You are on page 1of 224

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

திரைப்பட இயக்குநர், ஆவணப்பட இயக்குநர், பத்திரிகையாளர், மரபுவழி


மருத்துவர் என ம.செந்தமிழனுக்குப் பல அடையாளங்கள். எந்தக் களமானாலும்,
தமிழின் தொன்மையை முன்வைத்து நம் சமூகத்துடன் உரையாடுவதும்
பணியாற்றுவதுமே இவரது சிறப்பு. நவனமயமாக்கத்தின்
ீ கண்மூடித்தனமான
பாய்ச்சலில் இன்று கல்வி, வேளாண்மை, உடல்நலம் போன்றவற்றின்
அடிப்படையான கூறுகள் குழம்பிக்கிடக்கின்றன. இதன் மோசமான
விளைவுகளைச் செந்தமிழன் பல்வேறு தளங்களில் உரக்கப் பேசிவருகிறார்.

பிரச்னைகளைச் சொல்வதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வுகளைத்


தமிழர்களின் தொல்மரபில் இருந்து உள்வாங்கி, அதை நடைமுறைக்கும்
கொண்டுவர இவர் மேற்கொள்ளும் பணிகள் ஓர் இயக்கமாகவே இப்போது
உருவெடுத்து நிற்கின்றன.

செந்தமிழனின் சொந்த ஊர் தஞ்சை அருகில் உள்ள ஆச்சாம்பட்டி. ஊடகத்


துறை மீ தான விருப்பத்தில் சென்னைக்கு இடம்பெயர்ந்து பல்வேறு
பத்திரிகைகளில் பணிபுரிந்தார். 2006-ம் ஆண்டில் அந்த வேலைகளை எல்லாம்
விட்டுவிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார்.
அங்கு இருந்தே பல ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 2011-ம் ஆண்டில்
இவர் இயக்கத்தில் ‘பாலை’ திரைப்படம் வெளிவந்தது. இரண்டாயிரம்
வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கைக்குள் நான்காம் ஈழப்போரைப்
பொதிந்துவைத்து அழுத்தமான சில செய்திகளை அந்தப் படம் முன்வைத்தது.
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி -1
விகடன் - ஆனந்த விகடன் - 22 Jun, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (16/06/2016) ம.செந்தமிழன், படம்: அய்.அசோக்

திரும்பிச் செல்லுதல் எப்போதும் இன்பம் தரக்கூடியது. எங்கு திரிந்தாலும்


வடு
ீ திரும்ப வேண்டும். வடு
ீ என்பது, குடியிருக்கும் இடத்தையும் குறிக்கும்;
இறையின் திருவடியையும் குறிக்கும். அலைவதும் திரிவதும் திரும்பிச்
செல்வதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டால், இன்பம் குடிகொள்ளும்.

முன்னேற்றம் என்ற கருத்து வலுவாகவும் கருணையற்ற வகையிலும்


முன்வைக்கப்படும் காலம் இது. `முன்னேறி முன்னேறி எங்கு செல்வது?' என்ற
கேள்வியைக் கேட்டால், எவரிடமும் பொருத்தமான விடை இல்லை.
`முன்னேற்றத்துக்கான பாதை கடுமையானதாகவும் சுயநல
வெறிகொண்டதாகவும் இருக்கிறதே... இது சரியா?’ என்ற கேள்விக்கும்
பொருத்தமான விளக்கம் இல்லை. `இவற்றை எல்லாம் கண்டு கலங்கினால், நீ
அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாமல்போகும். ஆகவே, ஓடு… ஓடு…
நிற்காதே’ என்ற அறிவுரை எல்லா தரப்பிலும் வழங்கப்படுகிறது.
சொர்க்கத்தை அடைவதுதான் உங்கள் இலக்கு என்றால், அதற்கான பாதை
நரகமாக இருக்க முடியாது.

வறண்ட ஆறுகளில் காய்ந்துகிடக்கும் நாணல் கோரைகள்,


தொழிற்பேட்டைகளுக்காக அழிக்கப்பட்ட மேய்ச்சல் காடுகளில் இருந்து தப்பி
ஓட வழியின்றி வாகனங்களில் அடிபட்டு செத்துக்கிடக்கும் பாம்புகள், ரசாயன
நஞ்சுகள் கடலில் கலக்கப்பட்டதால் பெருங்கூட்டமாகச் செத்துக் கரை
ஒதுங்கும் திமிங்கலங்கள் எல்லாம் வளர்ச்சிக்காகப்
பலிகொடுக்கப்படுபவைதான். `எந்தக் கேள்வியும் கேட்காதே, எல்லாம்
முன்னேற்றத்துக்காக. நிற்காதே, திரும்பிப் பார்க்காதே, போய்க்கொண்டே இரு’
என்ற சிந்தனை ஆட்டிப்படைக்கும் காலம் இது.

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத்


தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும். மலைகளை வெட்டுகிறீர்களா?
நன்றாக வெட்டுங்கள். பெருங் கடல்களுக்குக் கீ ழே உள்ள கண்டத் திட்டுகளை
சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள்
முளைத்து வந்து விடும். இமயமலை பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான்.
பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச்
சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே
கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில்
இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

எரிவாயு எடுக்கிறீர்களா? நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி


நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா? நன்றாகத் துப்புங்கள். ஒரே ஒரு
நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே
விழுங்கிக் கொள்ளும். அந்த உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும்
தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற
‘செல்வங்களாகவும்’ மாற்றப்படும்.

காடுகளை அழிக்கிறீர்களா? நன்றாக அழியுங்கள். ஒரே ஒரு பெருமழை,


காடுகளை அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் கட்டி
வைத்தக் கட்டடங்களையும் விழுங்கிச் செரித்துவிடும். ஆகப்பெரிய
அரண்மனைகளின் மதில்களில்கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.

பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். அதற்குப் பின்னர், `முன்னேற்றம்',


`வளர்ச்சி' போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ
ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில்
சிதைந்துகிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.

இயற்கையைச் சீரழித்து வளர்ச்சி காணுதல் என்பதன் உண்மையான பொருள்,


மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களும்
இயற்கையின் அங்கங்கள் தான். இயற்கை வேறு, மனிதர் வேறு என்ற
மயக்கத்தை நவன
ீ அறிவியல் நிலைநாட்டியுள்ளது. இயற்கையின் பார்வையில்
வளர்ச்சி என்பது, முடிவை நோக்கிய பயணத்தைக் குறிக்கிறது.

வெகுவேகமாக வளரும் முருங்கைமரங்கள் எளிதில் முறிந்துபோகின்றன.


மிகவும் நிதானமாக வளரும் பனைமரங்கள் கல் போன்று உறுதியாக
நிற்கின்றன. நாற்பதே நாட்களில் வளர்ந்து, அறுபது நாட்களில் பூக்கும்
குரோட்டன் செடிகள் யாவும் தண்ண ீரின் சலசலப்பில்கூட வேர்களை இழந்து
சரிகின்றன. பொறுமையாக வளரும் கள்ளிச்செடிகள் கடும் வறட்சியையும்
பெருமழையையும் தாங்கி, வேர்களை இழக்காமல் நீடிக்கின்றன. ஆமைகளின்
வளரும் வேகமும் நகரும் வேகமும் குறைவு. அவற்றின் ஆயுள்,
நூற்றாண்டுக்கணக்கில் நீள்கிறது. பிறந்த சில நாட்களில் இறக்கை வளர்த்து,
ஒரு நொடிக்கு பல நூறு முறை படபடத்துப் பறக்கும் பூச்சியினங்கள்
யாவற்றின் ஆயுட்காலமும் வாரக்கணக்கில் அடங்கிவிடுகிறது.

வளர்ச்சி எப்போதுமே முடிவை நோக்கியதுதான். வாழ்க்கையும் அப்படியே.


ஆனால், அந்த வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பது
உங்கள் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.
குரோட்டன் செடிகளுக்கும் பட்டாம்பூச்சி களுக்கும் தமது ஆயுட்காலம் குறித்த
அக்கறை இல்லை. அவை எல்லாம் ஓரறிவு, மூவறிவு உயிரினங்கள்.
மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. மனம்தான் ஆறாம் அறிவு. இந்த மனம்தான்
வாழ்க்கையின் போக்கை முடிவுசெய்கிறது. இதே மனம்தான் `வாழ்க்கைக்குப்
பொருள் உள்ளதா?' எனச் சிந்திக்கிறது; இன்பம், துன்பம் குறித்து
கவலைகொள்கிறது; ஆயுட்காலத்தைப் பற்றிய ஆசைகளை உருவாக்குகிறது.
மனிதர்கள் மனதால் வாழப் பிறந்தவர்கள். இந்தக் கட்டுரையின் வழியாக நான்
உங்கள் மனதுடன்தான் உரையாடுகிறேன். நீங்கள் யாராக இருந்தாலும்
உங்களுக்கும் எனக்கும் மனது ஒன்றுதான்.

முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவை உங்களை அதிவேகமாகப் பயணிக்கும்படி


தூண்டுகின்றன. வளர்ச்சியை விரைவுபடுத்தும் எல்லா செயல்களும்
மனிதர்களுக்கு அழிவைத் தருகின்றன.
கீ ரைச் செடிகளின் வளர்ச்சிக்கு  இயற்கை வகுத்த காலம், ஏறத்தாழ 60 நாட்கள்.
நிலத்தின் தன்மைக்குத் தகுந்தாற்போல வளர்ச்சியின் வேகம் மாறுபட
வேண்டும் என்பது விதி. 20 நாட்களில் இப்போது கீ ரைகள் வளர்க்கப்படுகின்றன.
இதற்காக அவை வளரும் நிலத்தில் கொட்டப்படும் ரசாயனங்களும், அவற்றைத்
தாக்கும் பூச்சிகளைக் கொலை செய்ய தெளிக்கப்படும் நஞ்சுகளும் ஏராளம்.
இப்போது கீ ரைகளின் வளர்ச்சி வேகம் அதிகமாகியுள்ளது. ஆனால், அந்தக்
கீ ரை?

கோழிகள் ஒரு கிலோ எடை வருவதற்கே ஆறு மாதங்கள் ஆகும். 33 நாட்களில்


ஒன்றரைக் கிலோ எடைக்கு வளர்க்கப்படுகின்றன பிராய்லர் கோழிகள். கோழி
இறைச்சி உணவு அல்ல... நஞ்சு.
நவன
ீ அறிவியல் வளர்க்கும் மீ ன்கள், ஆடுகள், மாடுகள், பன்றிகள், முயல்கள்,
மரங்கள், மனிதர்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் வளர்ச்சி வேகம்
அதிகம்; வாழும் காலம் குறைவு. நவனத்தின்
ீ சுவடு தெரியாத காடுகளில்
வாழும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் தமக்கு வழங்கப்பட்ட
ஆயுட்காலத்தை நிம்மதியாக நிறைவுசெய்வதைப் பார்க்கிறேன். நவன

சமூகத்தில் எல்லாமே வேகமெடுத்து ஆடும் அரவங்களாக இருக்கின்றன.

இயற்கை விதிகளை மீ றி வளரும் உயிர்களைத் தண்டித்து அழிப்பதற்கு சில


ஏற்பாடுகள் உள்ளன. அவற்றை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ரசாயன உரங்களால் அதிவேகமாக வளர்ச்சி காணும் பயிர்கள் பூச்சித்


தாக்குதலுக்கு உள்ளாகின்றன. வேளாண்மை செய்வோருக்கு இது தெரியும்.
ரசாயன அடி உரங்கள் இட்டால், விதைகள் வேகமாக முளைத்து வெளிவரும்.
நீர் பாய்ச்சும்போது யூரியாவைக் கலந்துவிட்டால், பயிர்களின் வளர்ச்சி
வேகமடையும். இயற்கையான முறையில் 30 நாட்களில் நிகழும் செயல்கள்
யாவும் செயற்கைமுறையில் 15 நாட்களில் நடக்கும். செயற்கை வயல்கள்
எப்போதும் பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கும்.
இது விதி மீ றிய வளர்ச்சி என்பதை இயற்கையின் பேராற்றல் உணர்கிறது. இந்த
வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என, தனது படைகளை
அனுப்பிவைக்கிறது. யூரியா இடப்பட்ட வயலில் பூச்சிகள் படையெடுப்பு
அதிகமாக இருக்கிறது. பூச்சிகளை அழிக்க நஞ்சு தெளித்தால், ஊட்டச்சத்துகளும்
அழிந்துபோகின்றன. விளைவு, பயிர்களில் நோய்த்தொற்று உருவாகும்.
நோய்களைக் கட்டுப்படுத்த மீ ண்டும் நஞ்சுகளைத் தெளிக்க வேண்டும்,
ஊட்டச்சத்து ரசாயனங்களையும் கொட்ட வேண்டும். அறுவடையின் அளவு
மிகுதிதான். ஆனால், அறுவடை ஆனது உணவு அல்ல, நஞ்சு.

இயற்கையான முறைகளில் வளர்க்கப்படும் பயிர்கள் நிதானமாக வளர்கின்றன.


நிலத்தின் தன்மைக்கேற்ற வகையில் அவற்றின் வளர்ச்சி இருக்கிறது. அந்த
வயலில் பூச்சிகளின் தாக்குதல் குறைவு, நோய்களும் குறைவு. முழுமையான
இயற்கைச் சூழலில் உள்ள பண்ணைகளில் பூச்சிகள் வாழ்ந்தாலும், அவை
பயிரைச் சேதப்படுத்துவது இல்லை. தனது விதிகளை மதிக்கும் மனிதர்களை
இயற்கையின் பேராற்றலும் மதிக்கிறது.

பத்து வயதில் கற்கவேண்டிய கல்வியை, ஐந்து வயதில் கற்பது குழந்தைகளின்


வளர்ச்சிக்கு நல்லது என இந்தச் சமூகம் ஆசைப்பட்டது. இப்போது,
குழந்தைகளின் வெகுளித்தனம் சிதையும் அளவுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

குழந்தைகள், வேக வேகமாகக் கிளம்புகிறார்கள்; பசிக்காமல் சாப்பிடுகிறார்கள்.


மலம் கழிக்க அவகாசம் போதவில்லை. காலுறைகளும் பூட்ஸுகளும்
அவர்களது கால்களில் திணிக்கப்படுகின்றன. பள்ளிக்கூடம் வேகமாக
இயங்குகிறது. என்னென்னவோ கற்றுத் தருகிறார்கள். குழந்தைகள் அவை
அனைத்தையும் கவனிக்கிறார்கள். விளையாட்டும் வேகமாக உள்ளது, வெற்றி-
தோல்விகளும் வேகமாக வந்து போகின்றன. பத்து வயதில் அவர்கள் நிறையக்
கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால், இந்தக் காலத்தில் அவர்களுடைய உடல்நிலை


பலவனப்பட்டுவிடுகிறது.
ீ உடல் பருமன், பார்வைக்குறைபாடு, மூச்சிரைப்பு,
அடிக்கடி காய்ச்சல் எனத் தொடங்கி, சிறுவயது சர்க்கரை நோய் வரையில்
உடல்நலக் குறைபாடுகள் பல்கிப் பெருகிவிட்டன. உடல் நோய்கள் மட்டும்
அல்ல, சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு என மனநல மருத்துவமனைகள்
பெருகிக்கொண்டே இருக்கின்றனவே, இதற்குக் காரணம் என்னவெனச்
சிந்தியுங்கள்.

வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தினால், அதற்கான தண்டனையை


அனுபவித்தே ஆகவேண்டும். இதுதான் படைப்பின் விதி. ஒருபக்கம் வளர்ச்சி,
முன்னேற்றம் என ஓடிக்கொண்டு, மறுபக்கம் நல்ல வாழ்க்கை வேண்டும் எனக்
கனவு காண்பதும் பொருத்தமற்றது.

கடந்த நூற்றாண்டில் நாம் வந்த பாதைக்கு `முன்னேற்றப் பாதை' எனப்


பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் பாதை, மனிதகுலத்தை இயற்கையின்
அரவணைப்பில் இருந்து துண்டித்துவிட்டது. அமைதியும் இன்பமும் நிறைந்த
வாழ்க்கை வேண்டுமானால், இந்தப் பாதையில் இருந்து விலகித்தான் செல்ல
வேண்டும். வந்த வழி தவறானது எனத் தெரிந்துகொண்டால், திரும்பிச்
செல்வதுதான் சரியானது.
இன்றைய வாழ்க்கைமுறைக்கான எல்லா தீர்வுகளும் நவன
ீ சமூகக்
கட்டமைப்பில் மட்டுமே உள்ளது என்ற மாயக் கருத்து வலுவாகக்
கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது மரபுகளை மீ ட்டெடுப்பதன் வழியாக, நமக்கான
வாழ்க்கைத் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

நமது வேர்கள் இன்னும் காய்ந்துவிடவில்லை. நமது மரபு, பனைமரத்துக்கு


ஒப்பானது. மிகவும் நிதானமாக பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த மரபு நமது.
ஆகவே, இதன் ஆயுளும் மிக அதிகம். அந்த மரபில் இருந்து நமது
வாழ்வியலைக் கட்டமைக்கும் அறிவை முன்வைக்க விரும்புகிறேன்.

- திரும்பிச் செல்வோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி – 2


விகடன் – ஆனந்த விகடன் - 29 Jun, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (23/06/2016)

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனும் கருத்தை ஆசான் திருவள்ளுவர்


அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். `முன்னோர் எவ்வளவோ அறக்
கருத்துகளை எழுதிச் சென்றிருக்கிறார்கள். அவை அனைத்திலும்
முதன்மையானது ‘பல்லுயிர் ஓம்புதல்’. `ஓர் உயிரினத்தைப்
பயன்படுத்திக்கொண்டே பாதுகாக்கவும் செய்வதுதான் ஓம்புதல்’ என இந்தச்
சொல்லின் பொருளை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் தற்சார்பு
வேளாண் வல்லுநர் பாமயன். மிக ஆழமான அர்த்தமுள்ள சொல். 

மரங்களை வெட்டிப் பயன்படுத்திக் கொண்டே, காடு வளர்க்க வேண்டும்.


கால்நடைகளை உணவுத் தேவைகளுக்கும் பிற தொழில்களுக்கும்
பயன்படுத்திக்கொண்டே, அவற்றைப் பராமரித்துப் பெருக்க வேண்டும். இதுதான்
ஓம்பும் வழிமுறை. `இருக்கும் வளங்களை சக மனிதருக்கும் பிற உயிரினங்
களுக்கும் பகுத்துக்கொடுத்து வாழும் வழிமுறை தான், மற்ற அனைத்தைக்
காட்டிலும் தலையானது’ என்ற நமது மரபுக் கொள்கை இந்தக் காலச்
சிக்கல்களை ஒழிக்கும் வலிமையுடையது.

கூடியிருத்தல் என்பது உயிர்களின் அடிப்படை இயல்பு. உயர்ந்த வகை


சத்துணவு கொடுத்து வழங்கப்படும் சரணாலயத்துப் புலியைவிட, இரை
விலங்குகள் குறைவாக இருந்தாலும், காட்டுப் புலி வலுவாக வாழ்கிறது.
வறுமையில் உழன்றாலும் உற்றார் உறவுகளோடு வாழும் மனிதர்கள், தனித்து
வாழும் செல்வந்தர்களைக் காட்டிலும் நலமாக இருக்கிறார்கள். உணவும்
உறைவிடமும் உயிர் நீடித்தலுக்கு அடிப்படைகள். சுற்றமும் சூழலும்
வாழ்க்கையின் அடிப்படைகள். நீங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமானால், 
சுற்றம் சூழலைப் போற்ற வேண்டும்.

கூடியிருக்கும்போது உயிர் இன்பம் அடைகிறது. உயிரின் ஒரே ஒரு குறிக்கோள்


இன்பமாக இருப்பதுதான். பிறவி எடுப்பதே இன்பமாக இருக்கத்தானே! எல்லாக்
கொள்கை களும் சமயங்களும் கண்டுபிடிப்புகளும் இன்பத்தை நோக்கிய
பயணத்துக்கான வழித் துணைகள்தானே!

கடந்த நூற்றாண்டில் நமது சமூகத்தின்மீ து திணிக்கப்பட்ட கருத்துகள் இதற்கு


எதிரானவையாக இருந்தன. தனித்துச் செல்லுதல், தனித்து இயங்குதல்
ஆகியவைதான் முன்னேற்றத்துக்குத் துணை செய்யும் குணங்கள் என்ற கருத்து
பலவிதங்களில் பரப்பப்பட்டது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மீ து
பெரும் கருத்துப் போர் தொடுக்கப் பட்டது. மூத்தோர் கருத்துகள் யாவும்
‘பழமைவாதம்’ எனும் முத்திரைக்குள் முடக்கப்பட்டன.

பெற்றோரும் பிள்ளைகளும் மட்டும் அல்ல, சகோதர உறவுகளும் மூத்தோரும்


கூடிவாழ்ந்த குடும்பங்கள் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, நீக்கமற
நிறைந்திருந்தன. கால்நடைகளுக்கும் பெயர்வைத்து உறவுகொண்டாடிய
குடும்பங்கள் அப்போது எண்ணிக்கையில் மிகையாக இருந்தன. இந்தச் சமூக
அமைப்பில் குழந்தை மற்றும் முதியோர் காப்பகங்கள், மருத்துவமனைகள்,
மனநல மையங்கள் குறைவாக இருந்தன. மிக முக்கியமாக, போதை
அடிமைகளின் எண்ணிக்கை அப்போது குறைவு.
நமது கூட்டுக் குடும்பங்கள் சமூகத்தின் பொருளாதார
உற்பத்திமையங்களாகவும் இருந்தன. ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு
பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டது. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு,
கைவினைத் தொழில்கள், நெசவு போன்ற தொழில்கள் யாவும் குடும்ப
உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் குடும்பங்களில் வளர்ந்த
பிள்ளைகள் இளம் பருவத்திலேயே தொழிற்கல்வியைக் கற்றுக் கொண்டனர்.
பொதுக் கல்விக்காக மட்டும், பள்ளி களுக்குச் சென்றனர்.

ஒருவரை ஒருவர் அரவணைக்கும் வாய்ப்பு அப்போது இருந்தது. நகரங்களின்


உருவாக்கமும் நவன
ீ தொழிற்பெருக்கமும் இந்தக் கூட்டு வாழ்க்கையைக்
கேலிசெய்தன. `பொருளாதாரம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்’ என்ற மாயக்
கருத்து கட்டமைக்கப்பட்டது.

பொருளாதாரத்துக்காக நகரங்களுக்குச் செல்லுதல் நாகரிகமாகச்


சித்தரிக்கப்பட்டது. அறம் பிறழாத வாழ்க்கையை வாழ்வதுதான் நாகரிகம்
எனப்படும். ஆனால், எல்லா அறங்களையும் சாய்த்துவிட்டு வளர்ந்த நவனக்

கட்டமைப்புக்கு  `நாகரிகச் சமூகம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

தனித்துச் செல்லுதல் எனும் சிந்தனையைப் பொருளாதார ஆதாயம்


நியாயப்படுத்தியது. தொடக்கத்தில் பெற்றோரைப் பிரிந்து பிள்ளைகள் சென்றனர்.
இப்போது கணவனும் மனைவியும் பிரிந்துகிடக்கின்றனர். இந்தப் பிரிவுகளும்
அவை தரும் துயரங்களும் பொருளாதாரம் எனும் வரம் பெறுவதற்கான தவம்!

சேர்ந்து வாழும் மனிதர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள். ஒரே வட்டில்



இருந்தாலும் கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகிய மூன்று உறவு களுக்குமான
இடைவெளி கூடிவிட்டது. விடிந்ததும் மூவரும் மூன்று திசைகளில்
பயணிக்கின்றனர். இருட்டியதும் மூவரும் ஒரு வட்டுக்குள்
ீ அடைகின்றனர்.
மூவருக்குமான இலக்குகள் வேறு, தடைகளும் வெற்றிகளும் வேறு.
மூவருக்குமான உரையாடலில்கூட, தங்கள் இலக்குகளைப் பற்றிய சொற்களே
நிரம்பியுள்ளன.

எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவனம்


ீ நடத்தும் பொருளாதாரப்
பந்தயத்தில் ஓடுவதற்குச் சொந்த ஊர் சுமையாக இருந்தது... அதை உதறி
வசினார்கள்.
ீ வேகம் மேலும் கூடியது. பந்தயம் மேலும் கடினமானபோது
தாய்மொழி சுமையாக இருந்தது... அதையும் வசினார்கள்.
ீ வேகம் அதிகரித்தது.
பின்னர், அறச் சிந்தனைகள் பெரும் சுமையாகின. அவை அனைத்தையும்
உதறிவிட்டு ஓடினார்கள். இறுதியாக உறவுகள் யாவும் சுமையாகிப்போயின.
அவற்றையும் கழற்றி வசிவிட்டு
ீ பொருளாதாரப் பந்தயத்தில் ஓடிக்
கொண்டிருக்கிறார்கள் நவன
ீ மனிதர்கள். இப்போது, `பொருளாதாரம் மற்றும்
வெற்றிகரமான வாழ்க்கை’ என்ற வெறி மட்டுமே விஞ்சியுள்ளது. இனி வசி

எறிய எதுவும் இல்லை.

குடும்பங்கள் யாவும் சிதறிக்கிடக்கின்றன. மடிக் கணினித் திரை வழியாக பேரப்


பிள்ளைகளைக் கொஞ்சும் பெரியவர்கள் உருவாகிவிட்டார்கள். பிறந்த
பிள்ளையின் பசிக்கு பால் ஊட்டவும், மலத்தைக் கழுவவும்கூட நேரம் இல்லாத
இளம் அம்மாக்கள் உருவாகியுள்ளனர். மனைவி அடிவயிற்று வலியால்
துடித்தாலும், அரவணைத்துத் தட்டிக்கொடுக்கும் பக்குவம் இல்லாத இளம்
கணவர்கள் உருவாகியிருக்கிறார்கள். பல பெரியவர்களுக்குப் பிள்ளைகளைப்
பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது. பிள்ளைகளால் மருத்துவச்
செலவுக்குப் பணம் அனுப்ப முடிகிறது; வந்து பார்க்க வழி இல்லை.

எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்கள் விழுங்கிக்கொண்டுவிட்டன.


நகரங்கள் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன. மனித மாண்பு வெகுவாகச்
சுருங்கிவிட்டது. மூன்றே வயது நிரம்பிய பிள்ளைகள்  மழலைக் காப்பகத்துக்கு
அனுப்பப்படுகிறார்கள். இந்தக் காலக் கல்வி முறையில், பிள்ளைகள்
முழுமையாக வட்டில்
ீ இருப்பதே ஐந்து வயது வரைக்கும்தான். அதன் பின்னர்
ஓடத் தொடங்கும் அவர்கள், வாழ்நாள் முழுவதும் நிற்பதற்கே வழி இல்லை.
அந்த ஐந்து வயது வரைக்குமாவது பெற்றோருடனும் உறவினருடனும் வாழும்
உரிமை குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை.

தொடக்கத்தில், கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடும்பங்களாகப் பிரிந்தன. இப்போது


தனிக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித் தனியாகப் பிரிந்து
இயங்குகிறார்கள்.

பெற்ற பிள்ளைகளை ஐந்தே ஐந்து ஆண்டுகள் கூட பார்த்துக்கொள்ள முடியாத


சமூகத்துக்கு, மழையும் காற்றும் சீராக வழங்கப்படுமா என்ன?

சற்றே நிதானித்து, உங்கள் ஓட்டத்தைக் கொஞ்சம் இடைநிறுத்திவிட்டு உங்கள்


குடும்பத் தினரின் நிலையைப் பாருங்கள். முதியோர், குழந்தைகள் ஆகிய இரு
பிரிவினரும் நிம்மதியாக இருக்கிறார்களா எனக் கவனியுங்கள். இவர்களுக்காக
பணம் செலவிடுவதைப் பற்றி பேசாதீர்கள். இந்த இரு பிரிவினர் இடையே
அதிகரித்துள்ள மனநோய் மற்றும் உடல்நோய்களுக்கு உங்கள் அலட்சியமும்
அறியாமையும் காரணம் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.

நீரிழிவு, முடக்குவாதம், இதயநோய், சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட


நலக் கேடுகள் யாவும் முதியோர் சமூகத்தைக் கொடூரமாகத்
தாக்கிக்கொண்டுள்ளன என்பதை அறியாதிருக் கிறீர்களா? இந்த நோய்களுக்கும்,
மனநலப் பாதிப்பு களுக்கும் மிக நெருக்கமான உறவு உண்டு என்பதை எல்லா
மருத்துவமுறைகளும் உரைக்கின்றனவே... அந்தச் சேதி உங்கள் செவிகளில்
விழவே இல்லையா? மேற்கண்ட நோய்களை மருந்துகளால் தீர்க்க முடியாது,
வாழ்க்கைமுறை மாற்றம்தான் ஒரே தீர்வு என்பதை எப்போது
உணரப்போகிறீர்கள்.

சிறார் நீரிழிவு, சிறார் காமாலை ஆகியவை எல்லாம் இப்போது சரளமாகப்


புழங்கும் சொற்களாகிவிட்டன என்பதை நீங்கள் அறியா திருக்கிறீர்களா?
கண்ணாடி அணியும் பிள்ளைகள் பெருகிக்கொண்டே போகிறார்கள், உடல்
பருத்த குழந்தைகள், அளவுக்கு அதிகமான சேட்டைகள் செய்யும் பிள்ளைகள்,
மூச்சிரைப்பால் அவதியுறும் குழந்தைகள் உங்களைச் சுற்றி அதிகரித்துக்
கொண்டே இருக்கிறார்கள். இவற்றுக்கு எல்லாம் காரணம் தேடாதிருக்கிறீர்களா...
அல்லது காரணம் தெரிந்தும் ஒப்புக்கொள்ள மனம் இல்லா திருக்கிறீர்களா?

எவ்வளவு மனக் கசப்புகள் இருந்தாலும் அன்புக்கு உரியவர்கள் ஆரத்


தழுவும்போது கிடைக்கும் இன்பத்தை ஒவ்வோர் உயிரும் விரும்புகிறது. இந்த
நவனம்
ீ உங்கள் அறிவுப் பசிக்கு இரை வழங்கலாம். உங்கள் உயிரின்
வேட்கையை அதனால் ஒருபோதும் தணிக்க இயலாது. உங்கள்
பெருமிதங்களுக்கு இந்த நவனம்
ீ கோட்டை கட்டித் தரலாம். உங்கள் மனதின்
சுகத்துக்கு அதனால் சிறு குடிலைக்கூட அமைக்க முடியாது. மனம் அமைதி
அடைந்தால், உயிர் இன்பம் அடையும். உயிர் இன்பம் அடைந்தால், உடல்
எப்போதும் உற்சாகத்துடன் இயங்கும்.

தனித்து இயங்கக் கிளம்பியவர்களால் நிறுவனங் களின் பொருளாதாரப் பெரும்


பசி தணிந்துள்ளது. ஒரு கூட்டுக் குடும்பம் ஐந்தாகப் பிரிந்த பின்னர், ஐந்து
வாகனங்கள் வாங்கப்படுகின்றன. ஐந்து குளிர்பதனப் பெட்டிகள், ஐந்து
தொலைக்காட்சிப் பெட்டிகள் என எல்லா சாதனங்களின் விற்பனையும்
அதிகரித்துள்ளது.

இவற்றுக்கு எல்லாம் மேலாக, கட்டுமானத் துறை பட்டொளி வசிப்


ீ பறக்கத்
தொடங்கியது கூட்டுக் குடும்பங்களின் அழிவுக்குப் பின்னர்தான். ஒரு
குடும்பத்தில் ஏழு பிள்ளைகள் என்றால்,  குறைந்தது ஏழு வடுகள்

கட்டப்படுகின்றன. நில வணிகம் அதிகரித்துள்ளது. வயல்வெளிகள் யாவும்
வளைத்துப்போடப்படுகின்றன. கட்டப்படும் வடுகளுக்கு
ீ ஆற்றையே சுரண்டி
மணல் அள்ளப் படுகிறது. செங்கல் சூளைகளுக்காக பனைமரக் காடுகள்
அழிக்கப்படுகின்றன. வடுகளில்
ீ பதிக்கும் அழகுக் கற்களுக்காக பல மலைகள்
வெட்டிக் கூறு போடப்படுகின்றன. இன்னும் இன்னும் பல வகைகளில் நவனம்

தனது `தொழிற்துறையை’ வளர்த்தெடுத்துள்ளது.

`பகுத்துண்டு வாழும்’ முறையை விட்டொழித்ததால், மனித உறவுகள்


சிதைந்துபோயின. `பல்லுயிர் ஓம்பும்’ அறம் இல்லா தொழிந்ததால்,
இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைவெளி அதிகரித்தது. மனிதர்களும்
இயற்கையின் அங்கங்கள். இயற்கையின் பிற உயிரினங்களைப்போல, நாமும்
கூடிவாழ வேண்டும் என்ற சிந்தனையை இந்தக் காலத்தில் மீ ட்டெழுப்ப
வேண்டும் என்பது என் விருப்பம்.

பல்லாயிரம் ஆண்டுகால ஆயுள்கொண்ட நமது மரபு வாழ்வியலை, நவனச்



சிந்தனை வெறும் 50 ஆண்டுகளில் வசி
ீ எறிந்துள்ளது. கடந்த நூற்றாண்டில்
பிறந்த நவனம்
ீ எனும் அந்தச் சிறுபிள்ளையை ஏன் நம்மால் புறந்தள்ள
முடியாது?!

- திரும்புவோம்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி – 3


ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (30/06/2016)

விகடன்ஆனந்த விகடன் - 06 Jul, 2016 தொடர்கள்


`எல்லாமே போட்டியில்தான் முடிவாகின்றன. ஆகவே, நீங்களும் போட்டிக்குத்
தயாராகவே இருங்கள்’ என்ற குரல் எங்கும் ஒலிக்கிறது. `வளர்ச்சி அடைய
வேண்டுமானால், முரண்பட்டுத்தான் ஆக வேண்டும். முரண்பாடுகளைக் கண்டு
ஒருபோதும் கலங்காதீர்கள்’ என்பதும் நவனக்
ீ கொள்கைகளின் பாடம்தான்.
போட்டி, முரண்பாடு ஆகிய இரண்டுக்கும் மாற்றாக ‘ஒத்திசைவு’ எனும் ஒரே
ஒரு பண்பை நான் முன்வைக்கிறேன். இதுதான் நமது மரபின் கல்வி.

`முரண்பாடுகளின் மோதல்தான் வளர்ச்சி’ என்னும் வாசகத்தை நீங்கள்


கேள்விப்பட்டிருப் பீர்கள். மின்சாரத்தின் நேர்மறையும் எதிர்மறையும்
மோதினால்தான் மின் ஆற்றல் உருவாகும் என்ற உதாரணத்தையும் கேள்விப்
பட்டிருப்பீர்கள். மேற்கண்ட வாசகத்தில் இருந்து `மோதல்’ என்ற வார்த்தையை
அகற்றிவிட்டு, `ஒத்திசைவு’ எனும் சொல்லை நிரப்பிப்பாருங்கள்.

`முரண்பாடுகளின் ஒத்திசைவுதான் வளர்ச்சி’ என்ற புதிய கருத்து உங்களுக்குக்


கிடைக்கும். உண்மையில் இது மிகப் பழமையான கருத்து. இதன்படிதான்
பிரபஞ்சம் இயங்குகிறது. எல்லா உயிர்களும் இதே கருத்தைத்தான் பின்பற்றி
வாழ்கின்றன. ஆணும் பெண்ணும் மோதினால் குழந்தை பிறக்கும் எனக்
கூறினால், எவ்வளவு இழிவாக உள்ளது. ஆணும் பெண்ணும் இசைந்து
உறவாடினால் கரு உண்டாகும் என்பதுதான் உண்மை. நேர்மறையும்
எதிர்மறையும் எங்கும் மோதுவது இல்லை. மாறாக, அவை இரண்டும் ஒன்றாக
இணைகின்றன. இந்த இணைதல்தான் புதிய ஒன்றை உருவாக்குகிறது.
`முரண்பாடுகளின் மோதல்தான் வளர்ச்சியாக மாறும்’ என்ற கொள்கையை,
உங்கள் வாழ்க்கையில் நிராகரிக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்தக்
கொள்கையின் வழியே உங்களை போட்டிபோடும் உயிரினமாக மாற்றி
விட்டார்கள். இந்தச் சமூகத்துக்கு, ‘போட்டிச் சமூகம்’ என்ற பெயரையும்
சூட்டியிருக்கிறார்கள்.

பிரபஞ்சத்தில், பல கோடி விண்மீ ன்களும் கோள்களும் போட்டி போடவில்லை.


படைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, ஒத்திசைந்து இயங்குகின்றன. 

பூமியும் சந்திரனும் போட்டியிட்டால், அரை நொடியில் புவியின் உயிர்கள்


இருந்த தடம் தெரியாமல் அழிய நேரிடும். பூமியில் உள்ள கொசுக்களும்
ஈக்களும் தமக்குள் போட்டி நடத்திக்கொண்டால், மனிதர்கள் உள்ளிட்ட பெரிய
உயிரினங்கள் யாவும் சிதைந்து அழிய வேண்டியிருக்கும். காகங்கள்
மனிதர்களுடன் போட்டிபோட்டால், பல கோடி மனிதர்கள் மரணமடையும் நிலை
உருவாகும். உங்கள் காலடிச் சத்தம் கேட்டதும் பதுங்கி ஓடும் பூனைகள்
திடீரென உங்களோடு போட்டியிட்டால், உங்கள் நிலைமை என்ன? கரப்பான்,
பல்லி, எலி, வெளவால் என வட்டைச்
ீ சுற்றி வாழும் உயிரினங்கள்,
மனிதர்களுடன் போட்டியிடுவதைப் பற்றி கற்பனை செய்துபாருங்கள். சகிக்க
இயலாத விளைவுகள் மனதில் உருவாகின்றன அல்லவா!

இங்கே போட்டி நடக்கவில்லை. அவரவர் பாதையில் அவரவருக்கான பயணம்


நடக்கிறது. பாதை மாறிப் பார்ப்பதும், விதிகளை மீ றி ஆடுவதும் நவன

மனிதர்களின் குணம்.

`இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்வது’ என்ற சிந்தனைதான் நாம்


செல்லவேண்டிய பாதை. ரசாயன வேளாண் தொழில்நுட்பம், போட்டி களையும்
முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. தோட்டத்தில் உள்ள பூச்சி,
புழுக்களை விவசாயிகளின் எதிரிகளாகச் சிந்திக்கக் கற்றுத் தந்த முறை அது.
ரசாயன வேளாண்மையில், பூச்சிகளை அழிக்க நஞ்சு தயாரிக்கிறார்கள்.

பிற உயிரினங்களுடன் போட்டியிட்டு அழிக்கச் சொன்ன பசுமைப் புரட்சி


வழியாக, உணவே நஞ்சானது. நமது நிலங்கள் உயிரற்றவையாக மாற்றப்பட்டன.
பலவகைப் பட்டாம்பூச்சிகளும் தும்பிகளும் அழிந்துபோயின. வயலில் வாழ்ந்த
நண்டுகள்கூட அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தப் போட்டி தொடங்கும் இடம் எது தெரியுமா? வயல்களில் முளைக்கும்
களைச் செடிகள்தான். சற்று சிந்தித்துப்பாருங்கள். பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும்
உணவும் வாழும் இடமும் தேவை. ஒரு தோட்டத்தில் இயற்கையாக
முளைக்கும் களைச் செடிகளில்தான் அவை வாழ்ந்துவருகின்றன. அந்தக்
களைச் செடிகளை அழிப்பது, நவன
ீ வேளாண் நடைமுறை. அவ்வாறு
அழிக்கப்பட்ட செடிகளில் வாழும் பூச்சிகளும் புழுக்களும் வேறு வழியின்றி
பயிர்களுக்கு இடம்பெயர்கின்றன. களைகளை அழிக்கவும் நஞ்சு, பூச்சிகளுக்கும்
நஞ்சு என்ற குரூரமான செயல்பாடு ரசாயன வேளாண்மையில்
நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பூச்சி, புழுக்களுக்கு அதிகபட்சமாக மூன்றறிவு மட்டும்தான் உள்ளது. ஆறறிவும்


வல்லாதிக்கப் பேரரசுகளின் துணையும் வாய்த்த நிறுவனங்களால் இன்று
வரைக்கும் அவற்றோடு போட்டியிட்டு வெற்றிபெற முடியவில்லை.
பூச்சுக்கொல்லிகளால் மனிதர்கள் நோயுற்றுச் சாகும் நிலைதான், அந்தப்
போட்டியின் விளைவு.

நமது மரபில், களைகளை அழிப்பது இல்லை. மாறாக, களைகளைப் பறித்து


வயலுக்கு வெளியே வசுவார்கள்.
ீ அந்தக் குவியலின் மீ து சாணத்தைக் கொட்டி
நீர் தெளிப்பார்கள். அது உரமாகும்; பல்லாயிரம் சிற்றுயிர்களுக்கு உணவாகவும்
உறைவிடமாகவும் அமையும். தோட்டத்தில் ஆங்காங்கே தட்டை, மொச்சை,
ஆமணக்கு போன்ற ஊடுபயிர்களை விதைப்பது நம் வழக்கம். இவை
பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் விருப்பமானவை. தோட்டத்தின் முக்கியப்
பயிரைச் சேதப்படுத்தாமல், துணைப்பயிர்களில் வாழும் வழியை சின்னஞ்சிறு
உயிரினங்களுக்கும் அமைத்துக்கொடுக்கும் வேளாண் மரபு நம்முடையது.

இதுதான் முரண்பாட்டுக்கும் ஒத்திசைவுக்குமான வேறுபாடு. பூச்சிகளுடன்


முரண்படாமல் ஒத்திசைந்து வாழ்ந்த வரைக்கும் நமது உணவு அமுதாக
இருந்தது; நமது நிலங்கள் தெய்வங்களாக இருந்தன.
பூமியில் எல்லா உயிர்களும் கூட்டாகத்தான் வாழ்கின்றன. கூடுதல்,
தனித்திருத்தல் எனும் இரண்டு கருத்துக்களையும் ஒரே நேரத்தில்
கடைப்பிடித்தல்தான் படைப்பின் சிறப்பு. மான்களும் வேங்கைகளும் ஒரே
கானகத்தில் வாழ்கின்றன. முதலைகளும் மீ ன்களும் ஒரே ஆற்றில்
நீந்துகின்றன. குருவிக்குஞ்சுகளும் பருந்துகளும் ஒரே வானில் பறக்கின்றன.
ஒன்றை ஒன்று இரையாக உண்ணும் என்றாலும் உயிரினங்களால் ஓரிடத்தில்
வாழ முடிகிறது.

மனித சமூகத்திலோ, பிள்ளைகளும் பெற்றோரும் ஒரு வட்டில்


ீ வாழ
இயலவில்லை; உடன்பிறந்தவர் களால் ஒன்றாக இருக்க முடியவில்லை.
பசிக்காதபோது, கால் ஒடிந்த மானைக் கண்டாலும் ஒதுங்கிச் செல்லும் பக்குவம்
சிங்கத்துக்கு உண்டு. முரண்பட்ட மனிதர்களைக் கண்டால் சீறிப்பாய்ந்து
வாதிடும் சிறுமை மனித சமூகத்தில் இருக்கிறது.

முரண்பாடு என எதுவுமே இல்லை. காற்று, தீ, நீர், நிலம் ஆகிய நான்கும்


வெவ்வேறானவை என்பது உண்மைதான். ஆனால், இவை நான்கும்
முரண்பட்டவை அல்ல, வேறுபட்டவை. ஏனெனில், நீரிலும் நெருப்பு உண்டு;
நிலத்தில் நீரும் நெருப்பும் உண்டு. காற்றோ அனைத்திலும் உண்டு. ஒன்றுக்குள்
ஒன்று, ஒன்றன் மேல் ஒன்று என்பதுதான் பிரபஞ்சத்தின் இயல்பு. ஆகாயம்
உள்ளிட்ட ஐம்பூதங்களும் ஒத்திசைந்த கலவைதான் நாம் அனைவரும்.

ஓர் உடலில் உயிர் தங்கவேண்டுமானால், ஐம்பூதங்களும் ஒத்திசைந்து


இயங்கவேண்டும். காற்றும் நீரும் போட்டிபோட்டால் சிறுநீரகம் செயலிழக்கும்.
நெருப்பும் காற்றும் முரண்பட்டால், இதயம் தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளும்.
நிலமும் நீரும் தமக்குள் முரண்பட்டால், உடல் மெலிந்து மூச்சு நிற்கும்.
`மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்றார் ஆசான் வள்ளுவர்.
முரண்பாடுகள் மோதினால், அழிவு; இசைந்தால் ஆக்கம்.

உங்களோடு முரண்படுவோரிடம் இருந்து நீங்கள் பெறவேண்டியவை உள்ளன.


அவர்களுக்கு நீங்கள் வழங்கவேண்டியவையும் உள்ளன. இசைந்து வாழும்போது
இயற்கையின் ஆசி கிடைக்கிறது. இசை என்றால் - ஒத்துப்போகும் தன்மை,
புகழ், இசை எனும் கலை வடிவம் ஆகிய பொருட்கள் தமிழில் உள்ளன. இசை
எனும் கலை வடிவமே, கருவிகளுக்கு இடையிலான ஒத்திசைவின்
வெளிப்பாடுதானே. மத்தளமும் புல்லாங்குழலும் ஓசையினால்
மாறுபட்டவைதான். ஆனால், இந்த இரண்டும் ஒத்திசைந்தால், உன்னதமான
இசை உருவாகிறது.

நேர்மறை, எதிர்மறை என்பது எல்லாம் மனிதர்கள் சூட்டிக்கொண்ட பெயர்கள்.


படைப்பில் அப்படி எதுவும் இல்லை.

போட்டிச் சமூகம் என்ற பேரில் சக மனிதர்கள் எதிரிகளாக


மாற்றப்பட்டிருக்கிறார்கள். இங்கே எல்லா நடைமுறைகளும் போட்டியின்
அடிப்படையில் இருக்கின்றன. கல்விக்கூடங்கள், பிள்ளைகளைப்
போட்டியாளர்களாக மாற்றி விடுகின்றன. தொழிற்கூடங்கள், பணியாளர்களைப்
போட்டியிடச் செய்கின்றன. குடும்பங்களில் பொருளாதாரப் போட்டி நடக்கிறது.

கூட்டு வாழ்க்கைமுறையைக் கைவிடாத காலத்தில், நம் சமூகத்தில் போட்டிகள்


இல்லை; நிலம் பங்கிடப் படவில்லை, பொதுவானதாக இருந்தது; குடும்பத்தினர்
அனைவரும் கூடி உழைத்தனர். விளைச்சலை தம் தேவைக்கு ஏற்ப
பிரித்துக்கொண்டனர்.

காளைகளை அடக்கும் விளையாட்டுக்கு இப்போது ‘ஜல்லிக்கட்டுப் போட்டி’


எனப் பெயர். சங்க காலத்தில் அதற்கும் ‘ஏறுதழுவல்’ எனப் பெயர். காளையை
அடக்குவதை ஒரு போட்டியாகக் கருதாமல், `தழுவுதல்' என்றார்கள் நம்
முன்னோர்.

அந்தச் சமூகத்தைவிட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனாலும், கூட்டு


வாழ்க்கை எனும் கருத்தைவிட்டு விலகவேண்டாம். ஏனெனில், எந்தக்
காலத்திலும் அழியாத அறம், கூட்டு வாழ்க்கைதான். மனிதர்கள் மட்டும் அல்ல,
கால்நடைகளும் இணைந்து வாழும் அமைப்புக்குத்தான் நமது மரபில் `குடும்பம்'
எனப் பெயர்.
காகத்துக்குச் சோறிடும் வழக்கத்தின் மீ து பல்வேறு நம்பிக்கைகள் திணிக்கப்
பட்டிருக் கலாம். ஆனாலும் காகத்தின் பசி தணிக்க வேண்டும் என்ற சிந்தனை
சிறப்பானது அல்லவா!

அகநானூற்றுப் பாடல் காட்சி. காதலியைக் காம உணர்வுடன் தழுவுகிறான்


காதலன். அவனைத் தடுத்து விலக்கும் அந்த இளம்பெண் கூறுகிறாள், ‘தலைவா,
இதோ இந்தப் புன்னைமரம் என் சகோதரி. அவளுக்கு எதிரில் என்னால்
உன்னைத் தழுவ இயலாது. ஆகவே, வேறு இடம் செல்வோம்.’

மரத்தையும் தன் குடும்ப உறுப்பினராகக் கருதும் சிந்தனை மரபு நமக்கு உண்டு.


காலம் காலமாக நாம் கூடித்தான் வாழ்ந்தோம். பிறப்பினால் பேதங்கள்
கண்டபோது நமது அரசுகள் வழ்ந்தன.
ீ பொருளாதாரத்துக்காக இயற்கையுடனும்
உறவுகளுடனும் முரண்பட்ட போது நமது ஊர்களைவிட்டு வெளியேறும் நிலை
உருவானது. நவன
ீ நாகரிகம் எனும் மாயவலையின் ஒவ்வொரு கண்ணியும்
நமது மதிப்பீடுகளுடன் முரண்படுகின்றன. இந்தக் கண்ணியில் இருந்து விடுபட
வேண்டும்.

கூட்டுச் சமூகமாக வாழ்வது சாத்தியமே இல்லை என நீங்கள் நினைக்கலாம்.


ஆனால், குடும்ப உறுப்பினர்கள் கூடி வாழ்வதுகூடவா சாத்தியமற்றது?
வெவ்வேறு கருத்துக்கள் கொண்டவர்கள் அடங்கியதுதான் குடும்பம்.

ஒரு குடும்பத்தில் முதியோர் முதல் சிறுவர் வரை மூன்று தலைமுறைகள்


இருக்க வேண்டும். இந்த மூன்று தலைமுறையினரும் கூடி வாழ வேண்டும்.
இந்தக் குடும்பம், ஏறத்தாழ 80 ஆண்டுகால அனுபவங்களைத்
தாங்கிக்கொண்டிருக்கும். உணவு, மருத்துவம், பொருளாதாரம், உறவுகளைப்
பேணுதல் ஆகிய அனைத்து வாழ்வியல் கூறுகளிலும் இந்த 80 ஆண்டுகால
அனுபவம் துணை நிற்கும்.

ஒரு குடும்பத்தில் உள்ளோர், சக மனிதர்களின் கருத்துக்களை


ஒப்புக்கொள்ளவேண்டியது இல்லை; முரண்பட்டு மோதாமல் இருந்தால்
போதும். ஏனெனில், முரண்பாடுகளின் இணைவுதான் உண்மையான வளர்ச்சி.
- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 4
விகடன்ஆனந்த விகடன் - 13 Jul, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (07/07/2016)

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

இப்போது எந்தப் பள்ளிக்குச் சென்று கண் பரிசோதனை செய்தாலும்,


நூற்றுக்கணக்கான `கண் நோயாளிகளை’க் கண்டறிந்துவிட முடியும். இன்னும்
சில ஆண்டுகளில், மிக அதிகமான சிறுவர்கள் பார்வைக் குறைபாடு உள்ள 
நோயாளிகளாக மாறிவிடும் சூழல் உள்ளது. அப்படி ஒரு சூழல்
உருவாகிவிடாமல் தடுக்க வேண்டுமானால், நமது இல்லங்களின் சூழலை
மாற்றியமைக்க வேண்டும்.
வாழ்க்கைக்குத் தேவையானதைக் கண்டு களிக்கவும், தேவையற்றதை அறிந்து
ஒதுக்கவும்தான் `விழி’ எனும் புலன் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற
உயிரினங்களின் பார்வைத்திறன், படைப்பின் விதிகளை மீ றாது. யானைக்
கன்றும் பாம்புக் குட்டியும் ஒரே இடத்தில் திரிந்தாலும், பருந்தின் பார்வைக்கு
பாம்புக் குட்டிதான் தெரியும். மீ ன்கொத்திகளைப் பாருங்கள். குளத்தின் மேல்
பத்து அடி உயரத்தில் பறந்தாலும், நீரோட்டத்தின் அடியில் ஓடும் மீ ன்கள்
மட்டுமே தெள்ளத்தெளிவாகத் தெரியும். மரங்கொத்திகளோ, மரத்தண்டின்
உள்ளே இருக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் துல்லியமாக அறியும்.

`பார்வை’ என்பது, கண்களால் மட்டும் கிடைக்கும் புலன் அறிவு அல்ல;


உள்ளுணர்வும் கண்களின் புலன் அறிவும் இணைந்து கிடைப்பது. அன்றாடம்
கடந்துசெல்லும் பாதையில்கூட உங்களால் எல்லாவற்றையும் பார்த்துவிட
முடியாது. மளிகைக் கடையைத் தேடிப் போனால், உங்கள் கண்களுக்கு
மளிகைக் கடைகள்தான் முதன்மையாகத் தென்படும். மருந்துக் கடையைத்
தேடிப் போனால், மருந்துக் கடைகள்தான் முதன்மையாகத் தென்படும். எதைத்
தேடிச் செல்கிறீர்களோ, அதைத்தான் உங்கள் கண்கள் முதன்மைப்படுத்திக்
காட்டும்.

உண்மையில், கண்கள் எல்லாவற்றையும் காண்கின்றன. ஆனால், அந்தக்


காட்சிகள் அனைத்தும் பார்வையாக மாறிவிடாது. கண்ணில் தெரிபவை யாவும்
காட்சிகளே, மனதில் பதிபவை மட்டுமே பார்வைகள். மற்ற உயிரினங்கள்,
மனிதர்களைக் காட்டிலும் தெளிவான, சிறப்பான பார்வைத்திறன் கொண்டவை.
ஏனெனில், அவற்றின் உள்ளுணர்வும் கண்களும் எப்போதும் ஒத்திசைவுடன்
இயங்கும். மரங்கொத்திகளும் மீ ன்கொத்திகளும் இன்னபிற உயிரினங்களும்,
இந்த இணைப்பை சிறப்பாகப் பயன்படுத்தித்தான் தமது தேவைகளை
நிறைவேற்றிக்கொள்கின்றன.

கண்கள் என்பது, அக உலகுக்கும் புற உலகுக்குமான இணைப்புப் பாலம்.


மனிதர்களின் கண்கள், இந்தச் சமூகத்தின் கொடூரமான தாக்குதலுக்கு
இரையாகின்றன. தேவையானவற்றை மட்டுமே காணப் படைக்கப்பட்ட
விழிகளும், தேவையானவற்றை மட்டுமே உணர படைக்கப்பட்ட மனமும்
இங்கே முரண்படுகின்றன. உள்ளுணர்வு மனதின் வழியாகக் கூறும்
அறிவுரைகளை, இந்தச் சமூக மனிதர்கள் நிராகரிக்கிறார்கள்.

`இரவுப் பொழுது, ஓய்வுக்கானது’ என்பது விதி. இந்த விதியின் மீ து


மனிதகுலத்தின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில் எந்தக் கேள்வியும்
எழுந்தது இல்லை. ஆனால் இப்போது, இரவுபொழுதுகள் யாவும் அலைச்சல்
மற்றும் மனஉளைச்சலுக்கானவையாக மாற்றப் பட்டுள்ளன. `இரவில்
ஓய்வெடுக்காதவர்களுக்கு, பார்வைத்திறன் பாதிக்கப்படும்' என்ற உண்மை,
மருத்துவமுறைகளுக்கும் அப்பாற்பட்டது. அதாவது, இந்த உண்மை
இயற்கையின் நியதிகளில் ஒன்று. இதைச் சொல்வதற்கு மருத்துவர்கள் தேவை
இல்லை.

நமது மரபு மருத்துவக் கொள்கைகளின்படி, கண்களுக்கும் கல்லீரலுக்கும்


நேரடியான உறவு உண்டு. கண்களும் கல்லீரலும் உருவ அமைப்பில்
ஒரேவிதமானவை. அதேபோல காதுகளும், சிறுநீரகமும் நுரையீரலும் உருவ
அமைப்பில் ஒரே தன்மைகொண்டவை. இரவில் கண் விழித்தால், கல்லீரல்
அதிக வெப்பம் அடையும். இதனால், கண்களில் பாதிப்புகள் உருவாகத்
தொடங்கும். இரவில் விழித்திருந்தால், கல்லீரல் மட்டும் அல்ல... உள்ளுறுப்புகள்
அனைத்தும் சீர்கெடும்.

இரவு என்பது, பெரும்பாலான பருவங்களில் 7 மணிக்கே தொடங்கிவிடுகிறது. 7


மணிக்குப் பிறகு, உடலாலும் மனதாலும் அலைதல் தவறு. கதிரவன் மறைந்த
பின்னர் பூமி எப்படிக் குளிர்கிறதோ, அதேபோல மனமும் உடலும் குளிர்ந்து
உறங்க வேண்டும் அல்லது உறவுகொள்ள வேண்டும். 

10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இப்படித்தான் நமது கிராமங்கள் இருந்தன.


தொலைக்காட்சிப் பெட்டிகளின் படையெடுப்புக்குப் பிறகு, கிராமங்களின்
இரவுகளும் ஒழிந்துபோயின.
மனதைப் பதற்றம் அடையச் செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மனம்
கெட்டுப் போகிறது. பல தொலைக்காட்சித் தொடர்களில் பயன்படுத்தப்படும்
சொற்கள், பின்னணி இசை ஆகியவை மனதுக்கு இதமாக அல்லது கடுமையாக
உள்ளனவா என்பதை, சற்று சிந்தித்துப்பாருங்கள்.

இயற்கையில், ஒளியும் ஒலியும் இணைந்தே இருப்பதைக் கவனியுங்கள்.


பொழுது புலரும்போது ஒளியாகிய வெளிச்சம், நிலத்தில் இறங்குகிறது. அதே
கணத்தில் ஓசையும் பறவைகளின் வழியாகக் கேட்கத் தொடங்குகிறது.
எவ்வளவு பெரிய மாநகரத்திலும் இன்னும் பறவைகள் வாழ்கின்றன. அவை
யாவும் கதிரவன் வருகையை அறிவிக்கின்றன. அந்திப் பொழுதில், வெளிச்சம்
குறையத் தொடங்கும் முன்னர் எல்லா பறவை களும் கூடு
திரும்பிவிடுகின்றன. வெளிச்சத்தோடு சேர்ந்து ஓசையும் ஒடுங்கிவிடுகிறது.
இருள் அமைதிக்கானது; வெளிச்சம் ஓசைக்கானது.

இப்போதைய தலைமுறையினருக்கு இரவுப் பொழுது 12 மணி வரைக்கும்


நீள்கிறது. அதாவது மறுநாள் அதிகாலை வரை அவர்கள் விழித்திருக் கிறார்கள்.
பெரும்பாலான சிறுவர்கள் இரவு 
10 மணி வரை கண் விழிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு
காரணம் தாண்டவமாடுகிறது. ஆனால், இந்தக் காரணங்களால் படைப்பின்
விதிகளை மீ றவோ, மாற்றவோ இயலாது.
7 மணிக்கு மேல் தீவிர சிந்தனையும் உழைப்பும் இருத்தல், உயிர் இயல்பு
அல்ல. 
நீங்கள் ஓர் உயிரினமாக வாழக் கற்றுக் கொண்டால், உங்களுக்கு இவ்வளவு
விளக்கங்கள் தேவைப்படாது. சாதனையாளராகவோ, வெற்றிகரமான
மனிதராகவோ, கடும் உழைப்பாளராகவோ இருக்க வேண்டும் என்ற எண்ணம்
இருப்போருக்கு, எனது சொற்கள் புரியாமல்கூட போகலாம். ஆனால், நான்
அவர்களிடம்தான் கூடுதலாக உரையாட விரும்புகிறேன். உங்கள் வெற்றிகள்,
மரியாதைகள் மீ து எனக்கு அக்கறை இல்லை. ஆனால், உங்கள் நலன் எனது
விருப்பம்.

ஓர் உயிரினமாக இருப்பது என்றால், ‘புவியின் பிற உயிரினங்களும் நானும்


ஒன்றுதான்’ என்ற உண்மையை முதலில் உணர வேண்டும். மனிதர்களுக்கு பல
சிறப்புகள் உண்டு என நீங்கள் நம்பினால், கரப்பான்பூச்சிகளுக்கும் பல சிறப்புகள்
உண்டு என்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும். உயிரினங்களுக்கு என
தனித்தன்மைகள் உள்ளன. ஆனால், படைப்பின் பார்வையில் எல்லா
உயிரினங்களும் ஒன்றுதான்.

பூமியில் உள்ள கோடானுகோடி உயிரினங்களில், இயற்கையின் விதிகளை


இழிவுசெய்வது மனிதர்கள் மட்டும்தான். இந்த விதி மீ றல்களில் இரவுகளை
மனிதர்கள் கையாளும் விதம் முதன்மையானது.

பகல் பொழுது, வெளிச்சம், வெப்பம், ஓசை என்ற மூன்று வரங்களைத் தருகிறது.


வெப்பம்தான் இயக்க ஆற்றலைத் தரும். அதாவது, உயிரினங்கள் இயங்க
வேண்டுமானால் சூழலில் போதுமான வெப்பம் இருக்க வேண்டும். உணவு
செரிக்க, உடலில் சரியான அளவுக்கு வெப்பம் இருக்க வேண்டும். 

உடலுக்கு என தனி வெப்பநிலை கிடையாது. புறச்சூழலுடன் இணைந்துதான்


உடல் இயங்கும் என்பதால், புறச் சூழலில் வெப்பம் நிலவினால் உடலின்
செரிமான ஆற்றல் சிறப்பாக இருக்கும். அதாவது, பகல்பொழுதில்
உழைப்பதற்கும் வெப்பம் எனும் இயக்க ஆற்றல் வேண்டும்; உணவு
செரிப்பதற்கும் வெப்பம் வேண்டும்.

வெயில் இறங்கிய பின்னர், பூமியில் வெப்பம் குறைகிறது. இந்தச் சூழலில்


மனிதர்கள் உண்டு முடித்திருக்க வேண்டும், ஓய்வுக்குத் தயாராகியிருக்க
வேண்டும். 

மாலைப் பொழுதிலேயே உணவு உட்கொள்வது தான் நமது மரபாக இருந்தது.


முன்னர் எல்லாம், கிராமங்களில் உணவு சமைப்பதே மாலையில்தான்.
அவர்களுக்கு அந்தி உணவுதான் சுடுசோறு.
வெளிச்சமும் ஓசையும், இயக்கத்துக்கும் மன அமைதிக்குமானவை.
பகல்பொழுதில் ஓசையே இல்லாத அமைதி நிலவினால், மனநிலை நடுக்கம்
அடைகிறது. இரவில் அதிக ஓசை இருந்தால், மனம் பதற்றமாகிறது.
புறச்சூழல்களுக்கும் மனநிலைக்கும் நேரடியான உறவு உண்டு.

ஒவ்வொரு நாளும் வெயிலோடு சேர்ந்து எழுந்து, வெயிலோடு சேர்ந்து அடங்க


வேண்டும். அந்தியில் உண்ட உணவு, முன்னிரவில் செரிமானமாகிவிடும்.
இதனால், உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள்,
கருப்பை, இதயம், நுரையீரல் ஆகியவை தம்மை உற்சாகமாக சீரமைத்துக்
கொள்கின்றன. இரவு 10 மணிக்கோ அதன் பின்னரோ உட்கொள்ளப்படும் உணவு,
செரிமானம் ஆவதற்கே பின்னிரவு ஆகிவிடும். இந்த நேரம், உள்ளுறுப்புகள்
தம்மைச் சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்போதைய சிறுவர்களுக்குப் பார்வைத்திறன் குறைபாடு உருவாவதற்கு


இரவில் கண் விழிப்பதுதான் அடிப்படைக் காரணம் என எண்ணுகிறேன்.
உறங்கச் செல்லும் முன்னர், அவர்களது வயிற்றுக்குள் திணிக்கப்படும் உணவின்
தன்மை கடினமானதாக இருந்தால், அதைச் செரிப்பதற்காக, இரவு முழுவதும்
உடல் போராட்டம் நடத்தவேண்டியிருக்கும். இவை இரண்டையும்விட
முக்கியமானது, படுக்கைக்குப் போகும்போது மனம் அமைதியாக இருக்க
வேண்டும். 
கடந்து சென்ற நாட்கள் குறித்த கவலைகளும் மறுநாள் குறித்த கணக்கீ டுகளும்
மனதைத் துன்புறுத்தும் சிந்தனைகள். உற்சாகமும் மகிழ்ச்சியும்கூட மனதுக்கு
ஊறுவிளை விப்பவைதான் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அமைதி எனும் உணர்வுதான் நிரந்தரமானது. இரவு-பகல் என்ற பேதம்


இல்லாமல் எந்நேரமும் அமைதியான மனநிலையில் இருத்தல்தான் படைப்பின்
ஒழுங்கை மதிக்கும் பண்பு. இரவில் மட்டுமாவது அமைதியுடன் இருப்பது
இன்றியமையாதது. அமைதியற்ற மனதுடன் உறங்குவோரின் உடல்
ஓய்வெடுக்கும்; மனம் அலைந்துகொண்டிருக்கும்.

பிணம்போல உறங்கி, பிறப்புபோல விழிக்க வேண்டும். அதுதான் சரியான


ஓய்வு. ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் குறளில் ஆசான் வள்ளுவர்,
`இறப்பும் பிறவியும் உறக்கமும் விழிப்பும் போன்றவை' என்றார்.

