Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Krishna Jaalam
Krishna Jaalam
Krishna Jaalam
Ebook589 pages5 hours

Krishna Jaalam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703923
Krishna Jaalam

Read more from Indira Soundarajan

Related to Krishna Jaalam

Related ebooks

Reviews for Krishna Jaalam

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Krishna Jaalam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கிருஷ்ண ஜாலம்

    Krishna Jalam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியர் உரை

    கிருஷ்ண ஜாலம் என்கிற இந்த நுால் நான் எழுதிய நுாற்றுக்கணக்கான நுால்களில் பிரத்யேகமான மதிப்பையும் சிறப்பையும் கொண்ட ஒரு நுாலாகும். 'தினமலர்-ஆன்மிகமலர்' இதழ் வாயிலாக லட்சக்கணக்கான வாசகர்களை வாரம் தோறும் சந்தித்த ஒரு தொடரே நுாலாக வடிவம் கண்டுள்ளது.

    இந்த நுாலின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணன்!

    இதை எழுதத் தொடங்கும் முன் கிருஷ்ணனை நான் ஒரு புராண கதாபாத்திரமாகத் தான் நினைத்திருந்தேன். சிறுவயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்தியன்று பூஜித்து வந்தபடியால் பக்திக்கு உரிய கடவுளாகவும் என்னுள் கிருஷ்ணன் பதிவாகியிருந்தான். இந்த நுாலை எழுத, எழுத அதற்காக ஸ்ரீகிருஷ்ணனை நான் உள்வாங்க உள்வாங்க என்னுள் ஏராளமான மாற்றங்கள்-நெகிழ்வுகள்!

    ஒரு கட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணனை விட இந்த உலகில் எதுவும் பெரிதாக இருக்க முடியாது என்கிற உறுதிப்பாட்டுக்கு நான் வந்து விட்டேன். ஸ்ரீகிருஷ்ணனின் ஜனனத்தில் தொடங்கி மரணம் வரை கிருஷ்ணன் வாழ்ந்த வாழ்க்கை, அவன் பேசிய பேச்சுக்கள் ஆடிய நாடகங்கள் அவ்வளவும் அற்புதம் கடந்த ஆனந்தம்.

    ஸ்ரீகிருஷ்ணன் குறித்து காஞ்சி மகாபெரியவர் வெகு அழகாய் கூறியுள்ளார்.

    அவதாரங்களில் ஸ்ரீகிருஷ்ணாவதாரமே பரிபூர்ண அவதாரம்! ஸ்ரீகிருஷ்ணனை எவராலும் வெறுக்க முடியாது. முப்பத்தி இரண்டு லட்சணங்களோடு எழிலாங்கதனாக அவன் காட்சி தந்ததால் மட்டுமல்ல, அவன் புன்னகைக்கே முக்தி தரும் ஆற்றல் உண்டு. அவனது எதிரிகள் கூட விதிவசத்தால் அவனை வெறுத்தவர்களே.... அந்த வெறுப்பு கூட மிகுந்த பிரியத்தின் எதிர்பதமாய் வந்தது தான்!

    அவன் குழலுாதும் ஒரு இசைக்கலைஞன், நன்கு நடனமாடும் ஒரு நாட்டியக்காரன், ரதத்தை ஓட்டும் வண்டிக்காரன், மாடு பிடி வீரன், மல்யுத்த சூரன், துாதன், வெண்ணெய் திருடன், ஆசிரியன், குரு, நல்ல காதலன்....'

    அடேயப்பா இவன் ஒருவனுக்குத் தான் எத்தனை பாத்திரங்கள். அதனாலேயே எல்லோருக்கும் இவன் மிக பிடித்தமானவனாக இருக்கிறான். இவனை புரிந்து கொள்வது கடினம். புரியாமல் புரிபவன் என்றும் கூறலாம்.

    இவன் செயல்களை வர்ணஜாலம் போல் உணர்ந்ததால் தான் கிருஷ்ணஜாலம் என்று தலைப்பிட்டேன். ஜாலம் என்றால் மாயை என்றொரு பொருளும் உண்டு. இவன்கூட வாழ்வை மாயை மிகுந்ததாகவே உபதேசிக்கிறான். நன்மை, தீமை இரண்டையும் தனக்கே அர்ப்பணம் செய்துவிடச் சொல்கிறான்.

    இதை விட ஒரு மையநிலை ஒரு உயிருக்கு இருக்க முடியாது. இதையே நம் பாரதி தன் பாணியில், 'பயன் கருதாது உழைக்கச் சொன்னான் - பக்தி செய்து பிழைக்கச் சொன்னான்' என்கிறான்.

    இந்திரா சௌந்தர்ராஜன்

    கிருஷ்ண ஜாலம்

    நம் புராண பாத்திரங்கள் மிக நுட்பமானவை. அவை தங்களுக்குள் அரிய செய்திகளை வைத்துக் கொண்டிருப்பவை. இதை உணர நமக்கு மதி நுட்பம் தேவை. இப்போது வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த ஆன்மிக கட்டுரையை எழுத நான் பயன்படுத்தும் தாள் முதல் பேனா வரை சகலமும் விஞ்ஞானத்தின் கொடை தான்.

