Nithyavin Nimishangal
By Rajeshkumar
4.5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nithyavin Nimishangal
Related ebooks
Illavasam Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsNitthiyavin Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Thigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Nilavai Thedum Sooriyagandhigal Rating: 5 out of 5 stars5/5Matroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Enakku Naane Pagaiyaanen and Maranam Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsAnu Oru Aacharyam! Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pakalum Rating: 0 out of 5 stars0 ratingsUnnudaiya GUNkalukku Mattum Rating: 0 out of 5 stars0 ratingsXYZ Murders Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Karaikku Varatha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Avizha Marukkum Arumbugal Rating: 5 out of 5 stars5/5Yaaro Paadiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsKuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5Sorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Illatha Nanthavanam Rating: 0 out of 5 stars0 ratings25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsMiss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Un Vasamadi Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Avargal Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Nithyavin Nimishangal
2 ratings0 reviews
Book preview
Nithyavin Nimishangal - Rajeshkumar
23
1
சென்னை உயர்நீதி மன்றத்திற்கு முன்னால் - அவன் ஆட்டோவில் வந்து இறங்கிக்கொண்ட போது கறுப்புக் கோட்டுகளோடு இருந்த வக்கீல்களும், கண்களில் கவலைக் கோட்டிங்குகளோடு இருந்த கட்சிக்காரர்களும் கோர்ட் கேண்ட்டீனில் மிக்ஸர் - காராபூந்தி ஊறிய தயிர் வடையை சாப்பிட்டு, காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
மரத்தடிகளில் நின்றிருந்த போலீஸ்காரர்கள் கை விலங்கு மாட்டிய கைதிகளிடம் சிநேகத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள். சீனியர் வக்கீல்களுக்குப் பின்னால் ஜூனியர் வக்கீல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, வக்கீல் குமாஸ்தாக்கள் கட்சிக்காரர்களை மிரட்டி பணம் கறந்து கொண்டிருந்தார்கள். சேம்பர்களுக்கு வெளியே இருந்த வராந்தாக்களில் வேர்க்கடலை, பட்டாணியிலிருந்து கோர்ட் ஸ்டாம்ப்வரை எல்லாமே அமோக விற்பனையில் இருந்தது.
ஆட்டோவில் வந்து இறங்கிய நம்ம ஆள் ஒரு இளைஞன். புஷ்டியான தேகக்கட்டு. முக்கால் ரகுவரன் உயரம். சதைப்பிடிப்பான முகம், தலைகொள்ளாத கேசம். நல்ல வெளுப்பில் பேன்சர்ட். வலது கையில் பெப்பர் மிண்ட் நிற ஃப்ரீப் கேஸ். நடந்தான்.
அரையிருட்டான கோர்ட் வராந்தாக்களில் திட்டுத் திட்டாய் நின்றிருந்த கும்பல்களுக்கு மத்தியில் யோசித்து யோசித்து போனான். சம்பாஷணைகள் காதில் பட்டு நழுவின.
அய்யா! வக்கீலய்யா...! எம் மகனுக்கு கோழை மனசுங்க... அவன் கொலையெல்லாம் பண்ண மாட்டாங்க... நீங்கதான் ஜட்ஜூகிட்ட சொல்லி... அவனை வெளியே கொண்டாரணும்...
ஒரு பெண் தலைவிரி கோலமாய் கதற -
வக்கீல் ஸார்! இன்னும் நாலஞ்சு வாய்தா வாங்குங்க. அவன் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடந்து நடந்தே சாகணும்...
ஒரு கட்சிக்காரர் வன்மமாய் சொல்ல -
ஏண்டா... பொண்டாட்டி எவன்கிட்டேயோ படுத்தாள்ங்கிற கோபத்துல் அவளை ரெண்டு துண்டா வெட்டிப்போட்டுட்டு... இப்ப ஏண்டா அழறே...? அந்தக் கழுதை எங்கேயோ மேயட்டும்னு விட்டுட்டு... நீ ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தியிருக்கலாமில்லையா...?
போலீஸ்காரர் ஒருவர் ஒரு கிராமத்து இளைஞனை சீண்டிக் கொண்டிருக்க -
நம்ம ஆள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேகமாய் நடந்தான். பார் அஸோசியேஷனுக்குப் பக்கத்தில் வந்த போது எதிரே வந்த ஒரு வக்கீலை நிறுத்தினான்.
