Professional Documents
Culture Documents
கிலாஃபா ஒரே தீர்வு
கிலாஃபா ஒரே தீர்வு
இஸ்லாத்தின் மீ து நம்பிக்கை வைத்து, அதன் சட்ட திட்டங்களை, தனி மனித அளவில்மட்டுமன்றி, சமூகம், அரசு
என எல்லா மட்டத்திலும் செயல்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்கள்மறுமலர்ச்சியடைய முடியும். ‘நம்பிக்கை
கொள்ளுதல்” என்ற அளவில் நிறுத்திவிடாமல்,’நடைமுறைப் படுத்துதல்” என்பதையும் இணைத்தாலன்றி
முஸ்லிம்கள் முன்னேற முடியாது.அல்லாஹ்(சுபு)வின் அருளைப் பெற்று மேலோங்கிய சமூகமாகத் திகழ
இவ்விரண்டும் இணையவேண்டும். இஸ்லாத்தின் மீ து நம்பிக்கை கொள்ளும் மக்கள், இஸ்லாம் அல்லாத
பிறசட்டதிட்டங்களையே நிறைவேற்றுவதால், முஸ்லிம்கள் தொடர்ந்து நலிந்து, ஏமாற்றப்பட்டேஇருக்கின்றனர்.
யாராலும் அசைக்கமுடியாதவாறு இருந்த இஸ்லாமிய அரசினை ஒருவிதஅச்சத்தோடு பார்த்த எதிரிகள், இன்று
தமது கைப்பாவைகளின் உதவியுடன் செயல்படுத்தும்அடக்குமுறையின் மூலம், இஸ்லாத்திற்கு மாறான ஒரு
ஆட்சியமைப்பை உருவாக்கி,முஸ்லிம்களின் வளங்களை சுரண்டி, முஸ்லிம்களை அடிமைப்படுத்தி, இஸ்லாத்தையே
பின்பற்றமுடியாமல் செய்துவிட்டனர்.
இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, இறைவன் அருளியுள்ளபடியான ஒரு இஸ்லாமியஆட்சியை, அதாவது
கிலாஃபாவை நிலைநிறுத்துவதேயாகும். இஸ்லாமிய நிலங்களை ஆளும்இன்றைய கைப்பாவை அரசுகளை து}க்கி
எறிந்து, கிலாஃபாவை நிலைநாட்டுவது இன்றையமுக்கியத் தேவை மட்டுமன்றி அல்லாஹ்(சுபு) நமக்கு இட்டுள்ள
கட்டளையுமாகும்.
கிலாஃபா என்பது என்ன?
இஸ்லாமிய ஆட்சிமுறைக்கு இடப்பட்டுள்ள பெயர் கிலாஃபா ஆகும். அல்லாஹ்(சுபு)அருளியுள்ள ஷாP ஆ
சட்டதிட்டங்களை அமல் செய்து இஸ்லாத்தை உலகின் மற்ற பகுதிகட்கும்ஏந்திச் செல்கின்ற ஒரு அமைப்பே
கிலாஃபா ஆகும். இது உலகளாவிய முறையில், முஸ்லிம்கள்அனைவருக்குமான தலைமைத்துவமும், இஸ்லாமிய
ஆட்சி முறையுமாகும்.கிலாஃபா என்பது இமாராஹ் எனவும் அழைக்கப்படும். இரண்டும் ஒரே பொருளைக்குறிக்கின்ற
வௌ;வேறு வார்த்தைகளாம். இதனை விளக்குகின்ற ஏராளமான ஹதீத்கள்உள்ளன. வௌ;வேறு பெயர்களில்
அழைக்கப்பட்டாலும் இரண்டும் ஒன்றையே குறிக்கும்,அதாவது அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களைக்கொண்டு
ஆட்சிபுரிவது என்பதே அது.
கிலாஃபா ஆட்சியில் வாழ்வது ஒரு முஸ்லிமிற்கு கட்டாயக்கடமை(ஃபர்த்)ஆகும்.
கிலாஃபா ஆட்சியில் மட்டுமே இஸ்லாமிய சட்டப்படி நாம் நடக்கமுடியும் என்பதால்கிலாஃபா ஆட்சியல் வாழ்வது
ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கட்டாயக் கடமையாகும். அதன்படிஅத்தகைய கிலாஃபா இல்லாத சமயத்தில் அதனை
நிலைநாட்டுவதும் ஒவ்வொரு முஸ்லிமின்மீ தும் ஃபர்த் ஆகும். தொழுகையைப் பேணுவது எவ்வளவு முக்கியமோ
அதைப்போலவேகிலாஃபாவை நிலைநாட்டுவதும் அதிமுக்கியக் கடமையாகும். இந்த கடமையிலிருந்து
எவரும்ஒதுங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு ஒதுங்கிக்கொள்பவர்கள், அல்லாஹ்(சுபு)வின்கேள்விகணக்கிற்கு பதில்
சொல்லியே தீரவேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனைஉண்டு என்பதை விளக்குகின்ற குர்ஆனிய
வசனங்களும் ஹதீத்களும் ஏராளமாக உள்ளன.