    இதைக் கொண்டு அச்சாகி வர இருக்கும் புத்தகமும் விஞ்ஞானத்தின் கொடையே.... வரும் நாளில் பேனாவும், பேப்பரும் இன்றி பேசுவதே கூட எழுத்தாகி, கண் எதிரில் காட்சி தரலாம். எலக்ட்ரானிக்ஸ் எனப்படும் ஒளி உலகம் அப்படி ஒரு வளர்ச்சி நோக்கி சென்றபடி உள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது பழைய புராணங்கள் வெறும் கற்பனையாகவும், பொருளற்றதாகவும் சிலருக்குத் தோன்றலாம். அப்படி தோன்றினால் அதுவும் அவர்கள் குற்றமில்லை. இது மிக இயல்பான ஒரு விஷயமே...... ஆனாலும் இந்த விஞ்ஞான காலத்திலும், நம் புராண நுட்பங்களை சிலர் தங்களுக்குள் கிரகித்துக் கொண்டு, அதை நமக்குச் சொல்லும் போது அது இந்த விஞ்ஞான தாக்கங்களை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாக்கி விடுகிறது.

    என் நண்பர் ஒரு கிருஷ்ண பக்தர். அவரது சட்டை பாக்கெட்டில் எப்போதும் ஒரு கிருஷ்ணர் படம் இருந்து கொண்டேயிருக்கும். அவரைப் பொறுத்த வரையில் கிருஷ்ணர் நூறு சதவீதம் கடவுளுக்கும் மேலான பாத்திரம். அது என்ன கடவுளுக்கும் மேலானவர்' என்று கூட கேட்கத் தோன்றலாம்.

    கடவுள் தான் உலகில் பெரியவர் என்று ஆத்திகவாதி ஒப்புக் கொள்கிறான்.

    நாத்திகவாதியோ கடவுளை ஒப்புக் கொள்வதில்லை. இந்த உலகமோ கடவுளை மறுப்பவர்களையும் தன் வசம் கொண்டு தான் சுழல்கிறது. ஆக, நாத்திகவாதிகளைப் பொறுத்தவரை கடவுளுக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அதை இயற்கை என்றும், பேராற்றல் என்றும், சில சமயத்தில் புரியாத புதிர் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி கடவுளை தள்ளி விட்டு, வேறு பலவாறாகவும் கூறுவதை நாம் கேட்கவே செய்கிறோம்.

    இதிலிருந்து கடவுளை ஒப்புக் கொள்பவர், மறுப்பவர் என இரு சாரார் இருப்பதால் என் நண்பரும் கிருஷ்ணனை கடவுள் என்றும், கடவுளுக்கும் மேலானவர் என்றும் கூறுகிறார். அதே சமயம் கண்ணனே எல்லாம் என்பதே அவரது முடிவு. புழு, பூச்சி முதல் மனிதன் வரையுள்ள அனைத்து உயிர்களும் கிருஷ்ண மயம் என்பதே அவரது தீர்மானம்.

    கண்ணனாகிய அந்த கிருஷ்ணனை அவர் எப்படி எல்லாம் வியக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

    "கிருஷ்ணனுக்கு கருநீல வண்ண மேனி. தமிழில் சொல்வது என்றால் கருப்புச்சாமி. அதாவது இரவின் வண்ணம் கொண்டவன். இரவு மட்டும் இல்லாவிட்டால் உலகில் ஒரு உயிரினமும் நலமுடன் வாழ முடியாது. பகல் பொழுதில் நின்று இயங்கும் உயிர்கள் மண்ணுக்கும், வானத்திற்குமாக செயலாற்றுகின்றன. இரவில் படுக்கும் போது தான் செயலற்று கிடக்கின்றன. செயல்படும் போது தன்முனைப்பு உண்டு. இரவில் ஓய்வு எடுப்பதால் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லை. பகலில் செயல்பட தெம்பைத் தருவது இரவே. அந்த வகையில் கிருஷ்ணனே நமக்கெல்லாம் சக்தி தருபவன் என்று தொடங்கினார் நண்பர். அப்புறம் அவன் தோற்றத்தைப் பார் என்றவர், அப்படியே விவரிக்கத் தொடங்கி விட்டார்.

    "அவன் தலையில் அழகான மயிற்பீலி இருக்கும். அதில் பல வண்ணங்கள் உண்டு. நிறமற்ற கருப்பன் என்ற போதிலும் என்னிலும் பல வண்ணங்கள் உண்டு என்று சொல்லாமல் சொல்கிறானாம் அவன். அடுத்தது அவனது புல்லாங்குழல்! மயிற்பீலியின் வண்ணங்களைக் காண முடியாத கண்களுக்கு என்றால், புல்லாங்குழலோ கேட்க முடிந்த காதுகளுக்கானது. ஒன்று ஒளி! மற்றொன்று ஒலி!