அந்தியில் சாய்ந்து அதிகாலையில் எழுவோருக்கு மனமும் உடலும் அன்றாடம்


புத்தம்புதிதாகப் பிறக்கின்றன. காலை நேரத்தில் மலம் கழிப்பதில் இவர்களுக்கு
எந்தச் சிக்கலும் இருப்பது இல்லை. அதிகாலையில் வசும்
ீ உயிராற்றல் மிகுந்த
காற்றை இவர்கள் அனுபவித்து உள்ளிழுக்கிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 5
மணி வரைக்கும் வசும்
ீ காற்று வேறு, அதன் பின்னர் வசும்
ீ காற்று வேறு
என்பதை உணர்ந்தோரால் புரிந்துகொள்ள முடியும். இந்தக் காற்று, மூளையின்
செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அனுப்பப் படுகிறது.
அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கம் நமது மரபில் வலியுறுத்தப்பட்டதற்கு
இதுதான் அடிப்படைக் காரணம்.

நவனத்
ீ தொழில்நுட்பங்கள், இருளை வெளிச்சமாக்கிவிட்டன. அவற்றால்
ஒருபோதும் இரவைப் பகலாக்க முடியாது.

கடந்த 20 ஆண்டுகளில் பெருகி வளர்ந்துள்ள கண் மருத்துவத் துறைக்கும் இரவு


கண் விழிப்புக்கும் உள்ள உறவை, சற்று பொறுமையாகச் சிந்தித்தால்
உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
உங்கள் இல்லச் சூழல் இரவில் அமைதியாகி விட்டால், அது வடு
ீ அல்ல
பறவைக்கூடு. நீங்களும் உங்கள் கூட்டுக்குள் மாலையில் அடைந்து காலையில்
சிறகு துடிக்கக் கிளம்பலாம்!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 5
விகடன்ஆனந்த விகடன் - 20 Jul, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (14/07/2016)

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

தேவையானவற்றை மட்டும் தெரிந்துகொள்ளும்போது மனம் விரிவடைகிறது.


தேவைக்கு அதிகமாகத் தெரிந்துகொண்டால், மனம் குறுகி, அறிவு விரிகிறது.
`ஒரு காட்டில் தேவதை வாழ்ந்தாள்' எனக் கூறினால், மனதில் காடு வளர்ந்து
தேவதை பிறக்கிறாள். அறிவு, ‘தேவதை என்று யாரும் இல்லை’ எனத் தீர்ப்பு
எழுதி, மனதில் பிறந்த காட்டை அழிக்கிறது; தேவதையைக் கொலைசெய்கிறது.
எப்போதுமே அறிவாளிகளாக வாழ்ந்து விட முடியாது. மனிதர்களுக்கும் மற்ற
உயிரினங்களுக்குமான வேறுபாடு இதுதான். மனிதர்கள், மனதால் வாழப்
படைக்கப்பட்டவர்கள்.
நவனச்
ீ சமூகக் குழந்தைகளின் மனதில் கற்பனைக்கான வாய்ப்புகள் சிதைக்கப்
படுகின்றன. `ஓர் ஊரில் ஒரு வரன்
ீ இருந்தான்’ எனக் கூறினால், இதைக்
கேட்கும் குழந்தைகளின் மனதில் தனித் தனியான சித்திரங்கள் உருவாக
வேண்டும். 

இன்றைய குடும்பங்களில் கதை சொல்பவர்களே குறைந்துவிட்டார்கள்.


ஒருவேளை கதை சொன்னாலும் அதைக் கேட்கும் குழந்தைகளின் மனதில்
சுயமாக எந்தச் சித்திரமும் உருவாகிவிடாது. ஏனெனில், அவர்கள் கதைகளைக்
கேட்பது இல்லை; பார்க்கிறார்கள். தொலைக்காட்சி, கணினி விளையாட்டுக்கள்,
இணையங்கள் வழியாகச் சிறுவர்கள் நிறையப் பார்க்கிறார்கள்.

கதை சொல்லுதல் என்பது, மனதின் உரையாடல். ஒரே கதையை 100 முறை


சொன்னாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாக அந்தக் கதை
பிறக்கும். கதையைக் கேட்கும் சிறுவர்களுக்கு ஒவ்வொரு முறையும் அக
உலகம் விரிந்துகொண்டேபோகும்.

கதை கேட்கும்போது உருவாகும் எந்த மன உணர்வும், கார்ட்டூனைப்


பார்க்கும்போது உருவாகாது. ஏனெனில், இந்தக் காட்சி வடிவத்தில்
பார்வையாளருக்கு எந்தப் பங்கேற்பும் இல்லை. ராமாயணக் கதையை பாட்டி
சொல்லக் கேட்டவர்களுக்கு, ராமன் உருவம் அவரவர் மனதில் உருவானது. ஒரு
கோடிப் பேர் ராமாயணம் கேட்டாலும், ஒரு கோடி வகையான ராமன்கள்
உருவாகிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது ராமாயணத்தைப் `பார்ப்போர்’ எத்தனை கோடிப் பேராக இருந்தாலும்
அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு ராமன்தான் தெரிகிறான். பீமன், கண்ணன்
ஆகிய பெயர்களுக்குப் பின்னால் இருந்த வியக்கத்தக்க உருவங்களும்
அவற்றைப் பற்றிய சொந்தக் கற்பனைகளும் முற்றிலும் ஒழிந்துபோயின.
தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சித்திரங்கள்தான் பீமனும் கண்ணனும்
என்றாகிப்போனது.

எதையும் கேட்டறியும்போதுதான், மனதின் செயல்பாடுகளுக்கு வாய்ப்புகள்


அதிகம். பார்க்கும்போது அந்தக் காட்சியில் மனம் உறைந்துவிடுகிறது. இதற்கு
மேல் எதுவும் இல்லை என்ற இறுதிநிலையைக் காட்சிகள் வழங்கி
விடுகின்றன. குடும்பத்தின் மூத்தவர்கள் கதை சொல்லிகளாக இருந்தவரைக்கும்
குழந்தைகளின் கற்பனைத்திறன் எல்லையற்று இருந்தது. அந்தக் காலத்தில்,
குழந்தைத்தனம் சிதையாத வகையில் கதைகள் கூறப்பட்டன.

இப்போது காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் கதைகளின் நாயகர்களும்


நாயகிகளும் போக்கிரித் தனத்தின் உருவகங்களாக இருக்கிறார்கள். அவர்களது
மொழிமாற்ற வசனங்களோ, அதிகப்பிரசிங்கித்தனமாக இருக்கின்றன. வயது
மீ றிய கதைகள், உருவங்கள், வசனங்கள் வட்டின்
ீ மையத்தில் அரங்கேற்றம்
செய்யப்படும்போது, அமைதியான குழந்தைகளை வளர்த்தெடுக்கும் வழி ஏது?
இப்போதைய குழந்தைகள் வரையும் சித்திரங்களில் வேற்றுக்கிரகவாசிகளின்
உருவங்கள் இருப்பதைக் காணும்போது மனம் பதைக்கிறது. இன்னும் இவர்கள்
தமது அண்டை வட்டாரைக்கூட
ீ அறிந்துகொள்ளவில்லை. 

பல சிறுவர்களுக்கு, தமது சொந்த ஊரின் பெயர் தெரியாது; இரண்டாம்


தலைமுறை தாத்தா- பாட்டியைத் தெரியாது. ஆனால், இவர்களுக்கு
வேற்றுக்கிரகவாசிகளின் பெயர்களும் அவர்களின் இயல்புகளும் மனப்பாடம்.

இவர்கள் காணும் எல்லா கதைகளும் சண்டைகளை நோக்கியே


நகர்த்தப்படுகின்றன. ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அதன் முடிவு ஏதோ ஒரு
கொலைக்களத்தில்தான் அமையும் என்ற நம்பிக்கை விதைக்கப்படுகிறது. இந்தச்
சிந்தனை, பெரியவர்களுக்கே ஆபத்தானது. தொலைக்காட்சித் தொடரில் கொலை
செய்யப்படுவதை முதல்முறை யாகக் காணும் குழந்தை, பதறி அழுகிறது. ‘அது
வெறும் கதை’ எனக் கூறி அழுகையை நிறுத்துவதே பெரும் சவால் ஆகிறது.
இதுதான் குழந்தையின் குணம். இந்தக் குணத்தைச் சிதைத்துச் சீரழிக்கும்
தொடர்களைப் பற்றிய எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் இருக்கிறீர்களே!

`யானையின் காலில் முள் குத்திவிட்டது’ என பாட்டி கதை சொல்லும்போது


கலங்கி, கண்ணர்ீ வடிக்கும் மனமுடைய அதே குழந்தைகள்தான், இப்போது ஒரு
நாளைக்கு நூறு கொலைகளை கண்கள் இமைக்காமல் கண்டுகளிக்கின்றன.
மெத்தென்ற  சாய்வு  இருக்கைகளில்  அமர்ந்துகொண்டு, தின்பண்டங்களைக்
கொறித்தவாறு குருதி கொப்பளிக்கும் சண்டைகளைக் காணும் குழந்தைகளின்
மனதில் எந்த நீதிக் கதையை விதைக்க முடியும்?

வெற்றியின் மீ து வெறியூட்டும் வகையில் கணினி விளையாட் டுக்கள்


வடிவமைக்கப்படு கின்றன. கணினியிலும் செல்பேசிகளிலும் உள்ள
விளையாட்டுக்களில் சிறுவர் களின் விரல்கள் இயங்கும் வேகத்தைப்
பாருங்கள். தமக்கான தலைவிதியைத் தாமே அதிவேகமாக அவர்கள்
எழுதிக்கொண்டிருப்பது தெரியவில்லையா? தேவைக்கு அதிகமான வேகம்,
கோபம், ஆவேசம், அயர்ச்சி, வெட்கம், பெருமிதம்... ஆகியவை எல்லாம் மிகக்
குறுகிய நேரத்தில் வந்து மறைகின்றன.

இப்போதைய பல பள்ளிகளில் விளையாட்டுப் பிரிவுகள் இழுத்து


மூடப்படுகின்றன. கால்பந்து, கூடைப்பந்து, கபடி போன்ற உடலையும் மனதையும்
மேம்படுத்தும் விளையாட்டுக்களில் பங்கேற்கும் சிறுவர்கள் அரிதாகிவிட்டனர்.
ஆனால், வட்டுக்கு
ீ வடு
ீ வரீ விளையாட்டுக்கள் அரங்கேறிக்கொண்டுள்ளன...
கணினித் திரையில். விளையாட்டுக்களின் நோக்கம், வெற்றி அடைவது அல்ல.
வெற்றி, தோல்வி ஆகிய இரு நிலைகளுக்கும் இடையில் உள்ள பெரும்
பயணத்தை அனுபவமாகக் கற்றுத்தரத்தான் விளையாட்டுக்கள்
தேவைப்படுகின்றன. எந்த விளையாட்டிலும் எல்லோரும் வெற்றிபெறுவது
இல்லை. அதற்காகத் தோல்வி அடைந்தோர் மனஉளைச்சலுக்கு ஆளாவதும்
இல்லை. 

உண்மையான விளையாட்டு, மனதைப் பக்குவப்படுத்தும். ஆனால், சிறுவர்கள்


ஆடும் கணினி விளையாட்டுக்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களால்,
தோல்வியை ஒப்புக்கொள்ளவே முடிவது இல்லை. வெற்றி பெறும் வரையில்
கணினித் திரையில் விரல்களைத் தேய்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த
மனநிலையுடன் சமூகத்தில் வாழ முடியுமா எனச் சிந்தியுங்கள்.

தேவைக்கு அதிகமாகத் தெரிந்துகொள்வது, துன்பத்தைத் தரும்.

மின்விசிறி சுழலும் ஓசை கேட்கிறது, பூமி சுழலும் ஓசை கேட்பது இல்லை. எது
தேவையோ அதை மட்டுமே அறிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளோம்.
தேவையற்றவை நமது புலன்களின் அறிவுக்கு மறைக்கப்படுகின்றன.
ஒருவேளை எல்லா ஓசைகளும் கேட்கும்படியாக நமது செவிகள்
மாற்றியமைக்கப்பட்டால், அண்டத்தில் சுழலும் கோள்களின் பேரிரைச்சலால்
செவிப்பறைகள் கிழிந்து மரணம் நேரிடும்.

தேவையாவனவற்றை மட்டும் தெரிந்துகொள்ளுதல் மரபு வாழ்வியல்.


தேவையைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் பல்வேறு துறைகளைப் பற்றி
தெரிந்து கொள்ளுதல் நவன
ீ வாழ்க்கைமுறை. இப்போதைய சிறுவர்களின்
நிலைமை நவன
ீ வாழ்க்கையின் தீவினைக்கு ஆட்பட்டுள்ளது. மிகைத் துடிப்பு
சிறுவர்கள் (ஹைப்பர் ஆக்ட்டிவ்) பெருகிக்கொண்டிருக் கிறார்கள். மன அழுத்தம்,
இப்போது பள்ளிக் குழந்தைகளிடம்கூட அறிமுகமாகிவிட்டது.

இந்தக் காலத்துச் சிறுவர்கள் தேவைக்கு அதிகமாகத் தெரிந்துகொள்கிறார்கள்.


செல்பேசிகளின் நுட்பங்களைக் கண்டறிந்து இயக்கும் சிறுவர்கள், தங்கள்
அறியாமையைத் தொலைத்துவிடுகிறார்கள்.
அறியாமை, மிக உன்னதமான இயல்பு. அறியாமை என்பது இருள்.
அறியாமைதான் அமைதி. இருளையும் அமைதியையும் உணர்ந்து
அனுபவிக்காதவர்களால், ஒளியையும் ஓசையையும் புரிந்துகொள்ள முடியாது.
அறியாமைதான் பசி. அறிவு எனும் உணவு செரிக்கவேண்டுமானால், அறியாமை
எனும் பசி தோன்ற வேண்டும். அறியாமைதான் தாகம், அறிவு நீர்.

பூமியில் உயிர் வாழத் தேவையான அறிவு, படைக்கும்போதே வழங்கப்படுகிறது.


பிறந்த குழந்தை கண் திறக்கும் முன்னரே, தாயின் முலைக்காம்புகளைச்
சுவைக்கிறது. சிறுநீர் கழித்த ஈரத்தில் படுத்திருக்க விரும்பாமல், எல்லா
குழந்தைகளும் துணி மாற்ற வரும்படி பெற்றோரை அழுது அழைக்கிறது.
மனிதக் குழந்தைகளுக்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு மிகுதியாகத்
தேவைப்படுகிறது.
காட்டுக் குதிரைகளோ பிறந்த மறு நிமிடமே நடக்கத் தொடங்கிவிடுகின்றன.
ஆமைக் குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியேறிய உடனே கடலில்
நீந்துகின்றன. எந்த உயிருக்கு எந்தப் பருவத்தில் எது தேவை என்பது
படைப்பிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  இந்த விதியை மதித்து நடக்கும்
வரை வாழ்க்கை இனிதாகிறது. தேவைக்கு அதிகமானவற்றை தேவைப்படாத
காலத்தில் அறிந்துகொள்ளுதல், படைப்பின் விதிகளை மீ றும் செயல்.

இப்போதைய சிறுவர்களுக்கு ஓடத் தெரியும். ஆனால், அமைதியாக நடக்கத்


தெரியவில்லை. சாப்பிடும்போது, உணவை மட்டும் கவனித்து உண்பதுதான்
சரியான பழக்கம். தொலைக்காட்சியைக் காணாமல் உண்ணும் பழக்கம் பல
குழந்தைகளிடம் இல்லை. ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து, பொறுமையாக
விளையாடும் குழந்தைகளைக் காண்பது அரிதாகிக்கொண்டிருக்கிறது.
காந்தியடிகள், நூல் நூற்கும் ராட்டையைச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். `பஞ்சை
ராட்டையில் சுழற்றி நூலாக்கும் பழக்கம், சிறுவர்களின் மனதைப் பண்படுத்தும்'
என்றார் அவர். இப்போதைய குழந்தைகளின் பரபரப்பையும் பதற்றத்தையும்
தணிப்பதற்கு  இந்த  மாதிரியான செயல்திட்டங்கள் தேவை என நினைக்கிறேன்.

நவனக்
ீ கருவிகளின் பிடியில் இருந்து சிறுவர்களை விடுவிப்பது, நமது
ஒருங்கிணைந்த செயல்பாடாக இருக்க வேண்டும். செல்பேசி உள்ளிட்ட
கருவிகளை மிகக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அவற்றை சிறுவர்களுக்குப்
பழக்காதீர்கள். இரவுகளில் பிள்ளைகளின் அருகே படுத்துக்கொண்டு, தலை
கோதிவிட்டவாறு கதை சொல்லுங்கள். உங்கள் கதைகளில் தேவதைகள்,
அன்னங்கள், தெய்வங்கள், அரக்கர்கள், பேசும் மரங்கள் எல்லாம் உலா வரட்டும்.
அந்தக் கதைகளின் ஆழத்தில் அறச்சிந்தனைகள் இருக்கட்டும். கதை கேட்கும்
குழந்தைகளின் மனம் பெருங்கடலாக விரியட்டும்.நமது பிள்ளைகள், உடனடி
வெற்றிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். கணினி விளையாட்டுக்களின் மேலே
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம், பிள்ளைகளின் இதயத்துடிப்பை அதிகரிக்கச்
செய்கிறது.

எந்நேரமும் கார்ட்டூன் ஓசைக்கும், கணினி விளையாட்டு இரைச்சலுக்கும்


பழகிய குழந்தைகளுக்கு அமைதியின் மீ து வெறுப்பு உருவாகும். எல்லா
கதைகளிலும் கொலைகளைப் பார்த்து வளரும் பிள்ளைகள் வன்முறை
நிறைந்த சமூகத்தை உருவாக்கிவிடுவார்கள். இந்தச் சீர்கேடுகளின்
தலைநகரமான அமெரிக்காவில்தான், பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தும்
சிறுவர்கள் இருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது, 22 நிமிடங்களில் ஓடி முடியும் தொலைக்காட்சிக் கதை
அல்ல. அது ஒரு நெடும் பயணம். தேவையானவை எல்லாம் நினைத்த உடனே
கிடைத்துவிட்டால், அந்தப் பயணம் விரைவில் முடிந்துவிடும்.
தேவையானவற்றைத் தேடுவதும், அதற்காகக் காத்திருப்பதும்தான் பயணத்தை
நீடிக்கச் செய்யும்.

அறியாமை எனும் அற்புத வரம் குழந்தைப் பருவத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.


அந்த வரத்தை முழுமையாக அனுபவிக்கும் பிள்ளைகள்தான் பிற்காலத்தில்
அறிவின் சிகரங்களை எட்டுவார்கள். குழந்தைகளை கருவிகளின் பிடியில்
இருந்து விடுதலை செய்தால் போதும். அவர்களின் கனவில் தேவதை தோன்றி,
வேண்டும் வரங்களைத் தருவாள்.

கருவிகளின் மிகையான உற்பத்திக்காகத்தான் புவிச் சூழல் சிதைக்கப்படுகிறது.


குழந்தைகளின் மனதில் வன்முறையை விதைக்கும் கருவிகள், பூமியின் மீ து
வன்முறையை ஏவிய பின்னர்தான் உங்கள் வடுகளை
ீ வந்தடைகின்றன. நமது
பிள்ளைகள் கருவிகளை வசி
ீ எறிந்தால், சிலிக்கான் சில்லுகளுக்காக
அழிக்கப்படும் பெருங்காடுகள் காக்கப்படும். மென்பொருள் சார்ந்த
விளையாட்டுக்களை ஒழித்துக்கட்டினால், கடலில் கொட்டப்படும் கணினிக்
கழிவுகள் குறையும்; டால்பின்களும் திமிங்கலங்களும் பவழப் பாறைகளும்
இன்னபிற கடல் உயிரினங்களும் இந்தப் பூமியில் நீடு வாழும்.

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 6
விகடன்ஆனந்த விகடன் - 27 Jul, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (21/07/2016)

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: பிரேம் டாவின்ஸி


இயற்கை பற்றிய புரிதல் இல்லாமல் தயாரிக்கப்படும் ஒரே ஒரு பொருள்கூட,
மனித வாழ்க்கையை மட்டும் அல்ல... ஒட்டுமொத்த சூழலையும் சீரழித்துவிடும்.
கொசுக்கொல்லிகளின் வருகை இந்த விதமான சீரழிவுகளைக்
கொண்டுவந்துள்ளது. குழந்தைகளைக் கொசு கடித்தால் உருவாகும் நோய்களைப்
பற்றிய விளம்பரங்கள் வழியாகத் தான், கொசுக்கொல்லிகள் வடுகளுக்குள்

நுழைந்தன. நச்சுப் புகை பரப்பும் கருவிகளை, படுக்கை அறைக்குள்
வைத்துக்கொண்டு உறங்கும் வழக்கம் பெரும்பாலான வடுகளில்
ீ இருக்கிறது. 

கொசுக்களைக் கொலைசெய்வதாக நம்பிக் கொண்டு உறங்கும் மனிதர்கள்,


தம்மைத்தாமே சீரழித்துக்கொள்வதை அறியாதிருக்கிறார்கள். `கொசு விரட்டி’
என்ற சொல் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டாலும், அவை `விரட்டிகள்’
அல்ல `கொல்லிகள்’. கொசுக்களைக் கொலைசெய்யும் அளவுக்கு நஞ்சு அந்தக்
கருவிகளில் உள்ளது. 

மிக எளிமையான கேள்வி ஒன்றைக் கேட்டுப் பாருங்கள். கொசுக்கொல்லிகளைப்


பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், காய்ச்சல்களின் தீவிரம் குறைந்துள்ளதா...
அதிகரித்துள்ளதா? ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின்போதும் சிலவகை
காய்ச்சல்களைப் பற்றிய பதற்றம் உருவாக்கப் படுகிறது. இதன் ஊடாக,
கொசுக்களின் மீ தான அச்சம் தூண்டப்படுகிறது. விளைவாக, வட்டு
ீ மளிகைப்
பொருட்களின் பட்டியலில் கொசுக்கொல்லிகளும் இணைக்கப்பட்டுவிட்டன.
கடந்த 20 ஆண்டுகளாக கொசுக்களை முன்வைத்து முன்னெடுக்கப்படும்
பெருவணிகத்தின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இதை
`கொசுப் பொருளாதாரம்' என்றே அழைக்கலாம். 

கொசுக்கொல்லிகளின் வருகைக்குப் பின்னர் நிகழ்ந்த மிக முக்கிய மாற்றம்


நுரையீரல் நோய்களின் பெருக்கம். இதைப் புரிந்துகொள்ள எந்தப்
புள்ளிவிவரங்களையும் தேடாதீர்கள். எல்லா புள்ளிவிவரங்களும்
நிறுவனங்களின் தயாரிப்புகள்தான். 

உங்கள் சுற்றத்தாரைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களைச்


சுற்றிலும் எத்தனை மூச்சிரைப்பு நோயாளிகள் இருந்தனர், இப்போது எவ்வளவு
பேர் இருக்கிறார்கள் எனக் கணக்கிடுங்கள். உங்கள் குழந்தை களின்
நுரையீரலை சளி, எவ்வளவு மோசமாகப் பற்றிக்கொண்டுள்ளது எனப் பாருங்கள்.
சளி தொடர்பான தொல்லைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மருத்துவ
முயற்சிகள் எவ்வளவு தீவிரம் அடைந்துள்ளன எனக் கவனியுங்கள். சீராக மூச்சு
விடுவதற்குக்கூட, மருந்துகளை நம்பி இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை
பல்கிப் பெருகுவதை உற்று நோக்குங்கள். சுவாசத்தைச் சீராக்குவதற்கான
பொருட்களின் விளம்பரங்கள் எவ்வளவு அதிகரித்துள்ளன எனப் பாருங்கள். 

நமது மரபு மருத்துவக் கொள்கைகளின்படி தோல் நோய்களுக்கும் நுரையீரல்


நோய்களுக்கும் உறவு உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக, தோல் நோயாளிகளின்
எண்ணிக்கையும் பெருகிவிட்டதை நீங்களே உணர்ந்து புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் சிந்தனைக்கு ஒரு திறவுகோலை நான் தருகிறேன். இனி நீங்களே
சிந்தித்து, நிலைமையின் தீவிரத்தை உணர வேண்டும்.

மூடிய அறைக்குள் நச்சுப் புகையைப் படரவிட்டால், கொசுக்கள் மட்டும் செத்து


விழும், மனிதர்கள் நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையைப்
புரிந்துகொள்ளவே முடியவில்லை. நிறுவனங்களின் நச்சுத் தயாரிப்புகள்
எல்லாவற்றிலும் ஓர் ‘எச்சரிக்கை’ அறிவிப்பு இருக்கும். கொசுக்கொல்லிகளிலும்
அந்த அறிவிப்பு உண்டு. மனதாரச் சொல்லுங்கள் நீங்கள் அந்த அறிவிப்புகளைப்
படித்தது உண்டா? ஒருவேளை படித்தாலும் அவற்றை உங்களால் கடைப்பிடிக்க
முடியுமா? `கொசுக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, எல்லா கதவுகளையும்
மூடி வைக்கக் கூடாது’ என்பது ஓர் அறிவிப்பு. இதை உங்களால் செயல்படுத்த
முடிகிறதா?
`கதவுகளைத் திறந்தாலே கொசுக்கள் உள்ளே புகுந்துவிடும்’ என்ற அச்சத்திலும்
அருவருப்பிலும் அல்லவா நீங்கள் வாழ்கிறீர்கள். நிறுவனங்களும் அவற்றைத்
தாங்கிப்பிடிக்கும் மேதைகளும் எல்லா சட்டங்களில் இருந்தும்
தப்பிவிடுவார்கள். ஏனெனில், அவர்கள் ‘சட்டப்படி’ நஞ்சு தயாரிக்கிறார்கள்.
நீங்கள்தான் ‘சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல்’ நஞ்சுக்கு இரையாகிறீர்கள்.

மீ ண்டும் எனது முதல் கேள்வியை நினைவூட்டுகிறேன். கொசுக் கொல்லிகளின்


வருகைக்குப் பின்னர், அச்சுறுத்தும் காய்ச்சல் களின் எண்ணிக்கை
குறைந்துள்ளதா... உயர்ந்துள்ளதா? ஒவ்வொரு பருவ நிலை மாற்றத்திலும்
காய்ச்சல்களின் மீ தான அச்சமும், அவற்றின் தாக்குதலும் கூடிக்கொண்டுதான்
இருக்கின்றன. ஒருபுறம் நீங்கள் கொசுக்களுக்கு எதிராகப் போர் தொடுக்கிறீர்கள்.
மறுபக்கம் காய்ச்சல்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கின்றன. இந்தப்
போரில், மருந்து நிறுவனங்களும், கொசுக்கொல்லி நிறுவனங்களும் மாபெரும்
வெற்றி பெறுகின்றன. சமூகத்தின் நலனும் பூமியின் உயிர்ச் சூழலும் ஆபத்தான
நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

கொசுக்களின் உணவு, மனித ரத்தம் அல்ல... மனிதக் கண்களுக்குத் தெரியாத


நுண்ணுயிரிகளும் தாவரச் சுரப்புகளும்தான் அவற்றின் முதன்மை உணவுகள்.
சக உயிரினங்களின் ரத்தமும் அவற்றின் உணவுதான். அந்தச் சக
உயிரினங்களில் மனிதர்கள், கடைசி இடத்தில் இருக்கிறார்கள். 

ஒருகாலத்தில் வடுகளைச்
ீ சுற்றிலும் தவளைகளும் பிள்ளைப்பூச்சிகளும்
மரவட்டைகளும் நத்தைகளும் வாழ்ந்தன. இவை எல்லாம் வாழ்வதற்கு
ஏற்றவகையில் செடிகளும் புதர்களும் அப்போது இருந்தன. வட்டில்
ீ இருந்து
வெளியேறிய கழிவுநீர்தான் இந்த எல்லா உயிரினங்களுக்கும் உணவு ஆதாரம்.
கொசுக்களும் இவற்றோடு இணைந்து வாழ்ந்தன. அப்போது கொசுக்கள்
மனிதர்களைத் தேடி வரவில்லை.
படைப்பின் ஒழுங்குவிதிகள் குலையாத காலம் அது. கழிவுநீரிலும் அழுகிய
உணவுகளிலும் உருவாகும் நுண்ணுயிரிகளை உணவாக உட்கொண்டு சூழலைச்
சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு பல உயிரினங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
கொசுக்கள் அவற்றில் முதன்மை யானவை. ஆடு, மாடு, நாய், பூனை, எலி
போன்ற விலங்குகளும் பரவலாக வாழ்ந்த காலம் அது என்பதால், கொசுக்களின்
உலகம் பெரியதாக இருந்தது. 
நுண்ணுயிரிகளின் பெருக்கம் கட்டுப்பாட்டில் இல்லை எனில், பெரிய
உயிரிகளின் உயிர் வாழ்க்கை சிக்கலாகிவிடும். நுண்ணுயிரிப் பெருக்கத்தைக்
கட்டுப்படுத்துவதற்காக தவளை, நத்தை, கரப்பான் போன்ற எண்ணற்ற பூச்சி
இனங்கள் செயலாற்றுகின்றன. கொசுக்களும் ஈக்களும் அவற்றில்
குறிப்பிடத்தகுந்தவை.

நவனச்
ீ சமூகக் கட்டமைப்பில் மேற்கண்ட உயிரினங்களில் பெரும்பாலானவை
ஒழிக்கப்பட்டன. குறிப்பாக, ஈக்களின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைக்கப்பட்டது. பிள்ளைப்பூச்சி எனும் அருமையான வகையினம் ஏறத்தாழ
அழிந்துவிட்டது. தவளைகள் காடுகளுக்குத் துரத்தப்பட்டன. காடுகளும் ஏரிகளும்
நகர விரிவாக்கத்தாலும் தொழிற்சாலைகளாலும் அழிக்கப்பட்டன. நத்தைகளுக்கு
வயல்களில்கூட வாழ்க்கை இல்லை. எல்லா வயல்களும் பூச்சிக்கொல்லி
நஞ்சுக்களால் நிரப்பப்பட்டன. வெறும் ஐம்பது ஆண்டுகளில் இவ்வாறான
முற்றுகைப் போர் சக உயிரினங்களின் மீ து ஏவப்பட்டது.

இந்தப் போரில் கொசுக்கள் மட்டும் கூடுதல் ஆற்றலோடு போராடத்


தொடங்கின. தவளைகள் இல்லாத நகரங்களில் கொசுக்கள் மனித ரத்தம்
தேடுகின்றன. படைத்தவரின் விதிகளில் மிக முக்கியமானது, ‘எளியவை
அழிக்கப்பட்டால் வலியவை மிகுந்துவிடும்’ என்பது. பிள்ளைப் பூச்சிகளை
அழிந்தால் கொசுக்கள் மிகுந்துவிடும் என்பதும் அந்த விதியின் விளைவுதான்.
ரசாயன வேளாண்மை, வண்ணத்துப்பூச்சிகளை எளிதில் அழித்தது. இப்போது
வலிமையான பச்சைப் புழுக்கள் மிகுந்துவிட்டன. காடுகளைக் கைப்பற்றுவோர்
மான்களை எளிதில் வேட்டையாடு கின்றனர். காட்டுப்பன்றிகளும் யானைகளும்
இப்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

வடுகளைச்
ீ சுற்றி இருந்த கழிவுநீரைச் சுத்தம் செய்த பல்வேறு உயிரினங்கள்
ஒழிந்த நிலையில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.
ஏனெனில், நவனச்
ீ சமூகம் உயிரினங்களைக் குறைத்தது, கழிவுகளை
அதிகரித்தது. எங்கு பார்த்தாலும் குப்பைகளும் சாக்கடைகளும் காட்சியளிக்கும்
‘சிங்கார’ நகரங்கள் உருவாகின. இந்தக் கழிவுகளின் வழியாகப் பெருகும்
நுண்ணுயிரிகளைப் பற்றி நவன
ீ மனிதர்கள் கவலைப்படவில்லை. அவர்களது
எண்ணமும் செயலும் கொசுக்களை ஒழிப்பதைப் பற்றியது. ஏனெனில்,
`சிக்கல்களுக்குக் காரணம் நான்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்வது
கடினம். எல்லா சிக்கல்களுக்கும் பிறர்தான் காரணம் எனப் பழிபோடுவது
சுகமானது’.
`தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற நமது மரபின் கொள்கையை உங்கள் முன்
வைக்கிறேன். இப்போதைய நலக் குறைபாடுகளுக்குக் காரணம் கொசுக்கள்
அல்ல... மனிதர்கள். 
பெருகும் கழிவுகளின் கிருமிகளை உணவாக உட்கொண்டு தூய்மைப் பணியில்
ஈடுபட்டுள்ளவை கொசுக்கள் என்பதை மறவாதீர்கள். கொசுக்கள் எல்லாம்
சேர்ந்து கிருமிகளை உருவாக்கவில்லை; மனிதர்களுக்கு நோய் தரும்
கிருமிகளை உணவாக்கும் கொசுக்கள், மனிதர்களையும் கடிப்பதால் நோய்த்
தொற்று உருவாகிறது. இதுதான் நவன
ீ அறிவியல் சொல்லும் செய்தி. இப்போது,
ஒழிக்கப்பட வேண்டியவை கொசுக்களா... கழிவுகளா... எனச் சிந்தியுங்கள்.

ஒருவேளை, `கொசுக்களை எல்லாம் முற்றிலும் ஒழித்துவிட்டால், கழிவுகளில்


பெருகும் கோடானு கோடி கிருமிச் செறிவினைக் கட்டுப்படுத்தும் உயிரினம்
எது?' என்ற கேள்விக்கு விடை வேண்டும். அப்போதும், நிறுவனங்களும்
அவற்றைத் தாங்கும் மேதைகளும் ‘கிருமி கொல்லும் மருந்துகளை’
விற்பனைக்குக் கொண்டுவருவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
அவர்களது அடுத்த இலக்கு அதுதான். 

கொசுக்கள் இல்லாத சூழலில் பல்லிகளும், தவளைகளும், வௌவால்களும்


வேறு பல உயிரினங்களும் உணவின்றித் தவிக்கும். தாவரங்களின்
மகரந்தச்சேர்க்கையில் கொசுக்கள் பணியாற்றுகின்றன. கொசுக்கள் இல்லை
எனில், தாவரங்களின் காய்ப்பும் குறையும். 

எந்த ஓர் உயிரினத்துக்கு எதிராக நஞ்சு பயன்படுத்தப்பட்டாலும் அது


மனிதர்களையும் சேர்த்தே அழிக்கும் என்பதை உணர வேண்டும். நாம் சக
உயிரினங்களோடு கூடி வாழப் பிறந்தோம். உறங்கும்போது, கொசு வலைகளைப்
பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிப்பது, இப்போதைய நெருக்கடிக்கான சிறந்த
மாற்றாக அமையும். மாலை வேளைகளில் சாம்பிராணிப் புகையை அன்றாடம்
பரவவிடுவது கொசுக்களின் வருகையைக் குறைக்க உதவும். காய்ந்த
வேப்பிலைகள், தும்பை இலைகள் ஆகிய இரண்டையும் சிறு சட்டியில் இட்டு
புகையவிட்டால், கொசுக்கள் வெளியேறும். 

கொசு வலைகளை, குடிசைத் தொழில் செய்வோரிடம் இருந்து வாங்குங்கள்.


கடந்த 20 ஆண்டுகளில் கொசுவலைகளின் விற்பனை குறைந்து, அந்தத்
தொழிலில் இருந்து பல்லாயிரம் குடும்பங்கள் வெளியேறும் நிலை உருவானது.
இப்போது சீனத் தயாரிப்புக் கொசு வலைகள் சந்தையில் மலிந்து கிடக்கின்றன.
கொசு வலைகளை எல்லாம் இறக்குமதி செய்தால், கடைசியில் பிழைப்புக்காக
மனிதர்களை ஏற்றுமதி செய்யவேண்டிவரும்.

வேப்பிலைகளையும் தும்பை இலைகளையும் நீங்களே தேடிச் செல்லுங்கள்.


குறிப்பாக, உங்கள் பிள்ளைகளுக்கு அந்தச் செடிகளை அறிமுகப்படுத்துங்கள்.

முக்கியமான வேண்டுகோள்... கொசுக்களைக் கொல்லும் மின்மட்டைகளை வசி



எறியுங்கள். உணவு எனும் ஒரே ஒரு காரணத்தைத் தவிர, வேறு எதற்காகவும்
சக உயிர்களைக் கொலை செய்யும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை.
அவ்வாறு கொலை செய்யவேண்டிய தேவையும் இயற்கையில் உருவாவது
இல்லை. 

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 7
விகடன்ஆனந்த விகடன் - 03 Aug, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (28/07/2016)

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்


நீர், உயிர் ஆற்றலின் அடிப்படை வடிவம். 

நீர் இல்லாத நிலத்தில் உயிர்கள் வாழ்வது இல்லை. நீர் என்பது தாகம்


தணிக்கும் பொருள் மட்டும் அல்ல; நீரும் ஓர் உணவுதான். `உணவெனப்படுவது
நிலத்தொடு நீரே’ என்பது, நமது சங்கப்பாடலின் வரி. நீரில் உயிர்கள் இருக்க
வேண்டும். அந்த உயிர்கள் யாவும் மனித உடலில் வாழ்ந்து பெருகினால்தான்,
இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கும். உயிரற்ற நீரை மட்டுமே
பருகிக்கொண்டிருந்தால், உடலின் இயக்க ஆற்றல் தடைபடும். உடலுக்குத்
தேவையான ஊட்டங்கள் கிடைக்காது. 

பூமியில் உள்ள பல வகையான நீரும் அப்புறப்படுத்தப்பட்டு, எல்லா


இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பப்பட்டால், ஒரே ஓர் உயிர்கூட
வாழாது. மனித உடலும் இப்படித்தான், சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே
தொடர்ந்து பருகிக்கொண்டிருந்தால், உயிர் ஆற்றலை இழக்கத்
தொடங்கிவிடுகிறது. 

தூய்மையான குடிநீர் என்ற கருத்து மிகவும் தேவையானது. இந்தக் கருத்தை


வணிகமயமாக மாற்றிய நிறுவனங்கள், தூய்மை என்ற இடத்தில்
`சுத்திகரிக்கப்பட்ட’ என்ற சொல்லைத் திணித்துவிட்டன. இது வெறும் சொல்
விளையாட்டு அல்ல; மிக மோசமான விளைவுகளைத் தருகிற உயிர்
விளையாட்டு.  

மழைதான் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான நீர் ஆதாரம். ஆறு, ஏரி,


குளம், குட்டை, ஊற்று, சுனை, ஓடை, காட்டாறு போன்ற எல்லா வடிவங்களிலும்
மழைநீர்தான் நமக்கும் நம்முடன் வாழும் பிற உயிரினங்களுக்கும் உணவாக
வேண்டும். இந்த நீரில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கும்.
நுண்ணுயிர்கள் இல்லாத நீர் என எதுவும் இயற்கையில் இல்லை. சரியாகப்
பராமரிக்கப்படாத நீரில் இயற்கையான அளவைவிட அதிகமான நுண்ணுயிர்கள்
பெருகிவிடும். இது பாதுகாப்பற்ற குடிநீர். இவ்வாறு நேராத வகையில், குடிநீரை
முறையாகப் பராமரித்தால் போதும்.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னர், குடிநீர் நிறுவனங்கள் சமூகத்தின்
உடல்நலனில் ‘அக்கறை’ செலுத்தத் தொடங்கின. நாம் பருகும் ஒவ்வொரு
சொட்டு நீரும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என அந்த நிறுவனங்கள்
மிகுந்த ‘கவலை’கொண்டன. `சுத்திகரிக்கப்பட்ட’ நீர்ப்புட்டிகள் சந்தைக்கு வந்தன.
நீரில் வாழும் நுண்ணுயிரிகளை எல்லாம் ‘கிருமிகள்’ என்ற பொதுப்பெயரால்
அந்த நிறுவனங்கள் அழைத்தன. எல்லா நுண்ணுயிரிகளையும் கிருமிகள் என
அழைப்பது அறிவியலுக்குப் புறம்பானது மட்டும் அல்ல, மிக மோசமான
பொய்யும்கூட. பொது இடங்களில் கிடைக்கும் எந்த நீரும் கிருமிகளால்
நிரம்பியதுதான் என்ற கட்டுக்கதை வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டது. 

உணவகங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள் போன்ற பொது


இடங்களில் இருக்கும் குடிநீர் தரமற்றது என மக்கள் நம்பத் தொடங்கினர்.
முறையான பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இவை தரமான நீராக
மாறியிருக்கும். அரசும் அதன் துணை அமைப்புகளும் குடிநீர் நிறுவனங்களுடன்
இணைந்து பணியாற்றின. விளைவாக, இப்போது நீங்கள் பருகும் பெரும்பான்மை
குடிநீர் ‘சுத்திகரிக்கப்பட்ட’தாகிவிட்டது.
`சுத்திகரிப்பு செய்யும்போது நீரில் உள்ள `கிருமிகள்’ மட்டும் தேடித் தேடி
அழிக்கப்படுகின்றனவா அல்லது எல்லா நுண்ணுயிரிகளும் ஒட்டுமொத்தமாகக்
கொலை செய்யப்படுகின்றனவா?’ என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்.
ஏனெனில், நுண்ணுயிரிகள் மிகமிகக் குறைவாக உள்ள நீர், மனித உடலை
உலுக்கிப்போடும் அளவுக்குத் தீமைகளைச் செய்யக்கூடியது. நமது உடலே
நுண்ணுயிரிகளின் பிரபஞ்சம்தான். இந்தப் பிரபஞ்சத்துக்குள் நீர் எனும் உணவின்
வழியாகத் தொடர்ந்து கோடானுகோடி உயிரிகள் செல்ல வேண்டும். இது
படைப்பின் விதி. இவ்வாறு செல்லும் உயிரிக்கூட்டத்தில், உடலுக்கு ஒவ்வாத
வகையினங்கள் இருந்தால், அவற்றை அழித்து வெளியேற்று வதற்கு என,
எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் உடலுக்குள் உள்ளன.

எச்சில் அவற்றில் மிக முக்கியப் பாதுகாப்புக் கவசம். உடலின் மிகச் சிறந்த


எதிர் உயிரி மருந்து (ஆன்டிபயாடிக்) எச்சில்தான். இயற்கையான குடிநீரைப்
பருகும்போது எச்சில் சுரந்து, இனிமை மிகுந்த சுவை கிடைக்கிறது. புட்டிகளில்
அடைக்கப்பட்ட நீரைப் பருகும்போது, அளவுக்கு அதிகமான எச்சில் சுரப்பதையும்
அதில் கசப்புச் சுவை மிகுந்திருப்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். உடலுக்கு
ஒவ்வாத எந்த உணவையும் பானத்தையும் வாயில் திணிக்கும்போது, எச்சில்
சுரப்பு மிக அதிகமாக இருக்கும். உள்ளே நுழையும் ஒவ்வாத பானத்தை அல்லது
உணவை உடனடியாகச் சுத்திகரித்து வெளியே துப்பச்செய்யும் பணியை, எச்சில்
சுரப்பிகள் செய்கின்றன. 

உடல் முழுவதும் இவ்வாறான தற்காப்பு உறுப்புகளும் சுரப்பிகளும்


படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும், உயிருள்ள பொருட்களைக் கையாளும்
வகையில் உள்ளனவே தவிர, வேதிப்பொருட்களைக் கையாளும் வகையில்
அல்ல என்பதே முக்கியமான சேதி. தொழிற்சாலைகளில் `சுத்திகரிக்கப்படும்’
நீரில் கலக்கப்படும் வேதிப்பொருட்களில் குளோரின் முதன்மையானதும்
அடிப்படையானதும். இதைப் பயன்படுத்தாத ‘சுத்திகரிப்பு நிலையங்களே’
இருக்காது. அரசு குடிநீர்கூட குளோரின் வழியாகத்தான் சுத்திகரிக்கப்படுகிறது. 

குளோரின் பயன்பாட்டினால் மன அழுத்தம், மனப் பதற்றம், பீதியடைதல் என


மூன்று வகையான மன நோய்கள் உருவாகின்றன என நவன
ீ அறிவியலின்
ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மனநோய்கள், மோசமான உடல் நோய்களை
உருவாக்கும் என்பதும், அந்த நோய்களை ஒரு வரையறைக்குள் அடக்கிப்
பட்டியலிட இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தச் சமூகத்தில் எல்லா பாவங்களுக்கும் ஒரு வடிகால் உள்ளது. அந்த


வடிகாலுக்கு உள்ள மதிப்புமிக்க பெயர், ‘அனுமதிக்கப்பட்ட அளவு’ என்பது.
`குடிநீரில் குளோரின் பயன்பாடு புற்றுநோயை உருவாக்குமா?' என்று நீங்கள்
கேள்வி எழுப்பினால், ‘சுத்திகரிப்பு’ நிபுணர்கள் அளிக்கும் விடை,
‘அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தினால் குளோரின்
பாதுகாப்பானதுதான்’ என்பதாக இருக்கும்.
புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரை வாங்கிப் பருகுகிறீர்கள். நீங்கள் பருகும் நீரில்
எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? அது
‘அனுமதிக்கப்பட்ட’ அளவில்தான் உள்ளது எனத் தெரியுமா? உங்களுக்குத்
தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘இந்தக் குடிநீரில் கிருமிகள் இல்லை.
ஆகவே, இது பாதுகாப்பானது’. கிருமிகளைக் காட்டிலும் கொடூரமான
விளைவுகளை வேதி நஞ்சுக்கள் உருவாக்குகின்றன என்பதும், அந்த நஞ்சுக்கள்
கலக்கப்பட்ட நீரைத்தான் பருகிக்கொண்டுள்ளோம் என்பதும் நீங்கள்
அறியாதவை. 

ஒரு லிட்டர் நீரில் எவ்வளவு வேதிப்பொருட்கள் கலக்கலாம் என்ற கணக்கை,


மிகத் துல்லியமாக எல்லா நிறுவனங்களும் கடைப் பிடிக்கின்றன என
நம்புகிறீர்கள் அல்லவா? இந்த நம்பிக்கை உண்மையாகவே இருக்கட்டும்.
குளோரின் கலக்கப்பட்ட நீரை ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் பருகுவது
பாதுகாப்பானது? எத்தனை ஆண்டுகளுக்குப் பருகுவது பாதுகாப்பானது? ஆகிய
இரு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிப்பாருங்கள். உங்களுக்கு நீர்
வழங்கும் நிறுவனங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். பதில்
சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளன. 
பூமியில் வசும்
ீ கதிர்வச்சுகளில்
ீ அகச்சிவப்பு, புறஊதாக் கதிர்கள்
அடிப்படையானவை. குறைந்த வெப்ப ஆற்றல் செறிவு கொண்டவை,
அகச்சிவப்புக் கதிர்கள். மிகை வெப்ப ஆற்றல் செறிவுகொண்டவை புறஊதாக்
கதிர்கள். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் புறஊதாக் கதிர்வச்சைப்

பாய்ச்சித்தான் ‘சுத்திகரிப்பு’ச் செய்கின்றன. குளத்து நீரின் கீ ழே படித்திருப்பவை
அகச்சிவப்புக் கதிர்கள். நீரில் மிகக் குறைவான அளவு கதிர்வச்சு
ீ இருப்பது,
நுண்ணுயிர் வாழ்க்கைக்கு நல்லது.  குளத்து நீர் மாசுபடாதவரை, மனிதர்களும்
பருகலாம். அதிக அளவிலான கதிர்வச்சுகள்,
ீ எந்த உயிரினத்துக்கும்
ஆபத்தானவை தான். குறைந்த அளவு கதிர்வச்சுகள்
ீ அடங்கிய உணவையும்
நீரையும் உட்கொள்ளும் வகையில் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இப்போது
மிதமிஞ்சிய புத்திசாலித் தனத்தின் வெளிப்பாடாக, மிகைக் கதிர்வச்சுகள்

குடிநீரில்  செலுத்தப்படுகின்றன.

புறஊதாக் கதிர்களை நீரில் பாய்ச்சுவது கிருமிகளை மட்டும்தான் அழிக்கும்;


அந்த நீரைப் பருகும் மனிதர்களை அழிக்காது என எந்த ஆய்வும் இதுவரை
கூறவில்லை. நீங்கள் பருகும் குடிநீரில் கதிர்வச்சுகள்
ீ உள்ளன என்பதையாவது
முதலில் தெரிந்துகொள்ளுங்கள். 

எல்லா வேதிப்பொருட்களும் பிளாஸ்டிக்குடன் வினைபுரிபவைதான்.


பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு சொட்டு நீர் உங்கள் வாயில் விழும்போது,
அதில் பல வகையான வேதிப்பொருட்களும் கதிர்வச்சுகளும்
ீ கலந்துள்ளன
என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

`அரசு அனுமதிபெற்ற நிறுவனம்’ ‘தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம்’ போன்ற


அறிவிப்புகளின் பின்னால், மறைவான ஓர் உலகம் இயங்குகிறது. உங்களை
வந்தடையும் ஒவ்வொரு நீர்ப்புட்டியையும் அரசு அதிகாரிகள்  சோதித்து
அனுப்புவதாகவும், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் சோதித்து சான்று
தருவதாகவும் ஒரு மாயத் தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

வட்டிலேயே
ீ நீரைச் `சுத்திகரிப்பதற்கு' என அமைக்கப்படும் கருவிகளுக்கும்,
மேலே உள்ள அனைத்து விளக்கங்களும் பொருந்தும். 

நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு நன்ன ீர்தான் உயிர் ஆதாரம். நன்ன ீர்


என்றால், பல கோடி நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய நீர்தான். நீருக்கும்
மனிதர்களுக்குமான இயற்கையான உறவை, நிறுவனங்களும் அவற்றைத்
தாங்கிப்பிடிக்கும் தொழில்நுட்பங்களும் சிதைத்துவிட்டன. நமது மரபு,
நவனத்தின்
ீ சதிகளைக் காட்டிலும் வலிமையானது. `மழைநீர்தான் அமுதம்’
என்றார் ஆசான் திருவள்ளுவர்.

மழைநீரைச் சேமிக்கும் தொழில்நுட்பங்கள் இப்போது கூடுதலாகத்


தேவைப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர், தமக்குள்
கூட்டமைப்பு ஏற்படுத்தி அனைவருக்கும் பொதுவாக மழைநீர் சேமிப்பில்
ஈடுபடலாம். ஏரிகளும் குளங்களும் தூய்மையானவை யாகப் பாதுகாக்கப்பட
வேண்டும். தேவையான நேரங்களில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும். 

வேறு வழியே இல்லாமல், ‘சுத்திகரிப்பு’ நீரைப் பயன்படுத்துவோருக்கு என, சத்து


நீர் முடிச்சு ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். நன்னாரி வேர், வெட்டி வேர்,
தேற்றாங்கொட்டைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒரு தூய வெள்ளைத்
துணியில் முடிச்சாகக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இவை
அனைத்தும் சிறிய அளவு இருந்தால் போதும். அனுபவத்தில் அளவுகளைக்
கற்றுக்கொள்ளுங்கள். `சுத்திகரிக்கப்பட்ட’ நீரை, பானையில் ஊற்றிவைத்து, அந்த
முடிச்சை உள்ளே போட்டுவிடுங்கள். ஓரிரு மணி நேரத்தில் குடிநீர் மணக்கும்.
பானையில் ஊற்றப்படும் நீரில் உயிரிகள் உற்பத்தி யாகின்றன. உள்ளே
போடப்பட்ட முடிச்சு, சத்து வழங்குவதாகவும், இயற்கையான பாதுகாப்புக்
கருவியாகவும் செயலாற்றும்.

இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில்


கிடைக்கும். உங்கள் பொருளாதாரம், நாட்டு மருந்துக் கடைகளை நோக்கித்
திரும்புவது மிக நல்லது. அங்குதான் நமது காடுகளுக்கும் நகரங்களுக்கும்
இடையிலான வேர்கள் ஓடிக்கொண்டுள்ளன. அந்த வேர்களின் ஆயுள்காலம் மிக
நீளமானது. எந்தச் சீர்கேடுகளையும் உறிஞ்சி எடுத்து மரங்களைக் காக்கும்
வல்லமை அந்த வேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 8
விகடன்ஆனந்த விகடன் - 10 Aug, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (04/08/2016)

ம.செந்தமிழன், படம்: ப.சரவணகுமார் ஓவியம்: ஹாசிப்கான்

ஒரு சமூகத்தில் நியாயமான நடத்தைகளை அவமதிக்கும் வழக்கம்


அதிகரித்துவிட்டால், அந்தச் சமூகம் அழிவை நோக்கி விரைகிறது எனப்
பொருள். மஞ்சள் பை, சொம்பு, கூஜா ஆகிய சொற்கள் எல்லாம் நவனச்

சமூகத்தில் இழிவானவை. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னர், மேலே
குறிபிட்ட பொருட்களின் மீ து அவமரியாதையான போர்வை போத்தப் பட்டது.
மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம், சொம்பு தூக்குதல் அவமானத்துக்குரியது,
கூஜா எடுத்துச் செல்வது வேடிக்கையானது போன்ற மதிப்பீடுகளை நவனம்

உருவாக்கியது. 

இந்த மூன்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்குத் தேவையான


கொள்கலன்கள். மஞ்சள் பைகளை, நெகிழிப் பைகள் (பிளாஸ்டிக் பைகள்)
அழித்தன. சொம்பு, கூஜாக்களை நெகிழிப் புட்டிகள் (பிளாஸ்டிக் பாட்டில்கள்)
ஓரங்கட்டின. தமிழ்நாட்டின் எந்த நகரத்தில் நீங்கள் வசித்தாலும் பரவாயில்லை,
உங்கள் வட்டில்
ீ இருந்து வெளியே வந்து தெருக்களின் ஓரங்களைப் பாருங்கள்.
எங்கு பார்த்தாலும் நெகிழிக் குப்பைகள் கிடக்கின்றன. வட்டுவாசல்களில்,

வதிகளில்,
ீ சாக்கடைகளில், கால்வாய்களில், வயல்களில், ஆறுகளில், பேருந்து
நிலையங்களில், கடைத்தெருக்களில், கோயில்களில்… இன்னும் எல்லா
இடங்களிலும் நெகிழிக் குப்பைகள். 

வயிறு புடைத்த மாடுகள் நெகிழிப் பைகளோடு சேர்த்து அவற்றில்


அப்பியிருக்கும் இட்லியையோ,  ஒட்டியிருக்கும் சாம்பாரையோ
விழுங்குகின்றன. பல மனிதர்கள் நெகிழிப் புட்டிகளில் செடி வளர்த்து
இன்புறுகிறார்கள். பிள்ளைகள் யாவரும் நெகிழிப் புட்டிகளில்தான் பள்ளிக்குக்
குடிநீர் தூக்கிச் செல்கின்றனர். பெரும்பாலான பிள்ளைகளின் உணவுப்பெட்டியே
நெகிழியில் தயாரிக்கப்பட்டதுதான்.
உற்றுநோக்குங்கள், இயற்கைப் பொருட்களைக் காட்டிலும் செயற்கை வேதி
நஞ்சான நெகிழிப் பொருட்கள்தான் நமது சூழலில் பெரும்பான்மையாக
உள்ளன. இது ஓர் அபாயகரமான நிலைமை.
உங்கள் தெருவில் கிடக்கும் நெகிழிக் குப்பைகள், அங்கே இயற்கையான
வெப்பநிலையில் நுட்பமான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டுதான்
இருக்கின்றன. வெயிலில் கிடக்கும் மஞ்சள் பை, தன் மீ து இறங்கும் வெப்ப
ஆற்றலை உள்வாங்கி நிலத்துக்குக் கடத்திவிடும். அதே வெயிலில் கிடக்கும்
நெகிழிப் பை, வெப்பத்தை இயன்ற அளவுக்கு எதிரொளிக்கும். ஏனெனில்,
நெகிழித் தொழில்நுட்பத்தில் வேதிப்பொருட்களின் மூலக்கூறுகள் மிகவும்
இறுக்கமானவையாக வடிவமைக்கப்படுகின்றன. மஞ்சள் பைகள்
கிழிந்துவிட்டாலும் அழுக்கடைந்தாலும், நிலத்தில் வாழும் கோடிக்கணக்கான
நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன. ஆனால், நெகிழிப் பைகளுக்கு அந்தத் தகுதி
இல்லை. அவை நுண்ணுயிர்களால் எளிதில் சிதைக்க முடியாத வகையில்
உருவாக்கப்பட்டவை.
பூமியில் உள்ள எல்லா பொருட்களும் உணவுகள்தான். இங்கே எதுவும் சிதைக்க
இயலாதது அல்ல. ஒன்று மற்றொன்றின் உணவு என்பதுதான் படைப்பு விதி.
நெகிழிகளும் ஒருகாலத்தில் அழியப்போகிறவைதான். ஆனால், அந்தக் காலம்
வரைக்கும் மனித இனம் வாழுமா என்ற கேள்வி மிக முக்கியமானது.
வயிற்றால் செரிக்க இயலாத உணவை உள்ளே தள்ளினால், உடல் குலைந்து
உயிர் சிதையும். நிலத்தால் செரிக்க இயலாத உணவாகிய நெகிழி உயிரின
வகைகளைச் சிதைக்கும். 

நீர் அருந்துவதற்கு நெகிழிப் புட்டிகளைப் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு


மூளைச் செயல்பாடுகளில் குறைபாடு உருவாகிறது; பெரியவர்களுக்கு
ஆண்மைக்குறைவு உருவாகிறது என்ற ஆய்வுமுடிவுகள் இப்போது வலம்
வருகின்றன. இந்த ஆய்வுகள் எல்லாம் மிக மோசமான பூதத்தின் ஒரு
நகத்தைப் பற்றியவைதான். அந்தப் பூதமோ நீண்ட பற்களோடு பூமியின் எல்லா
உயிரினங்களின் மீ தும் கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்துகிறது.
நெகிழிகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைப் பற்றி முழுமையான ஓர் அறிக்கை
வரப்போவதே இல்லை. ஏனெனில், இது பன்னாட்டு நிறுவனங்களின் முழுக்
கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதாரம். 

நெகிழிகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தவறு இல்லை என


நீண்டகாலமாக ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. ‘மறுசுழற்சியின்போது
வெளியாகும் கரியமில வாயுவின் அளவு மிக ஆபத்தானது’ என்ற
எதிர்க்குரல்கள் இப்போது ஒலிக்கின்றன. புவி முழுவதும் இதுவரை சேர்ந்துள்ள
நெகிழிக் குப்பைகளை பூமி செரித்தால், அதில் இருந்து உருவாகும் வெப்பமும்
கரிக்காற்றும் ஒட்டுமொத்த பருவநிலையையும் சிதைத்துவிடும். இந்தக்
கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இந்தக் கணத்தில் உற்பத்தியாகும்
குப்பைகளையும் இனிவரும் காலங்களில் சேரப்போகும் குப்பைகளையும்
கணக்கில்கொண்டால், ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பூமியின்
உயிரினங்களைக் கூண்டோடு அழிக்கும் சாத்தான் ஒன்றை மனிதர்கள்
உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்கள்.

நவன
ீ மேதைகள், `அணு உலைகளால் ஆபத்து இல்லை’ என்ற கருத்தையே
நிலைநாட்டி விட்டார்கள். கேவலம் நெகிழிக் கழிவுகளைப் பற்றி மக்களுக்கு
எடுத்துரைப்பார்களா என்ன? ஆனால், நமக்கு மாபெரும் ஒரு பொறுப்பு உள்ளது.
இந்தப் பூமி நம் இல்லம்; நமக்காகப் படைக்கப்பட்டது. மிக நேர்த்தியாக, மிக
அழகாகப் படைக்கப்பட்ட நம் கோள் இது. இங்குதான் நம் முன்னோர்
வாழ்ந்துள்ளனர். இங்குதான் நம் சந்ததியும் வாழ வேண்டும். நெகிழிக் குப்பைகள்
கொட்டப்படும் இடங்களில் மண்புழுக்களும் அட்டைப்பூச்சிகளும்கூட
மடிந்துபோகின்றன. குளங்களில் ஏரிகளில் இந்தக் குப்பைகள் கலந்து, மீ ன்களும்
பிற நீர்வாழிகளும் கூட்டம் கூட்டமாகச் சாகின்றன. காற்றில் இந்த நெகிழிகளின்
நச்சு வெப்பம் கலந்துள்ளது. இந்த அவலத்தை மாற்றும் பொறுப்பு நமக்கு
உள்ளது.

ஒரே ஒரு நெகிழிப் பை உங்கள் கையில் திணிக்கப்படும் கணத்தில், இந்த


வாசகங்களை நினைத்துக்கொள்ளுங்கள். ‘இதோ இந்த சின்னஞ்சிறிய பை இந்தப்
பூமியில் மண்ணோடு மண்ணாகக் கலப்பதற்கு 1,000 ஆண்டுகள் வரை ஆகும்.
பெருங்கடல்களில் உள்ள உயிரினங்களைக் கொன்றுகுவிப்பதில் இந்தப் பையும்
ஆயுதமாகப்போகிறது. இப்போதைய பெருங்கடல் குப்பைகளில் 90 சதவிகிதம்
நெகிழிக் குப்பைகள் உள்ளன. கடலில் உள்ள குப்பைகளில், ஒரு சதுரமைல்
பரப்புக்கு 46 ஆயிரம் நெகிழித் துண்டுகள் கிடக்கின்றன. இப்போதே, ஏராளமான
கடல் பறவைகள், கடல் ஆமைகள் மற்றும் மீ ன்களின் வயிற்றில் நெகிழிக்
குப்பைகள் இருக்கின்றன. இந்தக் கழிவுகளை விழுங்கி இறக்கும் கால்நடைகள்
ஏராளம். இந்தப் பை மிக மிகச் சிறியது. ஆனால், இதன் ஆயுட்காலம் மிக மிக
நீளமானது. பூமியின் எல்லா உயிரினங்களையும் அழிக்கும் அளவுக்கான
வல்லமை இந்த நெகிழிப் பைக்கு உள்ளது.’

இது, நிச்சயமாக சுற்றுச்சூழல் கருத்து அல்ல; பூமியில் உள்ள எல்லா


உயிரினங்களுக்குமான வாழ்க்கைக் கருத்து. ஒரு கோப்பைத் தேநீரை
உறிஞ்சிவிட்டு நெகிழிக் குவளையை வசி
ீ எறிகிறீர்கள். அந்தக் கோப்பை என்ன
ஆகிறது எனச் சிந்தித்திருக்கிறீர்களா? 
திருமணம் உள்ளிட்ட விழாக்களில் பந்தியில் இலைக்கு எதிரே ஆளுக்கு ஒரு
நெகிழிப் புட்டியில் நீர் தருகிறீர்கள். அதே திருமண விழாவில் `நீடூழி வாழ்க’
என்ற வாழ்த்துகளையும் பொறித்து வைக்கிறீர்கள். இந்த இரு செயல்களும்
முரண்பாடானவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு மடக்கு நீர்
அருந்துவதற்கு எல்லாம் ஒரு புட்டி நெகிழியைப் பயன்படுத்தினால், எவரும் நீடு
வாழ முடியாது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை நஞ்சாக மாற்றுவதற்கு,


விழாக்களில் பயன்படுத்தப் படும் நீர்ப் புட்டிகளின் அளவு மட்டும் போதும்.
ஒவ்வோர் ஆண்டும் வசி
ீ எறியப்படும் நெகிழிகளைப் பாய்போல் தைத்தால்,
அதைக் கொண்டு இந்த பூமியை நான்கு முறைகள் சுருட்டிவிடலாம். அந்த
வகையில், கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பூமியின் சுற்றளவைக் காட்டிலும்
ஏறத்தாழ 100 மடங்கு அதிகமான நெகிழிகள் இப்போது இருக்கின்றன. 

நாளை காலையில் இருந்து நெகிழிகளை முற்றிலும் நிறுத்திவிடலாம் என


முடிவுசெய்தால்கூட, புவிச்சூழல் கெடுவதைத் தடுக்க முடியாது என்பதுதான்
மிகவும் கசப்பான உண்மை. நெகிழிகளின் பயன்பாடு அபாய அளவைக்
கடந்துவிட்டது. எவ்வளவோ சுற்றுச்சூழல் போராளிகள், இயற்கைக் காவலர்கள்
இதைப் பற்றி பேசிப் பேசி ஓய்ந்துவிட்டார்கள். இப்போது நான் இதை
எழுதுவதற்குக் காரணம், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள் மிகச் சிலராவது
இருக்க மாட்டார்களா என்ற விருப்பத்தினால்தான்.

உங்கள் வட்டில்
ீ இருந்து நெகிழிகளை ஒழிக்க, சில வழிமுறைகளை
முன்வைக்கிறேன். முதலில், குழந்தைகளுக்கான பொம்மைகளைப் பாருங்கள்.
அவற்றைத் தூக்கி வசிவிட்டு,
ீ மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப்
பொருட்களை வாங்கிவையுங்கள். பொம்மைகளின் எண்ணிக்கை குறைவாக
இருப்பது அவமானம் அல்ல. ஓரிரு பொம்மைகள் இருந்தாலும்
இயற்கைப்பொருட்களில் செய்யப்பட்டவையாக இருப்பதுதான் சரி. 

அடுத்ததாக, சமையலறைக்குச் செல்லுங்கள். பெரும்பாலான வடுகளில்


ீ உப்புகூட
நெகிழியில் இருக்கிறது. நெகிழி, உப்புடன் வினைபுரிந்து நஞ்சாக்கவல்லது.
அலமாரியில் உள்ள எல்லா நெகிழிகளையும் வசிவிட்டு,
ீ கண்ணாடிப்
புட்டிகளையும் மண் குடுவைகளையும் பயன்படுத்துங்கள். மண் குடுவைகளுக்கு
உள்ளே என்ன பொருள் இருக்கிறது என்பதை எழுதி வைத்துக்கொண்டால்,
பொருட்களை அடையாளம் கண்டுகொள்வது எளிது. குடிநீருக்கான
கொள்கலன்கள் அனைத்தையும் மண்பாண்டங்களாக்கிவிடுங்கள். குளியலறை,
கழிவறைப் பொருட்களை எவர்சில்வர், பித்தளை போன்ற உலோகங்களுக்கு
மாற்றிவிடுங்கள்.