கிலாஃபாவை நிலைநாட்டுவது கடமை என்பதற்கான ஆதாரங்கள் குர்ஆனிலும்,நபிகளாரின்(ஸல்) சுன்னாவிலும்,
சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்விலும் (இஜ்மா-அஸ்-ஸஹாபா) காணப்படுகிறது.
சுன்னாவிலிருந்து ஆதாரம்
முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்க ஒரு இஸ்லாமிய அரசும், அதன் ஒரே ஒருபிரதிநியும்
இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும், அத்தகைய அரசு இல்லாவிடில்அதனை நிறுவுவது முஸ்லிம்
உம்மா மீ து ஃபர்த்(கடமை) ஆக்கப்பட்டுள்ளது என்பதையும்ஹதீஸ்கள் மூலமும் விளங்கிக்கொள்ளலாம்.அப்துல்லா
இப்ன் உமர் அறிவிப்பதாக நஃபிஅ குறிப்பிடுவிடுதாக முஸ்லிமில்பதியப்பட்டுள்ளது.
நபிகளார் கூறுகிறார்கள்: அல்லாவின் பாதையில் பைஆ செய்பவர் மறுமை நாளில் எந்தஆதாரமும் தேவையின்றி
இறைவன் முன் தோன்றுவர். ஆனால் பைஆ(சத்தியப்பிரமாணம்)செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜஹிலிய
மரணமடைபவராவர்.ஒவ்வொரு முஸ்லிமும் கலீஃபாவிற்கு பைஆ(சத்தியப்பிரமாணம்) கொடுத்திருக்க
வேண்டும்.அவ்வாறான பைஆ கொடுக்காத நிலையில் யாரேனும் மரணித்தால் அவர் ஜஹிலிய
மரணத்தையேதழுவுவர். ஜஹிலிய மரணம் என்பது காஃபிராக மரணிப்பதன்று மாறாக ஜஹிலிய
மரணமென்பதுஇஸ்லாம் தன்னை வந்தடைவதற்கு முன் மரணிப்பதாகும். பைஆ என்பது கலீஃபாவிற்கு
மட்டுமேகொடுக்கப்படுகிறது. அத்தகைய பைஆ கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் செய்திருக்கவேண்டும் என்பதை
நபிகளார் ஃபர்த்(கட்டாயக் கடமை) ஆக்கியுள்ளார்கள்.இந்த ஹதீஸில் ‘கலீஃபாவிற்கு பைஆ கொடுப்பதுதான் ஃபர்த்”
எனக் கூறப்படவில்லை.மாறாக ஒவ்வொருவரும் பைஆ செய்திருக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.
எனவேஒவ்வொருவரும் பைஆ செய்திருக்க வேண்டுமென்றால் கலீஃபாவும் இருக்கவேண்டும் என்பதுஃபர்த் ஆகிறது.
கலீஃபா இல்லாத நிலையில் அவரை நியமிக்க வேண்டும் என்பதும்கடமையாகிறது.
அபுஹ_ரைரா(ரழி) அறிவித்ததாக ஹிஸான்-இப்ன்-உர்வா (ரழி) நபிகளார்(ஸல்) கூறியதாககுறிப்பிடுகிறார்கள்.
“எனது மறைவிற்குப் பிறகு உங்களை நிர்வகிக்க பிரதிநிதிகள்(கலீஃபாக்கள்) தோன்றுவர். இறைவிசுவாசமுள்ள
பிரதிநிதி அவ்விசுவாசத்துடன் வழிநடத்துவார். இறைவிசுவாசமற்ற ஒருவரும்அதன்படி வழி நடத்துவார். அவர்களது
கட்டளைகள் உண்மையைச் சார்ந்திருந்தால் அதனையேபின்பற்றுங்கள். அவர்கள் உண்மையுடன் நடந்தால் அது
உங்கட்கு நன்மையாக அமையும்.அவர்கள் தீங்கு செய்தாலோ அது அவர்கட்கெதிராகவே கணக்கிடப்படும்.”
நபிகளார்(ஸல்) கூறியதாக அபுஹ_ரைரா (ரழி) அறிவித்ததாக முஸ்லிமில்பதியப்பட்டுள்ளதாவது.