    இரண்டும் நானே என்கிறான் கண்ணன். அவன் எப்போதும் மாலை சூடியவனாகவே இருக்கிறான். மாலை என்பது மதிப்புக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. வாசமிகு மலர்களால் உருவானது. மலர்களுக்கு நிறம், மணம், மென்மை, தேன் என்னும் தித்திப்பு, கனமில்லாத லேசான தன்மை ஆகிய ஐவகை சிறப்புகள் உண்டு. அதனால் தான் மாலை சூடுதல் என்பதை மங்கல நிகழ்வாக கருதுகிறோம். இந்த மாலையை கண்ணன் எப்போதும் கழுத்தில் சூடியிருப்பான்.

    மொத்தத்தில் நானே சக்தி தருபவன், பல வண்ண வாழ்வை வடிவமைப்பவன், நானே எப்போதும் மதிப்பிற்குரியவன், நானே ஒலியும், ஒளியுமானவன், உண்டு என்பாருக்கு பல வண்ணங்களில் மிளிர்பவன், இல்லை என்பாருக்கு இருந்தும் இல்லாது போகின்ற கரிய இரவாக காட்சி தருபவன். அதே சமயம் ஏற்பவரையும், மறுப்பவரையும் சமமாகக் கருதி ரட்சிப்பவன்' என்று கிருஷ்ண பரமாத்மா எனக்குள் அர்த்தமாகின்றார், " என்றார் நண்பர்.

    அவருடைய பேச்சை என்னால் ஏற்காமல் இருக்க முடியவில்லை. காஞ்சி மகா பெரியவர் கூட இதை வைத்து தான் கிருஷ்ணனே பூர்ணாவதாரி என்றாரோ என்று நானும் எண்ணிப் பார்க்கிறேன்.

    கரிய இரவில் பிறக்கிறான். அதே இரவில் இடம் மாறுகிறான். பெற்றவள் ஒருத்தி. வளர்த்தவள் இன்னொருத்தி. இந்த உலகில் பிறக்கும் குழந்தை எதுவாக இருந்தாலும், அது அன்புக்கும் பாசத்துக்கும் மட்டுமே ஆளாகும். பிச்சைக்காரி கூட தான் பெற்ற பிள்ளையைத் தன் அரவணைப்பில் பராமரிப்பாள். ஆனால் கண்ணனோ பிறக்கும் போதே உயிருக்கு ஆபத்தோடு பிறந்தவன்.

    இந்த பூமி ஒன்று தான் என்றாலும் அது இரவு, பகல் என்று இரு கூறாகப் பிரிந்து செயலாற்றுகிறது. சுவை என்பதும் ஒன்றே. ஆனால் இனிப்பு, கசப்பு என்று அதுவும் இரு கூறாகவே செயலாற்றுகிறது. மனிதனும் ஆண், பெண் என்று இரு பகுப்பாகவே உள்ளான். அவனது உணர்வும் இன்பம், வலி என்னும் இரண்டாக உள்ளது. தொடு உணர்வில் சூடு, குளிர்ச்சி என்னும் இரண்டு இருக்கிறது.

    இப்படி எல்லாம் இரண்டின் தன்மையாக இருப்பதாலேயே ஒன்றைக் கொண்டு மற்றொன்றை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஒட்டு மொத்தமும் நான் தான். என்னுள் இருந்தே எல்லாம் தோன்றின என்று கிருஷ்ணன் கீதையில் கூறுவது எத்தனை பெரிய உண்மை? இதன் காரணமாகத் தானோ என்னவோ, அந்தக் கண்ணனை நாம் உற்று நோக்கும் போது அவன் ஏற்காத பாத்திரங்களே இல்லை என்பது தெரிய வருகிறது.

    குதிரை வண்டிக்காரன் என்னும் சாரதி பாத்திரத்தில் இருந்து தூது செல்வது, மாடு மேய்ப்பது, குழலிசைப்பது, வெண்ணெய் திருடுவது, மல்யுத்தம் புரிவது, அடி கொடுப்பது, அடி வாங்குவது, போதிப்பது, காதலிப்பது, எச்சரிப்பது, ஏமாற்றுவது, ஏமாறுவது, வணங்குவது, வணங்கச் செய்வது, நண்பனாக இருப்பது, சேவகனாக பணி செய்வது, வழிகாட்டியாக இருப்பது, காட்டிய வழியில் நடப்பது, முற்றாக கீதை நாயகனாக, 'என்ன கொண்டு வந்தாய்? எதைக் கொண்டு போக உன்னால் முடியும்?' என்று உணர்த்துவது, மாறிக் கொண்டேயிருப்பதே வாழ்க்கை என்று எடுத்துச் சொல்வது.... இப்படி இருவகையாக நடந்து கொள்கிறான்.

    நடப்பவை அனைத்திலும் நன்மை உள்ளது. இதை உணர சாமானிய அறிவால் முடியாது. அதற்கு பிரம்ம ஞானம் வேண்டும் என்பதைச் சொன்ன, உயிர்களின் கண் போன்ற கண்ணனின் பாகவத லீலைகளின் சில துளிகளை சிந்திப்பதே கிருஷ்ண ஜாலம் என்னும் இந்த தொடரின் நோக்கம். அதற்கு முன்னதாக எது பிரம்ம ஞானம் என்பது குறித்து நாம் சற்று சிந்திக்கலாமா?