எக்ஸ்க்யூஸ்மீ...
எஸ்...
ஃபோர்ட்டீண்த் சேம்பர் எங்கே...?
நெக்ஸ்ட் பில்டிங். செக்கண்ட் ஃப்ளோர்...
பப்ளிக் பிராசிகியூட்டர் பூவலிங்கம் அங்கதானே இருப்பார்...?
அவர் யோசித்து ஆமா...
என்றார்.
மந்திரி மகனை கொலை பண்ண... முயற்சித்ததாய்... கைது செய்த மூணு பேரை இன்னிக்குத்தானே கோர்ட்ல ஆஜர் பண்ணப் போறாங்க...?
ஆமா...
கேஸை நடத்தப் போற ஜட்ஜ் யாரு...?
மோகனசுந்தரம்...
- சொன்னவர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவனை ஏறிட்டார்.
எதுக்காக இதையெல்லாம் கேக்கறீங்க...?
ஸார்... அந்த கேஸ் விஷயமா... பப்ளிக் பிராசிக் யூட்டரையும், ஜட்ஜையும் நான் நேர்ல சந்திச்சு பேசணும்... முடியுமா...?
என்ன விஷயம்...?
அதை அவங்கிட்டதான் சொல்லணும்
இந்நேரம் அவங்க சேம்பர்ல இருப்பாங்க... நீங்க அந்த சேம்பருக்குப்போனா... கேஸை டீல் பண்ற இன்ஸ்பெக்டர் கதிரேசன் வெளியில ஃப்ரீயா இருப்பார். அவர்கிட்ட விஷயத்தை சொல்லுங்க. ஏற்பாடு பண்ணுவார்.
தேங்க்யூ ஸார்...
அவன் நடந்தான்.
கட்டிடத்தின் கீழ்த்தளத்துக்கு வந்து அடுத்த கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு உயர்ந்தான். வராந்தாவில் நடந்தபோது சேம்பர்கள் வரிசையாய் வந்தன. ஒவ்வொரு சேம்பர்க்கு முன்னாலும் சின்னச் சின்ன கும்பல். ஆங்கிலத்தில் வக்கீல்கள் நீளமாய் பேசிக் கொண்டிருக்க உயரத்தில் உட்கார்ந்திருந்த ஜட்ஜுகள் கன்னத்தில் கைவைத்து உன்னிப்பாய் கேட்டார்கள். பதினான்காவது சேம்பர்க்கு முன்னால் சற்று அதிகப் படியான கூட்டம். பார்வையாளரின் பகுதி நிரம்பி இருந்தது. பப்ளிக் பிராசிக்யூட்டர் பூவலிங்கம் ஆவேசமான வாக்குவாதத்தில் இருந்தார்.
கல்லூரிக்கு போய்க்கொண்டு இருந்த அமைச்சர் மகன் இளவழகுவை குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரஞ்சித், திவாகர், கோபிநாத் மூன்று பேரும் தனியாய் மடக்கி அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்கள். இளவழகு அவர்களோடு போராடியதில் சொற்பமான ரத்தக்காயங்களோடு தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருபத்தோரு வயதான இளவழகுவை அரசியல் விரோத காரணத்துக்காக கொலை செய்ய முயற்சித்த இவர்களை ஜாமீனில் விடுவது... அபாயகரமானது. எனவே அவர்களை மேலும் பதினைந்து நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டார் அவர்கள் உத்தரவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
பப்ளிக் பிராசிகியூட்டர் பூவலிங்கம் வியர்வை வழியும் முகத்தை துடைத்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகியிருந்த வக்கீல் சக்ரவர்த்தி தன் கறுப்பு கவுனை இழுத்து விட்டுக்கொண்டு எழுந்தார்.
