Professional Documents
Culture Documents
- திரும்பிச் செல்வோம்...
- திரும்புவோம்
நவனத்
ீ தொழில்நுட்பங்கள், இருளை வெளிச்சமாக்கிவிட்டன. அவற்றால்
ஒருபோதும் இரவைப் பகலாக்க முடியாது.
- திரும்புவோம்...
மின்விசிறி சுழலும் ஓசை கேட்கிறது, பூமி சுழலும் ஓசை கேட்பது இல்லை. எது
தேவையோ அதை மட்டுமே அறிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளோம்.
தேவையற்றவை நமது புலன்களின் அறிவுக்கு மறைக்கப்படுகின்றன.
ஒருவேளை எல்லா ஓசைகளும் கேட்கும்படியாக நமது செவிகள்
மாற்றியமைக்கப்பட்டால், அண்டத்தில் சுழலும் கோள்களின் பேரிரைச்சலால்
செவிப்பறைகள் கிழிந்து மரணம் நேரிடும்.
நவனக்
ீ கருவிகளின் பிடியில் இருந்து சிறுவர்களை விடுவிப்பது, நமது
ஒருங்கிணைந்த செயல்பாடாக இருக்க வேண்டும். செல்பேசி உள்ளிட்ட
கருவிகளை மிகக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அவற்றை சிறுவர்களுக்குப்
பழக்காதீர்கள். இரவுகளில் பிள்ளைகளின் அருகே படுத்துக்கொண்டு, தலை
கோதிவிட்டவாறு கதை சொல்லுங்கள். உங்கள் கதைகளில் தேவதைகள்,
அன்னங்கள், தெய்வங்கள், அரக்கர்கள், பேசும் மரங்கள் எல்லாம் உலா வரட்டும்.
அந்தக் கதைகளின் ஆழத்தில் அறச்சிந்தனைகள் இருக்கட்டும். கதை கேட்கும்
குழந்தைகளின் மனம் பெருங்கடலாக விரியட்டும்.நமது பிள்ளைகள், உடனடி
வெற்றிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். கணினி விளையாட்டுக்களின் மேலே
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம், பிள்ளைகளின் இதயத்துடிப்பை அதிகரிக்கச்
செய்கிறது.
- திரும்புவோம்...
ஒருகாலத்தில் வடுகளைச்
ீ சுற்றிலும் தவளைகளும் பிள்ளைப்பூச்சிகளும்
மரவட்டைகளும் நத்தைகளும் வாழ்ந்தன. இவை எல்லாம் வாழ்வதற்கு
ஏற்றவகையில் செடிகளும் புதர்களும் அப்போது இருந்தன. வட்டில்
ீ இருந்து
வெளியேறிய கழிவுநீர்தான் இந்த எல்லா உயிரினங்களுக்கும் உணவு ஆதாரம்.
கொசுக்களும் இவற்றோடு இணைந்து வாழ்ந்தன. அப்போது கொசுக்கள்
மனிதர்களைத் தேடி வரவில்லை.
படைப்பின் ஒழுங்குவிதிகள் குலையாத காலம் அது. கழிவுநீரிலும் அழுகிய
உணவுகளிலும் உருவாகும் நுண்ணுயிரிகளை உணவாக உட்கொண்டு சூழலைச்
சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு பல உயிரினங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
கொசுக்கள் அவற்றில் முதன்மை யானவை. ஆடு, மாடு, நாய், பூனை, எலி
போன்ற விலங்குகளும் பரவலாக வாழ்ந்த காலம் அது என்பதால், கொசுக்களின்
உலகம் பெரியதாக இருந்தது.
நுண்ணுயிரிகளின் பெருக்கம் கட்டுப்பாட்டில் இல்லை எனில், பெரிய
உயிரிகளின் உயிர் வாழ்க்கை சிக்கலாகிவிடும். நுண்ணுயிரிப் பெருக்கத்தைக்
கட்டுப்படுத்துவதற்காக தவளை, நத்தை, கரப்பான் போன்ற எண்ணற்ற பூச்சி
இனங்கள் செயலாற்றுகின்றன. கொசுக்களும் ஈக்களும் அவற்றில்
குறிப்பிடத்தகுந்தவை.