    கிருஷ்ண பரமாத்மாவை நாம் முழுமையாக அனுபவித்து தெரிந்து கொள்ள நமக்கு வாய்ப்பாக உள்ள நூல் பாகவதம். இந்த 'பாகவதம்' என்கிற சொல்லை நுணுக்கிப் பிளந்து பார்த்தால் ஒரு உண்மை நமக்குப் புலனாகும். எவன் ஒருவன் தான் யார் என்கிற கேள்விக்குள் விழுந்து, தன்னை முழுமையாக அறிந்து, தன்னுள் இருந்தே தனக்கான விடுதலையை பெற்றுக் மகாள்கிறானோ அவனே பாகவதன்!

    அதாவது தனது ஒரு பாகத்தை வதம் செய்து தன் ஆத்மாவை கடைத்தேற்றிக் கொள்கிறவன் என்று கூறலாம். 'வதம்' என்பதை இங்கே 'சித்ரவதை' என்று பொருள் கொள்வது கூடாது. 'தன்னை அடக்கி வெற்றி கொள்ளுதல்' என்று பொருள் கொள்ள வேண்டும். பாகவதனுக்கு இது பொருள் என்றால் பாகவதத்துக்கு என்ன பொருள் தெரியுமா?

    ***

    பாகவதத்தை அனுபவிப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஆத்மாவை கடைத்தேற்றிக் கொள்வார்கள். "உறுதுணையாக இருப்பது' என்பதே பாகவதம் என்பதன் நுட்பமான பொருள்.

    பாகவதத்தை நாம் அனுபவிக்கச் செய்தவர் வியாச முனிவர். இவர் பராசர முனிவருக்கும், ஒரு மீனவனின் வளர்ப்புப் பெண்ணான மச்சகந்திக்கும் விசேஷமான கிரக சஞ்சார நேரத்தில் கருக்கொண்டு பிறந்தவர்.

    அதனாலேயே தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் அப்படியே கிரகித்துக் கொண்டு அதைக் காலத்தால் அழிக்க முடியாதபடி வியாசித்து அதாவது விரிவுபடுத்தி எழுதவும் முடிந்தவர். இவரது தாய் மீனவப் பெண்ணாக இருந்தாலும், உண்மையில் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவள். தந்தை பராசரரோ புலன்களை அடக்கியாள முடிந்த தவசீலர். இந்த தவசி தன் புலனடக்கத்தை சற்று தளர்த்திக் கொண்டு வியாசரைப் பெற்றது, தன் வம்சம் விளங்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த உலகிற்கு எந்த காலத்திற்கும் அழியாத நிலையில் வாழ்ந்திடும் இதிகாசங்களை எழுத வேண்டும் என்பதற்காகவே.

    அதனால் வியாசரிடம் தாய் வழியில் வந்த ரஜோ குணத்தோடு, தந்தை வழியில் வந்த தவசக்தியும் சேர்ந்தது. கூடவே விசேஷ கிரகநிலையின் சக்தியும் நிரம்பியிருந்தது. அதனாலேயே வியாசர் இன்றும் வாழ்ந்திடும் சந்நியாசிகளால் குருநாதராக பூஜிக்கப்படுகிறார். இந்த பூஜையும் அவரின் காரணப் பெயரான 'வியாச' என்னும் பெயரால் வியாச பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.

    இப்படிப்பட்ட வியாசரே மகாபாரதத்தையும் நமக்கு தந்தருளினார். பின்னர் பதினெட்டு புராணங்களையும் வழங்கினார். அதில் இந்த பாகவதமே மிக விசேஷமானது. இதில் 18,000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இதை எழுதி முடித்த நிலையில் வியாசர் முதன் முதலாக தன் புத்திரனான சுகர் எனப்படும் சுகனுக்கு உபதேசித்தார். முன்னதாக சுகரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி வியாசரின் பிறப்பில் விசேஷ கிரக சஞ்சாரங்கள் இருந்ததோ, அதே போல சுகரின் பிறப்பின் பின்புலத்தில் நுட்பம் பல உண்டு.

