Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeindri Naanillaiye...!
Neeindri Naanillaiye...!
Neeindri Naanillaiye...!
Ebook161 pages1 hour

Neeindri Naanillaiye...!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Neeindri Naanillaiye...!

Reviews for Neeindri Naanillaiye...!

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeindri Naanillaiye...! - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    நீயின்றி

    நானில்லையே...!

    Neeindri Naanillaiye…!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    நீயின்றி

    நானில்லையே...!

    1

    பூஞ்சாரல் அடிக்க ஆரம்பித்தது. மலரின் மென்மையுடன் அது பூமியை முத்தமிட்டு நனைக்க... புழுதி அடங்கிப் புது வாசம் பிறந்தது.

    காற்றில் கும்மென்று மிதந்து வந்த மூலிகைகளின் நறுமணம் நாசியை இதமாய் ஸ்பரிசித்தது.

    மேகங்கள் பஞ்சுப் பொதிகளாய் மிதந்து வந்து மலையை ஆசை யுடன் ஆலிங்கனம் செய்து கிடந்தன.

    ஜன்னலருகே நின்று தூரத்தில் எங்கோ பார்வையைப் பதித்திருந் தாள் மனோ ரஞ்சிதா.

    எங்கு திரும்பினாலும் தெரிந்த பசுமையான அழகில் மனம் லயித்துப் போயிருந்தாள்.

    என்னதான் இயற்கை அழகில் ஒன்றிப் போயிருந்தாலும்... கவலை, மனதைப் பாறாங்கல்லாய் அழுத்திக் கொண்டிருந்தது.

    மனோ ரஞ்சிதா. ஒரு மலரைப் போன்றே கொள்ளை அழகுடன்

    திகழ்பவள்.

    தந்தத்தைக் கடைந்தாற் போன்று பளிச்சென்ற நிறம். மானின் மருண்ட விழிகள். மயிற்தோகை போன்று அடர்ந்த நீண்ட கருங்கூந்தல்.

    கைதேர்ந்த சிற்பி ஒருவன், சிரத்தையுடன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி வடித்த சிலையைப் போன்று. அதீத களையுடன் கவிதை பாடலாம் போலிருந்தாள்.

    அவளது உடற்கட்டைப் பார்த்த மாத்திரத்திலேயே.. 'இவள் ஒரு நாட்டியத் தாரகை என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

    நெடுங்குண்டம் எஸ்டேட் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியா?

    அவளது முதுகுப் பக்கமாய் வந்து நின்று பேசினாள் தங்கம்.

    "ஆமா... ரொம்ப ரொம்ப ரம்யமா இருக்கு. வாழ்நாள் பூரா இந்த

    இயற்கை அழகை ரசிச்சுக்கிட்டே... இங்கேயே இருந்துடலாம்

    போலிருக்கு பெரியம்மா!'

    'உன் ஆசைப்படியே நீ இருக்கலாம். அது உன் கையில தான் இருக்கு மனோ...!" என்றபடி அவளது புஜத்தில் கை வைத்தாள்.

    சரேலென்று திரும்பிப் பார்த்தாள் மனோ ரஞ்சிதா.

    "டான்ஸ் புரோக்ராம் பண்ண வந்திருக்கோம். நாம்ப தங்கிக்கிற துக்காக இந்த கெஸ்ட் ஹவுஸை தந்திருக்காங்க.

    கெஸ்ட் ஹவுஸே குட்டி பங்களா சைஸஸுல அமர்க்களமா இருக்கு. விதவிதமான சமைச்சுப் போடறதுக்கு ஆள் இருக்கு. கூப்பிட்ட குர லுக்கு ஓடி வந்து சேவகம் செய்யறதுக்கும் ஆட்களை நியமிச்சிருக்காங்க.

    தேனிக்கே பெரிய படகுக்காரை அனுப்பி... நம்மை இங்க வரவழைச்சாங்க. இங்கே இருக்கிறவரைக்கும் தாராளமா... அந்தப் படகுக்காரை உபயோகிச்சுக்கச் சொல்லிட்டாங்க.

