Kannathu Muthamondru
5/5
()
About this ebook
நான் வத்சலா ராகவன். நான் ஒரு ஆசிரியை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கணக்கு டீச்சர். அதற்கு மேல் ஒரு ரசிகை. இனிமையான, மென்மையான விஷயங்களுக்கு ஒரு பெரிய ரசிகை. இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன் நான். சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய எனது எழுத்து பயணத்தில் சிறுகதைகள் நாவல்கள் என சில அடிகள் நடந்திருக்கிறேன்.
இந்த பயணத்தில் இப்போது புஸ்தகாவுடன் இணைவதில், புத்தகமாக வெளிவந்திருக்கும் என் நாவல்கள் இப்போது மின்நூல்கள் வடிவில் வெளி வரப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Read more from Vathsala Raghavan
Thoothu Se(So)llaayo Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsUllam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Iru Kannilum Un Gnabagam… Rating: 4 out of 5 stars4/5Puthagam Moodiya Mayiliragu Rating: 0 out of 5 stars0 ratingsPoovile Then Thedavaa?! Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram Rating: 4 out of 5 stars4/5Vaana'madhu' Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Priyangaludan Mukilan Rating: 5 out of 5 stars5/5Tamilnadu Express Rating: 0 out of 5 stars0 ratingsManam Thirudiya Malargal Rating: 4 out of 5 stars4/5Jathimalli Poocharam Rating: 0 out of 5 stars0 ratingsYamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Manathiley Oru Paattu Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Mazhaithuligal Rating: 3 out of 5 stars3/5Vivek Srinivasan!!! Rating: 5 out of 5 stars5/5Vaarthai Thavarivitten Kannamma Rating: 4 out of 5 stars4/5
Related to Kannathu Muthamondru
Related ebooks
Kaadhale...! Kaadhale...!! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsRajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5En Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Chinna Chinna Mazhaithuligal Rating: 3 out of 5 stars3/5Engey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Anbu Mozhi Ketuvittal…! Rating: 4 out of 5 stars4/5Engeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Karuvaraiyil Rating: 4 out of 5 stars4/5Kaadhaladum Manathu Rating: 3 out of 5 stars3/5Nenjirukkum Varaikkum! Rating: 1 out of 5 stars1/5Yamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Vivek Srinivasan!!! Rating: 5 out of 5 stars5/5En Sorgam Nee Penne Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Uyir Thotta Urave! Rating: 2 out of 5 stars2/5Senbaga Poovum, Saaralum... Rating: 2 out of 5 stars2/5Kavitha Oru Kavidhai Rating: 5 out of 5 stars5/5Nishakanthi Rating: 5 out of 5 stars5/5Ullam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Aaruyire Mannipaaya Rating: 0 out of 5 stars0 ratingsNenjam Irandin Sangamam sudha Rating: 1 out of 5 stars1/5Manathukkul Aarathanai Rating: 4 out of 5 stars4/5Kanintha Mana Deepangalai! Part - 2 Rating: 5 out of 5 stars5/5Nilavu Thoongum Neram Rating: 4 out of 5 stars4/5Maiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kannathu Muthamondru
3 ratings0 reviews
Book preview
Kannathu Muthamondru - Vathsala Raghavan
http://www.pustaka.co.in
கன்னத்து முத்தமொன்று
Kannathu Muthamondru
Author:
வத்சலா ராகவன்
Vathsala Raghavan
For more books
http://www.pustaka.co.in/home/author/vathsala-raghavan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
'காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று'
பாரதி சொன்ன அந்த கன்னத்து முத்தம். இதை வைத்து நான் எழுதிய ரொம்பவும் அழுத்தம் இல்லாத, அதிக வருத்தம் கண்ணீர் இல்லாத, மென்மையான காதல் கதைதான் இது.. அதனோடு சேர்ந்து கொஞ்சம் கிரிக்கெட்....... ஹீரோ கிரிக்கெட் வீரர் என்பதால்!!!
படித்து மகிழுங்கள் தோழமைகளே
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
1
ஹர்....ரிஷ்!!! ஹர்ரி... ஷ்!!!! ஹர்ரி... ஷ்!!! மொத்த கூட்டமும் கூவிக்கொண்டிருந்தது
அவன் ஹரிஷ் சுவாமிநாதன்!!!
ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டான் அவன். நின்ற இடத்திலிருந்து சில அடிகள் நடந்து திரும்பினான்.
