Un Vaanam En Arugil
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5
Related to Un Vaanam En Arugil
Related ebooks
January Nilave! Rating: 0 out of 5 stars0 ratingskaikuttaikkul Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsDecember Pournami Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neeril Neenthum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsEllam Nanmaikke Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsAkkarai Sivappu Rating: 0 out of 5 stars0 ratingsVellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsMathangalil Aval Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsKutram Melum Kutram Rating: 3 out of 5 stars3/5Saathal Saamraajjiyam Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maarum Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Thappu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsThadangalukku Varunthukirom Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru...! Rating: 0 out of 5 stars0 ratingsIndre Kaathali Rating: 0 out of 5 stars0 ratingsOru Rojavum Sila Thottakkalum Rating: 5 out of 5 stars5/5Vaa Arugil Vaa and Kagitha Ayuthangal Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Ini Illai Rating: 4 out of 5 stars4/5Ratthathil Oru Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Karuppu Poonai! Rating: 0 out of 5 stars0 ratingsVellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsOru Eastmen Nirak Kolai Rating: 5 out of 5 stars5/5Ainthu Gram Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsOne Man Army Rating: 0 out of 5 stars0 ratingsSathuranga Rani and Kaanamal Pona Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Un Vaanam En Arugil
0 ratings0 reviews
Book preview
Un Vaanam En Arugil - Rajeshkumar
எடுக்கப்படும்.
ஒன்று
"ஆஹா..." என்றான் விவேகானந்தன்.
என்னவாம்?
ராகினி காபி டம்ளரோடு கணவனின் அறைக்குள் நுழைந்தபடியே கேட்டாள். தலைக்கு குளித்து ஈரத்தை உறிஞ்சுவதற்காக டவலைச் சுற்றியிருந்த ராகினிக்கு நிஜமாகவே எலுமிச்சம்பழ நிறம். சந்தன நிறத்தில் ‘க்ரிப்ட்’ சேலை உடம்பைச் சுற்றியிருக்க, சொர்ண விக்கிரகத்தை நினைவுபடுத்தினாள்.
விவேகானந்தன் திரும்பினான். ராகினி...! அந்தக் கவிதைத் தொகுப்பைப் படிச்சு பார்த்தியா?
இன்னும் இல்லை... நேற்றுதானே வாங்கிட்டு வந்தீங்க. நீங்க டேம் ஸைட்டுக்குப் போன பின்னால் எடுத்து படிக்கலாம்னு இருந்தேன். ஆமா, தொகுப்போட பேரு என்ன?
கறுப்பு நெருப்பு.
எழுதினது...?
வெற்றிப் போராளிங்கற கவிஞர்... சும்மா சொல்ல கூடாது. ஒவ்வொரு கவிதையும் ஒரு சுவை. கவனமா எழுதியிருக்கார். ‘அம்மா’ என்கிற தலைப்பில் அவர் எழுதியிருக்கிற கவிதையைப் படிச்சுக் காட்டட்டுமா?
என்னங்க, மணி எட்டாகுது, நீங்க டேம் ஸைட்டில் இருக்க வேண்டிய நேரம். கவிதையைப் படிச்சிட்டு உட்கார்ந்திருக்கீங்களே...? காபியைக் குடிச்சுட்டுக் கிளம்புங்க...
இரு, இரு... டேம் எங்கே போயிடப் போகுது இன்னிக்கு மத்தியானத்துக்கு மேல்தான் ஏ.இ. ஸைட்டுக் வருவார்... அந்தக் கவிதையைப் படிக்கிறேன் கேளேன்...
சரி, படிங்க.
விவேகானந்தன் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து கவிதையைப் படித்தான்.
அம்மா!
நீ என்னைச் சுமந்த
முன்னூறு நாள்களும்
என் வாழ்வின்
பெளர்ணமி நாள்கள்
உன் கர்ப்பச் சிம்மாசனத்தில்
என்னை ஏற்றி வைத்து
கெளரவப்படுத்தியவள் நீ!
என் அசைவுகளுக்கு அர்த்தங்கள்
ஆயிரம் கண்டவள் நீ!
என் முணுமுணுப்பையும்
முகச்சுளிப்பையும் கூட
மொழி பெயர்த்தவள் நீ!
"உலகில் கறுப்பை வெள்ளையாக்கும்
கலையைக் கண்டிருக்கிறேன் - ஆனால்
நீ மட்டுமே
சிவப்பை வெள்ளையாக்கும்
சக்தியைப் பெற்றிருந்தாய்.
ஆம்!
இரத்தச் சிவப்பை பால் வெள்ளையாய்
பரிணாமப்படுத்தியவள் நீ!
கவிதை படிப்பதை நிறுத்திவிட்டு ராகினியை ஏறிட்டான் விவேகானந்தன். எப்படி ஒவ்வொரு வரியும் அமர்க்களமாய் இல்லையா?