நவனச்
ீ சமூகக் கட்டமைப்பில் மேற்கண்ட உயிரினங்களில் பெரும்பாலானவை
ஒழிக்கப்பட்டன. குறிப்பாக, ஈக்களின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைக்கப்பட்டது. பிள்ளைப்பூச்சி எனும் அருமையான வகையினம் ஏறத்தாழ
அழிந்துவிட்டது. தவளைகள் காடுகளுக்குத் துரத்தப்பட்டன. காடுகளும் ஏரிகளும்
நகர விரிவாக்கத்தாலும் தொழிற்சாலைகளாலும் அழிக்கப்பட்டன. நத்தைகளுக்கு
வயல்களில்கூட வாழ்க்கை இல்லை. எல்லா வயல்களும் பூச்சிக்கொல்லி
நஞ்சுக்களால் நிரப்பப்பட்டன. வெறும் ஐம்பது ஆண்டுகளில் இவ்வாறான
முற்றுகைப் போர் சக உயிரினங்களின் மீ து ஏவப்பட்டது.
வடுகளைச்
ீ சுற்றி இருந்த கழிவுநீரைச் சுத்தம் செய்த பல்வேறு உயிரினங்கள்
ஒழிந்த நிலையில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.
ஏனெனில், நவனச்
ீ சமூகம் உயிரினங்களைக் குறைத்தது, கழிவுகளை
அதிகரித்தது. எங்கு பார்த்தாலும் குப்பைகளும் சாக்கடைகளும் காட்சியளிக்கும்
‘சிங்கார’ நகரங்கள் உருவாகின. இந்தக் கழிவுகளின் வழியாகப் பெருகும்
நுண்ணுயிரிகளைப் பற்றி நவன
ீ மனிதர்கள் கவலைப்படவில்லை. அவர்களது
எண்ணமும் செயலும் கொசுக்களை ஒழிப்பதைப் பற்றியது. ஏனெனில்,
`சிக்கல்களுக்குக் காரணம் நான்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்வது
கடினம். எல்லா சிக்கல்களுக்கும் பிறர்தான் காரணம் எனப் பழிபோடுவது
சுகமானது’.
`தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற நமது மரபின் கொள்கையை உங்கள் முன்
வைக்கிறேன். இப்போதைய நலக் குறைபாடுகளுக்குக் காரணம் கொசுக்கள்
அல்ல... மனிதர்கள்.
பெருகும் கழிவுகளின் கிருமிகளை உணவாக உட்கொண்டு தூய்மைப் பணியில்
ஈடுபட்டுள்ளவை கொசுக்கள் என்பதை மறவாதீர்கள். கொசுக்கள் எல்லாம்
சேர்ந்து கிருமிகளை உருவாக்கவில்லை; மனிதர்களுக்கு நோய் தரும்
கிருமிகளை உணவாக்கும் கொசுக்கள், மனிதர்களையும் கடிப்பதால் நோய்த்
தொற்று உருவாகிறது. இதுதான் நவன
ீ அறிவியல் சொல்லும் செய்தி. இப்போது,
ஒழிக்கப்பட வேண்டியவை கொசுக்களா... கழிவுகளா... எனச் சிந்தியுங்கள்.
- திரும்புவோம்...
வட்டிலேயே
ீ நீரைச் `சுத்திகரிப்பதற்கு' என அமைக்கப்படும் கருவிகளுக்கும்,
மேலே உள்ள அனைத்து விளக்கங்களும் பொருந்தும்.
- திரும்புவோம்...
நவன
ீ மேதைகள், `அணு உலைகளால் ஆபத்து இல்லை’ என்ற கருத்தையே
நிலைநாட்டி விட்டார்கள். கேவலம் நெகிழிக் கழிவுகளைப் பற்றி மக்களுக்கு
எடுத்துரைப்பார்களா என்ன? ஆனால், நமக்கு மாபெரும் ஒரு பொறுப்பு உள்ளது.
