Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Thodarkirathu
Kaadhal Thodarkirathu
Kaadhal Thodarkirathu
Ebook109 pages40 minutes

Kaadhal Thodarkirathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580101501475
Kaadhal Thodarkirathu

Read more from Jyothirllata Girija

Related to Kaadhal Thodarkirathu

Related ebooks

Reviews for Kaadhal Thodarkirathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Thodarkirathu - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    காதல் தொடர்கிறது

    Kaadhal Thodarkirathu

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For other books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    காதல் தொடர்கிறது

    1

    லச்சுமி!

    என்னம்மா?

    குனிந்தவாறு தரையைப் பெருக்கிக்கொண்டிருந்த லட்சுமி பெருக்குவதை நிறுத்திவிட்டுத் தலை உயர்த்தித் தாயை நோக்கினாள்.

    இனிமேப்பட்டு நீ வெளியே போகப்படாது.

    ஏம்மா?

    இந்தக் கேள்விக்கு உடனே பதில சொல்லாது சரசு மகளைப் பொருள்பொதியப் பார்த்தாள். அந்தப் பார்வையின் உட்கிடை தெற்றெனப் புரிந்ததும் லட்சுமி கணப்பொழுதுக்கு மேல் தாயின் பார்வையைத் தாங்க முடியாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டு விட்டாள்.

    ஊர்ல கண்ட காவாலிக் களுதைங்க ஏமாந்த பொண்ணு எதுனாச்சும் கிடைக்குமான்னு நோட்டம் விட்டுக்கிட்டு அலையுங்க. அதுக்கு நாம எரையாயிறக் கூடாதுடி, லச்சுமி

    லட்சுமி மறுபடியும் பெருக்கத் தொடங்கி இருந்தாள். அம்மா என்ன சொல்ல வந்தாள் என்பது அவளுக்கு நன்றாகவே விளங்கியது.

    என்னடி பதிலே சொல்லாம பெருக்கிடடிருக்கே?

    "சரிம்மா...

    அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் போல் தாய்க்கும் மகளுக்குமிடையே ஒரு பேசாமை நிலவியது. கூட்டி முடித்துக் குப்பையை முறத்தில் அள்ளி உடல் நிமிர்ந்ததும், அப்ப, எப்படிம்மா சோறு திங்கிறது? என்று கேட்டுவிட்டுச் சரசுவைக் கவலையுடன் பார்த்த லட்சுமி கண்களைக் கொட்டாமல் நின்றாள்.

    இந்தக் கேள்விக்குச் சரசுவிடம் பதில் இல்லை. அவளால் பதில் சொல்லவே முடியாது என்பது புரிந்ததால், கசப்பான புன்னகை காட்டிய லட்சுமி, என்னம்மா பேசாம இருக்கீங்க? உங்களுக்கும் மேலுக்குச் சொகமில்லே. படுத்த படுக்கையாயிட்டீங்க. நானும் இனிமேப்பட்டு வேலைக்குப் போகக்கூடாதுன்னா, அப்புறம் எப்படித்தாம்மா சோறுதிங்கிறது? என்று ஏற்கெனவே கேட்டுப் பதில் வராத கேள்வியை மேலும் விரிவாகக் கேட்டாள்.

    "சோறு திங்கறதுதானாடி உலகத்துல முக்கியம்? அப்படி நெனச்சுத்தாண்டி நான் எந்தலையில மண்ணை வாரிப் போட்டுக்கிட்டேன். ஆனா என்னோட நல்ல காலம், தப்பிச்சேன்'

    என்னமா சொல்றீங்க?

    சரசு பதில் சொல்லவில்லை. ஆனால அவள் கண்கள் மடடும் சிவந்து கலங்கிவிட்டன.

    இருங்க, குப்பையைக் கொண்டுட்டுப் போய் வெளியில கொட்டிட்டுவாறேன் என்றவாறு லட்சுமி முறத்துடன் வெளியே போனாள். குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டிவிட்டு அவள் தலை உயர்த்திய போது எதிர்க்குடிசைப் பயல்கள் இரணடு பேர் அவள் பக்கம் கையைக் காட்டிக் குசும்புத்தனமாய் ஏதோ சொல்லிப் புன்னகை பரிமாற்றம் செய்து கொண்டதைக் கவனிக்க நேர்ந்து அவள் முகம் அதன் மாநிறத்தைக் கடந்து சிவந்து போய்விட்டது.

    தலையைக் குனிந்துகொண்டு மிக விரைவாகத் தங்கள் குடிசையினுள் நுழைந்த அவளுக்கு, 'அம்மா சொல்லுவது சரிதான்' என்றே அப்போது ஏற்றுக்கொள்ளத் தோன்றியது.