“இமாம் ஒரு கேடயம் ஆவார். அவர் பின் நின்றே நீங்கள் போராட வேண்டும். அவர் மூலமாகவேநீங்கள் பாதுகாப்புத்
தேடிக்கொள்ள வேண்டும்.”
அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி சொல்லியரசூலுல்லாவின்(ஸல்) கூற்று:
”நபிமார்கள் மக்கள் நலன்களை பேணிக்காத்தனர். ஒரு நபியின்மறைவிற்குப்பின்னர் வேறு நபிகள் தோன்றினர்.
ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபியாரும் வருவாரிலர், ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவர்.”"
நபிகளார்(ஸல்) கூறியதாக இப்ன் அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்.
“உம்மாவின் அமீ ர் தமக்கு விருப்பமல்லாத செயலை செய்வதாக ஒருவர் கருதினால் அவர்பொறுமையுடன்
இருக்கவேண்டும். எவர் ஒருவர் ஒரு கைப்பிடி அளவேனும் இமாமை விட்டுபிரிந்து செல்கிறாறோ அவர் அடைவது
ஜஹிலிய மரணமேயாகும்.”
மேற்கண்ட ஹதீஸ்களினின்று முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்க,அல்லாஹ்(சுபு)விற்கு அடிபணிந்து
நடக்கும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதுதெளிவாகிறது. மேலும் அத்தகைய இமாம் முஸ்லிம் உம்மாவின்
கேடயம் எனக்குறிப்பிடப்பட்டதிலிருந்து இமாம் இருப்பதன் அவசியம் விளங்கிக்கொள்ளப்படுகிறது. இமாம்
அன்றிமுஸ்லிம் உம்மாவிற்குப் பாதுகாவல் இல்லை. எனவே இமாம் இருப்பது ஃபர்த் ஆகிறது.அல்லாஹ்(சுபு)
நபிகளாருக்கு(ஸல்) கட்டளையிடுகையில் ஒரு செயலினால் ஏற்படும்கெட்ட விளைவுகளை கூறினால் அது
தடுக்கப்படவேண்டிய ஹராம் என அறிந்து கொள்ளலாம்.அதே போல அத்தகைய செயல் இஸ்லாத்தின்
கட்டளைகளை நிறைவேற்ற தேவையாகஇருந்தாலோ அல்லது அத்தகைய செயலன்றி இஸ்லாத்தை
நடைமுறைப்படுத்த முடியாமல்போனாலோ அச்செயல் ஃபர்த் ஆகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதாவது இஸ்லாமிய
நலன்களைநிறைவேற்றுவது குலஃபா(கலீஃபாக்கள்) மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அத்தகையகுலஃபா
இருப்பது கடமையாகிறது. மேலும் கலீஃபாவிடமிருந்து ஒரு கைப்பிடியளவேனும் பிரிவதுஹராமாக்கப்பட்டுள்ளது.
எனவே கலீஃபா இருப்பது ஃபர்த் ஆகிறது.
நபிகளார்(ஸல்) கூறியதாக அப்துல்லா-இப்ன்-அப்ரு (ரழி) அறிவித்ததாக புஹாரியிலுள்ள கூற்று.
“தங்களுக்குள் ஒரு அமீ ரை நியமிக்காமல் மூன்று பேர் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது.”
நபிகளார்(ஸல்) கூறியதாக சையீத் அறிவித்ததாக இமாம் அபு தாவூத் கூறுகிறார்கள்.
“மூன்று பேர் பயணம் புறப்பட்டால் அவர்களிடையே ஒரு அமீ ரை நியமிக்க வேண்டும்.”
இந்த அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் உம்மாவிற்கு அமீ ர் ஒருவர் இருப்பதுஅவசியமாகிறது. மூன்று பேருக்கே
ஒரு அமீ ர் நியமிக்க வேண்டியது ஃபர்த் எனில் இந்த முஸ்லிம்உம்மாவிற்கு ஒரு அமீ ரை நியமிப்பது எவ்வளவு
பெரிய ஃபர்த் என்பதை தெரிந்து கொள்ளலாம்.மேலும் அமீ ர் ‘தங்களிடையே ஒருவர்” என்பதால் அவர் ‘ஒருவரே’
எனவும் ‘முஸ்லிம்” எனவும்அறிந்து கொள்ளலாம்.
