ஒரே குழப்பமாக இருக்கிறது... சூரியனும் நிலவும் எப்படி ஒரே நேரத்தில் காட்சி அளிக்கின்றன!!!
நிலா நிலா ஓடி வா என்று
சிறுவயதில் பாட்டி சொன்ன பொழுது நான் நம்பவில்லை. நிலவு ஓடி வரும் என்று, இன்று நம்புகிறேன்!!!
வட்டிற்குள் ீ விண்மீ ன்கள் எப்படி வந்தது என்று வியந்தேன் பிறகு உணர்த்தேன் அவை உனது கண்கள் என்று. விண்மீ ன்களால் இவ்வளவு வேகமாக இமைக்க முடியாதே !!!
பிரம்மன் உன்னை படைத்த பிறகு
சிறிது கவனம் தவறி இருக்கிறார். கவனமாக இருந்திருந்தால் உன்னை இந்திரலோகம் அல்லவா அனுப்பி இருப்பார் !!!
உன் குரல் இனிமையை கண்டதால் தானே
உன் வட்டின் ீ அருகில் மட்டும் குயில்கள் மௌணம் சாதித்தே செல்கின்றன !!!
வெளியில் செல்லும் பொழுது முகமூடி
அணிந்து உன் உதட்டை மறைத்துக்கொள் வண்டுகளுக்கு எப்படி தெரியும் தேன் இருக்கும் இடம் எல்லாம் பூக்கள் அல்ல என்பது!!!
இனிப்பு பிடிக்கும் என்றேன் இன்று,
உன் உதட்டின் சுவை அறியாததால்
உன் தோழில் விழும் பூக்களுக்கு தெரியுமா தொடுக்கப்படும் போது,
தான் ஒரு தேவதைகாக தொடுக்கப்படுகிறோம் என்று???
உன் காலில் இருக்கும், காலனிக்குத் தெரியுமா
அதன் மீ து எவ்வளவு கோபம் கொண்டுள்ளது பூமி என்று?
(உன்னை தொட விடாமல் தடுப்பதற்க்காக)
உனது ஆடைகளுக்கு சொல்லி வை அவை இப்பொழுது தொட்டு கொண்டிருப்பது எனக்கு
சொந்தமான பொருள் என்று உன் தோடுகள் ஏன் சிவந்திருக்கின்றன ??
நாம் பேசும் காதல் வசனங்களில் வெட்க பட்டா ??
உன் பெயரை உச்சரிக்கும் போது மட்டும் ஏன்,
என் உள்ளத்தில் ஒர் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன !!! கீ தா என்ற பெயருக்குள் எத்தனை ஆயிரம் கீ தங்கள் ஒழிந்திருக்கின்றன ?? ஒவ்வொருமுறை சொல்லும் போதும் இனிக்கிறதே !!!
புருவத்திற்க்கு நடுவில் வைத்தால் மட்டுமல்ல
எங்கு வைத்தாலும் அழகு தான் ஏனென்றால், அந்த பொட்டுக்கு அழகு சேர்ப்பதே நீ தானே !!!
மான் விழியாள் என்று சிலரை சொல்கிறார்களே!!!
உன் விழியை விட அவை அழகா என்ன ??
முள்ளில்லாமல் கூட ரோஜா பூக்குமா என்ன ??
இரண்டே இதழ் மட்டும் கொண்டாலும் இந்த ரோஜா மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது !!!
நிழற்படம் எடுக்கும் பொழுது அழகாக தலை சாய்க்கிறாய்.
ஏங்குகின்றன என் தோள்கள், உன் தலை சாயும் இடத்திற்கு எப்பொழுது வருமென!!
சும்மா இருந்த இளைஞனையும்
கவிஞனாக மாற்றிவிடாயே!!! இதுதான் காதலா ??? இதுதான் காதலா !!! சொல்லடி என் காதலியே!!!