறேன்."

    பயமா? சுகுமார் விட்டேற்றியாய் சிரித்தான்.

    இந்த ஓநாய்களை வேட்டையாடத் தானே உன் இயக்கத்துல சேர்ந்தேன். சபாபதி! நான் யோசிக்கிறதைப் பார்த்து பயப்படுறதா நினைச்சுட்டே... என்னோட யோசனையெல்லாம் அந்த குமாரவேலை தீர்த்துட்டு, நாம எப்படி மாட்டிக்காம வெளியே போறதுன்னுதான்.

    சபாபதி, அணைந்துபோன பீடி ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டே கோணல் சிரிப்பு சிரித்தான்."

    நிச்சயமா நாம மாட்டிக்கமாட்டோம், சுகுமார்."

    "எப்படி சொல்றே?’

    வா... திண்ணைக்கு போயிடுவோம். நம்ம ஆட்கள் நாலைந்து பேர் வந்து காத்திட்டிருக்காங்க. அவங்களையும் கலந்துகிட்டு பேசுவோம்.

    அந்த சின்ன அறையைவிட்டு வெளியே வந்தார்கள், இருவரும். அறையின் தாழ்வான கூரை நெற்றியில் ‘இளைஞர் பூங்கா’ என்று பெயர் பொறித்த செவ்வக போர்டு ஒன்று சலனமில்லாமல் தொங்கிக் கொண்டிருக்க"

    அதன் கீழே நான்கு இளைஞர்கள் விரக்தி பார்வைகளோடும், சிகரெட் புகை மண்டலத்தோடும் உட்கார்ந்திருந்தார்கள்.

    சபாபதியும், சுகுமாரும் மெல்ல நடையிட்டு, அவர்களை நெருங்கி உட்கார்ந்தார்கள். நான்கு பேரில் ஒருத்தன் கேட்டான்.

    என்ன... நாளைக்கு நடக்கப் போகிற முதல் வேள்விக்கு தயாராயிட்டீங்களா?

    தயாராயிட்டோம்.

    எந்த கம்பெனியில் இண்டர்வியூ?

    சேஷாத்திரி ஏற்றுமதி நிறுவனம்.

    இண்டர்வியூ யார் யாருக்கு வந்திருக்கு?

    நம்ம ஆட்களில் எனக்கும் சுகுமாருக்கும்.

    இண்டர்வியூ பண்ணப் போறது யார்?

    "கம்பெனியோட எம்.டி. குமாரவேல் தான்.

    கும்பலில் ஒருவன் சீறினான்.

    சரியான ஓநாய்... மாசத்துக்கு ரெண்டு தடவை இண்டர்வியூ வைக்க வேண்டியது... ஏற்கெனவே ஒரு ஆளை தேர்வு பெண்ணிட்டு, ஜாலியா இண்டர்வியூவை நடத்தி இண்டர்வியூக்கு வர்ற அழகான பெண்களை விதவிதமா கேள்வி கேட்டு நேரத்தைப் போக்கி கடைசியில் எல்லாருடைய நம்பிக்கையையும் காலில் போட்டு மிதிக்க வேண்டியது... அந்த குமாரவேலுக்கு இது ஒரு பொழுதுபோக்கா போச்சு... நாளைக்கு அவன் நடத்தப் போற இண்டர்வியூதான் கடைசி இண்டர்வியூ.

    ரெண்டு பேரும் அந்த குமாரவேலை எப்படி தீர்க்கப் போறீங்க?

    சபாபதி யோசனையுடன் உட்கார்ந்திருந்தான்.

    மெல்ல பேச ஆரம்பித்தான்.

    அவன் பேச்சை ஆரம்பிப்பதற்குள் அந்த இளைஞர் பூங்காவைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும்.

    இந்த இளைஞர் பூங்கா பிறந்து ஏறக்குறைய ஒரு ஆண்டாகிறது. இதில் இருக்கிற பன்னிரண்டு பேரும் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஒவ்வொரு பெயரின் பின்னாலும் ஒரு பி.ஏ. அல்லது பி.எஸ்.சி. ஒட்டிக் கொண்டிருந்தது.

    பல்கலைக் கழகம் கொடுத்த சின்னத்தை தோசை மாதிரி சுருட்டி வைத்துக் கொண்டு வாடகைக்கு வாங்கிய கறுப்பு அங்கியை மாட்டிக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த போது சிரித்தவர்கள்தான் அதற்குப் பிறகு சிரிக்கவேயில்லை.

    இந்திய அரசாங்கத்தில் வேலை கேட்டு தோற்றுப் போனவர்கள். வீட்டிலும், வெளியிலும் அலட்சியப்படுத்தப் பட்டவர்கள். ஏராளமான நேர் முகத் தேர்வுகளில் ‘உலகத்தில் பெரிய மலை இமயமலை’ என்று சளைக்காமல் சொன்னவர்கள். அவநம்பிக்கையை ஒரு கண்ணிலும், ஆத்திரத்தை இன்னோர் கண்ணிலும் நிரப்பிக் கொண்டு, காய்ந்துபோன வயிறுகளோடு உலா வருபவர்கள். பிரச்சினைகளைத் தீர்க்க பலாத்காரமே சிறந்த ஆயுதம் என்று தப்பாக நினைத்துக் கொண்டு அதைக் கைகளில் எடுத்து திரிபவர்கள்.

    சபாபதி, வெளியே பரவியிருந்த இருட்டை சுற்றம் முற்றும் பார்த்துக் கொண்டு பேச்சைத் தொடங்கினான்.

    "இண்டர்வியூ தொடங்கும் நேரம் காலை பத்து மணி. சேஷாத்திரி கம்பெனியில் - அகர வரிசைப்படி ஆட்களை கூப்பிடுவாங்க. அப்படி பார்த்தா ‘எஸ்’ல ஆரம்பிக்கிற நானும் சுகுமாரும் பக்கத்துப் பக்கத்துல இருக்கோம்.

    பாதி பேரை கூப்பிட்டு முடிஞ்சதும், என்னை கூப்பிடுவாங்க. நான் உள்ளே போவேன். போனதும் என்னோட கோப்புக்கு மத்தியில ஒளிச்சு வைச்சிருக்கிற துப்பாக்கியைக் காட்டி, எம்.டி. குமாரவேலுவை என்னோட கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வருவேன்.

    வெளியே காத்திட்டிருக்கிற சுகுமார் உள்ளே வந்ததும், குமாரவேலுவை சத்தமில்லாம தீர்க்கிற முயற்சியில் ஈடுபடுவோம்."

    அப்புறம் என்ன செய்யப் போறீங்க?

    சபாபதி நகத்தைக் கடித்துக் கொண்டு சுகுமாரைப் பார்த்தான்.

    சுகுமார் சொன்னான். ரெண்டு விதமா குமாரவேலைத் தீர்க்கலாம். ஒண்ணு துப்பாக்கியாலே தீர்க்கலாம். இருந்தாலும், குண்டை வாங்கினா அவர் பெரிசா சத்தம் போட்டு கும்பலை கூட்ட முடியும். இன்னொண்ணு, நஞ்சு. தம்ளர் தண்ணியில் இந்த மாத்திரைகளை கலந்து தரலாம்.

    கும்பலில் இருந்த ஒருத்தன் சிகரெட் புகையும் வாயோடு சிரித்தான். "குமாரவேல் செத்துடுவார்... நீயும், அவனும்

    Enjoying the preview?
    Page 1 of 1