Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirisangu Sorgam
Thirisangu Sorgam
Thirisangu Sorgam
Ebook236 pages1 hour

Thirisangu Sorgam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580101804427
Thirisangu Sorgam

Read more from Sivasankari

Related to Thirisangu Sorgam

Related ebooks

Reviews for Thirisangu Sorgam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirisangu Sorgam - Sivasankari

    http://www.pustaka.co.in

    திரிச்சங்கு சொர்க்கம்

    Thirisangu Sorgam

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    அம்மா - என் பென்ஸிலை எடுத்துக்கிட்டு ரகு தரமாட்டேன்றாம்மா... கொடுக்கச் சொல்லுங்க...

    நா எடுக்கலைம்மா...

    பொய் சொல்லா தடா - நேத்து ட்ராயிங் போட எடுத்துக்கிட்டியா, இல்லியா?

    அதை அப்பவே உன் பையிலே வைச்சிட்டேனே!

    பொய்

    இல்ல, வைச்சிட்டேன்...

    பாருங்கம்மா... இந்த ரகு பொய் சொல்லுறதை? பென்ஸிலைத் தரச் சொல்லுங்க...

    சட்...

    தூக்கம் கலைந்து விட்டதில் கமலி கோபத்துடன் நெளிந்தாள்.

    சனியன்கள்.

    ஞாயிறு அன்று கூட நிம்மதியாய் தூங்க விடாத கழுத்தறுப்புகள்...

    சண்டையை கொஞ்சம் மெதுவாகப் போட்டால் தான் என்ன?

    இருக்கிறதோ உள்ளங்கை, உள்ளங்கையாய் இரண்டு அறைகள். இதற்குள் தானே படுக்கை, படிப்பு என்று அத்தனையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாத, ஏதடா ஒருத்தி அசந்து தூங்குகிறாளே என்ற கரிசனம் இல்லாத, பிசாசுகள்...

    பக்கத்தில் வைத்திருந்த தலைகாணியை எடுத்து கமலி தலைக்குமேல் அழுத்திக் கொண்டாள்.

    முற்றத்தில் எந்த குடித்தனக்காரரோ ஜங்க் ஜங்க் என்ற ஓசையுடன் பம்பு அடித்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார்,

    யார் வீட்டு ரேடியோவோ ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்று பாடியது.

    வாசலில் கீரைக்காரி உரக்க ‘கீரே வோணுமாம்மா? மொளக்கீரே, அரக்கீரே’ - என்று கூவினாள்.

    என் பென்ஸிலைக் கொடுக்கப் போறியா, இல்லியா?

    நா எடுக்கலை.

    அம்மா...

    சமயல் அறையில் வேலையாய் இருந்த சுலோசனா அங்கிருந்தே அதட்டினாள்:

    என்னத்துக்காக காலை வேளைல இப்படி சண்டை போடறீங்க இரண்டு பேரும்? இப்ப நா எழுந்து வந்து ஆளுக்கு ஒண்ணு முதுகிலே வைக்கட்டுமா? ராஜி... ஏய்... ராஜி... என்ன பண்றே அங்க உக்காந்துகிட்டு? அவங்க எதுக்காக சண்டை போடறாங்கனு பாரு...

    அம்மா சொன்னதை காதில் வாங்காத ராஜி, அந்த வார பத்திரிக்கையில் ஆழ்ந்து போய் ஜன்னல் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள்.

    "காக்க காக்க கனகவேல் காக்க

    நோக்க நோக்க நொடியினில் நோக்க

    தாக்க தாக்க தடையற தாக்க..."

    இந்த சண்டை, கத்தல் எதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் குளித்து, ஈர வேட்டியுடன் ஒரு பக்கமாய் அமர்ந்து மணிகண்டன் கந்தர் சஷ்டி கவசத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்.

    ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே...