எல்லா  விழாக்களிலும் சில்வர் குவளை களையோ மண் குவளைகளையோ


பயன்படுத்துங்கள். இந்தக் குவளைகளை வெந்நீரில் போட்டுக் கழுவினால்,
தூய்மை பராமரிக்கப்படும். தேநீர், பால் போன்ற நீர்மப் பொருட்களை எடுத்துச்
செல்லும்போது சொம்பு, கூஜா போன்ற பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
கடைகளுக்குப் போகும் போது மட்டும் அல்ல, எப்போதும் ஒரு துணிப்பையை
உடன் வைத்திருங்கள். மீ ன், இறைச்சி ஆகியவற்றைக்கூட பாத்திரங்களில்
வாங்குங்கள்.

குயவர்களைத் தேடிக் கண்டறியுங்கள். அவர்கள் ஆதிகாலத்தில் இருந்து இன்று


வரைக்கும் நிலத்தோடு உறவாடுபவர்கள். உங்கள் தேவைகளை எடுத்துக் கூறி
அப்படிப்பட்ட பாத்திரங்கள், கொள்கலன் களை உற்பத்திசெய்துதரும்படி
அவர்களிடம் கேளுங்கள். நான் அறிந்த வரையில், இது மிக எளிதாக நடக்கும்
செயல். இந்தச் சிந்தனைகொண்ட நண்பர்கள் குடும்பம் குடும்பமாக
ஒன்றுசேர்ந்து குயவர்களிடம் தேவைகளைக் கூறினால், மொத்தமாக
வடிவமைத்துத் தருவார்கள். வட்டின்
ீ கொள்கலன்கள் மண்பாண்டங்களாகவும்
உலோகப் பாண்டங்களாகவும் இருக்கட்டும். 

உணவு எடுத்துச் செல்லும் பாத்திரங்களில் நெகிழிகள் இருப்பது மிகவும்


ஆபத்தானது. பழைய காலம்போல, அடுக்குமுறை உணவுப்பெட்டிகளுக்கு
மாறுங்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கான உணவு மற்றும் நீர்ப் புட்டிகளில்
நெகிழியைத் தடை செய்துவிடுங்கள். 

ஏறத்தாழ 8000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரங்களைத் தோண்டும்போது நம்


முன்னோர் செய்த மண்பாண்டங்கள் கிடைக்கின்றன. இன்னும் சில
நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நிலம் தோண்டப்படும்போது, எது கிடைக்க
வேண்டும் என்பதை இப்போது வாழும் மனிதர்கள் முடிவுசெய்யலாம்!

- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 9
விகடன்ஆனந்த விகடன் - 17 Aug, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (11/08/2016)

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

`உணவு, படைக்கப்படுகிறது; தயாரிக்கப்படுவது இல்லை’ என்ற கருத்தை உங்கள்


முன் வைக்கிறேன். ஓர் உயிரினம் படைக்கப்படும் முன்னரே அதற்கான உணவு
படைக்கப்பட்டுவிடுகிறது. எந்த உயிரினமும், பிறந்த பிறகு தனக்கான உணவு
எது எனக் குழம்புவது இல்லை. எவற்றை உண்ண வேண்டும், எவற்றைத்
தவிர்க்க வேண்டும் என்ற கட்டளைகள் எல்லா உயிர்களிலும்
பதிவுசெய்யப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு கரையான்குஞ்சுகூட பிறந்த மறுகணமே
தனக்கான உணவைத் தேடி அடைகிறது. ஆனால், மனிதர்கள் மட்டும்தான்
இதற்கு விதிவிலக்கானவர்களாக மாறியுள்ளனர்.
எது நல்ல உணவு, எது மோசமான உணவு என்பது பற்றிய விளக்கங்களும்
விவாதங்களும் அதிகரித்துள்ள இந்தச் சூழல், கவலையளிப்பதாக உள்ளது. எவை
எல்லாம் இயல்பாகத் தெரிந்திருக்கவேண்டியவையோ அவற்றைப் பற்றி
விவாதங்கள் நிகழ்ந்தால், இயற்கையின் அரவணைப்பில் இருந்து மனிதர்கள்
விலகிவிட்டதாகப் பொருள். இரவில் இளைப்பாற வேண்டும் என்ற விதியை
அறியாதோர் உண்டு. ஆனால், மெத்தைகளின் விலை மற்றும் வகைகளை
அறியாதோர் குறைவு. பசித்தால் மட்டும் உண்ண வேண்டும் என்பதை
அறியாதோர் அதிகம்; உணவுகளின் சத்துக்களைப் பற்றி அறிந்தோர் அதிகம்.
இயல்பாக இருக்கவேண்டிய உணர்வுகள் மழுங்கியும், வணிக நோக்க
உணர்ச்சிகள் மிகுந்தும் கிடக்கின்றன.

`உணவு கெட்டுப்போதல்’ என்றால், அந்த உணவை நுண்ணுயிரிகள்


சிதைக்கின்றன எனப் பொருள். மனிதர்கள் உண்ணத் தகாத நிலைக்கு ஓர்
உணவு மாறிவிட்டால், அதைக் `கெட்ட உணவு' என்கிறோம். ஓர் இட்லி
உண்ணப்படாமல் தட்டில் இருக்கும்போது அதை நுண்ணுயிரிகள் சிதைத்தால்,
துர்நாற்றம் வசுகிறது;
ீ இட்லியின் நிறம் மாறுகிறது; வடிவம் சிதைந்துவிடுகிறது.
அதை வாயில் வைத்தால் எச்சில் வெள்ளம்போல் சுரந்து குமட்டலுடன்
வாந்திவருகிறது. `இது கெட்டுப்போன உணவு’ என்ற தகவல் நமக்கு மிகத்
தெளிவாக உணர்த்தப்படுகிறது. நாசி, கண், நாக்கு ஆகிய மூன்று புலன்களும்,
வயிற்றில் வாழும் நுண்ணுயிரிகளும் கூட்டாகச் சேர்ந்து இந்த முடிவை
நமக்குத் தெரிவிக்கின்றன.
எந்த உணவும் கெட்டுப்போகத்தான் வேண்டும். அதாவது எல்லா
உணவுகளையும் நுண்ணுயிரிகள் சிதைக்கத்தான் வேண்டும். ஓர் உணவுத்
துகளை வாயில் வைத்தவுடன் எச்சில் முதல் வயிற்றில் உள்ள எண்ணற்ற
சுரப்பிகள் வரை கூட்டாக இணைந்து அதைச் செரிக்கின்றன. செரிமானம்
என்பது, நுண்ணுயிரிகளின் சிதைப்புப் பணி. 

ஓர் உண்மையை நாம் மனதில் பதித்துக்கொள்ள வேண்டும், ‘நாம் உண்ணும்


ஒவ்வொரு பருக்கையும், நமக்கானவை மட்டும் அல்ல; நம் வழியாக
கோடிக்கணக்கான நுண்ணுயிரிக் கூட்டத்துக்கானவை’. பசி எனும் உணர்வைத்
தூண்டுவதும் உணவைச் செரிப்பதும் அந்தச் சில்லுயிரிகள்தான். 

‘நான்’ என ஒவ்வொருவரும் உணர்வது, எண்ணிலடங்காத சில்லுயிரிக் கூட்டம்


வாழும் பேரண்டம் தான். ஆகவே, நமது உணவை முறைப்படுத்தவேண்டிய
பொறுப்பு நமக்கு உள்ளது. `அண்டமே பிண்டம்’ என்பது ஆசான் திருமூலர்
அறிவிப்பு.

இங்கே எல்லாமே உணவுகள்தான். இலைகளுக்கு கதிரவன் வெளிச்சம் உணவு;


புழுக்களுக்கு இலை உணவு; பறவைகளுக்கு புழுக்கள் உணவு. காய்ந்த மரம்கூட
கரையான்களுக்கு உணவு. நாம் அனைவருமே ஏராளமான புழுக்களுக்கும்
சிற்றுயிரிகளுக்குமான உணவுதான். அதனால்தான் கூறுகிறேன், உணவு
படைக்கப்படுகிறது... தயாரிக்கப்படுவது இல்லை என்று.

உணவு என்றால் சிதைக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் உண்ணப்படாத


எந்த உணவும் கெட்டுப்போக வேண்டும். இந்த விதியை மிகச் சமீ பமாக மாற்றி
எழுதினார்கள் நவன
ீ வணிகர்கள். தயாரிக்கப்பட்டு பல மாதங்களுக்குப்
பின்னரும் உண்ணும் வகையிலான உணவு வகைகள் இப்போது பெருகியுள்ளன.
அவை நல்ல மணத்துடன், நிறத்துடன் உள்ளன. அவற்றை வாயில் இட்டால்,
சுவையாகவும் உள்ளன. நாசி, கண், எச்சில் போன்ற நமது பாதுகாப்புக்
கவசங்களை எல்லாம் மிகத் திறமையாக ஏமாற்றிவிட்டு உள்ளே நுழைகின்றன.
இவை எல்லாம் ‘கெடாத உணவுகள்’ என நீங்கள் நம்புகிறீர்களா? இவை, கெடாத
உணவுகள் அல்ல; நுண்ணுயிரிகள்கூட உண்ணத் தகாத உணவுகள்.

உணவில் உயிர் இருக்க வேண்டும். அப்படி  இருந்தால்தான் அதை உண்பதற்கு


பிற உயிர்கள் வந்து சேரும். ஒன்று, மனிதர்கள் உண்ண வேண்டும் அல்லது
சிற்றுயிர்கள் உண்ண வேண்டும். இதுதான் படைக்கப்படும் உணவின்
இலக்கணம். இப்போதைய வணிக உணவுகளில், உயிர் இல்லை...
வேதிப்பொருட்கள் உள்ளன. அந்த வேதிப்பொருட்கள்தான் உணவின் உள்ளும்
புறமும் நிறைந்து, எந்த உயிரினமும் உண்ணத்தகாத வகையில் உணவைப்
பாதுகாக்கின்றன. வணிகப்படுத்தப்படும் எல்லா உணவுகளும் ‘பதப்படுத்திகள்’
(preservatives) சேர்க்கப்பட்டவைதான்.

இப்போது உள்ள உணவு வணிக நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கமான


சொல், ‘அலமாரி ஆயுள்காலம்’ (Shelf Life) என்பதுதான். தயாரிக்கப்படும்
உணவுப்பொருட்களை எவ்வளவு காலத்துக்கு அலமாரிகளில் வைத்து விற்க
முடியும் என்ற சிந்தனைதான் அந்த நிறுவனங்களின் பொருளாதாரத்தை
முடிவெடுக்கவைப்பதில் முதன்மையானது. இதற்காக, அவர்கள் தயாரிக்கும்
உணவுகளில் விதவிதமான பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன. இவை
அனைத்தும் இயற்கையாக உண்ணத்தகாத வேதிப்பொருட்கள். வழக்கம்போல,
இவற்றை எந்த அளவுக்குச் சேர்க்கலாம் என்ற சட்டங்கள் உள்ளன. சட்டம்
மிகவும் முக்கியமானது அல்லவா! 

எல்லா நிறுவனங்களும் ‘சட்டத்துக்கு உட்பட்டு’ வேதிப்பொருட்களைக்


கலப்பதாக வைத்துக்கொண்டாலும், அந்த வேதிப்பொருட்களால் உருவாகும்
உடல் நோய்களைக் கணக்கிடுவதற்கான முறையான ஏற்பாடுகள் இங்கு
இல்லை. நவன
ீ அறிவியல், தரவுகளையும் ஆய்வு களையும் முன்வைக்கும்.
அவை பெருநிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பவை.
ஆகையால், இறுதிக்கும் இறுதியான உண்மையை சாமானியர்களால்
கண்டறியவே முடியாது. 

எளிமையான ஒரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் அன்றாடம்


பயன்படுத்தும் ஒரு சத்துணவை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஏதோ ஒரு
நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சத்துக்களின் பட்டியல்
தரப்பட்டுள்ளது. புரதம், சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் பல்வேறு ஊட்டங்கள்
இருப்பதாகப் பட்டியல் உள்ளது. `இதில் குறிப்பிடப்பட்டுள்ள புரதச்சத்து, எந்தப்
பொருளில் இருந்து எடுக்கப்பட்டது?' என்பதுதான் கேள்வி.

பாம்பு, தேள் ஆகியவற்றின் நஞ்சுகூட புரதம்தான். சுண்ணாம்புச் சத்து, மாட்டு


எலும்புகளிலும் உள்ளது; முருங்கைக் கீ ரையிலும் உள்ளது. இவற்றில் எதில்
இருந்து எடுக்கப்பட்ட புரதமும் சுண்ணாம்புச் சத்தும் வணிக உணவுகளில்
சேர்க்கப் படுகின்றன என உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால்,
நிச்சயமாக நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா!
உங்கள் கண்களில் சத்துப் பட்டியல் தெரிகிறது. நம் மூளைக்குள், ‘உணவு
என்பது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது’ என்ற நவன
ீ அறிவு
ஏற்கெனவே புகுத்தப்பட் டுள்ளது. ஆகவே, நீங்கள் அடிப்படை யான சில
கேள்விகளைக்கூட கேட்கத் தவறுகிறீர்கள்.

நீங்கள் போற்றிப் பாடியவாறு வாங்கும் அந்த வணிக உணவுகளை, எறும்புகளும்


ஈக்களும் சீண்டுவதே இல்லை என்பதைப் புரிந்துகொள் ளுங்கள். அவை
எல்லாம் படைப்பின் கட்டளைகளை மதித்து வாழ்பவை. எங்கள் வட்டில்,

பல்வேறு இனிப்பகங்களில் வாங்கப்பட்ட இனிப்புகளை மேசை மீ து திறந்து
வைத்திருந்தோம். பல நாட்களாகியும் எறும்புகள் அவற்றைச் சீண்டவே
இல்லை. எங்கள் உறவுகளின் இல்லங்களில் சமைக்கப்பட்ட இனிப்புகளை
மேசையில் வைத்தால், ஒரு மணி நேரத்துக்குள் எறும்புகள் வந்துசேர்கின்றன.

நமது உணவை எறும்புகளுடன் பகிர்ந்துகொள்ள நாம் படைக்கப்பட்டுள்ளோம்.


உணவு உண்ணும்போது ஒரு பருக்கை சிந்தினாலும் அதைச் சிதைக்க
எறும்புகள் வந்து சேரும். மீ தம் உள்ள உணவை காகங்களும், நாய் மற்றும்
பூனைகளும் நம்மோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். முதலில் காகங்களுக்கு
உணவு தந்துவிட்டு பிறகு உண்ணும் உன்னதமான மரபின் பிள்ளைகள் நாம்.
இப்போது உள்ள உணவை எறும்புகள்கூட உண்ண முடியவில்லை.

வெளியே கெட்டுப்போகாத உணவு, வயிற்றின் உள்ளே செரிக்காது. செரிமானம்


என்பது, உண்ணும் உணவு மலமாக வெளியேறும் இயந்திரச் செயல் அல்ல;
ஒவ்வொரு துகளும் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலின் எல்லா செல்களுக்கும்
ஆற்றல் பகிர்ந்து அளிக்கப்படும் பெரும் நிகழ்வு. நுண்ணுயிரிகள் நிரம்பிய ஒரு
பேரண்டத்துக்கு வழங்கப்படும் ஆற்றல்தான் உணவு. எந்த நுண்ணுயிரியும்
சிதைக்க இயலாத வகையில் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவு, கெடாமல்
இருக்கிறது என மகிழ்கிறீர்கள். அதே உணவு வயிற்றுக்குள் மட்டும்
நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் என எப்படி நம்புகிறீர்கள்?

நவன
ீ உணவுப் பழக்கத்தினால், ஒவ்வொரு செல்லிலும் செயற்கையான வேதித்
துகள்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கல் இல்லாத நபர்களே குறைவு எனும்
வகையில் மனித உடல்களில் மலம் தேங்கியுள்ளது. செரிமானம் இல்லாத
உடலில்தான் மலம் கட்டும். மலம் கட்டிய உடலில்தான் எல்லா நோய்களும்
வந்து தங்கும். வணிக உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்த பிறகே நோய்களின்
எண்ணிக்கை பெருகியது என்பதை மறக்காதீர்கள்.

மழலைகள், சிறுவர் ஆகிய இரு பிரிவினருக்கான உணவு வணிகம், ஒரு


மதம்போல பரவிவிட்டது. இதன் தீங்குகளைப் பற்றிய கேள்வியே எழாத
வகையில் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. அவர்களிடம் இருக்கும் பேராயுதம்,
`சத்து’ எனும் மாயவலைதான். சத்துப் பட்டியலைக் காட்டி உங்களை
வழ்த்துகிறார்கள்.

உலகின் எவ்வளவு பெரிய மேதையின் உணவுக் கண்டுபிடிப்பும் நமது மரபு


உணவுகளைவிட சத்து நிறைந்தது அல்ல. நம்மிடம் அரிசியில் பல்வேறு
வகைகள், சிறுதானியங்களில் ஏராளமானவை, கீ ரைகள், காய்கறிகள், மீ ன்கள்,
நண்டுகள், இறைச்சிகள் எனக் கணக்கிட இயலாத வகையில் சத்துணவுகள்
உள்ளன. நமது மரபு உணவுகளை மட்டும் முறையாக உட்கொண்டாலே
உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைக்கும். உணவை, சமைத்து உண்ணப்
பழகுங்கள்; வாங்கி உண்ணாதீர்கள். முறுக்கு, அதிரசம், சீடை போன்ற
நொறுக்குத்தீனிகளை வட்டிலேயே
ீ சமைக்கத் தொடங்குங்கள். 

நமது மரபில் முன்னோருக்கு உணவு வைக்கும் சடங்குக்கு, ‘உணவு படைத்தல்


/ படையல்’ எனப் பெயர். எவ்வளவு நுட்பமான சொல்லைப்
பயன்படுத்தியிருக்கிறார்கள்! 
- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 10
விகடன்ஆனந்த விகடன் - 24 Aug, 2016 தொடர்கள்

வெளியிடப்பட்ட நேரம்:06:00 (18/08/2016)

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

`உணவு உற்பத்தியில் நவன


ீ தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட வில்லை என்றால்,
உணவுப் பஞ்சம் உருவாகியிருக்கும்’ என்ற வாசகத்தை நீங்கள்
கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவேளை இந்த வாசகம் இதுவரை உங்களை
வந்தடையாவிட்டாலும் இதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில்,
கடந்த 60 ஆண்டுகாலமாக நமது உணவுமுறைகளை அடியோடு புரட்டிப்போட்ட
வாசகம் இது.
செருப்பு வாங்குவதற்காக கடைக்குப் போகிறீர்கள். மலிவான விலையில் 10
செருப்புகளை வாங்குவர்களா
ீ அல்லது விலை சற்று அதிகமாக இருந்தாலும்
ஒரே ஒரு செருப்பை வாங்குவர்களா?
ீ எந்தப் பொருளாக இருந்தாலும்
எண்ணிக்கையை விட தரம் முக்கியம் என்பதுதான் அனைவருக்குமான கருத்து.
இப்போது நாம் தெரிந்துகொள்ள இருப்பது செருப்பு, துடைப்பம், குப்பைக்கூடை
போன்ற பொருட்களைப் பற்றி அல்ல; உயிர் வளர்க்கும் உணவைப் பற்றி.

நவனத்
ீ தொழில்நுட்பங்கள் புகுத்தப் பட்ட எல்லா உணவுப்பொருட் களும்
உற்பத்தியில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒரே ஓர் உணவுப் பொருள்கூட
மனிதர்களுக்கான தரத்தில் இல்லை. உங்கள் உணவின் பெரும்பகுதியை நிரப்பும்
அரிசிகள் உமி தீட்டப்பட்ட சக்கைகள். உணவு எண்ணெய்களோ, வேதிப்
பொருட்களும் பெட்ரோலியப் பொருட்களும் சேர்க்கப்பட்ட திரவங்கள்.
காய்கறிகளும் கீ ரைகளும் புழுப்பூச்சிகள்கூட வாழத் தகுதியற்ற நிலத்தில்
நஞ்சுகள் தெளிக்கப் பட்டு வளர்ந்த தாவரக் குப்பைகள். கறிக்கோழிகள் எல்லாம்
முழுக்க முழுக்க வேதி மருந்துகளால் வளர்க்கப்பட்ட புதிய வகை உயிரிகள்.
நிலைமையைச் சற்று ஆழ்ந்து கவனித்துப்பாருங்கள்... நமது ஒட்டுமொத்த
உணவுச்சூழலும் தனியார் நிறுவனங்களின் பிடியில் உள்ளது.

நீங்கள் உண்ணும் உணவின் உற்பத்தி முறையைப் பற்றிய எந்தத் தகவலும்


உங்களுக்குத் தெரியாது. அந்த வகையில், கறிக்கோழிகளை வட்டிலும்

கடைகளிலும் வகைவகையாக உண்டு களிப்போரிடம் நான் பகிர்ந்துகொள்ள
சில சேதிகள் உள்ளன. 

`பிராய்லர் சிக்கன்' என அழைக்கப்படும் கறிக்கோழிகள், வளர்க்கப்படும்போது


அவற்றுக்கு வழங்கப்படும் வேதிப்பொருட்கள், நஞ்சு கலந்த மருந்துகள்,
செலுத்தப்படும் ஊசிகள், தீவனத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும்
வேதிப்பொருட்கள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு.

கறிக்கோழிகளை கிராமங்களில் அறிமுகம் செய்வதற்காக அதிகாரிகள்


மேற்கொண்ட செயல்கள் எல்லாம், கற்பனைக்கு எட்டாதவை. அதிகாரிகள் பல
குழுக்களாக கிராமங்களுக்குள் நுழைந்து, அங்குள்ள மக்களிடம்
கறிக்கோழிகளின் `அருமை பெருமைகளை’ எடுத்துக்கூறி, அவர்களிடம்
கறிக்கோழிக் குஞ்சுகளை இலவசமாகக் கொடுத்தனர். பின்னர், அந்த மக்கள்
வட்டில்
ீ இருந்த நாட்டுக்கோழிகளைப் பிடித்துவந்து ஏதேனும் ஒரு தனி
இடத்தில் வைத்து, அழித்தனர்.

எவ்வளவு உன்னதமான பணி!

இவ்வாறு எல்லாம் பல வகைகளில் முயற்சி செய்து, நாட்டுக்கோழிகளை


ஏறத்தாழ ஒழித்துக்கட்டின கால்நடைத் துறையும் அதன் துணை
அமைப்புகளும். இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் அவர்கள் வைத்துக்கொண்ட
அழகிய பெயர், ‘உணவுப் பாதுகாப்பு’. அதாவது, எல்லா மக்களுக்கும் கோழி
இறைச்சி கிடைப்பதற்காக அவர்கள் செய்த `அரும்பணி’. 

கிராமத்து மனிதர்களுக்கு, புரதமும் தெரியாது...வைட்டமினும் தெரியாது.


ஆனால், படித்தவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இவை எல்லாம்
விரல்நுனியில் இருக்கும் சேதிகள். `நாட்டுக்கோழிகளைவிட,
கறிக்கோழிகளில்தான் அதிகச் சத்துகள் உள்ளன’ என்ற பரப்புரையை
இப்போதும் செய்துவருபவர்கள் அதிகம் படித்தவர்கள்தான். இந்த இடத்தில்
இரண்டு கேள்விகளை எழுப்புங்கள். இந்தக் கேள்விகளை இறைச்சிக்
கடைக்காரரிடம், கறிக்கோழி வளர்க்கும் நிறுவனங்களிடம், அவற்றைப்
பரிந்துரைக்கும் மேதைகளிடம் நீங்கள் கேட்கலாம். 

‘கறிக்கோழிகளின் வளர்ப்பில் பயன்படுத்தப் படும் தீவனங்கள்,


வேதிப்பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றின் பட்டியலை வெளிப்படையாக
அறிவிக்க முடியுமா? அந்தப் பட்டியலில் உள்ள பொருட்களின்
பக்கவிளைவுகளை தமிழில் அச்சிட்டு கறிக்கடைகளில் ஒட்டிவைக்க முடியுமா?’
என்பவைதான் அந்தக் கேள்விகள். இவற்றுக்கு அவர்கள் நேரடியாக விடை தர
மாட்டார்கள். மாறாக, ‘நாங்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும்
பாதுகாப்பானவைதான்’ என்ற கருத்தைச் சுற்றிவளைத்துச் சொல்வார்கள்.
கறிக்கோழிப் பண்ணைகளுக்குள் தாண்டவம் ஆடும் வேதிப்பொருட்கள்,
ஊசிகளின் பெயர்ப் பட்டியலையும் அவற்றால் விளையும் மிக மோசமான
விளைவுகளையும் பட்டியலிட்டு எழுத முடியும். 

எனது விருப்பம், உணவைப் பற்றிய புரிதலை உங்களிடம் உருவாக்குவதுதான்.


கறிக்கோழி வளர்ப்பு என்பது, மக்களுக்கு உணவு தரும் புனிதச் செயல் அல்ல;
மிகக் குறுகிய காலத்தில் அதிகமான பொருள் ஈட்டும் வேட்டைக் களம். ஒரு
நாட்டுக்கோழி இயற்கையாக வளர்ந்தால், ஒரு கிலோ எடைக்கு வளர்வதற்கு
குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். இதுதான் கோழிகளின் இயல்பான வளர்ச்சி
வேகம். கறிக்கோழிகள் முன்னர் எல்லாம் ஏறத்தாழ 100 நாட்களில் ஒரு கிலோ
எடைக்கு வளர்க்கப்பட்டன. அந்த அளவுக்குச் செயற்கைத் தீவனங்கள்
அவற்றுக்கு ஊட்டப்பட்டன. 

ஓர் உயிரினம் இயற்கைக்கு மாறான வேகத்தில் வளர்க்கப்பட்டால், அது மிக


மோசமாக நோய்வாய்ப்படும் என்பது விதி. மனிதர்களில் மிக அதிகமான
எடைகொண்டவர்கள், நலம் குன்றியவர்களாக மாறுவதைக் கண்டிருப்பீர்கள்.
குறைந்தது, 180 நாட்களில் வளரவேண்டிய எடையை 100 நாட்களில் வளர்த்தால்,
அந்தக் கோழிகள் நோயுற்றுச் சாகவேண்டிவரும். இது அந்தத் தொழிலில்
உள்ளோருக்கும் தெரியும். அவர்களைவிட, கால்நடை மருத்துவத் துறைக்கு
இந்த உண்மை நன்றாகத் தெரியும். அவ்வாறு நோய்வாய்ப்பட்ட கோழிகளுக்கு
எல்லாம் உடனடியாக எதிர் உயிரிகள் (ஆன்டிபயாடிக்ஸ்) செலுத்தப்பட்டன. 

காய்ச்சலுக்கு ஆளான எந்த உயிரினத்துக்கும் இவ்வாறான மருந்துகள்


கொடுத்தால், காய்ச்சலுக்குக் காரணமான கிருமிகள் முற்றிலும் அழிந்துபோவது
இல்லை. மாறாக, அந்தக் கிருமிகளின் செயல்வேகம் மட்டுப்படுத்தப்
பட்டிருக்கும். இது, நமது மரபுச் சிந்தனை அல்ல; நவன
ீ மருத்துவச் சிந்தனை.
அந்த வகையில், காய்ச்சலில் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு மருந்துகள்
செலுத்தப்படும்போது, அவற்றின் உள்ளே இருக்கும் கிருமிகள் தங்கள் செயல்
வேகத்தைக் குறைத்துக்கொண்டு அதே கோழிகளின் உடலில்தான்
தங்கியுள்ளன.

இந்தக் கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும்போது, உங்களுக்கு இதைப்


பற்றிய எந்தத் தகவலும் தெரியாது. ஒரு லட்சம் கோழிகளில் சில நூறு
கோழிகளுக்கு மட்டும் காய்ச்சல் வரலாம். அதற்காக எல்லா கோழிகளும்
நோயுற்றவை எனக் கூறுவது மூடத்தனம் என்று சிலர் நினைக்கலாம்.
அவர்களுக்கு எனது பணிவான பதில் என்னவெனில், ‘ஒரு கோடி கறிக்கோழிகள்
வளர்க்கப்பட்டாலும், அத்தனை கோழிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இந்தக்
காய்ச்சல் மருந்துகள் புகட்டப்படுகின்றன’ என்பதுதான். இதன் மறுபக்கம்
என்னவெனில், காய்ச்சல் தாக்காத அல்லது நோய்வாய்ப்படாத கறிக்கோழி என
எதுவும் இல்லை என்பதுதான்.

பிறந்தது முதல் இயற்கையாகச் செத்துவிழும் வரை நோய் தாக்குதலே


இல்லாத நாட்டுக் கோழிகள் ஓர் ஆயிரத்தை நம்மால் வளர்த்துக் காட்ட
முடியும். அதுபோன்ற ஒரே ஒரு கறிக்கோழியைக்கூட இப்போது உள்ள
தொழில்நுட்பத்தால் வளர்க்க இயலாது. ஏனெனில், எல்லா கறிக்கோழிகளும்
மிகவும் செயற்கையான வேகத்துடன் வளர்க்கப்படுகின்றன. இந்த வேகத்தில்
வளரும் உயிரினங்கள் நோயுற்றுத்தான் சாகும்.

அடுத்த தகவலை நீங்கள் கவனமாக உள்வாங்க வேண்டும். கறிக்கோழி


வளர்ப்பில் புதிய பல `சாதனைகள்’ இப்போது நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில்
முக்கியமானது, ‘வெறும் 35 நாட்களில் 1.800 கிலோ எடைக்கு கோழிகளை
வளர்க்கும் தொழில்நுட்பங்கள்’. ஆம், இப்போது நீங்கள் உண்டு மகிழும்
கோழிகள் யாவும், வெறும் 35 நாட்களில் ஏறத்தாழ இரண்டு கிலோ எடைக்கு
வளர்ந்தவை. 35 நாட்களில் இந்தக் கோழிகள் விற்றாக வேண்டும். அவ்வாறு
விற்காவிட்டால், இந்தக் கோழிகளின் உடல்நிலை நலிவுறும். இதற்காக,
கூடுதலாகத் தீவனங்களும் வேதி மருந்துகளும் தரப்படும்.
அதாவது, இந்தக் கோழிகள் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் இவற்றின்
உடல் ரசாயனங்களால் நிரப்பப்படுகிறது. நீங்கள் வாங்கி உண்ணும் கோழி 45
நாட்கள் ஆயுள்கொண்டதாக இருந்தால், அது ஏறத்தாழ இரண்டரை கிலோ
வளர்ந்திருக்கும். இந்த வளர்ச்சியை எட்டுவதற்குத் தேவையான எல்லா
வேதிப்பொருட்களும் அதன் ஒவ்வொரு செல்லிலும் திணிக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கோழிகளைப் பற்றிய நியாயமான கேள்விகள் எழுப்பப்படாத மேலை


நாடுகளில், மனிதர்களின் உடல் பருமன் மற்றும் சுரப்பிகள் சார்ந்த நோய்கள்,
கட்டுப்படுத்த இயலாத அளவுக்குச் சென்றுவிட்டன. நமது சமூகத்தைப்
பாருங்கள். உடல் பருமனும், தைராய்டு உள்ளிட்ட சுரப்பிகளில் உருவாகும்
நோய்களும் முன்னெப் போதும் இல்லாதவகையில் பெருகிவிட்டன. 

நாட்டுக்கோழிகள் நோயுற்றால் வேம்பு, மஞ்சள் போன்ற மரபு மருந்துகள்


அளிக்கப்படும். அந்த மருந்துகள்யாவும் மனிதர்களுக்குத் தீங்கு இழைக்காதவை.
காய்ச்சல் சரியாகாமல்போனால் நாட்டுக்கோழிகள் செத்துவிழும். நமது மரபில்
உடலின் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் மருந்துகள் மட்டும் தரப்படும்.
எதிர்ப்பாற்றலை வளர்க்கவே இயலாத நிலையில் உள்ள கோழிகள்
செத்துப்போவது இயல்பானதுதானே!  அந்தக் கோழிகள் மனிதர்களுக்கு
உணவாகும் தகுதியற்றவை அல்லவா!
கறிக்கோழிகளுக்குச் செலுத்தப்படும் வேதி மருந்துகள், நோயைத் தீர்ப்பது
இல்லை. மாறாக, நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்துகின்றன. ஆகவே,
கடைக்கு வரும் கோழிகளில் எது நோயுற்றது, எது நலமானது எனக்
கண்டுபிடிக்கும் வாய்ப்பே இல்லை. செயற்கையான வேதிப்பொருட்களால்
வளர்க்கப்பட்ட கோழியின் ஒவ்வொரு செல்லிலும் வேதி நஞ்சுக் கழிவு
இருக்கும் என்பது ஒருபுறம். 

பெரும்பாலும் நோயுற்றுச் சாகும் நிலையில் இருக்கும் கோழிகளை நீங்கள்


உணவாக உண்கிறீர்கள் என்ற கொடுமை மறுபக்கம். இந்த இரு பக்கமும்
உங்களுக்குத் தெரிய வேண்டும். கறிக்கோழிகள் எல்லாமே ஊக்க
மருந்துகளால்தான் இவ்வளவு விரைவாக வளர்கின்றன என்பது ஊரறிந்த சேதி.
இந்த ஊக்க மருந்துகள், கோழியின் உடம்பை வளர்க்கும்... அதை உண்போரின்
உடலுக்கு சத்துக்களை மட்டும் வழங்கும் என்பது அந்தத் துறையைத்
தாங்கிப்பிடிக்கும் மேதைகளின் அறிவிப்பு. அறிவின்வயப்பட்டுச் சிந்திப்போருக்கு
இவை எல்லாம் பாவங்களாகத் தெரியாது. ‘தொழில் வளர வேண்டுமானால்
அல்லது நவன
ீ அறிவியல் வளர  வேண்டுமானால் இவற்றை எல்லாம் தவிர்க்க
இயலாது’ என தங்கள் தீர்ப்பை அவர்கள் எழுதிவிடுவார்கள்.

நாம் மனச்சான்றுபடி சிந்திப்போம். இது நியாயம்தானா? நமது உணவு இவ்வளவு


மோசமானதாகவும், வெளிப்படைத் தன்மைகளுக்கு வாய்ப்பே இல்லாத
வகையிலும் இருக்க வேண்டுமா? நம் பிள்ளைகள் கறிக்கோழிகளை அதிகம்
உண்கிறார்கள். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட வகையில் நம்புவதற்கு, இது என்ன
அமுதமா? மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக, எதை
வேண்டுமானாலும் உண்பது முறையற்ற பழக்கம் அல்லவா! 

இந்த நிலையை மாற்ற முடியும். அதற்கு நீங்கள் உறுதியான ஒரு முடிவை


எடுக்க வேண்டும். `செயற்கைத் தொழில்நுட்பங்களின் வழியாக வளர்க்கப்படும்
எந்த உயிரினத்தையும் உணவாக்க மாட்டேன்’ என முடிவெடுத்துச்
செயலாற்றுங்கள். விரைவில் நமக்கு நல்ல கோழி இறைச்சி வழங்கப்படும்.

‘அல்லவை நீக்கினால் நல்லவை பெருகும்’ என்பது படைத்தவரை


உணர்ந்தோரின் மந்திரம்! 

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 11
வெளியிடப்பட்ட நேரம்:06:00 (25/08/2016)

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: ஹாசிப்கான்

செய்யவே கூடாத பாவங்களைக்கூட, அன்றாட வேலையாகச் செய்வது இந்தக்


காலத்து இயல்பாகிவிட்டது. உடலுக்கு சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) வேண்டும்
என்பதற்காக மாடுகளின் வாழும் உரிமையையே ஒழித்துக்கட்டுவது, அத்தகைய
பாவங்களில் ஒன்று. `பாலில் சுண்ணாம்புச்சத்து மிகுதியாக உள்ளது’ என்ற
அறிவிப்பால், நாம் பெற்றவை சரிசெய்ய இயலாத நோய்கள்; இழந்தவையோ
மீ ட்க இயலாத செல்வங்கள்.

கன்றுகளுக்கான பாலைச் சுரண்டாமல், மிகக் குறைவாக மட்டுமே பால்


பீய்ச்சுவதுதான் நமது மரபு. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர், பால் அருந்தும்
வழக்கம் மிகமிகக் குறைவாக இருந்தது. இப்போதுதான் லிட்டர்கணக்கில் பால்
வாங்கும் பழக்கம் உள்ளது. அந்தக் காலத்தில், பாலை விலைக்கு விற்பதே
பாவம் எனக் கருதினார்கள். நோயுற்றோருக்கு மருந்தாகவும், தவிர்க்க இயலாத
சூழல்களில் தாய்ப்பாலுக்கான மாற்றாகவும் பால் பருகப்பட்டது.

தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்கள் மட்டும் பரவலாகப்


பயன்படுத்தப் பட்டன. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட
தாக்குதல், நமது மரபில் இருந்த அறக்கொள்கைகளை எல்லாம் வழ்த்திவிட்டு,

மாடுகளுக்கு எதிரான எல்லா பாவங்களையும் நியாயப்படுத்திவிட்டது.

`எல்லோருக்கும் பால் உணவு’ என்பது அந்தப் புரட்சியின் மந்திரம். அதை


உச்சரித்த வித்தகர்கள், பல்வேறு ஆய்வறிக்கைகளைத் தயாரித்து
வெளியிட்டார்கள். `ஒட்டுமொத்த சமூகத்திலும் சத்துக் குறைபாடு உள்ளது.
எல்லோரும் அதிக அளவில் பால் பருகினால்தான் அந்தக் குறை நீங்கும்'
என்றும் அந்த அறிக்கைகள் முழங்கின. 

நமது சமூகத்தில் இருந்த பெரும்பாலான மாட்டு வகைகள், ஒரு நாளைக்கு


ஐந்து லிட்டர் அளவில்  மட்டும்  பால்  சுரக்கும்  தன்மைகொண்டவை. அந்தக்
காலத்தில், மாடு வளர்ப்போர் அதிகமாக இருந்தனர்; பால் சுரப்பு அளவும்
தேவைக்கு ஏற்ப இருந்தது. வெண்மைப் புரட்சியின் செயல் திட்டப்படி, ஒரு
நாளைக்கு 20 லிட்டர் வரை சுரக்கும் மாட்டு வகைகள் இறக்குமதி
செய்யப்பட்டன. 

அந்த மாடுகள் நம் ஊரில் உள்ள புற்களையும் புதர்களையும் மட்டும்


மேய்ந்தால், நோயுற்றுச் செத்துவிழக்கூடியவை. ஆகவே, அவற்றுக்கான தீவன
நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அந்தத் தீவனங்களுக்காக மக்காச்சோளம்
போன்ற அயல்நாட்டுப் பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. காட்டில் கிடைக்கும்
புற்களையும் வைக்கோலையும் மேய்ந்துவிட்டு, அற்புதமான உணவாகிய
பாலைச் சுரந்துகொண்டிருந்த நமது பசுக்கள், முற்றிலும் ஒதுக்கித்தள்ளப்பட்டன.
முழுக்க முழுக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே உண்டு வாழும்
அயல் வகை மாடுகள் போற்றி வளர்க்கப்பட்டன.
`பால் சுரப்பு’ என்பது, இயற்கையாகச் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல்.
வெண்மைப் புரட்சி எனும் மாய நிகழ்வுக்குப் பிறகு, ‘பால் உற்பத்தி’ என்ற
சொல் மிக நேர்த்தியாக நிலைநாட்டப்பட்டது. சீப்பு, உள்ளாடை, குப்பைக்கூடை
போன்றவை உற்பத்தி செய்வதைப்போல பாலும் `உற்பத்தி’ செய்யப்பட்டது.
எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைக்கப்படுகிறது. ஆனால், இவர்களோ
பாலை `உற்பத்தி’ செய்கிறார்கள்.

இந்தச் சொல் மாற்றம் மிகக் கூர்மையானதுதான். ஏனெனில், இவர்கள் பசு


எனும் உயிரினத்திடம் இருந்து பாலைப் பகிர்ந்துகொள்ளவில்லை; பசுவின்
உடலில் இருந்து பாலைத் தயாரிக்கிறார்கள். 
இயற்கையாக பால் சுரப்பதற்கு, பசுவின் மடியைக் கன்று முட்டி மோதி ஊட்ட
வேண்டும். பசுக்களைத் தடவிக்கொடுத்து, அவற்றோடு பேசிக்கொண்டே
கன்றுகளை ஊட்டவைத்து, பால் சுரந்ததும் பீய்ச்சத் தொடங்குவது நம் மரபு. 

இப்போது பால் சுரப்பதற்குக் கன்றுகளே தேவை இல்லை; பசுக்களின் கழுத்தில்


ஓர் ஊசியைக் குத்தினால் பால் சுரக்கிறது. பாலைக் கறப்பதற்கு மனிதர்கள்
தேவை இல்லை; இயந்திரங்களே போதும். `பசுவின் கழுத்தில் ஊசி, மடியில்
இயந்திரம்’ இந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். குப்பைக்கூளங்களை
உறிஞ்சி எடுக்கும் இயந்திரம்போல, ஓர் உயிரினத்தின் மடியில் இயந்திரம்
பாலை உறிஞ்சுகிறது. இதுதான் ‘பால் உற்பத்தி’ எனும் நவனத்தின்,
ீ விபரீதச்
சொல்லாடலின் உண்மை முகம். உங்கள் மனதுக்கு இது நியாயமாகத்
தெரிகிறதா?

எந்தப் பசுவும் இப்போது உடலுறவுகொள்வது இல்லை என்பதையும்


தெரிந்துகொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபட்டு உயிர்கள்
பெருக வேண்டும் என்பது படைப்பு விதி! இரு உயிர்கள் இன்பமாக இருந்தால்,
அங்கே மேலும் பல உயிர்களை அனுப்பிவைப்பதுதான் படைப்பவரின் குணம்.
நவன
ீ மேதைகளின் பேராசைச் செயல்களால், மாடுகளின் உடலுறவு கொள்ளும்
உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. 

பசுக்களின் பிறப்புறுப்பில் விந்து ஊசிகளைச் செலுத்துவதுதான்


வெண்மைப்புரட்சியின் புதிய தொழில்நுட்பம். வேதிப்பொருட்கள் அடங்கிய
தீவனங்கள்தான் இப்போதைய மாடுகளின் உணவு. அவ்வப்போது செலுத்தப்படும்
மருந்து ஊசிகள்தான் அவற்றின் உடல்நலப் பராமரிப்பு. காலையும் மாலையும்
கழுத்தில் குத்தப்படும் ஊசிகள்தான் பால் சுரப்புக்கான தூண்டுதல்.
மடிக்காம்புகளை உறிஞ்சி எடுக்கும் இயந்திரங்கள்தான் இந்தக் காலத்துக்
கன்றுக்குட்டிகள். பிறப்புறுப்பில் செலுத்தப்படும் விந்து ஊசிகள்தான்
காளைகளின் ஆண்குறிகள்.

இவ்வளவுக்கும் பிறகு உற்பத்தி செய்யப்படும் பாலைத்தான் நீங்கள்


பருகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு
எல்லாம் உற்பத்திசெய்யப்பட்ட பால், பல நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில்
வைக்கப்பட்டு, மேலும் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு, பல்வேறு
`கலப்புகளும் சுத்திகரிப்புகளும்’ செய்யப்பட்டுத்தான் உங்களை வந்தடைகின்றன
என்பதையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். 

உங்கள் வதியில்
ீ வாழ்ந்த பால்காரர் பாலில் நீர் கலந்தார் என்பதற்காகத்தான்,
பாக்கெட் பால் வகைகளைப் போற்றி வளர்த்தீர்கள். இப்போது பாலில் நீர்
கலப்பது இல்லை; யூரியா உள்ளிட்ட வேதி நஞ்சுக்களைத்தான் கலக்கிறார்கள். 

இந்த இடத்தில் நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில்,


‘சுண்ணாம்புச்சத்து நிறைந்த பால் உற்பத்தி பொங்கி வழியும் இந்த நாட்டில், ஏன்
எலும்புச்சிதைவு மற்றும் பற்சிதைவு நோயாளிகளின் எண்ணிக்கை
பெருகுகிறது?’ 

ஒரே ஒரு தேநீர் வாங்கித் தருபவரைக்கூட நன்றியோடு பார்க்கும் கூலித்


தொழிலாளர்கள்தான், மூட்டைகளைச் சுமக்கிறார்கள்; சாலைகளை
வெட்டுகிறார்கள்; சாக்கடைகளை அள்ளுகிறார்கள். `சத்துக்களுக்காக’ பாலை
உறிஞ்சி எடுக்கும் சமூகம் மூட்டுவலியுடனும் பல்வலியுடனும் நாட்களை
நகர்த்திவருகிறது.
‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது மூடநம்பிக்கை அல்ல...
உண்மையான அறிவியல். மிகக் குறைவான அளவு பால் அருந்திய காலத்தில்
வாழ்ந்த மக்கள், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் அளவுக்கு
வலிமையுடன் இருந்தனர். விடிந்தது முதல் அடைவது வரை பால் பருகும்
இந்தக் கால மனிதர்களோ, காலை மாலை நடப்பதைக்கூட பெரும் பயிற்சியாகச்
செய்கின்றனர். காரணம், மிக எளிமையானதுதான்... வலுவான பசுக்கள் தரும்
பால், வலுவான மனிதர்களை உருவாக்கும். எல்லா வகையிலும் துன்பத்தில்
உழலும் பசுக்களின் பால், துன்பங்களைத்தான் தாங்கியிருக்கும். இதுதான்
அறிவியல்; இதுதான் அறவியல். 

இந்த அறச் சிந்தனையை நிறுவனங்களால் ஒப்புக்கொள்ள இயலாது. ஏனெனில்,


பால் எனும் `பொருள்’ மீ து பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி தொழில்
செய்கின்றன அந்த நிறுவனங்கள். பால் இப்போது உணவு அல்ல,
வணிகப்பண்டம். மண்புழுக்களையும் பிள்ளைப்பூச்சிகளையும் கொலை
செய்துவிட்டு விவசாயம் செய்தால் உணவு நஞ்சாகும். கோழிகளைத்
துன்புறுத்தினால் இறைச்சி நஞ்சாகும். பசுக்களையும் காளைகளையும்
வதைசெய்து பால் கறந்தால் அந்தப் பாலும் நஞ்சே! 

மீ ண்டும் கூறுகிறேன்... இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும், 


கூடிவாழப் படைக்கப்பட்டவை. சக உயிரினங்களை வாட்டிவதைத்து உற்பத்தி
செய்யப்படும் ஒரே ஒரு பொருள்கூட, மனிதர்களுக்கு நன்மை தராது. மனித
உடலில் மிகுதியான சுண்ணாம்புச்சத்து சேர்ந்தால், சிறுநீரகங்கள் சீரழியும் சூழல்
உருவாகும். சில மணித்துளிகள் கண்களை மூடி சிந்தித்துப் பாருங்கள்.
உங்களைச் சுற்றி எவ்வளவு சிறுநீரக நோயாளிகள் இருக்கிறார்கள்! 

ஆண், பெண் ஆகிய இரு பாலினங்கள் புணர்ச்சியில் ஈடுபடுவதைக்கூட நவன



அறிவியல் தடுக்கும் என்றால், இதற்கான தண்டனையே கிடைக்காது என
எல்லோரும் நம்புகிறீர்களா? வினைப் பலன் என்பது, கடவுளின் கணக்குப்
புத்தகத்தில் எழுதப்படுவது அல்ல; நமக்கு நாமே எழுதிக்கொள்ளும் விதி. எந்தச்
செயல் செய்தாலும் அதற்கான பலனை நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
ஓர் உயிரினத்தின் உணவு உண்ணும் உரிமை, உடலுறவு உரிமை, தான் ஈன்ற
கன்றுக்குப் பால் கொடுக்கும் உரிமையை எல்லாம் மறுப்பது தீவினைகள்தான்.
இவற்றுக்கான பலன்களையும் இந்தச் சமூகம் அனுபவித்துக்கொண்டுதான்
வருகிறது என்பது என் கருத்து.

ஆயம் என்ற சொல்லுக்கு, ‘கூடி வாழும் இடம்’ எனப் பொருள். ஆயர் என்றால்,
‘கூடி வாழ்வோர்’ எனப் பொருள். ஆடு, மாடுகளின் பட்டியும், அவற்றை
மேய்க்கும் மனிதர்களின் குடில்களும் ஒரே வேலிக்குள்தான் இருக்கும். ஆக,
ஆயம் என்பது ஆடு, மாடு, மனிதர் ஆகிய மூன்று உயிரினங்களையும் சேர்த்துக்
குறிக்கும் சொல். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆயர்களாக வாழ்ந்துள்ளோம்.
மாடுகளையும் ஆடுகளையும் நமது குடும்ப உறுப்பினர்களாகத்தான் கருதி
வாழ்ந்தோம்.

எருதுகள் பூட்டிய வண்டிகளை முல்லை நிலத்துப் பெண்கள் ஓட்டிச் சென்று,


மருதம் மற்றும் நெய்தல் நிலங்களில் வெண்ணெய், தயிர் விற்றதாக சங்கப்
பாடல்கள் குறிக்கின்றன. நமது ரத்தத்தில் பால் தொழில் ஊறியுள்ளது.
ஆயிரக்கணக்கான மாடுகளை வளர்த்து, கன்றுகளுக்குக் கொடுத்து, நாமும் பால்
பெற்று வாழ்ந்த காலம்தான் வரலாற்றில் நெடியது.

இப்போது நாமும் நன்றாக இல்லை; நம் கால்நடைகளும் நன்றாக


வாழவில்லை. இந்த நிலையை மாற்ற இயலும். அயல்வகை மாடுகளின்
பாலைப் பருகும் வழக்கத்தில் இருந்து விடுபடுங்கள். தரமான வெண்ணெய்
விற்பனை செய்வோரைத் தேடிக் கண்டறியுங்கள். தனிப்பட்ட முறையில் பால்
விற்பவர்களை ஆதரியுங்கள். அவர்கள் தரும் பால் தரம் இன்றி இருந்தால்,
அவர்களிடம் நேரடியாகப் பேசுங்கள்.
பால் கொள்முதலின் அளவைக் குறையுங்கள். வட்டிலேயே
ீ தயிருக்கு உறை
ஊற்றுங்கள். தனிப்பட்ட முறையில் வெண்ணெய் விற்பனை செய்வோரிடம்,
வெண்ணெய் வாங்கி வட்டில்
ீ நெய் உருக்கிப் பயன்படுத்துங்கள். இந்த இரு
வழக்கங்களையும் நீங்கள் கடைப்பிடித்தால், இந்தச் சூழலில் தலைகீ ழான
மாற்றங்கள் உருவாகும். தேநீர் போன்ற பானங்களில் பால் சேர்த்துப்
பருகுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். 

அடுத்ததாக, நாட்டுப் பசுக்களைப் போற்றிப் பாதுகாக்கத் தொடங்குங்கள்.


பசுக்களை மட்டும் அல்ல நாட்டுக் காளைகளையும் பாதுகாக்க முன்வாருங்கள்.
முருங்கைக்கீ ரையையும் காயையும் ரசமாக வைத்து அன்றாடம் பருகினால்,
கிடைக்கும் சத்துகளுக்கு அளவே இல்லை. 

நமது மரபில் எல்லா உணவுகளும் சத்துப் பெட்டகங்கள்தான். உணவுத்


துறையில் உள்ள நவனத்
ீ தொழில் நிறுவனங்களின் பிடியில் இருந்து நமது
மரபு உணவுப் பழக்கங்களை மீ ட்டெடுத்தாலே, நிம்மதியான வாழ்க்கையை வாழ
இயலும்!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 12
வெளியிடப்பட்ட நேரம்:06:00 (01/09/2016)

ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி


உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ளப்போகும் செய்திகளை, 100 ஆண்டுகளுக்கு
முன்னர் கதையாகச் சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்க மாட்டார்கள்.
இன்னும் சில ஆண்டுகள் கழித்து பிறக்கப்போகும் தலைமுறையினரிடம் இந்தச்
செய்திகளைக் கூறினால், அவர்கள் கடும் கோபம்கொள்வார்கள். பூமியில்
முதன்முதலில் தோன்றிய உயிரினம் நீர்வாழிகள்தான். அவற்றில் மீ ன்கள்,
குறிப்பிடத்தக்க வகையில் மனிதர்களின் வரலாற்றுடன் இணைந்து வாழ்பவை.
அந்த மீ ன்களின் இனத்தைக்கூட நவனத்தின்
ீ பேரால் அழித்துவருகிறது இந்தக்
கால அறிவுத் துறை.

கோடையில் வறண்டுகிடக்கும் குளங்களிலும் குட்டைகளிலும் மழைத்துளிகள்


விழுந்தவுடன் மீ ன்குஞ்சுகள் உருவாகின்றன. பாளம் பாளமாக வெடித்துக்கிடந்த
நீர்நிலைகளில் மழைக்கால வெள்ளம் மீ ன் கூட்டத்தை வளர்க்கிறது. எந்த
மனிதரும் ஒவ்வொரு நீர்நிலைக்கும் சென்று மீ ன் முட்டைகளை வசுவது

இல்லை. புல்கூட காய்ந்துபோன குளத்தில் மீ ன் முட்டைகள் உயிர்
காத்துக்கிடக்கின்றன, மழைக்காலம் வரைக்கும். இதுதான் படைப்பின் கருணை.

மாங்குடிக்கிழார் இயற்றிய புறநானூற்றுப் பாடலின் காட்சி இது, `செழித்து


விளைந்திருந்த வயல்களில் நீர் தேங்கியுள்ளது. இந்த நீர் மேல், கீ ழ் என
இருவகைகளாக உள்ளது. மேலே உள்ள நீர், குவளை மலர்களை
வளர்த்தெடுக்கிறது; கீ ழே உள்ள நீர், மீ ன்களை வளர்க்கிறது. நெற்பயிர்களைக்
கொத்தித் தின்னும் பறவைக் கூட்டத்தை ஓட்டுவதற்காக மக்கள் பறை
முழக்கம் செய்கின்றனர். அந்த முழக்கம் கேட்டு, கடலில் இரை தேடும்
பறவைகள்கூட பறந்தோடுகின்றன.’

வயல்களில் மீ ன் கூட்டம் இருந்த காட்சிகள், நமது சங்கப் பாடல்களில்


விரவிக்கிடக்கின்றன. 

கழனிகளில் வேலைசெய்ய வரும் மக்கள், வடு


ீ திரும்பும்போது வயல்களிலும்
வாய்க்கால்களிலும் மீ ன் பிடித்துச் செல்வது, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர்
இருந்த வழக்கம். வாய்க்கால்களில் தூண்டில் போட்டு மீ ன் பிடிப்பது
சிறுவர்களின் விளையாட்டுக்களில் ஒன்று. கெளுத்தி, ஆரல், மஞ்சள் பிரட்டை,
கச்சைப்பொடி, குறவை, அயிரை, விலாங்கு, கொக்குமீ ன், வாளை, விறால்,
கெண்டை ஆகியவை, அனைவருக்கும் தெரிந்த மீ ன் வகைகள். 

காவிரி ஆற்றில் நீர் பெருகி ஓடும்போது, கால்வாய்களின் மதகுகள்


திறக்கப்படும். மதகுகளின் ஊடாகப் பீறிட்டுப் பாயும் நீரை எதிர்த்துக்கொண்டு
அயிரை மீ ன்கள் துள்ளிக் குதித்து, மதகுகளின் சுவர்களில் அப்பிக்கிடக்கும்.
நாங்கள் குளிக்கச் செல்லும்போது மதகுச் சுவர்களில் இருந்து அயிரை
மீ ன்களை அள்ளிக்கொள்வோம். 

வாய்க்கால்களின் இருமருங்கிலும் மண்டிக்கிடந்த புதர்களுக்குள் நுழைந்து


மெள்ள நடந்தால், கால்களின் கீ ழே சேற்றுக்குள் கிடக்கும் குறவைகளும்
விறால்களும் சிக்கும். 

இவை எல்லாம், சங்கக் காட்சிகள் அல்ல; 20 ஆண்டுகளுக்கு முந்தைய


காட்சிகள். `பசுமைப் புரட்சி' எனும் பெருநிறுவனங்களின் பேராசைக் கனவு, நமது
வயல்களை நஞ்சுக் கூடங்களாக்கி, மீ ன் இனங்களைக் கூண்டோடு
அழித்துவிட்டது. `மீ ன்வளத் துறை' எனப் பேர்கொண்ட அரசுத் துறை, நமது
மரபுவழி மீ ன் வகைகளை எல்லாம் ஒழித்துக் கட்டும்படியான திட்டங்களைச்
செயல்படுத்தியது. விளைவு, இப்போதைய தலைமுறைக்கு மேற்கண்ட
மீ ன்களைப் பற்றிய குறைந்தபட்ச அறிமுகமே இல்லாமல்போனது.
ஒரு காலத்திலும் சரிசெய்யவே இயலாத செயல் ஒன்றை அரசு செய்துள்ளது.
`திலாப்பியா' எனும் அயல்நாட்டு மீ ன் வகையை தமிழகத்தில் பரப்பிவிட்டது
மீ ன்வளத் துறை. அந்த மீ ன் சிலேபி, கெண்டை என்று இப்போது
அழைக்கப்படுகிறது. அதிவேகமாகவும் மிக அதிகமான எண்ணிக்கையிலும்
குஞ்சு பொரிக்கும் குணம்கொண்டது இந்த மீ ன். நமது மரபு மீ ன்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை உணவுப்பழக்கம் கொண்டது. குறிப்பாக, பருவ
நிலைகளுக்கு ஏற்ப மீ ன் இனங்கள்தான் இயற்கையாகப் படைக்கப்பட்டன.
திலாப்பியா இவற்றுக்கு அடங்காத வகை. நீர்நிலையில் கிடைக்கும் எல்லா
வகை உணவுகளையும் அது உட்கொள்ளும். எல்லா பருவங்களிலும்
தாக்குப்பிடித்து இனப்பெருக்கம் செய்யும். 

இந்த மீ ன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், இவற்றின் எண்ணிக்கைப்


பெருக்கத்தினால் நமது நாட்டு வகை மீ ன் இனங்கள் அதிவேகமாக அழிந்தன.
முன்னர் நான் குறிப்பிட்ட பல வகை மீ ன்கள் இப்போது அரிதாகிவிட்டன.
முற்றிலும் அழிந்த மீ ன் வகைகளின் பட்டியலும் பெரியதுதான். சீமைக்
கருவேலமரம் நமது நிலத்தின் வளத்தைச் சூறையாடுவதைப்போல, `திலாப்பியா'
நமது நீர்நிலைகளின் மீ ன் இனங்களை ஒழித்துவருகிறது.

நாட்டு மீ ன்களின் உணவு, வாழிடம் ஆகியவற்றை, திலாப்பியா வெகு எளிதாகப்


பறித்துக்கொள்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் நமது மரபு மீ ன்களைக் காக்க
மீ ன்வளத் துறை பணியாற்றியிருந்தால், நம்மிடம் பலநூறு மீ ன் இனங்கள்
இருக்கும். நடந்ததோ தலைகீ ழான செயல்பாடு. 
விவசாய நிலங்களில் குட்டைகள் அமைத்து, நவனமுறையில்
ீ உருவாக்கப் பட்ட
கெண்டை மீ ன்களை வளர்க்கும் தொழிலை மீ ன்வளத் துறை தொடங்கி
வைத்தது. கட்லா, ரோகு, மிருகால் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
`ஆரல் மீ ன்கள் நீந்தும் வயல்களைக் கொண்ட ஊர் என் ஊர்' என
மார்தட்டியவர்களின் நாட்டில் மீ ன்வளத் துறை அறிமுகம் செய்த மீ ன்கள்
இவை.

ஆறு மாதங்களில் ஒரு மீ ன் ஒரு கிலோ எடைக்கு வர வேண்டும் என்ற


எழுதப்படாத விதியை, தனியார் மீ ன் தீவன நிறுவனங்களும், பண்ணை
உரிமையாளர்களும், இன்னபிற மேதைகளும் இணைந்து உருவாக்கினார்கள்.
இதற்காக, வளர்ப்பு மீ ன் குட்டைகளில் யூரியா, சூப்பர் பாஸ்பேட் போன்ற
ரசாயன உரங்கள் கொட்டப்பட்டன. குளத்துநீரில் அதிவேகமாகப் பாசி பிடிக்க
வேண்டும் என்பதற்காகவும், வேறு பல தாவர நுண்ணுயிரிகள் பெருக வேண்டும்
என்பதற்காகவும் மேற்சொன்ன ரசாயன உரங்கள் இப்போதும்
பயன்படுத்தப்படுகின்றன.

பிராய்லர் கோழிப்பண்ணைகளில் இருந்து கோழிக்கழிவுகள் வாங்கப்பட்டு,


வண்டி வண்டியாக வளர்ப்பு மீ ன் குட்டைகளில் கொட்டப்படுகின்றன. இதுவும்
மீ ன்களுக்கான சத்துணவுதான். இறந்துபோகும் நாய் மற்றும் கால்நடைகளை,
குளத்தில் வசுவது
ீ பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மற்றொரு வழிமுறை.
இந்தப் பிணங்களை, சிலவகைக் கெண்டை மீ ன்கள் விரும்பி உண்ணும்.
இதனால் அவற்றின் எடை மிக விரைவில் அதிகரிக்கும்.

இன்னும் பல நவன
ீ வழிமுறைகளை எல்லாம் கையாண்டு, மீ ன் உற்பத்தி பல
மடங்கு உயர்த்தப்பட்டது. ஒருபக்கம் நமது நீர்நிலைகளில் ரசாயன நஞ்சுக்களும்
அயல் மீ ன்வகைகளும் நாட்டுமீ ன்களை ஒழித்துக்கட்டுகின்றன. மறுபக்கம்,
வளர்ப்புமீ ன் குட்டைகளில் பெரும்பாலானவை லாபவெறியுடன்
உயிர்விளையாட்டுக்களை நிகழ்த்திவருகின்றன.

இந்த இடத்தில் ஒரு வேதிப்பொருளின் பெயரை உங்களுக்குத்


தெரியப்படுத்துவது என் கடமை. `டெல்டாமெத்ரின்' (Deltamethrin) என்பது,
கால்நடை மருத்துவத் துறையில் நன்கு அறிமுகமான வேதிப்பொருள். இதை
அடிப்படையாகக் கொண்டு சில உயிர்க் கொல்லிகள் தயாரிக்கப் படுகின்றன.
கால்நடைகளின் மேல் இருக்கும் பூச்சிகள், வண்டுகள், உண்ணிகள் போன்ற
உயிரினங்களைக் கொல்வதற்காக இந்த நஞ்சு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு
வெளிப்புற மருந்து மட்டுமே என்பது முக்கியமானது. அதாவது, இது தோலில்
பூசுவதற்குத்தானே தவிர, உட்கொள்வதற்கு அல்ல.
`சைபர்மெத்ரின்' (Cypermethrin) என்ற வேதி நஞ்சும் இதேவிதமான பயன்பாட்டுக்கு
உரியது. 

பல வளர்ப்பு மீ ன் குட்டைகளில், இந்த வேதிப்பொருட்கள் புட்டிபுட்டியாக ஊற்றப்


படுகின்றன. இங்கே நான் வேதிப்பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். வளர்ப்பு
மீ ன் குட்டைக்காரர்கள் பலருக்கு, இவற்றுக்கான நிறுவனங்களின் பெயர்கள்
நன்கு தெரியும். மீ ன் குட்டைகளில் வளரும் சிறு புழுக்கள் மற்றும் பூச்சிகளை
அழிக்க இவற்றைத் தவிர வேறு வழி இல்லை என்பது அவர்கள் கருத்து.
டெல்டாமெத்ரின், சைபர்மெத்ரின் ஆகியவற்றை ஒரு மாட்டின் தோலில்
பூசினால்கூட 2 மி.லி., 3 மி.லி என்ற மிக மிகக் குறைந்த அளவில்தான்
பூசவேண்டும். அளவு கூடினால் மாட்டின் உயிருக்கே ஆபத்து நேரும்
வாய்ப்புகள் அதிகம். வளர்ப்பு மீ ன் குட்டைகளில் இந்த நஞ்சுகள் ஊற்றப்படும்
அளவைக் கேட்டால் வெறுப்புதான் மிஞ்சும்.

டெல்டாமெத்ரின், சைபர்மெத்ரின் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகப்


பயன்படுத்தினால், மனிதர்களுக்கு உருவாகும் நோய்களைப் பற்றிய ஆய்வுகள்
பின்வரும் பட்டியலை வெளியிடுகின்றன. வலிப்பு நோய், உடலில் உருவாகும்
திடீர் துடிப்புகள், தோலில் உருவாகும் அழற்சிகள், கடுமையான மலக்கழிச்சல்,
வேறுபல ஒவ்வாமை வெளிப்பாடுகள்.

மிகப் பெரும்பாலான வளர்ப்புக் கெண்டை மீ ன்களின் உடல் மேற்கண்ட


நஞ்சுக்களையும் கழிவுகளையும் உட்கொண்டுதான் வளர்கிறது. இந்தக்
கெண்டைகள்தான் பல கோடி மனிதர்களுக்கான சத்துணவு.
`இந்த நாட்டில் மீ ன் வளர்ப்பதற்கு இவ்வளவு குரூரமான வழிமுறைகள் ஏன்
உருவாக்கப்படுகின்றன?' என்பதுதான் நாம் எழுப்பவேண்டிய கேள்வி.
`எல்லோருக்கும் மீ ன் உணவு' என்ற முழக்கத்தின் உண்மையான பொருள்,
`எல்லோரும் நோயாளி களாக வேண்டும்' என்பதுபோல் இருக்கிறது. ஆறு
மாதங்களில் ஒரு கிலோ எடைக்கு மீ ன் வளர்ப்பது கடந்த காலம். ஏறத்தாழ
மூன்றே மாதங்களில் ஒரு கிலோ எடைக்கு மீ ன் வளர்க்கும் திறமைவாய்ந்த(?)
பண்ணைகள் இப்போது பெருகிவிட்டன.