இஜ்மா-அஸ்-ஸஹாபாவினின்று கிலாஃபா என்பது ஃபர்த் என்பதற்கானசான்று
இஸ்லாமிய சட்டங்களின் ஆதாரங்கட்கு குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றை அடுத்துசஹாபாக்களின்
இஜ்மா(ஒருங்கிணைந்த தீர்வு) ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இஜ்மா-அஸ்-ஸஹாபாவின் கருத்துப்படி அனைத்து
ஸஹாபாக்களும் நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பின்னர்,ஒரு கலீஃபாவை நியமிக்க ஒப்புக்கொண்டனர். அதன்படியே
அபுபக்கர்(ரலி) முதல் கலீஃபாஆனார். அவரது மறைவிற்குப் பின்னர் உமர்(ரலி), பின்னர் உத்மான்(ரலி)
ஆகியோரும்கலீஃபாக்களாக ஆக அனைத்து சஹாபாக்களும் ஒப்புக்கொண்டனர். கலீஃபாவை நியமிப்பது
ஒருமுக்கியக்கடமை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பின்னரோஅல்லது மற்ற கலீஃபாக்களின் மறைவிற்குப்பின்னரோ, யார் கலீஃபாவாக
வரவேண்டும் என்பதில்கருத்து வேறுபாடு இருந்தாலும், கலீஃபா ஒருவர் இருப்பது ஃபர்த் என்பதில்
அனைத்துசஹாபாக்களும் உறுதியுடனிருந்தனர். இதன் மூலம் கலீஃபா ஒருவர் இருப்பது கடமைஎன்பதற்கு இஜ்மா-
அஸ்-ஸஹாபாவும் சான்றளிக்கிறது.கலீஃபாவை நியமித்து அவருக்கு பைஆ கொடுப்பது எவ்வளவு முக்கியக்
கடமைஎன்பதை நபிகளார்(ஸல்) அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் சஹாபாக்கள்
நடந்துகொண்ட விதத்தினின்றும் அறியலாம். முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அடக்கம் செய்வது இறந்தவரைச்சுற்றியுள்ளோருக்கு ஃபர்த்
ஆகும். அதைவிடுத்து உடலை அடக்கம் செய்யாமல் வேறுவேலைகளில் ஈடுபடுவது ஹராம் ஆகும். எனவே
சஹாபாக்கள் முதலில் நபிகளாரின்(ஸல்)உடலை அடக்கம் செய்வதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் சில
சஹாபாக்கள்நபிகளாரின்(ஸல்) உடலை அடக்கம் செய்வதை விட்டு, ஒரு கலீஃபாவை, முஸ்லிம்
உம்மாவின்தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வேறுவேலைகளில்
ஈடுபடுவது ஹராம் ஆதலால் மற்ற சஹாபாக்கள் அதனை எதிர்த்திருக்க வேண்டும்.ஹராமாக்கப்பட்ட எதனையும்
எதிர்க்கும் உறுதியுள்ள சஹாபாக்கள், அடக்கம் செய்யப்படுவது தாமதமாவதை எதிர்க்காமல் கலீஃபாவை நியமிக்க
முனையும் சஹாபாக்கட்கு ஆதரவாகஅமைதிகாத்தனர். ஒரு குறிப்பில் நபிகளார்(ஸல்) திங்கட்கிழமை
இறந்ததாகவும், அடுத்த நாள்அபுபக்கர்(ரலி) கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதன் கிழமையே நபிகளாரின்
உடல் அடக்கம் தகனம் செய்யப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இமாம் மாலிக் அவர்களது
குறிப்பில்அபுபக்கர்(ரலி) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செவ்வாய்கிழமையே அடக்கம்
செய்யப்பட்டதாககுறிப்பிடப்பட்டுள்ளது. அபுபக்கர்(ரலி) கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் ஆற்றியசொற்பொழிவு
அனைவரும் அறிந்ததே. அதன்பிறகே நபிகளாரின்(ஸல்) உடலை குளிப்பாட்டும்பணி தொடங்கியது. அதன்பிறகு எங்கு
அடக்கம் செய்வது எனப் பிரச்சனை எழுந்தபோதுகலீஃபாவாகிய அபுபக்கர்(ரலி) அவர்களின் முடிவுப்படி நபிகளார்
இறந்த இடத்திலேயே அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.நபிகளாரின் உடலை அடக்கம் செய்வதையும் விட,
முஸ்லிம்கட்கு ஒரு பிரதிநிதியைநியமிப்பது ஒரு முக்கியக் கடமையாகக் கருதிய சஹாபாக்கள் அனைவரும்
அதன்படிசெயல்பட்டனர். இதன்படி ஒரு கலீஃபாவை நியமிப்பது முஸ்லிம்கட்கு ஒரு முக்கியக்கடமைஎன்பதை
அறிந்து கொள்ளலாம்.
முதற்கட்டம்- பண்படுத்துதல்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு
ஓதுவராக
ீ . ‘அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ஓதுவராக
ீ : உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக்
கொண்டு கற்றுக் கொடுத்தான்.
