Odum Megangale
By Indhumathi
5/5
()
About this ebook
Read more from Indhumathi
Tholaithoorath Thandavalangal Rating: 3 out of 5 stars3/5Sarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Oru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Maalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Enakkendru Nee Rating: 5 out of 5 stars5/5Irandu Per Rating: 5 out of 5 stars5/5Kaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Maaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Avalukku Amuthendru Per Rating: 4 out of 5 stars4/5Veesa Marantha Thendral Rating: 4 out of 5 stars4/5Kadalorak Karaigal Rating: 4 out of 5 stars4/5Geethamadi Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Thotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Manithan - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsAntha Sila Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Nenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Neeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Enge Antha Sorkkam Rating: 5 out of 5 stars5/5Yaar Rating: 5 out of 5 stars5/5Anbe Aaruyire Rating: 5 out of 5 stars5/5Kangal Enge Nenjamum Enge Rating: 0 out of 5 stars0 ratings
Related to Odum Megangale
Related ebooks
Oonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Inaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Enkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Meendum Antha Gnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Nee Enakku... Rating: 0 out of 5 stars0 ratingsNanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Amutha Geetham Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Mazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsEzhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Malare Vaa Manathai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsVeppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kaathal Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Indriravu Rating: 5 out of 5 stars5/5Nilavil Mugam Kaattu Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Priyamanaval Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Odum Megangale
3 ratings0 reviews
Book preview
Odum Megangale - Indhumathi
10
1
அரைமணி நேரமாகக் காத்துக்கொண்டு நின்றாள் திவ்யா. காத்திருத்தல் எத்தனைக் கஷ்டமான விஷயம் என்பதை உணர்ந்தாள். கால் மாற்றி மாற்றி நிற்பதென்பதும் அத்தனை சுலபமானதில்லை என்பதையும் புரிந்து கொண்டாள், அதிலும் கல்லூரிக்கு எதிரில் நிற்பது இன்னமும் கஷ்டமான விஷயம். பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருக்கிற மாதிரி நடிப்பதும் சிரமம். அவளோடு காத்திருந்த மாணவிகள் அத்தனை பேரும் கேட்டுவிட்டார்கள்.
என்ன திவ்யா... உன் பஸ் வந்துவிட்டதே... போகலையா...?
ம்ஹும்... இன்னிக்கு நான் நேராக வீட்டுக்குப் போகலை. அத்தை வீட்டுக்குப் போயிட்டுப் போகப் போறேன். அதனால் 27Dக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்...
அத்தனை மாணவிகளும் போயாகிவிட்டது. 27D கூட அடுத்தடுத்து இரண்டு பஸ்கள் வந்து போய்விட்டன. அந்த பஸ் ஸ்டாப்பில் நிற்கக்கூடிய அத்தனை எண் பஸ்களும் வந்து நின்று புறப்பட்டுவிட்டன. அவளைத் தாண்டி கால் நடையில் போனவர்களெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனார்கள். விடலைப் பையன்கள் அவள் காது பட ‘கேஸ்’ போல இருக்குடா என்றார்கள்.
அதைக் கேட்டுப் பற்களைக் கடித்துக்கொண்ட திவ்யா ‘பிளடிஃபூல்ஸ்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அத்தனை நேரம் தன்னைக் காக்க வைத்த பிரபுராம் மீது கோபம் வந்துது. சொன்ன நேரத்திற்கு வர இயலாத அவனது இயலாமையின் மீது கோபம் வந்தது. எத்தனைக் கோபமானால் என்ன...? அவனை நேரில் பார்த்தால் அத்தனையும் அடங்கி விடப்போகிறது. முகம் தானாக விளக்கேற்றிக் கொண்டு விகசிக்கப் போகிறது. உதடுகளில் புன்சிரிப்பு ஓடப்போகிறது. கண்களில் காதல் மினுமினுக்கப் போகிறது. நெஞ்சு நெகிழப்போகிறது.