    தேனிக்கு நம்ம வீடு தேடி வந்து. உன்னைக் கச்சேரிக்கு 'புக் பண்றதுக்கு முன்னாடி. பெரிய வெள்ளித் தாம்பாளத்துல பூ, பழங்கள் மயில் கழுத்து வண்ணப் பட்டுப் புடவையை வச்சு. கட்டுக்கட்டா பணத்தை அடுக்கி மகாலட்சுமி உருவம் பதிச்ச தங்க நாண யத்தையும் சேர்த்துத் தந்தாங்களே? எத்தனையோ எடங்கள்லே நீ டான்ஸ் கச்சேரி பண்ணி இருக்கே? எங்கேயாச்சும் இந்த மாதிரி மரியாதை பண்ணியிருக்காங்களா?

    கெஸ்ட் ஹவுஸே இவ்வளவு அபாரமா இருக்குதே? இளைய ஜமீன்தாரர் முகுந்தனோடஎஸ்டேட் பங்களா எவ்ளோ பெரிசா இருக்கும்?

    மனோ..! உன்கிட்டே இருக்கிற கலைக்கு ரொம்ப ரொம்ப மரி யாதை கிடைக்குது.

    புடிச்சாலும் புளியங்கொம்பா பார்த்துப் பிடிக்கணும்னு சொல்வாங்க. உன்னோட அதிர்ஷ்டம். நீ எதுக்கும் மெனக்கெடாம இருந்தாலும். அந்தப் புளியங்கொம்பே வளைஞ்சு... உன் கைக்கு எட்டற மாதிரி வந்து நிக்குதே?

    வர்ற சீதேவியை வேணாம்னு எட்டி உதைச்சுடாதே...! அப்புறமா பின்னாடி நீ ரொம்பவே வருத்தப்படுவே...!

    எப்பவுமே சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் நாம்ப நழுவவே விட்டுடக் கூடாது. கப்புன்னு இறுக்கமா பிடிச்சுக்கணும்.

    இதுதான் எங்கம்மா எங்களுக்கு சொல்லிக் குடுத்தது. நான் புத்தி சொன்னதை.. நீ கேட்டு நடந்துக்கிட்டா.. காலத்துக்கும் ஒரு மகாராணியா அமோகமா சந்தோஷமா வாழலாம்.

    ' அவளது தாடையைத் தொட்டுத் தடவினாள் தங்கம்.

    சட்டென்று அவளது கையைத் தட்டி விட்டாள் மனோ ரஞ்சிதா.

    'சே...! ஆரம்பிச்சுட்டியா? கொஞ்ச காலமா அடக்கி வாசிச்சுட் டிருந்தே? பரவாயில்லையே. நம்ம பெரியம்மாதிருந்திட்டாளே?ன்னு நெனச்சேன்.

    அந்த நெனப்புல மண் அள்ளிப் போட்டுட்டியே? நீ தான் சேத்துல விழுந்து கிடந்தே... நானும் ஏன் அதே சேத்துல கிடந்து அமிழனும்னு நினைக்கிறே?

    மகாராணி மாதிரி அமோகமா சந்தோஷமா வாழலாம் தான். ஆனா... கவுரவமா வாழ முடியுமா?

    கூழோ கஞ்சியோ குடிச்சாலும். ஒரு குடிசையில கிடந்தாலும். தன் மானத்தோட வாழனும்னு நான் ஆசைப் படறேன்.

    எனக்கு பணங்காசு அந்தஸ்து பெரிசில்லை. மானம் தான் பெரிசு!.

    என் குணம் உனக்குத் தெரியுமில்ல? அப்புறம் ஏன்... என்கிட்டே வந்து... கண்டதையும் பேசறே?

    நான் இங்க வந்தது. டான்ஸ் புரோகிராம் பண்ணத்தான். அது முடிஞ்சதும் போயிட்டே இருப்பேன். ஜமீன்தாரரை வளைச்சுப் போடறதுக்காக நான் வரலை. புரிஞ்சுக்கோ!

    அந்த மாதிரி வாழ்க்கை நான் வாழனும்னு. ஆசைப்படறியே? ஊர் உலகம் என்ன சொல்லும்? சொல்லு...! அதட்டினாள் மனோரஞ்சிதா. என்ன சொல்லும்?"

    'உனக்குத் தெரியாதாக்கும்? ஜமீன்தாரரோட கீப்புன்னு சொல் வாங்க... அப்படியொரு கேவலப்பட்ட பிழைப்பு நமக்குத் தேவையா?"

    'கஷ்டம்னு வந்தா ஊரு உலகமா வந்து காப்பாத்தப் போகுது?"