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.( அல் அலக் 96: 1-5
)
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக்
கொண்டிருப்பீராக (அத்துஹா93:11)
ஆகிய சூராக்கள் மூலம் முஹம்மத்(ஸல்) அவர்களின் நபித்துவம் தொடங்கியது.
தமக்கு வந்த கட்டளையை முதன் முதலில் தமது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்தார்கள். பின்பு ஆருயிர்த்தோழர்
அபுபக்கர்(ரலி) அவர்களிடம் விவரித்தார்கள். அதன்பின்னர் அபுபக்கர்(ரலி) அவர்களின் உதவியுடன் மற்றைய
நம்பிக்கைக்குரிய நெருங்கியவர்களிடம் தமது து}துத்துவம் பற்றியும், ஓரிறைக்கொள்கை பற்றியும்
எடுத்துரைத்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நபியவர்களின் செய்தி மக்கா நகர் முழுவதும் பரவியது.
இந்த ஆரம்ப காலகட்டமாகிய மூன்று ஆண்டுகளில் இஸ்லாமானது தனிநபர்கட்கு மட்டுமே போதிக்கப்பட்டது.
தொழுவுருவங்களை வணங்கும் கூட்டத்தாரையும்(முஸ்ரிகீ ன்), அவர்களது அறியாமையையும்(ஜஹிலியா) நேரடியாக
எதிர்நோக்கவில்லை. மாறாக இந்தக் காலகட்டத்தில், எதுவந்தாலும் எதிர்நோக்கத் தயாராகின்ற ஒரு
மனோநிலையையும், குர்ஆனை வாழ்நாளில் நடைமுறைப்படுத்துகின்ற, உயர்ந்த ஒழுக்க நெறியை பிரதிபலிக்கின்ற
பண்புகளையும், தமக்கு நெருங்கிய, தகுதியுடைய சிலரிடையே கற்பித்து, அவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்தினரை
உருவாக்கினார்கள். அத்தகைய பண்புகள் மூலம் அவர்கள், தாம் வாழும் சமூகத்தை நேரிடையாக எதிர்கொள்ளத்
தயாராக இருந்தனர்.
ஆனால், நபிகளாரும் அவரது குழுமத்தினரும் எதிர்கொண்ட சமுதாயம் இஸ்லாம் அல்லாத நம்பிக்கைகளையும்,
நடைமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கொண்டிருந்தது. அதாவது அந்தச் சமுதாயம் மொத்தத்தில் ஒரு ஜஹில்
சமுதாயமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் நபிகளார் (ஸல்) தமது குழுமத்தினரிடையே இஸ்லாமிய
அறிவை ஊட்டி, அல்லாஹ்(சுபு)வின் மீ து அவர்கள் கொண்டுள்ள பற்றை வலுவூட்டினார்கள். அவர்களது ஜஹில்
நடைமுறைகளைத் தகர்த்து, தவ்ஹீது (ஓரிறைக்) கொள்கையையும், நடைமுறைகளையும் செறிவூட்டினார்கள். தமது
நம்பிக்கைக்குறிய அந்த முஸ்லிம்களை, நபிகளார், தாருல் அர்காம் எனுமிடத்தில் கூட்டி குர்ஆனின் வழிகாட்டுதலை
அவர்கட்கு விளக்கினார்கள்.
இன்றைய சமுதாயமும் அன்றைப்போலவே ஒரு ஜஹில் சமுதாயமாகவே உள்ளது. தனி ஆளாக நாம்
ஒவ்வொருவரும் முஸ்லிமாக இருந்தபோதும், ஒரு சமுதாயமாக, அதன் சட்டதிட்டங்களும், சமூக அந்தஸ்துகளும்
இஸ்லாமாக இல்லை. எனவே நபிகளாரின்(ஸல்) பாதையைப் பின்பற்றி நாமும் ஒரு குழுவினை தயார்படுத்தி,
அவர்களிடையே இஸ்லாமிய அறிவையும் எதையும் தாங்கும் மனோபலத்தையும் உருவாக்க வேண்டும்.
கிலாஃபாவை நிறுவி இஸ்லாமிய வாழ்க்கை முறையை பின்பற்ற, முஸ்லிம்களை அழைக்கின்ற இந்தப்
போராட்டத்தின் முதல் கட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தினைப் பற்றிய ஆழ்ந்த அறிவை பயிற்றுவித்து,
பொறுமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட நபர்களை உருவாக்குதல் அவசியம். இஸ்லாத்தின் மீ து
அவர்கள் கொண்ட பற்றும் அவர்களது செயல்பாடும், மக்களிடையே இஸ்லாத்தின் மீ துள்ள நம்பிக்கையை
வலுச்செய்யுமாறு இருக்க வேண்டும். மார்க்கத்தின் மீ து தெளிவான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு
தஆவாவை மக்களிடையே சுமந்து செல்லும் ஒரு குழுவாக அதனை உருவாக்குதல் மிக அவசியமாகும்.