நெடுநெடு உயரமும் ஒற்றை பார்வையில் பல நூறு விஷயங்களை கிரஹித்து கொள்ளும் தீர்கமான பார்வையும் உச்சரிக்கும் வார்த்தைகளில் நிறையவே நிதானமும், பார்ப்பவர்கள் மனதில் ஒரு சின்ன மரியாதையை தோற்றுவிக்கும் கம்பீரமான நடையும் அவனது அடையாளங்கள்.
அவன் அருகில் ஓடி வந்து அவனை தோளோடு அணைத்து சிரித்தான் நண்பன் ரகு. ரகுராம் சுப்ரமணியன்!!! கண் சிமிட்டி கட்டை விரல் உயர்த்தினான்.
'சும்மா அதிருது. கீப் ராக்கிங்..' என்றபடி தட்டிக்கொடுத்தான் ஹரிஷை.
ஹரிஷும் அணைத்துக்கொண்டான் நண்பனை. ரகுவுடன் பழக்கம் ஏற்பட்டது இப்போது சில நாட்களாகத்தான். ஆனால் பார்த்தவுடன் ஒருவருக்கொருவர் மனதால் நெருங்கிவிட்டது இவனுக்கே சற்று ஆச்சர்யம்தான்.
அரங்கமே தவிப்பின் எல்லையில் இருக்க நிதானத்தின் மொத்த உருவமாக நின்றிருந்தான் ஹரிஷ். பொதுவாக பதற்றம் என்ற ஒன்றை அவனிடம் காண முடியாது. அவன் கடந்து வந்த பாதைகள், அவன் அடைந்த தோல்விகள் எல்லாமே அவனுக்கு நிதானத்தை கற்றுக்கொடுத்திருந்தன.
அந்த நிதானமே அவனை இன்று செலுத்திக்கொண்டிருக்கிறது. மொத்த தேசமும் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு மேலாக அவனை செலுத்திக்கொண்டிருக்கிறது அந்த பூங்கொத்து. ஆம் அவனது பூங்கொத்து!!!
அனுராதா!!!
அவளும், அவள் அவன் மீது கொண்டிருக்கும் அந்த நம்பிக்கையும், நேசமும் அவளே அறியாமல் அவள் அவனுக்கு பரிசளித்த அந்த பூங்கொத்தும் எல்லாமே அவனுக்குள் உற்சாக மழையை பொழிந்துக்கொண்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வு நினைக்கும் போதே அவனுக்குள் பல நூறு உணர்வுகள்.
அன்று கோவையில் இருந்தான் அவன். நேரம் இரவு எட்டரையை தொட்டிருந்தது. வீடு முழுவதும் நிசப்தம். ஹாலில் அப்பா, அண்ணன், அண்ணி என அனைவரும் அமர்ந்திருந்தும் நிசப்தம். அப்போது ஒலித்தது அவன் கைப்பேசி.
'சொல்லுடா..'
'என்னடா எல்லாம் எடுத்து வெச்சிட்டு கிளம்பிட்டியா???' அழைத்து கேட்டவன் அவனது நண்பன் ரகு.
'எஸ். அல்மோஸ்ட் ரெடி..' சொன்னான் இவன்.
'எதிலே கிளம்பறே...'
'பஸ்லே...'
'பச்...ஏன்டா.. கார்லே வரவேண்டியதுதானே. வீட்டிலேதான் அத்தனை கார் இருக்கில்ல..'
'அதெல்லாம் எங்க அப்பாவோடது. என்னோடது இல்லை.' இவன் சற்றே அழுத்தி சொல்ல ஒரு நொடி விழி நிமிர்த்தி பார்த்த அப்பா மறுபடியும் லேப் டாப்பில் ஆழ்ந்தார்.
மறுமுனை கொஞ்சம் மௌனமானது. ஹரிஷின் நடவடிக்கைகளை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிகின்றன ரகுவுக்கு.
'சரி... எதிலேயோ வந்து சேர்...' சொல்லி முடித்தான் ரகு.
அப்பா சுவாமிநாதன் பெரிய தொழிலதிபர். இதில் எல்லாம் அவன் கால் வைப்பதில் பெரிய விருப்பம் இல்லை அவருக்கு..
