Vizhiyoram Oru Vanavil...!
By Daisy Maran
2/5
()
About this ebook
என்னைப் பற்றி...
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.
திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.
தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்
பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வாசிப்பை நேசிப்போம்.
அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..
Read more from Daisy Maran
Uyirodu Kalanthaval Rating: 3 out of 5 stars3/5Kann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maan Vizhiye Rating: 5 out of 5 stars5/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Then Malli Poove... Rating: 2 out of 5 stars2/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Manam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Vandhuvidu Ennavane... Rating: 5 out of 5 stars5/5Pirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Manathai Thiranthathu Poovasam...! Rating: 4 out of 5 stars4/5Maranthal Thane Ninaipatharku! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Thanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Nila...! Rating: 0 out of 5 stars0 ratingsKanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Kaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratingsMounamey Kaadhalaai..! Rating: 0 out of 5 stars0 ratings'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Manasai Thaadi Mani Kuiyile...! Rating: 3 out of 5 stars3/5'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkum Idhayam! Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Urasum Karaiyoram...! Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5'Thathi Thavuthu Manasu!' Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vizhiyoram Oru Vanavil...!
Related ebooks
Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Thevathai Rating: 4 out of 5 stars4/5Kakitha Roja Rating: 5 out of 5 stars5/5Un Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Charanadainthen Rating: 5 out of 5 stars5/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Malarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Kanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Puthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsManame Para Para Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Koodu Innoru Paravai Rating: 5 out of 5 stars5/5Idhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 5 out of 5 stars5/5Penn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsKadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Kan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Thalaimuraigal Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malarae Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vizhiyoram Oru Vanavil...!
1 rating0 reviews
Book preview
Vizhiyoram Oru Vanavil...! - Daisy Maran
http://www.pustaka.co.in
விழியோரம் ஒரு வானவில்...!
Vizhiyoram Oru Vanavil…!
Author:
டெய்சி மாறன்
Daisy Maran
For more books
http://www.pustaka.co.in/home/author/daisy-maran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
மேக மூட்டம் கரைந்து கனமழை பொழிய ஆரம்பித்தது. இதுவே வேறோரு சமயமாக இருந்திருந்தால் கரைந்துக் கொண்டிருக்கும் மேகத்தையும் கறை படியாத மழையையும், யாழினி ரசித்திருப்பாள்.
ஆனால் கொஞ்ச நாட்களாகவே இது போன்ற உற்சாகம் ஊட்டும் எந்த விஷயமும் அவளது வேதனையைத்தான் அதிகப்படுத்திக் கொண்டு இருந்ததே தவிர ரசிக்ககூடிய மனநிலையை அறவே தரவில்லை.
எதை ரசிச்சி என்ன ஆகப் போகிறது? எல்லாமே தான் முடிந்து போயிற்றே... இனி எதுவுமே இல்லை என்றானப் பிறகு, மனது மட்டும் ஏன் அமைதியடைய மறுக்கிறது?
நினைக்கவே கூடாது, முழுவதுமாக அவனை மறந்து விட வேண்டும் என்று நினைத்தாலும் மீண்டும், மீண்டும், அவனை பற்றின அந்த நினைவுகள் மனதுக்குள் புகுந்துக் கொண்டு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நிம்மதியையும், முழுவதுமாக பறித்து விடுகிறதே!
இயற்கையை ரசிக்கக்கூட முடியாதபடிக்கு இந்த பாழாய்ப்போன நினைவுகள் வந்து வந்து வாட்டுகிறதே? இல்லை, இல்லை வாட்டுகிறது என்று சொல்வதைவிட வதைக்கிறது என்று சொன்னால் தான் சரியான பொருள்படும். ஏனென்றால் நமக்கு உரிமை இல்லாத ஒரு பொருளைப் பற்றி நினைப்பதே தவறு என்றுதான் இத்தனை நாளும் மனதை கடிவாளமிட்டு அடக்கி வைத்திருந்தாள் யாழினி.
ஆனாலும் மனகட்டுக்குள் அடங்காமல் காட்டாற்று வெள்ளமாய் தறிகெட்டு ஓடும் இந்த நினைவுகளை அடக்க முடியாமல் திண்டாடும் எனக்குதான் அதன் வலியும் வேதனையும் புரியும்.
சும்மா என்றால், இந்த அதிகாலை புது மழையையும், இதமான குளிர்காற்றையும் ரசித்தப்படி பல நிமிடங்கள் மெய்மறந்து அசைவற்று நின்றிருப்பாள். அவளுக்கு அது ஆனந்தமாகவும் இருந்திருக்கும்.
அப்படி இல்லை என்றாலும் தோட்டத்து மல்லிகை பறிக்கிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு, சொட்ட சொட்ட மழையிலே நனைத்திருப்பாள். அந்த ஊசிமழை உடலெங்கும் பரவி உற்சாகத்தை ஊட்டியிருக்கும்.