யுவர் ஆனர்! அமைச்சர் மகன் இளவழகுவை அவர் கல்லூரிக்கு போகும் பொழுது தனியாய் மடக்கி கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுவது கட்டுக்கதையாகும். இளவழகுவுக்கும், அவருடைய நண்பர் ஒருவருக்கும் ஒரு பெண் சம்பந்தமாய் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பில் போய் முடிந்திருக்கிறது. இந்த கைகலப்பை விலக்குவதற்காக எனது கட்சிக் காரர்களான ரஞ்சித், திவாகர், கோபிநாத் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இளவழகு தன்னிடமிருந்த கத்தியை உருவி இவர்களைத் தாக்க முயல - இவர்கள் கத்தியைப் பறித்திருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் இளவழகுவிற்கு ரத்தக் காயங்கள் சொற்பமாக ஏற்பட்டுள்ளன. இளவழகு சம்பந்தப்பட்ட அந்தப் பெண் விவகாரத்தை அமுக்குவதற்காகவே போலீஸாரால் ரஞ்சித், திவாகர், கோபிநாத் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு கொலை செய்ய முயற்சித்ததாய் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். இளவழகு அமைச்சர் மகன் என்பதால் போலீஸார் அவர்க்கு சாதகமாக விசுவாசமாக செயல்பட்டிருக்கிறார்கள். எனவே அபாண்ட பழி சுமத்தப்பட்ட எனது கட்சிக்காரர்களை ஜாமீனில் விடுதலை செய்யும்படி கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பேசிவிட்டு வக்கீல் சக்ரவர்த்தி உட்கார்ந்ததும் கோர்ட்டில் சில வினாடிகளுக்கு நிசப்தம் நிலவியது. எதையோ எழுதிக் கொண்டிருந்த நீதிபதி நிமிர்ந்து குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த மூன்று பேர்களையும் பார்த்தார்.
முதலாமவனைக் கேட்டார்.
உன்பேரென்ன...?
ரஞ்சித்...
உன் மேல் சாட்டப்பட்டிருக்கும் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?
இல்லை...
இரண்டாமவனைப்பார்த்தார்.
உன்பேரென்ன?
திவாகர்...
குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா...?
இல்லை...
மூன்றாவது ஆள் கோபிநாத்தும் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்ததும் நீதிபதி தன் முகத்தில் இருந்த கண்ணாடியை கழற்றிவிட்டு வேறு கண்ணாடியை மாட்டிக் கொண்டு பேப்பரை உயர்த்திக் கொண்டு படித்தார்...
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூவரும் இளவழகுவை கொலை செய்ய முயற்சித்ததாய் – அரசு தரப்பு வக்கீல் தகுந்த காரண காரியங்களோடு விளக்கியதை இந்த கோர்ட் ஏற்றுக் கொண்டு கொலை முயற்சி நடந்திருக்கும் என்று சந்தேகப்படுவதால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறது. மேலும்... குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் வெளியே விடுவதால் அவர்கள் சாட்சிகளை கலைக்க முயற்சி செய்யக்கூடும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படும் வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொண்டு அவர்களை மேற்கொண்டு விசாரணை செய்து உண்மைகளை வெளியே கொண்டு வரும்படி கோர்ட் உத்தரவிடுகிறது.
நீதிபதி மோகனசுந்தரம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு எழமுயன்ற அதே வினாடி - பார்வையாளர் பகுதியிலிருந்து நம் ஆள் குரல் கொடுத்தான்.
இது அநீதி...
கோர்ட் கலகலத்துப் போய் அவன் பக்கமாய் திரும்பியது. அவன் குரலை உயர்த்தினான்.
கனம் கோர்ட்டார் அவர்களே! நீங்கள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சரியில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது...
நீதிபதி அவனைப்பார்த்தார். ஆதாரங்கள் இருந்தால் அதை முறைப்படி போலீசாரிடம் தெரிவித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இப்படி தன்னிச்சையாக கோர்ட்டில் நின்றுகொண்டு கத்துவது சரியில்லை
சொல்லிவிட்டு நகர முயன்றவரை நோக்கி மறுபடியும் கத்தினான் அவன்.
நில்லுங்கள் யுவர் ஆனர்! விசாரணை தொடங்குவதற்கு முன்பு அதை கோர்ட்டில் தாக்கல் செய்யவே ஓடோடி வந்தேன்.
நீதிபதி மோகனசுந்தரம் எரிச்சலாய்க் கேட்டார்.
என்ன ஆதாரம்...?
