Professional Documents
Culture Documents
பத்மபாதர் கதை
நம்பிக்கையை நெஞ்சில் வை
கர்ப்பரட்சாம்பிகை.
முல்லை வனமான கருகாத்த நாயகியின் தலத்தில் கவுதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் ஆசிரமம் அமைத்து தவம் செய்து
வந்தனர். நித்ருவ முனிவரும், அவரது மனைவி வேதிகையும் இங்கு தங்கி முனிவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தனர். தங்களுக்குக்
குழந்தை இல்லாத ஏக்கத்தால், ஒரு நாள் முனிவர்களிடம் கவலை தோய்ந்த குரலில் இவர்கள் சொன்னார்கள். அதற்கு, 'இங்கு எழுந்தருளி
உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் வேண்டியது கிடைக்கும்' என்று அருளினர் முனிவர்கள்.
அதன்படி முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள அவர்களை வணங்கினர் தம்பதியர். தங்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்க வேண்டும் என்று
உருக்கமாகப் பிரார்த்தித்துக் கொண்டனர். தெய்வங்களின் பரிபூரண ஆசி தம்பதியருக்குக் கிடைத்தது. அந்த ஆசியின்படி வேதிகை
கர்ப்பவதியானாள்.
அப்போது கடும் வெயில் காலம். வேதிகையின் கணவரான நித்ருவ முனிவர் க்ஷேத்ராடனம் போயிருந்தார். அன்றைய தினம் அவளுக்குப்
பேறு கால அவஸ்தை ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து ஊர்த்துவர் என்ற முனிவர் பிட்சை கேட்டு வாசலில் நின்றார். முனிவரின் குரல்
கேட்டும், வேதிகையால்
எழக்கூட முடியவில்லை. குரல் கொடுக்கவும் இயலாத அளவுக்கு வலி தாங்க முடியவில்லை.
வேதிகையின் அவஸ்தை பற்றி அறியாத ஊர்த்துவர், அவள் தன்னை அவமதிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு அவளுக்கு, எந்த
நல்லதும் நடக்கக்கூடாது சாபம் கொடுத்து விட்டார். அவ்வளவுதான்... வேதிகையின் கரு அடுத்த கணமே கலைந்து போனது. அன்னை
கர்ப்பரட்சாம்பிகையால் கிடைத்த குழந்தை பாக்கியம், இப்படி ஆகி விட்டதே என அந்த அன்னையிடமே போய் நின்றாள் வேதிகை.
''அம்மா! இது எந்த வகையில் நியாயம்'' எனக் கேட்கவும், அம்பாள் அவள் முன் தோன்றினாள். கலைந்த கருவை ஒரு குடத்துக்குள்
ஆவாஹனம் செய்து, ''வேதிகை! கவலை வேண்டாம். கலைந்த உன் கரு இந்த குடத்தில் பத்திரமாக இருக்கிறது. உனக்கு இதிலிருந்தே
குழந்தை கிடைக்கும்,'' என்றாள்.
அதன்படி குடத்தை தன்வசமே வைத்திருந்து குழந்தை பிறக்கும் வரை காப்பாற்றிக் கொடுத்தாள். அந்தக் குழந்தை தான் நருவன்.
அம்பாளின் அருள் மகிமை, அனுபவத்தால் உணர்ந்த வேதிகை, ''அன்னையே! இனி இந்தத் தலத்தில், நீ 'கர்ப்பரட்சாம்பிகை' என்ற பெயரில்
எழுந்தருளி,
கருத்தரித்தவர்களையும், அவர்களது கருவையும் என்றென்றும் உடன் இருந்து காப்பாற்ற வேண்டும். கர்ப்பவதிகள் சுகப் பிரசவம் காண
வேண்டும்,'' என்று
பிரார்த்தித்தாள். அம்பாளும் அவ்வாறே அருள்பாலித்தாள். குழந்தை நருவனுக்குத் தாய்ப்பால் இல்லாததால், அம்பாளே காமதேனுவை
அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும், ஒரு பால் குளம் தோன்றியது. அது ஆலயத்துக்கு முன்புறம்
இன்றும் காணப்படுகிறது. இதை 'க்ஷீரகுண்டம்' என்பர். 'க்ஷீரம்' என்றால் பால்., கர்ப்பரட்சாம்பிகையை வழிபட்டு நலம்
பெறுகின்றனர். இங்குள்ள சிவனின் திருநாமம் முல்லைவன நாதர். மகப்பேறு அளிப்பதால் கர்ப்பபுரீஸ்வரர் என்றும் அழைப்பர்.
சுவாமி விவேகானந்தர்
கதைகள் – துணிவு கொண்ட
நெஞ்சினாய் வா, வா, வா!
காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும்
விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர்,
காசியில் துர்க்கை கோயிலின் மதிற்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக்
கூட்டம் கீ றிச்சிட்டு, பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த
நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில
குரங்குகள் அவர் மீ து முரட்டுத்தனமாகப் பாய்ந்தன, சில குரங்குகள் அவரைப்
பிறாண்டின, சில குரங்குகள் அவரைக் கடித்தன, சில குரங்குகள் அவரது உடையைப்
பிடித்திழுத்தன! எனவே இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர்,
குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்! ஆனால் அவர்
ஓடினாலும், குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக்
குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை! என்று அவர் நினைத்தார்.
விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும், ஒரு குரங்குக் கூட்டம் அவரைத்
துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.
கர்வம்
மரணமில்லா மார்கண்டேயன்
https://www.youtube.com/watch?v=9n5AHbH94pY&t=208s
https://www.youtube.com/watch?v=JU1wYCd0AZc
https://www.youtube.com/watch?v=0PGUVK62Gps
ஞானசம்பந்தர்
https://www.youtube.com/watch?v=xX4QaBBqQk4
https://www.youtube.com/watch?v=TBKANbQgMnA
திருநீலகண்டர்
https://www.youtube.com/watch?v=mQnaGClKHyg
பக்த பிரகலாதன்
https://www.youtube.com/watch?v=xJKZqRMWMnw
அதிபத்த நாயனார்
https://www.youtube.com/watch?v=h9qT18qPG4M
அப்பூதியடிகள் நாயனார்
https://www.youtube.com/watch?v=u5nZwXFc5G8
https://www.youtube.com/watch?v=A010rqCJTzs
கிருஷ்ணனும் பாம்பும்
https://www.youtube.com/watch?v=500D9e7Cd64&t=380s
https://www.youtube.com/watch?v=500D9e7Cd64
https://www.youtube.com/watch?v=m4ydwU0NMpg
1.உபமந்யு கதை
2.பிரகலாதன் கதை
3.மார்கண்டேயன் கதை
4.துருவன் கதை
https://www.youtube.com/watch?v=LRRgZgcMaLQ
துருவன்
https://www.youtube.com/watch?v=GJmXfHDbUcY
அருணகிரிநாதரும் முருகரும்
https://www.youtube.com/watch?v=NGyg1PqhrMU
https://www.youtube.com/watch?v=78GL8DpHOeQ
(ஞானக்குழந்தை)
https://www.youtube.com/watch?v=tofX0hhLHIQ
https://www.youtube.com/watch?v=9GPWBfsio8o&t=650s
கணபதியும் மகாவிஷ்ணுவும்
கணபதியும் இராவணனும்
கணபதியும் வாகனமும்
கணபதியும் காவேரியும்
https://www.youtube.com/watch?v=FboXU_7X4Is
அனுமான்
https://www.youtube.com/watch?v=gntC5VcPmms
திருநாவுக்கரசர்
https://www.youtube.com/watch?v=YC0cg06rjxA
நரகாசுர வதம்
https://www.youtube.com/watch?v=kOogSaUQnu4
மகாபாரதம்
https://www.youtube.com/watch?v=gIxTugVn_7U
இராமயணம்
https://www.youtube.com/watch?v=YrQ8o1v0WUQ
அதிபத்த நாயனார்
https://www.youtube.com/watch?v=h9qT18qPG4M&t=178s
குங்கிலிய நாயனார்
https://www.youtube.com/watch?v=fJQwrcUthsM
https://www.youtube.com/watch?v=9bf8Ib5wxYE
நம்பியாண்டார் நம்பி
சுந்தரர்
திருமணங்கள்[தொகு]
திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச்
சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில
காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு சங்கிலியார் எனும் அழகியப்
பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத்
தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.
சிவபெருமான் செயல்[தொகு]
அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார்.
முக்தி[தொகு]
சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான்
வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும்
பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
அற்புதங்கள்[தொகு]
குருபூஜை[தொகு]
பூம்பாவை
https://ta.wikipedia.org/s/mf
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளடக்கம்
[மறை]
1 இளமையும் வாழ்வும்
2 பூம்பாவை உயிர் பெறுதல்
3 பூம்பாவை சந்நிதி
4 பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி
5 ஆதார நூல்
6 இவற்றையும் காண்க
7 ஆதாரங்கள்
8 வெளி இணைப்புகள்
இளமையும் வாழ்வும்[தொகு]
மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். இவர்
சிவபக்கதாரக இருந்தார். இவருக்கு பூம்பாவை என்ற மகளொருத்தி இருந்தாள்.