முன்பு அவனுக்கு வந்த தோல்விகள், அவமானங்கள் அவனை விட அவரையே அதிகம் பாதித்தது என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு அவனுடன் முகம் பார்த்து பேசுவதுகூட இல்லை. அதில் நிறையவே நியாயமும் இருக்கிறது.
இப்போது இந்த வாய்ப்பு கிடைத்த பிறகு வெளிப்படையாக எதுவும் சொல்லாவிட்டாலும் கொஞ்சம் ரகசிய புன்னகைகள் மலர்கின்றன அவர் முகத்தில்.
இவன் அழைப்பை துண்டித்த மறுநொடி நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒலித்தது அந்த குரல்.
'சித்....த.....ப்.....பா..'
ஓடி வந்து அவன் காலை கட்டிக்கொண்டாள் அவனது அண்ணன் மகள் ஐந்து வயது அனுராதா. அண்ணன், அண்ணியின் முகத்தில் கூட நிறைவாய் ஒரு புன்னகை.
'அனு பாப்பா' மண்டியிட்டான் இவன். சட்டென இவன் கன்னத்தில் விழுந்தது முத்தம்.
'தேங்க்யூ அனு பாப்பா' அள்ளிக்கொண்டான் குழந்தையை. அந்த முத்தத்தின் ஈரம் அவனை எங்கோ கொண்டு சென்றது.
'அனுராதா' தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் ஒரு முறை. சில்லென்ற பனி மழையில் நனைந்த உணர்வு அவனுக்கு. அந்த பெயர் அவனது மனதின் அடி ஆழத்தில் பதிந்த பெயர். அவனே அறியாமல் அதே பெயரையே குழந்தைக்கும் வைத்திருந்தான் அண்ணன்.
ஏழு எட்டு வருடங்கள் இருக்குமா அவளை பார்த்து???' அவன் மனம் கணக்கு போட்டது. இப்போதெல்லாம் அவள் நினைவு அடிக்கடி வந்து வந்து போகிறது.
சில நொடிகளில் ஏதேதோ பழைய நினைவுகளில் விழுந்து எழுந்தான் அவன். சின்ன புன்னகையின் பின்னே தனது உணர்வுகளை மறைத்து விட்டு, குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்தான் .
'சித்தப்பா... கிளம்பட்டுமா???' வர டூ மந்த்ஸ் ஆகும்.
'டூ மன்த்ஸ்ஆ??? இரண்டு விரல் காட்டி கேட்டது குழந்தை.
'எஸ்.. பேபி.. வரும்போது உனக்கு பிடிச்சது எல்லாமே வாங்கிட்டு வரேன் சரியா..' குழந்தையின் நெற்றி முட்டினான். 'நீ தாத்தா, அப்பா, அம்மா எல்லார்கிட்டேயும் சொல்லிடறியா சித்தப்பா கிளம்பறாங்கன்னு..' என்றபடி குழந்தையை இறக்கி விட்டான் அவன்.
அது ஓடிச்சென்றது அவனது தந்தையிடம் 'தாத்தா.. சித்தப்பா கிளம்பறாங்க..'
'ம்...' என்று ஒரு முறை குழந்தையை பார்த்து சொல்லிவிட்டு மறுபடியும் லேப்டாப்பில் மூழ்கினார். இல்லை இல்லை மூழ்குவது போல் நடித்துக்கொண்டிருந்தார். அது அவனுக்கும் தெரியும்.
பூஜை அறையின் முன்னால் சென்று சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தான். அந்த மரியாதை இறைவனுக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் சேர்த்துத்தான். இது அப்பாவுக்கும் தெரியும்.
'அனு..' அப்பா அழைத்தார் குழந்தையை. சித்தப்பா மோதிரம் போட்டிருக்கானா பாரு.' அவர் சொல்ல ரகசியமாய் ஒரு புன்னகை ஹரிஷின் இதழ்களுக்குள்.
'மோதிரம் போட்டிருக்கானா பாரு.' இதுதான் அவர் எப்போதும் அவனுக்கு கொடுக்கும் ஆசீர்வாதம். சில வருடங்களுக்கு முன்னால் ஒரு பிறந்தநாளைக்கு வாங்கி அவரே அவனுக்கு அணிவித்த வைர மோதிரம் அது.
'அவர் அவனுடன் இருக்கமாட்டாரம். பேச மாட்டாராம். அவர் வாங்கிக்கொடுத்த மோதிரம் மட்டும் அவனுடன் இருக்க வேண்டுமாம்'. சிரித்துக்கொண்டான் மெல்லமாய். அதற்குள் வாசலில் டாக்சி வந்திருந்தது.