இந்தப் பூமி நம் இல்லம்; நமக்காகப் படைக்கப்பட்டது. மிக நேர்த்தியாக, மிக
அழகாகப் படைக்கப்பட்ட நம் கோள் இது. இங்குதான் நம் முன்னோர்
வாழ்ந்துள்ளனர். இங்குதான் நம் சந்ததியும் வாழ வேண்டும். நெகிழிக் குப்பைகள்
கொட்டப்படும் இடங்களில் மண்புழுக்களும் அட்டைப்பூச்சிகளும்கூட
மடிந்துபோகின்றன. குளங்களில் ஏரிகளில் இந்தக் குப்பைகள் கலந்து, மீ ன்களும்
பிற நீர்வாழிகளும் கூட்டம் கூட்டமாகச் சாகின்றன. காற்றில் இந்த நெகிழிகளின்
நச்சு வெப்பம் கலந்துள்ளது. இந்த அவலத்தை மாற்றும் பொறுப்பு நமக்கு
உள்ளது.
உங்கள் வட்டில்
ீ இருந்து நெகிழிகளை ஒழிக்க, சில வழிமுறைகளை
முன்வைக்கிறேன். முதலில், குழந்தைகளுக்கான பொம்மைகளைப் பாருங்கள்.
அவற்றைத் தூக்கி வசிவிட்டு,
ீ மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப்
பொருட்களை வாங்கிவையுங்கள். பொம்மைகளின் எண்ணிக்கை குறைவாக
இருப்பது அவமானம் அல்ல. ஓரிரு பொம்மைகள் இருந்தாலும்
இயற்கைப்பொருட்களில் செய்யப்பட்டவையாக இருப்பதுதான் சரி.
- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 9
விகடன்ஆனந்த விகடன் - 17 Aug, 2016 தொடர்கள்
நவன
ீ உணவுப் பழக்கத்தினால், ஒவ்வொரு செல்லிலும் செயற்கையான வேதித்
துகள்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கல் இல்லாத நபர்களே குறைவு எனும்
வகையில் மனித உடல்களில் மலம் தேங்கியுள்ளது. செரிமானம் இல்லாத
உடலில்தான் மலம் கட்டும். மலம் கட்டிய உடலில்தான் எல்லா நோய்களும்
வந்து தங்கும். வணிக உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்த பிறகே நோய்களின்
எண்ணிக்கை பெருகியது என்பதை மறக்காதீர்கள்.
நவனத்
ீ தொழில்நுட்பங்கள் புகுத்தப் பட்ட எல்லா உணவுப்பொருட் களும்
உற்பத்தியில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒரே ஓர் உணவுப் பொருள்கூட
மனிதர்களுக்கான தரத்தில் இல்லை. உங்கள் உணவின் பெரும்பகுதியை நிரப்பும்
அரிசிகள் உமி தீட்டப்பட்ட சக்கைகள். உணவு எண்ணெய்களோ, வேதிப்
பொருட்களும் பெட்ரோலியப் பொருட்களும் சேர்க்கப்பட்ட திரவங்கள்.
காய்கறிகளும் கீ ரைகளும் புழுப்பூச்சிகள்கூட வாழத் தகுதியற்ற நிலத்தில்
நஞ்சுகள் தெளிக்கப் பட்டு வளர்ந்த தாவரக் குப்பைகள். கறிக்கோழிகள் எல்லாம்
முழுக்க முழுக்க வேதி மருந்துகளால் வளர்க்கப்பட்ட புதிய வகை உயிரிகள்.
நிலைமையைச் சற்று ஆழ்ந்து கவனித்துப்பாருங்கள்... நமது ஒட்டுமொத்த
உணவுச்சூழலும் தனியார் நிறுவனங்களின் பிடியில் உள்ளது.
- திரும்புவோம்...