ராகினியின் பெரிய கரிய கண்களில் நீரின் பளபளப்பு. பதறிப் போய் எழுந்தான்.
என்ன ராகினி? ஏன் அழறே?
நீ... நீங்க அந்தக் கவிதையைப் படிச்சதும்...
படிச்சதும்...
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போன என்னோட அம்மா ஞாபகம் வந்துடுச்சு...
சேலைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டாள் ராகினி.
சரியாய் போச்சு...
புத்தகத்தை மூடி வைத்து விட்டு எழுந்தான் விவேகானந்தன்.
உன்னை என் வாழ்க்கையோட எந்த நிமிஷத்திலும் கண்கலங்க விடமாட்டேன்னு உங்கப்பாகிட்டே சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லித்தான் கல்யாணம் செய்திருக்கிறேன். நீ இப்படி கண்ணைக் கசக்கினா நான் எடுத்த உறுதிமொழி என்னாகிறது?
ஸாரிங்க...
என்று கொஞ்சலாய்ச் சொன்னவளை அணைத்துக் கொண்டான் விவேகானந்தன்.
இன்னைக்கி உனக்கும் எனக்கும் ஒரு விசேஷமான நாள் தெரியுமா?
விசேஷமான நாளா...?
ராகினி விழிக்க,
ஆமா, இன்னிக்கு என்ன மாதம், தேதி...?
மே ஐந்து.
நமக்கு என்னைக்கு கல்யாணம் ஆச்சு?
ஜனவரி இருபத்தஞ்சு.
கல்யாணமாகி எவ்வளவு நாளாச்சுன்னு கணக்குப் போட்டுப் பாரு...?
அரைநிமிஷ நேரம் யோசித்து கணக்கு போட்ட ராகினி ஆர்ப்பாட்டமாய் மலர்ந்தாள்.
அட, இன்னைக்கு நூறாவது நாள்!
கொண்டாடிடலாமா?
இந்தக் காட்டுப் பகுதியில எப்படிக் கொண்டாடுறதாம்? அக்கம் பக்கத்து குவார்ட்டர்ஸில் இருக்கிற எல்லாருமே குடும்பத்தோட வெக்கேஷனுக்குப் போயிட்டாங்க. இல்லேன்னா அவங்களையாவது கூப்பிட்டு நம்ம வீட்லேயே சின்னதா பார்ட்டி வைக்கலாம்.
நூறாவது நாளைக் கொண்டாடத்தான் போறோம்.
எப்படி?
சாயந்தரம் டேம் ஸைட் ஜீப்பைக் கொண்டு வர்றேன். ரெண்டு பேரும் கிளம்பி டவுனுக்குப் போகலாம். நல்ல ஓட்டல்ல டிபன், ஒரு நல்ல சினிமா, ஒரு நல்ல பட்டுப்புடைவை, ஒரு நல்ல...
போதும்... போதும்... அதெல்லாம் வேண்டாம்.
பின்னே?
டேம் சைட்டுக்கு மேல மலையைக் குடைந்து ஒரு கோயில் கட்டியிருக்கிறதாய்ச் சொன்னீங்களே?
ஆமா... துர்க்கை கோயில்.
அந்தக் கோயிலுக்குப் போவோம்.
ரோடு சரியாய் இருக்காதே...
ரோடு சரியா இல்லமாத்தான் எல்லாரும் போய்ட்டு வர்றாங்களா? அந்த சால்ஜாப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம். உங்களுக்கு சாமி கும்பிடறது. கோயிலுக்குப் போறது... அதெல்லாம் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். எனக்காக நீங்க இன்னைக்குக் கோயிலுக்கு வந்தே ஆகணும்.
உத்தரவு.
என்று கூறி வாயைப் பொத்தினான்.
காபியைக் குடிச்சுட்டு டேம் ஸைட்டுக்கு கிளம்புங்க! மத்தியான சாப்பாட்டை அமர்க்களமா தயார் செய்யப் போறேன். சரியா ஒரு மணிக்கெல்லாம் வந்துடுங்க.
ம்... ம்...
ராகினியை இழுத்து அணைத்து கன்னத்தில் மெல்ல முத்தமிட்டுவிட்டு ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டான் விவேகானந்தன்.
அணைக்கட்டை ஒட்டிய பகுதியில் இருந்த பொறியாளர் அலுவலகக் கட்டிடத்தின் முன்னால் ஸ்கூட்டரை நிறுத்தினான் விவேகானந்தன்.
ரோஸ்நிற போகன்வில்லா பூப்பந்தலுக்குக் கீழ் நின்றிருந்த அஸிஸ்டெண்ட் என்ஜினியர் சேவியர் ஓடி வந்தான்.
குட்மார்னிங் சார்...
குட்மார்னிங்! சி.ஈ. டவுனுக்குப் போயிட்டாரா?
