Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oosi Ilaik Kaadugal
Oosi Ilaik Kaadugal
Oosi Ilaik Kaadugal
Ebook214 pages1 hour

Oosi Ilaik Kaadugal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan. Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Oosi Ilaik Kaadugal

Reviews for Oosi Ilaik Kaadugal

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oosi Ilaik Kaadugal - GA Prabha

    http://www.pustaka.co.in

    ஊசி இலைக்காடுகள்

    Oosi Ilai Kaadugal

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    நாலுமணிக்கே விழிப்பு வந்துவிட்டது.

    ஆனால் எழுந்திரிக்க பிடிக்கவில்லை. விழிப்பு வந்ததும் எழுந்திருப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.

    நாலைந்து முறை புரண்டு….புரண்டு படுத்து சிறிது நேரம் மேலே சுற்றும் மின் விசிறியை ஆரஞ்சு நிற நைடலேம்ப் சிந்தும் ஒளியைப் பார்த்தபடி படுத்து வின் ‘விருட்’டென்று எழவேண்டும்.

    ‘பரபர’வென்று உள்ளங்கைகளை தேய்த்து கன்னம் கண் என்று ஒற்றி எடுத்து சின்னக் குழந்தையைத் தடவி விடுவதுபோல் கை உடம்பு கால் என்று நீவிவிடவேண்டும்.

    அந்தக்கொஞ்சலில் உடம்பு சுறுசுறுப்பாகும். உடம்பு முழுவதும் ஜிவ்வென்று ஏறும் உணர்ச்சிதான் அற்புதம்.

    ராதிகா அதன்பின்னும் ஐந்து நிமிஷம் உட்கார்ந்திருப்பாள். அந்த சுறுசுறுப்புடன் ஓம் என்ற நாதமும் சொல்லி காற்று முழுதும் நெஞ்சுக்குள் நிரப்பிக் கொண்டபின் நாள் பூராவும் உற்சாகம் இருக்கும். இன்று ராதிகா எழவில்லை. அப்படியே கிடந்தாள். இன்னும் ரூமிற்குள் வெளிச்சம் பரவவில்லை. பக்கத்து கட்டிலில் மூட்டையாய் ராதிகாவும் மீராவும் பொதிந்து கிடந்தார்கள்.

    பிசாசு போர்வையைக்கொடுடி ராதிகாவின் போர்வையைப் பிடுங்கிக்கொண்டாள்.

    ராதிகா எழுந்து ஜன்னல் கதவைத்திறந்து வைத்தாள். மாடி ஜன்னலில் இருந்து பார்த்தால் வாசல்கேட் வாட்ச்மேன் கூண்டு தாண்டி காம்பவுண்ட் ரோடு அதற்குப்பின் பிரும்மாண்டமான விளையாட்டு மைதானம்.

    ரோடு அமைதியாக இருந்தது. காம்பவுண்டுக்கு வெளியே பாரிஜாதபூ. சங்கு புஷ்பங்கள் உதிர்ந்து கிடந்தது. ஒரு வயதான கிழவி சின்னப் பொண்ணுடன் அந்த பூக்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

    அமைதியான ரோடு.

    ராதிகா கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள். மாடி வளைவில் ரூமில் லைட் எரிந்தது. சன்னமாய் வயலின் இசை.

    இசையை கேட்டபடி வார்டன் உடற்பயிற்சி செய்வார். பின் குளித்து ஆறுமணிக்கு ‘பளிச்’சென்று பிரேயருக்கு வந்து நிற்பார். இன்று பிரேயர் கிடையாது. எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம். ஒன்பது மணிக்குள் சாப்பிட்டு ஊருக்கு கிளம்பலாம். மீண்டும் காலேஜ் திறந்து மாணவிகள் சேரும்வரை விடுதி விடுமுறை.

    ஆனால் ராதிகா வரமாட்டாள். படிப்பு முடிந்துவிட்டது. எம்.எஸ்.ஸி பிசிக்ஸ். கனவு உலகத்துக்கு விடை கொடுத்துவிட்டு நிஜ உலகத்திற்கு தயாராக வேண்டும்.

    போட்டி பொறாமை ஏமாற்றம் துரோகம் நிறைந்த உலகம். நிச்சயம் இதில் கல்லூரி வாழ்க்கையின் கலகலப்பு சந்தோஷம் இருக்காது.

    ராதிகா ஏக்கத்தோடு ஹாஸ்டல் கட்டிடங்களைப் பார்த்தபடி நின்றாள். இந்த ஐந்து வருட அனுபவங்கள் கதம்பமாய் மனதில் வந்து போனது.