    கண்களை மூடி படுத்திருந்த கமலியினுள் கோச்சு வண்டியில் எம்ஜியாரும், சரோஜாதேவியும் சக் சக் கென்று பயணித்துக்கொண்டே பாட்டை பாடிய காட்சி விரிந்தது.

    நாலைந்து மாசங்களுக்கு முன் ‘புத்தம் புதிய காப்பி’ என்று விளம்பரத்தோடு திரையிடப்பட்ட படத்தை பார்திருந்ததில், ஒவ்வொரு காட்சியும் மனசுக்குள் ஆணி அடித்த மாதிரி பதிந்திருந்தது.

    அப்படியொரு கோச்சு வண்டியில் காதலனுடன் ஆனந்தமாகப் பாடிக்கொண்டு போனால் எப்படி இருக்கும்?

    கற்பனை பண்ணிப் பார்த்தபோது, கோச்சு வண்டியை விட பியட் கார் தேவலையோ என்று தோன்றியது.

    வெள்ளை முயலாய் பளபள வென்ற புது பியட் கார். கார் ஓட்டியாக ஒரு ஆண்மை நிறைந்த அழகன். பக்கத்தில் நான்...

    கார் வேகமாக போகிறது... அவன் படு ஒய்யாரமாக ஓட்டுகிறான். காற்றில் பறந்து கண்களில் வந்து விழும் முடிக்கற்றையை அலட்சியமாய்த் தள்ளிக் கொண்டே பாடுகிறான் :

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்ராணியா?

    நானா?

    கமலிக்குப் பெருமையாக இருக்கிறது... சந்தோஷமாக இருக்கிறது...

    பூரண நிலவோ... புன்னகை மலரோ?

    என் முகமா பூரண சந்திரனுடையது மாதிரி இருக்கிறது?

    அம்மா... சுமதி என்னை அடிக்கறாம்மா...

    கோபத்துடன் கமலி கண்களைத் திறந்தாள்.

    காரும் ஆணழகனும் மறைந்து, விட்டத்தில் லாலி லாலியாய் தொங்கிய ஒட்டடைகளும், அழுக்கு சுண்ணாம்பும் எரிச்சலை அதிகமாக்க - அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

    ‘சே... பிசாசுங்க... வானரங்க... ஒரு நாள்கூட நிம்மதியா ஆளைத் தூங்க விடாதுங்க...’

    ஆத்திரத்துடன் முணுமுணுத்தபடி தலைகாணிகளை பாயில் போட்டு, சுருட்டத் துவங்க, இது நாழிகை எதையும் காதில் வாங்காமல் தான் உண்டு, தன் சஷ்டி கவசம் உண்டு என்று இருந்த மணிகண்டன், ‘என்னம்மா?’என்றார்.

    பின்ன என்ன அண்ணே ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தானே அக்கடானு என்னால படுத்து தூங்க முடியுது? அன்னிக்கும் இதுங்க இப்படி கத்திசண்டை போட்டுச்சுன்னா எப்படி அண்ணே?

    மணிகண்டன் மரஸ்டாண்டில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.

    அது ஏழு பத்து என்றது.

    மணி ஆகி விட்டது - இனியுமா கமலி தூங்க வேண்டும்? என்று கேட்க நினைத்தவர், தன் நினைப்பை மாற்றிக் கொண்டார்.

    பாவம் - இவள் சொல்வதும் நியாயம் தானே? வாரம் பூராவும் ஆபீஸில் உழைக்கும் பெண் இன்று ஒரு நாள் தானே தன் இஷ்டத்துக்கு இருக்க முடியும்?

    தாய் தகப்பனில்லாத தங்கையை அதட்ட மனமில்லாமல் பிள்ளை, பெண் பக்கம் திரும்பினார்.

    உங்க சண்டையை வாசப் பக்கம் போய் வைச்சிக்கக் கூடாதா? என்ன கலாட்டா இங்க?

    எரிச்சல் மாறாமலேயே கமலி எழுந்தாள்.