உங்கள் வதியில்
ீ வாழ்ந்த பால்காரர் பாலில் நீர் கலந்தார் என்பதற்காகத்தான்,
பாக்கெட் பால் வகைகளைப் போற்றி வளர்த்தீர்கள். இப்போது பாலில் நீர்
கலப்பது இல்லை; யூரியா உள்ளிட்ட வேதி நஞ்சுக்களைத்தான் கலக்கிறார்கள்.
ஆயம் என்ற சொல்லுக்கு, ‘கூடி வாழும் இடம்’ எனப் பொருள். ஆயர் என்றால்,
‘கூடி வாழ்வோர்’ எனப் பொருள். ஆடு, மாடுகளின் பட்டியும், அவற்றை
மேய்க்கும் மனிதர்களின் குடில்களும் ஒரே வேலிக்குள்தான் இருக்கும். ஆக,
ஆயம் என்பது ஆடு, மாடு, மனிதர் ஆகிய மூன்று உயிரினங்களையும் சேர்த்துக்
குறிக்கும் சொல். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆயர்களாக வாழ்ந்துள்ளோம்.
மாடுகளையும் ஆடுகளையும் நமது குடும்ப உறுப்பினர்களாகத்தான் கருதி
வாழ்ந்தோம்.
- திரும்புவோம்...
இன்னும் பல நவன
ீ வழிமுறைகளை எல்லாம் கையாண்டு, மீ ன் உற்பத்தி பல
மடங்கு உயர்த்தப்பட்டது. ஒருபக்கம் நமது நீர்நிலைகளில் ரசாயன நஞ்சுக்களும்
அயல் மீ ன்வகைகளும் நாட்டுமீ ன்களை ஒழித்துக்கட்டுகின்றன. மறுபக்கம்,
வளர்ப்புமீ ன் குட்டைகளில் பெரும்பாலானவை லாபவெறியுடன்
உயிர்விளையாட்டுக்களை நிகழ்த்திவருகின்றன.
- திரும்புவோம்...
நவன
ீ சிந்தனையின் அடித்தளமோ, உபரியை மனிதர்களுக்குள் மட்டுமே
எவ்வாறு பங்கு போட்டுக்கொள்வது என்பதைப் பற்றியதுதான்.
நவன
ீ வெறிகொண்டு வேதிப் பொருட் களைக் கலப்பதும் பின்னர் ‘வெப்பமும்
வெளிச்சமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என எச்சரிப்பதுமான
மூடத்தனம் நம்மிடம் இல்லை. எண்ணெய் ஆட்டும்போதே அதன் மிதமான
வெப்ப நிலையை நாம் உறுதிசெய்கிறோம்.
- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 15
ம.செந்தமிழன், ஓவியங்கள்: ஹாசிப்கான், எஸ்.ஏ.வி.இளையராஜா
- திரும்புவோம்...
நவன
ீ உணவுத் துறையினர், ஊட்டச்சத்து தொடர்பான அறிக்கைகளை
வழங்குகிறார்கள். மருத்துவத் துறையினர், அந்தச் சத்துக்களால் உருவாகும்
நோய்களை வைத்துக் கொழிக்கின்றனர். இது நவன
ீ அறிவியலின் கூட்டுச்
செயல்திட்டம்.
- திரும்புவோம்...
நம் வட்டுப்
ீ பிள்ளைகளின் உணவுப் பட்டியலில், ஊட்டச்சத்துப் பொருட்கள்
குவிந்துகிடக்கின்றன. அதே குழந்தைகளின் மருத்துவப் பட்டியலோ,
அதைக்காட்டிலும் பெரியதாக இருக்கிறது. `பிறந்த நாளில் இருந்தே ஊட்டச்சத்து
ஊசிகள், மருந்துகள், உணவுகள் கொடுக்கிறோமே. நம் பிள்ளைகள் ஏன்
இவ்வளவு மோசமாக நோயுற்றுத் தவிக்கிறார்கள்?’ என்ற அடிப்படையான
கேள்வியைக்கூட நீங்கள் எழுப்புவது இல்லை.
- திரும்புவோம்...
