Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Doris Lessing
Doris Lessing
Doris Lessing
Ebook116 pages46 minutes

Doris Lessing

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, வாசிப்பை நேசித்து இருந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, அரசியல் ஆய்வு உள்ளிட்ட தளங்களில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன். தற்போது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.என் குழந்தை பருவத்திலேயே உமாபதி என எனக்கு புனை பெயர் வைத்த என் தாய்மாமா சங்கிலி அவர்களை நினைவு கூறுகின்றேன். வெறும் செய்தியாளராக இருந்த என்னை, டோரிஸ் லெஸ்சிங் வாழ்க்கை வரலாறை மொழிபெயர்பு செய்யுங்கள் என்று கூறி,
என்னை எழுத்தாளராக உருவாக்கிய ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.ப.திருமாவேலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109701343
Doris Lessing

Read more from Umapathi K

Related to Doris Lessing

Related ebooks

Reviews for Doris Lessing

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Doris Lessing - Umapathi K

    http://www.pustaka.co.in

    டோரிஸ் லெஸ்சிங்

    Doris Lessing

    Author:

    கே.உமாபதி

    K. Umapathi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/k-umapathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.தனிமையில் குழந்தைப் பருவம்

    2.வேர்விட்ட புத்தக ரசனை

    3.சுமையான மனது

    4.எழுத்தின் தொடக்கம்

    5.புயலைக் கிளப்பிய கவிதை

    6.தேடலில் தோன்றிய காதல்

    7.கட்டமைப்பில் கருத்து மோதல்

    8.கணவரின் ஈகோ

    9.இங்கிலாந்தில் இலக்கிய வாழ்க்கை

    10.பின்னிணைப்பு

    டோரிஸ் லெஸ்சிங்

    முன்னுரை

    ரெஹோட்சியா என்று அழைக்கப்பட்ட, இப்போது ஜிம்பாவே என்றழைக்கப்படும் நாடு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. இங்கிலாந்தில் இருந்த பெரும்பாலான வெள்ளையர்கள் ஜிம்பாப்வேயில் குடியேறினர். அப்படிக் குடியேறியவர்கள்தான் டோரிஸ் லெஸ்சிங்கின் பெற்றோர்.

    மேலை நாட்டு நாகரீகத்தின் தாக்கத்தில் இளம் வயதில் தன்னை அலங்களித்துக் கொள்வதற்கு விரும்பிய டோரிஸ், புத்தக வாசிப்பின் முலம் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். வாசிப்பின் விளைவாக சிந்தனைகள் விரிந்தன. மனதுக்குள் எப்போதும் யோசனைகளுடன் திரிந்து கொண்டிருந்தார். புத்தகத்தின் உலகத்துக்கும், வெளி உலகத்துக்கும் இடையேயான முரண்பாடுகள் புரியத் தொடங்கின. இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்த ஜிம்பாவே மற்றும் தென் ஆப்ரிக்காவில் தம்மை கதறி என்ன நடக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது. சிந்தனை சிறகடித்துப் பறந்த அந்தக் காலத்தில் இடதுசாரி சிந்தனையாளர்களின் பழக்கம் ஏற்பட்டது.

    அவருடைய தந்தை முதல் உலகப்போரில் போர்வீரராக ஈடுபட்டு உடல் ஊனமுற்றவர் என்பதால் அவர் எப்போதும் போரைப் பற்றி – தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருப்பார். டோரிஸ்சின் இளமைக் காலத்தில் இரண்டாம் உலகப்போர் தீவிரம் அடைந்த நேரம். போரில் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் தென் ஆப்பிரிக்காவில் அகதிகளாகப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை நேரில் பார்த்து மனம் வெதும்பினார்.

    தென்னாப்பிரிக்காவிலும், ஜிம்பாவேயிலும் கறுப்பர்களுக்கு எதிரான நிறவெறி அவரை மிகவும் பாதித்தது. அதன் விளைவாக அந்த பாதிப்பு குறித்துக் கவிதை ஒன்றை எழுதினார். மாலை நேரத்தில் மழையில் நனைந்த படியே செல்லும் கறுப்பின சிறுவனைப் பற்றிய இந்தக் கவிதை அவரது மண வாழ்க்கையில் புயலை வீசியது. ஆங்கிலேய குடும்பத்தை சேர்ந்த டோரிஸ் இப்படி கவிதை எழுதியது நியாயமா? தர்மமா என்று குடும்பத்தில் பெரும் விவாதம் ஏற்பட்டது. இதுதான் மணவாழ்க்கை விரிசலுக்கு முதல் காரணம்.