ஒரு கூட்டமாக செயல்படுவதன் அவசியம்.
தனியொருவரால் கிலாஃபாவை நிலைநாட்டுவதென்பது இயலாத காரியம் மட்டுமன்றி நபிவழியுமல்ல. அது
முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தவேண்டிய ஒரு கடமையாகும். நபிகளார், தம்மை பின்பற்றி வருவோர்
யாரையும் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கவில்லை. முஸ்லிம்கள், தாருல்-அர்காம் எனுமிடத்தில் ஒன்றுகூடி
இஸ்லாமை கற்றனர். அங்கு அவர்கள் ஒன்றாக தொழுது ஒரு குழுவாகவே செயல்பட்டனர். அது ஒரு தனித்தன்மை
வாய்ந்த கூட்டமாகும்.
சஹாபாக்கள் ஒரு குழுமமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. ஒருசமயம் சஹாபாக்கள்
ஒன்றுகூடி விவாதித்துக் கொண்டிருந்தபொழுது, “நபிகளாரைத் தவிர வேறு யாரும் குர்ஆன் ஓதக் குறைஷியர்கள்
கேட்டதில்லை” எனக் குறிப்பிட்டனர். அப்போது அப்து அல்லாஹ் பின் மசூது எனும் சஹாபி தாம் மறுநாள்
குறைஷியர் முன் குர்ஆனை ஓதப்போவதாகக் கூறினார். மறுநாள் அவர் கஃபாவின் முன் சென்று, குறைஷியர்கட்கு
கேட்கும்படி, சத்தமாக குர்ஆனை ஓதத் தொடங்கினார். அதைக் கேட்ட குறைஷியர் அந்த சஹாபியை தாக்கத்
துவங்கினர். தமக்கு நேர்ந்ததை மற்ற சஹாபிகளிடம் அவர் கூறினார். அதற்கு அவர்கள் “இப்படித்தான் நடக்கும் என
நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றனர். அதைக்கேட்ட அந்த சஹாபி, தாம் மறுநாளும் அதேபோல ஓதப்போவதாக
கூறியதைக்கேட்ட மற்ற சஹாபாக்கள் ‘வேண்டாம். நீங்கள் இதுவரை செய்ததே போதும் அவர்கள் கேட்க
விரும்பாததை நீங்கள் கேட்கச்செய்துவிட்டீர்கள்.” எனக் கூறினர்.
மற்றொரு சமயத்தில், இஸ்லாத்தில் ஏசுநாதரின் இடம் பற்றிய குறைஷியரின் புகாருக்கு விளக்கம் கேட்டு,
அபிசினியாவிலிருந்து முஸ்லிம்கட்கு அழைப்பு வந்தது. அதற்கு முஸ்லிம்கள் தமது குழுவை கூட்டி விவாதித்தனர்.
பின்னர் குர்ஆனிலுள்ளதை அப்படியே கூற முடிவெடுத்து, தமது சார்பாக ஜாஃபர் பின் அபுதாலிப் எனும் சஹாபியை
அனுப்பிவைத்தனர். அந்த சஹாபியின் விளக்கம் கேட்ட அபிசினியாவின் நேகஸ் ” சாந்தமுடன் இருங்கள். உங்கட்கு
இடையூறிழைப்பவர் தண்டனைக்குள்ளாவர். நீங்கள் விரும்பியபடி எங்கும் செல்லுங்கள். எனது நாட்டில் உங்கட்கு
எப்பொழுதும் பாதுகாப்பு உண்டு.”" என்றார்.
இஸ்லாமிய தஆவாவை எதிர்க்கின்ற எந்த ஒரு அரசையும் அதன் சூழ்ச்சியையும் மக்களிடையே அம்பலப்படுத்த
வேண்டும். அவர்களது நேரடி அல்லது மறைமுக இஸ்லாம் எதிர்ப்புப் போக்கை முஸ்லிம்களிடையே
பகிரங்கப்படுத்துவது அவசியம். இதுவே நபிகளார் நமக்குக் காட்டிய வழியாகும். எவர் இத்தகைய கடமையை
ஆற்றுவதினின்றும் தவறுகிறாறோ அவர் நபிவழியைப் பின்பற்றத் தவறுபவரே ஆவார்.