‘ஏன் பிரபு இத்தனை நேரம்...?’ என்கிற ஒரே கேள்வி அதுவும் கூட குறைவாக, மென்மையாக, குரலினாலேயே அவனை அணைக்கிறாற் போல் வருடிக்கொடுக்கிறாற்போல் கேட்கப் போகிறாள். வேறு என்ன செய்யப் போகிறாள்...? என்ன செய்ய முடியும். அவன் முகம் பார்த்து, குரல் கேட்டு, ஏன் வெறும் பெயரை வேறு யாரும் உச்சரிக்கக் கேட்டே உச்சி குளிர்பவளால் கோபிக்கவா முடியும்? அதுவும் பிரபுராமிற்காக அரை மணி நேரமென்ன ஒரு மாமாங்கமானாலும் காத்திருக்கத் தயாராக இருப்பவளால் வேறு என்ன செய்ய இயலும்?
அப்பா... இந்தக் காதலுக்குத்தான் என்ன சக்தி...! எத்தனை சக்தி...! இப்படிப்பட்ட உணர்வைப் படைக்க வேண்டுமென்று ஆண்டவனுக்கு எப்படித் தோன்றியது...? காதல் இல்லாவிட்டால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். சகாரா மாதிரி இருந்திருக்கும் என்கிற பதிலையும் தானே சொல்லிக்கொண்டாள்.
உடனே பிரபுராமைப் பார்க்காவிட்டால் தன் மனதும், சகாராவாகிவிடும் என்று தோன்றிற்று. எப்படியும், எத்தனை நேரமானாலும் அன்று பிரபுராமைப் பார்த்து விடவேண்டும் அவளுக்கு. இல்லாவிட்டால் இன்னும் இருபது நாட்களுக்கு அவனைப் பார்க்க முடியாது. அந்த இருபது நாட்களும் அவனைப் பார்க்காமல் எப்படி இருக்கப்போகிறோம் என்பது புரியாமல் உள்ளுக்குள் கலங்கிக் கொண்டிருந்தாள். அதை நினைத்தால் அப்போதே அழுகை வரும் போலிருந்தது.
பிரபுராம் கல்லூரியில் மாணவ மாணவிகளுடன் இருபது நாட்கள் வட இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் போகிறான். ஒரிஸா, அஸ்ஸாம், சிக்கிம், நேபாளம் எல்லாம் போகிறார்கள். பிரபுராமுடன் இன்னும் நான்கு புரொஃபசர்கள் போகிறார்கள். கல்லூரி என்ஸ்கர்ஷன், பாட்டும், அரட்டையும் விளையாட்டும் சந்தோஷமுமாக இருபது நாட்கள் போவதே தெரியாது.
திவ்யாவிற்கும் போக ஆசைதான். அதுவும் பிரபுராம் போவது தெரிந்தால் இன்னமும் மனது துடித்தது. அவனுக்காகவே போகவேண்டும் போலிருந்தது. ஆனால், அப்பா மறுத்துவிட்டார். அப்பா மறுத்தது ஒன்றும் புதிய விஷயமில்லை. பள்ளிக்கூட நாட்களிலிருந்து எந்தச் சுற்றுப் பயணத்திற்கும் அப்பா அவளை அனுப்பினதில்லை.
பொம்பளைப் பொண்ணு ராத்தங்கறதாவது...?
என்று முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார். இவள் அம்மாவிடம் போய்க் கெஞ்சுவாள்.
அம்மா ப்ளீஸ்மா... எல்லாரும் போறாம்மா... நானும் போறேம்மா... நீ அப்பாகிட்ட சொல்லும்மா...?
கண்களில் கண்ணீர் ததும்பக் கேட்பாள். அம்மா அவளை ஏறிட்டுப்பார்க்கும் பார்வையில் பரிதாபம் இருக்கும். இரக்கம் ருக்கும். இயலாமை இருக்கும். பின் ஒரு ஆழமான பெருமூச்சுடன் சொல்வாள்.
நான் சொன்னால் கேட்பாரா திவ்யா...? உங்கப்பாகிட்ட யார் பேச முடியும்...? யாருடைய ஆசையை எடுத்துச் சொல்லமுடியும்...? உனக்கு உங்கப்பா குணம் தெரிஞ்சும் என்னைப் போய் சொல்லச் சொல்றீயே...? சொல்லி நான் வாங்கிக் கட்டிக்கொண்டு வர்றதுதான் மிச்சம்னு உனக்குத் தெரியாதா...?
ஏம்மா ஸ்கூலோட எக்ஸ்கர்ஷன் போகணும்னு நினைக்கிறது ஒரு பொண்ணோட நியாயமான ஆசை இல்லையாம்மா...?