    மெல்ல முணுமுணுத்தாள் தங்கம்.

    இதுக்கு மேல நீ பேசினா.. என்னை நீ உயிரோட பார்க்கவே முடியாது. அழகிய விழிகளில் தீப்பொறி பறக்காத குறைதான்!

    அவளது குரலில் தொனித்த உறுதியையும், கோபத்தையும் பார்த்த தங்கம். மெல்ல அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

    "இவளுக்குப் பேரு'மனோரஞ்சிதான்னு வச்சிருக்கக் கூடாதுன்னு மாதவின்னோ... இல்லை... மணிமேகலைன்னோ வச்சிருக்கணும். பொழைக்கத் தெரியாதவளா இருக்காளே? எத்தன நாளைக்கு இருக்கும் இந்த அழகும் இளமையும்?

    நம்ம குலத்து'ப் பெண்ணை... எவன் துணிஞ்சு வந்து ஊரறிய தாலி கட்டப் போறான்?"

    தங்கம் கடுப்புடன் முணுமுணுத்ததை அப்படியே செவி மடுத்து விட்டாள் மனோ ரஞ்சிதா.

    "மனசைப் புரிஞ்சுக்கிட்டு. எவனாவது ஒருத்தன் தாலி கட்ட வருவான்...'

    குரலுயர்த்தி கூறினாள்.

    'ஆ.மா! வைராக்கியமா நீ உத்தமியாத்தான் இருக்கே. ஆனா உன்னை உத்தமின்னு எவன் நம்பப் போறான்? இந்தக் குலம்னு தெரிஞ்சாலே... எல்லாரும் வேற கண்ணோட்டத்துலதான் பார்ப்பாங்க. துணிஞ்சு எவனும் தாலிகட்டி மனைவிங்கிற அந்தஸ்து தரமாட்டான். தெரிஞ்சுக்கோ...!"

    நான் பவித்திரமா பரிசுத்தமா கற்பு நெறி தவறாம தான் இருக்கேன். இது நான் வணங்கற வrரடி பாபாவுக்குத் தெரியும். என்னைப் புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கக்கூடிய மனுஷனை. பாபா கட்டாயமா அனுப்பி வைப்பாரு.

    'உக்கும்! இலவு காத்த கிளி மாதிரி.. காலம் கடந்த பிற்பாடு... ஏமாந்து நிக்கப் போறே...!"

    "இந்தப் பேச்சை இத்தோட நிப்பாட்டப் போறியா? இல்லையா? அப்பப்பா...! என் குணத்துக்கும் உன் குணத்துக்கும். ஏணி வச்சாலும் எட்டாதே?

    சே...! நான் எப்படித்தான் உன் தங்கை வயித்துல வந்து ஜனிச் சேனோ?" தலையில் அடித்துக் கொண்டு நடந்தாள்.

    'நீ என் தங்கை வயித்துல பிறந்தாத்தானே? அவ வயித்துல வந்து பிறந்திருந்தா.. நான் சொல்றபடி கேட்டிருப்பே. எங்க குலத்து ரத்தம உன் உடம்புல ஓடலையே."

    ரெண்டு வயசு குழந்தையா இருந்தப்போ…தங்க விக்கிரகம் மாதிரி அனாதையா ஒரு திருவிழா கூட்டத்துல நீ கிடைச்சே.

    பிற்காலத்துல ஒரு பேரழகியா நீ வருவேன்னு என் மனசுக்குப் பட்டது. எடுத்து வளர்த்தா.. பின்னாடி உன் அழகை மூலதனமா வச்சு ஒஹோன்னு சம்பாதிச்சுடலாம்கிற நப்பாசையில எடுத்து வளர்த்தேன். இந்த உண்மை தெரிஞ்சா. நீ ஒண்ணு. நீ அடுத்த நிமிஷமே என்கிட்டே இருக்க மாட்டே.

    இப்பவே பல்லைக் கடிச்சுக்கிட்டு. வளர்த்த தாயாச்சே? விட்டுப் போகக் கூடாதே?ன்னு ஒரு பாசத்துல பரிதாபத்துல கூட இருக்கே.

    ரெண்டு. கோபத்துல என்னைத் துரத்தி விட்டாலும் விட்டுடுவே...! அதனால

    Enjoying the preview?
    Page 1 of 1