சமரசம்
தமது வாதத் திறமையினால், நபிகளாரைக்(ஸல்) கட்டுப்படுத்த குறைஷியர் முயன்றனர். ஆனால் அவர்கட்கு
தோல்வியே மிஞ்சியது. அதன்பிறகு, நபிகளாரின் தஆவாவை அடக்க, எண்ணற்ற செல்வமும், மிகப்பெரும்
அந்தஸ்தும், தலைமைப் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அதற்குப் பகரமாக ஆழைப்புப் பணியை
நிறுத்திடவேண்டும் எனப் பேரம்பேசலாயினர். ஆனால் எந்நிலையிலும் எதற்காகவும் இறைப்பணியை விட்டுவிட
நபிகளார் தயாராக இல்லை. எனவே எந்நிலையிலும் நபிகளார் தஆவாவில் சமரசப்போக்கை கடைபிடிக்கவில்லை.
இறைச் சட்டத்தை நிறைவேற்ற, நபிகளாரின் வழியைப் பின்பற்றி பாடுபடும் முஸ்லிம்கள், எந்நதவித
சமரசப்போக்கையும் நிராகரித்துவிடவேண்டும். இஸ்லாமையும் ஜஹிலியாவையும் ஒன்றாக நடைமுறைப்படுத்த
முடியாது. இஸ்லாம் பாதியும் இஸ்லாம் அல்லாதவை பாதியுமாக ஆட்சிபுரிவது இஸ்லாம் அன்று. அது
ஜஹிலியாவே ஆகும். இறைவனின் ஷாP ஆ சட்டம் ஒன்றே முழுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது
இஸ்லாம் அல்லாத சட்டங்களே ஆகும்.
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வராக.
ீ
அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள். அல்லாஹ் உம்மீ து இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும்
அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. ( 5:49)
எனவே இஸ்லாம் அல்லாத ஆட்சியமைப்பில் பங்கு கொண்டு, அதன் மூலம் இஸ்லாத்தை சில துறைகளில் மட்டும்
சமூகத்தில் நடைமுறைப்படுத்துவது நபிவழியன்று. படிப்படியாக இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதென்பது,
இஸ்லாத்தையும் இஸ்லாம் அல்லாதவற்றையும், அதாவது உண்மையையும்(ஹக் ) பொய்யைபும்(பாதில்)
கலப்பதாகவே அமையும். இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதென்பது கிலாஃபா அரசை அமைப்பதே ஆகும்.
எனவே கிலாஃபா ஆட்சிமுறையை நிலைநாட்டப் பாடுபடும் முயற்சியில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அரபு நாட்டின் அரியாசனத்தில் நபிகளாரை(ஸல்) ஏற்றுவதாக உறுதியளித்த பனு- அமிர் கூட்டத்தின் உதவியை
நபிகளார் ஏற்க மறுத்தார்கள். ஏனெனில் நபிகளாருக்குப்பின்(ஸல்) தாமே அரியாசனத்தில் அமர வேண்டும் என
அவர்கள் நிபந்தனை விதித்தனர். பாரசீகர்களைத் தவிர மற்ற அனைவரிடமிருந்தும் நபிகளாரைக் காப்பதாகக் கூறிய
ஷிபான்-பின்-தலபா கூட்டத்தினரையும் அவர்கள் நிராகரித்தார்கள். ஏனெனில் உதவியானது வேறு எந்த
நிபந்தனையுமின்றி இருக்கவேண்டும், அதன்மூலமே இஸ்லாமிய தஆவாவை பரப்ப முடியும் என்பதில்
நபிகளார்(ஸல்) உறுதியாக இருந்தார்கள்.
துன்புறுத்தும் வேதனை
பேச்சுவார்த்தையால் நபிகளாரை(ஸல்) அமைதிப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த குறைஷியர் வன்முறையை
கடைபிடிக்கலாயினர். சமூக அமைப்பின் படியாக தப்பிவிட முடியாதபடி, அவர்கள், முஸ்லிம்களை
கொடுமைப்படுத்தலாயினர். முஸ்லிம்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, கொடுமைக்காளாகி, கொல்லப்படவும் செய்தனர்.
அவது}றுப் பேச்சினாலும், பொய்ப்பிரசாரங்களினாலும் நபிகளாரைத் தாக்கிய குறைஷியர் உடலளவிலும் அவர்களைக்
கொடுமைக்காளாக்க விழைந்தனர். அத்தகைய கொடுமைகளைக் கண்ட நபிகளார்(ஸல்) முஸ்லிம்களை,
அல்லாஹ்(சுபு)விடமிருந்து உதவி வரும்வரை அபிசீனிய நாட்டில் தஞ்சம் புகப் பணித்தனர்.