நியாயம்தான். எனக்குப் புரியறது. ஆனால் உங்கப்பாவுக்குப் புரியாதே... மனுஷ மனசுக்கோ, உணர்ச்சிகளுக்கோ, நியாய அநியாயங்களுக்கோ கட்டுப்படற மனுஷனா அவர்...? தான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்னு சாதிக்கிறவர். நாலாவது காலை அதற்காக உடைச்சு மூணாக்கிக் காட்றவர்கிட்ட எதும்மா எடுபடும்...?
அப்பாவிடம் அம்மா, அவள், அவள் தம்பி ஷ்யாம். அவரது நண்பர்கள் எல்லோருமே எல்லா விஷயங்களுக்கும் தோற்றுப்போயிருக்கிறார்கள். எது சொல்லியும் எடுபடாமல் சலித்துப் போயிருக்கிறார்கள். சில சமயம் அப்பா ஒரு சாடிஸ்டோ...
என்று கூட நினைத்திருக்கிறாள் திவ்யா.
மற்றவர்களின் ஆசைகளை அழித்து மனங்களைக் கஷ்டப்படுத்திக் குரூரத் திருப்தியடையபவரோ அதில் அவருக்கு ஒரு சந்தோஷம் ஏற்படுகிறதோ என்கிற சந்தேகமெல்லாம் வந்திருக்கிறது. எந்த சந்தேகம் வந்தாலும் அப்பா அப்படியேதான் இருந்திருக்கிறார்.
அப்பாவை அவள் வெற்றிகொண்டது ஒரே ஒரு விஷயத்தில்தான். ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கின்ற இந்தக் கல்லூரியில் சேர அனுமதி பெற்ற ஒரே விஷயம்தான். முதலில் அப்பா அதற்குச் சம்மதிக்கவில்லை.
அப்படியாவது நீ படிக்கணும்னு அவசியமில்லை. உன்னை நான் வேலைக்கெல்லாம் அனுப்பப்போறதில்லை. கல்யாணம்தான் பண்ணித்தரப்போறேன். அதனால் இந்த பி.ஏ. படிப்பு போதும்...
என்று கூறிவிட்டார்.
ஆனால் திவ்யா விடவில்லை. ஒரு வாரம் அழுது அவரது கால்களில் விழுந்து மன்றாடினாள்.
தயவு செய்து மாட்டேன்னு சொல்லிடாதீங்கப்பா... எம்.ஏ. படிக்கணும்ன்றது என்னுடைய கனவுப்பா... அதைக் கலைச்சுடாதீங்கப்பா... ஆண்கள் படிக்கிற கல்லூரியாக இருந்தாலும் நான் நானாகத்தாம்ப்பா இருப்பேன்... ப்ளீஸ்ப்பா...
இப்பவே உனக்கு வரன் பார்த்துண்டு இருக்கேன். கல்யாணம் நிச்சயமானால் என்ன செய்யறது?
நிச்சயமானால் நான் படிப்பை நிறுத்திடறேம்ப்பா... இல்லைன்னால் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சம்மதிச்சால் மேலே படிப்பைத் தொடர்றேம்ப்பா...
அதன் பின்னரும் நான்கு நாட்கள் அவளை அழவைத்தார். சிறிதும் அசைந்து கொடுக்காமல் இருந்தார். பின்னர் நடுக்கூடத்தில் நின்று சத்தம் போட்டார்.
இதப்பாரு... இந்த மாதிரி அழுது ஆகாத்தியமெல்லாம் பண்ணினால் நான் பயந்துடமாட்டேன். இந்த நீலிக்கண்ணீருக்கெல்லாம் அசைஞ்சுகொடுக்க மாட்டேன். என் மனசுக்குப்பட்டால்தான் செய்வேன். என் மனசுக்குப் படலைன்னால் அந்த ஆண்டவனே இறங்கிவந்தாலும் நடக்காது. அதனால் ஒழுங்கா இந்த ஒப்பாரியெல்லாம் நிறுத்திட்டு போய் இருக்கிற வேலையைப் பாரு...
அதற்கப்புறமும் அவள் அவருக்குத் தெரியாமல் அழுதாள். குளியல் அறைக்குள் போய்க் குளிக்கிற சாக்கில் அழுது தீர்த்தாள். கடைசியில் அப்பாவிற்கே என்ன தோன்றியதோ அவளைக் கூப்பிட்டுச் சொன்னார்.
