Professional Documents
Culture Documents
விஜயதசமியைக் கல்வித்திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்
விஜயதசமியைக் கல்வித்திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்
படிப்பை சிறப்பாக்கும் "குதிரைச்சாமி' : ""பரி' என்றால் "குதிரை' . குதிரை வடிவில் உள்ள லட்சுமி
ஹயக்ரீவரை வழிபட்டால் ஞானம், தனம், தான்யம், தொழில் விருத்தி, நோயின்மை, நீண்ட ஆயுள்
உண்டாகும். இவரை உபாசனை செய்து ஞானம்அடைந்தவர் வைணவ ஆச்சார்யர்களுள்
தலைசிறந்தவரான நிகமாந்த மஹா தேசிகர். கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திரபுரம்
என்னுமிடத்தில் ஹயக்ரீவமூர்த்தி நேரில் தோன்றி நிகமாந்த தேசிகருக்கு அருள்
செய்தார்.வாக்குவன்மைக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தியும், வித்தைக்கு அதிபதியான
சரஸ்வதியும் ஹயக்ரீவ மூர்த்தியின் அருள் பெற்றவர்கள். ஹயக்ரீவருக்கு தமிழகத்தில் பல
இடங்களில் கோயில்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி தேசிகன்
சன்னதியிலுள்ள லட்சுமி ஹயக்கிரீவர் விசேஷமானவர். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க
ராமானுஜ மஹா தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார். படிக்கும் குழந்தைகளும்,
குழந்தைகளுக்காக பெற்றோரும் "ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம்' என்ற நூலில் உள்ள 32
ஸ்லோகங்களை பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள் "ஞானானந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக் கிருதிம்ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே' என்ற ஸ்லோகத்தை தினசரி
பாராயணம் செய்து கல்வியில் வளம் பெறலாம்.
குதிரையில் சுவாமி உலா வருவது ஏன்? ஒருமுறை உலகம் அழிந்தபோது, மகாவிஷ்ணு எல்லா
உலகங்களையும், உயிர்களையும் தன்னுள் தாங்கி ஆலிலைமேல் பாலகன் வடிவில்
சயனித்திருந்தார். பிறகு உலகைப்படைக்க எண்ணி, தன் நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப்
படைத்தார். அவரிடம் வேதங்களை ஒப்படைத்தார். பிரம்மனும் படைப்புத் தொழிலை தொடங்கினார்.
அப்போது, பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரு தண்ண ீர்த் திவலைகள் தோன்றி
மது, கைடபன் என்னும் அசுரர்களாய் மாறினர். இவ்விருவரும் பிரம்மனிடம் இருந்த வேதங்களைக்
கவர்ந்து சென்றனர். அசுர மாயையினால் அவற்றை குதிரை வடிவமாக மாற்றி பாதாள உலகத்தில்
ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் படைப்புத் தொழிலை செய்ய இயலாமல்
மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். விஷ்ணுவும் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீ ட்க பாதாள
லோகத்துக்குக் கிளம்பினார். அங்கே வேதங்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். தானும்
குதிரைவடிவம் கொண்ட ஹயக்ரீவராக மாறி, வேதங்களை மீ ட்டு வந்தார்.மதுகைடபர்கள் இருவரும்
ஹயக்ரீவருடன் யுத்தம் செய்தனர். ஹயக்ரீவர் அவர்களைக் கொன்றார். அசுரர்களின் கைபட்டதால்
வேதங்கள் புனிதத்தன்மை இழந்தன. பாற்கடல் வாசனான ஹயக்ரீவரை வேண்டி நின்றன. குதிரை
முகத்துடன் இருந்த பகவான் வேதங்களை உச்சிமுகர வெளிப்பட்ட மூச்சுக் காற்றினால் வேதங்கள்
மீ ண்டும் புனிதத்தன்மை அடைந்தன. திருமகளும் ஹயக்ரீவருடன் அணைத்த கோலத்தில் காட்சி தர,
வேதங்கள் நான்கும் வணங்கி நின்றன. ஞானம் தரும் வேதங்களை மீ ட்டதோடு, புனிதப்படுத்தியதால்,
லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டவர்கள் கல்வி, ஞானம், தத்துவம் போன்ற துறைகளில் சிறந்து
விளங்குவர். விழாக்காலங்களில், சுவாமி உலாவின் போது, குதிரை வாகனத்தில் சுவாமி பவனி
வருவதும், குதிரைகளை ஊர்வலத்தில் அழைத்து வருவதும் இதனால் தான்.