புதுடில்லி ;வங்கிகளின் வசூலாகாத கடனை குறைக்கும் நோக்கில், மத்திய நிதியமைச்சகம், வருமான வரி துறைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில், கடனாளிகள் தாக்கல் செய்யும் செல்வ வரி சார்ந்த கணக்கு விவரங்களை, வருமான வரி துறை, பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி: எனினும், வங்கிகள் கேட்டுக் கொண்டால் மட்டுமே, கடனாளியின் செல்வ வரி கணக்கு விவரங்களை, வருமான வரி துறை வழங்க வேண்டும் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதே சமயம், கடனாளிக்கும், வருமான வரி துறைக்கும் இடையே வரி தொடர்பான பிரச்னை இருந்தால், அதற்கு தீர்வு கண்ட பின்னரே, அவரது சொத்துகளை விற்று, கடன் தொகையை வசூலிக்க, வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
வருமான வரி துறை அளிக்கும், ஒருவரின் செல்வ வரி கணக்கு விவரங்களை, கடனை திரும்ப பெறும் நடவடிக்கைக்காக மட்டுமே, வங்கிகள் பயன்படுத்த வேண்டும். வேறு யாருக்கும், அத்தகவல்களை வங்கிகள் வழங்கக் கூடாது என, நிதியமைச்சகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வசூலாகாமல் உள்ள கடன்களால், பொதுத் துறை வங்கிகளின் சொத்து மதிப்பு வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு, மார்ச் இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 1.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, அடுத்த ஆறு மாதங்களில், அதாவது, செப்டம்பர் இறுதியில், 28.5 சதவீதம் அதிகரித்து, 2.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
செல்வ வரி:பொதுத் துறை வங்கிகளின், மொத்த வசூலாகாத கடனில், 30 கணக்குகளின் கீழ் உள்ள தொகை மட்டும், 40.2 சதவீதம் (95 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவிற்கு உள்ளது. கடனை திரும்ப செலுத்தக் கூடிய அளவிற்கு சொத்துகள் இருந்தும், பலர், வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளனர்.இத்தகையோரின் செல்வ வரி மற்றும் வருமான வரி கணக்கு விவரங்களை அறிவதன் மூலம், வசூலாகாத கடனை திரும்ப பெறலாம் என, வங்கிகள் முயற்சி மேற்கொண்டன.
செல்வ வரி:பொதுத் துறை வங்கிகளின், மொத்த வசூலாகாத கடனில், 30 கணக்குகளின் கீழ் உள்ள தொகை மட்டும், 40.2 சதவீதம் (95 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவிற்கு உள்ளது. கடனை திரும்ப செலுத்தக் கூடிய அளவிற்கு சொத்துகள் இருந்தும், பலர், வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளனர்.இத்தகையோரின் செல்வ வரி மற்றும் வருமான வரி கணக்கு விவரங்களை அறிவதன் மூலம், வசூலாகாத கடனை திரும்ப பெறலாம் என, வங்கிகள் முயற்சி மேற்கொண்டன.