'சித்தப்பா மோதிரம் போட்டிருக்கியா சித்தப்பா..'
'மோதிரமெல்லாம் போடலைன்னு சொல்லிடு செல்லம். அது எனக்கு பிடிக்கலை. இனிமே போட மாட்டேன். நான் கிளம்பறேன்.' சொல்லிவிட்டு பைகளை எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.
அவன் அந்த மோதிரத்தை அணிந்திருக்கிறான் என அவருக்கு நன்றாகவே தெரியும். அது அவருக்கு தெரியுமென அறியாதவனும் இல்லை இவன்.
ஜெயித்துவிடுவானா என் மகன்? யோசித்தபடியே அமர்ந்திருந்தார் அப்பா.
கோவை பேருந்து நிறுத்தத்தில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தான் அவன். அங்கே இருந்த ஒரு சின்ன டீக்கடையில் ஒரு டீயை குடித்துவிட்டு, இரண்டு பிஸ்கட்டுகளை வாங்கி சுவைத்தபடியே நடந்துகொண்டிருந்தான் அவன்.
ஒரு வார தாடியும், மீசையும் கண்களை மறைக்கும் ரேபேன் கண்ணாடியும் என இருந்த அவனை யாருக்கும் சட்டென அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. இப்போதையும் விட இன்னும் சில நாட்களில் அவனை இன்னும் அதிகமான பேருக்கு அடையாளம் தெரிய வாய்ப்பிருக்கிறது.
யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாத மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதனோடு கொஞ்சம் பொறுப்பும் கூட!
நிறைய பேர் இவனுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அதிர்ஷ்டம் என்று கூட சொல்வார்கள். வாழ்க்கையில் அவன் சந்தித்த தோல்விகளைத்தாண்டி, அவமானங்களை தாண்டி இதோ அவன் கை தொட்டிருக்கிறது அந்த வாய்ப்பு. ஒரு வாசல் மூடி இறைவன் திறந்துவிட்ட இன்னொரு வாசல் இது என இவனுக்கு மட்டுமே தெரியும்.
என்னை பற்றி, எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பற்றி அனுராதாவுக்கு தெரியுமா? அவளுக்கு என் நினைவாவது இருக்குமா? யோசித்தபடியே நடந்தான் ஹரிஷ்.
அவன் வாழ்க்கையில் சில நாட்கள் வந்து போன வெண்பனி சாரல் அவள். ஆனால் அப்போதெல்லாம் இவனுக்கு அவள் மீது நட்பு, காதல் போன்ற எந்த உணர்வும் தோன்றியதில்லைதான். சரியாக சொல்ல வேண்டுமானால் அவளை கத்தரித்து தள்ளி நிறுத்தவே முயன்றிருக்கிறான் இவன்.
அவன் நினைவுகளுக்கு சொந்தமான அனுராதா பல நூறு கிலோமீட்டர்கள் கடந்து, நான்கு கடல் தாண்டி, மூன்று மலைகள் தாண்டி எல்லாம் இருந்துவிடவில்லை. இதோ அந்த பேருந்து நிறுத்தத்தின் உள்ளேயே இருக்கிறாள் என்பதை அவன்தான் அறிந்திருக்கவில்லை.
அவனை நோக்கியே நடந்து வந்துக்கொண்டிருந்தாள் அவள். கையில் மூன்று நான்கு பைகள். அதனோடு ஒரு பூங்கொத்து என எல்லாவற்றையும் சுமந்துக்கொண்டு தனது தோழியிடம் அளவளாவிக்கொண்டே நடந்து வந்துக்கொண்டிருந்தாள் அவள்
வந்து நின்றது அந்த குளிர்சாதன வோல்வோ பேருந்து. ஏறி தனது இருக்கையை தேடி அமர்ந்தான். கன்னத்தில் குழந்தை அனுராதா கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னமும் மிச்சமிருப்பதை போல் ஒரு உணர்வு. இவனது அனுராதாவும் மனதைவிட்டு இறங்க மறுத்தாள்.
'இவள் ஏன் இப்படி படுத்துகிறாள் இன்று?' சொல்லிக்கொண்டே இரண்டு கைகளையும் தேய்த்து விட்டுக்கொண்டான்.