இதப்பாரு... அந்தக் காலேஜ்ல உன்னைச் சேர்க்க நான் ஏன் ஒத்துக்கறேன் தெரியுமா? எம்.ஏ. படிக்கறாள் பொண்ணுன்னு சொன்னால் நல்ல வரன் வரும். நல்ல மாப்பிள்ளையாகக் கிடைப்பான்ற ஒரே எண்ணத்துலதான். பெண் பி.ஏ. படிச்சுட்டு வீட்ல சும்மா இருக்காள்னு சொன்னால் மதிப்பு இருக்காதுன்ற ஒரு காரணத்தைத் தவிர வேற காரணமில்லை. அதனால் காலேஜ் போனோம் வீட்டுக்கு வந்தோம்னு இருக்கணும். அதை விட்டு அது இதுன்னு ஏதாவது கேள்விப்பட்டேனோ... என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது... ஜாக்கிரதை...
அதை இப்போது நினைத்தபோது திவ்யாவின் உள்மனசு பயத்தில் மெல்ல நடுங்கத் தொடங்கிற்று. பிரபுராமைத் தான் காதலிக்கிற விஷயம் அப்பாவிற்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று எண்ணியபோதே அடிவயிற்றிலிருந்து பத்தாகச் சுருண்டு வந்து நெஞ்சை அடைத்துக்கொண்டது.
கடவுளே நீதான் என்னையும் பிரபுராமையும் ஒன்று சேர்த்து வைக்கணும்... அதை எப்படிச் செய்யப்போகிறாயோ... அப்பா மனசை எப்படி மாற்றப் போகிறாயோ... எனக்குத் தெரியாது...
வேண்டிக்கொண்ட அதே தருணத்தில் பிரபுராம் மனதிற்குள் வந்து நின்றான். வகுப்பு எடுக்கிற நேரங்களில் அவன் தன்னை மற்ற மாணவிகளைப் போல் ஒரு மாணவியாக மட்டுமே நினைக்கிற மனப்பக்குவத்தை, மனத்திண்மையை நினைத்துக்கொண்டாள். தன்னால் அந்த மாதிரி அவனை ஒரு ஆசிரியனாக வெறும் புரொபஸராக நினைக்க முடியாததும் புரிந்தது. அவன் எடுக்கிற ஆங்கில இலக்கியக் காவியங்களில் வரும் கதாபாத்திரங்களில் தன்னையும் அவனையும் கற்பனை செய்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அவன் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போதே அவன் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்தபடி சினிமாக்களில் வருகிற கனவுக்காட்சிகள் மாதிரி அவனோடு கைகோர்த்துக் கவிதைவரிகளில் வலம்வருவாள்.
அதை ஒருநாள் அவனிடம் சொன்னபோது அவன் மிக அழகாகவும், மென்மையாகவும் புன்னகை செய்தான். அவன் அவ்வாறு புன்னகைத்தது என்னவோ போலிருக்கவே சுள்ளென்று கோபத்தோடு கேட்டாள் அவள்.
ஏன் சிரிக்கறீங்க பிரபு...?
நீ சொன்னதைக்கேட்டுச் சிரிக்காம வேறு என்ன செய்ய முடியும்... சொல்லு...?
ஏன்... எதுக்குச் சிரிக்கணும்...?
நீ ஒரு குழந்தை மாதிரி இருக்கே திவ்யா... உன் வயசுக்குக் குழந்தைத்தனம் அதிகம் இருக்கு. கதைகளும் காவியங்களும் வேறு வாழ்க்கை வேறு. நான் எடுக்கிற காவியங்களில் வர்ற கதாபாத்திரங்களும், சம்பவங்களும் அப்படியே உண்மையானவை இல்லை. எல்லாமே மிகைப்படுத்திச் சொல்லப்பட்டவைதான்...
நோ. இதை நான் ஒத்துக்கமாட்டேன் பிரபு. நடக்காத ஒரு விஷயத்தை அனுபவத்திருக்காத ஒரு விஷயத்தை அத்தனைத் தத்ரூபமாக எழுத முடியாது பிரபு...
"நீ சொல்கிற ஒரு