    மகனுக்காக தன் சந்நியாசத்தில் சிறு சமரசம் செய்து கொண்ட பராசரரைப் போலவே, வியாசரும் தனக்குப் பின் தர்மவழியில் நடக்க ஒரு பிள்ளை வேண்டும் என்றும், அவன் இனி வரும் யுகங்களில் வாழப் போகிறவர்களெல்லாம் முக்தி பெற வழி காட்டுபவனாகவும் இருக்க வேண்டும் என்றும் விருப்பம் கொண்டார். சிவபெருமானை எண்ணி தவத்தில் ஆழ்ந்து பிள்ளை வரம் வேண்டினார். பிறக்கப் போகும் பிள்ளை தன் போலவே ஞானியாக திகழ வேண்டும் என்று விரும்பினார். அதன் விளைவாக சிவபெருமானும் ஒரு தேவலோக கன்னியை அனுப்பி வைத்தார். அக்கன்னிப் பெண் கிளி வடிவில் வியாசர் முன் தோன்றி, அவருக்குள் காம எண்ணத்தை ஏற்படுத்த, அதனால் சுக்கிலம் வெளிப்பட்டது. அது யாகம் செய்யும் போது பயன்படும் அரணிக்கட்டையின் குழிபாகத்தில் சேர்ந்தது. அதிலிருந்து கிளியின் தலையும், மனித உடலுமாக ஒரு பிள்ளை தோன்றியது. உயிரினங்களில் கிளியானது பறவையினமாக இருந்தாலும், மனிதர் போல பேசும் சக்தி பெற்றது. எல்லா உயிர்களும் பரம்பொருள் முன்னால் சமமாக கவுரவிக்கப்படும் என்பதை உணர்த்தும் விதத்திலும் பேசும் சக்தி கொண்ட கிளியின் உருவத்தில் இவர் பிறந்தார் என்பர். சுகரூபமான பெண்ணின் முகத்துடன் கலந்து பிறந்தவர் என்பதால் சுகமே இவர் பெயரானது. அதுவே சுகன் என்றானது. நாரதரால் ஞான உபதேசம் பெற்று பிரம்ம ஞானியாகி பின் சுகர் என்றானார்.

    ஞானிக்கும், பிரம்ம ஞானிக்கும் என்ன வேற்றுமை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்ம ஞானி என்பவன் தன் எதிரில் பரம்பொருளே வந்தாலும் உணர்ச்சிவசப்பட மாட்டான். பரம்பொருளை பெரிதாகவும், மற்றதை அதாவது தன்னை சிறிதாகவும் கருத மாட்டான்.

    சுருக்கமாகச் சொல்வதென்றால், பிரம்ம ஞானி கொலை செய்தவனையும், கொலையானவனையும் ஒன்றாகவே பார்ப்பான். அந்த கொலை சம்பவத்தை கர்மச் செயலாகவும், இருவர் பின்புலத்திலும் அவ்வாறு நடந்திட சரியான காரணம் இருப்பதையும் யாரும் கூறாமலேயே தெரிந்து கொள்வான். இருவரையும் பாரபட்சம் இன்றி அணுகுவான். இதைச் சொல்லி புரிய வைப்பது கடினம். ஒரு பிரம்ம ஞானி நடந்து கொள்வதைப் பார்த்தால் மட்டுமே, நம்மால் இதை உணர முடியும்.

    பிரம்மாவின் புதல்வர்களில் ஒருவரான சனத்குமாரர் ஒரு பிரம்மஞானி. ஒருநாள் பிரம்மாவும், சனத்குமாரரும் ஒன்றாக அமர்ந்திருந்த நேரத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் பிரசன்னமாகின்றனர். பிரம்மா அவர்களை துதி செய்து வரவேற்கிறார். ஆனால் சனத்குமாரரோ அமைதியாக அவர்களை நோக்குகிறார். அப்பா வணங்கிட, பிள்ளை வணங்காமல் இருப்பது பார்வதி தேவியை கேள்வி கேட்கச் செய்கிறது.

    ஒரு பிரம்மஞானி ஒன்றை உயர்வாக கருதி துதிப்பதும் இல்லை. இழிவாக கருதி வெறுப்பதும் இல்லை. பரமன் முதல் புல், பூண்டு வரை சகலமும் பிரம்மம் (கடவுள்) என்று உணர்ந்து சமநிலையில் இருப்பதே பிரம்மஞானம் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சனத்குமாரரே பின் சிவபெருமானின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவருக்கு புத்திரனாக அதாவது முருகப்பெருமானாக தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.

    சுகரும் அப்படி ஒரு பிரம்மஞானியாக விளங்க வேண்டும் என்பதற்காக வியாசரும் பாகவதத்தை உபதேசித்தார்.

    ஒரு பிரம்மஞானியாலேயே இந்த பாகவதத்தை, தக்க பொருளுடன் பிறருக்கு உபதேசிக்க முடியும். ஏனென்றால் இந்த பாகவதத்தின் கதாநாயகரான கிருஷ்ணனும் பிரம்மஞானியாக தன் அவதாரத்தில் வாழ்ந்து காட்டியவன்.

    பிரம்மஞானியாலேயே இன்னொரு பிரம்மஞானியை குறைவுபடாமல் வெளிக்காட்ட முடியும். அந்த வகையில் கிருஷ்ணனை நாம் நுட்பமாக உணரும் எல்லா கட்டங்களிலும் மறைவாக சுக மகரிஷியே இருக்கிறார்.