எல்லாவற்றையும் அறிவுபூர்வமாக நியாயப்படுத்திவிடலாம். நான் மனங்களோடு


உரையாடுவதை மட்டுமே விரும்புகிறேன்.
மரபுவழியிலான எல்லா உணவுப் பொருட்களையும் தனியார் நிறுவனங்களின்
தொழில்நுட்பங்களால் அழித்துவிட்டு, அவற்றுக்குப் ‘புரட்சி’கரமான
பெயர்களையும் சூட்டும் மேதைகளின் மனங்களை நோக்கி நாம் அனைவரும்
இந்த வாசகத்தை அனுப்பிவைப்போம்.

அறிந்தோ அறியாமலோ, நமது உணவு நஞ்சாக மாறுவதற்கு நீங்கள் காரணமாக


இருக்கிறீர்கள். கோடானுகோடி உயிரினங்களின் வாழ்வுரிமையை உங்கள்
தொழில்நுட்பங்களால் பறித்துக்கொண்டீர்கள். உணவு நஞ்சானதால், சூழல்
நஞ்சானதால் நோயுற்றுச் சாகும் மனிதர்களின் எண்ணிக்கை உயர்வதைப்
பாருங்கள். இந்தப் பணிக்காக நீங்கள் பெறும் பொருளாதாரமும் பதவியும்
புகழும் இன்னபிறவும், நிச்சயமாக இந்த உயிர்களைவிட மேலானவை அல்ல.
இப்போதாவது மனம் திருந்தி, உணவை நஞ்சாக்கும் நுட்பங்களைப் பற்றிய
உண்மைகளை எடுத்துரைத்து, விலகிக் கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையை வாசித்து, ஏதேனும் செய்யவேண்டும் என


விரும்புவோரிடம் நான் கேட்கும் உதவி ஒன்று உண்டு. உங்களுக்கு நிலம்
இருந்தால், அதில் ஒரு சிறு பகுதியையாவது ஒதுக்கி, குட்டை வெட்டி, நீர்
தேக்கி, நமது நாட்டு மீ ன் வகைகளை வளர்க்கத் தொடங்குங்கள். அவை மிக
மெதுவாக வளரும். வணிக நோக்கம் இல்லாமல், நமது மீ ன் இனங்களைப்
பாதுகாக்கிறோம் என்ற உன்னத நோக்கத்துக்காக இதைச் செய்யுங்கள். இவ்வாறு
வளரும் மீ ன்களை, சக ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பிசாசுகளின் வெறியாட்டத்தில் வயல்களும் சேமிப்புக் கிடங்குகளும் தீக்கு


இரையான பின்னர், ஒரே ஒரு நெல்மணியைச் சேர்த்துவைக்கும் எவரும்
தேவதூதர்தான். அவ்வாறான புனிதப் பணியில் ஈடுபடவேண்டிய சூழலில்தான்
நாம் வாழ்கிறோம்!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 13
வெளியிடப்பட்ட நேரம்:06:00 (08/09/2016)

ம.செந்தமிழன், ஓவியம்: ஹாசிப்கான்


ஒரே ஒரு பிடிச் சோற்றை உண்ணும் முன்னர், உங்களுக்கு வேதியியல்,
மரபணுவியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவை பற்றித் தெரிந்திருக்க
வேண்டும். நிச்சயமாக, நான் மிகைப்படுத்தி எழுதவில்லை. நிலவும் சூழலின்
அவலத்தையும் குரூரத்தையும் மிகவும் குறைத்து எழுதுகிறேன். உள்ள
நிலைமையை அப்படியே எழுதினால் அச்சமும் பீதியும் பெருகும் என்பதால்,
பல செய்திகளை மட்டுப்படுத்தி வெளிப்படுத்துகிறேன்.

நமது உணவு எவ்வளவு மோசமானதாக மாற்றப்பட்டுள்ளது என்பதைப் பற்றி


உங்களோடு உரையாடுவதற்கு, மேற்கண்ட துறைகள் சார்ந்த அறிவு
தேவைப்படுகிறது. 

`சல்ஃபோனமைடு' (Sulfonamide)  என்ற வேதிப்பொருள் கொண்ட மாத்திரை, இந்த


நாட்டில் அறிமுகமாகியிருக்கவே கூடாது. ஆனால், எல்லோருடைய
தட்டுக்களிலும் உள்ள பெரும்பாலான உணவுப் பொருட்களில் இந்த
மாத்திரையின் பங்களிப்பு இப்போது இருக்கிறது. அச்சத்தையும்
அருவருப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தக் கட்டுரையின் கருத்துக்களை
கவனமாகப் புரிந்துகொள்ளுங்கள்.
பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலம், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யாத
காலம். அப்போது எல்லாம் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், மஞ்சள், கடலை, எள்
உள்ளிட்ட உணவுப் பயிர்கள், அவற்றுக்கான பருவங்களில் மட்டும்
விளைவிக்கப்பட்டன. விளையும் பயிர்கள் வட்டுத்
ீ தேவைகளுக்கும்
விற்பனைக்கும் அனுப்பப்பட்டன. எந்த விவசாயியும் அதிகமான அளவில் இந்தப்
பயிர்களை தம் வட்டில்
ீ சேமிக்கவில்லை. காரணம், இந்தப் பயிர்களைச்
சேமித்துவைத்தால் சில வாரங்களிலேயே பூச்சிகளும் வண்டுகளும்
உருவாகிவிடும். 

அந்தக் காலக் கிராமங்களில் குதிர், பத்தாயம், தொம்பை போன்ற


சேமிப்புக்கலன்கள் இருந்தன. உணவுப் பயிர்களை இவற்றில் கொட்டிவைத்து
பயன்படுத்தினார்கள் நம் முன்னோர். அந்தக் காலத்தில் இருந்த வணிகர்கள்,
உணவுப் பயிர்களைக் காயவைக்கவும், பூச்சிகள் வராமல் பராமரிக்கவும்
கலங்களும் கிடங்குகளும் வைத்திருந் தார்கள். நகர மக்களுக்கு, கடைகளில்
நல்ல உணவுப் பொருட்கள் கிடைத்தன.

மரபுவழிப்பட்ட உற்பத்தி முறையின் சிறப்பு, தேவைக்கு மட்டும் விளைவிப்பது.


பசுமைப் புரட்சியின் மந்திரமே ‘மிகை உற்பத்தி’ என்பதுதான். இந்த மந்திரம் மிக
வரியமானது.
ீ ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நவன
ீ மேதைகளால்
உச்சரிக்கப்பட்ட இந்த மந்திரம், இப்போது பிறக்கும் குழந்தையின்
செல்களில்கூட ஒலிக்கிறது. நவன
ீ நுட்பங்களின் வழியாக எல்லா உணவுப்
பொருட்களும் மிக அதிகமான அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. கிராமங்களில்
இருந்த குதிர்களும் தொம்பைகளும் தாங்கவே இயலாத அளவுக்கு உற்பத்தி
மிகுந்தது.

வேதி நஞ்சுக்களை நிலத்திலும் பயிர்களின் மீ தும் கொட்டிய பிறகுதான்


உற்பத்தி உயர்ந்தது என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். விளைச்சலுக்குப்
பிந்தைய செயல்பாடுகளைத்தான் இப்போது கூற விரும்புகிறேன். மிகையான
உற்பத்தியைப் பங்குபோடுவதற்காக, எண்ணற்ற வணிக நிறுவனங்கள் உணவுத்
துறையில் நுழைந்தன. குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே விளையும் பயிர்கள்,
எல்லா பருவங்களிலும் விளையத் தொடங்கின. இதனால் உணவுப்
பொருட்களைச் சேமித்துவைப்பதில் பெரும் சிக்கல் உருவானது. முந்தைய
தலைமுறை வணிகர்களால், உணவுப் பயிர்களை வெயிலில் காயவைத்து
மூட்டைகளில் கட்டிவைக்க இயலாமல்போனது. விளைவு, வண்டுகள், பூச்சிகள்,
பூஞ்சை காளான்கள், எலிகள் உள்ளிட்ட உயிரினங்கள் உணவுப் பயிர்களைச்
சிதைத்தன.

உணவுப் பொருள் உள்ள கிடங்குகள் யாவும் சூதாட்டக் களமாக


மாற்றப்பட்டதன் பின்னணி இதுதான். `தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைத்த
உணவுப் பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், அந்த
உணவுப் பயிர்களின் மீ து நச்சுக் காற்றைப் பரப்புவதுதான் சிறந்த வழி’ என்ற
கொள்கையை மனசாட்சி இல்லாத மனிதர்கள் உருவாக்கினார்கள். 

ஆண்டுக்கு இருமுறைதான் அரிசி வகைகள் கிடைக்கும். ஆண்டுக்கு


ஒருமுறைதான் புளி கிடைக்கும், மஞ்சள் கிடைக்கும் என்ற நிலைமை
இருந்தபோது, அந்தப் பொருட்கள் யாவும் உண்மையான உணவுகளாக இருந்தன.
இப்போது எல்லா நாட்களிலும் எல்லா பொருட்களும் கிடைக்கும். ஆனால்,
`உணவுப் பொருட்களின் தரம் எந்த நிலைமையில் இருக்கிறது?' என, பொதுச்
சமூகம் கேள்வி எழுப்பவில்லையே!

ஒரு கைப்பிடி அரிசியை, ஒரு கண்ணாடிப் புட்டிக்குள் போட்டு இறுக்கமாக மூடி


வைத்துவிட்டால், சில வாரங்களில் அந்தப் புட்டிக்குள் வண்டுகள்
பறந்துகொண்டிருக்கும். எங்கு எல்லாம் உணவு பயன்படுத்தப் படவில்லையோ,
அங்கு எல்லாம் அந்த உணவை உட்கொள்ளும் உயிர்களைப் படைப்பதுதான்
இறைக்குணம். வண்டுகளின் முட்டைகளை அரிசிக்குள் புதைப்பதுதான்
படைப்பின் சிறப்பு.
படைப்பில் `உபரி’ என்ற கருத்தே இல்லை. எது தேவையோ அதை மட்டுமே
உற்பத்தி செய்துகொள்வதுதான் படைப்பின் விதிமுறை. அளவுக்கு அதிகமாக
உற்பத்தி செய்யப்பட்டால், அந்த உற்பத்தியைப் பங்கிட்டுக்கொள்ளும் உயிர்கள்
உடனே அனுப்பப்படுகின்றன.

நவன
ீ சிந்தனையின் அடித்தளமோ, உபரியை மனிதர்களுக்குள் மட்டுமே
எவ்வாறு பங்கு போட்டுக்கொள்வது என்பதைப் பற்றியதுதான்.

வேம்பு, நொச்சி உள்ளிட்ட இலைகளை தானியங்களுடன் கலந்துவைத்தும்,


அவ்வப்போது வெயிலில் உலர்த்தியும் உணவுப் பொருட்களைப் பாதுகாத்தது
நம் மரபு. இவ்வாறான இயற்கை வழிகளில் அதிகபட்சம் ஓர் ஆண்டுகாலம்தான்
உணவுப் பயிர்களைப் பாதுகாக்க முடியும்.

இப்போது நீங்கள் உண்ணும் அரிசி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தையதாகக்கூட


இருக்கலாம். புளியின் ஆயுள் ஆறு ஆண்டுகளாகவும், மிளகாயின் ஆயுள்
அதைவிட அதிகமானதாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும்விட
கொடுமையானவை மஞ்சள் கிடங்குகள்தான். பத்து ஆண்டுகளாக மஞ்சள்
மூட்டைகளைப் பாதுகாக்கும் புனிதர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

மரபு உணவுகளிலேயே மிகச் சிறந்த மருத்துவக் குணம்கொண்டது மஞ்சள். இது


உங்கள் வட்டு
ீ அலமாரிக்கு வந்து சேரும் முன்னர் சந்திக்கும் வேதி
நஞ்சுக்களை எல்லாம் பட்டியலிட்டால், நமக்கு நடுக்கம் ஏற்பட்டுவிடும்.
சல்ஃபோனமைடு  மாத்திரைகளைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள
வேண்டும்.

மஞ்சள் கிழங்குகளை மூட்டைகளாகக் கட்டி கிடங்குகளில் அடுக்கிய பிறகு,


அந்த மூட்டைகளுக்கு  இடையில் இந்த மாத்திரை களைப் பரப்பிவிடுவார்கள்.
இவ்வாறு பரப்பும் பணியாளர்கள், நச்சுப் புகை தாக்காத வகையில் முகமூடிகள்
அணிந்துகொள்வர். வெளிக்காற்று உள்ளே நுழையவோ, உள்காற்று வெளியே
செல்லவோ இயலாத வகையில் சல்ஃபோனமைடு மாத்திரைகள் வைக்கப்பட்ட
கிடங்குகளின் கதவுகள் இறுக்கமாக மூடப்படும். மஞ்சள் கிடங்குகளின்
வெப்பத்தில் சல்ஃபோனமைடு மாத்திரைகள் கரைந்து, காற்றில் கலக்கும்.
விளைவு, அந்தக் கிடங்கில் உள்ள காற்று நஞ்சாக மாறும். இதுதான்
‘தொழில்நுட்பம்’. மஞ்சள் கிடங்குகளில் பணியாற்றும் அனைவருக்கும் இது
தெரியும். பாதுகாப்பு முகமூடிகள் அணியாமல் கிடங்குகளுக்குள் சென்றால், சில
நொடிகளில் மரணம் நேரிடலாம்.
சல்ஃபோனமைடு மாத்திரைகளின் அடிப்படையே வெப்பத்தை உமிழும்
தன்மைகொண்ட கந்தகம்தான்.  மூடப்பட்ட கிடங்குக்குள் தொடர்ந்து வெப்பம்
உமிழப்பட்டு காற்றே நஞ்சாக மாறிவிட்டால், வண்டுகள், பூச்சிகள் போன்ற
உயிரினங்கள் உருவாகாது. இந்த நுட்பத்தை இன்னும் சற்று ஆழமாக நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

எல்லா உயிரினங்களுக்கும் மூலமாக உள்ளவை செல்கள்தான். செல்களின்


இயற்கையான குணம், பல்கிப் பெருகுவதும் சுருங்குவதும்தான். ஒரு மஞ்சள்
துண்டு இருக்கிறது என்றால், அதன் மீ து உள்ள வெப்பம் மறையும் வரை அதன்
மீ து எந்தப் பூஞ்சையும் உருவாகாது. வெப்பம் குறைந்து ஈரம் உருவானவுடன்
பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் செல்கள் உருவாகத் தொடங்கும். இதன்
பிறகுதான் வண்டுகளும் பூச்சிகளும் உருவாகும். உணவுப் பயிர்களைக்
காயவைப்பது செல்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான்.

கந்தகத்தையும் வேறு பல வேதி நஞ்சுக்களையும் மூலப்பொருட்களாகக்


கொண்டு தயாரிக்கப்படும் மாத்திரைகள், செல்களின் உருவாக்கத்தைச்
செயற்கையாகத் தடுத்து நிறுத்துகின்றன. செல்களின் கருவைக் கலைப்பதுதான்
இந்த மாத்திரையின் முதல் பணி. செல்களின் இனப்பெருக்கத்தில் ஃபோலேட்
(Folate) என்பது ஒரு நிலை. இந்த நிலைக்கு மேல், செல்களின் வளர்ச்சி
நிகழாமல் தடுப்பது சல்ஃபோனமைடு மாத்திரைகளின் மூலக்கூறுகளில்
பதிக்கப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், நமது உணவுப் பொருட்களின் செல்களுக்குள்


புகுந்து கோடானுகோடி கருக்களைக் கலைக்கும் குரூரத்தை நிகழ்த்துவதுதான்
இந்த மாத்திரைகளின் பணி. உங்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த
மாத்திரை ஒன்றின் பெயரை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ஃபோலிக் ஆசிட்’
மாத்திரைகள் மகப்பேறு மருத்துவத் துறையில் மிக முக்கியமானதாகப்
பரிந்துரைக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஃபோலிக் அமில
மாத்திரைகளின் பணி, `செல்களில் உருவாகும் கருச்சிதைவைத் தடுப்பது’
என்பது நவன
ீ மருந்தியல் அறிவு. 

உணவுப் பொருட்களில் சல்ஃபோனமைடு மாத்திரைகளின் மூலக்கூறுகள்


அதிகரித்த பிறகுதான் கருச்சிதைவுகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

உண்ணும் உணவில் உள்ள செல்களில் எல்லாம் கருக்கலைப்பு நிகழ்த்தும்


நஞ்சுக்களை ஒருபுறம் விற்பனை செய்வது, கருச்சிதைவைத் தடுக்கும்
மாத்திரைகள் என்ற பெயரில் வேறு மாத்திரைகளையும் விற்பனை செய்வது
என்ற மனசாட்சிக்குப் புறம்பான வணிகத்தில்தான் நாம் அனைவரும்
சிக்கியுள்ளோம்.

புளி, மிளகாய், அரிசி, பருப்பு என அனைத்து உணவுப் பொருட்களிலும்


இவ்வாறான நஞ்சுகள் கலந்துள்ளன. உணவுப் பொருட்களை வெயிலில்
காயவைத்து எடுத்து, கெட்டுப்போனால் வசி
ீ எறியும் நேர்மையாளர்களை இன்று
காண இயலவில்லை. எல்லா வணிகக் கூடங்களிலும் ஆயிரக்கணக்கில்
மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த மூட்டைகளில் ஒரு புழு-
பூச்சிகூட உருவாவது இல்லை. எல்லா பருவங்களிலும் எல்லா பொருட்களும்
கிடைக்கின்றன. அரசு அறிக்கைகளில் ‘உணவு உற்பத்தி’ குறித்த பெருமித
அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. எல்லா பகட்டுகளுக்கும்
கீ ழே உண்மை நசுங்கிக் கிடக்கிறது.

புற்றுநோய் என்பதன் அடிப்படை, செல்களின் திடீர் பெருக்கம்தான். உணவுப்


பொருட்களின் செல்களில் நஞ்சைக் கலந்துவிட்டால், அதைச் சாப்பிடும்
மனிதர்களின் செல்கள் தாறுமாறாகப் பெருகாமல் என்ன செய்யும்?

இயற்கை உழவர்களைக் கண்டறியுங்கள். உங்களுக்கென ஒரு துண்டு நிலம்


இருந்தாலும் உங்கள் தேவைக்காகவாவது பயிர் செய்யத் தொடங்குங்கள்.
இந்தக் கருத்துக்களில் ஒப்புமைகொண்டவர்கள் ஒன்றாகக் கூடி, உழவர்களிடம்
இருந்து நேரடியாக உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்யுங்கள். நமது
மரபுவழி கொள்கலன்களான தொம்பை, குதிர் போன்றவற்றைப் பாதுகாத்துப்
பயன்படுத்துங்கள். 

ஏதேனும் ஒரு பெயரில் நீங்கள் சின்னஞ்சிறு குழுக்களாக இணைந்து, நல்ல


உணவைக் கொள்முதல் செய்யுங்கள். நல்ல மிளகாய் எது எனக் கேட்டால்,
நிறுவனங்களின் பெயர்களைக் கூறாமல் மிளகாய் விவசாயியின் பெயரையும்
ஊரையும் குறிப்பிடும் காலம் வர வேண்டும். அந்தக் காலத்தில் நாம் எந்த
வேதித் தொழில்நுட்பத்தையும் தெரிந்திருக்க வேண்டியது இல்லை.

ஏனெனில், உணவு படைக்கப்படுகிறது; தயாரிக்கப்படுவது இல்லை!


- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 14
வெளியிடப்பட்ட நேரம்:06:00 (15/09/2016)

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

மரபு குறித்து பேசும்போது எல்லாம் நானும் என்னைப் போன்றோரும்


எதிர்கொள்ளும் குற்றச்சாட்டு, ‘நீங்கள் பேசுவது எல்லாம் மூடநம்பிக்கைகள்’
என்பதுதான். மரபுக் கொள்கைகளும் தொழில்நுட்பங்களும் `சோதித்து
அறியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படுகின்றன’ என்பது நவனர்களின்

வாதம். பன்னாட்டு நிறுவனங்களாலும், முதலாளிய மற்றும் பொதுவுடைமைக்
கொள்கைகளைப் பின்பற்றும் அரசுகளாலும் முற்றும் முழுதாக
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஓர் உணவுத் தொழில்நுட்பத்தை, இந்தக் கட்டுரையில்
வைக்கிறேன். 

`தொழில்நுட்பங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவேண்டிய


தேவையும் எனக்கு இல்லை’ என்று நீங்கள் ஒதுங்கக் கூடாது. ஏனெனில், ஒரே
ஒரு சொட்டு எண்ணெய் ஊற்றி ஒரு தோசை வார்த்தால்கூட அந்த ஒரு
சொட்டு எண்ணெய் ‘தயாரிக்கப்படும்’ முறையைத் தெரிந்துகொள்ளவேண்டிய
உரிமையும் கடமையும் உங்களுக்கு உண்டு.

சூரியகாந்தி, சோயா, தவிடு உள்ளிட்ட பல்வேறு தாவர எண்ணெய்களின்


தொழிற்சாலை நுட்பங்களை முதலில் சுருக்கமாக அறிமுகப் படுத்துகிறேன்.

1. எண்ணெய் வித்துக்களை ஆலையில் கொட்டி ஆட்டும்போது, அவற்றுடன்


ஹெக்ஸேன் (hexane) கலக்கப்படுகிறது. வித்துக்களில் இருந்து பிழியப்படும்
எண்ணெயின் அளவை அதிகரிப்பது, இந்தக் கலப்புக்கான முதல் நோக்கம். இந்த
வேதிப்பொருள் மனித உடலில் கூடுதலாகச் சேர்ந்தால் உருவாகும் நோய்களின்
பட்டியல் இது. நினைவிழந்து விழுதல், அடிவயிற்றில் கோளாறுகள், மயக்கம்,
மந்தம், வாந்தி, குமட்டல் மற்றும் பல்வேறு மூளை நரம்பியல் கோளாறுகள். 

2. எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் வித்துக்களின் சக்கைகள் உருவாகும்


அல்லவா? அந்தச் சக்கைகளையும் எண்ணெயையும் பிரிப்பதற்காகவும், அந்தச்
சக்கைகளில் மிச்சம் மீ தியிருக்கும் எண்ணெயைப் பிழிந்து எடுப்பதற்காகவும்
கலக்கப்படும் வேதிப்பொருள்... பாஸ்பேட் (phosphate). இந்த வேதிப் பொருளின்
அளவு உடலில் மிகுந்தால் வரக்கூடிய நோய்களின் பட்டியலை எழுதினால்
பக்கங்கள் போதாது. `பக்கவாதம் உருவாகி விரைவில் உயிர் பிரியும் ஆபத்து
உண்டு’ என்பது அவற்றில் ஒன்று.

3. மேற்கண்ட நிலைகளைக் கடந்த எண்ணெயில் தண்ண ீர் கலக்கப் படுகிறது.


ஏற்கெனவே கலக்கப்பட்ட வேதிப் பொருட்களைச் சுத்திகரிப் பதற்காக இந்தச்
செயல்முறை. 
4. சோடியம் கார்பனேட் அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு கலத்தல்
நான்காவது நிலை. எண்ணெயில் உள்ள கொழுப்பு, மெழுகு, பாஸ் போலித்திக்
எனும் வேதி நுண் பொருட்கள் உள்ளிட்டவற்றை நீக்குவது இந்தப் பணியின்
நோக்கம். இந்தச் செயலுக்குப் பின்னர் வெளியே வரும் எண்ணெய், அடர்த்தி
குறைந்ததாக, நிறம் அற்றதாக இருக்கும். பிசுபிசுப்பற்ற, பளிச் வெண்மை
நிறத்திலான எண்ணெய்களை விளம்பரங்களில் கண்டுகளிக்கிறீர்கள் அல்லவா...
அந்த நிலை வருவதற்காகச் செய்யப்படும் செயல்தான் இது. 

அமெரிக்க மருத்துவத் துறையின் அறிக்கைச் சுருக்கத்தை இங்கே குறிப்பிட


வேண்டும். `சோடியம் ஹைட்ராக்சைடின் அளவு உடலில் அதிகரித்தால்
உருவாகக்கூடிய நோய்கள் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனியாகப்
பட்டியலிடும் அளவுக்கானவை. நுரையீரல் – மூச்சுத்திணறல், நுரையீரல் வக்கம்.

வயிற்றுப் பகுதி – மலத்தில் ரத்தம், உணவுக்குழாயில் புண்கள், பேதி, வாந்தி
மற்றும் குமட்டல், அடிவயிற்றில் கடுமையான வலி. இதயம் மற்றும் ரத்த
மண்டலம் – இதயச் செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில்
அமிலத்தின் அளவு மாறிவிடுதல், அதிர்ச்சி. இன்னும் நிறைய நோய்களை அந்த
அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

5. எண்ணெயை வெளுத்தல் (bleaching) அடுத்த நிலை. இந்த நிலையில்,


எண்ணெயில் கரிமங்கள் (carbon) கலக்கப்படுகின்றன. கரிமங்களுக்கும்
புற்றுநோய்களுக்குமான உறவு பிரிக்கவே இயலாதது என்பதையும் நவன

அறிவியல்தான் கூறிக்கொண்டுள்ளது. 

6. இதன் அடுத்த நிலை, நாற்றம் நீக்குதல். மேற்கண்ட செயல்களை எல்லாம்


செய்தால், அந்த எண்ணெயில் இருந்து மணமா வசும்?
ீ குறிப்பாக, சூரியகாந்தி
எண்ணெய் என்றால், அதில் சூரியகாந்தி விதையின் மணமாவது இருக்க
வேண்டும் அல்லவா! ஆனால், இவ்வளவு வேதிப்பொருட்களைக் கலந்தால், அந்த
எண்ணெய் துர்நாற்றம்தான் அடிக்கும். இதை நீக்க வேண்டும் என்பதற்காகச்
செய்யப்படும் இந்தச் செயல்முறையை, உலகின் பல்வேறு உடல்நல
அமைப்புகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. மிக அதிகமான வெப்பத்திலும் மிகக்
கடுமையான அழுத்தத்திலும் எண்ணெயைக் கொதிக்கச் செய்வதுதான் இதன்
தொழில்நுட்பம். பல எண்ணெய் நிறுவனங்கள், ஏறத்தாழ 220 டிகிரி செல்சியஸ்
வெப்பத்தில் கொதிக்கவைக்கின்றன. நாம் சந்திக்கும் அதிகபட்ச வெயில் 40 டிகிரி
என்பதை மனதில்கொண்டு, எண்ணெய் கொதிக்கும் வெப்பநிலையைப்
புரிந்துகொள்ளுங்கள்.
இவை அனைத்துக்கும் மேலாக, கூடுதலாக இரண்டு கலப்புகள்
செய்யப்படுகின்றன. ஒன்று, எண்ணெயின் அலமாரி ஆயுளை அதிகரிக்கச்
செய்யும் வேதிப்பொருள். அதாவது, எண்ணெய் ‘கெட்டுப்போகாமல்’
இருப்பதற்காகக் கலக்கப்படும் பொருள். அதன் வேதிப்பெயர் டெர்சியரி பியூடில்
ஹைட்ரோ குவினினோன் (tertiary butylhydroquinone). இதை TBHQ – 319 என
அழைப்பது, உணவுத் தொழில்நுட்பத் துறையின் வழக்கம். 

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து மேலாண்மை அமைப்பு (FDA –FOOD


AND DRUG ADMINISTRATION), இந்த வேதிப்பொருளைப் பற்றி கூறும் சேதியை
அழுத்தமாக உள்வாங்கிக்கொள்ளுங்கள். ‘மனித உடலின் ஒரு கிலோ எடையில்
இந்த TBHQ-வின் அளவு வெறும் 0.02 மி.லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும்.
இதற்கு மேல் அந்த வேதிப்பொருள் அதிகரித்தால், மனித உடலால் அதைத்
தாங்கிக்கொள்ள இயலாது.’

எண்ணெயைச் சட்டியில் ஊற்றும்போது நுரைத்தால், உங்களுக்குப் பிடிக்காது


அல்லவா! அவ்வாறு நுரைக்காமல் இருப்பதற்காகக் கலக்கப்படும்
வேதிப்பொருளையும் தெரிந்துகொள்ளுங்கள். பாலி டைமெதில் சிலாக்ஸேன்
(poly dymethil siloxane) என்பது அதன் பெயர்.

எண்ணெயில் மட்டும் அல்ல, பல்வேறு உணவுப் பொருட்களில் இந்த பாலி


டைமெதில் சிலாக்ஸேன் கலக்கப்படுகிறது என்பதையும்
குறித்துக்கொள்ளுங்கள். இதனால் உருவாகும் நோய்களில்
முக்கியமானவையாக, கல்லீரல் நஞ்சாகுதல், குழந்தையின்மை, நுரையீரல்
நோய்கள், தோல் நோய்கள் என பன்னாட்டு நல அமைப்புகள் குறிப்பிடுபவை.
எண்ணெயை தோசையில் ஊற்றும்போது ஒருவகையான மினுமினுப்பு
கிடைப்பதற்கும் பாலி டைமெதில் சிலாக்ஸேன்தான் காரணம். 

எண்ணெய்ப் புட்டிகளிலும் உறைகளிலும் மிகவும் சிறிய எழுத்துக்களில்


அச்சிடப் பட்டிருக்கும் இந்த வாச கத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும், ‘Avoid from Heat and Light’. `வெப்பம் மற்றும் வெளிச்சத்தில்
வைக்காதீர்கள்’ என அந்த நிறுவனங்கள் உங்களிடம் கூறுகின்றன. இந்தத்
தகவல் எதற்காக என்றால், வெப்பமும் வெளிச் சமும் இந்த எண்ணெய்கள் மீ து
செயல்பட்டால், அவற்றின் மூலக்கூறுகளில் மிகப்பெரிய மாற்றங்கள்
உருவாகும். குறிப்பாக, பாலி டைமெதில் சிலாக்ஸேனின் மூலக்கூறுகள்
அனைத்தும் மனித உடலுக்கு மோசமான விளைவுகளை உருவாக்கத்தக்க
மூலக்கூறு நிலைக்கு (Formaldehyde ) மாற்றம் அடைந்துவிடும். அதன் பின்னர்
அந்த எண்ணெயை உணவுக்குப் பயன்படுத்துவது அபாயகரமான விளைவுகளை
உருவாக்கும்.

உணவு எண்ணெய் நிறுவனங்களின் தொழிற் சாலைகளுக்குள் நடக்கும்


‘சட்டப்படியிலான’ நடவடிக்கைகளை மட்டும்தான் நான் இங்கே குறிப்பிட்
டுள்ளேன். இங்கே சட்டங் களும் நடைமுறைகளும் நவனத்தின்
ீ வெறித்தனங்
களுக்குக் கட்டுப்பட்டவை யாக வடிவமைக்கப்படு கின்றன. சட்டத் துறையில்
இருக்கும் வல்லுநர்களுக்கு இந்த நவனத்
ீ தொழில்நுட் பங்கள் மிகவும் அந்நிய
மானவை. அவர்களால் இந்த வேதிப் பொருட்களையும் அவற்றால் உருவாகும்
குரூர விளைவுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூட முடியாது.
ஆகவே, நீதித் துறை, சட்டத் துறை ஆகியவை எல்லாம் இந்த அவலத்தைப்
போக்கும் என நீங்கள் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

நல்லெண்ணெயில் எள் இருக்க வேண்டும், கடலை எண்ணெயில் கடலை


இருக்க வேண்டும், விளக்கெண்ணெயில் ஆமணக்கு இருக்க வேண்டும் –
இவ்வளவுதான் நமது மரபுத் தொழில்நுட்பம். நமது செக்குகள் யாவும்
வெளிப்படையாக இருந்தன. மக்கள் தமது தோட்டங்களில் விளைந்த
பொருட்களை எடுத்துச் சென்று கண் எதிரே சுழலும் செக்கில் எண்ணெய்
ஆட்டிக்கொண்டு திரும்பினர்.
`மரபு எண்ணெய்களில் கொழுப்பு உள்ளது. அது இதயத்தைப் பாதிக்கும்’ என்ற
அச்சுறுத்தலை வெற்றிகரமாகச் செய்தன எண்ணெய் நிறுவனங்கள். இதற்குச்
சாதகமான பல்வேறு அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டார்கள் அவற்றின்
ஆதரவாளர்கள். குறிப்பாக, அலோபதி மருத்துவ வல்லுநர்கள் இந்த எண்ணெய்
நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். ‘சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை
மட்டும் பயன்படுத்துங்கள்’ என்ற அறிவுரையை, பெரும்பாலான இதய நோய்
மருத்துவர்கள் இப்போதும் வழங்கிவருகின்றனர்.

எண்ணெய் தயாரிப்பின் ஒவ்வொரு படிநிலையும் உருவாக்கிக்கொண்டுள்ள


நோய்களை மீ ண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். கடந்த 30 ஆண்டுகளில்
பெருகியுள்ள இதய நோயாளிகள், மூளை நரம்பியல் நோயாளிகள், நீரிழிவு
நோயாளிகள், புற்றுநோயாளிகள், நுரையீரல் நோயாளிகள் எண்ணிக்கைக்கும்
எண்ணெய்களில் கலக்கப்படும் பொருட்களுக்குமான உறவை நவன

மருத்துவத்தின் வழியாகவே நம்மால் நிறுவ முடியும்.

ஆனால், கடந்த காலத்தில் நம் சமூகத்தில் பயன்படுத்தப்பட்ட செக்கு


எண்ணெய்களால்தான் இதய நோய்கள் அதிகரித்தன என்பதை நவன

மேதைகளால் நிறுவ முடியுமா?

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய்,


புங்கன் எண்ணெய் ஆகியவை நம் மரபில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.
ஆமணக்குக் கொட்டைகளை நீரில் கொதிக்கவைத்து எண்ணெயைப் பிரித்து
எடுக்கும் தொழில்நுட்பம் நம் கிராமங்களில் இப்போதும் உள்ளது. இரும்புச்
செக்கில் ஆட்டினால்கூட எண்ணெயில் வெப்பம் ஏறிவிடும் என்பதால், மரச்
செக்கைப் பயன்படுத்திய அறிவார்ந்த மரபின் பிள்ளைகள் நாம். மரச் செக்கிலும்
எந்த மரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதிகள் உள்ளன. குறிப்பாக,
வாகைமரங்கள் மரச் செக்கு செய்ய சிறந்தவை. இந்த மரங்களின்
இலகுத்தன்மை, உறுதி, சுவை மற்றும் குளிர்ச்சி ஆகியன செக்குக்கு உகந்தவை.

நவன
ீ வெறிகொண்டு வேதிப் பொருட் களைக் கலப்பதும் பின்னர் ‘வெப்பமும்
வெளிச்சமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என எச்சரிப்பதுமான
மூடத்தனம் நம்மிடம் இல்லை. எண்ணெய் ஆட்டும்போதே அதன் மிதமான
வெப்ப நிலையை நாம் உறுதிசெய்கிறோம்.

நாம்தான் உண்மையான அறிவாளிகள். நவனத்தின்


ீ இந்த உணவுத் தொழில்
நுட்பங்கள்தான் உண்மையான மூடநம்பிக்கைகள். 

இப்போது மரச் செக்குகள் மிகுந்து கொண்டுள்ளன. இந்தத் துறையிலும்


பேராசைப் பிசாசுகள் உண்டு. மேலும் பல பூதங்கள் இந்தத் துறைக்குள்
நுழையும் ஆபத்தும் உண்டு. ஆகவே, `மரச் செக்கு என்றாலே அது
சிறப்பானதுதான்’ என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் விழாதீர்கள். எல்லா
செக்குக் காரர்களிடமும் வெளிப்படைத்தன்மையைக் கோருங்கள். அனைத்து
செக்குக்காரர்களையும் கண் எதிரே எண்ணெய் ஆட்டச் சொல்லுங்கள்.
ஏற்கெனவே அடைத்துவைக்கப்பட்ட எண்ணெய்ப் புட்டிகளை வாங்கும் முன்னர்,
விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளரைப் பற்றி மிக நன்றாக
அறிந்துகொள்ளுங்கள்.
ஏதேனும் வேதிப் பொருட்களின் கணக்குகளை அச்சிட்டுவைத்தால், அவற்றை
அப்படியே நம்பிவிட வேண்டும் என்ற மூடநம்பிக்கையை நவனம்

விதைத்துள்ளது. நாம் பல்லாயிரம் ஆண்டுகால மெய்யறிவுச் சமூகத்தின்
தொடர்ச்சிக் கண்ணிகள். நம்மால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். 

மிக எளிதாக நம் மரபுக்குத் திரும்பிவிட முடியும்!

 - திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 15
ம.செந்தமிழன், ஓவியங்கள்: ஹாசிப்கான், எஸ்.ஏ.வி.இளையராஜா

எல்லாவற்றையும் பணத்துக்காகச் செய்யத் தொடங்கினால், பணம் இருக்கும்


மனிதர்களே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பெருமைக்காகச் செய்யத்
தொடங்கினால், பெருமை நிலைக்கும் மனித வாழ்வு நிலைக்காது. சின்னஞ்சிறிய
செயலையும் அன்புவழிப்பட்டு செய்தால், உடல் அழிந்த பிறகும் பெயர்
நிலைக்கும், சந்ததி தழைக்கும். 

நமது பல்லாயிரம் ஆண்டுகால மரபில், வேளாண்மையை முழுத் தொழிலாக


நம் முன்னோர் செய்ததே இல்லை. உணவு படைக்கும் துறை என்பதால்,
வேளாண்மையில் வணிக நோக்கம் மிகக் குறைவாகவும், பொது நோக்கம்
கூடுதலாகவும் இருந்தன. இதனால், இயற்கை விதிகளுக்குப் புறம்பான
தொழில்நுட்பங்களை நம் முன்னோர் கையாளவில்லை. 

நமக்கு ரசவாதம் தெரிந்திருந்தது. நம் சித்தர்கள் தாவரங்களில் இருந்து


உலோகங்களைப் பிரித்து எடுத்தவர்கள்தான். ஒவ்வோர் உயிரினத்திலும்
உள்ள ீடாக இருக்கக்கூடிய உயிர்வேதி மூலக்கூறுகளைப் பற்றிய பாடம் நமக்கு
நிச்சயமாகப் புதியது அல்ல. சுண்ணாம்புக் கீ ரை என்ற தாவரத்தில் சுண்ணாம்புச்
சத்து (கால்சியம்) கூடுதலாக இருப்பது கிராமத்து மனிதர்களுக்கு நன்கு
தெரியும். எந்த ஆய்வகத்திலும் அமிலங்களை ஊற்றி, நுண்ணோக்கிகளைக்
குவித்து, இந்தத் தாவரத்தில் சுண்ணாம்புச் சத்து உள்ளது எனக்
கண்டுபிடிக்கப்படவில்லை. நமக்கே உரித்தான மரபுவழிபட்ட மெய்யறிவின்
விளைவாகக் கிடைத்த கொடைகள் இவை. 

பிரண்டை மற்றும் குப்பைமேனித் தாவரங்களைப் பற்றி, நவன


ீ மருத்துவத்
துறை இப்போது பக்கம் பக்கமாக எழுதுகிறது. இவற்றின் உள்ள ீடாக உள்ள
உலோகங்களையும் வேதிப்பொருட்களையும் பாடல்களில் எழுதிவைத்து,
சீடர்களுக்குக் கற்றுத்தந்தவர்கள் நம் முன்னோர்.

தாவரங்களின் உள்ளிருக்கும் வேதிப் பொருட்களையும் உலோகங்களையும்


புரிந்துகொண்டு அவற்றின் இயற்கையான குணங்களைச் சிதைத்து
விளைச்சலை உயர்த்தும் பொருளாதார நடவடிக்கையில் நம் முன்னோர்
இறங்கவில்லை. ஒருவர் கொலை செய்யாமல் இருப்பதால், அவருக்கு வரம்

இல்லை என்று பொருள் அல்ல. நமது மரபில் வேளாண் தொழில்நுட்பங்களில்
வேதிப்பொருட்களை ஈடுபடுத்தவில்லை என்பதால், நம் முன்னோர்
அறியாமையில் வாழ்ந்தனர் என்று பொருள் அல்ல.

பன்னாட்டுக் குளிர்பானங்களின் நச்சுப் பிடியில் மக்கள் சிக்கத்


தொடங்கியபோது, இயற்கை ஆர்வலர்கள் இளநீரை முன்வைத்தனர். இளநீரின்
சத்துக்கள் மற்றும் சிறப்புகள் குறித்த பரப்புரைகள் வேகமாக அரங்கேறின.
மாநகரங்களில் இளநீர் பருகும் வழக்கம் தேவைக்கு அதிகமாக உயர்ந்தது.
நவனர்களின்
ீ சொற்களில் கூறவேண்டுமானால், இளநீர் உற்பத்தியில் பணம்
கொழிக்கத் தொடங்கியது. இளநீர் ஏற்றிய வாகனங்கள், நகரங்களிலும்
மாநகரங்களிலும் ஆயிரக்கணக்கில் வலம் வந்தன. நம் நாட்டில் இவ்வளவு
இளநீர் இயற்கையான முறையில் விளைய வாய்ப்பு இல்லை. இதற்காக உயர்
விளைச்சல் தென்னை நாற்றுகள் களம் இறக்கப்பட்டன. இந்த நாற்றுகளால், 
பூச்சிகளை, நோய்களைத் தாக்குப்பிடித்து வளர முடியாமல்போனது. மோசமான
நோய்கள், வழக்கத்தைவிட அதிகமான வண்டுகள், பூச்சிகளின் தாக்குதல்
போன்றவற்றால் தென்னந்தோப்புகள் நலிவடைந்தன. 

பணம் கொட்டும் தொழிலாக ஒருபக்கம் இளநீர் மாறிவிட்டது. மறுபக்கம்,


தென்னை மரங்கள் நோயுற்று வாடின. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, நம்
வேளாண் சமூகம் கையாளும் இரக்கமற்ற செயல்களில் மிகச் சிலவற்றை
மட்டும் இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.

மோனோகுரோடோபாஸ் (monocrotophos) எனும் நஞ்சு, அமெரிக்காவிலும் வேறு


பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. காரணங்களை விளக்கினால்,
குலைநடுக்கம் வரும். அதன் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறேன். ‘நம் உடலில் நரம்பு
மண்டலத்தைச் சிறப்பாக இயக்கும் சுரப்பிகளில் ஒன்று கோலினெஸ்டெரேஸ்
(Cholinesterase) என்பது. மோனோ குரோடோபாஸ் நஞ்சுகள் இந்த
கோலினெஸ்டெரஸ் சுரப்புகளை முடக்கிவிடுகின்றன. இதன் விளைவாக, நரம்பு
மண்டலம் பதற்றமடைகிறது. திடீரென உடல் ஆட்டம்கொள்ளுதல், அதிவேக
மாக மூச்சுவாங்குதல், துடித்தல், வெட்டி இழுத்தல், வலிப்பு வந்து துடித்தல்,
படபடப்பு, கட்டுப்படுத்த இயலாத நடுக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றி
துடித்துச் செத்துவிழுதல் நிகழும் வாய்ப்பை மோனோகுரோடோபாஸ்
உருவாக்குகிறது. `தாவரங்களில் உள்ள பூச்சிகளும் வண்டுகளும் இவ்வாறு
செத்துவிழ வேண்டும்’ என்பது நவன
ீ மேதைகளின் கண்டுபிடிப்பு. 

`சின்னஞ்சிறு உயிரினங்களை இவ்வளவு குரூரமாகக் கொலைசெய்வது பாவம்


அல்லவா?’ என்ற அறச்சிந்தனை நம்மிடம் இருந்திருந்தால், இந்த நஞ்சு
தொடக்கத்திலேயே விரட்டியடிக்கப்பட்டிருக்கும். `உற்பத்தி உயர வேண்டும்.
பணம் கொழிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு செயல்பட்டதன் விளைவாக,
இப்போது தென்னைமரங்களின் உயிர்நாடியாக மோனோகுரோடோபாஸ் கலந்த
நஞ்சுகள் மாறிவிட்டன. 

தொடக்கத்தில் தென்னைக் குருத்துகள் மீ து இந்த நஞ்சைத் தெளித்தார்கள்.


இப்போது, ஒரு நெகிழிப் பையில் நஞ்சை ஊற்றி நீர் கலந்து, தென்னைமரத்தின்
வேர்களைச் சீவிவிட்டு அவற்றில் கட்டிவிடுகிறார்கள். நெகிழிப் பையில் உள்ள
நஞ்சு, ஒரு மணி நேரத்தில் முழுதாக தென்னை வேர்களால் உறிஞ்சப்
படுகிறது. இந்தச் செயல்முறையின் வழியாக, மரம் முழுவதும் நஞ்சாக
மாற்றப்படுகிறது. 

வேர்கள், நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இளநீருக்கு வழங்குகின்றன. அந்த


இளநீர் நமக்கு அருமருந்தாக இருந்தது. வடுகளில்
ீ கறிவேப்பிலைச் செடி
வளர்ப்போர், அந்தச் செடிகளின் வேரில் தயிர் ஊற்றுவது நமது கிராமங்களில்
இருந்த வழக்கம். தயிரை வேர்கள் உறிஞ்சினால், கறிவேப் பிலையின் மணம்
கூடுதலாக இருக்கும். வேர்களுக்கும் நமக்குமான உறவை நம் சமூகம்
புரிந்துகொண்ட விதம் இதுதான். அது நவனச்
ீ சிந்தனை இல்லாத `மூடர்களின்’
காலம். இது பகுத்தறிவும் நவனக்
ீ கல்வியறிவும் செழித்து வளர்ந்துள்ள காலம்.
அதனால், வேரில் நஞ்சு ஊற்றுகிறார்கள்.

வேர்களில் மோனோகுரோ டோபாஸ் நஞ்சைக் கட்டிய பிறகு, `இரு


மாதங்களுக்கு அந்தத் தென்னையில் இருந்து காய், இளநீர் எதையும் பறிக்கக்
கூடாது’ என்ற கட்டுப்பாடு வேளாண் துறையினரால் விதிக்கப்பட்டுள்ளது. வேறு
பல நஞ்சுகளும் தென்னை வேரிலும் தண்டிலும் செலுத்தப்படுகின்றன.
அவற்றைச் செலுத்தினால், ஆறு மாதங்களுக்கு காய் பறிக்கக் கூடாது.
கூர்மையான ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, `வலிக்காமல் குத்த வேண்டும்,
ரத்தம் சிந்தாமல் அறுக்க வேண்டும்’ என்பது போன்ற உபதேசங்களை அந்த
ஆயுதங்களின் மேல் அச்சிட்டு விற்பனைசெய்வது நவன
ீ அறிவாளிகளின்
நேர்மை.

தென்னையில் நிகழும் `பசுமைப் புரட்சி’ மோனோ குரோடாபாஸுடன்


முடியவில்லை. சல்ஃபோனமைடு (Sulfonamide) எனும் வேதி நஞ்சுக்கான
மாத்திரைகளை தென்னைமரத்தில் பதிப்பது, வேளாண் துறையில் அரங்கேறும்
மற்றொரு புரட்சிகரத் தொழில்நுட்ப நடவடிக்கை. தென்னையின் குருத்துகளில்,
பாளைகளில் இருக்கும் வண்டுகளை அழிப்பதற்காக சல்ஃபோனமைடு நஞ்சு
வில்லைகளைப் பயன்படுத்துகிறார்கள். தென்னைமரத்தின் தண்டுப் பகுதியில்
ஒரு துளையிட்டு அதன் உள்ளே மாத்திரைகளைப் பதித்து, அந்தத் துளையை
சிமென்டால் அடித்துப் பூசிவிடுவது இந்தத் ‘தொழில்’நுட்பம். இவ்வாறு செய்த
சில நிமிடங்களில், தென்னைமரத்தின் உச்சியில் இருந்து வண்டுகள் செத்து
விழும் என்று பரவலாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு வரியமிக்கது

சல்ஃபோனமைடு நஞ்சு.
சல்ஃபோனமைடு மாத்திரைகள் பதிக்கப்பட்ட தென்னைமரங்கள் செத்து, இற்று
விழத் தொடங்கும் நிலை இப்போது உருவாகிவிட்டது. புரிகிறதா உங்களுக்கு?
தன் மீ து திணிக்கப்பட்ட நஞ்சுகளின் அளவைத் தாள இயலாமல், அவ்வளவு
கம்பீரமான தென்னைகளே செத்துக்கொண்டுள்ளன.
கொப்பரைத் தேங்காய்க் கிடங்குகளிலும் பசுமைப் புரட்சியின் எண்ணற்ற
செயல்பாடுகள் நிகழ்கின்றன. அவற்றில் முக்கியமான தொழில்நுட்பம் ஒன்றைத்
தெரிந்துகொள்ளுங்கள்.

கொப்பரைத் தேங்காய் என்றால், எண்ணெய்த் தன்மை யுடன் உள்ள முற்றிய,


காய்ந்த தேங்காய். கிடங்குகளில், கொப்பரைத் தேங்காய்கள் குவியல்
குவியலாகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கும். நாளடைவில் ஈரப்பதம் உருவாகி,
தேங்காய் மீ து கருமை படியத் தொடங்கும். அதாவது, தேங்காய்கள் மீ து கறுப்பு
வண்ணத்தில் பூஞ்சைகள் வளரும். இந்த நிலையில், தேங்காய்களை வெயிலில்
காயவைத்தால், பூஞ்சைகள் கட்டுப்பட்டுவிடும். இந்த நவனப்
ீ புரட்சிக் காலத்தில்
வெயிலில் உலர்த்துவது, பழைமையான, முட்டாள்தனமான அல்லது
நடைமுறைக்கு ஒவ்வாத தொழில்நுட்பம் அல்லவா! அதனால், கந்தகம்
அடங்கிய வேதி நஞ்சுகளை (sulphar) கொப்பரைக் கிடங்குகளில்
பயன்படுத்துகிறார்கள்.

பெரிய வட்டமான இரும்புச்சட்டியில் நெருப்புத் துண்டுகளை நிரப்பி, அதில்


கந்தக மாத்திரைகளைப் போட்டு, சட்டியை சல்லடை போன்ற இரும்பு மூடியால்
மூடினால், மிக அதிக அளவில் புகை வரும். கொப்பரைத் தேங்காய்க் குவியலை
ஒரு தார்ப்பாயால் மூடிவைத்து, அதன் உள்ளே கந்தகப் புகைகொண்ட சட்டியை
வைத்துவிடுகிறார்கள். தீயுடன் சேர்ந்த கந்தகப் புகை மிக வரியமான

உயிர்க்கொல்லி. இவ்வாறான கந்தகப் புகையில் மூட்டம் போடப்பட்ட
தேங்காய்கள் கருமை நிறம் நீங்கி, பளிச்சென்ற வெண்மை நிறத்தில் இருக்கும். 

இந்தக் கால பொதுச் சமூகத்துக்கு, வெண்மை நிறம் மிகவும் பிடித்தமானது


அல்லவா? சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதுதானே, நவன
ீ அறிவியல்
துறையின் ஒரே ஒரு குறிக்கோள்! கந்தகத் தேங்காய்களில் இருந்து எண்ணெய்
பிழிந்த பின்னர், அந்தத் தேங்காய் எண்ணெயும் வெண்மை நிறத்தில் உள்ளது.
உண்மையான / இயற்கையான தேங்காய் எண்ணெய், மங்கலான பழுப்பு
வண்ணத்தில்தான் இருக்கும். 

`தென்னைமரத்தின் உச்சியில் ஏறிய குரங்குகள், தேங்காய்களைப் பறித்து இளநீர்


பருகிவிட்டு, அங்கு இருந்து தாவி அருகே இருந்த பாக்கு மரங்களில் இறங்கின.
பாக்குக் கொட்டைகளை மென்றுவிட்டு, கீ ழே இருந்த பலாமரத்தில் குதித்தன.
பலாப்பழங்களைச் சிதைத்து உண்ட அந்தக் குரங்குகள், அருகே இருந்த
வாழைமரங்கள் மீ து இறங்கின. செழித்துப் பழுத்திருந்த வாழைப்பழங்களைத்
தின்றுவிட்டு, அருகே இருந்த குளத்தில் குதித்து நீந்திக் கரையேறின’ என்பது
நமது சங்கப் பாடல்களில் உள்ள அந்தக் காலத்துத் தோட்டங்களின் காட்சி.
கலித்தொகை, சீவகசிந்தாமணி ஆகிய தொகுப்புகளில், இவ்வாறான
அடுக்குமுறைத் தோட்டங்களின் விவரணைகள் சிறப்பாகப் பதியப்பட்டுள்ளன.

தென்னையின் வேரில் நெகிழிப் பையுடன் நச்சுநீர், தண்டுப் பகுதியில் சிமென்ட்


பூச்சுடன் நச்சு மாத்திரைகள், பாளைகளில் நச்சுக் குருணைகள், தென்னையின்
கீ ழே வெட்டப் பட்டுள்ள குழிகளில் பிராய்லர் கோழிப் பண்ணைக் கழிவுகள்.
இதுதான் இப்போதைய தோட்டங்களில் காட்சிப் பதிவு. இவ்வளவுக்கும் பிறகு
வந்து சேரும் இளநீரையும், தேங்காய்களையும், எண்ணெயையும்தான் இந்தச்
சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்கள் உணவாக
உட்கொள்கின்றனர். 

தீயுடன் இணையும் கந்தகம் மற்றும் மோனோகுரோடாபாஸ், சல்ஃபோனமைடு 


நஞ்சுகள் எல்லாம், தென்னைப் பொருட்கள் வழியாக இந்தச் சமூகத்தில்
அன்றாடம் பரவிக்கொண்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க எந்த ஏற்பாடும்
இல்லை; கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை; தடுக்கும் சிந்தனையோ
துளிகூட இல்லை. 

உண்மை என்னவென்றால், இவற்றை இனி கட்டுப்படுத்தவோ, ஒரேயடியாக


ஒழிக்கவோ இயலாது. வேதிப்பொருட்களைத் தடைசெய்தால், இப்போதைய
விவசாயிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தில் இருந்தே விலகிச்
செல்வார்களே தவிர, உடனடியாக மரபுமுறைக்குத் திரும்ப மாட்டார்கள்.
ஏனெனில், கடந்த 60 ஆண்டுகால பசுமைப் புரட்சியின் விளைவாக, அவர்களது
மனங்களும் நிலங்களும் பக்குவம் இழந்துவிட்டன. 

தென்னைச் செடிகளை, நம் மரபு `தென்னம் பிள்ளை’ என அழைத்தது.


பணத்துக்காகவும் வேறு பல போலித்தனங்களுக்காகவும் `பிள்ளைகளை’ப்
பலியிடும் காலம்தானே இது!

 - திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 16
ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி
கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை வைப்பதை, நவன
ீ பகுத்தறிவுவாதம்
மிகக் கடுமையாக எதிர்க்கிறது. இறை நம்பிக்கை, மரபு வாழ்வியல் எல்லாம்
‘வெறும் நம்பிக்கைகள்’ என்பது அதன் குற்றச்சாட்டு. அதே நவனப்
ீ பகுத்தறிவு
செய்துவரும் `அறிவுபூர்வமான தொழில்’ ஒன்றைப் பற்றிய சில தகவல்களைப்
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

ஊட்டச்சத்து தொழில்நுட்பம் எனும் துறை, மனிதர்களின் உடல்நலத்துடன்


ஆடும் விளையாட்டுக்களுக்கு அளவே இல்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு
முன்னர், தைராய்டு எனும் சுரப்பியில் உருவாகும் நோய்களைப் பற்றி, நவன

மருத்துவத் துறை பேசத் தொடங்கியது. அந்தக் காலத்தில், தைராய்டு நோயால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. நமது மக்களில்
பெரும்பகுதியினருக்கு, தைராய்டு எனும் சொல்லே தெரியாது. `அயோடின் சத்து
குறைபாட்டினால், தைராய்டு நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது. ஆகவே,
உணவுக்கான உப்பில் அயோடின் கலக்க வேண்டும்’ என்ற அறிவிப்பு இந்திய
சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.

`இனி உணவுக்கான உப்பு, அயோடின் கலக்கப்பட்டதாக மட்டுமே இருக்க


வேண்டும்’ என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஏறத்தாழ 20 ஆண்டு
களாக, அயோடின் கலக்கப்பட்ட `அறிவுபூர்வமான’ உப்பைத்தான் நாம்
சாப்பிடுகிறோம். உங்கள் குடும்பத்திலும் சுற்றத்திலும் தைராய்டு மாத்திரை
விழுங்குவோரின் பெயர்களை ஒரு தாளில் எழுதுங்கள். எவ்வளவு பெரிய
பட்டியலாக இருக்கிறது!
இது மட்டுமா? தைராய்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டோர், தைராய்டு
புற்றுநோயால் இறந்துபோனோர், தைராய்டு சீர்கேடுகளால் உடல் பருமனுக்கு
ஆளாகித் துன்புறுவோர், தைராய்டு மாத்திரையில் தொடங்கி கருப்பைச்
சீர்கேடுகளுக்கும் சேர்த்து மாத்திரை விழுங்குவோரின் பெயர்களை,
தனிப்பட்டியலில் எழுதுங்கள். இவ்வாறான பட்டியல்களை, அயோடின்
உப்புக்களின் வருகைக்கு முன்னர் உங்களால் எழுதியிருக்க முடியாது.

உப்புத் தொழில் செய்வோரை, சங்க காலத்தில் `உமணர்' என அழைத்தனர்.


வலுவான எருதுகள் பூட்டப்பட்ட வண்டியில் உப்பு மூட்டைகளை
அடுக்கிவைத்து உமணர் குழு பயணம் செய்த காட்சிகள், சங்க இலக்கியங்களில்
விவரிக்கப் பட்டுள்ளன. எருதுகள் பூட்டிய அந்த வண்டிகளை, பெண்கள்
ஓட்டினர்; ஆண்கள் வண்டியின் இருபுறங்களிலும் காவல் காத்தனர் என்ற
விவரணை அந்தப் பாடல்களில் காணக்கிடைக்கிறது. அதே மரபுத்
தொடர்ச்சியில் பிறந்த பெண்கள்தான், இப்போது தைராய்டு நோய் காரணமாக
மருத்துவமனைகளில் மூச்சிரைக்க அமர்ந்திருக்கின்றனர்.
`அயோடின் பற்றாக்குறையை நீக்குவதற்காக உப்பில் அதைச் சேர்த்தீர்களே,
அதன் பின்னர் ஏன் தைராய்டு நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வளவு
மோசமாகப் பெருகியுள்ளது?’ என நாம் கேட்க வேண்டும். ஆனால், இதுவரை
அந்தக் கேள்வியை எவரும் எழுப்பவில்லை. 

வைட்டமின் (vitamin) எனும் மற்றொரு சத்துப்பொருளை, பல்வேறு


விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். வைட்டமின்-டி(Vitamin-D) எனும் அதன்
ஒருவகையைப் பற்றிய `அறிவுபூர்வமான’ உடல்நல விளைவுகளைக்
காண்போம்.

இந்த வைட்டமின்-டி, மனித உடலில் சுண்ணாம்புச் சத்துக்களைச் சேர்ப்பதற்கான


வளர்சிதை மாற்றங்களை உருவாக்குகிறது. வைட்டமின்-டி குறைந்தால், எலும்பு
மற்றும் பற்கள் தொடர்பான நோய்கள் உருவாகும். `ஆஸ்டியோமலாசியா'
(Osteomalacia) என்பது, வைட்டமின்-டி குறைந்தால் உருவாகும் நோய்த் தொகுப்பு.
ஆஸ்டியோமலாசியா எனும் சொல்லின் பின்னால் இருக்கும் நோய்களின்
பட்டியல் மிகப் பெரியது. ‘எலும்புகள் உறுதி இழத்தல், எலும்புகளில் வலி,
மூட்டுக்களில் வலி, முதுகு வலி, தசைகள் தளர்ச்சி அடைதல்’ ஆகியவை,
அவற்றில் சில நோய்கள். பெரும்பாலான உணவு நிறுவனங்கள், தம் உணவில்
வைட்டமின் சத்துக்களைச் சேர்த்துத்தான் விற்பனை செய்கின்றன. சுருக்கமாக,
உங்கள் அன்றாட உணவுப் பட்டியலில் பெரும்பாலானவை வைட்டமின்
சேர்க்கப்பட்டவைதான்.

மீ ண்டும் அதே தாளில் எழுதத் தொடங்குங்கள். ஆண்டுக்கணக்கில் மூட்டு வலி,


பற்சிதைவு, முதுகு வலி ஆகியவற்றுக்காக மருத்துவமனைகளை நாடும்
மனிதர்கள் உங்களைச் சுற்றிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை
பதிவுசெய்யுங்கள். `வடுகளில்
ீ தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே கூடுதலாக
உட்கொண்ட காலத்தில், இவ்வளவு எலும்பு நோயாளிகள் இருந்தனரா?' எனச்
சிந்தியுங்கள். நோயாளிகளின் பட்டியல் எழுதும் அந்தத் தாளைச் சற்று
பெரியதாக எடுத்துக்கொள்ளுங்கள். வைட்டமின்-டியின் சாதனைகள் இன்னும்
உள்ளன.
உடலில் வைட்டமின்-டி அதிகரித்தால் உருவாகும் நோய்கள்: `தீராத தலைவலி,
பசியின்மை, செரிமானமின்மை, பேதியாகுதல், சிறுநீரகங்களில் சுண்ணாம்புக்
கற்கள் உருவாகுதல், ரத்தநாளங்களில் சுண்ணாம்புக் கட்டிகள் அடைத்தல்
இவற்றை எல்லாம்விட முக்கியமாக, இதயத்தில் சுண்ணாம்புக் கட்டிகள்
அடைத்து மாரடைப்பு உருவாகுதல்.’

அதாவது, சிறுநீரகமும் இதயமும் செயலிழந்து மரணம் நேரும் சூழலைக்கூட


மிகையான வைட்டமின்-டி எனும் ஊட்டச்சத்து உருவாக்கும். அந்தத் தாளில்,
மேலும் பலருடைய பெயர்களை இப்போது உங்களால் எழுத முடிகிறது
அல்லவா!

உணவுப் பொருட்களில் சத்துக்களைச் சேர்த்தல் எனும் தொழில்நுட்பம்


உருவாக்கியுள்ள நோய்களை, மனிதகுலத்தால் சமாளிக்கவே இயலாது.
ஏனெனில், இந்தச் சத்துகள் யாவும் எப்போதோ ஒருமுறை அல்ல, நமது
உடலுக்குள் அன்றாடம் இறங்கியவை.

வைட்டமின்-டி எனும் சத்து, வெயில் வழியாக ஒவ்வொரு கணமும் இந்தப்


பூமியின் மீ து இறங்குகிறது. வெயில், நம் மீ து விழுகிறது; புல் மீ து விழுகிறது;
ஆடுகள் மீ து, பயிர்கள் மீ து, கோழிகள் மீ து எல்லாம் விழுந்துகொண்டே உள்ளது.
இவை அனைத்தினுள்ளும் வெயில் தனது ஊட்டச் சத்துக்களை எல்லாம்
இறக்கிக் கொண்டுள்ளது. 

மேலை நாடுகளில் வெயிலின் அளவு குறைவு என்பதால், அவர்களுடைய


தோலில் வைட்டமின் டி-யின் அளவு மிகையாக இருக்கிறது. அதிகம் வெயில்
அடிக்காத சூழல் அங்கே இருப்பதால், கிடைக்கும் வெயிலில் இருந்து
வைட்டமின்-டியை அவர்களது தோல் சேமித்து வைக்கிறது. நம் நாட்டில்
மிகுதியான வெயில் இறங்குகிறது. ஆகவே, நம்முடைய தோல் வைட்டமின்-
டியை மிகக் குறைவாகச் சேமிக்கிறது. 

‘மேற்கத்திய நாடுகளில் எவராவது கூச்சலிட்டால், அதுதான் உண்மையான


இசை. அங்கே எவராவது கிறுக்கினால், அதுதான் சரியான ஓவியம்.
வெள்ளைக்காரர்கள் உளறினால், அதுதான் மந்திரம். மிக முக்கியமாக
ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதப் பட்டால், அதுதான் அறிவியல்’ என்பது நவனப்

பகுத்தறிவின் அடிப்படைக் குணம். 
`இந்தியாவில் உள்ள சுமார் 70 சதவிகிதம் பேருக்கு, வைட்டமின்-டி சத்து
குறைவாக உள்ளது’ என, ஓர் ஆய்வறிக்கை இப்போது வெளியாகியுள்ளது.
இதுதான் இங்கே உள்ள நவன
ீ மருத்துவத் துறைக்கும் உணவுத் துறைக்கும்
காட்டப்படும் சமிக்ஞை. இதை, மருத்துவத் துறையும் உணவுத் துறையும்
தெளிவாகப் புரிந்துகொண்டு செயலாற்றுகின்றன. `பாலில் வைட்டமின்-டி
கலப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்’ என்ற குரல்கள் இப்போது ஒலிக்கத்
தொடங்கியுள்ளன. 

வெயிலின் மூலம் அன்றாடம் கிடைக்கும் ஒரு சத்தை, உணவில் கலந்தால்


உடலால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஏற்கெனவே, தேவைக்கு
அதிகமான சத்துக்களை உணவில் கலந்துதான் இப்போதைய சமூகம்
மாரடைப்புக்கும் சிறுநீரகச் செயலிழப்புக்கும் இலக்காகிக்கொண்டுள்ளது. 

