Professional Documents
Culture Documents
ரஜினி
ரஜினி
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கோடான கோடி ரசிகர்களில் ஒருவனான, ஒரு சாதாரண
ரசிகனின் எண்ண ஓட்டங்கள்
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 12 3 2020 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள்
சந்திப்பின் போது அளித்த பேட்டியிலிருந்து தமிழக மக்களுக்கும், அவரையே தெய்வமாக கொண்டு பின்
தொடரும் ரசிகர்களுக்கும் அவரது அரசியல் பயணத்தை பற்றியும் அவரது கட்சியின் கொள்கைகளான
திட்டங்களைப் பற்றியும், ஒரு அரைமணிநேரம் அந்த காணொளியில் கூறியிருந்தார்.
நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 31 12 2017 ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவது
உறுதி என்று கூறியிருந்தார்.
எனவே நமது தலைவர் அரசியலில் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
அரசியலில் ஒரு தனிமனிதன் வந்து மட்டுமே இந்த அரசியல் மாற்றம் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த
முடியாது என்பதனை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.
ஒரு தனி மனிதன் மட்டுமே நின்று முன்னெடுத்துச் செல்லக் கூடியதாக இந்த ஆட்சி மாற்றமும் அரசியல்
மாற்றமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே மக்களுக்கு இதைப்பற்றி ஒரு புரிதலும் தெளிவும் ஏற்பட
வேண்டும் என்றும் மக்களும் இந்த மாற்றங்களில் பங்கு பெறவேண்டும் என்றும் அவர் நினைக்கின்றார்.
அதற்காகவே தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய வகையில் அவர் அறிவித்த 3 திட்டங்களையும்
ரசிகர்கள் மூலமாக, பத்திரிகையாளர்கள் மூலமாக, மீடியாக்கள் மூலமாக தெரியப்படுத்தவே அந்தப்
பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த திட்டங்களையே தனது கட்சி கொள்கையாகவும் இருக்கும் என்று அவர் கூற வருகிறார்.
அந்த திட்டங்களால் ஒரு அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்
இந்த அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், அவரது திட்டங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய
கடமையை நமக்கு அளித்து அதன் மூலமாக ஒரு எழுச்சி,புரட்சி ஏற்பட்டு மக்களிடையே ஒரு மாற்றம்
வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே நான் கட்சி அல்லது ஆட்சிக்கு வருவேன் என்று கூறுகின்றார்.
நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரமாட்டாரா? கட்சி தொடங்க மாட்டாரா?
முதல்வராகி கோட்டைக்கு செல்ல மாட்டாரா? என்று பல வருடங்களாக நாம் ஏங்கி காத்துக்கொண்டு
இருந்தது உண்மைதான்.
ஆனால் தலைவர் தனது சுயநலத்திற்காகவோ தனது குடும்ப நன்மைக்காகவோ அல்லாமல்
பபொதுமக்களுக்காக,பொதுமக்களின் நன்மைக்காக மட்டுமே அரசியலுக்கு வருகின்றார்,கட்சியை
தொடங்க உள்ளார்,முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்தி அவர் மூலமாக நல்லாட்சியை வழங்க
வேண்டும் என்று நினைக்கின்றார்.
அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பது ரசிகர்களாகிய நமக்கு பெரும் கவலையையும் துன்பத்தையும்
தந்தாலும் கூட அவரது வயதின் காரணமாக, அவர் உடல் நலத்தின் ககாரணமாக,அவர் இன்னும் அதிகமான
ஆண்டுகள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்டு தலைவர்
காட்டும் வழியையும் தலைவர் சொல்லக்கூடிய விஷயங்களையும் பின்தொடர்ந்து இறுதிவரை அவரது
வெற்றிக்காக,தமிழக மக்களின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும் என்பதே நம் கடமையாகும்.
அரசியலில் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்போ இல்லன்னா எப்போதும் இல்லை
அதை தாரக மந்திரமாகக் கொண்டு தலைவரின் திட்டங்களையும் அவரது எண்ணங்களையும் மூலை
முடுக்கெங்கும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சென்று சேரக்கூடிய வகையில்
ரசிகர்களாகிய நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வீழட்டும் திராவிட அரசியல்
எழட்டும் ஆன்மீக அரசியல்
ஜெய்ஹிந்த்