    இப்படிப்பட்ட சுக மகரிஷி தன் தந்தையிடம் இருந்து பெற்ற இந்த பாகவதத்தை பரீட்சித்து என்னும் அரசனுக்குத் தான் முதன் முதலில் உபதேசித்தார். ஏன் இவனிடம் இருந்த இந்த பாகவதம் அறிமுகமானது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பரீட்சித்துவின் காலத்தில் இருந்தே இப்போதைய கலியுகம் தொடங்கியது. அதற்கு முன் வரை துவாபரயுகம் இருந்தது. அதில் வாழ்ந்த அர்ஜுனனின் பேரனே பரீட்சித்து. இவனது தந்தையான அபிமன்யு, தாயின் கருவில் இருக்கும் போதே பாரதப்போரில் வஞ்சகமாய் கொல்லப்பட்டான்.

    பரீட்சித்துவின் பிறப்பும் சூட்சுமம் நிறைந்தது. இவன் தன் தாயான உத்தரையின் கருவில் இருக்கும் போதே, அசுவத்தாமனின் அஸ்திரத்தால் கொல்லப்பட இருந்த சூழ்நிலையில், கிருஷ்ணனின் சக்ராயுதம் இவனைக் காப்பாற்றியது. துரோணரின் புத்திரனான அஸ்வத்தாமனின் அஸ்திரத்தை செயல் இழக்கச் செய்தது கிருஷ்ணனின் சக்ராயுதம். கருவில் இருக்கும் போது பரீட்சித்து காப்பாற்றப்பட்டாலும், விதிவசத்தால் பாம்பு தீண்டி இறக்க வேண்டும் என்பதே விதியின் முடிவாகும்.

    இந்த சம்பவத்தின் பின்னணியிலும் நுட்பமான ஒரு விஷயம் புதைந்துள்ளது. விதி வலியது என்றாலும், அந்த சூழ்நிலையிலும் ஒரு மனிதனுக்கு கிருஷ்ண சம்பந்தம் ஏற்பட முடியும். பின் அதுவே முக்திக்கும் இட்டுச் செல்லும் என்பதே அந்த நுட்பம். இதை வெறும் சம்பவமாக பார்க்காமல், மாறுபட்ட கோணத்தில் நாம் பார்க்க வேண்டும். அப்போது தான் நாம் இப்போது வாழ்ந்து வரும் கலியுகத்தின் தன்மை, இதை வெற்றி கொள்ள உதவும் கிருஷ்ணரின் திண்மை ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும். இது புரிந்தால், இந்த கிருஷ்ண ஜாலமும் புரியும்.

    ***

    அஸ்தினாபுரத்தின் அரசன் பரீட்சித்து. பாண்டவ வம்சத்தின் வித்து.... அரசர்களின் பொழுதுபோக்குகளில் ஒன்று வேட்டையாடுதல்! இந்த வேட்டையாடுதலில் தான் பரீட்சித்துவிடம் விதி தன் விளையாட்டைத் தொடங்கியது.

    அது என்ன?

    இந்த கேள்விக்கு பதிலை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சமூக விதிகள் பற்றி நமக்கு ஓரளவு தெரியும். பெரியவர்களை வணங்க வேண்டும். தாய், தந்தையரை போற்ற வேண்டும். சகோதர, சகோதரிகளை கண்ணீர் சிந்த விடக் கூடாது. விரோதியே ஆனாலும் வீடு தேடி வந்து விட்டால் வரவேற்க வேண்டும். உப்பும், தண்ணீரும் நமக்கே பற்றாக்குறை என்றாலும் பிறர் யாசகம் கேட்கும் போது இல்லை கொன்று மறுக்கக் கூடாது. ஒருவர் முதுகில் குத்தக்கூடாது. புறம் பேசக்கூடாது. செய்த நன்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது. தர்மம் தவறக் கூடாது இப்படி மனித வாழ்வில் நன்னெறிக்கான விதிகள் ஒருபுறம்....!

    அடுத்து தன் கர்மத்தின் படி தனக்கென உள்ள விதியின் படி வாழ்வு நடத்துவது. குறிப்பாக சிறந்த தாய், தந்தை வயிற்றில் பிறப்பது, நல்ல பெண்ணை மணப்பது, பிள்ளைப் பேற்றை அடைவது, வீடுவாசல், சொத்து சுகம், தொழில், பணம் என்று நம் பூர்வஜென்ம கர்மவினைகளுக்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது அல்லது வாழ்வில் கிடைக்கிறது என்பதை உணர்ந்து அதைப் புரிந்து கொண்டு வாழ்வது....

    மூன்றாவது நாம் வாழும் சமூகத்திற்கென உள்ள விதிகளைப் பின்பற்றி நடப்பது......

    அதாவது அரசுக்கு வரி செலுத்துவது, சாலையை விதிப்படி பயன்படுத்துவது, பொது இடங்களில் நாகரிகமாக நடப்பது போன்றவை.

    ஆக மொத்தத்தில் விதி என்றவுடன் பொதுவான மனித குலத்துக்கான விதிகள், கர்ம வினையால் அமைந்த விதிகள், சமூக நலனுக்கான விதிகள் என மூன்று விதமாக அது பிரிந்து செயலாற்றுகிறது.

    இந்த விதிகள் அவ்வளவுமே மதி என்னும் நம் அறிவால் உருவானவை. மதி தான் நாம் நலமுடன் வாழ இந்த விதிகளை உருவாக்கி வைத்தது. இந்த விதிக்கு 'ஒழுங்கு' என்றும் பெயருண்டு.