தேவைக்கு அதிகமான சத்துக்களை நம்மிடம் வழங்கிவிட்டு, நம்மை


நோயாளிகள் ஆக்குகின்றனர். பின்னர் அந்த நோய்களுக்கான மருந்துகளையும்
இதர சிகிச்சைகளையும் முன்வைத்து நம் உடல்நலனையும் மனநிம்மதியையும்
பொருளாதாரத்தையும் பறித்துக்கொள்கின்றனர்.

எலும்பு நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கையைப்


பாருங்கள். சிறுநீரகச் சிறப்பு மருத்துவமனைகள், இதயநோய் சிறப்பு
மருத்துவமனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை உயர்வு அச்சுறுத்துவதாக
இல்லையா உங்களுக்கு? `ஏன் நாம் இவ்வளவு மோசமாக நோயுற்றோம்?' என்ற
கேள்வியை எழுப்புங்கள். மரபுவழிப்பட்ட நம் மெய்யறிவு, `எதையும்
கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்’ என்கிறது. `மெய்ப்பொருள் காண்பதே
அறிவு’ என்ற அறிவுரையை ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
உரைத்தவர் திருவள்ளுவர். 

நவன
ீ உணவுத் துறையினர், ஊட்டச்சத்து தொடர்பான அறிக்கைகளை
வழங்குகிறார்கள். மருத்துவத் துறையினர், அந்தச் சத்துக்களால் உருவாகும்
நோய்களை வைத்துக் கொழிக்கின்றனர். இது நவன
ீ அறிவியலின் கூட்டுச்
செயல்திட்டம். 

நாம் எவற்றைச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற


கணக்குகளை எல்லாம் அவர்கள்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை
எல்லாம் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நோய்கள் வரும் என்பதை அவர்கள்
தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
நமது உணவு வகைகளின் எண்ணிக்கை இப்போது சுருங்கிவிட்டது. ஒவ்வொரு
குடும்பத்திலும் அன்றாடம் பயன்படுத்தும் காய்கள், தானியங்களின் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது. 

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் சமைக்கப்படும் மரபு உணவில் ஏறத்தாழ 32


காய்கள் சேர்த்துச் சமைக்கப்படுவதை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
கண்டேன். நம்மிடம் ஏறத்தாழ 40 வகையிலான கீ ரைகள் இப்போதும்
இருக்கின்றன. இவைபோக, ஒவ்வொரு கிராமத்துக்குமான காட்டுக் கீ ரைகளின்
எண்ணிக்கையோ மிக அதிகம். நமது பொங்கல் சமையலில் ஏறத்தாழ 10
வகையான கிழங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. காய்களில் ஒவ்வொரு
வகையிலும் எண்ணற்ற உட்பிரிவுகள் உள்ளன. கத்திரிக்காயில் மட்டும்
ஏறத்தாழ 20 வகைகள் உள்ளன. இவற்றை எல்லாம் உணவாக்கினால்,
கிடைக்காத சத்துக்களை எந்த நிறுவனமும் தர இயலாது.

உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உணவின் வழியே


மட்டும் கிடைப்பது இல்லை. வானில் இருந்து இறங்கும் ஆற்றல் வகைகள்,
எல்லா உயிர்களையும் வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விலங்கினங்களின் கொம்புகள் இவ்வாறான ஆற்றல் வாங்கிகள்தான். அதாவது,
கொம்புகள் வழியாக வான் ஆற்றல் விலங்குகளுக்குள் இறங்குகிறது.

உம்பளச்சேரி காளைக் கன்றுகளின் கொம்பு களைத் தீய்க்கும் வழக்கம், நம்


மரபில் உள்ளது. இயல்பாக, மிக அதிகமான ஆற்றல் கொண்ட உம்பளச்சேரிக்
காளைகளின் கொம்புகளை வளரவிட்டால், கொம்புகள் வழியாக மேலும்
ஆற்றல் சேகரமாகும் என்பதும், எளிதில் முட்டித் தள்ளும் என்பதும்
காரணங்கள். இந்த முறையில், கொம்புகளின் வேர்களை அழிப்பது இல்லை.
ஆற்றலானது, குறைந்த அளவு உள்ள கொம்புகள் வழியாக மாட்டின்
உடலுக்குள் செல்ல வேண்டும் அல்லவா! அதற்காக, மிகச் சிறிய அளவில்
அடிக்கொம்புகளை விட்டுவைப்பார்கள்.

இறந்த மாடுகளின் கொம்புகளை வெட்டி, அவற்றின் உள்ளே இயற்கை எருவை


இட்டு, நிலத்தில் புதைத்து மிக வரியமான
ீ எருவைத் தயாரிக்கும்
தொழில்நுட்பமும் நமது மரபில் உள்ளது.
`வானில் இருந்து இறங்கும் ஆற்றல் வகைகள் உடலுக்குள் சேகரமாகின்றன’
என்ற உண்மையைத் தெரிந்துகொண்டதால். நம் மரபு தேர்தெடுத்த
அறிவியல்பூர்வமான தொழில்நுட்பங்கள் இவை.
நவன
ீ கால்நடைத் துறையினர் அயல்வகை மாட்டுக் கன்றுகளின் கொம்புகளை
அழித்துவிட்டு, கொம்புகளின் வேரைத் தோண்டி எடுத்து விடுவார்கள். பின்னர்,
நிறுவனங்களின் தீவனங் களை அந்த மாடுகளுக்கு வாங்கித் தரும்படி
பரிந்துரைப்பார்கள். கொம்புகள் அழிக்கப்பட்ட பின்னர் அந்த மாடுகளுக்கு,
நிறுவனங்கள் வழங்கும் தீவனங்கள்தான் சத்துணவு. அந்தச் சத்துணவு
மூட்டைகளில் வைட்டமின் பெயர்கள் எழுதப் பட்டிருக்கும். இயற்கையாகக்
கிடைக்கும் ஆற்றலைத் தடுத்துவிட்டு, நிறுவனங்களைச் சார்ந்து வாழும்
நிலைக்கு மாடுகள் தள்ளப்படுகின்றன. 

நம் மனங்களில் இப்போதும் திமிலும் கொம்புகளும் உள்ளன. நிச்சயமாக நாம்


நவனத்தின்
ீ அடிமைகள் அல்லர். நம்மால், இயற்கையின் மடியில் பால்
அருந்தவும் முடியும்; கதிரவன் ஒளியில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும்
முடியும்!

 - திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 17
ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியம்: பிரேம் டாவின்ஸி
‘வான் நின்று உலகம் வழங்கிவருகிறது’ என்றார் திருவள்ளுவர். நாம் வாழும்
இந்த நிலவுலகுக்குத் தேவையானவை அனைத்தும் வானில் இருந்து
வழங்கப்படுகின்றன. ஓர் அதிகாரத்தின் தலைப்பையே ‘வான் சிறப்பு’ என
அமைத்தார். அந்த அதிகாரத்தில் மழையைப் பற்றிய சேதிகள் உள்ளதால், பல
உரையாசிரியர்கள் அதை ‘மழைச் சிறப்பு’ என விளக்குகிறார்கள். `வான்’ என நம்
ஆசான் குறிப்பிடுவது, மழையையும் உள்ளடக்கிய ஆகாயத்தை என்பது என்
உணர்தல். ஏனெனில், வானில் இருந்து இறங்கிக்கொண்டுள்ள ஆற்றல்
வகைகள்தான் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களையும் வளர்க்கின்றன,
வாழவைக்கின்றன. 

`நிலத்தில் நிலைபெற்று, வான் அளிக்கும் கொடைகளை உட்கொண்டு வாழ்வர்’



என்பதுதான் படைப்பாற்றலின் வரம். எல்லா உயிரினங்களுக்கும், நிலம் உணவு
வழங்குவது இல்லை. நிலத்தின் வழியாக உணவு வழங்கப்படுகிறது.

வோன் ஹெல்மோன்ட் (Von Helmont) என்கிற அறிவியலாளர், 17-ம் நூற்றாண்டில்


ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்தவர். `வில்லோ' எனப்படும் ஒரு மரக்கன்றை, ஒரு
தொட்டியில் நடவுசெய்தார். அந்தத் தொட்டியில் எவ்வளவு மண் இருக்கிறது
என்பதையும், வில்லோ செடியின் எடையையும் அளந்துகொண்டார். ஐந்து
ஆண்டுகள் கழித்து வில்லோ செடி, ஓரளவுக்கு வளர்ந்து மரமாகி இருந்தது.
அந்த மரத்தை வேரோடு வெட்டி எடுத்து எடை போட்டார். பின்னர் மரம்
வளர்ந்திருந்த தொட்டி மண்ணை நன்கு உலரச்செய்து, அந்த மண்ணையும்
எடைபோட்டார். 

நடவு செய்தபோது செடியின் எடை ஏறத்தாழ 2 கிலோ 200 கிராம். ஐந்து


ஆண்டுகள் கழித்து வெட்டப்பட்டபோது, அதன் எடை ஏறத்தாழ 77 கிலோ.

மரத்தின் எடை இவ்வளவு அதிகமாகக் கூடியிருந்தபோதும், மரம் வளர்ந்த


மண்ணின் எடை குறையவில்லை. அவரது கணக்குப்படி மண்ணின் எடை 57
கிராம் குறைவாக இருந்தது. 

‘தாவரங்கள், வளர்ச்சியடையத் தேவையானவற்றை நிலத்தில் இருந்து எடுப்பது


இல்லை; நீரில் இருந்துதான் எடுத்துக்கொள்கின்றன. ஏனெனில், என்
சோதனையில் நான் ஊற்றிய நீர்தான் வில்லோ மரத்தின் எடையைக்
கூட்டியது’ என்ற கருத்தை இந்த ஆய்வின் வழியாக அவர் அறிவித்தார். இப்படி
பல ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவர் மீ து வழக்குகள் பதியப்பட்டு,
வட்டுச்
ீ சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் வோன் ஹெல்மோன்ட். வட்டுச்

சிறையில் இருந்து செய்ததுதான் வில்லோ மரத்தின் மீ தான ஆய்வு.

உயிரினங்களின் வளர்ச்சிக்குத் தேவையானவை, வானில் இருந்தும் வான் தரும்


மழையில் இருந்தும் கிடைக்கின்றன என்ற உண்மையை வெளிப்படையாக
அறிவித்துவிட்டால், உணவு, மருத்துவத் துறைகளில் நிகழும் பொருளாதார
வேட்டையைப் பொதுமக்கள் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.
அதனால்தான், ‘ஊட்டச் சத்துகள்’ எனும் பொய்மையை நவன
ீ மேதைகள்
வலுவாகக் கட்டி எழுப்புகிறார்கள். 

நமக்கு உரிய இயல்பான உணவு வகைகளை உட்கொண்டாலே, நமக்குத்


தேவையான அனைத்து ஊட்டங்களும் கிடைக்கும். ஊட்டச் சத்துக்களுக்காக
தனித்தனியான ஆய்வுகளையும், அவற்றின் பேரால் பரிந்துரைக்கப்படும்
உணவுகளையும் தேடித்தேடி உண்ணும்போது விளையும் நன்மைகளைவிட
தீங்குகள்தான் அதிகம். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும், தமக்கான
உணவை மட்டும் உட்கொள்கின்றன. அந்த உயிரினங் களின் உடலில் நிகழும்
பல்வேறு செயல்பாடுகளால், உணவுப் பொருட்கள் சத்துக்களாக
மாற்றப்படுகின்றன. இந்தத் தகவலைத்தான் நீங்கள் சற்று ஆழமாகப்
புரிந்துகொள்ள வேண்டும். 
லூயி கார்வரான் (Louis kervran) என்கிற பிரெஞ்சு உயிரியலாளரைப் பற்றி, ஐயா
நம்மாழ்வார் அடிக்கடி குறிப்பிடுவார். லூயி கார்வரானுடைய ஆய்வுகளின்
சுருக்கம் என்னவெனில், ‘உணவுப் பொருட்கள் உடலுக்குள் செரிமானம்
ஆகும்போது, உடலுக்குத் தேவையான சத்துக்களாக தாமாகவே மாற்றம்
பெற்றுவிடுகின்றன. உதாரணமாக, மாடுகள் புல்லைத்தான் முக்கியமான
உணவாக உட்கொள்கின்றன. புல் மற்றும் வைக்கோல் போன்ற உணவுகளில்
அதிகமாக இருப்பது மக்ன ீசியம் எனும் சத்து. ஆனால், மாடுகளின் உடலிலும்
பாலிலும் சுண்ணாம்புச்சத்துதான் கூடுதலாக உள்ளது. மாடுகளின் உணவில்
இவ்வளவு சுண்ணாம்புச் சத்து இல்லையே! 

அதேபோல, கோழிமுட்டைகளின் மஞ்சள் கருதான் கோழிக்குஞ்சாக மாற்றம்


அடைகிறது. அந்த மஞ்சள் கரு என்பது புரதச்சத்துதான். முட்டைக்குள் வளரும்
கோழிக்குஞ்சுக்கு எனத் தனி உணவை எவரும் கொடுப்பது இல்லை;
கொடுக்கவும் இயலாது. முட்டைக்குள்ளே வளரும் அந்தக் குஞ்சு, முட்டையின்
ஓட்டை உடைத்து வெளியே வரும்போது பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாக
மாறிவிடுகிறது. இவ்வளவு சத்துக்கள் அந்தக் குஞ்சுக்கு எங்கு இருந்து வந்தன?
விடை என்னவெனில், உணவு எதுவாக இருப்பினும், அந்த உணவின்
உள்ளடக்கத்தைத் தனக்குத் தேவையான சத்துக்களாக மாற்றிக்கொள்ளும்
வல்லமை உடலுக்கு உண்டு. இது லூயி கார்வரானின் மிக நீண்ட
ஆய்வறிக்கையின் எளிய விளக்கம்.

மாடுகள் தமக்கான உணவை மட்டும் உட்கொண்டால், அவற்றுக்கு மருத்துவர்


தேவை இல்லை. கோழிகள் தமக்கான இரையை மட்டும் மேய்ந்து, இயற்கை
முறையில் அடைகாத்தால், அவற்றின் குஞ்சுகளைப் பொரிப்பதற்கு
இயந்திரங்கள் தேவை இல்லை. மனிதர்களும் தமது வாழ்விடத்தில் விளையும்
உணவுகளை மட்டுமே உட்கொண்டால், எந்த ஊட்டச்சத்து வலையிலும் சிக்கத்
தேவை இல்லை.

உடலுக்குப் புரதம் தேவையெனில், புரதத்தை நேரடியாக உட்கொள்ளத் தேவை


இல்லை. அவரவர் தமது மரபுவழிப்பட்ட உணவுகளை மட்டும் உட்கொண்டால்,
அந்த உணவுகளில் இருந்து உடலால் புரதத்தையும் மற்ற ஊட்டங்களையும்
தயாரித்துக்கொள்ள முடியும். எல்லா உயிரினங்களும் அதிகாலையில்
விழிப்பதைக் கவனித்திருப்பீர்கள். வானில் இருந்து இறக்கப்படும் அதிகாலைக்
காற்றும் வெப்பமும்தான், எல்லா உயிரினங்களுக்குமான அடிப்படையான
ஊட்டம். 
நம் முன்னோர், அதிகாலை கண் விழித்தலையும் வாழும் சூழலில் விளையும்
உணவுப்பழக்கத்தையும் வாழ்வியலாகக் கொண்டிருந்தனர். ஆறு அடி நீளம்
இருந்த வாளை வசிப்
ீ போர்புரியும் அளவுக்கு அவர்களின் உடலில் பலம்
இருந்தது. இன்றைய நவன
ீ உணவு மேதைகள், தனது பயணப் பைகளைக்கூட
சர்க்கரம் வைத்து உருட்டுகிறார்கள். மரபு வாழ்வியலைக் கடைப்பிடித்தோர்தான்,
கோயில்களின் விமானத்தில் பல்லாயிரம் கிலோ எடைகொண்ட பாறைகளை
அடுக்கினர்.

`இந்த உணவில் புரதம் உள்ளது. ஆகவே, இதை உட்கொள்ளுங்கள்’ என


அறிவிப்பவர்களிடம் `இந்தப் புரதம் எங்கு இருந்து எடுக்கப்பட்டது?’ எனக்
கேளுங்கள். இந்தக் கேள்வி, உணவு மற்றும் மருத்துவ நிறுவனங்களை
அசைத்துப்போடத்தக்கது. 

புரதம் என்பது, நவன


ீ அறிவியல் கண்டறிந்துள்ள சத்துக்களில் ஒன்று.
பெரும்பாலான உணவுகளிலும் உயிரினங் களின் உடல்களிலும் புரதம் உள்ளது.
பாம்புகளின் நஞ்சு என்பதே புரதம்தான். தேள், நட்டுவாக்காலி உள்ளிட்ட
உயிரினங்களின் நஞ்சும் புரதம்தான். ஓர் உணவுப்பொருளைக் காட்டி, ‘இதில்
புரதம் உள்ளது’ எனக் கூறுபவர்கள், அந்த உணவுப் பொருளில் உள்ள புரதம்
எந்த உயிரினத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கூறட்டுமே! 

மாட்டு எலும்புகளில் இருந்து அதிகப்படியான சுண்ணாம்புச்சத்து உறிஞ்சப்பட்டு,


உணவுகளில் கலக்கப்படுகின்றன. பல்வேறு சத்துணவு மற்றும் தின்பண்ட
நிறுவனங்களின் தயாரிப்புகளில் விலங்குக் கொழுப்புகள் இருக்கின்றன. சில
நிறுவனங்கள் தம் உணவில், ‘தாவரக் கொழுப்பு’ உள்ளதாகக் கூறுகின்றன.
எந்தத் தாவரத்தில் கொழுப்பு உள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறட்டுமே!
துப்பாக்கித் தோட்டாக்களில் பன்றிக்கொழுப்பும் பசுவின் கொழுப்பும்
கலக்கப்பட்டது, பிரிட்டன் வல்லாதிக்கத்துக்கு எதிராக நிகழ்ந்த சிப்பாய்க்
கலகத்துக்கான காரணங்களில் ஒன்று. இப்போது உள்ள ஊட்டச்சத்து
உணவுகளில் கலக்கப்படும் கொழுப்புகளின் உண்மைநிலை மட்டும் வெளியே
கசிந்தால், கட்டுப்படுத்த முடியாத கலகங்கள் வெடிக்கும். அந்தத் தகவல்கள்
எல்லாம் `பன்னாட்டு வணிகச் சட்டங்களினால்’ பாதுகாக்கப்படும் தொழில்
ரகசியங்கள்.

மனிதத் தலைமுடியில் ஏராளமான புரதம், அமினோ அமிலங்கள் உள்ளன.


பல்வேறு திருத்தலங்களில் சேகரிக்கப்படும் தலைமுடிகள், பல கோடி
ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அவை எல்லாம் பல்வேறு
நிறுவனங்களின் கிடங்குகளைச் சென்றடைகின்றன. `தலைமுடியில் இருந்து
எடுக்கப்பட்ட புரதத்தைத்தான் உங்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறீர்கள்’ என,
எந்த உணவு நிறுவனத்தையும் குறிப்பிட்டு எழுதவோ, பேசவோ முடியாது.
சட்டம் அவர்களைத்தான் பாதுகாக்கிறது. 

இவ்வாறான செயல்முறைகளால் மனித உடலில் உருவாகும் மோசமான


மாற்றங்களைப் பற்றிய கவலை, நவன
ீ உணவு மற்றும் மருத்துவத்
துறையினருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. வைட்டமின் மாத்திரைகளை
எழுதித் தரும் மருத்துவர்களுக்கு, இந்த மாத்திரைகளில் உள்ள வைட்டமின்
எந்த உயிரினத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனத் தெரியுமா அல்லது
தெரிந்துகொள்ளும் விருப்பம்தான் அவர்களுக்கு உள்ளதா? 
இயற்கையான உணவைத் தவிர, வேறு எந்த வகையிலும் உடலுக்குள்
செலுத்தப்படும் சத்துக்களை உடல் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. இந்த
விதியைப் புரிந்துகொள்ளாததன் விளைவைத்தான் நமது சமூகம் இப்போது
பல்வேறு நோய்களின் பேரால் அனுபவிக்கிறது. 

மழலைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஊட்டச்சத்து உணவுகளைப் பாருங்கள்.


அவற்றின் புட்டியில் குறிப்பிடப்படும் பல்வேறு சத்துக்களை அந்தக்
குழந்தைகளின் உடல் செரிப்பது இல்லை. இதனால்தான் இப்போதைய
குழந்தைகளில் மிகப் பெரும்பாலானோருக்கு சளித் தொல்லை நீடிக்கிறது.
பிறந்த சில நாட்களில் தொடங்கும் சளித் தொல்லை, ஒவ்வோர் ஆண்டும்
அதிகரிக்கிறதே தவிர, குறைவது இல்லை. கணிசமான குழந்தைகளின்
நுரையீரல் செயல்திறன் குறைந்து, மூச்சிரைப்பு நோயாளிகளாக
மாற்றப்படுகின்றனர்.

நம் வட்டுப்
ீ பிள்ளைகளின் உணவுப் பட்டியலில், ஊட்டச்சத்துப் பொருட்கள்
குவிந்துகிடக்கின்றன. அதே குழந்தைகளின் மருத்துவப் பட்டியலோ,
அதைக்காட்டிலும் பெரியதாக இருக்கிறது. `பிறந்த நாளில் இருந்தே ஊட்டச்சத்து
ஊசிகள், மருந்துகள், உணவுகள் கொடுக்கிறோமே. நம் பிள்ளைகள் ஏன்
இவ்வளவு மோசமாக நோயுற்றுத் தவிக்கிறார்கள்?’ என்ற அடிப்படையான
கேள்வியைக்கூட நீங்கள் எழுப்புவது இல்லை. 

நாகப்பட்டினத்தில் நண்பர்களுடன் கடல் பயணம் சென்றபோது, எங்களுடன்


படகில் வந்த ஒரு சிறுவனை மீ னவர்கள் கடலில் தள்ளிவிட்டனர். நாங்கள்
கரையில் இருந்து வெகுதொலைவில் இருந்தோம். அந்தச் சிறுவனுக்கு பத்து
வயது இருக்கும். நடுக்கடலில் அவன் தனி ஒருவனாக நீந்தி விளையாடிய
அழகைப் படம்பிடித்தோம். துளியும் அச்சமின்றி, சோர்வின்றி அவன் அந்த ஆழக்
கடலில் நீந்தினான். படகில் ஏறிய பின்னர், ‘விளம்பரங்களில் காட்டப்படும்
ஊட்டச்சத்து உணவுகளை உனக்குக் கொடுக்கிறார்களா?’ என அவனிடம் நான்
கேட்டேன். அந்தச் சிறுவனுக்கு, நான் குறிப்பிட்ட ஊட்டச்சத்து உணவுகளின்
பெயர்கூடத் தெரியவில்லை.
நமது உடலும் மனமும் அளப்பரிய ஆற்றல்கொண்டவை. நாம் வாழும்
நிலத்தில் என்ன உணவுகள் இயற்கையாகக் கிடைக்கின்றனவோ, அவற்றில்
இருந்து, தமக்குத் தேவையான சத்துக்களை உறிஞ்சிக்கொள்ளும் வரம் நமக்கு
வழங்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து எனும் கருத்து, நவன


ீ அறிவியலுக்குச் சொந்தமானது. நமது மரபு,
`நிலத்தின் வளமையைத் தீர்மானிக்கும் ஆற்றல் வானில் உள்ளது’ என்ற
மெய்யறிவை முன்வைத்தது. விலங்கு எலும்புகளின் சுண்ணாம்புச்சத்தும்,
தலைமுடியின் புரதமும், விலங்குகளின் கொழுப்பும் நமக்குத் தேவை இல்லை.
நமது நிலத்தில் கிடைப்பவற்றை உண்போம், வானில் இருந்து இறங்கும்
ஆற்றல் பெற்று வளர்வோம்!

- திரும்புவோம்...

. ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 18
ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி
`ஏன்?' எனக் கேட்பது உயிரின் இயல்பு. ஒவ்வொரு செயலைச் செய்யும்
முன்னரும், ‘இதை ஏன் செய்ய வேண்டும்?’ எனக் கேட்பவர் அந்தச் செயலைப்
புரிந்துகொள்கிறார். அதன் பின்னர், அந்தச் செயலை அவர் சிறப்பாகச் செய்கிறார்
அல்லது முற்றிலும் அதை நிராகரிக்கிறார். ஆனால், ஏன் செய்கிறோம் என்றே
தெரியாமல் செய்யப்படும் எல்லா செயல்களும் பாவங்களின் குவியல்தான்! 

காடுகளில் மேயும் மாடுகளைப் பாருங்கள். பலவகையான புற்கள், செடிகள்,


கொடிகள், புதர்ச்செடிகள் இருக்கும் காட்டில், அவை எல்லாவற்றையும்
மேய்கின்றன. வயிறு நிரம்பினால் போதும் என்ற சிந்தனையில், ஒரே இடத்தில்
இருக்கும் ஒரே வகையான தாவரத்தை அவை மேய்வதே இல்லை. ஏனெனில்,
அந்தக் காட்டில் முளைத்துள்ள பலவகையான செடிகளும் கொடிகளும்
தமக்கான சரிவிகிதமான உணவுகள் மற்றும் மருந்துகள் என்ற புரிதல்
அவற்றுக்கு உண்டு. எல்லா கால்நடைகளும் இவ்வாறுதான் நடந்துகொள்
கின்றன. எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, ஒரே வகையான தீவனத்தை
அவை உட்கொள்வதே இல்லை. அலைந்து திரிந்து விதவிதமான தாவரங்களை
உண்பதுதான் தாவர உண்ணிகளின் குணம். அதனால்தான் காட்டில் மேயும்
கால்நடைகளுக்கும் விலங்குகளுக்கும் கால்நடை மருத்துவர்கள்
தேவைப்படுவதே இல்லை. இந்தக் காரணத்தினால் தான் காட்டில் திரியும்
கால்நடைகள், பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடை களைக் காட்டிலும் பல
மடங்கு வலுவாக உள்ளன.

காட்டில் மேயும் மாடுகளைக் கட்டிவைத்து தீவனம் மட்டும் போட்டால், அந்தத்


தீவனத்தை அவை மிகக் குறைவாக உண்கின்றன. வேறு வழியே இல்லை,
இந்தத் தீவனத்தைத்தான் உண்ண வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால்,
சற்று கூடுதலாக உட்கொள்கின்றன. புத்தம்புதிதாக ஓர் உணவுப் பழக்கம்
அறிமுகமானால், மற்ற உயிரினங்கள் உடனடியாக ஏற்பது இல்லை.
இயன்றவரை அந்த உணவுகளை நிராகரிக்கின்றன. காரணம், `இதை ஏன் நான்
உண்ண வேண்டும்?’ என்ற கேள்வி அவற்றின் உணர்வில் பொதிந்துள்ளது.

`மனிதர்கள் மட்டும்தான் `ஏன்?’ எனக் கேட்பார்கள். மனிதர்களுக்கு மட்டும்தான்


பகுத்தறிவு உள்ளது' என்பது போன்ற கதைகள் கடந்த நூற்றாண்டில்
எழுதப்பட்டன. எல்லா உயிரினங்களுக்கும் பகுத்தறிவு உண்டு. மான்கள் மலம்
தின்பது இல்லை. முயல்கள், எலிகளை வேட்டையாடுவது இல்லை. மூத்திர
நாற்றம் அடிக்கும் வைக்கோலை மாடுகள் மேய்வது இல்லை.
வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட இனிப்புகளை, எறும்புகள் சீண்டுவது இல்லை.
கிடைக்கும் எல்லா மரங்களிலும் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டுவது
இல்லை. ஒவ்வோர் உயிரினமும் தமக்கு எது தேவை, எது தேவை இல்லை
என்பதை நன்கு பகுத்தறிந்துதான் வாழ்கிறது. யானைகளின் பகுத்தறிவைக்
கண்டு, எல்லா விலங்கியலாளர்களும் வியக்கிறார்கள். நாய்களின் பகுத்தறிவு
எவ்வளவு மேன்மையானது என்பது, நாய் வளர்ப்போர் அனைவருக்கும்
தெரியும். 
மனிதகுலம் மட்டும் ஏன் துன்பங்களில் சிக்குகிறது... நோய்வாய்ப்படுகிறது
என்றால், ‘ஏன்?’ என்ற கேள்வியைக் கேட்காத உயிரினமாக மனிதர்கள்
மாறிப்போனதுதான் என்பது என் எண்ணம். 
உங்கள் வட்டில்
ீ உள்ள சிறுவர்களுக்கான தின்பண்டங்கள் மற்றும்
ஊட்டச்சத்துப் பொருட்களை எடுத்துப் பாருங்கள். அவற்றில் என்னென்னவோ
எழுதப்பட்டுள்ளன. அவை எல்லாம் நன்மை தரக்கூடியவை என
நினைக்கிறீர்கள். 

புரதம் (Protein) எனும் ஒரு சத்துப்பொருளை முதலில் அறிந்துகொள்வோம்.


`இதில் புரதம் உள்ளது’ என்ற வாசகம் உங்களுக்குப் பிடித்தமானது. அந்தப்
பொருளில் உள்ள புரதம் உண்மையில் எங்கு இருந்து எடுக்கப்பட்டது என
உங்களுக்குத் தெரியுமா? அதில் உள்ள புரதத்தின் அளவு உங்கள் குழந்தைக்குக்
கூடுதலானதா... குறைவானதா எனத் தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக,
உங்கள் குழந்தை புரதக் குறைபாட்டால் அவதிப்படுகிறதா? `ஆம்' என்றால்,
புரதத்தை வழங்கக்கூடிய உணவுகள் நம்மிடம் இல்லை என நினைக்கிறீர்களா?
உங்கள் குழந்தையின் உடலில் புரதக் குறைபாடு இல்லை என்றால், நீங்கள்
வழங்கும் அந்த உணவு / தின்பண்டத்தில் உள்ள புரதம் குழந்தையின் உடலில்
செய்யப் போகும் தீவினைகளைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
இவை எல்லாம் மனிதராகப் பிறந்த நாம் எழுப்பவேண்டிய கேள்விகள்.
இவ்வாறான கேள்விகளை எழுப்புவதும், இவற்றுக்கான விடை
கிடைக்காவிட்டால் அந்தப் பொருட்களை நிராகரிப்பதும்தான் உண்மையான
பகுத்தறிவு. `நவன
ீ அறிவியல் மேதைகள் எதைச் சொன்னாலும் அது
சரியானதுதான்’ என நம்புவது மூடநம்பிக்கை.

குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் தின்பண்டங்களில் நிகழும் ஊட்டச்சத்து


விளையாட்டுக்களின் ஆபத்துக்களில் வெகுசிலவற்றை உங்களோடு
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உடல் இயக்கத்துக்குத் துணை புரியும் அமிலங்களில் அமினோ அமிலம் (Amino


Acid)என்பது ஒருவகை. ஏறத்தாழ 500 வகையான அமினோ அமிலங்களை
இதுவரை நவனர்கள்
ீ கண்டறிந்துள்ளனர். அவற்றில் வெகுசில வகைகள் மட்டும்
மனித உடலில் உள்ளன. அமினோ அமிலங்களின் ஒரு வகையான கூட்டுச்
சேர்க்கைதான் புரதம் எனும் சத்து. இந்த அமினோ அமிலக் கூட்டு, பல்லியில்
உண்டு; பாம்புகளிலும் உண்டு. இந்தப் புரதச்சத்து கரப்பான் பூச்சியில் உண்டு;
நத்தையிலும் உண்டு. 

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உணவுகளில் / தின்பண்டங்களில்


கலக்கப்படும் புரதம், எந்த வகை உயிரினங்களில் இருந்து எடுக்கப்படுகிறது
என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா! புரதம் என்பது,
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கைப் பொருள் அல்ல; உயிருள்ள
ஊட்டச்சத்து. புரதத்தின் மூலக்கூறுகளில் உள்ள அமினோ அமிலங்கள் மனித
உடல் இயக்கத்துக்கு அடிப்படையானவை. `பிராய்லர் கோழியில் அதிகப் புரதம்
உள்ளது’ என்று தொடர்ந்து விளம்பரம் செய்யப்படுகிறது. பிராய்லர் கோழியில்
உள்ள புரதம், அந்தக் கோழியின் உடலை வெறும் 33 நாட்களில்
பருமனாக்கிவிடுவதற்கான மூலக்கூறுகளைக் கொண்டது. அந்தப் புரதம்
மனிதர்கள் உடலில் சேர்ந்தால், அதன் மூலக்கூறுகளில் நிகழும் மாற்றங்களை
இதுவரை முழுமையாக அளந்தவர் எவரும் இல்லை. ஆனால்,
மேலைநாடுகளில் இவ்வாறான இறைச்சிகளை அதிகம் உண்போர், மிகவும்
பெருத்து, கனத்த உடல்களுடன் அவதிப்படுவதைக் காண்கிறோம்.

சுண்ணாம்புச்சத்து (Calcium) என்ற பெயரில் கலக்கப்படும் பொருட்களைப்


பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நரம்புகளின் இயக்கம், மூளை
நரம்புகளின் வழியாகக் கடத்தப்படும் செய்தித் தொடர்புகள், கருப்பையில் கரு
தங்குவதற்கான சூழல் ஆகியவற்றை சுண்ணாம்புச் சத்தின் ஒருவகை
தீர்மானிக்கிறது. சுண்ணாம்புச்சத்துக்கள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன...
கால்சியம் கார்பனேட், கால்சியம் பாஸ்பேட், கால்சியம் சிட்ரேட் ஆகியவை.
இவற்றில் முதல் வகையான கால்சியம் கார்பனேட்தான் மிக அதிக அளவில்
கிடைக்கிறது. சிப்பிகள், நத்தை ஓடுகள் போன்றவற்றில் இருந்தும் இன்னபிற
உயிரினங்களின் உடல் உறுப்புகளில் இருந்தும் கால்சியம் கார்பனேட்
உறிஞ்சப்படுகிறது. இந்தப் பொருளைச் சுத்திகரிப்பு செய்துதான் உணவில் கலக்க
வேண்டும் என்பது, உலகெங்கும் உள்ள நல அமைப்புகள் வகுத்துள்ள விதி.

நன்கு சுத்திகரிக்கப்பட்ட சத்துதான் கால்சியம் சிட்ரேட். ஓரளவுக்குச்


சுத்திகரிக்கப்பட்டது கால்சியம் பாஸ்பேட்.

நீங்கள் வாங்கும் தின்பண்டங்கள் மற்றும் உணவுகளில் உள்ள


சுண்ணாம்புச்சத்து மேற்கண்ட வற்றில் எந்த வகையைச் சேர்ந்தது என
உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், `சுண்ணாம்புச்சத்து
இருந்தால்தான் குழந்தையால் நன்கு வளர முடியும்’ என்ற பரப்புரையை நீங்கள்
நன்கு அறிவர்கள்.
ீ கால்சியம் கார்பனேட் எனும் வகை, மிகவும் விலை
குறைவாகக் கிடைக்கிறது. ஆகவே, சுத்திகரிக்கப்படாத நிலையில் உள்ள இந்தச்
சுண்ணாம்புச்சத்தை, தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்பது
பரவலாக உள்ள நடைமுறை. 
‘ஒரு வேளைக்கு 500 மில்லிகிராம் சுண்ணாம்புச்சத்து மட்டும்தான் மனித
உடலில் சேர வேண்டும். அதற்கும் கூடுதலாகச் சேர்ந்தால் மோசமான
விளைவுகள் உருவாகும்’ என்பது நவன
ீ மருத்துவத் துறையின் அறிவிப்பு. 

நீங்கள் வாரி வழங்கும் பொருட்களில் எவ்வளவு சுண்ணாம்புச்சத்து உள்ளது


எனப் பார்க்கிறீர்களா? 500 மில்லிகிராம் மட்டுமே உள்ள பொருளை, உங்கள்
பிள்ளை சாப்பிடுவதாக வைத்துக் கொள்வோம். அதே தின்பண்டத்தை/உணவை
அன்றாடம் சாப்பிட்டால், அந்தக் குழந்தையின் உடலில் சேரும்
சுண்ணாம்புச்சத்தின் அளவை எப்படிக் கண்காணிக்க முடியும்?

ஒரு பொருளில் மட்டும் ஊட்டச்சத்துக்கள் இருந்தால், அதைத் தவிர்க்கலாம்.


இப்போதைய சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான உணவுகளிலும்
தின்பண்டங்களிலும் ஊட்டச்சத்துக்களின் பெயர்கள் நீக்கமற நிறைந்துள்ளன.
இவ்வளவு பொருட்களில் இருந்தும் குழந்தைகளின் உடலில் சேகரமாகும்
சுண்ணாம்பும் புரதமும் மற்ற சத்துக்களும் என்னென்ன விளைவுகளை
உருவாக்கும் என்பதை நவன
ீ மேதைகள் கண்டுகொள்வதே இல்லை. நமக்கு
பகுத்தறிவு உள்ளது. நாம்தான் இவற்றைப் பற்றிய கேள்விகளை எழுப்ப
வேண்டும். எல்லா உயிரினங்களும் படைப்பின் விதிகளை எவ்வாறு
புரிந்துகொண்டு வாழ்கின்றனவோ, அதேபோல நாமும் வாழவேண்டும்.
சுண்ணாம்புச்சத்தும் புரதமும் மிகுந்த உடல்கள்தான் இப்போது பெருகியுள்ளன.
கால்சியம் கார்பனேட் வகை சுண்ணாம்புச்சத்து, நீரில் எளிதாகக் கரையாது.
இந்தச் சத்தை உணவிலும் தின்பண்டங்களிலும் கலந்தால், அவற்றைச்
சாப்பிடும் பிள்ளைகளுக்கு, சிறுநீரக நோய்களும் கல்லீரல் தொல்லைகளும்
மிகும். இந்த இரு உறுப்புகளும் சீரழியத் தொடங்கினால், பிள்ளையின் உடல்
நலிவுற்று, நோய் எதிர்ப்பாற்றல் குறையும்.

நாம் நன்றாக வாழ்ந்த காலம் இருந்தது. அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை,


சுழியம், கொழுக்கட்டை வகைகள், புட்டு வகைகள், எள் உருண்டை, கடலை
உருண்டை, இலந்தை அடை, நெய்விளங்கா, கெட்டி உருண்டை உள்ளிட்ட
பலகாரங்களும் உணவுகளும் நம்மிடம் கொட்டிக்கிடந்த காலம் அது.
இயற்கையான முறையில் விளைந்த தானியங்களும் பயிர்களும் அப்போது
நம்மிடம் இருந்தன. இயற்கையான முறையில் எண்ணெய் ஆட்டும் செக்குகள்
இருந்தன. 

எந்தப் பருவத்தில் என்ன வகையான தின்பண்டங்களை உண்ண வேண்டும்


என்ற முறையைக் கடைப்பிடிக்கத் தெரிந்த முன்னோடிகள் நம்முடன்
வாழ்ந்தார்கள். 

`பருவம் எய்தாச் சிறுமிகள் எள்ளில் செய்த பலகாரங்களை அதிகம் உண்ணக்


கூடாது. செரிமானம் குறைவாக உள்ள பிள்ளைகள் கெட்டி உருண்டையும்
கடலை உருண்டையும் அதிகம் தின்னக் கூடாது’ என்பது போன்ற
அறிவுரைகளை, அந்த முன்னோடிகள் வழங்கினார்கள். 

அந்தக் காலத்தில் நம்மிடம் தின்பண்டங்களுக்கான நிறுவனங்கள் இல்லை.


ஊட்டச்சத்துக்களுக்கான வணிக மருத்துவர்கள் இல்லை. அந்தக் காலத்தில் நம்
பிள்ளைகள் சேற்றில் இறங்கி ஆடினார்கள்; மழையில் நனைந்தார்கள்;
வெயிலில் அலைந்தார்கள். நோய்களும் இல்லை.

நீங்கள் விரும்பினால், அந்தக் காலத்தை மீ ட்டெடுக்க இயலும். இந்தச்


சூழ்நிலையில் எனக்குத் தெரிந்த வழிகள் இரண்டு. ஒன்று, நவன
ீ ஊட்டச்சத்து
வல்லுநர்களிடம் கேள்விகளை எழுப்பி, தெளிவு பெறுவது. இன்னொன்று, நன்றாக
வாழ்ந்த காலத்தை நோக்கிப் பயணிப்பது. உங்களுக்குப் பகுத்தறிவு உள்ளது.
நீங்களே சுயமாக முடிவு எடுக்கலாம்.
- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 19
ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி ஓவியங்கள்: ஹாசிப்கான்

எல்லாம் வல்ல இறைக்கு எனத் தனி உருவம் இல்லை. எல்லா உருவங் களும்
இறையின் வெளிப்பாடுகள் தான். இறைவன் அல்லது இறைவி மனித உருவில்
தோன்றியதாகக் கூறப்படும் சேதிகள், புராணங்கள் எல்லா சமூகங்களிலும்
உள்ளன. ‘நன்மையைக் காக்கவும் தீமையை அழிக்கவும்’ மனித உருவெடுத்து
வருவது இறையின் குணம் என்பதுதான் இவ்வாறான சேதிகளின் பின்னால்
இருக்கும் கருத்து. தீபாவளி எனும் விழா, தமிழர் மரபில் இருந்ததற்கான
தடயங்கள் இல்லை. ஆனாலும், இவ்விழாவின் நாயகரான திருமால் வழிபாடு,
தமிழ் மரபில் மிகத் தொன்மையானது.

திருமால் எனும் பெயர் பிற்காலத்தில் சூட்டப்பட்டது. ஏறத்தாழ 2,500


ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் பரிபாடல் எனும் சங்க இலக்கியத்
தொகுப்பில், மாயோன் எனும் பெயரால் திருமால் போற்றப்பட்டுள்ளார். 

அதே பரிபாடலில்தான் செவ்வேள் எனும் பெயரில் முருகன் வழிபாடும் மிகச்


சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இறையின் உருவங்களும் வடிவங்களும்
கால ஓட்டத்தில் மாறிக்கொண்டுள்ளன. ஆனால், இறைச் செயல்களில் மாற்றம்
இல்லை. 

திருமால் எனும் இறைவடிவத்தின் சிறப்பு இயல்பு, ‘காத்தல்’ தொழில் செய்வது.


உயிர்களின் அமைதியான வாழ்வுக்கு எதிராக இருக்கும் அனைத்தையும்
அழிப்பது திருமால் எனும் இறைவடிவின் குணம். இந்தப் பணிக்காகப் பல்வேறு
உயிர் வடிவங்களில் திருமால் தோன்றியதை அவதாரம் என்றழைத்தனர்.
‘தீமைகள் மிகும்போது எல்லாம் நான் உருவெடுத்து வந்து அவற்றை
அழிப்பேன்’ என்பது கீ தையில் கண்ணன் அளித்த வாக்குறுதி. 

நரகாசுரனுடன் போர் புரிந்தபோது, கண்ணனுக்குத் தேரோட்டியாக வந்தவர்


அவரது மனைவி சத்யபாமா. முற்பிறவித் தொடர்பின்படி, சத்யபாமா என்பவர்
நரகாசுரனின் தாய். `என் அன்னையால் மட்டுமே என் உயிரைப் பறிக்க முடியும்’
என்ற வரத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றவர் நரகாசுரன். கண்ணன்
நடத்திய போரிலும் நரகாசுரனை எளிதில் வெல்ல இயலவில்லை. கண்ணன்
சோர்வடைந்து மயங்கிய வேளையில், நரகாசுரன் மீ து தாக்குதல் தொடுத்து
வழ்த்தியவர்
ீ தேரோட்டியாக வந்த சத்யபாமாதான். கொற்றவை, காளி ஆகிய
தெய்வங்களும் இவ்வாறான அழிப்புச் செயல்களுக்கான இறைவடிவங்களே. 

பூமி எனும் நிலமகளின் குறியீடுதான் காளி, கொற்றவை, பாமா ஆகிய தெய்வ


வடிவங்கள். நிலமகளாகிய தாய் தனக்குள் வாழும் உயிரினங்களின் வாழ்வைச்
சிதைக்கும் எவரையும் அழிக்கிறாள் என்பது நமது தொன்மங்களின் கருத்து.
மனிதர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு உயிரினங்களும் நிம்மதியாக
வாழவியலாத சூழல் இப்போது பூமியில் நிலவுகிறது. ஐம்பூதங்களில் காற்று, நீர்,
நிலம் ஆகிய  மூன்றும் நஞ்சாகிக் கொண்டுள்ளன. இந்த மூன்றும் மிக
மோசமான பொருளாதாரச் சுழலிலும் சிக்கியுள்ளன. சென்னை, கடலூர், கோவை,
தூத்துக்குடி ஆகிய நான்கு நகரங்களும் உயிர்க் காற்று சீரழிந்த பகுதிகள்.
பெங்களூருவில் வசும்
ீ காற்றில் கரியமிலம் மிகுந்து அங்கே வசிக்கும் மக்களில்
கணிசமானோர் நுரையீரல் நோயாளிகளாகி உள்ளனர். சென்னை, கடலூர் ஆகிய
இரு நகரங்களில் தோல் நோயாளிகளின் எண்ணிக்கையை எவராலும்
கணிக்கவே இயலாது. அந்த அளவுக்குச் சூழல் நாசம் அடைந்துவிட்டது.

ஓர் ஆய்வு முடிவை உங்கள் முன்வைத்தால் நிலைமையின் தீவிரம் புரியும்.


கடந்த ஆண்டு சென்னையில் பெய்த மழை நீரின் மாதிரியைச் சோதனைக்கு
அனுப்பினோம். மழை நீர்தான் அமுதம் என்றார் ஆசான் திருவள்ளுவர்.
மழைநீரில் இருந்துதான் உயிர்கள் உற்பத்தியாகின்றன. மழைநீர்தான்
உயிர்களுக்குத் தேவையான சத்துகளையும் நோய் எதிர்ப்பு ஆற்றல்களையும்
தாங்கிவருகிறது. அந்த மழைநீரை ஆய்வுக்கு அனுப்பியபோது, ‘இது குடிநீராகத்
தகுதியற்ற நீர்’ என்ற முடிவு ஆய்வகத்தில் இருந்து எங்களுக்கு வந்தது.
‘கரிமத்தில் (carbon) உயிர் வாழக்கூடிய சில்லுயிரிகள் (microorganisms) மழை
நீரில் பெருகிவிட்டன’ என்பதுதான் காரணம். 

வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட நவன


ீ சாதனைகளின் புகையில்
இருந்து வெளியாகும் கரியமிலக் காற்றின் அளவு இப்போது அபாயக் கட்டத்தில்
உள்ளது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மேலே உள்ள
வளிமண்டலம் (atmosphere) கரிமங்களின் கடல்போல் மாறியுள்ளது. 

இயற்கையான செயல்பாடுகளின் வழியாக கரிமக் காற்று வெளியேறினால்,


தாவரங்கள் அந்தக் காற்றை உட்கொண்டு உயிர்க் காற்றை வெளியிடுகின்றன.
தாவரங்கள் மட்டும் அல்லாமல் நம்மைச் சுற்றிலும் வாழும் கோடானுகோடி
ஒரு செல் உயிரிகளும் நமக்கான தூய காற்றை உருவாக்கித் தருகின்றன.
இவற்றைக் காட்டிலும் அதிகமாக, பூமியில் உள்ள கடல் நீர் கரிமக் காற்றை
உள்ளிழுத்து, உயிர்க் காற்றை வெளியே தள்ளிக்கொண்டுள்ளது. 

இவை யாவும் இயற்கையான கரிமங்களுக்குத்தான் பொருந்தும். அதாவது நமது


மூச்சுக் காற்று, இயற்கைப் பொருட்களின் நெருப்பில் இருந்து வெளியாகும்
புகை, எரிமலைப் புகை போன்றவற்றை தாவரங்களும், ஒரு செல் உயிரிகளும்
கடல் நீரும் சுத்திகரித்துவிடும். இப்போது வெளியாகும் கரிமங்கள் இந்த
நிலைக்கு நேர் எதிரானவை. இவை அனைத்தும் செயற்கையான
வேதிப்பொருட்களை உள்ளடக்கியவை என்பதால், பூமியின் பாதுகாப்புக்
கவசங்கள் செயல் இழந்துவருகின்றன. இதனால், நமது வளிமண்டலம்
சுத்திகரிக்கப்படாத கரிமங்களால் நிரம்பி வழிந்துவருகிறது. 

மழை நீர் கீ ழே விழும்போது, வளிமண்டலத்தில் உள்ள கரிமங் களைத்


தனக்குள் இழுத்துக்கொண்டு வந்து சேர்கிறது. இதன் விளைவாக, பூமியின்
உயிரின வகைகளில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டுள்ளது.
கரிமங்களை உணவாகக்கொண்டு வாழும் ஒரு செல் உயிரிகள் இப்போது
அதிகரித்துள்ளன.

ஓர் உடலில் கரிமங்களை உணவாகக் கொள்ளும் செல்களின் எண்ணிக்கை


அதிகரித்தால், அந்த உடல், புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு மிக
அதிகம். நமது உடலில் கரிமங்களின் அளவு இயற்கை விதிகளுக்குப் புறம்பாக
அதிகரிக்கக் கூடாது. பிழையான உணவுப் பழக்கங்கள், பல்வேறு வேதிப்
பொருட்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்கள், வேதி மருந்துகள் மற்றும் சில
பழக்கங்களின் வழியாக உடலில் கரிமம் மிகுந்துவிடுகிறது. இந்தக் கரிமத்தை
உணவாக்கிக்கொள்வதற்காக சில்லுயிரிகள் உற்பத்தியாகின்றன. நாளடைவில்,
கரிமத்தின் அளவு குறைந்தால், அந்தச் சில்லுயிரிகளும் மறைந்துவிடும். மாறாக,
கரிமத்தின் அளவு கூடிக்கொண்டே போனால் அவற்றில் பெருகும்
சில்லுயிரிகளும் அதிகரிக்கும். இதுதான் தீவிரமான நோய்களின் மூலம்.

உடலில் நிகழும் அனைத்தும் பூமியில் நிகழும். ‘அண்டமே பிண்டம்’ என்றார்


நம் ஆசான் திருமூலர். 
`சென்னை மழை நீரில் கரிமச் சில்லுயிரிகள் மிகையாக இருப்பதாக’
எங்களுக்குக் கிடைத்த ஆய்வறிக்கை கூறியது. தொழில் வளர்ச்சி அடைந்த
எல்லா பகுதிகளிலும் இதுதான் நிலைமை. ஏற்கெனவே குடிநீரில் பல்வேறு
வேதி நஞ்சுகளைக் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மழை நீர்
மட்டும்தான் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. அந்த மழைநீரிலும் கரிமச்
சில்லுயிரிகள் அதிகரித்துவிட்ட நிலையில், நோயற்ற வாழ்வை வாழ்வது
கனவாகுமோ என்ற கவலை என் போன்றோருக்கு அதிகரித்துள்ளது. இப்போதும்
மழைநீர் சேகரிப்புதான் நமக்கான தீர்வு என்பதில் ஐயம் வேண்டாம். மழை
நீரைச் சேமிக்கும்போதே சில பாதுகாப்புகளைச் செய்து வடிகட்டினால், நன்ன ீர்
கிடைக்கும். நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக அந்த ஆய்வைப்
பற்றி குறிப்பிட்டேன்.

ஐம்பூதங்களின் செயல்பாட்டில் ஒரு கணக்கு உண்டு. காற்று சீர்கெட்டால், நீர்


சீரழியும். நீரின் கேடுகள், நிலத்தைச் சிதைக்கும். நிலம் கெட்டால், நீர் கெடும்.
நீரின் கேடுகள், காற்றைப் பாதிக்கும். இப்போது நவன
ீ சமூகம் நேரடியாக
காற்றையும் நிலத்தையும் நாசம் செய்துவருகிறது. 

இந்தப் பூமியில் கொட்டப்படும் நெகிழிக் கழிவுகள், நதிகளில் கலக்கப்படும்


வேதிப் பொருட்கள், கடலில் கலக்கும் அணுக்கழிவுகள், வளிமண்டலத்தையே
கரிமக் கடலாக்கிவிட்ட நச்சுப் புகைகள், வெட்டிச் சாய்க்கப்படும் மரங்கள்,
குண்டுகளால் தகர்க்கப்படும் மலைகள் என ஐம்பூதங்களின் மீ து நவன

மனிதர்கள் நடத்திவரும் போர் ஈவிரக்கமற்ற நிலைக்குச் சென்றுள்ளது. 

இவற்றை எல்லாம் நிலமாகிய காளி ஒரே நாளில் சரிசெய்துவிடுவாள். ஆனால்,


அந்தப் பணியில் அவள் ஈடுபடும்போது ஏற்படும் அழிவுகளை
மனிதகுலத்தினால் தாங்க இயலாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாகியுள்ள
நிலநடுக்கங்கள், வெடித்த எரிமலைகள், கொந்தளித்த ஆழிப்பேரலைகள்
ஆகியவற்றின் எண்ணிக்கையை இணையத்தில் தேடுங்கள். புவி எங்கும்
பெய்துவரும் பெருமழைகளையும், வசும்
ீ புயல்களையும்கூட பட்டியலிடுங்கள்.
இதற்கு முன், பூமி இவ்வாறு சீற்றம் கொண்டது இல்லை. 

பணம், புகழ் ஆகிய இரண்டே இரண்டு பேராசைகளுக்காக பூமியின்


இயக்கத்தையே மாற்றிவரும் நவன
ீ அரக்கர்களுக்கு நரகாசுரர்கள் என்றும்
பெயர் சூட்டலாம். இவ்வாறான கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவோருக்கு,
கண்ணன் என்றும் சத்யபாமா என்றும் பெயரிடலாம். பெயர்களும் வடிவங்களும்
காலத்துக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப மாறத்தக்கவை. ஆனால், உயிர்களைக்
காப்பதற்காக நல்லவர்கள் போரிட வேண்டும் என்ற கருத்து எக்காலத்துக்கும்
மாறுவது இல்லை. 

தீபாவளியின் பேரால், அளவுக்கு அதிகமான ஆடைகளை வாங்கும்போது,


நொய்யல் எனும் நதியின் மரணம் உங்களுக்கு நினைவில் வரவேண்டும்.
ஆடைத் தொழிற்சாலைகளின் கழிவு நீராலும், செல்வாக்குமிக்கவர்களின்
வளைப்புகளாலும் கண்ணெதிரே காணாமல் போன நதி அது. காவிரி நீரில்
அன்றாடம் கலக்கப்படும் ஆடைத் தொழிற்சாலைக் கழிவுகளைப் புத்தாடை
உடுத்தும்போது எல்லாம் மனதில் கொள்ளுங்கள். தமிழக எல்லைக்கும் மேலே
உள்ள மலைகளுக்குச் சென்று, காவிரி நதியின் கண்ணாடி போன்ற தெளிவில்
முகம் பார்த்துப் புரண்டு விளையாடுபவன் நான். அதே நதி, ஈரோட்டில் கறுப்பு
வண்ணத்தில் மாற்றம் அடைகிறது.

பட்டாசுகள், புத்தாடைகள் ஆகிய இரண்டும் இப்போதைய சூழலில்


நன்மைகளைவிட தீமைகள் கூடுதலாக உள்ள பொருட்கள்தான். ஆனால்,
தீமையை அழித்த நாளில் இந்த இரண்டு பொருட்களும்தான் சமூகம்
முழுமையையும் ஆட்கொள்கின்றன. 

தீபாவளி எனும் விழாவைக் காட்டிலும் அந்த விழாவின் பின்னால் இருக்கும்


கருத்தை நான் மதிக்கிறேன். உங்களுக்கும் இவ்வாறான புரிதல் இருந்தால்,
தீபாவளியை புவியைச் சீரழிக்காத வகையில் கொண்டாடுங்கள். தேவைக்கு
அதிகமாக ஆடைகள் வாங்காதிருங்கள். இயன்றவரை பட்டாசுகளைத்
தவிர்த்திடுங்கள். பட்டாசுப் புகையும் வாகனப் புகையும் அதிகரித்த பின்னர்,
ஈசல்கள் அழிந்துவிட்டன. ஈசல்களை உணவாக்கும் பல்வேறு சிறு
பறவையினங்கள் குறைந்துவிட்டன. 

தீபாவளி என்பதே, மரணத்தைக் கொண்டாடும் நிகழ்வுதான். அந்த


விழாவின்போது இப்போதைய சமூகம், நதிகளின் மரணத்தையும் பல்வேறு
உயிரினங்களின் மரணத்தையும் கொண்டாடு வதாகத்தான் நான் நினைக்கிறேன்.
தீபாவளி எனும் தொன்ம நிகழ்வின் பின்னால் உள்ள நற்சேதிகளை எல்லாம்
மறைத்து, வெற்றுக் கூச்சலுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்குமான நிகழ்வாக
அதை மாற்றிவைத்துள்ளன வணிக நிறுவனங்கள்.
உங்களுக்கு உண்மையிலேயே கண்ணன் மீ தும் சத்யபாமா மீ தும் நம்பிக்கையும்
பற்றும் இருந்தால், தீபாவளி நாளை தீமைகளுக்கு எதிராகக் கொண்டாடுங்கள்.
தர்க்கபூர்வமான காரணங்களைக் கூறி, தீபாவளியை நிராகரிக்கும்
நாத்திகர்கள்தான் உண்மையிலேயே அந்த நாளில் தீமைகளுக்கு எதிராகச்
செயல்படுகிறார்கள் என நம்புகிறேன். அவர்கள் பட்டாசு வெடிப்பது இல்லை;
ஆடை வாங்குவது இல்லை. 

மிகக் குறைவாக ஆடைகளில் செலவிடுங்கள்; பட்டாசுகளைத் தவிர்க்க முயற்சி


செய்யுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, வடுகளில்
ீ சமைத்த பலகாரங்களை
மட்டும் உட்கொள்ளுங்கள்.
கடவுள் மனிதராகப் பிறப்பதைக் காட்டிலும், மனிதர்கள் கடவுளாக மாறுவது
எளிதான செயல்!

 - திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 20
ம.செந்தமிழன், படம்: சி.சுரேஷ் பாபு

வாழும் உரிமை, ஒவ்வோர் உயிருக்கும் உண்டு. உயிர் வாழ்வதும், நலமாக


வாழ்வதும் அரசுகள் அளிக்கும் சலுகைகளால் அல்ல. நல்ல வாழ்க்கை
வேண்டும் என்பதற்காக, நாம்தான் அரசுகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
நலமான வாழ்க்கை, சரியான உணவு, தரமான சூழல் ஆகிய மூன்றும்
நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் அல்ல. நாம்தான் அந்த நிறுவனங்களை
வாழவைத்துவருகிறோம். எல்லா அண்டங்களையும் படைத்த பேராற்றலால்தான்
நாமும் படைக்கப்பட்டுள்ளோம். எவருடைய கருணையிலும் நாம் வாழவில்லை,
எவருடைய கண்டுபிடிப்புகளாலும் நாம் மூச்சுவிடுவது இல்லை.

`முதலில், உங்களை தனி உயிராக உணரத் தொடங்குங்கள்’ என்ற கருத்தை


உங்களிடம் பதிவுசெய்ய விரும்புகிறேன். மனிதர்களைத் தவிர மற்ற எல்லா
உயிர்களும் இவ்வாறுதான் சுதந்திரமாக வாழ்கின்றன. நவன
ீ மனிதர்களின்
பெரும் பகுதியினர் இந்தச் சுதந்திரத்தை முற்றிலும் இழந்து நிற்கின்றனர்.
இதைக் காட்டிலும் மோசமான அடிமைத்தனம் வரலாற்றின்
முன்பகுதிகளில்கூட நிலவவில்லை.

ஒரு கவளம் சோறு உங்கள் வயிற்றுக்குள் நுழைவதற்குக் கூட, பன்னாட்டு


நிறுவனங்களுக்குக் கப்பம் செலுத்த வேண்டியுள்ளது. நவன
ீ விவசாயிகளால்,
தமக்கான விதைகளைக்கூட சொந்தமாகச் சேர்த்துவைக்க முடிய வில்லை.
விதைப்பில் தொடங்கி, பராமரிப்பு, அறுவடை, சேகரிப்பு, விற்பனை வரையில்
நஞ்சுக்களின் ஆதிக்கம் மிகுந்த செயல்முறைகள் எல்லா உணவுகளிலும்
இருக்கின்றன.

ஒருவர் இன்று எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு செல்வம்


வைத்திருந்தாலும், அதிகாரம் படைத்திருந் தாலும், மருத்துவமனைகள்,
மருந்துகள் துணையுடன்தான் இருக்கிறார். என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு
சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எப்போது படுக்க வேண்டும்,
எப்போது மலம் கழிக்கலாம், சிறுநீர் கழிக்கலாம் போன்ற முடிவுகளை எல்லாம்
மருத்துவர்களிடம் ஒப்படைத்த மனிதர்கள், உங்களைச் சுற்றிலும் இருப்பதைக்
கவனியுங்கள். 

உறங்குவதற்கு மாத்திரை, உடலுறவுக்கு மாத்திரை, பசிக்கு மாத்திரை, உணவு


செரிக்க மாத்திரை, வாந்தியைத் தடுக்க மாத்திரை, மலம் கழிக்கவும் மருந்து,
மலத்தை இறுகச்செய்யவும் மருந்து, மாதவிலக்கு வெளியாக ஊசி, மாதவிலக்கு
உதிரத்தை அடைத்துவைக்க ஊசி என, எல்லாம் மருந்துமயம் ஆகியதை
உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இப்போதைய மனிதர்கள், பழம் சாப்பிட
அஞ்சுகிறார்கள்; மாத்திரைகளை கவலையே இல்லாமல் விழுங்குகிறார்கள்.
மனிதகுல வரலாற்றில் இந்த மாதிரியான அவலச் சூழல் நிலவியதே இல்லை.
வாழ்க்கையை வாழும் சுதந்திரத்தின் மீ து உங்களுக்கு விருப்பம் வேண்டும். நம்
அனைவருக்குமான நல்ல உணவு இங்கே படைக்கப்பட்டுள்ளது. நம்
அனைவருக்குமான நோய் எதிர்ப்பாற்றல், அந்த உணவுகளிலும் நம்மைச் சுற்றி
வாழும் சக உயிர்களிலும் பொதிக்கப் பட்டுள்ளது. தாவரங்களின் மூச்சுதான்
நமக்கு உயிர்க் காற்று. கடல்களின் சுவாசம்தான் பூமிக்கான உயிர்க் காற்றையும்
மழையையும் உற்பத்தி செய்கிறது. நமக்கான நீர், வானில் இருந்து எல்லா
சத்துக்களையும் உள்ளடக்கி வந்து விழுகிறது. இவை போதும் நமக்கு. 

இவ்வாறான கருத்துக்களைப் படிக்கும்போது எல்லாம் நவனர்களின்



சிந்தனையில் ஒரு மாயத் தகவல் வந்து அமர்கிறது. அந்த மாயக் கருத்துதான்
கடந்த நூற்றாண்டின் பாவங்களை எல்லாம் ஆகச்சிறந்த புண்ணியங்கள் என
நம்பவைக்கிறது. `நவன
ீ அறிவியல் மற்றும் மருத்துவத்தினால்தான்
மனிதர்களின் ஆயுள் அதிகரித்துள்ளது’ என்பதுதான் அந்த மாயக் கருத்து.

`சான்றுகளின் அடிப்படையிலான முடிவு’ (Evidence based decision) என்ற


வாசகத்தை நவன
ீ மேதைகள் எல்லா துறைகளிலும் பரவவிட்டிருக்கிறார்கள்.
மரபுவழிப்பட்ட எந்தக் கருத்தை முன்வைத்தாலும் ‘இதற்கெல்லாம் சான்றுகள்
இருக்கின்றனவா?’ எனக் கேட்பது அவர்களது பகுத்தறிவுப் பண்பு. `நவனக்

கொள்கைகளால்தான் மனிதர்களின் ஆயுள் அதிகரித்துள்ளது’ என்ற மாயக்
கருத்தையும் அவர்கள் ஒரு புள்ளிவிவரத்தால் நிறுவிக்கொண்டுள்ளர். இந்தப்
புள்ளிவிவரத்தை நீங்கள் நிச்சயமாகக் கடந்து வந்திருப்பீர்கள். ஏனெனில், இந்தப்
புள்ளிவிவரத்தை வைத்துத்தான் அவர்கள் தமது வெறியாட்டங்களை எல்லாம்
வெற்றிகரமாக நிகழ்த்திக்கொண்டுள்ளனர்.

`இந்தியாவில் 1960-ம் ஆண்டு மனிதர்களின் சராசரி ஆயுள் 40. 2016-ம் ஆண்டு,


சராசரி ஆயுள் 68.’ 

அதாவது கடந்த 56 ஆண்டுகளில் நமது சந்ததியினரின் ஆயுளை ஏறத்தாழ 28


ஆண்டுகளுக்கு உயர்த்தி இருக்கிறார்கள் நவன
ீ மேதைகள். இந்தப்
புள்ளிவிவரத்தின் மீ து ஒரே ஒரு கேள்விகூட கேட்காமல் படித்த சமூகம்
ஏற்றுக்கொண்டுள்ளது. 

நாம் உண்மையான அறிவை நாடுவோம். `எப்பொருளை எவர் கூறினாலும்


அப்பொருளில் மெய்ப்பொருளைத் தேடுவதற்குப் பெயர்தான் அறிவு’ என்ற
திருவள்ளுவரின் வழி நின்று இந்தத் தகவலைப் பார்ப்போம்.

ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு, உங்கள் பெற்றோர், பாட்டன் – பாட்டி, உங்கள்


சொந்த ஊரில் வாழ்ந்த முதியோர் பெயர்களை எல்லாம் எழுதுங்கள். நினைவில்
உள்ள எவரையும் விட்டுவிடாமல் அனைவரது பெயர்களையும் எழுதுங்கள்.
இந்தப் பட்டியலில், இறந்துபோனவர்கள் பெயர்களை மட்டும் அடிக்கோடிட்டுக்
கொள்ளுங்கள். அந்தப் பெயர்களுக்கும் அருகே, அவர்கள் இறக்கும் போது என்ன
வயது என்பதைக் குறிப்பிடுங்கள். நவன
ீ மேதைகளின் மாயக் கருத்தின்படி,
உங்கள் பட்டியலில் 40 வயதில் இறந்தோர் எண்ணிக்கைதான் மிகையாக
இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா எனப் பாருங்கள்.