    சுருட்டிய பாயை ஓரமாக வைத்து நிமிர்ந்த போது எதிரில் மாட்டியிருந்த வெளுத்துப் போன கண்ணாடியில் முகம் தெரிய, இரண்டடி கிட்டத்தில் சென்று, கலைந்திருந்த முடியை ஒதுக்கியவாறு, தன்னைத் தானே ஒரு நிமிஷம் உற்று பார்த்தாள்.

    சிவந்த நிறம்,

    பெரிய்ய்ய கண்கள்...

    முகவாயில் இடது கன்னத்துக்கு பக்கமாய் கறுத்த மச்சம்...

    நான் அழகு தான்...

    காபி கலக்கவா கமலி? பல் தேய்ச்சிட்டு வர்றியா?

    சமயல் கட்டிலிருந்து எட்டிப் பார்த்து சுலோசனா கேட்க, கமலி அலமாரியில் தனியாக தன் உபயோகத்துக்கென வைத்திருக்கும் டூத் பேஸ்ட், ப்ரஷுடன் கொல்லைப் பக்கம் பார்க்க நகர்ந்தாள்.

    குளியல் அறை கதவுக்கு தாழ்ப்பாள் கிடையாது.

    அரை செங்கல் ஒன்றை கதவு திறந்து விடாதபடி அண்டக் கொடுத்து விட்டு அவள் பல்லைத் தேய்த்தாள்.

    சிமிண்ட் தொட்டியில் பிடித்து வைத்திருந்த ஜலத்தை பித்தளை செம்பில் எடுத்து வாயைக் கொப்பளித்தாள்.

    சிமிண்ட் தொட்டியையும், செம்பையும் பார்க்கையில், அடங்கி இருந்த எரிச்சல் திரும்ப நமநம என்றது.

    இரண்டு பிளாஸ்டிக் வாளி, ஒரு குவளை வாங்க துப்பில்லாமல் என்ன இல்லாமையோ?

    கலர் கலராய் கடைகளில் என்னமாய் வாளிகளைத் தொங்க விட்டிருக்கிறான்?

    என் வீடு என்று ஒன்று வைத்துக் கொள்ளும் போது இப்படி காரைத் தரையும், சிமிண்ட் தொட்டியும், தகரக் குவளையுமாய் அந்த பாத்ரூம் இருக்கக் கூடாது.

    அன்றைக்கு சகுந்தலா வீட்டில் பார்த்தோமே? ஜிலு ஜிலுவென்று பீங்கான் கற்களும்... அதே நிறத்தில் பேஸினுமாய்...

    ஆ!... என்னமாய் இருந்தது அந்த குளியல் அறை! சகுந்தலாவுக்கு என்ன? அவள் பணக்காரி. அவள் வீட்டில் பாத்ரும் என்ன, சாக்கடை கூடத்தான் ஜொலிக்கும்? பணம் இருந்தால் எது தான் நடக்காது?

    கமலி கடுப்புடன் வெளியில் வந்தாள்.

    அண்ணி கொடுத்த காபியை குடித்து விட்டு, கூடத்திலிருந்த கண்ணாடியின் முன் வந்து நின்றாள்.

    தலை முடியை அவிழ்த்து விட்டுக் கொண்டு சீப்பால் அழுந்த வாரினாள். புஸு புஸ்வென்று அது பறக்கத் துவங்கியதும், இப்படியும், அப்படியும் திரும்பி தன் கூந்தல் அழகை பார்த்துக் கொண்டாள்.

    பக்கத்து வீட்டு ரேடியோ ‘அந்திமழை பொழிகிறது’என்று துவங்க, அவள் கவனம் ராஜபார்வை! படத்துக்கும், அதிலிருந்து, கமலஹாசனிடமும் தாவியது.