    எங்கே ஒழுங்கு இருக்கிறதோ அங்கே தீங்கு உண்டாகாது. சொல்லப் போனால் தீங்கு உண்டாகக் கூடாது என்பதற்காகவே விதிகள் உருவாக்கப்பட்டன. ஆக மொத்தத்தில் மனிதனின் மதியாகிய அறிவு மற்ற உயிரினங்களைப் போல போகிற போக்கில் போகாமல், தன்நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும், பிறருக்கு துன்பம் நேரக் கூடாது என்பதற்காகவும் உருவாக்கிய மதி நிறைந்த ஒழுங்குக்கு பெயரே விதி!

    நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். விதி தானாக உருவாகவில்லை. மதி தான் அதை தன் நலனின் பொருட்டு உருவாக்குகிறது. இந்த மதியால், விதியை மாற்றவும் திருத்தவும் முடியும் என்பதை மறந்து விடக் கூடாது. அதே சமயம் தான் உருவாக்கிய விதியை தானே மதிக்கவில்லை என்றால், அந்த விதிக்கும் மதிப்பு உருவாகாது. மதிக்க மதிக்கத் தான் மதிப்பு. இந்த மதிப்பு என்னும் சொல்லில் கூட மதிப்பு உள்ளது. நீ எதை மதிக்கிறாயோ, அது பூப்போல் மலர்ந்து வாசம் வீசும். இந்த பொருள் கொண்டே மதிக்கப்பட்டது பூவாகி பின் மதிப்பு என்றும் ஆனது.

    நாம் பிறரால் மதிக்கப்படும் போது நம் மதியும் மகிழ்ந்து குளிர்கிறது. மதிக்கப்படாத போது குளிர்ச்சி விலகி சூடேறுகிறது.

    ஆக எங்கும் எப்போதும் ஒருவருக்கு மதிப்பு உருவாக விதிப்படி அவர் நடப்பது முக்கியம். விதியை மீறும் போது மதிப்பு போய் கொதிப்பு உண்டாகி விடுகிறது. இந்த விதியும் மூன்று கூறாக அறம், கர்மம், சமூகம் என்னும் தளங்களில் உருவாகி மானுட வாழ்வு மகிழ்வான வாழ்வாக திகழ வகை செய்கிறது.

    விதி குறித்த இந்த தெளிவோடு அடுத்த கட்டம் செல்வோம். இந்த கட்டம் விதி பெரிதா? இல்லை இதைப் படைத்த மதி பெரிதா? என்று கேட்கும் கட்டம். நிச்சயமாக விதியே பெரிது என்பதே விடை! ஏனென்றால் மதி தான் இதை பாடைத்துள்ளது. அதுவும் எதற்காக? தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக....... ஆக விதியே பெரியது என்பது ஒரு விடை....

    இல்லை...... இல்லை.... விதியைப் படைத்த மதியே பெரியது. படைக்க முடிந்தது தானே எப்போதும் பெரிதாகவும் இருக்க முடியும்? என்று கேட்டு மதியே பெரியது என்பது ஒரு விடை...... இது கிட்டத்தட்ட முட்டையில் இருந்து கோழியா.... கோழியில் இருந்து முட்டையா? என்கிற கேள்வியைப் போன்றதே......

    சரி... இந்த விதி, மதி சர்ச்சைக்கும் கிருஷ்ண ஜாலத்துக்கும் என்ன சம்பந்தம்?

    இந்த சர்ச்சைக்கும் பரீட்சித்து ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்?

    இந்த கேள்விக்கும் விடை காண நாம் இந்த வரலாற்றுக்குள் நுழைய வேண்டும். பரீட்சித்து நமக்கெல்லாம் ஒரு முன்னோடி. அவன் கடைத்தேற காரணம் ஸ்ரீகிருஷ்ணன்!

    பரீட்சித்துவின் அப்பா அபிமன்யு, அபிமன்யுவின் அப்பா அர்ஜுனன் அர்ஜுனனின் நண்பன், ஞானகுரு, மோட்சகதி, எல்லாமே ஸ்ரீ கிருஷ்ணன் தான்!

    இந்த கிருஷ்ணன் பரீட்சித்துவைக் கொண்டே, தன்னையும், தன் மதியால் படைத்த உலகையும், உயிர்களையும் அதற்கேற்ற விதியோடு நடத்தி வருவதை நமக்கு உணர்த்தப் போகிறான். அதாவது எது விதி? எது மதி என்று நமக்கு புரிய வைக்கப் போகிறான்.