எல்லாம் வல்ல இறைக்கு எனத் தனி உருவம் இல்லை. எல்லா உருவங் களும்
இறையின் வெளிப்பாடுகள் தான். இறைவன் அல்லது இறைவி மனித உருவில்
தோன்றியதாகக் கூறப்படும் சேதிகள், புராணங்கள் எல்லா சமூகங்களிலும்
உள்ளன. ‘நன்மையைக் காக்கவும் தீமையை அழிக்கவும்’ மனித உருவெடுத்து
வருவது இறையின் குணம் என்பதுதான் இவ்வாறான சேதிகளின் பின்னால்
இருக்கும் கருத்து. தீபாவளி எனும் விழா, தமிழர் மரபில் இருந்ததற்கான
தடயங்கள் இல்லை. ஆனாலும், இவ்விழாவின் நாயகரான திருமால் வழிபாடு,
தமிழ் மரபில் மிகத் தொன்மையானது.
- திரும்புவோம்...
நவனப்
ீ பகுத்தறிவாளர்களுக்கும் நவனச்
ீ சிந்தனையாளர்களுக்கும் இறை
நம்பிக்கையின் மீ து வெறுப்பு உண்டு. ‘உங்கள் இறையியல் கருத்துக்கள்
எல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான். அவற்றுக்கு என சான்றுகள் இல்லை’
என்பார்கள். இறையியலில் ஊறித்திளைத்த நமது மரபின்வழி நின்று
அவர்களிடம் நாம் கேட்போம், ‘நவனத்தினால்தான்
ீ மனிதர்களின் ஆயுள்
அதிகரித்துள்ளது என்கிறீர்களே… இந்தக் கருத்து அறிவியலா அல்லது
நம்பிக்கையா? அறிவியல் தான் என்றால், அதற்கான சான்றுகளைக்
காட்டுங்கள்!’
நவனத்தின்
ீ தாக்குதல்களுக்கு முந்தைய நமது சமூகங்களில், எந்தச்
சான்றிதழும் இல்லை; நோய்களும் இல்லை. நமது முன்னோர், மரபுவழிப்பட்ட
உணவுப்பழக்கங்களையும் மரபு மருத்துவமுறைகளையும் கற்றவர்கள்.
- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 21
படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்
`நவன
ீ மருத்துவம்தான் பகுத்தறிவின் அடிப்படையில் செயல்படுகிறது. இதுவே
மனிதகுலத்தின் மீ ட்புக்கான மருத்துவ முறை’ என்ற நம்பிக்கை இப்போது
வேரூன்றிவிட்டது. மரபுவழிப்பட்ட மருத்துவமுறைகளைப் பற்றி எவரேனும்
பேசினாலோ, எழுதினாலோ, அவர்களை எல்லாம் ‘மூடநம்பிக்கையாளர்கள்
அல்லது பிற்போக்குவாதிகள்’ என முத்திரை குத்துவது நவனர்களுக்கு
ீ மிகவும்
உவப்பான விளையாட்டு. மரபு மருத்துவமுறைகளை ஆதரிப்போரை நோக்கி
கேலியான சொற்களை வசுவதும்,
ீ போகிறபோக்கில் அவமதிப்பதும் பல்வேறு
தளங்களில் இப்போதும் நிகழ்வதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
நமது மரபுவழிப்பட்ட மருத்துவ உன்னதங்களைப் பற்றி உங்களோடு
பகிர்ந்துகொள்ள நிறைய செய்திகள் உள்ளன. அவற்றுக்கு முன்னர் எந்த நவன
ீ
மருத்துவம் மரபுகளைக் கேலிசெய்கிறதோ, அந்த நவன
ீ மருத்துவத்தின்
`தந்தை’யை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 22
ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்
- திரும்புவோம்...
நவன
ீ மருத்துவத் துறையின் சீர்கேடுகளைப் பற்றி மக்களிடையே
உரையாடும்போது எல்லாம், என் போன்றோர் எதிர்கொள்ளும் கேள்விகளில்
முதன்மையானது... ‘காலரா போன்ற மோசமான நோய்களை நவன
ீ
மருத்துவம்தானே ஒழித்தது?’ என்பதாகும். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது
அல்ல என் நோக்கம். இதன் பின்னால் இருக்கும் அறியாமையை அகற்றி,
உண்மையான நலவாழ்வை சமூகத்தில் பரவச் செய்வதற்காக இது குறித்த சில
தகவல்களைப் பகிர்கிறேன்.
