Professional Documents
Culture Documents
பரளிக்காடு
பரளிக்காடு
காரமடையிலிருந்து பரளிக்காடு செல்ல புகழ்பெற்ற காரமடை கோயில் தாண்டி முதல் இடது பக்க
சாலையில் பயணிக்க வேண்டும். அந்த சாலையில் பயணிக்க பரிணாம வளர்ச்சி போல நகரம்
தேய்ந்து தேய்ந்து முழுக்கிராமங்களை காண முடிகிறது. புஜங்கனூர் என்னும் ஊரைத்தாண்டினால்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை இரண்டு பக்கமாக பிரிகிறது. ஒருபக்க சாலை தோலம்பாளையம்
போகிறது இன்னொரு பக்கம் போனால்தான் பரளிக்காடு போக முடியும். அந்த சாலையில்
ஒருகிலோ மீ ட்டருக்கு ஒரு வடுதான்
ீ இருக்கிறது.
வழிமாறி போய்விட்டால் வழிகேட்க கூட ஈ காக்கா இல்லை. அதனால் கவனம் முக்கியம். போகும்
வழியெங்கும் தோப்புகள், தூரத்தில் மலைகள், பசுமைகள்.. ஆஹா.. நம் தோழர்கள் ஆங்காங்கே
வண்டியை நிறுத்தி இயற்கையை ரசித்தபடி பயணித்தால் சாலை குறுக்கும் நெடுக்குமாக வளைந்து
வளைந்து திரும்புகிறது. ஆச்சர்யம் சாலைகளில் ஒரு சின்ன குழி கூட கிடையாதென்பதுதான்.
வெள்ளியங்காடு என்னும் ஊர்தான் மலையடிவாரத்தில் இருக்கும் கடைசி கிராமம். டீ குடிப்பது,
கட்டிங் அடிப்பது, திண்பன்டம் வாங்குவது என அனைத்தையும் அங்கேயே முடித்துக்கொள்வது
நல்லது.
மிதமான குளிருக்கும், நீண்ட பயணத்துக்கும் சுக்கு காபியின் சுவை சுகமாக இருந்தது. வெல்கம்
ட்ரிங்க் போல! கிராமத்திற்குள் நுழைந்ததும் சுக்கு காபியை சுவைத்தபடி நோட்டம் விட்டோம்.
கிட்டத்தட்ட எல்லா வடுகளிலும்
ீ சன்டிடிஎச் இருந்தது , அனைவரது வட்டிலும்
ீ டிவி இருக்கிறது
என்பதை உணர்த்தியது. ஒரு வட்டில்
ீ வாசலில் இலவச டிவி தந்த கலைஞருக்கே உங்கள் ஓட்டு
என்கிற போஸ்டர் அதை உறுதி செய்தது. ஒரு வட்டின்
ீ சுவற்றில் ஒருபக்கம் கலைஞரும்
இன்னொருபக்கம் ஜெயாவும் வற்றிருந்தனர்.
ீ தெருவில் பையன்கள் கிரிக்கெட்
ஆடிக்கொண்டிருந்தனர். எல்லோர் வட்டிலும்
ீ சோலார் பேனல்கள் இருக்கின்றன. நைட்டி அணிந்த
பெண்களை பார்க்க முடிந்தது. ஊருக்குள் மொத்தமாக 35 குடும்பங்கள்தானாம்.
மதிய உணவு ரெடி! மலைகிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மதிய உணவை செய்து
கொடுக்கிறார்கள். நம்மிடம் முன்னரே வசூலிக்கும் பணத்தில் இவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட
சதவதம்
ீ கொடுக்கப்படுகிறது. களியும் சிக்கன் குழம்பும் கீ ரைக்குழம்பும் பரிமாறப்படுகிறது.
குழந்தைகள் ஆர்வத்தோடு களி தின்பதை பார்க்க முடிந்தது. களிவேண்டாம் என்கிறவர்களுக்கு
வெஜிடபிள் பிரியாணி,தயிர்சாதம்,சப்பாத்தி என மகத்தான ஒரு மதிய உணவு படைக்கப்படுகிறது.
அதிலும் அந்த சிக்கன் கிரேவி அற்புதமாக சமைக்கப்பட்டிருந்தது. ஒரு பிடிபிடித்துவிட்டு
கயிற்றுக்கட்டிலில் தூக்கம் போட்டால் சொர்க்கம்!
ஐந்து மணிக்கு மேல் காட்டுக்குள் இருப்பது ஆபத்து, யானைகள் தண்ண ீருக்காக மலையிலிருந்து
இறங்குகிற சமயம் என எச்சரித்து ஓடுங்க வூட்டுக்கு என அனுப்பிவைத்தனர். அங்கிருந்து கிளம்ப
மழை பெய்யத்தொடங்கியது. மழையில் நனைந்தபடி பைக்கில் மலைப்பாதையில் பயணிப்பது
கொஞ்சம் ஆபத்தானதாக இருந்தாலும் த்ரில்லிங்கான அனுபவமாக இருக்குமே என்கிற
எண்ணத்தோடு பயணித்தோம். செல்லும் வழியில் எங்கோ யானைகளின் பிளிறலையும்
மயில்களின் கொடூரமான சப்தங்களையும் கேட்டபடி மறக்க இயலாத ஒரு பயணத்தின் அற்புதமான
நினைவுகளை மூட்டைகட்டிக்கொண்டு உற்சாகமாக கோவையை நோக்கி திரும்பினோம்!
சில தகவல்கள்
இந்த சுற்றுலாவிற்கு சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் மட்டும்தான் அனுமதி , 40 பேர் கொண்ட
குழுவாக கேட்டால் மட்டுமே மற்ற தினங்களில் அனுமதி தரப்படும். அதுவும் ஒரு வாரம்
முன்பாகவே வன அலுவலரை தொடர்புகொண்டு புக்கிங் செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு - வன அலுவலர் –ஆண்டவர் -