எங்கே இருப்பாள் அவள்? அவளுக்கு என்னை நினைவிருக்குமா? இந்த கேள்வியே அவனை குடைந்தது.
சரியாய் அந்த நொடியில் அவன் இருக்கையின் அருகே வந்து நின்றாள் அவள்!!! அனுராதா!!!
இதுவரை கண்ணீர் என்பதை அறிந்திராத அழகு கண்களும், அழகான புன்னகை குடிக்கொண்டிருக்கும் இதழ்களும் சராசரிக்கும் சற்றே அதிகமான உயரமும் அவளது அடையாளங்கள்.
அதிர்ந்து நிமிர்ந்தான் அவன். மூட மறந்தன அவன் இமைகள். மை காட்' அவனையும் அறியாமல் உச்சரித்தன அவன் உதடுகள்.
'அவள்தானே?' என்னவள்தானே ஆம் அவளேதான்!!!'. அது எப்படி நினைத்தவுடன் வந்து நிற்கிறாள்?
அவன் தாடியும், மீசையும் கண்ணாடியுமாய் இருந்தவனை கண்டிப்பாய் அடையாளம் தெரியவில்லை அவளுக்கு. மூன்று பேர் அமரக்கூடிய அந்த வரிசை இருக்கையில் ஜன்னலின் ஓரத்தில் அமார்ந்திருந்தான் இவன்.
'ஹேய் எவனோ உட்கார்ந்திருக்கான். இப்போ என்ன செய்ய? கிசுகிசுத்தாள் அவள் தோழி. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்துக்கொண்டான் ஹரிஷ்.
'ஸோ... வாட்... இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா??? நான் உட்கார்ந்துக்கறேன். பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..' சொல்லிவிட்டு அவனுக்கு அருகில் வந்து அமர்ந்துக்கொண்டாள் அனுராதா.
'வந்து அமர்ந்திருக்கிறாளா? என்னருகில் வந்து அமர்ந்திருக்கிறாளா என்னவள்? இது நிஜமா கனவா? கண் திறந்தால் கனவு மறைந்துவிடுமா? படபடத்தது அவனுள்ளே.
அவளது பெர்ஃபியூம் வாசம் இதமாய் அவன் நாசி வருடியது. சில நிமிடங்களில் நகர்ந்தது பேருந்து. சில்லென்ற ஏசி காற்று தாலாட்ட துவங்கியது. மெலிதான வெளிச்சத்துடன் கூடிய இருள் பரவியது பேருந்துக்குள்.
இது கனவில்லை. நிஜம்தான். மெல்ல புரிந்தது அவனுக்கு. அப்படியே ஆனாலும் அவள் என்னை மறந்தே போயிருப்பாள். அவளை நிராகரித்தவன் நான். இப்போது எந்த முகத்துடன் அவளிடம் பேச?' கண்களை இன்னமும் திறக்கவில்லை அவன்
'ஆங் நாம என்ன பேசிட்டு இருந்தோம்?' தோழியிடம் கேட்டாள் அனுராதா.
'அது... வந்து ம்.... ஹரிஷ்..' இது தோழி
'ம்...எஸ்.. கண்டிப்பா நடக்கும். நீ வேணும்னா பாரு. இந்த தடவை ஹரிஷ் அவனை ப்ரூவ் பண்றானா இல்லையா பாரு!!! அவன்கிட்டே நிறைய திறமை இருக்கு' அவள் சொல்ல விலுக்கென கண் திறந்து நிமிர்ந்தான் அவன்.
அணிந்திருந்த கண்ணாடியின் வழி அவனது பார்வை அவளை அவசரமாக வருடியதை அறியவில்லை அவள். ''ஹரிஷ் என்றுதானே சொன்னாள்? என்னை பற்றித்தானா சொல்கிறாள்? அவனுக்குள்ளே பேரார்வம்
'ஆரம்பிச்சிட்டியா உன் ஹரிஷ் புராணத்தை. அவன் இருக்கிற உயரம் என்ன தெரியுமா? உன்னை அவன் திரும்பிகூட பார்க்க மாட்டான். நீ என்னமோ ஹரிஷ், ஹரிஷ்னு' அவள் தோழி சொல்ல
'அவன் என்னை திரும்பிகூட பார்க்க மாட்டான்னு எனக்கு தெரியும். இருந்தாலும் அவன் ஜெயிக்கணும்னு நான் எப்பவும் வேண்டிக்குவேன்' அழுத்தம் திருத்தமாய் சொன்னாள் அவள்.