    குட்மார்னிங் ராதிகா- ஸ்வேதாகையில் அருகம்புல் ஊதுவத்தியுடன் வந்தாள்.

    ஏய்! குளிச்சிட்டியா!

    ஓ! ஜோரா!

    நான் இன்னும் குளிக்கலை!

    மனசுதான் முக்கியம். வா

    பிள்ளையார் கோயில் வெளிகேட்டை ஒட்டி இருந்தது. ஆரம்பத்தில் பிள்ளையார் நாவல் மரத்துக்கு கீழேதான் இருந்தார். மழையில் நனைந்து வெயிலில் உலர்ந்து இருந்தார். ஒரு வருஷம் யாரோ ஒருத்தி செமஸ்டரில் எல்லாப் பேப்பரிலும் பாஸ் ஆகிவிட அதன்பின் பிள்ளையாரின் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது.

    தகர ஷெட்டுக்குள் குடி ஏறினார். மணி விளக்கு நாள் கிழமைகளில் உடுத்த வேஷ்டி துண்டு செமஸ்டர் நேரம் ரிசல்ட் வரும் நேரம் விசேஷ பூஜை அபிஷேகங்கள் நடந்தது.

    ஸ்வேதா எருக்கம்பூ மாலை போட்டாள். ராதிகா கண்மூடி நின்றாள். எதையும் வேண்டமுடியாமல் மனசு தூங்கிக்கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்"- ராதிகா பாடினாள்.

    ஆமா… நான் நாளைக்கே எலக்ஷன்ல நின்னு, மினிஸ்டர் ஆகப்போறேன் பாரு- சித்ரா குதித்து இறங்கினாள்.

    இனி யாருடி எங்களை டயத்துக்கு எழுப்பப்போறா?

    ராதிகாவைக் கட்டிக்கொண்டாள்.

    ஒரு அலாரம் டைம்பீஸட வாங்கிவை

    ஏய் ராதிகா! நீ எங்க ஊருக்கு வந்துடேன்

    ராதி. இவ ஊர் எதுன்னு கேளேன்

    எந்த ஊர் ராஜி நீ?

    புளுவாடி

    என்ன வாடி

    போடி

    அப்படின்னு கூட ஒரு ஊர் இருக்கு

    தோழியரே! காலை வணக்கங்கள்- பக்கத்து ரூம் ஸ்டெல்லா பேஸ்டுடன் வந்தாள்.

    வந்துட்டா தமிழ்க்குடிமகனோட பக்கத்து வீட்டுக்காரி

    இன்றோடு நமது கல்லூரி வாழ்வு முடிவடைகிறது

    கொல்லாதே- கிருத்திகா கத்தினாள்.

    கேலி செய்யாதே. பிரிவுத் துயரில் என் மனது உடைந்துவிட்டது

    பெவிகால் போட்டு ஒட்டு- ராதிகா குளிக்க எழுந்து போனாள். பாத்ரூம் காலியாக இருந்தது.

    ஊருக்குப்போறோம். இன்னிக்காச்சும் நன்றாக குளிப்போமே- மாலினி வேகமாக ஓடிவந்து பக்கத்து ரூமில் புகுந்துகொண்டாள்.

    எல்லாருடைய உற்சாகத்தையும் வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா. ஊருக்கு போக இத்தனை சந்தோஷமா! ஏன் தனக்கு மட்டும் இல்லை. தன்னுடைய வெறுப்புத் தன்மைக்கு என்ன காரணம்? தனக்குள்ளே யோசித்தாள்.

    அதுசரி! தனக்கு யார் இருக்கிறார்கள்

    ஷவரின் குளிர்ந்த நீருடன் கண்ணீரும் சேர்ந்து வழிய அப்படியே நின்றிருந்தாள் ராதிகா.

    ஆடைகட்டி வந்த நிலவோ- ராதிகாவைப் பார்த்ததும் மீரா பாடினாள். கார்த்திகா பேஸ்ட், வழியும் வாயோடு முத்தமிட்டாள்.

    என்ன அழகா இருக்கேடி. வெண்ணெய் கட்டி மாதிரி

    சனியனே. கண்ணு போடாதே மீரா நெட்டி முறித்தாள்.

    யார் ஜாடைடி நீ

    தெரியல

    "அம்மா ஜாடை, மூக்கு உங்கப்பன் மாதிரி:- என்பார் தாத்தா.

    தங்கச்சிலை மாதிரி இருப்பா. அதான் உங்கப்பனால் சகிக்க முடியலை! என்பார் தாத்தா.