அவன் தன் ப்ரீப்கேஸைத் திறந்தான். உள்ளே கையை நுழைத்து - அந்த மெஷின்கன்னை விருட்டென்று எடுத்துக்கொண்டு ஒரு மேஜையின்மேல் தாவி நின்றான்.
கோர்ட் 'ஏஏஏய்ய்...
என்று பரபரத்துக்கொண்டிருக்கும் போதே சுட்டான். - முதலில் நீதிபதியை நோக்கி -
மெஷின்கன் டக டக டக டக வென்று சிக்கனமாய் சிரித்து தோட்டாக்களை அனுப்ப உயர் மேடையில் நின்றிருந்த நீதிபதி மோகனசுந்தரம் தன் ரத்தத்தை நாலா திசையிலும் தெறித்துக் கொண்டு விதவிதமாய் துள்ளி ஆசனத்துக்கு கீழே மல்லாந்தார். - கோர்ட் அந்த பயங்கரத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் அவன் மெஷின்கன்னை பப்ளிக் பிராசிகியூட்டர் பூவலிங்கத்தின் மேல் திருப்பினான். அது இன்னொரு தடவை சிரிக்க, பூவலிங்கம் தோட்டாக்களிடம் வசமாய் சிக்கி கறுப்பு கவுன் பூராவும் ரத்தத்தை வழியவிட்டபடி ஒரு நாற்காலியை உருட்டிக் கொண்டு சாய்ந்தார். - ஜனங்கள் சிதறி ஓட இன்ஸ்பெக்டர் ஒருவர் சாட்சிக் கூண்டுக்குப் பக்கத்திலிருந்து ரிவால்வரை உயர்த்திக் கொண்டு ஓடி வர அவன் மெஷின் கன்னை அவரை நோக்கித்தி ருப்பினான்.
இன்ஸ்பெக்டர் ரத்தமாய் சுருண்டார். அவன் வீறிட்டான். யாரும் பக்கத்துல வராதீங்க... வந்தா சுடுவேன்... இளவழகு கேஸை எந்த பப்ளிக் பிராசிகியூட்டரும் ஏற்று நடத்தக்கூடாது, எந்த நீதிபதியும் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது... அப்படி யாராவது வந்தா அவங்களுக்கும் இந்த கதிதான்...
சேம்பரில் இருந்த மொத்த ஜனமும் சிதறி ஓடியது அவன் சாட்சிக் கூண்டில் நின்றிருந்த மூன்று பேரிடமும் ஓடினான். -
'எம் பின்னாடியே ஓடி வாங்க..."
மதன், உன்னோட காரியம் அற்புதமானது. நீ இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையோடு வருவேன்னு நாங்க கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கலை...
அதைப்பத்தி அப்புறமா பேசிக்கலாம்... மொதல்ல எம் பின்னாடி ஓடி வாங்க...
நான்கு பேரும் ஓடினார்கள்.
எல்லா சேம்பர்களிலும் இருந்த ஜனங்கள், போலீசார் திக்கித்துப் போய் நின்றிருக்க வராந்தாவில் ஓடினார்கள். எதிர்ப்பட்ட வக்கீல்களை உதைத்துத் தள்ளினார்கள். மதன் அடிக்கடி மேற்கூரையை நோக்கி மெஷின் கன்னால் சுட்டான். அது சிமெண்டையும் காரையையும் உதிர்த்தது.
ரஞ்சித்... திவாகர். கோபிநாத்... இந்தப்பக்கம் வாங்க. என்கூட ஒட்டியே ஓடி வாங்க.
படிகளில் சரிந்தார்கள். எதிர்ப்பட்ட ஒரு கிழட்டு வக்கீல் கேஸ் கட்டுகளோடு உருண்டார். மடக்க வந்த இரண்டு போலீசார் வயிற்றில் உதைபட்டார்கள். நான்கு பேரும் வாயில் மூச்சிரைத்துக் கொண்டு கோர்ட்டின் பின்பக்க வாசலில் நின்றிருந்த வேனை நோக்கி ஓடினார்கள். அதே வினாடி பின்பக்க கேட்டின் வழியாக அந்த ரத்த சிவப்பான மாருதி கார் வேகமாய் உள்ளே நுழைந்தது.
கையில் மெஷின் கன்னோடு பிரதானமாய் முன்னால் நின்று