காலையில ஆறுமணிக்கெல்லாம் போயிட்டார் சார்... மத்தியானத்குள்ளே திரும்பிடுவேன்னார்.
சரி ரிவர் இன்கம்மில் ப்ளோ எப்படியிருக்கு? நார்மலா, அதிகமாயிடுச்சா?
கொஞ்சம் அதிகமாயிருக்கு சார். பில்லூர் பக்கம் சுமாரா மழை பெய்ஞ்சிருக்கு...
வெதர் ரிப்போர்ட் ரிஸீவ் பண்ணீங்களா?
போன் செய்து கேட்டேன் சார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளே ரிப்போர்ட் தர்றதா சொன்னாங்க...
சோம்பேறிப் பசங்க...
விவேகானந்தன் எரிச்சலாய் முனகிக்கொண்டே போய் நாற்காலியில் சாய்ந்தான். மேஜையின் மேல் சி.ஈ. கையெழுத்தோடு ட்யூட்டி ஷெட்யூல் சார்ட் காற்றுக்கு பட படத்துக் கொண்டிருக்க... அதன் முதுகின் மேல் ஒரு கண்ணாடி பேப்பர் வெயிட் சவாரி செய்து கொண்டிருந்தது. அதை கைநீட்டி எடுக்க முயன்றான்.
டெலிபோன் கிணுகிணுத்தது.
ரிஸீவரை எடுத்தான்.
ஹலோ...
நான்தாங்க...
ராகினியின் குரல்.
மலர்ந்தான். என்ன ராகினி?
புறப்படறப்ப கேட்க மறந்துட்டேன்.
என்ன?
இன்னிக்கு மத்தியானம் என்ன அயிட்டம் பண்ணட்டும்?
உனக்கு பிடிச்சதை பண்ணேன்.
நோ... நோ... உங்க சாய்ஸ்தான் இதில் முக்கியம். ம்... அயிட்ட லிஸ்ட்டை சொல்லுங்க பார்க்கலாம்.
தக்காளி பிரியாணி, வெங்காய சட்னி, உருளைக்கிழங்கு பொடிமாஸ், கோதுமை பாயசம்...
போதுமா?
போதும்... போதும்...
சரியா ஒரு மணிக்கெல்லாம் வந்துடுங்க.
12.59-க்கு முன்னாடி இருப்பேன்.
குட் பாய்...
ஏய். ஏய். என்னது...?
ஸாரிங்க கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...! பழைய ஞாபகம். டிகிரி முடிஞ்சதும் கொஞ்ச நாள் ஒரு பள்ளிக்கூடத்துல டீச்சரா ஒர்க் பண்ணினேன். அந்த பழக்கதோஷம்தான்...! லேட் பண்ணாம ஒரு மணிக்கு வந்துடுங்க.
ராகினி ரிஸீவரை வைத்துவிட, விவேகானந்தனும் சிரித்துக் கொண்டே ரிஸீவரைச் சாத்தினான். மேஜை மேல் இருந்த வொர்க் ஷெட்யூல் சார்ட்டை எடுத்து அதைப் பார்வையிட்டபடியே கூப்பிட்டான்.
சேவியர்... டேம் சைட்டுக்குப் போலாமா?
நான் ரெடி ஸார்.
இன்னிக்கு மத்தியானம் உங்களுக்கு எங்கே சாப்பாடு?
வழக்கமான நாயர் மெஸ்ஸில்தான் ஸார்.
இன்னிக்கு நீங்க என் வீட்டுக்கு வர்றீங்க... சாப்பிடுறீங்க.
என்ன சார் விசேஷம்?
வீட்டுக்குப் போய் சாப்பிடும் போது சொல்றேன்...
சிரித்துக் கொண்டே சேவியரின் தோளில் தட்டினான் விவேகானந்தன்.
மதியம் சரியாய் ஒரு மணி.
ஸ்கூட்டரை வீட்டுக்கு முன்பாய் நிறுத்தி கீழே இறங்கிய விவேகானந்தன் ஆச்சரியப்பட்டான். ஸ்கூட்டர் சத்தம் கேட்டதுமே கதவருகே ஒரு பெரிய ரோஜாப்பூவாய் ஓடி வந்து நிற்கும் ராகினியைக் காணோம்.
சேவியரை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
வீடு அமைதியாய் இருந்தது.
ராகினி...!
குரல் கொடுத்தான்.
நிசப்தம்.
சமையலறைக்குள் நுழைந்து எட்டிப் பார்த்தான். ராகினியைக் காணோம். சமையல் நடந்ததற்கான அறிகுறியும் தெரியவில்லை.
ரா...கி...னி... ஈஈஈ
சற்று நீளமாய் குரல் கொடுத்துக் கொண்டே வீட்டைச் சுற்றி வந்தான். சேவியர் ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக, உங்க மனைவி எங்கேயாவது வெளியே போயிருக்கலாம் ஸார்
என்றான்.