    ஒரு சமயம், ஏதோ ஒரு பேட்டியில், ‘பெரிய கண்களுடைய பெண்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கும்’என்று கமல் சொன்னது நினைப்புக்கு வந்தது.

    கண்ணாடியை நெருங்கிய கமலி தன் கண்களை விரித்துப் பார்த்தாள்.

    சமுத்திரமாய் அவை விரிந்து, இவளை வெறித்தன.

    கமலஹாஸன் அவளைப் பார்க்கிறார் – ‘ஹைய்யோ! ஸ்ரீவித்யாவும், மாதவியும் உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும்’என்று பிரமிக்கிறார்...

    கமலிக்கு சிரிப்பு வந்தது. பெருமையாய் இருந்தது.

    கற்பனை தந்த அந்த சுகத்தோடு கண்ணாடியை விட்டு நகர்ந்து, ஜன்னலிடம் சென்று, ராஜியை ‘தள்ளுடி’என்று அதட்டி ஒதுங்கச் செய்து, ஒரு பக்கமாய் திண்ணை யில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

    எப்போது வருவான் அவன்? எனக்காக பிறந்திருக்கும் அந்த ராஜகுமாரன்? வருவானா? அழகிருந்தால் மட்டும் ஆயிற்றா? பணம்? அது இல்லையே -

    வழக்கமாகத் தோன்றும் சந்தேகம் இப்போதும் தலைதூக்க, அது எழுப்பிய கவலையுடன் கமலி கன்னங்களை கம்பிகளில் அழுத்திக் கொண்டு சாலையை வெறிக்கத் துவங்கினாள்.

    2

    கமலி பிறக்கும்போது மணிகண்டனுக்குச் சரியாய் பதினெட்டு வயசு. பெற்றவர்களுக்கு அவன் தலைச்சன் பிள்ளை; இவள் கடைக்குட்டி.

    மணிகண்டனுக்குப் பிறகு இரண்டை முழுசாய், மூன்றை அரை குறையாய் பெற்று மண்ணுக்கு வாரிக் கொடுத்துவிட்டதில் கடைசியாய்ப் பிறந்த கமலி எல்லாருக்கும் ஏக செல்லம்.

    அவளுடைய எட்டாவது வயசில் அப்பாவும், பன்னிரண்டாவது வயசில் அம்மாவும் போய்ச் சேர்ந்த பிறகு, இனி தங்கைக்கு நான் தான் எல்லாம் என்பது போல மணிகண்டன் அவளைக் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டது பெரிசில்லை. ஆனால், அவனுக்கு வாய்த்த சுலோசனாவும் புருஷன் மனதை புரிந்துகொண்டு நாத்தியை தன் முதல் மகளாக மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண் டாளே, அது ரொம்ப பெரிசு; உசத்தி.

    எஸ். எஸ். எல்.ஸிக்கு மேல் மணிகண்டனுக்கு படிப்பு ஏறவில்லை என்பதோடு, அப்பாவின் கணக்குப்பிள்ளை உத்தியோகம் சம்பாதித்துத் தந்த சம்பளம் அவர்கள் குடும்பம் நடத்த போதாமல் போன நிர்ப்பந்தமும் சேர்ந்து கொள்ள, தன் பதினேழாவது வயசிலேயே அவன் ஷண்முகம் மோட்டார் வொர்க்ஸில் எடுபிடியாய் சேர்ந்தான். படிப்பு அதிகமாக இல்லாவிட்டாலும், புத்திசாலித்தனம் இருந்ததில் நாலு வருஷங்களில் குமாஸ்தா ஆனான். மேற்கொண்டு பத்து வருஷங்கள் ஓடி மறைந்த பிறகு அக்கௌண்டண்ட் என்ற நாற்காலியில் அமர்ந்தான்.

    பதவி வேண்டுமானால் கேட்க பெரிசாய் இருக் கிறதே தவிர, சம்பளம் என்னவோ இன்றைக்கும் ஐநூற்று அறுபதைத் தாண்டவில்லை. இதோடு கரார் முதலாளி, எக்கச் சக்க வேலை வேறு.