அவள் வார்த்தைகளில், தவிர்க்கவே முடியாமல் அவனுக்குள்ளே சில்லென்று ஒரு சந்தோஷ சாரல் பாய்ந்தது நிஜம்.
'என் புரிதல் சரிதானா? அவள் பேசுவது என்னை பற்றித்தானா?' இன்னுமும் அவன் கேள்விக்கு சரியான பதில் கிடைக்கமால் அவன் யோசிக்க உடனேயே வந்தது விடை
அவள் சட்டென உயிர்பித்த கைப்பேசி திரையில் இவன் முகம். வியப்பும், ஆர்வமும் கலந்த பாவம் அவன் முகத்தில். அந்த மங்கலான வெளிச்சத்தில் கைபேசியின் ஒளி அவள் முகத்தில் படர அவள் முகத்தை அணு அணுவாய் படித்துக்கொண்டிருந்தான் அவன். அவன் மீதிருந்த மொத்த நேசத்தின் பிரதிபலிப்பாய் மின்னிக்கொண்டிருந்தன அவள் கண்கள்.
மொபைல்லேயும் இவன்தானா 'ஹப்பா... போட்டோவையே இப்படி பார்க்கிறே? நேர்லே பார்த்தா என்ன செய்வியோ?' அவள் தோழி கேட்க பட்டென வந்தது இவள் பதில்
'கண்டிப்பா அவன் முன்னாடி போய் பல்லை காட்டிட்டு நிக்க மாட்டேன்.. நான் எப்பவும் என்னை தாழ்த்திக்க மாட்டேன் டோன்ட் வொர்ரி' நிதானமான குரலில் உறுதியாக சொன்னாள் அவள். அந்த நிமிர்வான வார்த்தைகளில் சற்றே வியந்தான் ஹரிஷ்.
'பழைய அனுராதா இல்லை அவள். நிறையவே முதிர்ச்சி வந்திருக்கிறது அவளிடத்தில்' தோன்றியது அவனுக்கு. அவள் மீது நிறையவே மரியாதையும் பிறந்தது அவனுக்கு.
'கிட்டதட்ட ஆறு ஏழு வருஷம் ஆச்சு. அவனுக்கு என்னை ஞாபகம் கூட இருக்காதுன்னு எனக்கு தெரியும் பட் அவன் எப்பவும் என் மனசிலே இருப்பான்.. இதை உன்கிட்டே மட்டும்தான் சொல்றேன். காதல் அப்படிங்கிற ஒரு உணர்வை முதல்முதலா எனக்குள்ளே விதைச்சது அவன்தான். இருபது வயசிலே மனசிலே விழுந்த விதை. ஹீ இஸ் மை ஃப்ர்ஸ்ட் லவ் யூ நோ??? '
'அவனுக்கு என்னை பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் எனக்கு அவனை எப்பவும் பிடிக்கும்' அவள் அழுத்தமாக சொல்ல கொஞ்சம் உறைந்தான் அவன்.
அவளிடமிருந்து அப்படி ஒரு பிடிவாதமான நேசத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னமும் அவளது மனதில் தன்னை சுமந்துக்கொண்டிருப்பாள் என்று அவன் கற்பனை கூட செய்திருக்கவில்லை.
'என் ஹரிஷை ஊரே கொண்டாடணும் அதுதான் இப்போதைக்கு என்னோட வேண்டுதல்' 'கைப்பேசியை பார்த்து புன்னகைத்தாள் அவள்.
அவன் உயிரின் அடி ஆழம் வரை பரவியது ஒரு இனிதான ஆனந்தம். அதன் பிரதிபலிப்பாய் அவனது விழி ஓரத்தில் கொஞ்சமாய் கண்ணீர்.
'உன்னை நிராகரித்தவனடி நான். அதன் பலனாகத்தான் அதன் பிறகு நிறைய அவமானங்களை சந்தித்தேனோ?' உள்ளம் மருகி கரைந்தது.
சும்மா தூள் கிளப்பணும் சரியா??? எனக்காக!!!' என்றாள் அவனது புகைப்படத்தை பார்த்து அவள் சொன்னது மெலிதாக கேட்டது இவனுக்கு. இதமாய் ஒரு இளம் புன்னகை அவன் உதடுகளில்.