    எந்த ஒரு சாபத்தினால் தாத்தா தன்னை ஏற்றக்கொண்டார் என்று புரியவில்லை. அம்மாவும் உதறி, அப்பாவும் உதறி, யாருக்காக எதற்காக தான் பிறவி எடுத்தோம். மனதிற்குள் புரியாமல் தவித்தாள்.

    இப்போ நேரா எங்கே?

    ஈரோடு போறோம்

    அங்க என்ன

    ஷண்முகப்பிரியாவுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்

    அவ நேத்தே போய்ட்டா

    நேத்து காலைல எக்ஸாம் முடிந்தது. அவ அண்ணா வந்து கூட்டிட்டு போனான்

    லுக் ராதிகா பீ கேர்புல், அவன் உன்னைப் பார்த்த பார்வையில் கிலோவாட் காதல் வழிந்தது

    ச்சீ. சும்மா இரு

    உனக்கு பிடிக்கலைன்னா அப்ளிகேஷனை என் பக்கம் திரும்பு. நான் டிக் அடிக்கிறேன்- மீரா.

    பறக்காதே- ராதிகா தலையில் குட்டினாள்.

    சதீஷ், கோபு, ராம்நாத் இவன்க அப்ளிகேஷன் என்னாச்சு

    அதெல்லாம் மறந்துடுங்க- மீரா புறய்கையை வீசினாள்.

    புது வாழ்க்கை. புது காதல்

    உருப்படவே மாட்டே. சாப்பிடப் போலாம் வா

    "டைனிங் ஹால் பாதி காலியாக இருந்தது. நிறையபேர் பரீட்சை முடியவும் போய்விட்டார்கள். எம்.எஸ்.ஸி. எம்.காம்., மட்டும் நேற்று முடிந்தது. ஹாஸ்டல் மட்டும்தான் பரீட்சை முடிந்த கையோடு சினிமாவுக்கு போய்விட்டு, இரவு பூராவும் தூங்காமல் பாட்டும், டான்ஸ்மா கூத்தடித்துவிட்டு இன்றுதான் ஊருக்கு கிளம்புகிறார்கள்.

    தலைமை சமையல்காரர் நாயர் நெற்றியில் சந்தனக் கீற்றுடன் கழுத்தில் பெரிய மணிமாலையுடன் முன்னாடி உட்கார்ந்திருந்தார்.

    நாயர் இன்னிக்கு என்ன ஸ்பெஷல்

    ஊத்தப்பம், சட்னி, வெங்காய கொஸ்த்

    வாவ்.சூப்பர்

    நாயருக்கு நம்ம ஞாபகார்த்தமா என்னடி தரலாம்?

    ஒரு உம்மா

    அது வேண்டாம். அதைவிட நம்பகமானது. பத்திரமானது. உண்மையானது டட்டடாய்ங்- ராதிகா காற்றில் கைவீசி சின்னப் பெட்டியை எடுத்தாள்.

    என்னது?!- நாயர்

    மோதிரம்

    எண்டே குருவாயூரப்பா, தங்கமே!

    சுத்தமான அக்மார்க் தங்கம்

    எதுக்கு மோளே!

    நீங்க வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டீங்களே!

    அது தொழில் மோளே

    அதை நீங்க இயந்திரமா செய்யலையே! சித்ராவுக்கு பீவர் வந்தப்போ தனியா சுக்கு கஷாயம் வச்சுத் தந்தீங்களே!

    ராதிகாவுக்கு கால் பிராக்சர் ஆனப்போ அழகான பொண்ணு. கால் ஊனமாயிடக்குடாதுன்னு மருதமலை முருகன் கோயிலுக்கு நடந்துபோய் அர்ச்சனை பண்ணிணீங்களே

    அது பிரியம்

    அந்த பிரியத்துக்கு இந்தப் பரிசு நாயர். வார்டன்கிட்ட பர்மிஷன் கேட்டுத்தான் தரோம்- ராதிகா மோதிரத்தை அவர் விரலில் மாட்டினாள்.

    இந்த கோயம்புத்தூர், காலேஜ் ஹாஸ்டல், நாயர் எதையும் மறக்க முடியாது

    நாயர் உணர்ச்சியில் பேசமுடியாமல் தடுமாறினார்.

    எல்லாருக்குமே தொண்டை அடைத்துக்கொண்டது. விடைபெற்று அட்ரஸ் வாங்கி விரல்கள் கோர்த்து, பிரிந்து, அழுது,ஈரோடு பஸ்ஸில் ஏறி உட்காருகையில் அவ்வளவுதான் என்று தோன்றியது.