    காலையில் எட்டு மணிக்குப் போனால், இரவு ஏழரைக்கு முன் அவன் வீடு திரும்பிய நாட்கள் அபூர்வம். ஒன்பது, பத்து ஆவது சகஜம்.

    மணிகண்டன் - சுலோசனா தம்பதிக்கு மூத்தவளாக ஜனித்தவள் ராஜி. இப்போது பத்தாவதில் இருக்கிறாள். அடுத்து சுமதி. இவள் எட்டாவது வகுப்பு - கடைசியாய் ரகு. ஐந்தாவதில் இருக்கிறான். கமலியும், இவர்கள் மூவரும் போதும் என்ற உணர்வில் மணிகண்டன் எப்பவோ குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டானோ, பிழைத்தானோ! இல்லா விட்டால் இந்த ஐநூற்று அறுபது சம்பளத்தில் ஆறு ஜீவன்கள் ஓரளவுக்கு லோல் படாமல் இப்போது இருப்பது கூட இல்லாமல் போயிருக் கும், நிச்சயம்.

    தனக்கு தங்கை என்பதை படிப்பில் நிரூபிக்காமல், வகுப்பில் முதலாவதாக கமலி படித்ததில் மணிகண்ட னுக்கு அதிக பெருமை.

    அந்த பெருமையின் காரணமாய் தான், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஸ்காலர்ஷிப் கிடைக்கிற குஷியில் மேலே படிக்கிறேன் என்று தங்கை ஆசைப் பட்டபோது ‘சம்பளப்பணம் ஒண்ணுதானா கமலி? பாக்கி, போக வர, உடுக்க, புஸ்தகங்கள் வாங்கண்ணு எத்தனை மேல் செலவு இல்லை?’ - என்று கேட்டு விவாதம் பண்ணாமல் உடனே சம்மதம் தந்தான்.

    புருஷனின் விருப்பத்தை உணர முடிந்ததால், ‘நமக்கு கீழ் கடை - குழந்தைகள் இல்லியா? இருக்கிறதை இவளுக்கே செலவழிச்சிட்டா, பெண் கல்யாணத்துக்கும், பிள்ளை படிப்புக்கும் என்ன செய்யறது?’என்று மல்லுக்கு நிற்காமல், சுலோசனாவும் நாத்தி கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு முன்னால் நின்று பச்சை கொடி காட்டினாள்

    கமலி கல்லூரியில் சேர்ந்தாள். பி. ஏ., எகனாமிக்ஸ் டிகிரியை முடித்தாள்.

    இனி என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

    செக்ரட்டேரியல் கோர்ஸ் படித்தால் நிறைய சம்பளம் வரும் என்று கேள்விப்பட்டு அதுபற்றி விசாரித்தாள். ஆறு மாத படிப்புக்கு ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பணம் தேவைப்படுவதை உணர்ந்ததும், இது நமக்கு லாயக்கு இல்லை என்று அந்த எண்ணத்தை கை விட்டாள்.

    டைபிங், ஷார்ட் ஹாண்ட் படித்தால் என்ன?

    பி. ஏ. டிகிரியுடன், இந்தத் தகுதிகளும் சேர்ந்தால் பாங்கில் வேலை கிடைப்பது உறுதி என்று யார் யாரோ தூபம் போட, பக்கத்துத் தெருவில் இருந்த பயிற்சி நிலையத்தில் சேர்ந்து அந்தச் சான்றிதழ்களை வாங்கினாள்.

    பாங்க் வேலை தான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் வேறு எந்த அலுவலகத்துக்கும் வேலைக்கு அப்ளை பண்ணாமல் இருந்து விட்டு, பத்து மாசங்கள் வெட்டியாய் வீட்டில்

    Enjoying the preview?
    Page 1 of 1