சைவ சமயத் தொண்டினைச் செய்யும் திருஞானசம்பந்தருக்கு தன்னுடைய
மகளான பூம்பாவையை திருமணம் செய்து வைக்க சிவநேசர் எண்ணியிருந்தார்.
பூம்பாவை சந்நிதி[தொகு]
பூம்பாவைக்கு மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலில் சந்நிதி அமைந்துள்ளது.
மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவைக்கு
சந்நிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியின் கோபுரத்தில் பூம்பாவை உயிர்ப்பெற்று
எழும் நிகழ்வு சுதை சிற்பமாக உள்ளது. இதில் திருஞான சம்பந்தர், உயிர்ப்பெற்று
எழும் பூம்பாவை, பூம்பாவின் பெற்றோர்கள் உள்ளார்கள்.
சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும்,
கைலாசம் அடைதல்
சுந்தர்ர் –நெல்
http://thanjavur14.blogspot.my/2014/08/blog-post3sundarar.html
அட்சயப் பாத்திரம்.
அதே விநாடி பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அந்தப் பாத்திரத்தில் உள்ள அன்னத்தைக் காலி செய்ய
சூரியன் விரித்த கிரணக் கைகளைத் தடுத்தான். 'சூரியதேவா... இந்த அன்னப் பருக்கும், கீ ரை
இலையும் அட்சயப் பாத்திரத்தில் ஒட்டி இருக்கட்டும். இவை நான் உண்ண வேண்டியவை'
என்று கூறி சூரியனின் கைகளை தன் சாதுர்யத்தால் கட்டிப்போட்டான் ஸ்ரீகிருஷ்ணன்.
வனம் வந்த துர்வாசர், வழியில் தர்மனைச் சந்தித்துத் தானும், தன் சீடர்களும் மதிய
உணவுக்காக அவர்கள் குடிலுக்கு வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும்
கூறினார். தர்மர் அதை பெரும் பாக்கியமாகக் கருதி, அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார்.
அதே விநாடி நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாசருக்கும், அவரின் சீடர்களுக்கும் பத்து நாள்
உணவை ஒரே நாளில் சாப்பிட்டது போல் வயிறு கனத்தது.பசி உணர்வு முழுமையாக நின்று
போனதால், துர்வாசருக்கும் ஒன்றும் ஓடவில்லை. 'நமக்காக உணவு சமைத்து வைத்திருக்கும்
தர்மருக்கு என்ன பதில் கூறுவது’ என்று பயந்தார். உடனே, வனத்தில் பழங்களைத் தேடித்
திரிந்து கொண்டிருந்த தர்மரிடம் ஓடி வந்தார்.
'யுதிஷ்டிரா... என்னை மன்னிக்க வேண்டும். நான் உன் குடிலில் இன்று விருந்து சாப்பிட
இயலாத நிலையில் இருக்கிறேன்' என்றார். அதைக் கேட்ட தர்மருக்கு ஆச்சரியம்
தாங்கமுடியவில்லை.
''மகனே... தினமும் நான் உணவருந்திவிட்டு 'கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லி
நீரருந்திவிடுவேன். ஆனால், என்னைவிட மேலான எவனோ உணவு சாப்பிட்டுவிட்டு
'துர்வாசார்ப்பணம்’ என்று நீரருந்திவிட்டான் போலும்! அதனால், இப்போது என் வயிறு
கனக்கிறது. என் சீடர்களும் அப்படியே உணர்ந்து கூறினார்கள். எங்களை மன்னித்துவிடு.
உனக்கு சர்வ மங்கலமும் உண்டாகட்டும்'' என்று வாழ்த்தி, தமது சீடர்களுடன் கானகம் விட்டு
வெளியேறினார்.
கொங்கணர்
இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் "வாலைக் கும்மி" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின்
பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி
என வழங்குகிறது.
இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து
ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல்
என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி
பாடல் கூறுகின்றது.
கொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து
கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனே
கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு
அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார்.
வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர்
பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக்
கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் "கொக்கென்று நினைத்தாயோ
கொங்கணவா?" என்று கேட்டார். அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார். பின்னர் திருவள்ளுவர்
சீடரானார்.
அருணகிரிநாதர்,
காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர்.
தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும்
சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை.
சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த
சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத்
தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார்
அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர்
தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய்
இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என
எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள
இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது.
ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு
அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில்
பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய்
சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.
என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய
மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி
தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய
செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை
விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக்
கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள்
என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல்
சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக்
கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும்,
சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு
வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி
சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான
மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம்.
முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை.
என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த
அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட
முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக்
கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன்
கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.
திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன்
திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி
வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என
அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப்
பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக
அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.