நோய்களும் நவன
ீ மருத்துவமும் பிரிக்க இயலாத இரட்டையர்கள். இந்த
இரட்டையரைப் பெற்று வளர்ப்பவை, பெருநிறுவனங்கள். மரபுவழிப்பட்ட
வாழ்வியலைச் சிதைத்து, மக்களை நோயாளிகளாக்குவதும், பின்னர்
அவர்களிடம் மருந்து விற்பதும் நூற்றாண்டு கண்ட தொழில்நுட்பங்கள்.
- திரும்புவோம்...
Vein).’
விளைவு, வட்டுக்கு
ீ வடு
ீ நோயாளிகள் என்ற அளவில் நோயாளிச் சமூகம்
உருவாகிவிட்டது. சர்க்கரை நோய் காரணமாக சில ஆண்டுகளாக மருந்துகள்
உட்கொண்ட ஒருவருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதால், அவருக்கு
வழங்கப்பட்ட மருந்துகளும் அதற்கான காரணம்தான் என்ற தகவல்
பெரும்பகுதி மக்களுக்குத் தெரிவது இல்லை. `சர்க்கரையால் சிறுநீரகம்
செயலிழந்ததா... மருந்துகளால் செயலிழந்ததா?’ என்ற கேள்விக்கு உரிய விடை
அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்தக் கேள்வியைக் கேட்டால்தானே, பதில்
சொல்லவேண்டிய தேவை அந்தத் துறையினருக்கு உருவாகும். ஆனால், இங்கே
எவருமே கேள்வி கேட்பது இல்லையே!
- திரும்புவோம்...
- திரும்புவோம்...
- திரும்புவோம்...
முளைக்கீ ரை, தண்டுக்கீ ரை, அறுகீ ரை, சிறுகீ ரை, புளிச்சக்கீ ரை போன்றவை
விதை வழியாகப் பரவுபவை. இந்தக் கீ ரைச் செடிகள் பூக்கும் முன் அறுவடை
செய்தால், அவை நல்ல உணவுகள். இந்த நிலையில், அவற்றில் நீரும்
வெப்பமும் கூடுதலாக இருக்கும். பூக்கத் தொடங்கிவிட்டால் காற்றும்
வெப்பமும் கலந்திருக்கும். பூக்களில் இருந்து விதைகள் தோன்றத்
தொடங்கினால், காற்று, வெப்பம், நிலம் ஆகிய மூன்றும் இருக்கும்.
- திரும்புவோம்...
- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 29
ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி
- திரும்புவோம்...
- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 31
ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி
- திரும்புவோம்...
- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 33
ம.செந்தமிழன் - படங்கள்: தேனி ஈஸ்வர்
- திரும்புவோம்...
இப்போதைய நவன
ீ சமூகத்தின் அன்றாடத்தைக் கவனியுங்கள். வியர்வையே
இல்லாத சூழலை உருவாக்கப்பட்டுள்ளது. வியர்வை வழியாக
வெளியேறவேண்டிய உவர்ப்பு எனும் பெருங்கழிவுக்கு இந்த வாழ்வியலில்
உள்ள மாற்று ஏற்பாடு என்ன? எப்போதும் குளிரில் வாழும் வகையில்
பனிக்கரடிகளும் பாண்டா கரடிகளும் படைக்கப்பட்டுள்ளன. ஆகையால்தான்
அவற்றின் உடல் உரோமங்களால் மூடப்பட்டுள்ளது. மனிதகுலத்தின்
சிறுபான்மையினர்தான், குளிர் நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களது தோலில்
உள்ள வெண்மைதான் அவர்களுக்கான வெப்பத்தைத் தரும் பாதுகாப்பு அரண்.
- திரும்புவோம்...