அடுத்ததாகச் செய்யவேண்டியதுதான் நமது மெய்யறிவு நாடுதலின்


முக்கியமான செயல். உங்கள் பட்டியலில் உள்ள இறந்தோர் பெயர்களின் கீ ழே,
அவர்களுடைய இறப்புச் சான்றிதழ் (Death Certificate) பதிவு எண்ணைக்
குறிப்பிடுங்கள். 

1960-ம் ஆண்டும் அதற்கு முன்னரும் இறந்தோரின் பெயர்களோடு அவர்களது


இறப்புச் சான்றிதழை இணைப்பது எளிதில் இயலாத செயல். ஏனெனில், அந்தக்
காலத்தில் கிராமங்களில் இறந்தோருக்கு இறப்புச் சான்றிதழ் பெறும் வழக்கமே
இல்லை. வெகுசிலர் விதிவிலக்காக அந்தச் சான்றிதழை வாங்கினர்.
அவர்களிலும் பெரும்பாலானோர் அரசின் நலத்திட்டங்களுக்காக மட்டுமே
சான்றிதழ் பெற்றனர். இயற்கையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து,
நவனத்தின்
ீ சாயல் இல்லாமல் வாழ்ந்த நமது முன்னோரில் எவருக்கு இறப்புச்
சான்றிதழ் உள்ளது?

குடும்ப அட்டைகளைக்கூட வாங்காமல் வாழ்ந்தவர்கள் அந்தக் காலத்தில்தான்


அதிகம் இருந்தனர். எந்த மானியமும் வேண்டாம், இலவசமும் வேண்டாம் என்ற
மரபுத் திமிருடன் வாழ்ந்த சமூகம் நம்முடையது என்பதை
நினைவில்கொள்ளுங்கள். அரசாங்கத்தின் பதிவுகளுக்குள்ளேயே வராத மக்கள்
மிகுதியாக வாழ்ந்த காலம் அது. குழந்தை பிறந்ததும் ‘பிறப்புச் சான்றிதழ்’
வாங்குவதும், மரணத்தின் போது ‘இறப்புச் சான்றிதழ்’ வாங்குவதும் இந்தக்
காலச் சமூகத்தின் நடைமுறைகள். ஏனெனில், இப்போது பிள்ளைகள் பிறப்பதும்
மருத்துவமனைகளில், மரணங்கள் நிகழ்வதும் மருத்துவமனைகளில்
என்றாகிவிட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த நாட்டில் எத்தனை மருத்துவமனைகள்


இருந்தன? அந்தக் காலத்தில் பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கையை
முழுமையாக அரசுப் பதிவுகளுக்குள் கொண்டுவர இயலவில்லை. எந்தப்
பதிவுகளிலும் வராத மக்கள் அதிகமாக இருந்த காலத்தில், `சராசரி ஆயுள் 40
ஆண்டுகள்தான்’ எனக் கூறுவதற்கு துணிச்சல் வேண்டும். நவன
ீ மேதைகளின்
துணிவுக்கு எல்லையே இல்லை.

நான் ஊகம் செய்து எழுதவில்லை. நேரடியாகவே கேட்கிறேன், நீங்களும்


நேரடியான கேள்விகளை எழுப்புங்கள். `எனது ஊர் ஆச்சாம்பட்டி. கடந்த 1960
முதல் 2015 வரையிலான காலத்தில் என் ஊரில் வாழ்ந்து மறைந்த
மனிதர்களின் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வேண்டும்’ என அரசிடம்
முறையிட்டால், என்ன நடக்கும்? இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்தோர்
அனைவரின் சான்றிதழ்களையும் அதிகாரிகள் முன்வைப்பார்களா என்ன?
அவ்வாறான சான்றுகளே இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை.

பல இடங்களில், விளைநிலங்களை விற்பனை செய்வதற்கு முன்னர், நிலத்தின்


உரிமையாளர் பெயரைப் பார்த்தால், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்
பெயர் இருக்கிறது. அவரது பெயரை மாற்றி, அந்த நிலத்தின் உரிமையாளர்களாக
அவரது பிள்ளைகள் பெயர்களைச் சேர்ப்பதற்கு ஏராளமான நடைமுறைகள்
உள்ளன. பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங் களிலும்
சென்று பாருங்கள். முன்னோர்களின் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான
கூட்டம் அலைமோதுகிறது. ஏனெனில், எவருக்கும் இறப்புச் சான்றிதழ் இல்லை.
அவ்வாறான நடைமுறை அந்தக் காலத்தில் இல்லை.

இறப்புச் சான்றிதழே அதிகம் இல்லாத காலத்தில், மக்களின் ஆயுள்காலம்


எத்தனை ஆண்டுகளாக இருந்தது எனக் கூறுகிறார்களே, இவர்களது பகுத்தறிவு
எவ்வளவு மேன்மையானது. `சராசரி ஆயுள் காலத்தை நாங்கள்தான்
உயர்த்திக்கொண்டுள்ளோம்’ எனக் கூறும் அனைவரும், அந்தக் கருத்தை
நிறுவுவதற்கான சான்றுகளை முன்வைக்க வேண்டும் அல்லவா? 

நவனப்
ீ பகுத்தறிவாளர்களுக்கும் நவனச்
ீ சிந்தனையாளர்களுக்கும் இறை
நம்பிக்கையின் மீ து வெறுப்பு உண்டு. ‘உங்கள் இறையியல் கருத்துக்கள்
எல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான். அவற்றுக்கு என சான்றுகள் இல்லை’
என்பார்கள். இறையியலில் ஊறித்திளைத்த நமது மரபின்வழி நின்று
அவர்களிடம் நாம் கேட்போம், ‘நவனத்தினால்தான்
ீ மனிதர்களின் ஆயுள்
அதிகரித்துள்ளது என்கிறீர்களே… இந்தக் கருத்து அறிவியலா அல்லது
நம்பிக்கையா? அறிவியல் தான் என்றால், அதற்கான சான்றுகளைக்
காட்டுங்கள்!’ 

சராசரி ஆயுள் குறித்த அவர்களது கருத்து முழுக்க முழுக்க நம்பிக்கையின்


அடிப்படை யிலானது. நிச்சயமாக அவர்களிடம் இதற்கான சான்று ஆதாரங்கள்
இல்லை. ஆனாலும் அவர்களால் எப்படி இவ்வளவு அழுத்தமாகப் பேசவும்
எழுதவும் முடிகிறது என்றால், இந்த 50 ஆண்டு காலத்தில் நமது சமூகம்
அவர்களிடம் ஒருமுறைகூட கேள்வி கேட்கவில்லை என்பது தான் காரணம்.
ஏதேனும் ஒரு புள்ளிவிவரத்தை முன்வைத்தால், அதை அப்படியே நம்பிவிடும்
மூடநம்பிக்கையைத்தான் நவனம்
ீ வளர்த்துள்ளது. 

காடுகளில் 90 வயதில் மாடு மேய்க்கும் மனிதர்களையும், 80 வயதில் மலை


ஏறும் மூதாட்டிகளையும் நான் காண்கிறேன். இன்னும் நவனம்
ீ சென்றடையாத
கிராமங்களில் இவ்வாறான மனிதர்களை உங்களாலும் எளிதில் காண இயலும்.
மாநகரங்களில் பிறக்கும் குழந்தைகூட மூச்சுத்திணறித் தவிக்கிறது. இங்கே
வாழும் முதியோரில் பெரும்பகுதியினர் மாத்திரைகளையும்
மருத்துவமனைகளையும் நம்பி வாழ்கிறார்கள்.

மாநகரங்களின் பேரிரைச்சலில் மருத்துவ மனைகளில் தயாராகும் இறப்புச்


சான்றிதழில் அச்சு இயந்திரங்களின் ஓசையும் கலந்திருக்கிறது. வட்டுக்கு
ீ வடு

இப்போது பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் இருக்கின்றன; மருந்துகள்
உள்ளன; ஆயுள்காலம் குறித்த புள்ளிவிவரங்கள் உள்ளன. அங்கு எல்லாம்
நிம்மதியாக நீண்ட ஆயுளுடன் வாழும் மனிதர்களைக் காணவில்லை.

நவனத்தின்
ீ தாக்குதல்களுக்கு முந்தைய நமது சமூகங்களில், எந்தச்
சான்றிதழும் இல்லை; நோய்களும் இல்லை. நமது முன்னோர், மரபுவழிப்பட்ட
உணவுப்பழக்கங்களையும் மரபு மருத்துவமுறைகளையும் கற்றவர்கள். 

இந்தக் காலச் சமூகம் இவை இரண்டையும் வசிவிட்டு,


ீ போலித்தனமான
அறிக்கைகளைக் கட்டிப்பிடித்தவாறு உறங்கச் செல்கிறது. `நான் சுதந்திரமான
மனிதராக வாழ வேண்டும். எந்த மருந்துக்கும் எந்த நிறுவனத்தின் உணவுக்கும்
ஆய்வறிக்கைகளுக்கும் நான் அடிமை இல்லை’ என்ற கருத்தை மனதில்
பதித்துக்கொள்ளுங்கள். இந்தக் கருத்தின் மீ தான விருப்பம், உங்களை விடுதலை
செய்யும்.

- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 21
படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்

உண்மைக்கும் பொய்மைக்குமான வேறுபாட்டைக் காண்பது மிக எளிது. எது


எளிமையாகவும் அமைதியாகவும் இருக்கிறதோ, அது உண்மையின்
உறுபொருள். எவை எல்லாம் பகட்டுகளிலும் ஆரவாரங்களிலும் தம்மை
வெளிப்படுத்திக்கொள்கின்றனவோ, அவை பொய்மையின் வெளிப்பாடுகள். 

இந்தப் பேரண்டத்தில் உண்மை ஒன்றே ஒன்றுதான். `படைக்கப்படும் யாவும்


காக்கப்படும்; காக்கப்படும் யாவும் நீக்கவும் படும்’. பொய்மையோ, பல
பரிமாணங்களைக்கொண்டது. ‘நான்தான் உன்னை உருவாக்குகிறேன். நானே
உன்னைக் காக்கிறேன். நானே உன்னை அழியாமல் பாதுகாப்பேன். நீ
என்னைத்தான் நம்ப வேண்டும். என்னைத் தவிர, உனக்கு வேறு கதி இல்லை.
என்னைக் காட்டிலும் மேலான ஆற்றல் ஏதும் இல்லை’ போன்ற கருத்துக்கள்
எல்லாம் பல்வேறு துறைகளில் பொய்மையை வசி
ீ விளையாடும் வாசகங்கள்.
நவன
ீ மருத்துவத் துறைக்கு, மேற்கண்ட வாசகங்கள் மிகவும்
பொருத்தமானவை என்பது என் கருத்து. பூமியின் எல்லா பகுதிகளிலும்
அந்தந்தப் பகுதிகளுக்கான மருத்துவ முறைகள் இருக்கின்றன. சில
நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை, மருத்துவம் என்பது எல்லா சமூகங்களிலும்
உள்ள சமயங்களின் ஒரு பிரிவாகத்தான் இருந்தது. அந்தக் காலத்தில்,
எகிப்திலும் கிரேக்கத்திலும் மருத்துவர்களை மக்கள் சந்திக்க வேண்டுமானால்,
ஆலயங்களுக்குத்தான் செல்லவேண்டியிருந்தது. இந்தியாவின் பல்வேறு
பகுதிகளிலும் இதுதான் நிலைமை. குறிப்பாக, நம் தமிழர் மரபில் மருத்துவம்
என்பது இறையியலாளர்களின் பணிகளில் ஒன்றாகத்தான் இருந்தது.

இயேசு, நபிகள் நாயகம் போன்றோரும் மருத்துவத்தின் வழியாகத்தான்


மக்களைச் சந்தித்தார்கள். எல்லா சித்தர்களும் ஆழ்வார்களும் மருத்துவம்
அறிந்தவர்கள்தான். திருஞானசம்பந்தர், ‘மந்திரம் ஆவது நீ று...’ எனப் பாடியவாறு
பாண்டிய மன்னனுக்கு மருத்துவம் பார்த்தார். வள்ளலார் தமிழ் மரபின்
தொன்மையான மருத்துவக் குறிப்புகளை எல்லாம் தம் காலத்துக்கு ஏற்ப
தொகுத்துக் கடைப்பிடித்தார். மருத்துவம் என்பது, முழுக்க முழுக்க
பகுத்தறிவுவயப்பட்ட செயல் அல்ல என்பதைத்தான், உலகின் மருத்துவ
வரலாறு சொல்கிறது.

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட பேராற்றல்தான் உயிரையும்


உடலையும் காப்பதில் முன்னிலையில் உள்ளது என்பதுதான், பூமியின்
முன்னோடி மருத்துவ முறைகள் அனைத்துக்கும் அடிப்படையாக உள்ளது.

 
`நவன
ீ மருத்துவம்தான் பகுத்தறிவின் அடிப்படையில் செயல்படுகிறது. இதுவே
மனிதகுலத்தின் மீ ட்புக்கான மருத்துவ முறை’ என்ற நம்பிக்கை இப்போது
வேரூன்றிவிட்டது. மரபுவழிப்பட்ட மருத்துவமுறைகளைப் பற்றி எவரேனும்
பேசினாலோ, எழுதினாலோ, அவர்களை எல்லாம் ‘மூடநம்பிக்கையாளர்கள்
அல்லது பிற்போக்குவாதிகள்’ என முத்திரை குத்துவது நவனர்களுக்கு
ீ மிகவும்
உவப்பான விளையாட்டு. மரபு மருத்துவமுறைகளை ஆதரிப்போரை நோக்கி
கேலியான சொற்களை வசுவதும்,
ீ போகிறபோக்கில் அவமதிப்பதும் பல்வேறு
தளங்களில் இப்போதும் நிகழ்வதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
நமது மரபுவழிப்பட்ட மருத்துவ உன்னதங்களைப் பற்றி உங்களோடு
பகிர்ந்துகொள்ள நிறைய செய்திகள் உள்ளன. அவற்றுக்கு முன்னர் எந்த நவன

மருத்துவம் மரபுகளைக் கேலிசெய்கிறதோ, அந்த நவன
ீ மருத்துவத்தின்
`தந்தை’யை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். 

கிரேக்கத்தில் ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்


ஹிப்போக்ரட்ஸ் என்கிற மருத்துவர். இவரைத்தான் நவன
ீ மருத்துவ உலகம்
தமது முன்னோடி என அழைக்கிறது. நவன
ீ மருத்துவம் கற்போரின்
பாடப்புத்தகங்களில் இவர் இருக்கிறார். ஹிப்போக்ரட்ஸின் புகழ்மிக்க
வாசகங்களில் சிலவற்றை  இங்கே  பதிவு செய்கிறேன்.
‘உணவே மருந்தாகவும் மருந்தே உணவாகவும் இருக்க வேண்டும்.’

‘நமக்குள் உறையும் இயற்கை சக்திகள்தான், எல்லா நோய்களையும்


குணப்படுத்தும் உண்மையான மருத்துவர்கள்.’

‘மருத்துவர்களே... உங்களால் நன்மைசெய்ய முடியாமல்போனால் ஒன்றுமே


செய்யாமல் இருங்கள். ஏனெனில், தீமையாக ஏதேனும் செய்வதைக்காட்டிலும்
ஒன்றும் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.’

`சரியான உணவுகளையும் அவற்றுக்கு ஏற்ற உடல் உழைப்புகளையும் ஒரு


மனிதருக்குக் கற்றுக் கொடுத்துவிட்டால், அவரது உடல்நிலையைப் பாதுகாக்கும்
மிகச்சிறந்த வழியை அவருக்குக் காட்டிவிட்டதாகப் பொருள்.’
இவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான கருத்து ஒன்றையும் ஹிப்போக்ரட்ஸ்
பதிவுசெய்தார். 

`சோதிடம் பற்றிய அறிவு இல்லாத எவரையும் `மருத்துவர்' என


அழைக்காதீர்கள்’ என்றார் அவர்.

வானியலுக்கும் மனித உடல் மற்றும் மனதுக்குமான உறவு, அந்தக் காலத்தில்


இருந்த மெய்யறிவாளர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
இறையியலுக்கும் மருத்துவத்துக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை
என்பது போன்ற புனைவு இப்போது பின்னப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு
ஆதரவான சான்றுகளை மனிதகுலத்தின் வரலாற்றில் நவனர்களால்

முன்வைக்கவே இயலாது. அதேவேளை, மருத்துவப் பணிகளில் ஈடுபடாமல்,
வெறுமனே வேண்டுதலில் மட்டுமே ஈடுபடுவதை எந்த ஆதி
மருத்துவமுறையும் கடைப்பிடிப்பது இல்லை.

‘நோயாளிக்காக வேண்டுவது முக்கியமானதுதான். ஆனால், துன்பத்தில்


இருப்போருக்காகக் கடவுளை அழைக்கும்போது, மனிதர்களாகிய நீங்கள் உங்கள்
கைகளையும் நீட்டி உதவுங்கள்’ என்பதும் ஹிப்போக்ரட்ஸின் கருத்துதான்.

2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ‘மருந்து’ எனும் தலைப்பில் உடல்நலனுக்கான


அடிப்படைகளைப் பதிவுசெய்த திருவள்ளுவரும் ஆதி மருத்துவம்
அறிந்தவர்தான்.

‘நோயுற்றவர், மருத்துவர், மருந்து, நோயாளியின் அருகே இருந்து ஆறுதல்


அளிப்பவர் ஆகிய நான்கு காரணிகளும் இணைந்துதான் நோயாளியை
நலப்படுத்துகின்றன’ என்ற உண்மையை, திருக்குறள் தாங்கி நிற்கிறது. 

‘ஆதிபகவன் முதற்றே உலகு...’ என்ற கருத்தைத் தொடக்கத்திலேயே


பதிவுசெய்து, கடவுள் வாழ்த்து பாடிய திருவள்ளுவர்தான் மேலே உள்ள
கருத்தைக் கூறினார். ‘நோய் வந்தால் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். வேறு
எதுவும் செய்ய வேண்டாம்’ என அவரோ, வள்ளலார் வரையில் தோன்றிய
எந்தப் புனிதரோ கூறவில்லை. 

மரபுவழி மருத்துவம் என்பது, கடவுளை வேண்டிக்கொண்டு கிடக்கும்


மூடநம்பிக்கை அல்ல; பிரபஞ்சத்தின் இயல்பு, பூமியின் குணம், நீரின் குணம்,
காற்றின் தன்மை, உடலின் நிலை ஆகியவற்றை அறிந்துகொண்டு இவற்றுக்குத்
தகுந்த வகையில் மருந்துகளையும் உணவுகளையும் பரிந்துரைக்கும் மேலான
அறிவியல். இந்த மருத்துவமுறைகளைக் கடைப்பிடித்த காலத்தில்தான் நமது
முன்னோர் நீண்ட ஆயுளுடனும் வலிமையான உடலுடனும் வாழ்ந்தனர்.
இப்போதும் நவன
ீ மருத்துவம் நுழையாத பழங்குடிகளிடம் நீண்ட ஆயுளும்
நோயற்ற வாழ்வும் இருப்பதை நீங்கள் காணலாம்.
இப்போது கடைப்பிடிக்கப்படும் நவன
ீ மருத்துவமுறைகளின் அடித்தளமாக
இருப்பது, கண்மூடித்தனமான பகுத்தறிவு. எல்லாவற்றையும் வெறும் அறிவாகப்
பார்ப்பது இந்த முறையின் மாற்ற இயலாத போக்காக இருக்கிறது. இந்த
முறையின் தந்தை, `உடலின் இயற்கை சக்திகள்தான் உண்மையான
மருத்துவர்கள்’ எனக் கூறியதை, அவரது வாரிசுகள் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். 

இரு கேள்விகள், எல்லா மருத்துவ நிலையங் களிலும் அலைந்து


திரிந்துகொண்டுள்ளன. அந்தக் கேள்விகள் இரண்டும், அந்த மனிதர்கள்
கேட்கவேண்டியவைதான். ஆனால், அவற்றைக் கேட்பதற்கு ஆள் இல்லாததால்,
அவை மருத்துவமனையின் மூலைமுடுக்குகளிலும், மருந்துக் கடைகளிலும்,
பிணவறைகளிலும் அலைகின்றன. அந்தக் கேள்விகள்...

‘இந்த மருந்தை நான் உட்கொள்வதால், எனக்கு நோய் குணமாகுமா?’

‘இந்த மருந்தை உட்கொள்வதால் வேறு தீய விளைவுகள் ஏற்படுமா?’

இவற்றைக் கேட்பதற்கு, பெரிய பட்டம் தேவை இல்லை. ஏறத்தாழ


எல்லோருடைய மனங்களிலும் இந்தக் கேள்விகள் உருவாகிக்கொண்டுள்ளன.
ஆனால், இவற்றைக் கேட்கும் துணிவு பலருக்கும் இல்லை. அந்த அளவுக்கு,
மருத்துவ நிலையங்கள் தம்மை அதிகார மையங்களாக மாற்றிவைத்துள்ளன.
அவற்றை எதிர்த்து, எவரும் கேள்விகேட்க முடியாது; குரல் எழுப்ப முடியாது;
மாற்றுக் கருத்தைப் பதிவுசெய்யக்கூட முடியாது.

இந்த நாட்டில் பிரதமரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும்; குடியரசுத்


தலைவரை எதிர்த்துப் பேச முடியும்; உச்ச நீதிமன்ற நீதிபதியைக்கூட
கேள்விகேட்க இயலும். ஆனால், நவன
ீ மருத்துவத் துறையின் மருத்துவர்களை
மட்டும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. இவ்வாறான நிலைமையை
அவர்கள் அழுத்தமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 

நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, ஒரு படிவத்தை


உங்களிடம் நீட்டி அதில் கையெழுத்துக் கேட்கிறார்கள் அல்லவா! அந்தப்
படிவத்தைப் படித்துப் பார்த்துவிட்டு அதன் பிறகு கையொப்பம் இடுவோர்
உங்களில் எத்தனை  பேர்? ஒருவேளை அதைப் படித்தால் உங்களுக்கு அதில்
என்ன எழுதப்பட்டுள்ளது என்பது புரியுமா? 

‘மருத்துவ அனுமதிப்படிவங்கள், தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் இருக்க


வேண்டும்’ எனச் சட்டம் கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில்
இந்தப் படிவங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். ஆனால்,
நிலைமை என்னவென்று உங்களுக்கே தெரியும்.

இந்திய அரசின் மருத்துவ ஒழுங்குமுறை விதிகளின்படி, ஒவ்வொரு மருந்தை


உங்களுக்குப் பரிந்துரைக்கும் முன்னரும், ‘இந்த மருந்தின் தீய விளைவுகள்
இவை எல்லாம்’ என்று உங்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதன் பின்னரும்
நீங்கள் சம்மதித்தால்தான் அந்த மருந்துகளை நோயாளிக்கு வழங்க வேண்டும்.
இப்படித்தான் நடக்கிறதா என்பதையும் நீங்களே அறிவர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்திய அரசு 330 அலோபதி மருந்துகளைத்


தடை செய்தது. இந்த மருந்துகள் யாவும், ‘ஆபத்து விளைவிக்கின்றன’ என
இந்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த மருந்துகளின் பட்டியலைப்
பார்க்கும்போது வார்த்தைகளால் விவரிக்க இயலாத அச்சமும் பதற்றமும்
எனக்குள் உருவாகின்றன. ஏனெனில், இந்தச் சமூகத்தில் மிக அதிகமான
மனிதர்கள் அன்றாடம் உட்கொண்ட மருந்துகள் அவை. தலைவலி, காய்ச்சல்,
வயிற்றுவலி, சளி, சிறுநீர்ச் சிக்கல், சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு
உள்ளிட்ட தொல்லைகளுக்கான மருந்துகள் அந்தப் பட்டியலில் மிகுதியாக
இருக்கின்றன. 

`இந்த மருந்துகள் எல்லாம் உயிருக்கு இடர் உருவாக்கும் தன்மைகொண்டவை’


என்றால், இவ்வளவு காலம் அவற்றைப் பரிந்துரைத்த மருத்துவத்
துறையினரிடம் எந்தக் கேள்வியும் இல்லையா? இந்த மருந்துகளைத்
தயாரித்தவர்கள் மீ து எந்தச் சட்டமும் பாயாதா?'

இந்த மருந்துகளால் உடல்நலம் சீரழியும் என்றால், இதனால் பாதிக்கப்பட்ட


கோடிக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் பதில் கூறுபவர்
எவர்?

இந்தக் கேள்விகள் என் மனதில் எழுகின்றன. ஆனால், இந்தக் கேள்விகள்


எல்லாம் மேற்கண்ட மருந்துகளை உட்கொண்டோருக்கு அல்லவா எழ
வேண்டும்? அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரே ஒரு மருந்து தடை
செய்யப்பட்டால்கூட, மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகள் எழுகின்றன. 

இங்கேயோ ஒன்று அல்ல... இரண்டு அல்ல 330 மருந்துகள் தடை


செய்யப்பட்டுள்ளன. `அவற்றால் தீய விளைவுகள் உருவாகின’ என அரசாங்கமே
அறிவிக்கிறது. அந்த மருந்துகளை எழுதித் தள்ளிய மருத்துவ
வல்லுநர்களிடமும் வாங்கி விழுங்கிய மனிதர்களிடமும் எந்தச் சலனமும்
இல்லை.

‘எனது கண்களின் பார்வையைப் பறித்துக்கொண்டாய் இறைவா. நான்


துன்பத்தில் உழல்கிறேன். நீ மட்டும் நன்றாக வாழ்வாய்!’ (தேவாரம் – `வாழ்ந்து
போதீரே...’ பாடல்) என இறைவனிடம் கோபப்பட்ட சுந்தரர், நம் மரபின்
முன்னோடிகளில் ஒருவர். பின்னர் அவருக்குப் பார்வை மீ ண்டது வரலாறு. நம்
முன்னோர் இறைவனிடம்கூட கேள்வி கேட்கச் சொன்னார்கள். இந்தச்
சமூகமோ, நவன
ீ மேதைகளிடம் எந்தக் கேள்வியும் இல்லாமல் சரணடைவது
சரியா? 

- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 22
ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்று, மருந்து இல்லாமல் வாழும்


உரிமை. `எந்த மருந்தும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்’ என்ற
விருப்பம், அனைவருக்கும் பொதுவானது தான். இவ்வாறு சிந்திப்பதும், இந்த
விருப்பத்துடன் மருந்துகளை நிராகரிப்பதும் அவரவர் விருப்பம்; உரிமை. இந்திய
அரசியலமைப்புச் சட்டமும், அதன் கீ ழ் உருவாக்கப்பட்ட சட்டங்களும் இந்த
விருப்பத்தைப் பாதுகாக்கின்றன. வேதிமருந்துகளைத் தயாரிப் பதற்கும்
விற்பனை செய்வதற்கும் பரிந்துரைப்பதற்கும் இந்தியச் சட்டங்களில் எண்ணற்ற
கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், மருந்து இல்லா வாழ்வியலைக்
கற்றுத்தருவதற்கும், மரபுவழிப்பட்ட வட்டு
ீ மருந்துகள் பற்றிய கருத்துக் களைப்
பரப்புவதற்கும் சட்ட ரீதியிலான தடை ஏதும் இல்லை. இது, இந்தியா எனும்
நீண்டகால மரபுத் தொடர்ச்சி உள்ள நிலப் பகுதிகளில் வாழ்வோருக்குக்
கிடைத்துள்ள கொடை.
மருந்து இல்லா வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை,
இப்போது உயர்ந்துள்ளது. மருந்துகளின் பிடியில் இருந்து வெளியேறுவோரின்
உடலும் மனமும், விடுதலை செய்யப்பட்ட புலியின் துள்ளல்போல்
திளைக்கின்றன. மருந்து இல்லா வாழ்வியல் முறைகளின் மீ து, மக்களின்
நாட்டம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழல் மேன்மேலும் வளர வேண்டும் என்பது,
என் போன்றோரின் விருப்பம். இது எந்த மருத்துவமுறைக்கும் எதிரான
சிந்தனை அல்ல; சக மனிதர்களின் மீ துகொண்ட அன்பின் வெளிப்பாடு. இந்த
நோய்க்கு இந்த மருந்து எனப் பரிந்துரைக்கும்போது, அந்த நோயைக் காட்டிலும்
கூடுதலான சிக்கல்களை மருந்துகள் விளைவிக்கின்றன என்ற உண்மையை
அறிந்துகொண்ட பிறகு, எனக்குள் இந்த அன்பின் தீவிரம் அதிகரித்தது. 

`சர்க்கரை நோய்' எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றி அறியாதவர் எவரும்


இருக்க முடியாது. `நீரிழிவு' ஒரு நோய் அல்ல; உடலின் சுரப்பிகளில் உருவாகும்
சீரற்ற நிலை என்பதுதான் உலகின் அனைத்து நவன
ீ மருத்துவ அமைப்புகளும்
ஒப்புக்கொண்டுள்ள உண்மை. `நீரிழிவு ஒரு நோய் அல்ல என்பதால், அதைச்
சரிசெய்வதற்கு எந்த மருந்தும் இல்லை’ என்பதும் உலகின் அனைத்து
மருத்துவ அமைப்புகளும் அறிவித்துள்ள உண்மை. 

இந்தக் கட்டுரை வழியாக உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும்


என விரும்புகிறேன். ஆகவே, இரண்டு கருத்துக்களை மனதில் நன்றாகப்
பதித்துக்கொள்ளுங்கள்.
1. நீரிழிவு என்பது, சீர்கேடுதான் (disorder); நோய் அல்ல.

2. நீரிழிவைக் குணப்படுத்த எந்த மருந்தும் இல்லை. 

வாழ்க்கைமுறையைச் சீரமைப்பது ஒன்றுதான், நீரிழிவுச் சீர்கேட்டில் இருந்து


வெளியேறி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழும் வழி. 

நீரிழிவுக்காக மருத்துவத் துறையில் மிகுதியாக விற்பனை செய்யப்படும் இரு


மருந்துகள், மெட்ஃபார்மின் (metformin) மற்றும் பயோக்ளிட்டஸோன் (Pioglitazone).

பின்வரும் உடல்நலக் கேடுகளைப் பாருங்கள்: தசையில் வலி, தசை பலவனம்



அடைதல், மூச்சு விடுவதில் சிரமம், எந்நேரமும் தூக்கக் கலக்கத்தில் இருத்தல்,
தலைசுற்றல், சோர்வு அல்லது மிகவும் பலவனமாக
ீ இருத்தல், வயிற்றுவலி,
வாந்தியுடன்கூடிய குமட்டல், இதயத்துடிப்பின் வேகம் குறைதல் அல்லது சீரற்ற
இதயத்துடிப்பு ஏற்படுதல் இவை அனைத்தும் பொதுவான சீர்கேடுகள். 
அடுத்த பட்டியலில் உள்ளவை எல்லாம் ‘தீவிர சிக்கல்கள்’ என
வரையறுக்கப்பட்டவை. அவை மூச்சுத்திணறல், வக்கம்,
ீ திடீரென எடை
கூடிக்கொண்டேபோவது, காய்ச்சல், உடல் குளிர்ந்துபோவது.

இவை தவிர சாதாரண விளைவுகள் சில பட்டியலிடப்பட்டுள்ளன. அவை,


தலைவலி, தசை வலி, பலவனம்,
ீ குறைவான குமட்டல், வாந்தி,
வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை, வயிற்றுவலி.

இவை, நீரிழிவு நோயினால் வருபவை அல்ல; நீரிழிவுக்காக வழங்கப்படும்


மெட்ஃபார்மின் எனும் மருந்தினால் வர வாய்ப்பு உள்ளவை. இந்தப் பட்டியலை
வெளியிட்டிருப்பது, எந்த மரபுசார்ந்த ‘பிற்போக்குத்தனமான’ அமைப்பும் அல்ல;
அமெரிக்க தேசிய சுகாதார மையம் (National Health Institute) என்பதைக்
குறித்துக்கொள்ளுங்கள்.

அதே அமெரிக்க தேசிய சுகாதார மையம் அறிவித்துள்ள மற்றோர் அறிவுரைப்


பட்டியல் இது...
`மெட்ஃபார்மின் உட்கொள்ளும் முன்னர் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய
நடைமுறைகள்:

1. நீங்கள், மெட்ஃபார்மின் ஒவ்வாமை (Allergy) உள்ளவரா என்பதை


அறிந்துகொள்ளுங்கள்.

2. மெட்ஃபார்மின் விற்பனைசெய்யும் மருந்துக் கடைக்காரரிடம் அந்த மருந்தில்


உள்ள உட்பொருட்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர், அந்தப்
பட்டியலில் உள்ள மருந்துகளில் எவையேனும் உங்களுக்கு ஒவ்வாமை
உருவாக்குபவையா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

3. வேறு எந்த மருந்துகள், மூலிகைகள், சத்துணவுகள், வைட்டமின்கள்


உட்கொள்கிறீர்கள் என்பதை உங்கள் மருத்துவரிடம் / மருந்தாளு நரிடம்
தெரிவித்து, `இவற்றோடு மெட்ஃபார்மைச் சேர்த்து உண்ணலாமா?' எனக்
கேட்டுக்கொள் ளுங்கள்.

4. நீங்கள் கருவுற்றவரா, கருவுறும் எண்ணத்தில் இருப்பவரா, குழந்தைக்குத்


தாய்ப்பால் ஊட்டுபவரா என்பதை, உங்கள் மருத்துவரிடம் தெரிவியுங்கள். 

5. குறைவாகச் சாப்பிட்டு அதிகமாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால்,


அதைப் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மெட் ஃபார்மின்
உட்கொள்ளும்போது மேற்கண்டவாறு நீங்கள் நடந்துகொண்டால், ரத்தத்தில்
குளூகோஸின் அளவை அது பாதிக்கும். உங்கள் மருத்துவர் அதற்கு ஏற்ப
மருந்துகளை மாற்றித் தருவார்.

இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கான எச்சரிக்கைகள் அல்ல;


குறிப்பிட்ட மருந்தை உட்கொள்வோருக்கானவை என்பதை மீ ண்டும்
நினைவில்கொள்ளுங்கள். 

பயோக்ளிட்டஸோன் எனும் மருந்தை, கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம்


18-ம் தேதி இந்திய சுகாதார அமைச்சகம் தடைசெய்தது. இதயக் கோளாறுகள்,
சிறுநீர்ப்பை புற்றுநோய், உடல் பருமன் போன்ற ஆபத்துக் களுக்குக் காரணம்
பயோக்ளிட்ட ஸோன்தான் என்பதை பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்
பட்டதால், அது தடை செய்யப்பட்டது. இந்திய மருந்து உற்பத்தியாளர்கள்
சங்கமும் அலோபதி மருத்துவர்கள் பலரும் இந்தத் தடைக்கு எதிராகப்
போராட்டங்கள் நடத்தினர். அதன் விளைவாக, அதே ஜூலை மாதம் 31-ம் தேதி
பயோக்ளிட்ட ஸோன் மீ தான தடை விலக்கப்பட்டது. பயோக்ளிட்டஸோனை
ஆண்டுக்கணக்கில் விழுங்கும் மக்களுக்கு, இந்தத் தடையைப் பற்றியும்
தெரியாது; அதற்கு எதிராக மருத்துவர்கள் போராடியதும் தெரியாது. 

இந்திய சுகாதார அமைச்சகம், பயோக்ளிட்ட ஸோனுக்கு ஒரு கட்டுப்பாடு


விதித்தது. ‘பயோக்ளிட்டஸோன் மாத்திரைப் பெட்டிகளில், இந்த மருந்தின் தீய
விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கை வாசகத்தை அச்சிட வேண்டும்’ என்றது
சுகாதார அமைச்சகம். இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தக்
கட்டுப்பாட்டை எதிர்த்து அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியது. பின்னர்,
`மிகச்சிறிய அளவிலாவது எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும்' என்று
அமைச்சகம் இறங்கிவந்தது.

இந்த பயோக்ளிட்டஸோன் மருந்தின் விளைவுகளைப் பற்றி அமெரிக்க சுகாதார


அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது. மிக நீண்டகாலம் நடத்தப்பட்ட
விரிவான ஆய்வு அது. `பயோக்ளிட்டஸோன் மருந்து, மக்கள் மத்தியில்
உருவாக்கும் தாக்கங்கள்' (Epidemiological Study of Pioglitazone) என்பது, அந்த
ஆய்வின் பெயர். 1997-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட
ஆய்வின் முடிவுகளில் வெகு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பயோக்ளிட்டோஸோன் மருந்தை ஓர் ஆண்டுக்கும் மேலாக


உட்கொண்டுவந்தால், சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள்
அதிகம்.

2. மருத்துவர்களுக்கு இதனால் அறிவிக்கப் படுவது என்னவெனில், ஏற்கெனவே


சிறுநீர்ப்பை புற்றுநோய் இருப்பவர்களுக்கு பயோக்ளிட்ட ஸோனைப்
பரிந்துரைக்காதீர்கள். ரத்தத்தில் குளூகோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதில்,
பயோக்ளிட்டஸோனின் செயல்பாட்டை மதிப்பிடும்போது, அந்த மருந்தால்
புற்றுநோய் வரும் அபாயத்தையும் கணக்கில்கொண்டு செயல்படுங்கள்.

3. நோயாளிகளுக்கு இதனால் அறிவிக்கப்படுவது என்னவெனில்,


பயோக்ளிட்டஸோன் உட்கொள்ளும்போது சிறுநீர்ப்பை புற்றுநோய்
ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பயோக்ளிட்டஸோன்
வாங்கும்போது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கையேட்டைப் படித்துப்
பாருங்கள். அதில், இந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் இடர்பாடுகள் பற்றி
விளக்கப்பட்டுள்ளது. பயோக்ளிட்டோஸோன் பற்றி அறிந்துகொள்ள
விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
4. மருத்துவர்களுக்கான கூடுதல் தகவல்கள் சில: 

சிறுநீர் கழிப்பதில் உள்ள அறிகுறிகள் குறித்து நோயாளிகளிடம்


உரையாடுங்கள். பயோக்ளிட்டஸோன் மருந்தின் கையேட்டைப் படிக்கும்படி
நோயாளிகளுக்கு அறிவுறுத்துங்கள்.

இந்த எச்சரிக்கைகளை வழங்கியது, மரபுகளில் பிடிப்புகொண்ட


மூடநம்பிக்கையாளர்களின் அமைப்பு அல்ல; அமெரிக்க உணவு மற்றும் மருந்து
கட்டுப்பாட்டு அமைப்பு (FDA). 

தமிழகத்தில், மெட்ஃபார்மின் மற்றும் பயோக்ளிட்டஸோன் ஆகிய


இரண்டும்தான் நீரிழிவு மருத்துவத் துறையில் மிக அதிகமாகவும்
அதிவேகமாகவும் விற்பனை செய்யப்படும் மருந்துகள். 

`நீரிழிவு நோயால் இறந்துபோனார், நீரிழிவால் சிறுநீரகம் பழுதானது, நீரிழிவால்


இதயம் சீர்கெட்டது’ போன்ற செய்திகளைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். நீரிழிவுக்கு
வழங்கப்படும் மருந்து களால் உருவாகும் நோய்களின் பட்டியலை மீ ண்டும்
ஒருமுறை படித்துப்பாருங்கள். 

இந்தத் தகவல்கள் யாவும் உங்களுக்கு மருத்துவர்களால் தெரிவிக்கப்பட


வேண்டும். அதுதான் உலகம் எங்கும் உள்ள சுகாதார அமைப்புகள் வகுத்துள்ள
ஒழுங்குமுறை. மிகக் குறிப்பாக, இந்திய சுகாதார அமைச்சகத்தின் சட்ட
விதிகளின்படி, மேற்கண்ட எல்லா தகவல்களையும் நீரிழிவு நோய்க்கு மருந்து
எழுதும் மருத்துவர் தமது ‘நோயாளி’களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் தெரிவித்த பிறகும் ‘எனக்கு அந்த மருந்தையே


எழுதித்தாருங்கள்’ எனக் கேட்பவர்களுக்கு மட்டுமே அந்த மருந்துகளைப்
பரிந்துரைக்க வேண்டும் என்பது சட்டம். நடைமுறை என்னவாக இருக்கிறது
என்பதை என்னைவிட நீங்கள் நன்கு அறிவர்கள்.

நமது மரபுவழிப்பட்ட வாழ்வியலைக் கொஞ்சம் கவனியுங்கள். 

பசிக்கும்போது மட்டும் உணவு, தாகம் எடுத்தால் மட்டும் தண்ண ீர், இரவில்


கண்விழிக்காமல் இருத்தல், அதிகாலையில் எழுதல், காலையில் பசித்தால்
சிறுதானியக் கஞ்சி மற்றும் கூழ் வகைகள், மதியம் பசித்தால் எளிதில்
செரிக்கும் வகையிலான உணவுகள், பல்வேறு வகையான  நாட்டுக்
காய்கறிகளை உணவில் இணைத்தல், இரவில் ஆவியில் வேகவைத்த
உணவுகளை (இட்லி, இடியாப்பம், புட்டு) உட்கொள்ளுதல், இயற்கை விளைப்
பொருட்களையே உணவாகக் கொள்ளுதல், இயன்ற அளவு உடல் உழைப்பில்
ஈடுபடுதல் போன்ற வாழ்க்கைநெறிகளைப் பின்பற்றினால், எந்தச் சீர்கேட்டில்
இருந்தும் வெளியேற முடியும்.

ஒரே நாளில் மருந்துகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற அவசரம் தேவை


இல்லை. உங்கள் உடலின் இயக்கத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப
மாற்றங்களை மேற்கொண்டால், கொஞ்சம் கொஞ்சமாக மருந்துகள் இல்லாத
வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

`மரபு மருத்துவம்' என்ற பெயரில் நீரிழிவு நோய்க்கு மருந்து தருவதாகப் பலர்


கூறுகிறார்கள். நமது மரபில் உடல் சர்க்கரையைத் தற்காலிக மாகக் குறைக்கும்
மூலிகைகள் உள்ளனவே தவிர, நிரந்தரமாகக் குணப்படுத்தும் எந்த மருந்தும்
இல்லை. இது மரபு மருத்துவங்களின் குறைபாடு அல்ல. நீரிழிவு என்பது நோயே
அல்ல எனும்போது, அதற்கான நிரந்தரமான மருந்து எப்படி இருக்கும்?

எது நோய் இல்லையோ, அதற்கு மருந்தும் இல்லை. எது சீர்கேடாக உள்ளதோ,


அதைச் சீராக்க முடியும். நீரிழிவு, ஒரு சீர்கேடுதான். அதைச் சீராக்க நம்மால்
முடியும்.

 - திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 23
ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்
`இந்தியாவில் காலரா நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது. காலரா
மரணங்களும் பாதிப்புகளும் முழுமையாக அறிவிக்கப்படுவது இல்லை. காலரா
பாதிப்புகள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள், உண்மையான
நிலவரத்தைக் காட்டிலும் குறைவானவை. கொல்கத்தாவில் மட்டும் 1,000 பேரில்
2.2 நபர்கள் என்ற விகிதத்தில் காலரா பாதிப்பு உள்ளதாக புள்ளிவிவரம்
இருக்கிறது. இதே கணக்கை இந்தியாவின் காலரா தாக்கம் உள்ள எல்லா
பகுதிகளுக்கும் பொருத்தினால், எவ்வளவு அதிகமான மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.’

மேற்கண்ட வாசகங்கள் அடங்கிய மிக நீண்ட ஆய்வு அறிக்கையை இந்திய


மருத்துவ ஆய்வு இதழ் (Indian Journal Of Medical Research) வெளியிட்டுள்ளது.
மருத்துவ உலகில், இது ஓர் அதிகாரபூர்வமான இதழ். இதற்கும் மரபு மருத்துவ
‘பிற்போக்குவாதிகளுக்கும்’ எந்தவிதமான உறவும் இல்லை.

இதே ஆய்வு அறிக்கையில், காலரா மரணங்கள் குறித்த புள்ளிவிவரப்


பட்டியலும் உள்ளது. 1997-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையிலான
காலத்தில், தமிழ்நாட்டில் காலராவால் இறந்தோர் / பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை அந்தப் பட்டியலில் உள்ளது. இந்திய அளவில், காலரா மரணங்கள்
அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் ஆகிய
மூன்றும் போட்டி போடுகின்றன.
இந்திய மருத்துவ ஆய்வு இதழ் அறிக்கை இன்னொரு கருத்தையும்
முன்வைக்கிறது... ‘ஒரு பகுதியில் காலரா பரவினால், அதே பகுதியில்
தொடர்ந்து நீடிக்கிறது. காலரா தாக்கம் உள்ள பகுதிகளில் ஐந்து ஆண்டுகள்
ஆய்வுசெய்தோம். ஐந்தில் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து காலரா பாதிப்பு
நீடிப்பதைக் கண்டோம். அதாவது, எங்கு காலரா பாதிப்பு உருவாகிறதோ...
அங்கேயே அந்த நோய் நீடிக்கிறதே தவிர, ஒழிவது இல்லை.’

நவன
ீ மருத்துவத் துறையின் சீர்கேடுகளைப் பற்றி மக்களிடையே
உரையாடும்போது எல்லாம், என் போன்றோர் எதிர்கொள்ளும் கேள்விகளில்
முதன்மையானது... ‘காலரா போன்ற மோசமான நோய்களை நவன

மருத்துவம்தானே ஒழித்தது?’ என்பதாகும். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது
அல்ல என் நோக்கம். இதன் பின்னால் இருக்கும் அறியாமையை அகற்றி,
உண்மையான நலவாழ்வை சமூகத்தில் பரவச் செய்வதற்காக இது குறித்த சில
தகவல்களைப் பகிர்கிறேன்.

மேற்கண்ட ஆய்வு அறிக்கை மட்டும் அல்ல, உலக சுகாதார அமைப்பு (World


Health Organisation) வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் இந்தியாவில் காலராவின்
தாக்கம் அதிகமாக இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. அந்த அமைப்பு உலகம்
முழுவதிலும் உள்ள காலரா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்
இது...
2000 – 2004 : 6,76, 651 பேர்.

2004 - 2008 : 8,38, 315 பேர்.

இவை தவிர, தோராயமான கணக்குகளின்படி உலகம் எங்கும் 30 லட்சம் முதல்


50 லட்சம் பேர் வரை காலரா பாதிப்பில் இருக்கிறார்கள். இவர்களில் ஏறத்தாழ
1.5 லட்சம் பேர் இறந்து போகிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் காலரா பாதிப்பால் மரணமடைவோர் எண்ணிக்கை
உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த விவரங்கள் எல்லாம் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டவை. கடந்த ஆறு


ஆண்டுகளில் இந்த மரணக் கணக்கு இன்னும் உயர்ந்திருக்கும். ஏனெனில்,
காலராவின் தாக்கத்தை மருந்துகளால் குறைக்க இயலாது என்பதையும் உலக
சுகாதார அமைப்பு ஒப்புக்கொள்கிறது.

`காலரா போன்ற கொடிய நோய்களில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றியதே


நாங்கள்தான்’ என்ற வசனத்தை அரங்கேற்றும்போது எல்லாம் நவனர்கள்
ீ இரு
உண்மைகளை மென்று விழுங்கிவிடுகின்றனர்.
ஒன்று, இந்தியாவில் காலரா பரவிய அனைத்துப் பகுதிகளிலும் தொழிற்சாலை
களாலும், நகரமயமாக்கலாலும் மக்களது வாழ்க்கைமுறை சீரழிந்திருந்தது. 
இரண்டு, எந்தக் காலத்திலும் காலரா நோய் மருந்துகளால் ஒழிக்கப்படவில்லை.
வாழ்க்கைமுறை மாற்றத்தால் மட்டும்தான் காலரா போன்ற நோய்கள் விலகிச்
சென்றன.

இந்த இரு உண்மைகளையும் மக்களிடையே அறிவித்துவிட்டால்,


நவனர்களுக்குப்
ீ பெரும் இழப்புகள் ஏற்படும். ‘நாங்கள்தான் உங்களைக் காக்கும்
தேவதூதர்கள்’ என்ற மாயை விலகத் தொடங்கும். இப்போதைய
பெருநிறுவனங்களின் மீ தும் அவர்களுக்குக் கோபம் வரும். எல்லாவற்றுக்கும்
மேலாக, வாழ்வியல் மாற்றத்தை நோக்கி மக்கள் கூட்டம் பயணித்தால்,
மருத்துவத் துறையின் அடித்தளமே ஆட்டம் காணும். ஆகையால், இந்த
உண்மைகளை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

`19-ம் நூற்றாண்டில் இந்தியாவை காலரா தாக்கியபோது, ஐரோப்பியர்களும்


செல்வந்தர்களும் அதிகம் பாதிக்கப்படவில்லை. குடிசைவாசிகள்தான் மிக
அதிகமான எண்ணிக்கையில் இறந்துபோனார்கள்’ என்பது வரலாற்றில்
பதிவுசெய்யப்பட்ட தகவல். 

காலரா பாதிப்புகள் உருவாகத் தொடங்கிய காலம் இந்தியாவின் உள்நாட்டு


மருத்துவ முறைகளை இங்கிலாந்து அரசு ஒடுக்கிய காலம் என்பதையும்
இங்கே குறிப்பிட விரும்புகிறேன். காலரா மரணங்களுக்கும் நவன
ீ மருத்துவத்
துறையின் ஆதிக்கத்துக்கும் உள்ள உறவை, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

1824-ம் ஆண்டு முதன்முதலில் நவன


ீ மருத்துவப் பள்ளி கொல்கத்தாவில்
தொடங்கப்பட்டது. அப்போது, இந்திய உள்நாட்டு மருத்துவர்களையும் மருத்துவப்
பள்ளி ஆசிரியர்களாகச் சேர்த்துக் கொண்டனர். அவர்கள் ‘நாட்டு மருத்துவர்கள்’
(Native Doctors) என்ற தனி அடையாளத்துடன் அங்கீ கரிக்கப்பட்டனர். 1833-ம்
ஆண்டு, அப்போதைய இந்திய ஆட்சியராக இருந்த வில்லியம் பென்டிங்
என்பவர், நாட்டு மருத்துவர் எனும் அங்கீ காரத்தை ரத்துசெய்தார். 
`ஆங்கிலம் மட்டுமே மருத்துவ மொழியாக இருக்க வேண்டும். நவன

மருத்துவம் மட்டுமே அரசின் அதிகாரபூர்வமான மருத்துவமுறையாக இருக்கும்’
ஆகிய இரு கட்டுப்பாடுகளையும் வில்லியம் பென்டிங் விதித்தார். 

பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தையும் இறையியலையும் போற்றி


வளர்த்து, நோய்களைப் புரிந்துகொண்டு மருத்துவம் பார்த்துவந்த மரபுகள்
யாவும் சட்டவிரோதமானவையாகச் சித்தரிக்கப்படும் கொடுமை ஆரம்பமானது.

லட்சக்கணக்கான மக்கள் காலராவின் பேரால் பலியான வரலாறு, இந்தியாவில்


1816-ம் ஆண்டு தொடங்கியது. இந்தியாவின் மரபு மருத்துவங்கள் பின்னுக்குத்
தள்ளப்பட்டதும், காலராவால் லட்சக்கணக்கானோர் மரணம் அடைந்ததும் ஒரே
காலத்தில் நிகழ்ந்தவை என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். 

அந்தக் காலத்தில் கிராமங்களில் வாழ்ந்த மக்களை, நகரங்கள் நோக்கி


விரட்டியது பிரிட்டனின் கிழக்கு இந்திய நிறுவனம். நவனர்களின்
ீ மொழியில்
சொல்வதானால், அது `தொழிற்புரட்சி’க் காலம். தொழிற்சாலைப்
பணியாளர்களாக நகரங்களுக்குத் துரத்தப்பட்ட மக்கள்தான், பெருவாரியாக
காலரா நோயினால் இறந்தார்கள். 

1869 – 71 ஆண்டுகளில், சென்னை மாகாணத்தில் மட்டும் காலராவால் இறந்தோர்


ஒரு லட்சம் பேர். 1876-ம் ஆண்டில் 1,48,193 பேரும், 1895-ம் ஆண்டில் 94,546
பேரும் மரணம் அடைந்தனர். இதே காலத்தில் பஞ்சமும் தலைதூக்கியதால்,
சென்னை மாகாணத்தின் ஏழை-எளியோரும் லட்சக்கணக்கில் செத்து
விழுந்தனர். 1871-ம் ஆண்டு மட்டும் இறந்தோர் எண்ணிக்கை ஏறத்தாழ 3.5
லட்சம் என புள்ளிவிவரங்கள் குறிக்கின்றன.

`அப்போதைய மக்களுக்கு நல்ல குடிநீர்கூட இல்லாமல்போனதுதான், காலரா


மரணங்களுக்கான மிக முக்கியக் காரணம்’ என வரலாற்று ஆசிரியர்கள்
குறிப்பிடுகின்றனர். 

‘இந்தியா முழுவதும் சுற்றி வந்தேன். அங்கு வாழும் மக்கள் செழிப்புடனும்


தற்சார்புத் தன்மையுடனும் வாழ்கிறார்கள்’ என்று பிரிட்டன் ஆட்சியாளர்களில்
ஒருவரான மெக்காலே வயிற்றெரிச்சலுடன் பதிவுசெய்த நாட்டின் மக்கள், நல்ல
உணவும் நீரும் இல்லாமல் செத்துக்கொண்டிருந்தனர்.
காலரா மரணங்களின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நவன
ீ மருத்துவத்
துறையினரின் எந்தச் சாகசமும் அந்த மரணங்களைத் தடுக்கவில்லை
என்பதைப் புரிந்துகொள்வர்கள்.
ீ அமெரிக்காவில் வாழ்ந்த நவன
ீ மருத்துவ
வல்லுநர் டாக்டர் கோலுப் ஒரு நூல் எழுதினார். ‘மருந்துகளின் எல்லை’ (The
Limits Of Medicine – Dr. Golub, ph.d.,) என்பது அந்த நூல். 

‘காலரா போன்ற கொள்ளை நோய்களை ஒழித்ததில், நவன


ீ மருத்துவத்
துறைக்குப் பெரிய பங்கு இல்லை. அந்த நோய்கள் எல்லாம் மக்களின்
வாழ்க்கைநிலை சீரழிந்ததால் உருவாகின. எப்போது அவர்களுக்கு நல்ல
இருப்பிடம், தூய குடிநீர், தரமான உணவு ஆகியவை கிடைத்தனவோ அப்போது
கொள்ளை நோய்களும் விலகிச் சென்றன’ என்கிறார். இந்தச் சேதியை அவர்
மிக விளக்கமாகப் பதிவுசெய்துள்ளார். நான் அதன் சுருக்கத்தைக்
குறிப்பிட்டுள்ளேன். அவர் நவன
ீ மருத்துவத்தைப் போற்றியவர்தான். ஆனாலும்,
இவ்வாறான உண்மைகளையும் பதிவுசெய்தார்.

இந்தியாவின் கிராமங்கள் சூறையாடப்பட்டு, நகரங்களுக்கு மக்கள் துரத்தப்பட்ட


நிகழ்வுகளில் `காலரா' எனும் கிருமி உருவானது. ஆட்டு மந்தைகள்போல,
குடிசைகளில் அடைக்கப்பட்ட நம் முன்னோர் சிந்திய கண்ண ீரில் காலரா
கிருமிகள் வளர்ந்தன. மலம் கழிக்க இடம் இல்லை, நல்ல உணவு இல்லை,
சுவாசிக்க தூய காற்று இல்லை, தாகம் தணிக்க நீர் இல்லை, இரவிலும் ஓய்வு
இல்லை, மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கும் சுதந்திரம் இல்லை என்ற
அடிமைத்தனத்தின் வெம்மையில் அந்தக் கிருமிகள் வெடித்துப் பரவின. 

ஆப்பிரிக்க நாடுகள், சீனா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில்


மக்களைப் பலிவாங்கியது காலரா. நன்றாக உற்றுநோக்கினால், இந்த நாடுகள்
அனைத்தும் ஐரோப்பிய காலனி நாடுகள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள
முடியும். பிரிட்டனிலும் காலரா கால்பதித்து ஆட்டம்போட்டது. டாக்டர் கோலுப்
எழுதிய அந்த நூலில், ‘பிரிட்டனில் வாழ்ந்த தொழிலாளர்களும் ஏழைகளும்தான்
காலராவால் அதிகம் பாதிக்கப்பட்டனர்’ என்ற தகவல் உள்ளது. எல்லா
நாடுகளிலும் இதுதான் நிலைமை. செல்வந்தர்களையும் சீமான்களையும்
கொல்லாத காலரா, ஏழை எளியோரைக் குறிவைத்துக் கொன்றது. 

இப்போதும், சென்னை, கடலூர் போன்ற `தொழில்’ நகரங்களில் வாழும்


மக்கள்தான் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். தொழிற்சாலைகளை
அனுமதித்த எல்லா ஊர்களிலும் குடிநீர், காற்று, உணவு, உறைவிடம் ஆகிய
அடிப்படைத் தேவைகள் சீரழிகின்றன. பின்னர், காலரா உள்ளிட்ட பலவகையான
நோய்கள் அங்கு வாழும் மக்களைத் தாக்குகின்றன. நவன
ீ மருத்துவ
நிறுவனங்கள், அங்கு சேவையாற்றுகின்றன. நோய்கள் ஒழிவதும் இல்லை;
மருந்துகளின் விற்பனை குறைவதும் இல்லை. 

நோய்களும் நவன
ீ மருத்துவமும் பிரிக்க இயலாத இரட்டையர்கள். இந்த
இரட்டையரைப் பெற்று வளர்ப்பவை, பெருநிறுவனங்கள். மரபுவழிப்பட்ட
வாழ்வியலைச் சிதைத்து, மக்களை நோயாளிகளாக்குவதும், பின்னர்
அவர்களிடம் மருந்து விற்பதும் நூற்றாண்டு கண்ட தொழில்நுட்பங்கள். 

எல்லா நோய்களில் இருந்தும் விடுதலை அடைவதற்கான ஒரே வழி, நமது


மரபு வாழ்வியலுக்குத் திரும்புவதுதான். இந்தச் சமூகம் அவ்வாறு
திரும்பிவிட்டால், பெருநிறுவனங் களுக்குத் தொழிற்சாலை அமைக்க இடம்
கிடைக்காது; பணியாற்ற அடிமைகள் கிடைக்க மாட்டார்கள்; குடிநீரை விற்பனை
செய்ய முடியாது; மருந்து நிறுவனங்கள் கொள்ளையடிக்க இயலாது.
இவ்வாறான மாற்றங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வதற்கு என அவர்கள்
உச்சரிக்கும் போலி மந்திரங்களில் ஒன்றுதான், ‘கொள்ளை நோய்களில் இருந்து
நாங்கள்தான் மக்களைக் காக்கிறோம்’ என்பது.

வரலாற்றில் பதிவாகியுள்ள எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையிலும்


காலராவின் தாக்கத்தை நவன
ீ மருந்துகள் குறைக்கவில்லை. இப்போதும்,
காலரா அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற உண்மையையும் அவர்கள்
கண்டுகொள்ளவில்லை. 

என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் முன்னர், என்ன நடந்தது எனத்


தெரிந்து கொள்ளுங்கள். வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல், எதிர்காலத்தை
வடிவமைக்க முடியாது!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 24
ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

எளிமையான வாழ்க்கையை வாழ்வோரும், இயற்கையான வழிகளில் வாழ


விரும்பு வோரும் எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டிய
நிலைமை இப்போது உருவாகியுள்ளது. `மருத்துவமனைக்கே செல்லாமல்
வாழவேண்டும்' என்ற விருப்பம் மிக இயல்பானது; இயற்கை வழியிலானது.
`எனக்கு மருந்துகள் இல்லா வாழ்க்கை வேண்டும்’ என விரும்புவது ஒவ்வொரு
மனிதருக்குமான அடிப்படை உரிமை. இந்த உரிமையை, எந்தக் காலத்திலும்
எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுப்பது ஆபத்தானது. எவரேனும் ஒருவர்
இந்த அடிப்படை உரிமையை மதித்து வாழத் தொடங்கினால், அவர் சந்திக்கும்
அவமானங்களும் அச்சுறுத்தல்களும் அருவருக்கத் தக்கவையாக உள்ளன.

‘மருந்துகள் இல்லாமல் நோய் குணமாகாது. மருத்துவம் இல்லாமல் வாழ


முடியாது. மருத்துவமனைக்கே செல்லாமல் வாழ விரும்புவது,
பிற்போக்குத்தனமான சிந்தனை’ ஆகிய நம்பிக்கைகளை நவன
ீ மருத்துவத்
துறை வளர்த்துப் பாதுகாக்கிறது. இந்த நம்பிக்கைகளை மனதில்
பதித்துக்கொண்ட மக்கள், மரபுவழிப் பட்ட வாழ்வியலைக் கண்டு
அஞ்சுகிறார்கள். மருந்துகளின் பிடியில் இருந்து விடுபட எண்ணுவோரை,
மேற்கண்ட நம்பிக்கைகள் மோசமாக மிரட்டுகின்றன. 

`மருந்து இல்லாத மரபுவழி வாழ்க்கை என்பது வெற்று மூடநம்பிக்கை’ என்ற


புரிதல், கடந்த 50 ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சாத்தான். நவன

மருத்துவத்துக்கு எதிராகப் பேசுவோரை மிரட்டி ஒடுக்கிவைப்பதுதான் இந்தச்
சாத்தானின் முழு நேரப் பணி. ஆனால், உண்மைக்கு சாத்தான்கள் மீ து அச்சம்
இல்லை. உண்மையின் ஒளிதான் இறை ஆற்றலின் வடிவம்.
அச்சுறுத்தல்களையும் அவமானங் களையும் கண்டு ஒதுங்கிவிடாமல், நமது
உடல்நலம் குறித்த சில உண்மைகளை வெளிப்படுத்துவது என் கடமை.

`இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டம் (Indian Drugs and Cosmetics


Act)' என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதுதான் நம் அனைவருக்குமான
`மருத்துவப் பாதுகாப்பு’ ஆயுதம். இந்தச் சட்டத்தில் உள்ள பல்வேறு
அட்டவணைகளில் மிகவும் முக்கியமானது ‘அட்டவணை J’ (Schedule J). இதில்
உள்ள வாசகங்களை அப்படியே தமிழில் தருகிறேன்.
`இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தின் விதி எண் 106-ன் கீ ழ்,
அட்டவணை J பிரிவின்படி பின்வரும் நோய்கள், உடல் தொல்லைகள் எந்த
மருந்துகளாலும் தடுக்கவோ, குணப்படுத்தவோ முடியாதவை.’

இந்த வாசகத்தின் கீ ழ் உள்ள நோய்கள் / உடல் தொல்லைகளின் எண்ணிக்கை


51. அதாவது 51 வகையான நோய்கள் மற்றும் தொல்லைகளை மருந்துகளால்
தடுக்கவோ, குணப்படுத்தவோ முடியாது என அந்தச் சட்டம் வரையறுத்துள்ளது.
அந்த நோய்களின் பட்டியலை நீங்கள் படிக்க வேண்டும். அவற்றில் இருந்து
சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். 

‘சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கருப்பைச் சீர்கேடுகள் மற்றும் கருப்பை


நோய்கள், குடல் இறக்கம், விரைவக்கம்,
ீ மனநோய், மஞ்சள்காமாலையின்
பல்வேறு வகைகளும் கல்லீரல் நோய்களும் (Jaundice, Hepatitis and Liver Disorders),
பல்வேறு இதய நோய்களும், இதயத்தில் உருவாகும் தொல்லைகளும்,
ஆஸ்துமா, புற்றுநோய், உடல் பருமன், பித்தப்பை கல், சிறுநீரகக் கல், பக்கவாதம்,
உடலுறவுச் செயல்பாட்டை அதிகரித்தல், வலிப்புநோய், நரம்பு வக்கம்
ீ (Vericose

Vein).’

இவை தவிர, வேறு சில போலி வாக்குறுதி களையும் இந்தச் சட்டம்


தடைசெய்துள்ளது.

‘தலைமுடியின் வண்ணம் மாற்றுதல், வழுக்கையில் முடி வளரச் செய்தல்,


மார்புகளின் வடிவத்தை/தோற்றத்தை மாற்றுதல், சிவப்பழகு உருவாக்குதல்,
மூளைச் செயல்பாடுகளை மேம்படுத்துதல், நினைவாற்றலை அதிகரிக்கச்
செய்தல், உயரமாக வளரச் செய்தல், ஆண்/பெண் குறிகளின் அளவை/வடிவத்தை
அதிகரித்தல், உடலுறவு நேரத்தை நீட்டித்தல், பற்களின் வலிமையை
அதிகரித்தல், பார்வைத்திறனை அதிகரித்தல்.’

சமூகத்தின் பெரும்பகுதியினருக்கு, இப்படி ஒரு சட்டம் இருப்பதே தெரியாது.


மேற்கண்ட நோய்களுக்கும்/குறைபாடுகளுக்கும் எவ்வளவு மருந்துகள்
விற்கப்படுகின்றன என்பதை நீங்கள் நன்கு அறிவர்கள்.
ீ இவ்வாறு விற்கப்படும்
மருந்துகளின் `செயல்பாடுகளை’ இப்போது அறிந்துகொள்ளுங்கள். `இந்த
நோய்களையும் குறைபாடுகளையும் மருந்துகளால் தீர்க்கவோ, தடுக்கவோ
முடியாது’ என்பது சட்டம். ஆனால், ‘இந்த மருந்துகளை மக்களுக்கு அளிக்கக்
கூடாது’ என்று சட்டம் இல்லை. மாறாக, ‘இந்த மருந்துகள் பற்றிய
விளக்கங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் சம்மதித்தால் மட்டுமே
அந்த மருந்துகளை அளிக்க வேண்டும்’ என்கிறது சட்டம்.