    இனி நாம் பரீட்சித்துவின் வாழ்க்கைக்குள் அவன் வேட்டையாட சென்ற இடத்தில் இருந்து தொடங்குவோம். காட்டுக்குள் வீரர்கள் பலர் துணையோடு சென்ற போதிலும், விதி பரீட்சித்துவை தனிமைப்படுத்த தணியாத தாகத்திற்கு ஆளானான். கிட்டத்தட்ட பாலைவனத்தில் திரியும் நாடோடி போல ஆகி விட்டான். இந்த நிலையில் தான் சமீகரிஷி என்ற முனிவரின் ஆஸ்ரமம் கண்ணில் பட்டது. சமீக ரிஷியோ தவத்தில் இருந்தார். தவம் என்றால் மேலோட்டமான தியானத்திலும் அல்ல! சமாதி நிலையில் அவர் இருந்தார்.

    இப்படி ஒரு நிலையில் பூமி இரண்டாகப் பிளந்து இடைவெளியில் விழ நேர்ந்தால், அதில் விழுவது கூட தெரியாது. பரீட்சித்துவும் தாகத் தவிப்போடு அவர் முன் போய் நின்றான்.

    ***

    அவரது சமாதி நிலையைப் புரிந்து கொள்ள முடியாத தாகத்தில் இருந்தவன், "முனிவர் பெருமானே! எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும்,'' என்று உரத்த குரலில் கேட்டான். பின் தோளைத் தொட்டு உலுக்கிக் கேட்டான். எதற்கும் அசையாத அவரை ஒரு கட்டத்தில் தரையில் தள்ளி கீழே சாய்த்து விட்டு, அந்த ஆஸ்ரமக் குடிசை முழுக்க தண்ணீர் எங்காவது உள்ளதா என்று தேடினான். அந்த இடமே ஒரு வித உஷ்ணத்தால் கொதித்தது. அங்கங்கே தண்ணீர் இன்றி பல புழு, பூச்சிகள் இறந்து கிடந்தன. அதில் ஒரு பாம்பும் கிடந்தது தான் விந்தை.... அவனுக்குப் புரிந்து விட்டது. இங்கு எங்குமே தண்ணீர் இல்லை. அதனால் தான் செடி, கொடிகள் கூட கருகிக் கிடக்கின்றன என்று.

    இப்படி ஒரு நிலையில் தண்ணீருக்காக கவலைப்படாமல், இந்த முனிவர் இப்படி ஒரு தவத்தில் இருக்கிறாரே....? தன்னை விடுவித்துக் கொள்ள முயலும் இவருக்குத் தான் எவ்வளவு சுயநலம்......? பரீட்சித்துவுக்குள் இப்படி எல்லாம் கேள்விகள்!

    பரீட்சித்து மன்னன் அங்கே தன் தாகத்தின் தவிப்பை பெரிதாக எடுத்துக் கொண்டான். அவனொரு அரசன். இதற்கு முன் இது போல் அவன் நீரின்றித் தவித்ததே கிடையாது. அதனால் தாகமும், அதனால் ஏற்பட்ட தவிப்பும் அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது.

    தண்ணீர் என்பது வீசும் காற்று போன்றது. அவன் தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டதே இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் ஏரிகளும், குளங்களுமாக திகழும் பூமி அஸ்தினாபுரம். எங்கே மண்ணைத் தோண்டினாலும் இரண்டு அடியில் ஊற்று வந்து விடும்.

    அப்படி ஒரு வளமான நாட்டு மன்னனுக்கு, 'விதி' என்னும் பெயரில் கானகம் ஒரு பாடம் நடத்த தொடங்கியது. அதுவும் தண்ணீரைக் கொண்டு......

    அடுத்து தன் குரலுக்கு கட்டுப்படாதவர்களை அவன் பார்த்ததே இல்லை. அவன் வருகிறான் என்றாலே சபையே எழுந்து நிற்கும். நகர் விஜயத்தின் போது மனிதர்கள் ஒதுங்கி நின்று வழி விட்டு வணங்கி நிற்பார்கள். இங்கோ சமீக ரிஷி சமாதி நிலையில் கிடக்கிறார். மிக அலட்சியமாக 'உன்னை விட எனக்கு என் தவம் பெரிது' என்று கிடக்கிறார். ஆக ஒவ்வொரு சிக்கலும், அவனை கோபத்தின் உச்சிக்கு இட்டுச் செல்லத் தொடங்கியது.

    அங்கே இரண்டே இரண்டு பேர்.

    ஒருவர் சமீக ரிஷி! இன்னொருவன் பரீட்சித்து.... இந்த இருவரில் ஒருவர் உணர்வுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். பரீட்சித்துவோ கொந்தளிப்பில் இருக்கிறான். ஒரே இடம்.... ஒரே நேரம்.... ஆனால், இருவருக்கும் இருவேறு நிலை. இதைத் தான் மாயை என்று சொல்வார்கள்.

    பரீட்சித்து கோபத்தில் அந்த ரிஷியை கொன்று விடலாமா என்று கூட எண்ணினான். ஆனால் தன் உணர்வை சற்று அடக்கிக் கொண்டான். மாறாக கோபத்தை ரிஷி உணரும் விதத்தில் செயல்பட்டான். அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பின் காய்ந்த உடலை, உடை வாளின் நுனியால் எடுத்தான். சிலை போல் தரை மீது கிடந்த சமீகரை அமரச்

    Enjoying the preview?
    Page 1 of 1