    ஒரு பெண்ணாக குடும்பக் கட்டமைப்புக்குள் இருப்பதற்கும் அவரது உள்மனம் இடம் கொடுக்கவில்லை. புழுக்கத்தில் அழும் குழந்தையைத் தூங்க வைப்பதற்காக தெருவில் அதன் தாய் அழைத்து செல்வதற்கு கூட அனுமதிக்காத கணவர் பற்றி, அவர் ஈகோ பற்றி டோரிஸ் வேதனை பட்டிருக்கிறார். தன் இயல்பால் இரண்டாவது திருமணத்திலும் அவருக்குத் தோல்வி ஏற்பட்டது. கம்யூனிசவாதியாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட இரண்டாவது கணவரின் நிஜமுகம் தெரிந்த போது கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்தே டோரிஸ் மாறினார். இரண்டாவது திருமணத்துக்குப் பின் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார்.

    லண்டனில் இருக்கும் போது தன் இளமை காலத்தில் தென் ஆப்ரிக்காவில், கறுப்பர்களுக்கு எதிரான நிகழ்வுகள், அவர்களுக்கு அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட விதத்தை த கிராஸ் இஸ் சிங்கிங் என்ற பெயரில் நாவலாக எழுதினார்.

    ஒரு இங்கிலாந்து வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் கறுப்பர்களுக்கு வாக்கலத்து வாங்கி எழுதுவதா? என்று பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஜிம்பாவே சுதந்திரம் அடையும் வரை அதாவது 1980ஆம் ஆண்டு வரை ஜிம்பாப்வேயில் இந்த புத்தகத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.

    குழந்தைப் பருவம் முதல் எழுத்தாளர் ஆனது வரையிலான கால கட்டத்தைப் பற்றி ‘அன்டர் மை ஸ்கின்’ என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் டோரிஸ் லெஸ்சிங் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் மற்றும் இணையத் தளங்கள், 2007ம் ஆண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக டோரிஸ் தேர்வு செய்யப்பட்டபின் அவரை பற்றி வெளி வந்த தகவல்களை படித்தபோது இவரைப் பற்றி தமிழில் ஒரு புத்தகம் இல்லையே என்று தோன்றியது. அந்தச் சமயத்தில் என் உடன் பணியாற்றிய தலைமை நிருபர் திருமாவேலன், இவரை பற்றி எழுதுங்களேன் என்றார். அதன் விளைவாய் இந்தப் புத்தகம் உருப்பெற்றது.

    இந்தப் புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளராக ஒபாமா அறிவிக்கப் பட்டார். அப்போது அது குறித்துக் கருத்து தெரிவித்த டோரிஸ் லெஸ்சிங், அமெரிக்காவில் வெள்ளையர் அல்லாத ஒருவர் அதிபர் ஆவது சாத்திய மில்லை. அப்படி மீறி வந்தால் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்று அதிரடியான கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அளவுக்கு வெள்ளையர் ஆதிக்கத்தை பற்றிக் கருத்துக்கொண்டிருந்தார். இந்தப் புத்தகத்தின் பின்இணைப்பாக கூறப்பட்டுள்ள அவரது நோபல் பரிசு உரை மற்றும் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஆகியவை தமிழ் வாசகர்களுக்கு டோரிஸ் என்ற பெண்ணியவாதியை, போராட்டவாதியை பற்றி அறிந்து கொள்ளக் கூடுதலாக உதவும்.

    சமூகத்தைப் பற்றி, அதன் சிக்கல்கள் பற்றி வெளிஉலகத்துக்கு தெரிவிப்பவர்கள் எழுத்தாளர்கள். எழுத்தாளர்களின் வாழ்க்கையை பற்றி, அவர்களின் இளமைக்காலம், அவர்களின் போராட்டங்களை அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும்.

    1. தனிமையில் குழந்தைப் பருவம்

    இயல்பு என்ற இயற்கையில் குறுக்கிட்ட காட்டாறு நாகரீகம். அந்த நாகரீகத்தின் வழித்தோன்றலில்தான் நான், எனது என்ற சுயமும், கயமையும் தோன்றியது. பணம் சேர்க்க வேண்டும். சொத்து சேர்க்க வேண்டும். நாடுகளை சேர்க்க வேண்டும் என்ற பேராசைகள் தனி மனிதனிலிருந்து நாடாள்பவர் வரை ஏற்பட்டது. இதன் விளைவாய் எல்லைகள் தாண்டி நாடுகளை பிடிக்கும் ஆசை வேர் விட்டது. எல்லைகளை தாண்டி நாடுகளை பிடிப்பது தொடங்கிய போது போர் நிகழ்வுகள் தோன்ற தொடங்கின.

    போருக்கு முந்திய மனித வாழ்க்கை என்பது மிக, மிக குறுகிய வட்டத்தில் குடும்பம், குழந்தைகள் என்றிருந்தது. முதல் உலகப்போருக்கு முந்தைய மனித வாழ்க்கை உற்சாகத்தின் பிடியில் இருந்தது. குறிப்பாக இளைஞர்கள் அதிலும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.

    இங்கிலாந்து நாட்டின் சொர்க்க பூமியான லண்டனில் இருந்து 52 கி.மீ. தொலைவில் இருந்த லுடோன் நகரில் இருந்தவர் ஆல்பர்ட் குக் டெய்லர்.

    Enjoying the preview?
    Page 1 of 1