நோய்களின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து, அதை சரிசெய்தல்தான்


மருத்துவத்தின் அடிப்படையான கருத்து. மாறாக, நோய்களின் அறிகுறிகளை
மட்டும் கவனித்து அவற்றை மட்டுப்படுத்தும் வகையிலான மருந்துகளை
அளித்தால், நோயின் தீவிரம் அதிகரிக்கும். மருந்துகளின் தீயவிளைவுகளால்
உடலின் முக்கிய உறுப்புகள் சீரழியும். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்
இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டம் வரையப்பட்டுள்ளது. 

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் மருந்தும் தடுக்கும் மருந்தும் இல்லை


என்பது சட்டம். ஏனெனில், சர்க்கரை என்பது ஓர் அறிகுறி மட்டும்தான்; நோய்
அல்ல. `கணையத்தின் செயல்பாடுகளில் சீர்கேடு உருவானதால், ரத்தத்தில்
சர்க்கரை அதிகரிக்கிறது' என்று நவன
ீ மருத்துவம் கூறுகிறது. ஆனால்,
கணையத்தின் செயல்பாடு ஏன் சீர்கெட்டது எனக் கண்டறிந்தால் தான், அதை
முற்றிலும் சீர்செய்ய முடியும். மூலக்காரணம் என்ன என்பதைக் கண்டறியாமல்
சர்க்கரையின் அளவை நேரடியாகக் குறைப்ப தற்காக மருந்துகள் தரப்பட்டால்,
இரண்டு தீய விளைவுகள் உருவாகின்றன. 

ஒன்று, நாளடைவில் சர்க்கரை நோயின் தீவிரம் அதிகரிக்குமே தவிர,


குறையாது. தொடக்கத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறதோ அதைக்
காட்டிலும் மிக அதிகமான சர்க்கரை அளவுதான் சில காலம் கழித்து இருக்கும்.
மருந்து களின் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்குமே தவிர, சர்க்கரையின்
தீவிரம் குறையாது.
இரண்டு, சர்க்கரைக்கு எனத் தரப்படும் மருந்துகளால் உடலின் முக்கிய
உறுப்புகள் சீரழிகின்றன. சர்க்கரை நோய்க்கு என மருந்து உட்கொள்வோர்
காலப்போக்கில் சிறுநீரகச் சீர்கேடுகள், உடல் பருமன், கொழுப்பு, ரத்த அழுத்தம்,
தைராய்டு, கல்லீரல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கும்
மருந்துகள் உட்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம் அல்லவா! இதுதான் மிகக்
கொடுமையான விளைவு.

இந்த இருவகையான சிக்கல்களையும் கருத்தில் கொண்டுதான் சட்டம்


இயற்றப்பட்டுள்ளது. 

நோயின் மூலக்காரணத்தைக் கண்டறியும் திறனும் அறிவும் இருந்தால்தான்


மருத்துவம் செய்ய முடியும். இல்லையெனில், மருந்துகளைத்தான் விற்க
முடியும். நவன
ீ மருத்துவத்தின் நோய் அறியும் ஆய்வகங்கள், கருவிகளைக்
காணும் மக்களுக்கு அவற்றின் மீ து மயக்கம் வருவது இயல்பானதுதான். பல
ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் துறையாக வளர்ந்துள்ள நவன
ீ மருத்துவம்,
‘இதுதான் இந்த நோய்க்கான மூலக்காரணம்’ எனச் சட்டத்தின் பட்டியலில்
உள்ள எந்த நோயைப் பற்றியும் இன்று வரை அதிகாரபூர்வமாக
அறிவிக்கவில்லை. அவ்வாறு கண்டறிந்தால், மிக எளிதாக அந்த நோயைக்
குணப்படுத்திவிடலாம்; தடுத்துவிடலாம். பிறகு, சட்டத்தில் திருத்தம்
கொண்டுவந்துவிடலாம். 1940-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில்,
`குணப்படுத்த முடியாத’ நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர
குறையவில்லை.

ரத்த அழுத்தம் என்பது, உடல் மற்றும் மனச்செயல்பாடுகளின் வெளிப்பாடுதான்;


அது ஏதோ ஓர் உறுப்பில் தோன்றும் நோய் அல்ல. ரத்த அழுத்தம் இல்லாமல்
வாழவேண்டுமானால், மனம் மற்றும் உடல் செயல்பாடுகளில் உள்ள
தவறுகளைப் புரிந்துகொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். மாறாக,
மாத்திரைகளை மட்டுமே ஆண்டுக்கணக்கில் உட்கொண்டால், உடலின்
உள்ளுறுப்புகள் சீரழியும். உங்களுக்கு வழங்கப்படும் ஒரே ஒரு மருந்துகூட, ‘தீய
விளைவுகள்’ இல்லாத மருந்து இல்லை. இதுதான் உலகம் எங்கும் உள்ள
சுகாதார அமைப்புகள் கூறும் உண்மை.

நம் சமூகத்தில் ஒரு வளர்ச்சிப் போக்கை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.


ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர், காய்ச்சல் மற்றும் சளிக்காக மட்டுமே
நவன
ீ மருந்துகளை உட்கொள்ளும் பழக்கம் தொடங்கியது. அடுத்த சில
ஆண்டுகளில், மூச்சிரைப்பும் காசநோயும் அதிகரித்தன. மக்கள் அவற்றுக்கான
மருந்துகளை உட்கொண்டனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவை
அதிகரித்தன.  இவற்றுக்கான மருந்துகளை மக்கள் கேள்வி கேட்காமல்
உட்கொண்டனர். கல்லீரல் கேடுகள், மனநோய், தூக்கமின்மை, சிறுநீரகச்
சிக்கல்கள் அதிகரித்தன. இவற்றையும் கேள்வி கேட்காமல் கடந்து செல்லும்
போக்கு மக்களிடம் வளர்ந்தது. அடுத்த கட்டமாக, சிறுநீரகச் செயலிழப்பு,
நுரையீரல் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு ஆகிய இறுதிநிலை உருவானது.

அப்போதாவது மருந்துகளின் மீ து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால்,


கல்லீரல் மாற்றுதல், சிறுநீரகம் மாற்றுதல், செயற்கை சுவாசம் ஆகிய
துன்பமான நடவடிக்கைகளை ‘மருத்துவம்’ என்ற பெயரில் மக்கள் போற்றி
வளர்த்தனர். இந்தக் காலகட்டத்தில்தான், சமூகத்தின் பெரும்பகுதியான மக்கள்
நோயாளிகளாக மாற்றப்பட்டிருந்தனர். சாலை ஓரங்களில் குடைக்குக் கீ ழே
நின்றவாறு சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை ‘இலவசமாக’ப்
பரிசோதனை செய்து, கூட்டம் கூட்டமாக நோயாளிகளை ‘உருவாக்கும்’
இழிநிலை நம் சமூகத்தில் வளர்ந்தது. இந்த நிலை குறித்தும் எந்தக்
கேள்விகளை எழுப்பாமல், ‘மருத்துவம் வளர்ந்துவிட்டது’ என மார்தட்டியது
அறிவுச் சமூகம்.

விளைவு, வட்டுக்கு
ீ வடு
ீ நோயாளிகள் என்ற அளவில் நோயாளிச் சமூகம்
உருவாகிவிட்டது. சர்க்கரை நோய் காரணமாக சில ஆண்டுகளாக மருந்துகள்
உட்கொண்ட ஒருவருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதால், அவருக்கு
வழங்கப்பட்ட மருந்துகளும் அதற்கான காரணம்தான் என்ற தகவல்
பெரும்பகுதி மக்களுக்குத் தெரிவது இல்லை. `சர்க்கரையால் சிறுநீரகம்
செயலிழந்ததா... மருந்துகளால் செயலிழந்ததா?’ என்ற கேள்விக்கு உரிய விடை
அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்தக் கேள்வியைக் கேட்டால்தானே, பதில்
சொல்லவேண்டிய தேவை அந்தத் துறையினருக்கு உருவாகும். ஆனால், இங்கே
எவருமே கேள்வி கேட்பது இல்லையே!

எல்லா மருந்துகளின் இணைப்புச் சீட்டிலும் அந்த மருந்துகளின் தீயவிளைவுகள்


எழுதப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் படிப்பதே இல்லை. மக்களுக்காக
இயற்றப்பட்டுள்ள சட்டங்களையும் எவரும் கண்டுகொள்வதே இல்லை. ஆனால்,
நோய் அறியும் பரிசோதனை களின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
‘இனி நீங்கள் ஒரு நோயாளி’ என அறிவிக்கப்படும் மக்கள் எண்ணிக்கையும்
கூடுகிறது. ‘இந்த நோய்களுக்கு எல்லாம் மருந்து இல்லை’ என்ற உண்மை
அறியாமல் மருந்துகளை உட்கொண்டு, அடுத்தடுத்த ஆபத்து நிலைகளுக்குச்
செல்வோர் பெருகுகிறார்கள். 

எந்த வகையான உடல் தொல்லையாக/நோயாக இருந்தாலும், அவற்றைக்


குணப்படுத்தும் வழிமுறைகள் நம் வாழ்வியலில்தான் உள்ளன. 

பசிக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளும் முறைக்கு மீ ண்டும் திரும்புங்கள்.


கடிகாரத்துக்கும் நம் உடல் பசிக்கும் தொடர்பு இல்லை. `உண்ட உணவு செரித்து,
தேவையற்றவை வெளியேறிய பிறகு மறு உணவு உண்போருக்கு எந்த
மருந்தும் தேவை இல்லை’ என்றார் ஆசான் திருவள்ளுவர். நமது
மரபுவழிப்பட்ட உணவுப் பழக்கங்களை மீ ட்டெடுத்தல் ஒன்றுதான், நோயற்ற
வாழ்வுக்கான வழி. நமது உணவுகளே மருந்துகள்தான். 
கடந்த சில ஆண்டுகளாக, தீமைகளைப் பற்றிய அறிவை நாம் அதிகம்
வளர்த்துக்கொண்டோம். எதை அதிகம் அறிந்துகொள்கிறோமோ, அதற்கு
ஆட்படுவோம். இனி, நன்மைகளை அறிந்துகொள்வோம்!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 25
ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

மருத்துவம், நம் சமூகத்தில் வாழ்வியல் முறையாகவே இருந்தது. அதை


முழுநேரத் தொழிலாக மாற்றியது, நவன
ீ மருத்துவம்தான். மருத்துவம் வழியே
கோடிகளைக் குவிப்பதை, அறம் மீ றிய ஒரு செயலாகவே கருதினர். ஆனால்
இப்போது, அதிகாரங்களும் செல்வமும் கொட்டிக்கிடக்கும் துறையாகிவிட்டது
மருத்துவம். வாழ்வியல் நெறிகளைக் கற்றுத்தருவதுதான் ஒரு மருத்துவரின்
கடமை. மருந்துகளைப் பரிந்துரைக்கும் நிலைமையே வராதவண்ணம், தம்மிடம்
வரும் மனிதர்களை வழிநடத்துபவர்தான் சிறந்த மருத்துவர். 

உடல் நலம் என்பது, வாழ்வியல்முறையின் விளைவுதானே தவிர, ஏதோ ஒரு


மருத்துவர் அளிக்கும் வரம் அல்ல. வாழ்வியல் நெறிகளை மட்டும்
முறைப்படுத்திக்கொண்டால், எந்த நோய்க்கும் ஆட்படாமல் நீண்ட ஆயுளுடன்
வாழ முடியும். நமது மரபின் வழிநின்று நோயில்லா வாழ்வு வாழும்
வழிமுறைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பசி, ஓய்வு, உழைப்பு, உடலுறவு - இந்த நான்கையும் மதித்து நடக்கும் எவருக்கும்
நோய் குறித்த அச்சம் தேவை இல்லை. இந்த நான்கும் மனிதர்களுக்கு மட்டும்
அல்ல... எல்லா உயிரினங்களுக்குமான இயல்பான உணர்வுகள். இவற்றின்
அழைப்பை ஏற்றுக்கொள்வோருக்கு, நோய்களின் அழைப்பு இல்லை. 

`ஏன் மனிதர்களுக்கு மட்டும் நோய்கள் வருகின்றன? மான்களுக்கும்


சிறுத்தைகளுக்கும் மருத்துவர்கள் தேவைப்படுவது இல்லையே?' என உங்களை
நீங்களே கேட்டுப்பாருங்கள்.

அமைதியாக அமர்ந்து, இந்தப் பூமியில் உள்ள ஒவ்வோர் உயிரினத்தையும்


மனதில் கொண்டுவாருங்கள். பெருங்கடல்களில் துள்ளும் சிறுமீ ன் கூட்டங்கள்,
அவற்றின் ஆழத்தில் விரையும் சுறாக்கள், திமிங்கிலங்கள், இன்னும் ஆழத்தில்
நகரும் எட்டுக்காலிகள் (ஆக்டோபஸ்), நண்டுகள், ஆமைகள் ஆகியவற்றின்
துடிப்பும் வேகமும் உங்களுக்குள் பரவசத்தை ஊட்டட்டும். 

மலைபோல உயர்ந்த மரங்கள், அவற்றின் உச்சியில் கூடுகட்டி வாழும்


பறவைகள், கிளைகளில் தொங்கும் வெளவால்கள், கூடு கட்டியுள்ள தேன ீக்கள்,
ஏறி இறங்கி விளையாடும் மந்திகள், மரங்களின் கீ ழே நடமாடும் காட்டு
எருமைகள், மான்கள், வேங்கைகள், யானைகள், காண்டாமிருகங்கள் இவற்றை
எல்லாம் உங்கள் மனம் உள்வாங்கட்டும். இன்னும் ஆழமான அமைதியை
உணருங்கள். பாலைவனத்துப் பாம்புகள், பாறைகளில் தாவி ஓடும் மலை
ஆடுகள், ஆறுகளுக்குள் மறைந்து கிடக்கும் முதலைகள், அவற்றின் பிடியில்
இருந்து தப்பும் வல்லமைவாய்ந்த வரிக்குதிரைகள், புல்வெளிகளில் புரண்டு
வெயிலில் காயும் சிங்கங்கள், மரத்துக்கு மரம் தாவும் காட்டு அணில்கள்
இன்னும் பல உயிரினங்கள் உங்கள் சிந்தையில் வந்து நிலைக்கட்டும். 

கண்களை சுகமாக மூடிக்கொண்டு, இந்தப் பூமியில் நம்மோடு வாழும் சக


உயிரினங்களை மனதில் நிறுத்துங்கள். அவற்றின் அழகும் துள்ளலும் உங்கள்
மனதுக்கு வலிமை ஊட்டும் வல்லமைகொண்டவை. ஆம், எந்தக் காட்சியை
உங்கள் மனம் அதிகமாக உள்வாங்குகிறதோ, அந்தக் காட்சியின்
குணத்தைத்தான் உங்கள் உடல் வளர்க்கும். நோய்கள், நோயாளிகள், மரணங்கள்
ஆகியவைதான் உங்கள் மனதில் பதிக்கப்படுகின்றன என்றால், உங்கள் உடல்
அவற்றை நோக்கித்தான் உங்கள் உயிரை அழைத்துச் செல்லும்.
மனம்தான் உடலாகிறது; உடல்நலன்தான் உயிரை உறுதிசெய்கிறது. நோயற்ற
வாழ்வை நோக்கிய பயணத்தை, மனிதர்களிடம் இருந்து தொடங்காதீர்கள்.
பூமியின் சக உயிரினங்களிடம் இருந்து கற்றுக்கொண்டு தொடங்குங்கள்.
ஏனெனில், உண்மையான உடல்நலன் அவற்றிடம் மட்டுமே இருக்கிறது. 

தெருவில் அலையும் நாய்களின் உடல்நலன், மனிதர்களின் உடல்நலனைவிட


சிறப்பானதாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து நோய்களைக்
கற்றுக்கொள்ளலாம்; மற்ற உயிரினங்களிடம் இருந்து நலத்தைக்
கற்றுக்கொள்ளலாம். 

நோய்களில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால்,


உங்கள் மனதின் தனிமையை நீங்கள் உணர்ந்தே தீர வேண்டும். மாடுகளையும்
ஆடுகளையும் பாருங்கள். இரை தேடி முடித்ததும், அவை தமக்கான
தனிமையை அனுபவிக்கின்றன. மேய்ச்சல் காடுகளில் ஓயாமல் குரல்
எழுப்பிக்கொண்டிருக்கும் ஆடு - மாடுகள், மேய்ச்சல் முடிந்ததும் அமைதியில்
ஆழ்வதைப் பாருங்கள். சிட்டுக்குருவிகள், வெளவால்கள், பருந்துகள் உள்ளிட்ட
பறவைகள் யாவும் அடையும் வரை குரல் எழுப்புவதையும், அடைந்த பிறகு
அமைதியடைவதையும் புரிந்துகொள்ளுங்கள். கண்ணுறங்கும் இறுதிக் கணம்
வரை ஏதேனும் ஓர் இரைச்சலுக்குச் செவிசாய்க்கும் கெடு குணம், நவன

மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது. 

மனதின் தனிமையையும் அமைதியையும் உணரவேண்டியது ஒவ்வோர்


உயிருக்குமான இறைக் கட்டளை. எல்லா பரபரப்புகளில் இருந்தும் விடுபட்டு,
அமைதியை நாடும் வழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். மாலை முதல் காலை
வரை அமைதியில் மூழ்கிக்கிடக்கும் மனம், அதிகாலையில் புத்தெழுச்சியுடன்
புறப்படும். பறவைகளும் பிற உயிரினங்களும் அதே நேரத்தில் ஓயா
ஓசையுடன் எழும்புவதைப் பாருங்கள். 

இவ்வளவு தெளிவாக அமைதி அடையும் மனிதர்களின் மனதில் பசி, ஓய்வு,


உழைப்பு, உடலுறவு ஆகிய நான்கு இயல்பான உணர்வுகளும் குடிகொள்ளும்.
பசியை அறிந்துகொள்வது, இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நீண்ட
பயணத்தின் குறுக்கு வழி. எவர் ஒருவர் ஒவ்வொரு வேளை உணவையும்
பசியை உணர்ந்து உட்கொள்கிறாரோ, அவரது உடல் எந்தச் சூழலிலும்
வலுப்பெறும் தகுதிகொண்டதாக இருக்கும். நமது உடல், உணர்வுகளால்
இயங்கும் அற்புதப் படைப்பு; அறிவால் கட்டப்பட்ட கணிப்பொறி அல்ல. உடலின்
ஒவ்வோர் அசைவுக்கும் உணர்வுதான் உத்தரவிட வேண்டும். அறிவு, அந்த
உத்தரவுகளைச் செயலாற்றுவதற்கு உதவிசெய்ய வேண்டும். பசி என்பது
உணர்வு. அந்த உணர்வின் கட்டளைக்கு ஏற்ப உடலில் செரிமானச்சுரப்பிகள்
தூண்டப்படுகின்றன. பசிக்கும்போது உணவு உட்கொள்வோருக்கு, செரிமானம்
சுமுகமாகவும் ஆற்றல் மிகுந்ததாகவும் உள்ளது. ஏனெனில், அவர்கள் தங்கள்
உணர்வை மதிக்கிறார்கள். 

மாறாக, பசித்தாலும் பசிக்காவிட்டாலும் நேரம் பார்த்துச் சாப்பிட வேண்டும்


என்ற அறிவின் அறிவுரையைக் கடைப்பிடிப்போர், உடல்நலனை இழக்கிறார்கள்.
ஏனெனில், அவர்கள் உணர்வை இழந்து அறிவை அரவணைத்துக்
கொள்கிறார்கள். பசிக்காமல் உணவு உட்கொள்வது என்பது, தேவை இல்லாத
நேரத்தில் வயிற்றுக்குள் உணவைத் திணிப்பதாகும். உடல் கேட்காமல் உள்ளே
திணிக்கப்படும் அமுதமும் நஞ்சாகத்தான் மாறும். 

செரிமானத்துக்காகவே உள்ள அமிலச் சுரப்பிகள் செயல்படும் முறைக்கும்


உணவுக்கும் உறவு உண்டு. உங்களுக்கு பசி எனும் உணர்வு உருவாகும்போது,
செரிமானச் சுரப்பிகள் தயாராகின்றன. உணவை நீங்கள் காணும்போதும்,
உணவைப் பிசையும்போதும், வாயில் மெல்லும்போதும் அந்தச் சுரப்பிகளின்
அளவும் குணமும் மாறுபடும். ஒருவர் இட்லி உண்கிறார். மற்றவர் இறைச்சி
உண்கிறார். இருவருக்கும் ஒரே அளவில் குணத்தில் சுரப்பிகள் சுரந்தால்
நிலைமை என்னாகும்? ஒன்று, இட்லி உண்பவரின் வயிறு புண்ணாகும் அல்லது
இறைச்சி உண்பவரின் உணவு செரிக்காமல் அப்படியே இருக்கும். இயற்கையில்
இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவது இல்லை. நீங்கள் என்ன உணவை
உண்கிறீர்களோ, அதற்கு ஏற்பதான் சுரப்பிகள் செயலாற்றும். 

கடிகார நேரத்தைப் பார்த்து, `இதுதான் செரிமானத்துக்கான நேரம்’ என


முடிவுசெய்துவிட்டு, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட அளவிலும் அடர்த்தியிலும்
சுரந்து காத்திருக்கும் செயற்கை அறிவு அல்ல நம் உடலின் சுரப்புகள். அவை
யாவும் படைப்பின் மெய்யறிவுகள். அந்த மெய்யறிவுக்குத் தேவை, பசி எனும்
உணர்வுதானே தவிர காலக்கணக்கு அல்ல. பசியின்மை அல்லது பசிக்குறைவு
ஆகியவை உடல்நலம் குன்றியுள்ளதைக் காட்டும் அறிகுறிகள். ஒருவருக்கு
பசியில் குறைபாடு இருக்கிறது என்றால், அவரது செரிமான மண்டலத்தில்
சீர்க்கேடு உள்ளது எனப் பொருள். பசியை உணரும் பக்குவம் இருந்தால்தானே,
செரிமானம் எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இந்தக் காலத்து நோயாளிகளுக்கு விரிக்கப்பட்ட முதல் வலை, ‘நேரம் பார்த்துச்


சாப்பிடுங்கள்’ என்ற அறிவுரைதான். இந்த வலையில் சிக்கினால்போதும்,
அனைத்து வகையான நோய்களும் உடலுக்குள் படையெடுத்துவிடும். ஏனெனில்,
பெரும்பாலான நோய்கள் செரிமானச் சீர்க்கேட்டால் உருவாகின்றன; பசிக்காமல்
திணிக்கப்படும் உணவு, செரிமான மண்டலத்தைக் கெடுக்கின்றன.

தொப்பை அல்லது பெருவயிறு என்பது, பல நோய்களின் வெளிப்பாடு. நலம்


மிகுந்த உடலில் பெருவயிறு இருக்கக் கூடாது. இயல்பாகவே வயிறு சற்று
பெரிதாக இருப்பதை நான் குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு
வயிறு பெருத்துக்கொண்டேபோவதைக் குறிப்பிடுகிறேன்.
பெருவயிறு விழுவதற்கான முதல் காரணம், பசிக்காமல் உண்பது. பசி எனும்
அழைப்பு இல்லாதபோது உள்ளே தள்ளப்படும் உணவு முழுமையாகச் செரிப்பது
இல்லை. குடலிலும் இரைப்பையிலும் நீண்ட நேரம் தேங்கியிருக்கும் உணவில்
இருந்து காற்று உருவாகிறது. இதுதான் பெருவயிற்றின் முதல் அடி. பசியின்றி
உண்டவர்களின் உடலில் காற்று மிகுவதை அவர்களாலேயே உணர முடியும்.
அடுத்த வேளை உணவையாவது பசிக்கும் வரை தள்ளிவைத்தால், உள்ளே
உருவான காற்று ஏப்பமாகவும் ஆசனவாய் வழியாகவும் வெளியேறி வயிறு
தூய்மையாகும். பின்னர் பசிக்கும்போது உணவு கொண்டால், செரிமானம்
எளிதாகும்; காற்றுத் தேக்கத்துக்கும் வாய்ப்பு இல்லை.

இப்போது நம் சமூகத்தில் உருவாகியுள்ள பெருவயிற்றுத் தொல்லையை, கடந்த


காலத்தில் எவரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது. பெரும்பாலோர்
பெருவயிற்றுடன் இருக்கிறார்கள். நமது வயிற்றில் உள்ள குடலும்
இரைப்பையும் விரிந்துகொடுக்கும் தன்மைகொண்டவை. மிகையான உணவு
உள்ளே வந்தாலும் அவற்றை உள்ளே வைத்துக்கொள்ளும்படியான படைப்புகள்
அவை. பசிக்காமல் தொடர்ந்து உணவு உள்ளே தள்ளப்பட்டால், இரைப்பையும்
குடலும் புடைத்துக்கொண்டே இருக்கும். 
உணவு செரித்துவிட்டால், வயிறு சுருங்கி சுகமான உணர்வு உடல் முழுவதும்
நிறைந்திருக்கும்; உடல் எடை இழந்ததுபோல இருக்கும்; எந்தச் செயலையும்
விரைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இந்த நிலையுடன்
பணிகளில் ஈடுபடும்போது, பசி உருவாகும். அந்தப் பசியும் சுகமான உணர்வாக
இருக்கும். இந்த நிலையில்தான் அடுத்த வேளை உணவு உட்கொள்ள
வேண்டும். இந்த இரு வேளைகளுக்குமான இடைவெளி எவ்வளவு நேரம்
என்பதைக் கணக்கிடாதீர்கள். 

பசித்தால் மட்டுமே சாப்பிடுவோருக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் பசி


உருவாகும். அதுதான் அவர்களுக்கான உணவு நேரம். பசிக்காமல் சாப்பிடும்
வழக்கத்தில் இருந்து, பசித்துச் சாப்பிடும் இயல்புக்கு மாறும்போது
தொடக்கத்தில் கால இடைவெளியில் சீரற்ற தன்மைகள் இருக்கலாம். அதைப்
பற்றிக் கவலைப்படாமல், பசிக்காகக் காத்திருந்து சாப்பிடுங்கள்.

அலுவலகப் பணிகள் காரணமாக, பசிக்கும்போது உணவுக்குச் செல்ல


இயலாதவர்கள், எப்போதும் கஞ்சி அல்லது கூழ் வகைகளை
வைத்துக்கொள்ளலாம். பசி தொடங்கும்போது இவற்றைப் பருகினால், சிறிது
நேரத்துக்குப் பசி தணியும். 

தேநீர், பலகாரங்கள், ரொட்டிகள், பானங்கள் போன்றவற்றை பசிக்கும்போது


உட்கொள்வதை நிறுத்திவிட்டு, கஞ்சி /கூழ் வழக்கத்துக்கு மாறுங்கள். உடல்
நலம் என்பது, நோய்களில் இருந்து விடுபடுவது அல்ல; கேடு செய்யும்
வாழ்க்கைமுறைகளில் இருந்து விடுபடுவது.

`பசி என்றால் எப்படி இருக்கும்?’ என்ற கேள்வியை, பலர் என்னிடம் கேட்பது


உண்டு. இறைக்காட்சி கிடைக்கும் வரை காத்திருப்பதுதான் தவம். பசியை
உணரும் வரைக்கும் உண்ணாது இருப்பதுதான் பசியை உணரும் வழி. அதுதான்
நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் பாதை!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 26
ம.செந்தமிழன் - ஓவியம்: ஹாசிப்கான்

உணவுப் பழக்கங்களை மட்டும் முறையாகப் புரிந்துகொண்டால், எந்த நோயைக்


கண்டும் அஞ்சத் தேவை இல்லை. எந்த மனிதர் தனது உடலுக்கும்
உணவுக்குமான உறவை மதித்து நடக்கிறாரோ, அவரே ஒரு மருத்துவர்தான்.
நமது மரபுவழிப்பட்ட கொள்கைகளின் வெளிச்சத்தில் இருந்து அவ்வாறான
உணவுப் பழக்கங்களை உங்களிடம் தெரிவிக்கிறேன்.

ஐம்பூதக் கொள்கை (பஞ்சபூதக் கொள்கை) என்பதுதான் நம் முன்னோர்


கடைப்பிடித்த அடிப்படைக் கோட்பாடு (Theory). கட்டடக் கலை, சிற்பக்கலை,
வானியல், கப்பல் கட்டும் கலை, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத்
துறைகளுக்கும் அடிநாதம் ஐம்பூதக் கொள்கைதான். மருத்துவத்துக்கும் இதுவே
அடித்தளம். 

‘ஐம்பூதங்களால் ஆனதுதான் இவ்வுலகம்’ என தொல்காப்பியர் பதிவுசெய்தார்.


சங்க இலக்கியங்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள்
யாவும் ஐம்பூதங்களைத்தான் அடிப்படை அறிவியல் காரணிகளாகக்
கொண்டுள்ளன. இந்த ஐம்பூதங்களையும் வாதம், பித்தம், கபம் என மூன்றாகச்
சுருக்கியது சித்த மருத்துவம்.
இந்த மூன்றும் உடலில் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்றார்
ஆசான் வள்ளுவர். உணவுப் பழக்கங்களின் வழியே இந்தச் சமநிலையைக்
கடைப்பிடிக்கும் எளிய குறிப்புகளைக் குறிப்பிடுகிறேன்.
நமது மரபு வழிப்பட்ட உணவுக்கொள்கையின் அடிப்படைகள் மூன்று:

1. பசிக்கும்போது மட்டும் உண்ண வேண்டும்.

2. எந்த நிலத்தில் வாழ்கிறோமோ, அந்த நிலத்தில் இயற்கையாக


விளைபவற்றை உண்ண வேண்டும்.

3. உணவின் தன்மைகள் அறிந்து உண்ண வேண்டும்.

பசியைப் பற்றி ஏற்கெனவே விளக்கிவிட்டதால், அடுத்த நிலைகளுக்குச்


செல்வோம். தமிழகத்தில் இயற்கையாக விளையும் எல்லா பொருட்களும்
நமக்கான உணவுகள்தான். கேரட், பீன்ஸ் போன்றவைகூட இயற்கைமுறையில்
விளைகின்றன. அவை நமக்கான உணவுகள்தான். உணவுப்பொருட்களைப்
பொறுத்தவரை, எந்த விளைபொருளை நிலம் ஏற்றுக்கொண்டதோ, அதை நாமும்
ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் மரபியல். பழைமைவாதக் கருத்துக்களில்
இருப்போர், இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மரபு என்பது, காலமாற்றத்துக்குத்
தேவையான கருத்துக்களை உள்வாங்கி வளர்வது. இயற்கை எதை
ஏற்றுக்கொள்கிறதோ, அதை மனிதர்களும் ஏற்கத்தான் வேண்டும். இந்த
அடிப்படையில் தமிழகத்தில் இயற்கையாக விளையும் அனைத்தும் நமக்கான
உணவுகள்தான்.
அடுத்ததாக, உணவின் தன்மைகளைப் புரிந்துகொள்வோம். எல்லா
விளைபொருட் களிலும் ஐம்பூதங்கள் உண்டு. ஆனால், ஒவ்வொரு
விளைபொருளிலும் ஏதேனும் ஒரு பூதம் கூடுதலாக இருக்கும். `இது
வாயுப்பண்டம்', `இது சூடு தரும் பொருள்’ என்று எல்லாம் மூத்தோர்
பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். ஒரு விளைபொருளைக் கண்டதும் அதில் எந்தப்
பூதம் மிகுதியாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள சில எளிய வழிமுறைகள்
உள்ளன.

காற்று மிகுதியாக உள்ள பொருட்களைப் பார்ப்போம். எல்லா வகையான


பருப்புகளும் பயறுகளும் காற்றுப் பொருட்கள்தான். துவரம் பருப்பு, பாசிப் பருப்பு,
கடலைப் பருப்பு போன்றவற்றில் காற்று மிகுதியாக இருக்கும். துவரைச்
செடிகளைப் பாருங்கள். அவற்றில் துவரைப் பிஞ்சுகள் முளைக்கும்போது,
முதலில் வானத்தைப் பார்த்தவாறு செங்குத்தாக இருக்கும். அவை வளர வளர,
படுக்கைவசத்தில் இருக்கும். துவரை எப்போது படுக்கைவசத்தை அடைகிறதோ,
அப்போது அதில் காற்று மிகுந்துவிட்டது எனப் பொருள். படுக்கை நிலையில்
உள்ள துவரை முற்றி காயத் தொடங்கியதும் அறுவடையாகும். இந்தப்
பருப்புதான் நமக்கான உணவாகிறது. 

கொத்தவரங்காய் அல்லது சீனி அவரைக்காய் செடிகளும் இதேபோலத்தான்.


அவற்றின் பிஞ்சுகள் முதலில் வானை நோக்கிச் செங்குத்தாக இருக்கும்.
வளரும்போது பக்கவாட்டில் காணப்படும். அந்த நிலையில்தான் அறுவடை
செய்யப்படும். நவன
ீ தாவரவியலில் இவற்றை `இருவித்திலைத் தாவரங்கள்'
என்பார்கள். இவை யாவும் காற்றில் இருந்து தழைச்சத்து உறிஞ்சும்
திறன்மிக்கவை என்பதும் நவன
ீ தாவரவியல் பாடம்தான். இதைத்தான் நமது
மரபுவழிப்பட்ட புரிதலில் இருந்து உங்களுக்கு விளக்குகிறேன்.

தட்டைப்பயறு, காராமணி, கொண்டைக் கடலை, மொச்சை, அவரை போன்றவை


காற்று மிகுதியாக உள்ள பொருட்கள். உடலில் காற்றுத் தொல்லைகள்
உடையோர், இந்த உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
தேவைப்பட்டால், சில காலத்துக்கு முற்றிலும் தவிர்ப்பது சிறப்பு.

இதே பயறுகள் காய்ந்துபோகாமல் நீர்த்தன்மையுடன் இருந்தால், அவற்றில்


காற்றும் நீரும் கலந்திருக்கும். இந்த நிலையில் அவற்றைச் சமைத்து உண்பது
நன்மை தரும். துவரைத் தோட்டங்களில் இருந்து துவரைக் காய்களைப் பறித்து
அவித்து உண்ணும் வழக்கம் நம்மிடம் இருந்தது. இதேபோல, தட்டை, காராமணி,
மொச்சை ஆகியவற்றையும் உண்ணுதல் நமது கிராமங்களில் இருந்த
அருமையான உணவுப் பழக்கம். பொங்கல் உணவில் மொச்சையைப் பச்சையாக
அவித்து, பிற காய்கறிகளுடன் சேர்த்து உண்ணும் வழக்கத்தை
நினைத்துப்பாருங்கள். 

பயறுகளும் பருப்புகளும் நீர்த்தன்மையுடன் இருக்கையில், மிகுந்த நன்மை தர


வல்லவை. அவை காய்ந்து உலர்ந்துவிட்டால், நீர் குறைந்து காற்று
மிகுந்துவிடும். இவ்வாறு காற்று மட்டும் கூடுதலாக உள்ள எந்த உணவும்
செரிமானத்துக்குச் சிக்கல் தரத்தக்கது.

நிலக்கடலைப் பிஞ்சுகள் முதலில் செங்குத்தாக நிலத்துக்குள் நுழையும்.


பின்னர், வளர்ச்சிப் போக்கில் படுக்கைவசமாக மேல் நோக்கி நிமிரும். அவை
படுக்கை நிலை அடைந்த பின்னர் அறுவடை ஆகும். இவ்வாறு படுக்கை
நிலையில் இருக்கும் நிலக்கடலையில் பால் அதிகமாக இருக்கும்.
`பச்சைக்கடலை' என அழைப்போம். பச்சைக்கடலைகளை அவித்து உண்பது
சிறந்த உணவுப் பழக்கம். பால் மாறாத கடலைகளைப் பொரியலாகச்
சமைப்பதும் சிறந்த உணவு. நன்கு உலர்ந்த நிலக்கடலைகளில் காற்றின் குணம்
மிகுந்துவிடும். இவற்றை வறுத்து உண்டாலும் செரிமானம் சரியாக இருக்காது.
இதனால்தான், வறுத்த நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்துச் சாப்பிடும்
முறையை நம் முன்னோர் கடைப்பிடித்தனர். ஏனெனில், இனிப்பு சுவை
செரிமானத்தைத் தூண்டவல்லது.

கொத்தவரை, வெண்டை ஆகிய இரு காய்களைப் பாருங்கள். இவை இரண்டும்


செங்குத்து நிலையில் இருக்கும்போது அறுவடை செய்தால்தான், அவை
சமைப்பதற்கு ஏற்ற பிஞ்சுக்காய்கள். இவை படுக்கை வசத்துக்குச் சாயத்
தொடங்கினால் முற்றிவிடுகின்றன. அதாவது காற்று மிகுந்த
காய்களாகிவிடுகின்றன.

பல காய்கள் முளைக்கும்போது, வானைப் பார்த்து செங்குத்தாகத்தான்


இருக்கின்றன. இந்த நிலையில் அவற்றில் வெப்பத்தின் தன்மை கூடுதலாக
இருக்கும். வானில் இருந்து இறங்கும் வெப்பத்தை உள்வாங்கி வளரவேண்டிய
தேவை அவற்றுக்கு இருப்பதால், இவ்வாறு வான் பார்க்கின்றன. அவரைக்
கொடியில் உள்ள பிஞ்சுகளும் இப்படித்தானே முதலில் வானை நோக்கிச்
செங்குத்தாக இருக்கின்றன! வெப்பத்தை உள்வாங்கினால்தான் விரைவாக வளர
முடியும். குறுகியகாலப் பயிர்கள் அனைத்தும் இவ்வாறுதான்
நடந்துகொள்கின்றன. அவரைப் பிஞ்சுகளில் நீர் இருக்கும். அவை வளர வளர, நீர்
குறைந்துபோகும். நன்கு முற்றிய அவரைக் காய்களின் விதைகளைப் பாருங்கள்.
கடினமானவையாகிவிடுகின்றன. அந்த நிலையில் உள்ளவை நமக்கான
உணவுகள் அல்ல. 

நெற்பயிர்களும் முதலில் செங்குத்தாகத்தான் பிஞ்சுவிடுகின்றன. செங்குத்து


நிலையில் அவற்றில் பால் இருக்கிறது. இந்தப் பால் வற்றித்தான் அரிசி
ஆகிறது. நெல்லை அறுவடை செய்யும்போது, அது காற்று மிகுந்த பொருள்தான்.
நீரில் ஊறவைத்து அவித்து அரைத்த பிறகுதான் அரிசியில் உள்ள காற்று
குறைந்து நீர்த்தன்மை உருவாகிறது. அவிக்காமல் அரைக்கப்படும் `பச்சரிசியில்
வாயு அதிகம்’ என, கிராம மக்கள் கூறுவதை இப்போதும் கவனிக்கலாம்.
ஏனெனில், நெல்லை ஊறவைக்காமல் அரைத்தால், அதில் நீர்த்தன்மை
அதிகரிக்கும் வாய்ப்பே இல்லாமல்போகிறது அல்லவா!

புழுக்கம் என்றால், வெப்பமும் ஈரமும் இணைந்திருப்பது எனப் பொருள்.


அதாவது காற்று குறைவாக உள்ள நிலையைத்தான் `புழுக்கம்' எனக் கூறுவது
நம் வழக்கம். புழுங்கல் அரிசி என்பது, காற்று குறைவாகவும் நீரும் வெப்பமும்
சற்றே கூடுதலாகவும் உள்ள அரிசி.
ஒருவருக்கு உடலில் செரிமானச் சிக்கல்கள் இருப்பதை எப்படி எல்லாம்
அறிந்துகொள்ளலாம் என்பதற்கு, சில குறிப்புகளைத் தருகிறேன்.

பசி இன்மை, பசி மந்தம் ஆகியவை இரண்டும் முக்கியமான அறிகுறிகள். நேரம்


பார்த்துச் சாப்பிடாமல் பசிக்கும் வரை காத்திருந்தால்தான் இந்த அறிகுறிகளைப்
புரிந்துகொள்ள முடியும். ஒருவர் பசிக்கும் வரை காத்திருந்து உணவு உண்கிறார்.
அவருக்கு மீ ண்டும் பசிப்பதற்கு அதிகமான நேரம் ஆகிறது என்றால், அவருக்கு
செரிமானத்தில் சீரற்ற நிலை உள்ளது எனப் பொருள். அதிகமான நேரம்
என்பதை அவரவர் நடைமுறையில் கண்டுகொள்ளலாம். நீண்டநேரம் ஆகியும்
பசிக்கவில்லை என்பதற்காக, கவலைப்படத் தேவை இல்லை. எப்போது
பசிக்கிறதோ, அப்போது மட்டும் சாப்பிடும் வழக்கத்தைக் கடைப்பிடித்து
வந்தால்... சில நாட்களில் பசியின் அளவும் கால இடைவெளியும் சீரான
நிலைக்கு வந்துவிடும்.

அதிகமான ஏப்பம், மலச்சிக்கல் ஆகிய இரண்டும் செரிமானச் சிக்கலின்


அறிகுறிகள். இவற்றை நீங்களே உங்கள் அன்றாட அனுபவங்கள் வழியே
அறிந்துகொள்ளலாம். 
செரிமானச் சிக்கல்கள் உள்ள அனைவரும் காற்று குறைவான நிலையில்
உள்ள காய்கறிகள், தானியங்களை உட்கொண்டால், மிக விரைவாக உடல்
தன்னைச் சீரமைத்துக்கொள்வதை உணரலாம். வழக்கமாக நான் கூறும் எளிய
வழி இதுதான், ‘உடல் சீராகும் வரை பருப்பு, பயறுகளைக்
குறைத்துக்கொள்ளுங்கள். சீரான பின்னர் இவற்றைக் குறைந்த அளவில்
பயன்படுத்துங்கள்.’

ஐம்பூதக் கொள்கை வழியில் சென்று இயற்கையைப் பார்வையிட்டால்,


ஒவ்வொரு தாவரமும் நமக்கு நிறையப் பாடங்களை நடத்தக் காத்திருக்கிறது.
பசி, என்பது வெப்பம் எனும் பூதத்தின் வெளிப்பாடு. ஆம், உங்களுக்குப் பசிக்கிறது
என்றால், உங்கள் உடலில் வெப்பம் அதிகரித்துள்ளது எனப் பொருள். இந்த
வெப்பம்தான் உள்ளே வரும் உணவைச் செரிப்பதற்கான மூல ஆற்றல். வெப்பம்
இல்லாத உடலுக்குள் திணிக்கப்படும் உணவு, வயிற்றுக்குள் செரிமானம்
ஆகாமல் அழுகிப்போகும். `தொப்பை' எனப்படும் பெருவயிறு உருவாவதற்கான
காரணங்களில் இதுதான் முதன்மையானது. நீரில் நுண்ணுயிர்கள்
பல்கிப்பெருகும். வெப்பம் உருவானால்தான், அந்த நுண்ணுயிர்கள்
சிதைக்கப்படும். இதுதான் இயற்கை விதி. இந்த விதிதான் உடலுக்குள்ளும்
செயலாற்றும்.

உணவு, எளிதில் செரிமானம் ஆகும் தன்மையில் இருக்க வேண்டும். வெப்பம்,


நீர் ஆகியவை மிகுதியாகவும் காற்று குறைவாகவும் உள்ள எந்த
உணவுப்பொருளும் எளிதில் செரிக்கக்கூடியது. சமையல் முறைகளிலும் இந்தப்
பக்குவத்தை நீங்கள் கடைப்பிடிக்கலாம். இட்லி, இடியாப்பம் ஆகியவை
வெப்பமும் நீரும் இணைந்த முறையில் சமைக்கப்படுபவை. இவற்றின்
செரிமானத்தன்மை எவ்வளவு எளிதாக உள்ளது!
இயற்கையும் இவ்வாறுதான் நமக்காகச் சமைத்துவைத்துள்ளது. நாம்
இயற்கையின் மொழியைப் புரிந்துகொண்டால் மட்டும் போதுமானது!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 27
ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

`செரிமானம்' என்ற சொல்லின் பொருளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.


உணவில் உள்ள ஆற்றலை உட்கொண்டு, மீ தம் உள்ளவற்றை வெளியே
தள்ளும் செயல்தான் `செரிமானம்'. இந்த விளக்கம் சுருக்கமாக இருந்தாலும்,
சற்று கவனம் செலுத்தி உள்வாங்கவேண்டியது அவசியம். இதுதான் நமது மரபு
உணவுக்கொள்கைகளின் அடித்தளம். 

ஒருவர் உண்ணும் உணவு மலமாக வெளியேறிவிட்டால், அவருக்கு செரிமானம்


சீராக உள்ளது எனப் பொருள் அல்ல. அந்த உணவில் இருந்து தேவையான
ஆற்றலை அவரது உடல் பிரித்து எடுத்துக்கொண்டதா என்பதுதான்
முக்கியமானது. ஆற்றலைப் பிரிக்கும் செயலில் குறைபாடு இருந்தால்,
செரிமானம் சீர்கெட்டுள்ளது எனப் பொருள்.

பசிக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளும் வழக்கத்தில் இருப்போருக்கும்,


செரிமானச் சீர்கேடுகள் இருப்பது உண்டு. அதாவது, அவர்களது உடல் தனக்குத்
தேவையான ஆற்றல்களைப் பிரிக்காமல் மலமாக, நீராக அனுப்பிவிடும். இதன்
விளைவாக உடல் பலவனம்
ீ அடைந்துகொண்டே இருக்கும். இந்தப் பலவனம்,

பலவகையான நோய்களுக்கு வழிவகுக்கும். 

`பசித்தால் போதும். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்ற பழக்கம்


இப்போது உள்ளது. தவறான உணவுப் பழக்கங்களால்தான் நம் சமூகம்
நோயாளிகளின் கூடாரமாக மாறியது. `பசிக்கும்போது உண்ணுதல்’ எனும்
கொள்கை, நம் மரபில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதுதான். இந்தக்
கொள்கையோடு, ‘உணவுக் கொள்கை’யும் இணைந்துதான் இருந்தது என்பதை
மறந்துவிடக் கூடாது.

`மாறுபாடு இல்லாத உணவை உண்டால், உயிருக்கு ஊறுபாடு இல்லை’ என்றார்


நம் ஆசான் திருவள்ளுவர். உடலின் இயல்புக்கு மாறுபாடு இல்லாத உணவை
உண்ண வேண்டும் என்பது அவரது அறிவுரை. 
நமது உடலும் உணவும் ஐம்பூதங்களின் சேர்க்கைதான். நமது உடலின்
தன்மைக்கு ஏற்ப உணவைத் தேர்ந்தெடுப்பது, நலமான உடலுக்கான
தகுதியாகும். நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ள காய்கறிகள், தானியங்களில்
ஐம்பூதங்களின் சேர்க்கை எவ்வாறு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது,
உணவைத் தேர்ந்தெடுப்பதற்கான எளிய வழி.

நீர், வெப்பம் ஆகிய இரண்டும் கலந்த நிலையில் உள்ள எல்லா காய்களும்


தானியங்களும் அனைவருக்குமான உணவுகள். அவை பிஞ்சுக் காய்கள்,
புழுங்கல் அரிசி உள்ளிட்ட தானியங்கள்.  காய்கள் முற்றும்போது அவற்றில் நீர்
குறைந்து காற்று மிகும். ஆகவேதான் பிஞ்சுக் காய்கள் சிறப்பானவை. அரிசி
மட்டும் அல்லாமல் சீர்தானியங்களையும் புழுங்கலாக உண்பது
செரிமானத்துக்கு உகந்தது. பச்சையரிசி, பச்சை தானியங்கள் முற்றிலும்
தவிர்க்கவேண்டியவை அல்ல; அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள
வேண்டியவை. 

சித்த மருத்துவக் கோட்பாட்டில் உள்ள மூன்று அடிப்படைப் பொருட்கள் –


வாதம், பித்தம், கபம். வாதம் என்பது, காற்றும் நிலமும் கலந்த நிலை. பித்தம்
என்பது, நீரும் வெப்பமும் திரிந்த நிலை. கபம் என்பது, நீரும் காற்றும் இணைந்த
நிலை. இவை மிக ஆழமான பாடங்கள் என்றாலும், ஓர் அறிமுகத்துக்காகக்
குறிப்பிட்டுள்ளேன். உடலில் வாதம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால்,
உணவில் காற்றும் நிலமும் மிகக் கூடாது. 

ஒரு காய்கறித் தோட்டத்துக்குப் பயணம் செல்வோம். இந்தத் தோட்டத்தில் நாம்


அன்றாடம் பயன்படுத்தும் எல்லா காய்கறிகளும் இருக்கின்றன. இவற்றில்
எவை எல்லாம் காற்றும் நிலமும் குறைவாக உள்ள காய்கள் எனத்
தெரிந்துகொள்வோம். எந்தக் காய்கள் முற்றத் தொடங்கிவிட்டனவோ, அவை
எல்லாம் நீர்த்தன்மையை இழந்து, காற்றின் தன்மையை
உள்வாங்கிக்கொண்டுள்ளன என்பது முதல் பாடம். நிலத்தின் தன்மைக்கு மாறிய
காய்கள் எவை எனக் கண்டுபிடிப்பது அடுத்த பாடம். எந்தக்  காய்களில் 
விதைகள் கடினமாகிவிட்டனவோ, அவை எல்லாம் நிலத்தின் தன்மைக்கு
மாறிவிட்டன எனப் பொருள்.

கத்திரிச் செடிகளைப் பாருங்கள். ஒரு செடியில் பிஞ்சுக் காய்கள் இருக்கின்றன.


இந்தக் காய்களை அறுத்துப்பார்க்கையில், நீர்த்தன்மையுடன் உள்ளன. இவற்றின்
விதைகள் சின்னஞ்சிறியவையாக மிகவும் மென்மையாக உள்ளன. இந்த
விதைகளை நிலத்தில் தூவினால், அவை முளைக்காது. ஏனெனில், இவை
இன்னும் முற்றவே இல்லை. வேறு ஒரு கத்திரிச் செடியைப் பாருங்கள். இதன்
காய்கள் முற்றத் தொடங்கிவிட்டன. இவற்றின் உள்ளே ஈரப்பதம் குறைவாக
உள்ளது; விதைகள் சற்றே கடினமாக உள்ளன. இந்த விதைகளை நிலத்தில்
போட்டால், முளைக்காது. ஏனெனில், இந்த விதைகள் இன்னும் முழுமையாக
முற்றவில்லை. 

இந்த இரு வகையான கத்திரிக்காய்களையும் நாம் உண்ணலாம். பிஞ்சுகள், ஓர்


அளவு முற்றியவை... இரண்டும் நமக்கான உணவுகள்தான். இவற்றில் உள்ள
வேறுபாடுகள் என்னவென்றால், பிஞ்சுக் காய்களில் காற்று குறைவு; சற்றே
முற்றியவற்றில் காற்று கூடுதலாக உள்ளது. நிலத்தின் தன்மையும் இவற்றில்
உருவாகத் தொடங்கிவிட்டது. பிஞ்சுகள், முதல் தரமானவை. அடுத்த வகையில்
உள்ளவை இரண்டாம் தரமானவை.
சுரைக்காய்க் கொடிகளுக்கு அருகே செல்வோம். சுரைக்காய்கள் எல்லாம்
நீர்க்காய்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவர்கள்.
ீ பரங்கி (அரசாணி), பூசணி
(வெண்பூசணி), பீர்க்கன், புடலை ஆகியவை எல்லாம் நீர்க்காய்கள். இவற்றின்
தோற்றத்தைப் பாருங்கள். இந்தக் காய்களைத் தரும் தாவரங்கள் எல்லாம்
கொடி வகைகளாக உள்ளன. இந்தக் கொடிகள் எல்லாம் மேல் இருந்து கீ ழ்
நோக்கி காய்களை அனுப்பும் குணம்கொண்டவை. பரங்கி, பூசணி ஆகியவையும்
மரங்கள், புதர்கள், வேலிகள் மீ து ஏறும் தன்மைகொண்டவை. இவற்றோடு
பாகற்காயையும் கோவைக்காய்களையும் இணைத்துக்கொள்ளலாம்.

இந்தக் காய்கள் அனைத்தும் நீர்த்தன்மை கொண்டவை. இவற்றில்


காற்றின்தன்மை அதிகரிப்பது எப்போது என்றால், இவற்றின் விதைகள்
முற்றும்போதுதான். எல்லா நீர்க்காய்களிலும் முற்றியவற்றில் நீர்த்தன்மை
குறைவாக இருப்பதைக் கவனிக்கலாம். 

நீர்க்காய்களில் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளவேண்டிய மற்றொன்று


முள்ளங்கி. இது ஒரு கிழங்கு வகை என்றாலும், நீர்த்தன்மை மிகுந்த
குணம்கொண்டது. முள்ளங்கியும் முற்றத் தொடங்கிவிட்டால், அதன் நீர்த்தன்மை
குறைந்து சதைப்பற்று முழுவதும் பஞ்சுபோல மாறிவிடும். இதே காலத்தில்,
முள்ளங்கியின் பூக்கள் எல்லாம் விதைகளாக மாறிப்போயிருக்கும். 

விதைகளுக்கும் நிலத்துக்கும் உள்ள உறவை நன்கு புரிந்துகொண்டால்,


காய்களைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம். எவை எல்லாம் விதை நிலைக்கு
மாறிவிட்டனவோ, அவை எல்லாம் நிலத்தின் தன்மைக்கு மாறியவை. 
நம் தோட்டத்தில் உள்ள கீ ரைப் பாத்திகளுக்குச் செல்வோம். தண்டுக்கீ ரை,
முளைக்கீ ரை, பொன்னாங்கண்ணிக்கீ ரை, சிறுகீ ரை, அறுகீ ரை(அரைக்கீ ரை),
பசலைக்கீ ரை, மணத்தக்காளிக் கீ ரை இவை எல்லாம் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் கீ ரை வகைகள். இவற்றை விதை வழியாகப் பரவுபவை, தண்டு
வழியாகப் பரவுபவை என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்கொள்வோம்.

முளைக்கீ ரை, தண்டுக்கீ ரை, அறுகீ ரை, சிறுகீ ரை, புளிச்சக்கீ ரை போன்றவை
விதை வழியாகப் பரவுபவை. இந்தக் கீ ரைச் செடிகள் பூக்கும் முன் அறுவடை
செய்தால், அவை நல்ல உணவுகள். இந்த நிலையில், அவற்றில் நீரும்
வெப்பமும் கூடுதலாக இருக்கும். பூக்கத் தொடங்கிவிட்டால் காற்றும்
வெப்பமும் கலந்திருக்கும். பூக்களில் இருந்து விதைகள் தோன்றத்
தொடங்கினால், காற்று, வெப்பம், நிலம் ஆகிய மூன்றும் இருக்கும்.

பசலை, பொன்னாங்கண்ணி போன்ற தண்டு வழி பரவும் கீ ரைகள், தண்டுகள்


நீர்த்தன்மையுடன் இருக்க வேண்டும். அதுதான் உண்ணத் தகுந்த நிலை. இந்தக்
கீ ரைத்தண்டுகளை ஒடித்து நடவு செய்தால், அவற்றின் முளைக்கும் திறன்
குறைவாக இருக்க வேண்டும். மாறாக, இவற்றின் முளைப்புத் திறன் அதிகமாக
இருந்தால், அவற்றில் காற்று, வெப்பம், நிலம் ஆகியவை கூடுதலாகிவிட்டன
எனப் பொருள். 

இப்போது ஒரு பாடம் தெளிவாகப் புரிந்திருக்கும். எவை எல்லாம் முளைக்கும்


தன்மைக்கு வந்துவிட்டனவோ, அவை எல்லாம் நிலத்தின் குணம்கொண்டவை.
நிலத்தின் குணம் கூடுதலாக உள்ளவை நமக்கான உணவுகள் அல்ல. இது
பொதுவான விதி. 

காய்கள், கீ ரைகள் ஆகிய இரண்டும் இளம் பருவத்தில் இருப்பதுதான் உடலுக்கு


உகந்தது. தானியங்களிலும் புழுங்கல் முறையில் அரைக்கப்பட்டவை
சிறப்பானவை. இந்த இரண்டு செய்திகளுடன் உணவுப் பழக்கங்களுக்குள்
செல்வோம்.
வாதம் மிகுந்த உடல்கொண்டோர், மேற்கண்ட புரிதல்களுடன் காற்று மிகுந்த
உணவுகளைத் தவிர்ப்பதும் குறைப்பதும் நன்மை தரும். குறிப்பாக, நீர்த்தன்மை
குறைந்த உணவுகளை எந்த அளவுக்குத் தவிர்க்கிறார்களோ, அந்த அளவுக்கு
வாதம் நீங்கும். உணவு சமைக்கும் முறையிலும் இந்தச் செய்திகளை
இணைத்துப் புரிந்துகொள்ளுங்கள். சோறு, இட்லி, பொங்கல், இடியாப்பம், புட்டு
ஆகியவை நீரும் வெப்பமும் கலந்த முறையில் சமைக்கப்படுபவை. இவை
அனைத்தும் சிறந்த உணவுகள். தோசை, ரொட்டி, சப்பாத்தி போன்றவை
நீர்த்தன்மையை வற்றச்செய்யும் முறையில் சமைக்கப்படுபவை. இந்த வகை
உணவுகள், வாதத்தின் அளவை உயர்த்தவல்லவை. தோசை சாப்பிட்டால்,
கூடுதலான வறட்சி உருவாவதைக் கவனித்திருப்பீர்கள். ஏற்கெனவே,
வாதம்கொண்ட உடலுக்கு இது நல்ல நிலை அல்ல. 

இவ்வாறாக சுட்டுச் சமைக்கப்படும் உணவுகளை வாதம்கொண்டோர்


குறைத்துக்கொள்ளலாம். வாய்ப்பு இருந்தால் குறிப்பிட்ட காலத்துக்கு முற்றிலும்
தவிர்க்கலாம். உடல் நிலை சீரானதும் இந்த வகை உணவுகளை
உட்கொள்ளலாம். 
பயறுகள், பருப்பு வகைகள் ஆகியவை காற்றும் நிலமும் மிகுந்தவை என்பதால்,
அவற்றைக் குறைப்பது மிக முக்கியமானது. அதேவேளை, இவை இரண்டும்
நமது உடலுக்குத் தேவையான ஆற்றல் தரவல்லவை என்பதால், இவற்றை
உண்ணும் முறையில் ஒரு மாறுதலைச் செய்துகொள்ளலாம். காற்றும் நிலமும்
அதிகமாக இருக்கும் பயறு, பருப்பு, தானியங்களை ஒரு செயல்முறையின்
வழியாக சீரான உணவாக்க முடியும். இதுவும் நமது மரபுவழிப்பட்ட
மெய்யறிவின் விளைவுதான்.

ஐம்பூதங்களுக்கும் உணவுக்கும் உள்ள உறவை தெள்ளத்தெளிவாகப்


புரிந்துகொள்ள, இந்தச் சிறிய செயல்முறை உங்களுக்கு உதவியாக இருக்கும். 

ஒரு விதை எப்போது முளைக்கும் என்ற கேள்விக்கு விடை தேடுவோம். வெளி


(ஆகாயம்), காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களும் சீராகச்
செயல்பட்டால் மட்டும்தான் ஒரு விதை முளைக்கும். மாறாக, காற்று, வெப்பம்,
நீர், நிலம் ஆகிய நான்கில் எந்த பூதம் கூடுதலாக இருந்தாலும் அந்த விதை
முளைக்காது. வெளி என்பது, எல்லா இடங்களிலும் உள்ள பூதம் என்பதால்,
அதை நம்மால் வரையறுக்க இயலாது. அது படைப்பின் வசம் உள்ள
முழுமுதற்பூதம். ஆகவே, வெளி தவிர்த்த மற்ற நான்கு பூதங்களும் சீராக உள்ள
நிலைதான் உயிர் வளரும் பக்குவம்.

பயறுகளும் பருப்புகளும் அரிசி தவிர்த்த தானியங்களும் காற்று, நிலம், வெப்பம்


ஆகியவை மிகுந்தவை எனக் கண்டோம். இவற்றில் நீர்த்தன்மை மிகக்
குறைவாக இருக்கும். நீர் வறண்ட எந்த உணவும், காற்றை அதிகரிக்கச்
செய்யும். இதே பயறு, பருப்பு, தானியங்களை முளைகட்டவைத்து உண்டால், அது
மிகச் சிறந்த உணவாகிவிடும். ஐம்பூதங்களும் சீராக இருந்தால்தானே
முளைவரும். முளைவிட்டவற்றை உணவாகக்கொண்டால், அந்த உணவு
ஐம்பூதச் சமநிலையுடன் இருக்கும் அல்லவா!

இதுதான் முளைகட்டிய உணவுகளின் சிறப்புத்தன்மை. 

பயறு, பருப்பு ஆகிய காற்றுப் பண்டங்களைத் தவிர்க்கவேண்டியவர்கள்


அவற்றை முளைகட்டவைத்து உண்டால், உடலுக்குத் தேவையான ஆற்றலும்
கிடைக்கும்... செரிமானச் சிக்கலும் உருவாகாது. மிக முக்கியமாக, இந்த
உணவுகளால் உடலில் காற்று அதிகரிக்காது!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 28
ம.செந்தமிழன், ஓவியம்: ஹாசிப்கான், படம்: வி.பால் கிரேகோரி

ஆசான் திருமூலர் உரைத்துச் சென்ற மந்திரங்களில் முதன்மையானது,


‘அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது’ என்பது. இந்த உலகில் எவை
எல்லாம் உள்ளனவோ, அவை எல்லாம் உடலிலும் உள்ளன. பூமியில் முக்கால்
பங்கு நீர் உள்ளது; நம் உடலிலும் முக்கால் பங்கு நீர் உள்ளது. உப்புநீர்தான்
பூமியில் அதிகம்; உடலிலும் உப்புநீர்தான் அதிகம். பூமியில் உள்ள
நச்சுக்காற்றை, உப்புநீர்தான் அதிக அளவில் தூய்மையாக்குகிறது; நம் உடலிலும்
உப்புநீர்தான் நச்சுக்களை அகற்றுகிறது. உப்புநீர் பூமியில் மிகுந்தால்,
உயிரினங்களின் வாழ்க்கை சிதையும்; உடலிலும் உப்புநீர் மிகுந்தால் உயிர்
சிதையும்.

பூமியில், காற்று என்ன செய்கிறது எனப் பாருங்கள். காற்று என்பது, ஆற்றல்


கடத்தும் பூதம். ஓர் இடத்தில் உள்ள ஆற்றலை மற்ற இடங்களுக்கு எடுத்துச்
செல்வதுதான் காற்று. புயல் எனும் காற்றுதான் மேகத்திரளை
இழுத்துவருகிறது. தென்றல் எனும் காற்றுதான் மலைக்காடுகளின் குளிர்ச்சியை
அழைத்துவருகிறது. காற்றின் செயல்பாடுகள் வழியாகத்தான் மழை
பொழிகிறது. உடலில், காற்றுதான் உயிராற்றலை எல்லா செல்களுக்கும்
அளிக்கிறது. காற்று மண்டலம் நன்றாக இயங்கும் உடலின் எல்லா செல்களும்
புத்துணர்ச்சியுடன் வாழ்கின்றன. காற்று மண்டலம் சீர்கெட்டால் நுரையீரல்
பாதிப்படைகிறது. பின்னர் ஒவ்வோர் உறுப்பாக பாதிப்பு நீள்கிறது. 

பூமியில் வெப்பம் மிகுதியாக இருக்கும் இடங்களில், உயிர்களின் எண்ணிக்கை


மிகக்குறைவாக உள்ளது. பாலை நிலங்களைப் பாருங்கள். அங்கு எல்லாம்
உயிர்களின் எண்ணிக்கையும் வகைகளும் குறைவு. வெப்பம் மிகவும் குறைவாக
உள்ள இடங்களிலும் உயிரினங்கள் மிகக் குறைந்த அளவில்தான் வாழ்கின்றன.
பூமியின் வட, தென் முனைகளில் உள்ள பனிக்காடுகளைப் பாருங்கள். இமயம்
போன்ற மலைப்பகுதிகளைப் பாருங்கள். இங்கு எல்லாம் உயிரினங்களின்
வகைகளும் எண்ணிக்கையும் குறைவே! குளிர் நாடுகளில் மக்கள்தொகையும்
குறைவுதான். 

மிதவெப்பம் நிலவும் ஆசியப் பகுதிகள், ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், தென்


அமெரிக்கப் பகுதிகளில் கணக்கில் அடங்காத உயிரினங்கள் வாழ்கின்றன.
பூமியில் வாழும் உயிரினங்களில் பெரும்பாலானவை இவ்வாறான மிதவெப்ப
மண்டலங்களில்தான் இருக்கின்றன.

உடலிலும் இதே நிலைதான். வெப்பம் அதிகமான உடலில், செல்கள்


உயிர்வாழ்வது இல்லை. வெப்பம் மிகவும் குறைந்த உடல்களில் செல்கள்
உறைந்துவிடுகின்றன. மிதவெப்பம் உள்ள உடல்தான் எப்போதும் துடிப்புடன்
இயங்குகிறது. உடலின் உள்ளுறுப்பு களான கல்லீரல், சிறுநீரகம் ஆகிய
இரண்டையும் இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்ப்போம். 

கல்லீரல், குளிர்ச்சியாக இருக்க வேண்டிய உறுப்பு. இது அதிகமாக


வெப்பமடைந்தால் காமாலை, பித்தம், சிறு கட்டிகள், வக்கம்
ீ போன்ற நோய்கள்
தாக்கும். கல்லீரல் அதிகமான குளிர்ச்சியை அடைந்தால், உடலில் கொழுப்புத்
தேக்கம் உருவாகும். ஏனெனில், கல்லீரலில் சுரக்கும் மிதவெப்பச் சுரப்புகள்
உடலின் கொழுப்புக் களைச் செரிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன. 