அதைவிட்டு, பல மாதங்களுக்கு முன் பிரிந்து வந்த அவனையும், அவனுடைய நினைவையும் அவன் கரங்களில் கட்டுண்டு கிடந்த அந்த சுகத்தையும் மறக்க முடியாமல், இந்த மனது அதையே ஞாபகப்படுத்தி வாட்டி வதைக்கிறதே?
வேண்டாம் என்று விலகி வந்தவளே மறக்க முடியாமல், தவிப்பதென்பது எவ்வளவு பெரிய வேதனை.
அவனுக்குத் தெரிந்தால்... தெரிய வாய்ப்பில்லை தான் என்றாலும் ஏதோ ஒரு வழியிலே, இவளது இந்த ஏக்கத்தை அவள் அறிய நேர்ந்தால், அவன் இவளை எவ்வளவு கீழ்த்தரமாக நினைப்பான்?
அதுவும் செத்தாலும் உன் முகத்தில் விழிக்கமாட்டேன் என்று வீராப்பாக அல்லவா சொல்லிவிட்டு வந்தாள்.
அப்பா, அம்மா, மாமியார், மாமனார், உறவுக்காரர்கள் என்று யார் பேச்சையும் கேட்காமல், எடுத்தெறிந்து பேசிவிட்டு வந்து, எண்ணி ஆறே மாதத்தில் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிய போது, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போனது, அவன் ஒருவனை தவிர.
ஒருவேளை அவன் இதற்கு உடன்படாமல், இவளை தடுத்திருந்தாலோ, அல்லது ஒருப்படி இறங்கி வந்து கெஞ்சி இருந்தாலோ, இவள் மாறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்கலாம் இல்லை. டைவர்ஸ்சையாவது கொஞ்ச நாள் தள்ளிப் போட்டிருப்பாள்.
அவன் அது மாதிரியான எந்த முயிற்சியிலும் அவன் இறங்கவில்லை என்பதுதான், இவளுடைய இந்த மணமுறிவுக்கான முயற்ச்சிக்கே காரணம்.
பிடிக்கவில்லை என்றால் விலகிவிடு என்றானே அந்த ஒரு வார்த்தையை தான் இவளால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுவும், தப்பெல்லாம் அவன் மேல் வைத்துக் கொண்டு, இவளை விலகிவிடு என்று சொல்வதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஒருவேளை, இவளை ஒரேடியாக விலக்கிவிட்டால், விட்டுப் போன பழைய வாழ்க்கையை தொடரலாம் என்று நினைத்திருப்பானோ?
என நினைத்தவளுக்கு தன்னையும் மீறி கண்ணீர் வழிந்தது.
கண்களை துடைத்துக் கொண்டு, காற்றில் பட்பட்டென அடித்துக் கொண்டே இருந்த ஜன்னலை மூடி தாளிட்டாள். இனியும் படுத்திருந்தால் பெரியம்மா தேடிக் கொண்டு மேலேயே வந்துவிடுவார்கள். அவர்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணியவள்,
எழுந்து முகம் கழுவிக்கொண்டு கீழே இறங்கி வந்தாள்.
மனதில் ஓடிய எண்ணங்களை காட்டிக் கொள்ளாமல்,
ஹல்லோ... பெரியம்மா, குட்மானிங்
என்றாள்.
பதிலாக மலர்ந்த முகத்துடன்,
குட்மானிங் யாழினி... உட்காரு காபி தர்றேன்
என்றாள் பெரியம்மா சுந்தரி.
உங்களுக்கு சிரமம் வேண்டாம் பெரியம்மா, நானே எடுத்துக்கிறேன்...
என்றவள், டேபிள் மேலிருந்த பிளாஸ்கிலிருந்து ஒரு கப் ஃகாபியை ஊற்றிக் கொண்டு சோபாவில் வந்து அமர்ந்தாள்.
சற்று தயங்கிவிட்டு, அவள் எதிரில் வந்து அமர்ந்த சுந்தரி, நைட் நன்றாக தூங்கினீயா... வெகு நேரம் லைட் எரிஞ்சிக்கிட்டு இருந்துச்சி அதனால்தான் கேட்டேன்...
என்று சொல்லவும்,
சொல்லுங்க பெரியம்மா, ஏதோ கேட்கனுன்னு நினைக்கிறீங்களே, அது என்னன்னு சொல்லுங்க...?
லேசாக புருவம் சுளித்த சுந்தரி யாழினியை பார்த்து வினாவினாள்.
உன்னால, எல்லாவற்றையும் எப்படி ஈசியாக எடுத்துக் கொள்ள முடியுது யாழினி?
இளகிய குரலில் சுந்தரி கேட்க,
உடனே நிமிர்ந்து எதை சொல்றீங்க பெரியம்மா?
என்றாள்.
பொறுமையிழந்து "நேற்று விவாகரத்து ஆனவள், இன்று எப்படி சிரித்துக் கொண்டு இருக்கிறாய் என்பதைத்தான் கேட்க வந்தேன், ஆனால் நீ...நீ... இதெல்லாம் எப்படி சாத்தியம் என்பதுதான் எனக்கு