    ஒரு அத்தியாயம் முடிந்தது.

    ஏதோ திருவிழா என்று பஸ்ஸில் ஏகக்கூட்டம். மீராவும், சித்ராவும், பின்னாடி போக, ராதிகா முன்சீட்டில் உட்கார்ந்தாள். எதிர்சீட்டில் ஒரு குழந்தை அவளின் கவனத்தை பிடுங்கிக்கொண்டது.

    அது துடிப்பாய் இருந்தது. "குறுகுறு’ என்றிருந்தது.மடிக்கு மடி தாவியது. அம்மாவின் கன்னத்தைக் கடித்து, முடியை இழுத்து அது செய்யும் குறும்பு பஸ்ஸின் மொத்தக் கவனத்தையும் கவாந்தது.

    பெற்றவர்களின் முகத்தில் பெருமை பொங்கியது. அப்பா மாறி… மாறி முத்தமிட்டார்.

    ஏக்கமாய் இருந்தது. இந்தப் பாசம் தனக்கு கிடைத்திருக்குமா?

    ஞாபகமில்லை.

    அப்பாவையாவது நாள், கிழமைகளில் பார்க்கலாம். அம்மா முகம் ஞாபகமே இல்லை. வீட்டுக்கு வராதே என்று விரட்டிவிட்டாள் பாட்டி.

    பாட்டி அடிக்கடிபுலம்புவாள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நகர்ந்தாள். போன வருஷம் பாட்டி போனாள். தாத்தா இருக்கிறார். அவரும் எத்தனை நாளோ? சமையல் வேலை. ஓடியாட முடியவில்லை.

    சம்பாதிக்கணுமே. பொண்ணை ஏன் தலையில் கட்டிட்டு போய்ட்டா. உன்னைக் கரையேத்தணுமே- தாத்தா புலம்புகையில் பெண்ணாய் பிறந்ததுக்கே அவமானமாய் இருக்கும்.

    பாசம், பிரியம் தாண்டி வெறும் கடமை என்ற உணர்வில் நடமாடுவதால் யாரிடமும் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது. அசைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ராதிகா ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தாள்.

    ஈரோடு போக இரண்டு மணி ஆகிவிட்டது. ஷண்முகப்பிரியாவின் வீடு டீச்சர்ஸ் காலனியில் இருந்தது. மாப்பிள்ளை வீடு மூன்று மணிக்குத்தான் வந்தது. நிச்சயம முடிந்து சாப்பிட்டு அவர் வீட்டுக்கு கிளம்பிப் போனபிறது மீராவும் சித்ராவும் ராதிகாவும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தபோது ட்ரெய்ன் கிளம்ப இன்னும் பத்து நிமிஷமே இருந்தது.

    இங்கேயே நில்லு. சீட் எங்கே இருக்குன்னஷனு பாத்துட்டு வரேன் கோடை விடுமுறைக்கு கூட்டம். திரும்பிய பக்கமெல்லாம் தலைகள்.

    ராதிகா- மீரா கத்தினாள் சீட் இங்கே இருக்கு ஓடிவா…

    ராதிகா பெட்டியுடன் ஓடினாள். முடிந்தவரை மோதாமல் வளைந்து நெளிந்து ஓடினாலும், சடாரென்று யார் மேலேயோ மோதி நின்றாள்.

    தோள்பை கழன்று விழுந்தது. ராதிகா ஆத்திரத்துடன் பையை எடுத்தாள். கோபம் வழிய கத்தினாள்.

    இடியட் இடிக்கிறதுக்குன்னே வரானுங்க

    வேகமாய் போன அந்த இளைஞன் சட்டென்று நின்று இவளிடம் திரும்பினான.

    ஆமா, பெரிய மிஸ் யுனிவர்ஸ். உங்கமேல மோதினாத்தான் ஜென்மம் சாபல்யம் ஆகும்

    ராதிகா திகைத்து நின்றாள். சிரிப்பு வந்தது. அவனை மீண்டும் பார்க்கவேண்டும் போல் இருந்தது. பார் என்று உள்ளுணர்வு சொல்லியது.

    2

    டிகாக்ஷன் திக்காய் இறங்கியிருந்தது. பால், சர்க்கரை கலந்து காப்பியை பிளாஸ்க்கில் ஊற்றி வைத்தார் தாத்தா. ராதிகா வந்ததும் குடிக்க ஆகும். தனக்கு ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு வெளியில் வந்தார். வாசலில்

    Enjoying the preview?
    Page 1 of 1