'எப்படியடி பெண்ணே என்னை இப்படி காதலிக்கிறாய்???' தித்திப்பாய் வியந்தான். 'காதலிப்பதை காதலிக்கப்படுவது இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுக்குமா??? இப்போதுதான் புரிந்தது அவனுக்கு.
ஹேய்... பக்கத்தில் இருக்கறவன் ஏதாவது ப்ராப்ளம் கொடுக்கிறானா???' திடீரென அவளருகில் இருந்த தோழி மெதுவாய் கிசுகிசுக்க
'ஹேய்... சும்மா இரு. பாவம் அவர் தூங்கிட்டார் போல, சும்மா எல்லாரையும் தப்பாவே நினைக்காதே..' சட்டென சொன்னாள் இவள்.
'தூங்குவதெல்லாம் இன்று நடக்காது' மெல்ல சிரித்துக்கொண்டான் தனக்குள்ளே. பேசியபடியே தோழிகள் இருவரும் உறக்கத்தை தொட்டிருந்தனர்.
கண்ணாடியை கழற்றிவிட்டு உறங்கி இருந்தவளின் முகத்தை நிறைவாக ரசித்தான் அவன்.
ஹீ இஸ் மை ஃப்ர்ஸ்ட் லவ் யூ நோ???' சொன்னாளே அவள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் இவனுக்கு காதலை முதலில் உணர்த்தியவள் அவள்தான். இவனது திறமையை யாருமே பெரிதாக உணரத்துவங்கியிராத நேரத்திலேயே இவனை அங்கீகரித்தவள் ரசித்தவள் இவள்.
'கண்டிப்பா நடக்கும். நீ வேணும்னா பாரு. இந்த தடவை ஹரிஷ் அவனை ப்ரூவ் பண்றானா இல்லையா பாரு!!! 'எத்தனை நம்பிக்கையடி பெண்ணே உனக்கு என் மீது???
சில நிமிடங்கள் முன்னால் வரை அவனுக்கே அவன் மீது நம்பிக்கை இருக்கவில்லைதான். கடந்த ஒரு மாதமாய் இதே கேள்விகள்தான் அவனுக்குள்ளே உழல்கின்றன.
'நான் ஜெயித்துவிடுவேனா??? ஒரு வேளை தோற்றுவிட்டால் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா??? அது நிச்சியமில்லைதான்.!!!! நான் தோற்றுவிட்டால் அது எனக்கு இன்னொரு அவமானமாகிவிடும்தானே??? அப்பா எப்படி எடுத்துக்கொள்வார்??? ஜெயித்துவிடுவேன்தானே??? நான் என்னை நிரூபித்து விடுவேன்தானே??? இப்படி தனக்குதானே கேட்டுக்கொண்டேதான் சுற்றிக்கொண்டிருந்தான் அவன்.
அவனுக்கு என்னை பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் எனக்கு அவனை எப்பவும் பிடிக்கும்' அவள் வார்த்தைகள் அவனுக்குள்ளே மறுபடி மறுபடி ரீங்காரம்.
'பிஹேவ் யுவர் செல்ஃப் அனு. லுக். எனக்கு உன் மேலே கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லை. புரிஞ்சுக்கோ.' அன்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி அவளை கடைசியாக தள்ளி நிறுத்திய தினம் இப்போது கண்முன்னே வந்தது.
கண்டிப்பாக அவள் நிலையில் இவன் இருந்திருந்தால், அவள் இவனை வேண்டாமென சொல்லி இருந்தால், இப்படி அவளை நேசித்திருப்பானா என்று சொல்ல தெரியவில்லைதான். இப்படி ஒரு காதல், அதுவும் இத்தனை வருடங்களாய் எப்படி சாத்தியம்??? ஆச்சரியமாய் இருந்தது அவனுக்கு.
'நான் உன்னை விலக்கி இருக்கிறேன் ஒரு காலத்தில்!!! நிச்சயமாய் அன்றைய நிலையில் இதை எல்லாம் யோசிக்கும் நிலையில் நான் இல்லைதான். ஆனால் இனிமேல் யோசிக்கிறேன். உனக்காக மட்டுமே யோசிக்கிறேன். ஜெயிக்கிறேன்!!! உன் நம்பிக்கையை பொய்யாக்காமல் என்னை நிரூபிக்கிறேன்' சொல்லிக்கொண்டான் அவன்.