அப்படி போகக்கூடியவன் அல்லவே...! பக்கத்து குவார்ட்டர்ஸ்களிலும் யாரும் கிடையாது. சமையலையும் முடிக்காமல்...
என்று கவலையாய்ப் பேசிக் கொண்டு போன விவேகாந்தனின் பார்வை மேஜையின் மேல் வைத்திருந்த கேஸ்ட் மேலும், கேஸ்ட்டுக்குக் கீழே செருகியிருந்த துண்டு பேப்பரின் மேலும் பாய்ந்தது.
வேகமாய்ப் போய் எடுத்தான். துண்டுக் காகிதத்தில் இரண்டே வரிகள், ராகினியின் கையெழுத்தில் தெரிந்தன.
அன்புக் கணவர்க்கு!
என் கடைசி வணக்கம், கேசட்டைப் போட்டுக் கேளுங்கள். விவரம் தெரியும். இப்படிக்கு உங்கள் ராகினி.
விவேகானந்தன் பதற்றமாகி அலமாரியில் இருந்த ரிக்கார்ட் ப்ளேயரைக் கொண்டு வந்து வைத்து கேசட்டை அதன் வாய்க்குக் கொடுத்து பட்டனைத் தட்டினான்.
இரண்டு
கேசட் சுழல ஆரம்பித்தது. அரை நிமிஷ நேரம் மவுனம் அனுஷ்டித்து விட்டு பின் குரலை வெளியிட்டது.
ராகினியின் குரல்.
என் அன்பான கணவர்க்கு வணக்கம். இன்றைக்கு நமக்குக் கல்யாணமாகி நூறாவது நாள். கல்யாணமான நாளிலிருந்து இன்று வரைக்கும் நீங்கள் என் மேல் செலுத்தி வரும் அன்பு அபரிமிதமானது. அந்த வானத்தை விட, அந்தக் கடலை விட, உண்மையில் எது பெரியது என்று கேட்டால் உங்களுடைய அன்பு என்றுதான் சொல்வேன். ஆனால் அந்த அன்புக்கு நான் உரியவளா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். காரணம் கேட்பீர்கள். அந்தக் காரணத்தை உங்களிடம் சொல்லி ஒரு பெரிய மனக்காயத்தை உண்டாக்க நான் விரும்பவில்லை... கல்யாணத்திற்கு முன்பு உங்களைத் தனியே சந்தித்து காரணத்தைச் சொல்லி கல்யாணத்தை நிறுத்த இரண்டு முறை முயற்சி செய்தேன். முடியவில்லை. ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு உங்களுக்கு கழுத்தை நீட்டினேன்...
டேப் அந்த இடத்தில் லேசாய் மக்கர் செய்துவிட்டு மீண்டும் குரலை வெளியிட்டது.
கல்யாணத்திற்குப் பிறகு நீங்கள் என்னிடம் காட்டிய அன்பும், பேசிய பிரியமான வார்த்தைகளும் என் இதயத்தை சந்தோஷப்படுத்துவதற்குப் பதிலாக ரணப்படுத்தின. அந்த ரணத்திற்குக் காரணம் என்னுடைய குற்ற உணர்வுதான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் மனசாட்சி
உன்னுடைய கணவர் காட்டுகிற அந்த அன்புக்கும், பாசத்திற்கும் நீ தகுதியானவள்தானா? என்று கேள்வி கேட்டு என்னை மடக்கத் தவறியதில்லை. அந்த மனசாட்சியின் குத்தலை எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? அதனால்தான் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அந்த முடிவு வேறு ஒன்றுமில்லை. உங்களை விட்டு நான் நிரந்தரமாய்ப் பிரிகிற முடிவுதான். உங்களோடு சில காலம் வாழ்ந்த அந்த புனிதமான வீட்டில் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. வெளியே போகிறேன். விரைவில் என் உடல் உங்களுக்கு கிடைக்கும். தயவுசெய்து என் உடலைப் பார்த்து அழாதீர்கள். என் முகம் உங்களுக்கு அருவெறுப்பைத் தரவேண்டும் என்பதற்காகவே நான் தீக்குளித்து சாகப்போகிறேன். என் இறப்புக்காக கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்காமல் என்னை அடியோடு மறந்து விட்டு வேறு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ளுங்கள். சந்தோஷமாய் வாழுங்கள். உங்களைக் கடைசி முறையாக வணங்கி விடைபெறும் ராகினி.
அதற்குப் பின் கேசட் மவுனமாய் சுழல ஆரம்பித்து பின் நின்றது. விவேகானந்தன் தளர்ந்து போய் அருகிலிருந்த நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தான். சேவியர் பிரமித்துப்