Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aarthikku Aabathu!
Aarthikku Aabathu!
Aarthikku Aabathu!
Ebook91 pages39 minutes

Aarthikku Aabathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402135
Aarthikku Aabathu!

Read more from Rajesh Kumar

Related to Aarthikku Aabathu!

Related ebooks

Related categories

Reviews for Aarthikku Aabathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aarthikku Aabathu! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஆர்த்திக்கு ஆபத்து!

    Aarthikku Aabathu!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    ஆர்த்திக்கு ஆபத்து!

    ராஜேஷ்குமார்

    1

    இந்த நாவலின் ஆரம்ப வரியான இந்த வரியில் விஸ்வத் படிகளில் தடதடத்து வந்து கொண்டிருந்தான். மணிக்கட்டை உயர்த்தி நேரம் பார்த்தபோது டிஜிட்டலில் 5.04 - ஒளிர்ந்தது. வலது கையிலிருந்து பிராஸ்லட் ஆடியது. மொசைக் படிகள் முடிந்து ஹாலில் அவன் கால்கள் பதியும் முன்பாக அவனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லி விடலாம். சின்ன அறிமுகம்.

    நியூமலராஜி மோகத்தில் அப்பா, அம்மா வைத்த விசுவநாதன் என்கிற பெயரை விஸ்வத் என்று மாற்றிக் கொண்டிருக்கிற விஸ்வத்தின் கைகள் எந்த அழகான காட்சியையும் பிரஷ்ஷில் தீற்றப் பரபரக்கிறவை. பிறவி ஓவியன். ஓவியக் கல்லூரியில் முலாம் பூசிக் கொண்டவன். தமிழக அளவில் இரண்டுதரம் அவார்டு வாங்கினவன். தேசிய ரீதியில் முயற்சித்துக் கொண்டிருக்கிறவன்.

    கிட்டத்தட்ட ஆறடி உயரத்துக்குக் கிடுகிடுவென்று வளர்ந்த போது உயரத்தைநிறுத்த ஏதாவது டானிக் சாப்பிடலாமா என்று கவலைப்பட்டவன். தற்போதைய உயரம் ஆறு அடி மூன்று அங்குலம். ஆர்ட் தீட்டுகிற நேரங்களில் மட்டும்நாசியின் மேல் கண்ணாடி தொற்றிக் கொள்ளும். விஸ்வத் என்று சொன்னாலே அவனைத் தெரிந்தவர்களுக்குப் பைஜாமா வகையறாவில் பொதிந்த ஒரு உருவம் தான் நினைவுக்கு வரும்.

    படியிறங்கலை முடித்திருந்த விஸ்வத்துக்கு சோபாவில் நிரம்பியிருந்த அப்பா சண்முக வேலாயுதம் நாளிதழ் ஒன்றில் மூழ்கித் தெரிந்தார்.

    சில்க் சர்ட், சில்க் வேஷ்டியில் சிக்கியிருந்த சண்முக வேலாயுதம் நாற்பத்தைந்து வயதை முதல் பார்வையில் அனுமானிக்க வைப்பார். நிஜவயது நாற்பத்தெட்டு. இன்னும் கண்ணாடித் தேவையை ஏற்படுத்திக் கொள்ளாதவர்.

    மீசை, காதோரங்களில் முடி நிறமிழக்க ஆரம்பித்தது, இருபத்தைந்து வயதிலிருந்தே. குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது போன்ற அன்றாடக் கடமைகளில் ஒன்றாய் ஷேவிங்கும் ஆகியிருந்தது. சிரித்தால் தெரிகிற பல்வரிசையில் இந்த வயதிலும் ஒரு கவரல் இருந்தது.

    நடந்து வருகிற விஸ்வத்தால் நாளிதழிலிருந்து கலைக்கப்பட்டு நிமிர்ந்தார். அவன் ஆள் காட்டி விரல் சுழற்றுகிற கார் சாவியைக் கவனித்துப் புருவ இடைவெளியைக் குறைத்தார்.

    எங்கடா கிளம்பிட்டே?

    பீச் பங்களாவுக்கு.

    வரையவா?

    ம்.

    ஆர்த்தியும் வர்றாளா?

    நானா கூப்பிடலை, அவதான் வர்றேன்னு சொன்னா...?

    ஏன்டா… நீங்க பங்களா போய்ச் சேர அஞ்சு நாற்பத் தஞ்சாயிடும். அப்புறம் கொஞ்ச நேரத்தில் இருட்டிடும். அந்த இருட்டுல என்னத்தைப் பார்த்து வரையப் போறே?!

    இன்னிக்கு நானும் ஆர்த்தியும் அங்கேயே ஸ்டே பண்ணிக்கப் போறோம். ராத்திரி எபக்டை என்னோட சீனரியோவுக்குக் கொண்டு வரணும்.

    ராத்திரியும் பகலுமா வரைஞ்சிட்டே இரு... பிசினஸைக் கவனிக்க வராதே.

    சலித்த அப்பாவை முறைத்தான்.

    அப்பா… ஆர்ட்டை ரசிக்கிறதுக்கெல்லாம் தனி ரசனை வேணும். இது ஆகஸ்ட்மாசம். சன்செட் ஈஸ்ட்-நார்த்சைட்ல நடக்கும். நம்ம பங்களால ரைட் சைட் ஜன்னல் எதையாவது திறந்தா. சவுக்குத் தோப்பை ஊடுருவி சன் செட்டிங் தெரியும். ஃப்ரிஜ்ல வெச்ச ஆப்பிள் மாதிரி சூரியன் தகதகன்னு மின்னிட்டே...

    ஆமாடா... நான் உன்னை மாதிரி சூர்யோதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்த்திட்டு இருந்திருந்தேன்னா இன்னிக்குக் குடியிருக்க ஒரு பங்களா. நீ வரையறதுக்காக பீச் சைட்ல ஒரு பங்களான்னு இத்தனை வசதிகள் வந்திருக்காது.

    "அப்பா… நான் உங்க பிஸினஸுக்கு உதவியா இல்லேன்னு உங்களுக்குக் கோபம். ஒரு மூணு மாசம் பொறுங்கப்பா… இந்த இன்டர் ஸ்டேட் காம்படீஷன்ல பரிசைத்

    Enjoying the preview?
    Page 1 of 1