    முறத்தைச் சுவரோரம் வைத்துவிட்டு, என்னம்மா? என் கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல்லியே? என்று கேட்டபடி லட்சுமி, சரசு படுத்துக்கொண்டிருந்த பாயின் அருகே வந்து குந்திக்கொண்டாள்.

    என்னம்மா உங்க தலையில நீங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டீங்க?

    ...ம்..ம்.. - பதிலாக ஒரு பெருமூச்சே அவளிடமிருந்து சீறிப்பாய்ந்து வெளிவந்தது.

    அந்தக் கதையையெல்லாம் பெறகு ஒருநாளு சாவகாசமா உனக்குச் சொல்றேண்டி. சொல்லத்தான் போறேன். மனுசனோட எத்தனையோ பசியில வவுத்துப் பசிதானேடி பெரிசாத் தெரியுது? அதை செயிக்க முடிஞ்சிச்சுன்னா இந்த உலகத்துல பிரச்சினையே இருக்காதேடி லச்சுமி?-இவ்வாறு கேட்டுவிட்டு, சரசு சுவரை வெறித்தாள். அது ஒன்றும் அவள் இன்று புதிதாய் உதிர்த்த பழமொழியோ பொன்மொழியோ அன்று. சோர்வும் கவலையும் ஏற்படுகிறபோதெல்லாம் அவள் அடிக்கடி வெளிப்படுத்துகிற பொருமல்தான்

    யாரம்மா இல்லேன்னாங்க? வவுறுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். ஆனா பசிக்குச் சோறு தராம வயித்தைக் காயப்போட முடியுமாம்மா, என்ன பேசறீங்க, நீங்க?

    எல்லாம் நான் சரியாத்தாண்டி பேசறேன், கொஞ்சம் விவரத்துக்கு வந்ததும் நீயே புரிஞ்சுக்குவே... வயித்துக்குச் சோறு போட வசதி இல்லைன்னா எங்கேயாவது கெணறு கொளம், ஆறு, கடல்னு போயிவிளுந்து செத்துறணும்டி இப்ப உசிரை வச்சுக்கிட்டு நான் என்னத்தை சாதிச்சேன், சொல்லு

    என்னம்மா பேசறீங்க? உசிரை வச்சுக்கிட்டு இருக்கிறவங்க | எல்லாருமே எதுனாச்சும் சாதிச்சுக்கிட்டுத்தான் இருக்குறாங்களா என்ன?

    "சாதிக்காட்டியும் இப்படி பசி, பட்டினி, நோக்காடுன்னு பூமிக்குப் பாரமா, சோத்துக்குக் கேடா இருக்கப்படாதுடி, லச்சுமி. மனுசங்கன்னா பசிவேளைக்குச் சாப்பிட்டுக்கிட்டு, நோய் நொடின்னா மருந்து ச_ பிட்டுக்கிட்டு, பத்திரமாவாளனும்டியம்மா. வாளறதுன்னா அதுதான்'

    காலம் இப்படியே இருக்காதுன்னு நம்பித்தான் வாழறோம் சிலருக்குச் சோதனைக்குமேல சோதனை வந்திடுது. அதுக்கு என்னம்மா செய்ய முடியும்? அதுக்காகக் கடவுள் கொடுத்த உசிரைப் பொசுக்குனு கடல்ல குதிச்சு விட்டுடவா முடியும்? எல்லாத்துக்கும் அந்தக் தகிரியம் வராதும்மா

    உண்மைதாண்டி, லச்சுமி, உண்மைதான். அந்தத் தகிரியமும் தெம்பும் இல்லாம போனதுனாலதானே இப்ப கிடந்து முளி முளின்னு முளிக்கிறேன்? என் உடம்பு இருக்குற இருப்பில உன்னய ஒருத்தன் கையில பிடிச்சுக் குடுத்துட்டுக் கண்ண மூட்றதெல்லாம் நடக்குற காரியமா? அதைச் செய்ய முடிஞ்சிச்சுன்னா, செய்துட்டுக் கடல்ல குதிச்சிறுவேண்டி...

    அட, சும்மா இருங்கம்மா. நான்போய் வெளக்கு ஏத்தி வெக்கிறேன். வெளக்கு வெக்கிற நேரத்துல கன்னாப்பின்னான்னு பேசாதீங்க... என்று அதட்டுகிற குரலில் அறிவித்துவிட்டு லட்சுமி சாமி படத்தை நோக்கிப் போனாள்.

    "நாம இருக்கிற

    Enjoying the preview?
    Page 1 of 1