உமர்(ரலி), ஹம்சா(ரலி) ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்ததும், முஸ்லிம்கள் அபிசீனிய நாட்டில் தஞ்சம் புகுந்ததும்,
இஸ்லாம் மேன்மேலும் பரவிவருவதும் குறைஷியரின் கோபத்தை அதிகரித்தன. அவர்கள் முஸ்லிம்களை
முழுமையாக புறக்கணிக்க முடிவுசெய்தனர். முஸ்லிம்களிடம் எவ்வித பேச்சுவார்த்தைகளோ, திருமண பந்தங்களோ,
வியாரபாரத்தொடர்போ இல்லாமல் முழுமையாக புறக்கணித்தனர். அதனால் முஸ்லிம்கள் மக்கா நகருக்கு வெளியே
ஒரு பள்ளத்தாக்கில் தஞ்சம் புகுந்தனர். நபித்துவத்தின் ஏழாவது ஆண்டில் தொடங்கிய இப்புறக்கணிப்பு
மூன்றாண்டுகள் வரை நீடித்தது. புறக்கணிப்பு முடிவுற்ற குறுகிய காலத்தில் கதீஜா அம்மையாரும் அதன்பின்னர்
பெரியதந்தையாம் அபுதாலிப் அவர்களும் இயற்கைஎய்தினர்.
இத்தகைய மார்க்கப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய இயக்கமானது, ஜஹிலிய பழக்க வழக்கங்களைக்
கொண்டுள்ள பொதுஜனத்தின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். நாட்டை ஆளும் அரசுகள் அவ்வியக்கத்தினரை
துயரங்கட்காளாக்கி சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தவும் தயங்காது. இது தவிர்க்க இயலாததாக இருப்பினும்,
எவ்விதத்திலும் கொண்ட கொள்கையிலிருந்தும் விலகிவிடக்கூடாது.
தியாகம்
இஸ்லாத்தின் ஆட்சியானது கிலாஃபா மூலம் இவ்வுலகில் நடைபெறச் செய்ய தியாகங்கள் பல செய்ய நேரிடும்.
தமது குடும்பம், கட்டிக்காத்த சொத்துக்கள், ஆகியவற்றை கஷ்டத்திற்குள்ளாக்குகின்ற மாபெரும் சோதனையைத்
தாங்கிக்கொள்ளும் மனோபலமும், பொறுமையும் வேண்டும். அத்தகைய துன்பங்களினால் தமது கொள்கையை
விட்டும் விலகிச்சென்றுவிடாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். நன்மை தீமையை, நல்லது கெட்டதை பிரித்தறிய
அல்லாஹ்(சுபு)வின் சோதனை நிச்சயம் நடைபெறும். இதுவே நியதி. அல்லாஹ்(சுபு) தமது அருள்மறையிலே
கூறுகிறான்.
‘நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு
விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே
அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்
இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். ( 29: 2-3)
நபிமார்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோரும் கடுமையான துன்பங்கள் மூலம் சோதிக்கப்பட்டனர். அவர்கள்
எதிர்கொண்ட நிலையை அல்லாஹ்(சுபு) விளக்குகிறான். உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட
சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. ‘அல்லாஹ்வின் உதவி எப்பொழுது
வரும்” என்று து}தரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்.
‘நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீ பத்திலேயே இருக்கிறது” (2: 214)
இஸ்லாத்தின்மீ து முழு நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு இஸ்லாத்தை வாழ்வில் அமல்படுத்த, கிலாஃபாவை
நிலைநாட்ட, அழைப்புப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு முஸ்லிமும் இத்தகைய கஷ்டங்களுக்கு உள்ளாவது உறுதி.
இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் இந்த அரசுகளின் அடக்கு முறை, நம்பிக்கை கொண்டோரின் அழைப்புப்பணியை
எந்தவிதத்திலும் பாதித்துவிடக்கூடாது. அத்தகைய சோதனையான காலகட்டங்கட்குப்பிறகே அல்லாஹ்(சுபு) தமது
இறைத்து}தருக்கு உதவியை அளித்ததாகக் கூறுகிறான்.
(நம்) து}தர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது
உதவி அவர்களுக்கு வந்தது( 12: 110)
எனவே, இறைவனின் உதவியும் வெற்றியும் உண்மையாக இறைவனின் கட்டளையை ஏற்றுப் பாடுபடும் ஒவ்வொரு
விசுவாசிக்கும், சோதனைகட்குப்பிறகு கண்டிப்பாக வந்து சேரும். இறை ஆணையைவிட இந்தச் சொத்துக்கள்
பெரிதல்ல. நாமும் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் இறைக்கட்டளையைவிட
உயர்வானதன்று.
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும்,
உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம்
(எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும்
வடுகளும்,
ீ அல்லாஹ்வையும் அவன் து}தரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு
பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை
எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (9:24)