சிறுநீரகம், மிதவெப்பத்தில் இருக்கவேண்டிய உறுப்பு. இது அதிக


வெப்பமடைந்தால் சிறுநீரக மண்டலமே பாதிப்படையும். குளிர்ந்தால் சிறுநீர்த்
தேக்கம், கட்டிகள் போன்ற தொல்லைகள் உருவாகி, நாளடைவில் நச்சு
வெளியேற்றும் பணியில் முடக்கம் உருவாகிவிடும்.

பூமி சிறப்பாக இயங்க வேண்டுமானால், படைப்பின் விதிகளில் சீரழிவு


உருவாகக் கூடாது. வட, தென் முனைகளில் உருவாகி யுள்ள கூடுதலான
வெப்பம்தான் இப்போது பூமி எங்கும் உயிர்ச் சூழலைச் சிதைத்துவருகிறது. `புவி
வெப்பமயமாதல்’ (Global Warming) என, இந்தச் சூழலை அழைக்கிறது நவன

சமூகம். இதே நிலைதான் உடல்களிலும் உருவாகிவருகிறது. பூமியில் ஒரு
மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றம் உடலிலும் ஏற்பட்டே தீரும். ஏனெனில், நாம்
அனைவரும் பூமி எனும் பெரிய உடலில் வாழ்கிறோம். நாம் வாழும்
பேருடலில் உருவாகும் மாற்றங்கள் அனைத்தும், நமது உடலிலும்
இருக்கத்தான் செய்யும்.
நம் உடலில் உள்ள செல்கள் யாவும் நமது செயல்பாடுகளால்
மாற்றமடைகின்றன. அதேபோல், பூமியின் செயல்பாடுகளால் இங்கு வாழும்
அனைத்து உயிர்களும் மாற்றமடைகின்றன. நம் உடலில் உள்ள செல்களுக்கு
ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அது நமது ஒட்டுமொத்த உடல் இயக்கங்களையும்
பாதிக்கிறது. அதேபோல், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின்
செயல்பாடுகளால் உருவாகும் பாதிப்புகள் பூமியின் இயக்கத்திலும் பாதிப்பை
உருவாக்கும்.

உணவுப் பழக்கங்களில் ஐம்பூதக் கொள்கைகளை விளங்கிக் கொள்ளும்போது,


இந்த அடிப்படையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், மருத்துவம்
என்பது மனிதர்களுக்கு மட்டுமேயான தனித்துவமான துறை அல்ல. நாம் இந்த
அண்டத்தின் உறுப்பினர்கள். இந்த அண்டத்தின் இயக்க விதிகள்தான்
நமக்குமான விதிகள். அண்டத்தின் விதிகளைப் புரிந்துகொள்ளாமல் உடலின்
விதிகளைப் புரிந்துகொள்ளவே முடியாது. அவ்வாறு முன்வைக்கப்படும்
மருத்துவக் கொள்கைகளால் உடல் நோய்களைத் தீர்க்க முடியாது.

இதனால்தான் மருத்துவத்துக்கான நாடிகளையும் வாதம் (காற்று, நிலம்), பித்தம்


(நீர், வெப்பம்), கபம் (நீர், காற்று) ஆகிய பூதங்களின் சேர்க்கையில் வகுத்தனர் நம்
முன்னோர். மருத்துவம் என்பது, வாழ்க்கைமுறையைக் கற்றுத்தரும்
மெய்யறிவு. நிச்சயமாக, அது உடலைப் பற்றிய பாடங்களைக் கொண்ட அறிவுத்
துறை அல்ல. வாழ்வியலைப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்காமல், நோயற்ற
வாழ்க்கையை அடைய முடியாது. பூமியைப் பற்றிய நவன
ீ அறிவுத்
துறைகளால், பூமியில் உருவாகும் பேரழிவுகளைத் தடுக்க முடியவில்லை
என்பதை இந்தக் காலத்தில் பார்க்கிறோம். அதேபோல்தான், உடலில் உருவாகும்
எந்த நோயையும் வெறும் உடல் குறித்த அறிவைக்கொண்டு தடுக்கவோ,
தீர்க்கவோ முடியாது.
வாழ்வியல்கொள்கைகளைத்தான் நம் மரபு முதன்மையாக வலியுறுத்தியுள்ளது.
உணவுப் பழக்கங்கள், வடு
ீ கட்டும் முறை, வேளாண் முறைகள், தேவைக்கு
அதிகமாக ஆசைப்படாத மனம் ஆகியவற்றைத்தான் நம் முன்னோர்
அறிவுறுத்தினர். இவை எல்லாம் இணைந்த கலவைதான் மருத்துவம்.
வாழ்வியலை ஒழுங்கு செய்யாமல், நோய்களுக்கு மருந்து தேடினால்
ஒருகாலத்திலும் கிடைக்காது.

இந்த அடித்தளத்தில்தான் எனது கருத்துக்களை உங்களுடன்


பகிர்ந்துகொள்கிறேன். உணவுப் பழக்கத்தை வகுத்துக்கொள்ளும் முன், உணவுப்
பொருட்களில் உள்ள ஐம்பூதக் கலவையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
`காய்’ என்றால் வெப்பத்தில் இருத்தல் என்று பொருள். `வெயிலில்
காயவைத்தல்’ என்கிறோம் அல்லவா! காயம் என்பது உடலைக் குறிக்கும்.
தமிழில் ‘அம்’ என்பது பன்மையைக் குறிக்கும் சொல். ஏதேனும் ஒரு பொருள்,
பல பொருட்களாகப் பெருகுவதை இவ்வாறு ‘அம்’ எனும் ஒட்டுச்சொல்லுடன்
குறிப்பது நம் இலக்கணம். `ஆ’ எனும் சொல் உயிர் என்று பொருள்கொண்டது.
இந்த ‘ஆ’வுடன் ‘அம்’ இணைவது அம்மா (அம் + ஆ). உயிர்கள் பல்கிப்பெருகும்
நிலையை உருவாக்குபவர் அம்மா. 

`காய்’ எனும் வெப்பத்துக்கான சொல்லுடன் `அம்’ இணைந்து உருவானதுதான்


காயம் எனும் சொல். வெப்பம் எனும் ஒரு பூதத்தின் விரிவாக்கமும்
பெருக்கமும்தான் `காயம்'. வெப்பம் எனும் பூதம்தான் உயிர்களுக்கு உடல்
தரும். கறி என்பது, `கடித்துத் தின்னுதல்’ என்ற பொருள்கொண்ட சொல். காய்கறி
என்றால், ‘வெப்பத்தில் உருவான கடித்துத் தின்னும் பொருள்' எனலாம். எவற்றை
எல்லாம் கடித்து உண்கிறோமோ, அவற்றையே `கறி' என்று அழைக்கிறோம். 

நமது உடலை `காயம்' என்றும், உணவுப் பொருட்களில் ஒரு வகையை


`காய்கறி' எனவும் அழைத்தனர். வெப்பம் எனும் பூதம்தான் உடல்களை
உருவாக்குகிறது. இந்த வெப்பம் மிகுந்தாலும் குறைந்தாலும் உடல்கள்
சிதையும். 

உணவு வகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மேற்கண்ட புரிதல்களை மனதில்


நிறுத்திக் கொள்ளுங்கள். காய்கறிகளில் எவை எல்லாம் நன்மைதரக்கூடியவை
என்றால், எவற்றில் எல்லாம் வெப்பத்தின் அளவு சீராக உள்ளதோ, அவை
எல்லாம் சிறப்பானவைதான்.
சில காய்களைப் பட்டியலிட்டு அவற்றின் ஐம்பூதத் தன்மைகள் அடிப்படையில்
பிரிப்போம்.

மிதவெப்பம் - கத்திரி, வெண்டை, கொத்தவரை, அவரை, முருங்கை, சுண்டை,


பாகல்.

நீர் - பீர்க்கன், சுரை, புடலை, பரங்கி, பூசணி, முள்ளங்கி, பாகல்.

காற்று – அவரை, பீன்ஸ், மொச்சைக்காய், காராமணி, தட்டைப் பயறு.

நிலம் - கருணை, சேனை உள்ளிட்ட கிழங்குகள்.

அவரை, பாகல் ஆகிய இரண்டும் மிதவெப்பம் மற்றும் நீர் ஆகிய இரு


பட்டியல்களிலும் இடம்பெறுகின்றன. இதுதான் அவற்றின் குணம். மிதவெப்பம்,
நீர்த்தன்மை ஆகிய குணங்கள் கொண்ட காய்கறிகளில் மிதவெப்பத்துக்கு
முன்னுரிமை அளிக்கலாம். நீர்த்தன்மை கொண்டவற்றுக்கு அடுத்த இடம்
தரலாம். 

ஏதேனும் ஓர் உணவுப்பழக்கத்தைத் தெரிந்துகொண்டால் அதை அப்படியே


கண்மூடித்தனமாகப் பின்பற்றுவோர் இப்போது இருக்கிறார்கள். மனப்பாடக்
கல்விமுறையால் உருவான சிக்கல் இது என நினைக்கிறேன். எனது
விளக்கங்களையும் அதுபோல மாற்றிக் கொள்ளாதீர்கள். உணவுப்பொருட்களின்
தன்மைகளை அறிமுகம் செய்கிறேன். இதன் அடிப்படையை நன்றாகப்
புரிந்துகொண்டு சூழலுக்கேற்ப முடிவுசெய்யுங்கள்.

மிதவெப்பம் கொண்ட காய்கள், பொதுவாக எல்லா காலங்களுக்கும் உகந்தவை.


நீர்த்தன்மை கொண்டவையும் இவற்றோடு சேர்ந்தால்தான் அது சீரான
உணவாக இருக்கும். அதேவேளை, நீர்த்தன்மை உணவுகளைக்
கூடுதலாக்கினாலோ, தவிர்த்தாலோ உடலில் உள்ள நீரின் அளவு சீர்கெடும்.
உயிர்களின் உடல் வடிவம் வெப்பத்தினால் அமைக்கப்படுகிறது என்பதால்,
மிதவெப்பக் காய்கள் முதன்மையானவை. அவ்வளவுதானே தவிர,
நீர்க்காய்களிடம்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல.

ஏற்கெனவே குளிர்ந்த உடல் இருக்கும்போது, நீர்க்காய்களைக் குறைக்கலாம்.


ஒருவேளை உடல் வெப்பம் கூடுதலாக இருந்தால், மிதவெப்பக் காய்களைக்
குறைத்துவிட்டு நீர்க்காய்களை அதிகரித்துக்கொள்ளலாம். இதுபோல,
சூழல்களுக்கு ஏற்ப காய்கறி வகைகளைத் தெரிவுசெய்யுங்கள்.

கிழங்குகள் அனைத்தும் நிலத்தின் தன்மைகொண்ட காய்கள். ஐம்பூதங்களில்,


இறுதிநிலையில் உள்ளது நிலம். மற்ற நான்கு பூதங்களும் முழுமையான
வடிவம் எடுத்தால் அதுதான் நிலம். இதற்கு மேல் மாறுவதற்கு வடிவம்
இல்லை. காற்று வெப்பமாக மாறும், வெப்பம் நீரை உருவாக்கும், நீரில் நிலம்
தோன்றும். ஆனால், நிலத்தில் இருந்து வேறு எதுவும் தோன்றாது. மாறாக, நிலம்
மீ ண்டும் நீராக, காற்றாக, வெப்பமாக திரும்பிச் செல்லும். இதுதான் படைப்பின்
ஐம்பூத விதி.
ஆகவே, நிலத்தின் தன்மைகொண்டவை அனைத்தும் செரிவானவை. அதாவது
அதிகமான ஆற்றல்களைத் தம்முள் வைத்திருப்பவை. நிலத்தின் உள்ளே காற்று,
வெப்பம், நீர் ஆகிய அனைத்தும் மிகுதியாகவே இருக்கும். பழங்குடிகள் கிழங்கு
வேட்டையாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? 

ஏதேனும் ஒரு கிழங்கை அகழ்ந்து எடுத்து விட்டால், அந்தக் கிழங்கை மட்டுமே


சாப்பிட்டு ஒருநாள் முழுவதும் ஆற்றலோடு இயங்குவார்கள். இதுதான்
கிழங்கின் தனித்தன்மை. உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்குக்
கிழங்குகள் செரிமானச் சிக்கலை உருவாக்கத்தக்கவை. அதேவேளை,
கிழங்குகளில் பொதிந்துள்ள ஆற்றல்களைத் தவிர்ப்பதும் மிகவும் தவறானது.
ஆகவே, கிழங்குகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

சமையல்முறைகளில் கிழங்குகளை அவித்துச் சமைக்கும் வழக்கம் கூடுதல்


நன்மை தரும். அவிக்கும்போது, நிலத்தின் தன்மை நீரால் சிதைக்கப்படுகிறது. நீர்
சிதைத்த பிறகு அந்த நிலம் எளிதில் செரிக்கப்படும். நமது உடலுக்கும் பூமிக்கும்
இது பொருந்தும். சிந்தித்துப்பாருங்கள்!

- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 29
ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

‘ஊழ்’ எனும் சொல்லை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். `ஊழ்’ என்பது மிக


விரிவாக விளக்கவேண்டிய கருத்து. இதைச் சுருக்கமாகவும் எளிமையாகவும்
குறிப்பிட விரும்புகிறேன். எல்லா செயல்களுக்கும் அந்தச் செயல்களின்
விளைவுகளால் உருவாகும் மறுசெயல்கள் உண்டு. `வினைப்பயன்’ என்று
இதைக் குறிப்பிடுவது நம் மரபு வழக்கம். எந்த வினை (செயல்) செய்தாலும்,
அதற்கான மறுவினையை அனுபவித்தே தீர வேண்டும். ஒரு பந்தை சுவரில்
அடித்தால், அது எதிர்வினையாற்றி வசப்பட்ட
ீ திசைக்கே மீ ண்டும் வரும் என்ற
பாடத்தை, நியூட்டன் கொள்கையாக அனைவரும் படித்திருப்போம். நான்
குறிப்பிடுவது அவ்வாறான பொருள் சார்ந்த கொள்கை அல்ல.

மனித மனதின் செயல்பாடுகளில் உருவாகும் வினைகளுக்கான


மறுவினைகளைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன். ஒருவர் தன் மனதில்
என்னென்ன எண்ணங்களைப் பதித்துக்கொள்கிறாரோ, அவ்வளவு
எண்ணங்களுக்குமான மறுவினைகளை அவர் அனுபவிக்க வேண்டும். அவரது
எண்ணங்கள்தான் அவருடைய வினைகளாகின்றன. ஆகவே, அந்த
வினைகளுக்கான மறுவினைகள் அவரை வந்து சேரும். இதுதான் வினைப்பயன்
எனும் பொருளின் அடிப்படை.
`ஊழ்வினை’ என்று நம் மரபில் இதைத்தான் குறித்தார்கள். ஆசான்
திருவள்ளுவர் ‘ஊழ்’ என்று அதிகாரமே இயற்றினார். `ஒருவர் எத்தனைக் கோடி
பொருட்களைச் சேர்த்திருந்தாலும், அந்தப் பொருட்களை அவர் அனுபவிப்பாரா...
மாட்டாரா என்பதை, படைத்தவர் வகுத்த விதிகள்தான் முடிவுசெய்யும்’ என்பது
அவற்றில் ஒரு குறள். மனதின் அறச்சிந்தனைக்கு மாறாக வினைசெய்து
சேர்க்கும் எல்லா பொருட்களும், சேர்ப்பவருக்குத் துன்பத்தைத்தான் தரும்
என்பது இதன் உட்பொருள்.

‘ஊழிற் பெருவலி யாவுள’ எனும் குறள் மேலும் வலிமையான மந்திரம்.


வினைப்பயனில் இருந்து தப்புவதற்காக ஒருவர் முயற்சிகள் செய்தால்,
வினைப்பயனாகிய ஊழ், அந்த முயற்சிகளை எல்லாம் முந்திக்கொண்டு சென்று
வென்றுவிடும் என்பது இதன் கருத்து. தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் இந்தக்
கருத்துக்களை மனதில் பதித்துக்கொண்டு நடப்போருக்கு தீவினைகள் நேருவது
இல்லை. `ஊழ்’ என்றாலே தீமைகளை மட்டும் செய்யும் எனப் பொருள் அல்ல.
`ஆகூழ்’ எனும் சொல்லை ஆசான் வள்ளுவர் கையாண்டிருக்கிறார்.
நன்மைகளை வாரித்தரும் ஊழ்வினைகளை `ஆகூழ்’ என்கிறார். தீமைகளைக்
கொண்டுவரும் வினைப்பயன்களைப் ‘போகூழ்’ என்கிறார். 

`தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது நம் மரபில் தோன்றிய போற்றத்தக்க


மெய்யறிவாளர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனார் அருளிய மந்திரம்.
இவை அனைத்தும் ஒரு செய்தியை நம்மிடம் அறிவிக்கின்றன. `நீங்கள்
என்னென்ன வினைகளைப் புரிகிறீர்களோ, அவை அனைத்துக்குமான
மறுவினைகள் உங்களை வந்து சேரும்’ என்பதுதான் அந்தச் செய்தி. உடல்நலக்
கேடுகளுக்கு மருத்துவம், புவியின் சூழல் கேடுகளுக்குச் சூழலியல் என்ற
வகையில் தனித்தனியாகக் கொள்கைகள் வகுக்கும் நவனச்
ீ சிந்தனைகள்
புரிந்துகொள்ளாத செய்தியும் இதுதான்.
எந்தச் சமூகத்தில் மனிதர்களின் உடல்நலம் மோசமடைகிறதோ, அதே
சமூகத்தின் புவிச் சூழலும் சீரழிந்துதான் இருக்கும். ஏனெனில், இவை இரண்டும்
தனித்தனியானவை அல்ல. திருமூலர் உரைத்தவாறு, ‘அண்டமும் பிண்டமும்
ஒன்றுதான்’. டெல்லியில் காற்று மாசுபட்டுவிட்டது என்றால், அங்கு உள்ள
மக்களின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பொருள். சென்னையில்
வெள்ளமும் புயலும் தீவிரத் தாக்குதல் நடத்துகின்றன என்றால், அங்கு வாழும்
மக்கள் உடல் நலம் இழந்துகொண்டுள்ளனர் என்றும் பொருள். 

`ஊழ்’ எனும் வினைப்பயனில் இருந்து தப்புவது இயலாதது. டெல்லி, சென்னை


மாநகரங்களில் உருவாகியுள்ள சூழல் கேடுகளைப் பாருங்கள். டெல்லியைச்
சுற்றிலும் உள்ள பகுதிகள் யாவும் மிகப்பெரிய தொழிற்சாலைகளால்
சீரழிக்கப்படுகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை, வடுகளில்
ீ பயன்படுத்தப்படும்
குளிர்சாதனப் பெட்டிகள், மின்னணுப் பொருட்கள் (electronincs) போன்றவை
எல்லாம் கூட்டுசேர்ந்து அங்கே சூழலைச் சீரழிக்கின்றன. `தீபாவளிப்
பட்டாசுகளாலும், வயல்களில் கொளுத்தப்பட்ட வைக்கோல் பொதிகளாலும்தான்
இவ்வளவு சீரழிவுகள்’ என்று அரசு சார்ந்த அமைப்புகளும் பல ஊடகங்களும்
கருத்து கூறியுள்ளன. இவ்வாறு எல்லாம் கருத்து தெரிவிப்பதும் வினைதான்.
இந்த வினைகளுக்கான பயனையும் அனுபவிக்கத்தான் வேண்டும். 

சென்னை மாநகரமும் அதைச் சுற்றி உள்ள காஞ்சி, திருவள்ளூர்


மாவட்டங்களும் ஈவுஇரக்கம் இல்லாத வகையில் வஞ்சிக்கப்பட்டுவிட்டன.
திரும்பெரும்புதூர் எனும் அழகிய கிராமம் இப்போது தொழிற்சாலைப்
புகைபோக்கிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. திருமழிசை எனும் வைணவத்
திருத்தலம், இப்போது வட்டுமனைக்
ீ கொள்ளைகளுக்கான பலிபீடமாகிவிட்டது.
எண்ணூர், வியாசர்பாடி, பாடி, அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் வசும்

காற்று, நஞ்சாக மாறியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடிநீர்
கடினத்தன்மை மிகுந்துவிட்டது.
காற்று, நீர் ஆகிய இரு பூதங்களும் சீர்கெட்ட பிறகு, `நிலம்’ எனும் நல்லாள்
நிம்மதியாக வாழ வாய்ப்பே இல்லை. நிலமும் தனது துன்பங்களுக்கான
மறுவினைகளை ஆற்றத் தொடங்கினால், நிலைமையை வார்த்தைகளில்
விவரிக்க இயலாது.

நமது மரபுக்கொள்கைகளின்படி, இவை யாவும் ஊழ்வினைகள்தான். பொதுவான


சுற்றுச்சூழல் கொள்கையாக இந்தச் சிக்கல்களைப் பேசுவதில் எனக்கு
உடன்பாடு இல்லை. சுற்றுச்சூழலியல் என்பது ஓர் அறிவியல். அதன் அடித்தளம்
மனித சமூகத்தின் வாழ்வியலைச் சீர்திருத்துவதாக இருக்க வேண்டும்.
வெகுசிலர்தான் அவ்வாறான புரிதலுடன் செயலாற்றுகிறார்கள். கடந்த 25
ஆண்டுகளாக புவி எங்கும் செயலாற்றிய சூழலியலாளர்கள், எவ்வளவோ
நற்செய்திகளை உரைத்துள்ளனர். ஆனால், ‘மரம் நடுவதுதான் சூழலுக்கு
உகந்தது’ என்ற ஒரே ஒரு கருத்தை மட்டும் இந்தச் சமூகம் தூக்கிப்
பிடித்துக்கொண்டுள்ளது. 

மரம் நடுவது, சிறப்பான செயல்தான். ஆனால், அதைவிட முக்கியமானது


சூழலைச் சீரழிக்கும் தொழில் துறைகளை நிராகரிப்பதும், தடைசெய்வதும்
என்பதை, இந்தச் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. உண்மையில்
மரக்கன்றுகளை நடுவது, சூழலைக் காக்கும் பணியில் முக்கியமான
செயல்திட்டம் அல்ல. ஏனெனில், மனிதர்களின் நவன
ீ நடவடிக்கைகளால்
அழிந்துவரும் ஆறுகள், காடுகள், உயிரினங்கள், கடல் பகுதிகள் ஆகியவற்றால்
உருவாகும் தீய விளைவுகளை மரங்களால் எள்ளளவும் தடுக்க முடியாது. 

ஒரே ஒரு புயல் பல்லாயிரம் மரங்களைச் சாய்த்துவிட்டு நகர்ந்ததை, கடந்த


சில நாட்களுக்கு முன் பார்த்தோம். சென்னையும் பிற பகுதிகளும்
தொழிற்பெருக்கம், நகர்ப்பெருக்கம், இயற்கை வளச் சுரண்டல் ஆகியவற்றால்
பாதிக்கப்படுகின்றன. இவற்றை நிறுத்தாமல் எத்தனை கோடி மரங்கள்
நட்டாலும், வேள்விகள் நடத்தினாலும் தப்பிக்க இயலாது. ஏனெனில், மனிதர்கள்
தாங்கள் செய்யும் வினைகளுக்கான பயன்களைத்தான் அறுவடை செய்வார்கள்.
ஒரு பக்கம் பாவ நதியில் நீராடுவது, மறுபக்கம் புண்ணிய தீர்த்தத்தைப்
பருகுவது என படைப்பின் விதிகளை ஏமாற்ற இயலாது.

`எதனால் இந்தக் கேடு சூழ்ந்ததோ, அதை விட்டொழிப்போம்’ என்று சிந்தித்தால்,


வினைப்பயன்களில் இருந்து விலகலாம். இது ஊழிக்காலம் என்பது என் கருத்து.
இதே கருத்தை நவன
ீ வார்த்தைகளில் ‘புவிவெப்பக் காலம்’ என்றும்
அழைக்கலாம். புவி வெப்பமயம் குறித்த ஆய்வறிக்கைகளைப் படித்துப்பார்த்தால்
மனம் நடுங்கும். சென்னை, மும்பை, அந்தமான் உள்ளிட்ட பகுதிகள்
‘கடல்கொள்ளும்’ ஆபத்தில் உள்ளவை என அந்த அறிக்கை உரைக்கிறது.
இதைப் பற்றி எந்த அரசுத் துறையும் பேசுவதும் இல்லை... செயலாற்றுவதும்
இல்லை. உண்மையைச் சொல்வதானால் சென்னை, மும்பை போன்ற ஆபத்துப்
பட்டியலில் உள்ள பகுதிகளில் இருந்து படிப்படியாக மக்களை வெளியேற்றும்
செயல்திட்டத்தை இந்த அரசுகள் உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம், இந்தப்
பகுதிகளில் உள்ள சூழலைச் சிதைக்கும் தொழிற்சாலைகளைக் குறைக்க
வேண்டும். 

மிக முக்கியமாக, இந்தப் பகுதிகளில் வந்து குவியும் மக்கள்தொகையையாவது


வரையறுக்க வேண்டும். இவ்வாறான செயல்திட்டங்களை, எந்த அரசும்
காகிதத்தில்கூட எழுதவில்லை. புவி வெப்பமயமாதலின் விளைவுகளைத்
தடுக்கும் நோக்கில்தான் தேசியப் பேரிடர் நிவாரணக் குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களால் எந்தப் பேரழிவையும் தடுக்க
முடியாது. வெள்ளத்தில் மிதப்பவர்களை, படகுகளில் ஏற்றலாம். முறிந்து விழுந்த
மரங்களை அறுத்து ஓரம் கட்டலாம். இந்தக் குழுக்களில் பணியாற்றுவோரின்
தன்னலமற்றச் செயல்கள் போற்றத்தக்கவைதான். ஆனால், இது தீர்வு அல்ல! 

அறிகுறிகளை மட்டுமே கணக்கில்கொண்டு மருந்து தரும் அரைகுறை


மருத்துவரைப்போல, புயல், வெள்ளம் போன்ற இடர்களை மட்டும் சமாளிக்கும்
ஏற்பாடுகளைத்தான் அரசுகள் செய்துவருகின்றன. 
ஒருவேளை, எந்த அரசாவது மேற்கண்ட செய்திகளை மக்களிடம்
அறிவித்துவிட்டு, ‘இனிமேல் தொழிற்சாலைகளைக் குறைக்கப்போகிறோம்.
குடிமக்களாகிய நீங்களும் தொழிற்சாலைகளைச் சாராத வாழ்க்கைமுறையைக்
கடைப்பிடியுங்கள்’ என்று அறிவித்தால், அதை இந்தச் சமூகம் ஒப்புக்கொள்ளுமா
எனச் சிந்தித்துப்பாருங்கள். `மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்’
என்ற ஒரே ஓர் அறிவுரை, நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. எந்த
நேரமும் சுழலும் மின்விசிறிகள், கொஞ்சம் குளிர் குறைந்தாலும்
முடுக்கிவிடப்படும் குளிர்சாதனப் பெட்டிகள், மாடிப்படிகள் இருந்தும்
இயக்கப்படும் மின்தூக்கிகள் (Lift), ஊரே அடங்கிய பிறரும் விடிய விடிய
ஒளிரும் கடைகளின் முகப்பு விளக்குகள், பெயர்ப் பலகைகள், அறைக்கு ஒன்று
என அலறும் தொலைக்காட்சிப் பெட்டிகள் என மின்சாரத்தை அளவுக்கு
அதிகமாகவே விரயம்செய்யும் போக்குதான் வளர்த்துள்ளது. 

நமக்கு சுற்றுச்சூழலும் நன்றாக இருக்க வேண்டும், மின்சார உற்பத்தியும்


அதிகரிக்க வேண்டும் என்றால், நாம்தான் புதிதாக பூமி ஒன்றைப் படைத்து,
அதற்கேற்ற விதிகளை வகுத்துக்கொள்ள வேண்டும். 

`அடிப்படைத் தேவைகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும்


எடுத்துக்கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமாக எள்ளளவு எடுத்தாலும் அதன்
பயனை அனுபவித்துக்கொள்ளுங்கள்’ - இதுதான் நாம் வாழும் இந்தப் பூமியில்
உள்ள விதி.
நமது உள்ளங்கை, பாதங்கள் மற்றும் தோல் பகுதிகளில் மிக அதிகமான
நுண்ணுயிரிகள் தங்குகின்றன. புறச்சூழலில் இருந்து நம் மீ து அப்பிக்கொண்டு
அந்தப் பகுதிகளிலேயே வாழ்கின்றன அவை. இந்த நுண்ணுயிரிகளின்
எண்ணிக்கை பெருகிவிட்டால், நமது உடல் நலம் கெடும். உடலின் உள்ளிருந்து
சுரக்கும் வியர்வை அந்த நுண்ணுயிரிகளை அழிக்கும். வியர்வையில் உள்ள
உப்பு, நுண்ணுயிரிகளை அப்புறப்படுத்தவல்லது. உடலின் உள்ளேயும் உப்பு இதே
பணியைச் செய்யும்.

உப்புதான் பூமியின் மிகச்சிறந்த கிருமிக்கொல்லி. ஊறுகாய், மீ ன் மற்றும்


இறைச்சி வற்றல் ஆகிய பதப்படுத்தும் பொருட்களில் உப்பு சேர்ப்பதும் இதே
காரணத்தினால்தான். உப்பு அதிகமாக இருக்கும் இடத்தில் நுண்ணுயிரிகள்
வளராது. கடல் நீரில் ஏன் உப்பு இருக்கிறது எனச் சிந்தியுங்கள். கடல் நீர்தான்
நம் பூமியின் உயிர்ச் சூழலைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த
பூமியின் சூழல் கெடும் அளவுக்கு உயிரிகள் பெருகினால், அந்த உயிரிகளை
அழிப்பதற்காக, கடல் நீர் நிலத்துக்குள் நுழையும். 

மனித குலத்தின் வயது என்ன என, இதுவரை உறுதியாக எவராலும் கூற


முடியவில்லை. ஆனால், நாம் வாழும் பூமிக்கு மனிதர்களைவிட
கோடானுகோடி ஆண்டுகள் வயது அதிகம். அது, நிறைய உயிரினங்களைப்
பார்த்துவிட்டது. நமது அறிவும் செருக்கும் அதன் ஒரு குலுங்கலுக்குச் சமம்
அல்ல.
பூமியின் உடலில் அப்பிக்கொண்டுள்ள சின்னஞ்சிறிய நுண்ணுயிரிகள் நாம்.
நமக்கு வாழ்க்கை மீ து எவ்வளவு விருப்பம் உள்ளதோ, அதேபோன்ற விருப்பம்
நமது வருங்காலச் சந்ததிக்கும் உண்டு. நமது பேராசைகள், நமது சந்ததியினரின்
வாழும் உரிமையைப் பறித்துவிடக் கூடாது. அது மிகப்பெரிய பாவம். 

எந்த அளவுக்கு எளிமையாகவும் இயற்கை விதிகளுக்குக் கீ ழ்ப்படிந்தும் வாழ


முடியுமோ, அந்த அளவுக்கு வாழ்வோம். 

‘கேட்டால் கொடுப்பதும், பிடுங்கினால் அழிப்பதும்’ இறைக் குணங்களில் ஒன்று.


இயற்கை விதிகளும் இதே குணம் கொண்டவைதான். நாம் தேவையானவற்றை
மட்டும் வேண்டி வாழ்வோம்!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 30
ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

உயிர், மனம், உடல் ஆகிய மூன்றையும் புரிந்துகொள்வோருக்கு, துன்பம்


இருப்பது இல்லை. இந்த மூன்றையும் அறிதல்தான், ‘தன்னை அறிதல்’
எனப்படுகிறது. `உடல்' எனும் எளிய பாடத்தைப் படித்துவிட்டால், மனதுக்குள்
நுழைவது மிக எளிதாகிறது. மனதின் இயக்கத்தை உணர்ந்துவிட்டால், உயிரின்
இயல்புகள் தெளிவாகப் புரிகின்றன. உடலைப் புரிந்துகொள்ளுதல் என்பது,
மருத்துவக் கொள்கை அல்ல; அதுதான் இறையியலின் அடிப்படை. எவர்
எல்லாம் உடல்களைப் பற்றிய மெய்யறிவைப் பெறுகிறார்களோ, அவர் எல்லாம்
இறைநிலையை எட்டுகிறார்கள். இதனால்தான், அகத்தியர் முதல் வள்ளலார்
வரை வந்த சித்தர்களும் இறையியலாளர்களும் மருத்துவர்களாகவும்
இருந்தனர்.
உடலின் இயக்கங்களையும் நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளும்போதெல்லாம்,
பிரபஞ்சத்தின் குணம் தெளிவாகிறது. ஏனெனில், ஆசான் திருமூலர்
உரைத்தவாறு, அண்டம்தான் பிண்டம்.

அண்டத்துக்கும் பிண்டத்துக்குமான உறவுச்சங்கிலிகள் பல. அவற்றுள்


முதன்மையானது என நான் கருதுவது, கல்லீரல். மனதின் செயல்பாடுகளுக்கு
உறுதுணையாக இருக்கும் உறுப்புகளில் கல்லீரல் ஈடுஇணையற்றது. மூளை,
நரம்புக் கோளாறுகளுக்கும் கல்லீரல் பாதிப்புக்குமான உறவை நவன

மருத்துவமும் விளக்கிக்கொண்டுதான் உள்ளது. 

அண்டத்துக்கும் உடலுக்குமான உறவை எளிதில் புரிந்துகொள்வதற்கு, ஓர்


ஒப்புமையை முன்வைக்கிறேன். உள்ளுறுப்புகளுக்கும் புற உறுப்புகளுக்குமான
உறவைப் பாருங்கள். நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், மண்ண ீரல்
ஆகிய ஐந்து உள்ளுறுப்புகளின் பிம்பங்கள், மனித முகத்தில் அமைந்துள்ளன. 

உள்ளுறுப்புகளுக்கும் அவற்றுக்கான புற உறுப்புகளுக்கும் பிரிக்க இயலாத


உறவுகள் உள்ளன. உதடுகளில் வண்ணம் மாறத் தொடங்கினால், மண்ண ீரலில்
சீர்கேடு உள்ளது எனப் பொருள். கல்லீரலில் பாதிப்பு உருவானால், அது
கண்களில் தெரியும்... பார்வைத்திறனில் குறை ஏற்படும். நுரையீரல் சிக்கல்கள்
நாசியில் வெளிப்படும். சிறுநீரகத் தொல்லைகள் செவிகளின் வழியாக
வெளிப்படும்.

உள்ளுறுப்புகளை அண்டம் எனக் கொண்டால், புற உறுப்புகள் யாவும்


பிண்டங்கள். உள்ளுறுப்புகளின் இயக்கங்களை நம்மால் காண இயலவில்லை.
ஆனால், அவற்றின் தன்மைகளை புற உறுப்புகளால் அறிந்து கொள்ளலாம்.
ஐம்பூதக் கொள்கையின் வழியே கூறுவதானால், நுரையீரல் – காற்று, இதயம் –
வெப்பம், கல்லீரல் – வெளி (ஆகாயம்), சிறுநீரகங்கள் – நீர், மண்ண ீரல் – நிலம்.
இந்த ஐம்பூத உறவை அக்குபஞ்சர் பாடங்கள் இப்போது பதிவு செய்துள்ளன.
நான் முன்வைக்கும் மரபுக் கொள்கைகளுக்கும் அக்குபஞ்சருக்கும் பல
வேறுபாடுகள் உண்டு. ஆனாலும், இவ்வாறான மருத்துவச் சிந்தனையை
வளர்ப்பதில் அந்தத் துறையினர் ஆற்றும் செயல் மதிக்கத்தக்கது.
கல்லீரலுக்கும் ஆகாயத்துக்குமான உறவு இறுக்கமானது. எவர் எல்லாம்
மனதின் வழியான சிந்தனைகளில் ஆழ்கிறார்களோ, அவர் எல்லாம் கல்லீரல்
செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. இசை, ஓவியம், நடனம்
உள்ளிட்ட பிற கலைகள் அனைத்திலும் ஈடுபடுவோர் தம்மையும் அறியாது,
கல்லீரல் இயக்கத்தைப் பெருமளவு சார்ந்துள்ளனர். தெளிந்த
சிந்தனைகொண்டோரின் கண்களில் அழகும் மிடுக்கும் தெரிகின்றன.
கண்கள்தான் ஒரு மனிதரின் சிந்தனைப்போக்கை வெளிப்படுத்து கின்றன.
கண்களைப் பார்த்துப் பேசுதல் மிக முக்கியமானது. ஏனெனில், கண்களுக்கு
பொய் தெரியாது. மனம் நினைப்பதை உதடுகள் மாற்றலாம்; கண்களால்
மாற்றவே முடியாது. கல்லீரலின் வெளிப்புறமாக விளங்கும் கண்கள்
மனதுக்கான முதல் உறவுக் கொடியாகவும் இருக்கின்றன. கல்லீரலுடன்
இணைந்துள்ள பித்தப்பை சுரக்கும் பித்தம் எனும் நீர்மம், செரிமானத்துக்கானது
மட்டும் அல்ல, சிந்தனைத் திறனுக்குமானது. சிந்தனை வயப்படும் பணிகளில்
ஈடுபடுவோர், பித்தச் சுரப்பியைத் தூண்டும் வகையில் நடந்துகொள்கிறார்கள்;
இரவு கண்விழிக்கிறார்கள்; அதிகமாக டீ, காபி அருந்துகிறார்கள்; சில
பழக்கங்களுக்கு ஆட்படுகிறார்கள். இவ்வாறானோர் பலர், வறுத்த கடலையைக்
கொறிப்பதை விரும்புகிறார்கள். இந்தப் பழக்கங்கள் யாவும் பித்தத்தை
அதிகரிக்கச் செய்பவை. 

பித்தம் கூடுதலாகச் சுரக்காமல், வெளியே (ஆகாயத்தில்) பறந்து சிந்திக்க


இயலாது. தர்க்கபூர்வமான செயல்களுக்கு பித்தம் அதிகரிக்கத் தேவை இல்லை.
ஆனால், தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளுக்குப் பித்தமே மூலநீர்.
பித்தம் சுரக்க, வெப்பம் தேவை. வெப்பத்தின் அளவு கூடினால், பித்தமும்
கூடுகிறது. குளிர்ச்சி கூடினால், பித்தம் குறைகிறது. 

புளிப்புச் சுவைகொண்ட பொருட்கள் பித்தத்தைத் தூண்டுகின்றன. சுவைகளில்


புளிப்பு என்பது, நீரும் வெப்பமும் திரிந்த நிலையைக் குறிக்கும்.
புளியம்பழங்களைப் பாருங்கள், அவை பிஞ்சுகளாக இருக்கையில் கடும்
புளிப்புடன் இருக்கின்றன. இந்த நிலையில், வெப்பமும் நீரும் கூடுதலாக
உள்ளன. முற்றத் தொடங்கியதும் புளிப்புச் சுவை குறைகிறது. இப்போது காற்று
மிகுந்து வெப்பம் குறைந்துள்ளது. பழுத்த புளியம்பழங்கள் இனிப்புச்
சுவையையும் இணைத்துக்கொள்கின்றன. நீர்மிகுந்த பின்னர் உருவாகும்
மாற்றம் இது. ஏனெனில், நீர் எனும் பூதம், இனிப்புச் சுவைக்கானது. நன்கு பழுத்த
புளியம்பழங்களில் நீர், வெப்பம் ஆகியவை கூடுதலாகவும், பிரிக்கவியலாத
வகையில் கலந்தும் உள்ளன. 

இனிப்பான பழச்சாறுகள், நேரம் செல்லச் செல்ல புளிப்பானவையாகின்றன.


இனிப்பாக இருக்கும் வரை அவற்றில் நீரின் குணம் கூடுதலாக இருக்கிறது.
இந்த நீரோடு வெப்பம் கலக்கத் தொடங்கினால், அவை புளிப்பாக மாறுகின்றன.
குளிர்சாதனப் பெட்டியில் பழச்சாறுகளை வைக்கும்போது, நீண்ட நேரம்
புளிக்காமல் இருக்கின்றன. ஏனெனில், வெப்பம் செயல்படுவது தடுக்கப்படுகிறது.
நீரும் வெப்பமும் கலக்கத் தொடங்கிவிட்டால், புளிப்புச் சுவை பிறந்துவிடும்.
உணவு அல்லது பானங்கள் வழியாக புளிப்புச் சுவை உடலுக்குள்
செல்லும்போது, பித்தம் தூண்டப்படுகிறது. பித்தம் அதிகமாக இருப்போர் இதைப்
புரிந்துகொள்வது நல்லது. புளிப்புச் சுவை கொண்ட உணவுகளைக்
குறைவாகக்கொள்வது நல்லது. குறிப்பாக, பித்தம் கூடுதலாக இருக்கும்
நிலையில், புளிப்புச் சுவைகொண்ட  உணவுகளைக் குறைப்பது மிகவும்
தேவையானது.

எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் சாத்துக்குடிச் சாறு அருந்தும் வழக்கம்


இப்போது அதிகரித்துள்ளது. இந்தப் பழங்களில் உள்ள சில வகை வேதிச்
சத்துக்களை முன்வைத்து பல செய்திகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு
எல்லாம், புளிப்புச் சுவை உடைய சாறுகளை மிகுதியாக உட்கொள்ளும் பழக்கம்
உடலில் பித்தச்சுரப்பை உயர்த்தும். இதன் விளைவாக வேறு பல உடல்
தொல்லைகளும் வந்து சேரும். நவன
ீ உணவு மருத்துவக் கொள்கைகள்
ஐம்பூதக் கொள்கையோடு துளியும் தொடர்பு இல்லாதவை. உணவுப்
பொருட்களில் என்னென்ன வேதி, உயிர்வேதிப் பொருட்கள் (Chemical and Bio
Chemical Ingredients) இருக்கின்றன என்பதுதான் நவனத்தின்
ீ அடித்தளம். எந்த
உணவில் எந்த பூதச் செயல்பாடு உள்ளது எனப் பார்த்து அணுகுவது, நம் மரபு
உணவுக் கொள்கையின் அடித்தளம். இவை இரண்டும் வேறு வேறானவை.
வெப்பம், நீர் ஆகியவை திரிந்த நிலையில் உள்ள பொருள் என்பதால், புளியை
உணவில் சேர்க்கும்போது எச்சரிக்கையும் கவனமும் தேவை. புளிக்கரைசல்
எதற்குப் பயன்படுகிறது எனப் பாருங்கள். உணவு கெடாமல் இருப்பதற்காக, புளி
கரைக்கப்படுகிறது. உணவு கெடுதல் என்றால், `உணவின் மீ து நுண்ணுயிரிகள்
உற்பத்தியாகி, அந்த உணவைச் சிதைத்துச் செரித்தல்’ எனப் பொருள். புளி
சேர்க்கப்பட்ட உணவு கெடாமல் இருக்கிறது என்றால், அந்த உணவில்
நுண்ணுயிரிகள் எளிதில் உருவாக முடியாது. இவ்வாறான உணவை நாம்
உட்கொள்ளும்போது, வயிற்றுக்குள்ளேயும் இதேநிலைதான் நீடிக்கும். அதாவது,
புளி சேர்க்கப்பட்ட உணவைச் செரிக்க இயலாமல், உடலின் செரிமான
மண்டலம் திணறும். 

எந்த உணவில் உடனடியாக நுண்ணுயிரிக் கூட்டம் உருவாகிறதோ, அந்த


உணவு மிக எளிதில் செரிக்கும். எது விரைவாகக் கெட்டுப்போகிறதோ, அதுவே
சிறந்த செரிமானத்தன்மைகொண்ட உணவு.

உணவில் புளியை அதிகமாகச் சேர்ப்பதால், செரிமானக் கோளாறுகள்


உருவாகின்றன. பித்தச்சுரப்பு, செயற்கையாகத் தூண்டப் படுகிறது. இவை
இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை. புளியே கூடாது என்ற எல்லைக்குச்
சென்றுவிடுவது தவறு. அதே வேளை, புளியைக் குறைவாகப் பயன்படுத்த
வேண்டும் என்பது முக்கியமான கருத்து.
கல்லீரலை அதிகமாக வெப்பமாக்குவதில், புளிப்புச் சுவைக்குப் பங்கு உண்டு.
மதுபான வகைகள் அனைத்தும் புளிப்புச் சுவையின் அடிப்படையில்தான்
உற்பத்தி செய்யப்படுகின்றன. கல்லீரல் கூடுதலாக வெப்பம் அடைந்தால்,
பித்தத்தின் அடர்த்தியில் சிதைவு உருவாகும். பித்தம் சிதைந்தால், செரிமானம்
சீர்கெடும். இதன் விளைவாக எந்த நோயும் உடலுக்குள் நுழையும் நிலை வரும்.
ஏனெனில், செரிமானம் என்பதுதான் நம் உடலின் பாதுகாப்பு அரண். அந்த
அரணைச் சிதைக்கும் வகையில் எந்தச் செயலிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. 

இனிப்பான பழங்கள் உடலின் நீரைப் பெருக்கும். புளிப்பான பழங்கள், உடல்


வெப்பத்தை உயர்த்தி நீரைச் சுருக்கும். உடலின் தேவை அறிந்து இந்தக்
கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

வெயிலில் உழைப்போருக்கு, கரும்புச் சாறும் இளநீரும் ஊட்டம் அளிக்கும்.


பனிமூட்டம்மிக்க பகுதிகளில் குறைந்த அளவு புளிப்புச் சுவை கொண்ட
பழங்கள் தேவையான வெப்ப ஆற்றல் தருபவை. சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை
போன்ற புளிப்புச் சுவை கொண்ட பழங்கள் இவ்வாறான மென்குளிர் பகுதிகளில்
நன்கு விளைகின்றன. நவன
ீ சிந்தனைகளின் விளைவாக, இவற்றில் ஒட்டு
வகைகளை உருவாக்கி, வெப்ப மண்டலங்களிலும் வளர்க்கப்படுகின்றன.
இயற்கையாகப் படைக்கப்பட்ட உணவு வகைகளின் இயல்புகள், அந்தந்த
நிலங்களுக்கு ஏற்றவையாக மட்டுமே இருக்கும் என்பதை
மனதில்கொள்ளுங்கள்.

புளியமரங்கள், வெப்ப மண்டலங்களிலும் மென்குளிர் மலைகளிலும்


இருக்கின்றன. இந்த இரு நிலங்களிலும் வாழும் உயிரினங்களுக்கு, புளி
தேவையானது என்பது இதன் பொருள். அளவு அறிந்து உண்ணும்போது புளியும்
உடலுக்கு மருந்தாகும். 

நோயுற்ற நிலையில் இருப்போர் புளிக்குப் பதிலாக தக்காளி சேர்த்துக்கொள்வது


நல்லது. உடலுக்குப் புளிப்புச் சுவை தேவையானது. ஆனால், அந்தப் புளிப்புச்
சுவையை எந்தப் பொருள் வழியாக அளிக்கிறோம் என்பதில் கவனம் தேவை. 
சிந்தனைகளின் வழியாகப் பித்தத்தைத் தூண்டுவதும், கல்லீரல் வெப்பத்தை
உயர்த்தும். ஆனால், சிந்தனைகளின் பிறப்பு இயல்பான வழியில் இருந்தால்,
பாதகம் இல்லை. செயற்கையான வழிமுறைகளைக் கையாண்டு சிந்தனையை
ஆழப்படுத்துவதும், தூண்டுவதும் சிக்கல்களை இழுத்து வரும். 

இரவுகளில் இளைப்பாறிவிட்டு, அதிகாலை எழுந்து சிந்தனைச் செயல்களில்


ஈடுபடுவது பொருத்தமான நடைமுறை. அதிகாலையில் வசும்
ீ காற்று, வானில்
இருந்து இறங்கும் இளவெப்பத்தையும் குளிரையும் ஒருங்கிணைத்திருக்கும்.
இந்தக் கலவை, மனதின் செயல்பாடுகளை மேம்படுத்தவல்லது. வெப்பத்தையும்
குளிர்ச்சியையும் பிரிக்கவே இயலாத வகையில் அதிகாலை புலர்கிறது. இது,
நிலத்தின் மீ து இறங்கும் பித்தம்தான். இந்தப் பித்தத்தில் மூழ்குவோருக்கு
வானில் இருந்து இறங்கும் சேதிகள் எளிதாகக் கிடைக்கின்றன. அதனால்தான்
அதிகாலை விழிப்பும் குளியலும் கல்வியும் நம் மரபில் வலியுறுத்தப்பட்டன.

திருப்பாவையும் திருவெம்பாவையும், அதிகாலைக் கண்விழிப்பை முன்வைத்து


பாடப்பட்டவை. அவற்றை இயற்றிய ஆண்டாளும் மாணிக்கவாசகரும்
இறைநிலையை எட்டியோர். பித்தநீரில் நீந்தி அண்டத்தை அறிதலும் இறையை
உணர்தலும் மனிதகுலத்துக்கு வழங்கப்பட்ட கொடை. இறைவனையே `பித்தன்’
என சுந்தரமூர்த்தி நாயனார் பாடினார் என்றால், அதில் உரிமைகொண்ட
கோபமும் உள்ளது, அதைக் கடந்த அர்த்தமும் உள்ளது.

- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 31
ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி

உடலுக்கும் புறச் சூழலுக்குமான உறவை அறிந்துகொள்ளும்போது, வாழ்வின்


மறைபொருட்கள் விடுபடுகின்றன. அண்டத்துக்கும் நம்  உடலாகிய
பிண்டத்துக்குமான பிணைப்பில்தான் இறை எனும் மூலம் மறைந்துள்ளது.
இறை உணர்தல் என்பது பயிற்சிகளாலும் முயற்சிகளாலும் கிடைக்கும் பரிசு
அல்ல. முயற்சிகளும் பயிற்சிகளும் இல்லாத ஒப்படைப்பின்போது மட்டுமே
பெறக்கூடிய வரம். உடலைப் புரிந்துகொண்டால் உலகைப் புரிந்துகொள்ளலாம்.
ஐம்பூதங்கள் உலகின் உட்பொருட் களாக இருப்பதுபோலவே, உடலுக்கும்
உட்பொருட்களாக உள்ளன.

புறச்சூழலுக்கும் உடலின் செயல்பாடுகளுக்குமான உறவுகளை அனுபவத்தில்


அறிந்துகொள்ளுதல், இந்தப் பயணத்தின் இனிய தொடக்கம். 
வெயிலில் காய்ந்தால், உடல் வியர்க்கிறது; குளிரில் தோய்ந்தால் உடல் வெப்பம்
அடைகிறது; காற்று மிக அதிகமாக வசும்
ீ இடத்தில் நின்றால், மூச்சுமுட்டுகிறது;
மிகக் குறைவான காற்றழுத்தத்தில் இருக்கையில் மூச்சு படபடத்து
இயங்குகிறது. புறத்தில் ஐம்பூதங்கள் எவ்வாறு செயல்படுகின்றனவோ, அதற்கு
நேர்மாறான முறையில் அகத்தின் பூதங்கள் தம்மை வெளிப்படுத்துகின்றன.
அகத்துக்கும் புறத்துக்குமான இந்த உறவில் முரண்பாடுகள் மோதிக்
கொள்ளவில்லை. அவை எல்லாம் ஒத்திசைந்து இயங்குகின்றன. வெயிலில்
வியர்வை எனும் நீர்மம் சுரக்காமல்போனால், உடல் வறண்டு சுருண்டு விழ
நேரிடும். இங்கே புறத்தின் வெப்பமும் அகத்தின் நீர்மமும் பின்னிப்
பிணைந்துகொள்கின்றன. நீரும் நெருப்பும் கூடிக் களிக்கின்றன. இந்த
இணைவுதான் பூதங்களின் புணர்ச்சி. மாறாக, புறச் சூழலும் அகச் சூழலும் ஒரே
நேர்க்கோட்டில் இருந்தால், மரணம்தான் விளைவாகும்.

அண்டம் எப்படி இயங்குகிறதோ, அதற்கு ஒத்திசைவாகப் பிண்டம் இயங்கும்.


இது இயற்கையின் விதி. வெளியில் இருந்து உள்ளே நுழையும் எல்லா
பொருட்களோடும் உடல் இவ்வாறுதான் உறவாடுகிறது. புறத்தில் இருந்து வரும்
பொருளின் தன்மை என்ன எனப் பார்த்து, அதற்கு ஏற்ற வகையில் தனக்குள்ளே
இருக்கும் பொருட்களை வெளிப்படுத்துவது உடல் இயக்கத்தின் அடிப்படை.

காரம் எனும் சுவை, ஐம்பூதங்களில் வெப்பத்தின் வடிவம். காரச் சுவையை


உண்ணும்போது, உடலின் நீர்ச் சுரப்பிகள் விரைந்து செயலாற்றி கண்ண ீர்,
உமிழ்நீர், வியர்வை, நாசி நீர் உள்ளிட்ட வடிவங்களில் உடலைக்
குளிர்விக்கின்றன. மிளகு ஒரு சிறு அணுகுண்டு என்பது என் கருத்து. அவ்வளவு
செறிவான வெப்ப ஆற்றலை தன்னுள் பொதித்துள்ளது மிளகு. அதைக்
கடிக்கும்போதே நாவில் வெப்பத்தை உணர முடியும். மிளகு உடலின் உள்ளே
சென்றதும், உடல் முழுவதும் வெப்பம் பரவும். இந்த வெப்பம், உடலில்
தேங்கியுள்ள கழிவு நீர்மங்களை வெளியேற்றுகிறது. கபம் எனப்படும்
நீர்மண்டலத் தொல்லைகள் அனைத்துக்கும், மிளகு முதன்மையான மருத்துவ
உணவாக இருப்பது இதனால்தான். 

சளி, கோழை ஆகிய இரண்டும் நீர்மக் கழிவுகள். இவற்றை வெளியேற்ற


உடலில் வெப்பம் தேவை. உடலில் வெப்பம் உருவானால்தான் நீர்மம்
வெளியேறும். வெப்பம் குறைந்த உடலின் உள்ளே இருக்கும் நீர்மக் கழிவுகள்,
உறைந்த நிலையில் கட்டிகள்போல தேங்கும். நீண்ட நாட்களாகத் தேங்கிய சளி,
கெட்டித்தன்மையுடன் வெளியேறுவதைப் பார்க்கிறோம். வெளியேற்றப்படாமல்
தேங்கிக் கிடந்த கோழை அடர்த்தியாக இருக்கிறது. பித்தம் வாந்தியாக வந்தால்,
நீர்த்த தன்மையுடன் இருக்கிறது. ஏனெனில், பித்தம் வெப்பத்தின் விளைவு;
கோழை குளிர்ச்சியின் விளைவு.

உடலில் குளிர்ச்சி மிகுந்துவிட்டால், புறத்தில் இருந்து வெப்பம் வழங்கப்பட


வேண்டும். கபம் மிகுந்த உடலுக்குக் காரச் சுவை உணவில் தேவை. காரத்தின்
வெப்பம்தான் உள்ளிருக்கும் கபத்தை உருக்கி அல்லது உடைத்து
வெளியேற்றும். மிளகையும் சீரகத்தையும் வறுத்து, அவை வறுக்கப்படும்போதே
பனைவெல்லம் சேர்த்து, பின்னர் நீர் விட்டுக் காய்ச்சி இறக்கினால், அது மிளகுக்
கசாயம். சளிக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, நம் சமூகத்தில் நீண்ட
காலமாகக் காய்ச்சப்படும் கசாயம் இது. மிகச் சிறப்பான நல்விளைவுகளைத்
தருகிறது இந்த மருந்து உணவு. இதை ஏன் மருந்து உணவு என்கிறேன்
என்றால், இந்தக் கசாயத்தின் எல்லா உட்பொருட்களும் உணவுப்
பொருட்கள்தான். 

மிளகுக் கசாயத்தில் உள்ள மிளகு... வெப்பத்தையும், சீரகம்... வெப்பம், நீர், காற்று


ஆகிய மூன்றையும் கொண்டுள்ளன. மிளகையும் சீரகத்தையும் வறுக்கும்போது,
இவற்றில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. நீர்த்தன்மை வற்றினால்,
வெப்பம் மிகுந்துவிடும் அல்லவா? அந்த மிகுதியான வெப்பம்தான் இப்போது
மருந்து. இதனால்தான் சில மருந்து உணவுகளில் வறுத்தல் எனும்
செயல்முறை உள்ளது. மிளகு, சீரகம் ஆகிய இருபொருட்களும் நீர் வற்றிய
நிலையில், தங்கள் குணங்களையும் இழக்காமல் இருக்க வேண்டும்.
அதனால்தான், ‘கருகாமல் வறுக்க வேண்டும். பொன்வறுவலாக இருக்க
வேண்டும்’ என்ற வழக்கம் உள்ளது. கருகிய பொருட்களில் வெப்பமும்
குறைவாகத்தான் இருக்கும். அந்தப் பொருட்களின் உயிர் ஆற்றல் அழிந்துவிடும்.

மிளகு, சீரகம் வறுக்கப்படும்போதே அவற்றோடு பனைவெல்லத்தைச் சேர்ப்பது


மிக முக்கியச் செயல்முறை. பனைவெல்லத்தைச் சேர்த்ததும், அது உருகி
மிளகு, சீரகத்தைப் பற்றிக்கொள்ளும். உடனடியாக, நீர் ஊற்றிக் காய்ச்ச
வேண்டும். உருகிய பனைவெல்லம் தனக்குள் இருக்கும் வெப்பத்தை எளிதில்
விட்டுக்கொடுக்காது. வெல்லப்பாகு காய்ச்சுவதைக் கண்டவர்களுக்கு இது
நன்றாகப் புரியும். கொதிக்கும் நீர் உடலில் பட்டால் உருவாகும் புண்களைவிட,
சிறு துளி வெல்லப்பாகு பட்டால் உருவாகும் புண்கள் ஆழமானவை. மிளகு,
சீரகத்தின் வெப்பத்தைத் தக்கவைப்பது, இனிப்புச் சுவை தருவது, பனையின்
நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கடத்துவது... ஆகிய பணிகள் இந்தக் கசாயத்தில்
நடக்கின்றன.

இதே கசாயத்தில் துளசி இலைகள், கற்பூரவல்லி (ஓமவல்லி) இலைகளைச்


சேர்க்கும் வழக்கமும் உள்ளது.

ஏற்கெனவே கபம் கட்டிய உடலுக்குள் இந்தக் கசாயம் நுழையும்போது, உடலின்


ஐம்பூதச் செயல்பாடு நல்லிணக்கம் கொண்டதாக மாறுகிறது. ஏனெனில்
வெளியில் இருந்து வெப்பம்  வந்தால், நீர்த்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்
என்பது உடலுக்கும் புறத்துக்குமான உறவு. அந்த அடிப்படையில் இந்த
வகையான கசாயங்கள் சளியை, கோழையை உடனடியாக வெளியேற்றத்
தொடங்குகின்றன. 

அதனால்தான் கபம் அதிகமாக உள்ளவர்களை ரசம் அருந்தச் சொல்லும் மரபுப்


பழக்கம் நம்மிடம் இருக்கிறது. வயல் நண்டுகளை இடித்து ரசம் வைத்தல்,
தக்காளி ரசம் வைத்தல் ஆகியவை கபம் வெளியேற்றத்துக்காகக்
கடைப்பிடிக்கப்படும் முதன்மையான மருந்து உணவுப் பழக்கங்கள். ரசம் எனும்
உணவே முழுக்க முழுக்க மருந்துதான். மிளகு, சீரகம், பூண்டு ஆகிய
மூன்றையும் இடித்து நீரில் காய்ச்சினால், அது வேறு என்னவாக இருக்க
முடியும். இந்த மூன்று பொருட்களுடனும் தக்காளி, ஏதேனும் காய்கறி, கீ ரை
அல்லது புலால் பொருள் இணைந்தால், அது மருத்துவ குணங்களைப்
பெற்றதாகிவிடுகிறது.

பூண்டு, காரச் சுவை உடையது. பூண்டின் சிறப்பு என்னவெனில், நீரும் வெப்பமும்


கலந்த நிலையை நீண்ட காலத்துக்குத் தக்கவைக்கும் பொருள் அது.
வெங்காயத்தில் நீரும் வெப்பமும் இணைந்துள்ளன. ஆனால், அதைப்
பறித்துவைத்தால் சில வாரங்களில் நீர் வற்றி விதையாகிவிடும். பூண்டு
மாதக்கணக்கில் நீர்த்தன்மையை சிறிய அளவு தக்கவைக்கும். காரச் சுவையை
முதன்மையாகக்கொண்டுள்ள பூண்டு நீர்த்தன்மையுடனும் இருப்பதால், அது
மிகச் சரியான செரிமான ஆற்றலை வழங்கவல்லது.

மிளகு, சீரகம், பூண்டு ஆகிய மூன்றும் மும்மணிகள். இவற்றை முறையாகப்


பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு வேறு உணவு மருந்துகளே தேவை இல்லை
என்பது என் கருத்து. 

ரசம் அருந்தும்போது உடலின் வெப்ப ஆற்றல் தூண்டப்பட்டு சளி, கோழைக்


கழிவுகள் வெளியேறுகின்றன. கூடுதலாக, உடலுக்குத் தேவையான இயக்க
ஆற்றல் வெகுவாகக் கிடைப்பதற்கும் ரசம் துணை செய்கிறது. எந்தப் பொருளை
இட்டு ரசம் வைக்கப்படுகிறதோ அந்தப் பொருளின் சாரம் ரசத்தில்
இறங்கிவிடுகிறது. முருங்கைக்கீ ரை ரசம் மிகச் சிறந்தது என்பது என் அனுபவக்
கருத்து. குறிப்பாக, கபத்தொல்லை மிகுதியாக உள்ளோர் அன்றாடம்  மாலையில்
முருங்கைக்கீ ரை ரசம் பருகினால், கபம் வெளியேறுவதோடு உடலுக்கான
ஆற்றல் மேம்படுகிறது. 

சளி வெளியேற்றத்துக்கான நம் மரபு மூலிகைகளைப் பாருங்கள். குப்பைமேனி,


துளசி, கற்பூரவல்லி, தூதுவளை, முள்முருங்கை (கல்யாண முருங்கை)
ஆகியவற்றை முதன்மைப் பட்டியலில் வைக்கலாம். இவை அனைத்துமே காரச்
சுவை கொண்டவை. குப்பைமேனி, தூதுவளை ஆகியவை கசப்பும் காரமும்
கலந்தவை. துளசி, கற்பூரவல்லி, முள்முருங்கை ஆகியவை காரச் சுவை
மிகுந்தவை. 

 அதிக அளவில் காரம் உண்போரின் உடல் நீர்த்தன்மை குறைந்து வற்றுகிறது.


காரம் குறைவாக உண்போருக்கு கபம் சேர்கிறது. சீரான அளவில் காரம்
சேர்ப்பது சிறந்த உணவுப் பழக்கம். உடல் உழைப்பில் ஈடுபடுவோர் சற்று
கூடுதலாகக் காரம் உண்பதைக் கண்டிருப்பீர்கள். கூழுக்கும் கஞ்சிக்கும்
வெங்காயத்தை, மிளகாயை, மிளகாய் வற்றலைக் கடிக்கும் வழக்கம் நம்
கிராமங்களில் இருந்தது. வெப்பம்தான் இயக்க ஆற்றலைத் தரும். உடல்
இயக்கம் சீராக இருக்க, வெப்பத்தின் அளவு குறையாதிருக்க வேண்டும். வெப்பம்
குறைந்தால் உடல் இயக்கம் தேங்குகிறது.

இனிப்புச் சுவையை மட்டுமே கூடுதலாக உட்கொள்ளும் போக்கு இப்போது


பெருகிவிட்டது. பெரும்பாலான தின்பண்டங்கள் இனிப்புச் சுவையுடன்
இருக்கின்றன. அரிசி எனும் தானியமே இனிப்புச் சுவை கொண்டதுதான்.
அரிசியில் சமைத்த சோற்றையும் பிற உணவுகளையும் அதிக அளவில்
உட்கொள்ளும் நம் சமூகம், துணை உணவுகளில் காரம் சேர்ப்பதைப் பற்றி
அக்கறை கொள்ள வேண்டும். சமையலில் அதிகமான காரச் சுவையைச்
சேர்ப்பதைப் பற்றி நான் குறிப்பிட வில்லை. காரச் சுவைகொண்ட பல்வேறு
உணவுப் பொருட்களை, உணவுப் பட்டியலில் இணைப்பதைக் கூறுகிறேன்.
மிளகு, வெங்காயம், பூண்டு, சீரகம் ஆகிய மூன்றையும் அன்றாட உணவுகளில்
சீராகப் பயன்படுத்துவது நல்ல மாற்றம் தரும். மாலை வேளைகளில் ஏதேனும்
ஒரு ரசம் பருகுவது பல நன்மைகளைத் தரும். 

இப்போதைய சிறுவர்களுக்குக் காரச் சுவையை முறையாக அறிமுகம் செய்ய


வேண்டியுள்ளது. அவர்களது உணவு உலகத்தில், இனிப்புதான் ஆதிக்கம்
செலுத்துகிறது. இது தீய விளைவுகளை உருவாக்கத்தக்க பழக்கம். துவையல்
வகைகளில் காரத் துவையல்களை அதிகப்படுத்தலாம். பூண்டுத் துவையல்,
மிளகாய் வற்றல் துவையல், வெங்காயத் துவையல் ஆகியவற்றை
அவ்வப்போது இணைத்துக் கொள்ளலாம். எப்போதுமே தேங்காய்த் துவையலை
உண்ணும் பழக்கத்தைத்தான் பல இடங்களில் பார்க்க முடிகிறது. உணவுப் பொடி
வகைகளில், இட்லிப் பொடி, பூண்டுப் பொடி, மிளகுப் பொடி போன்றவற்றைச்
சேர்த்துக்கொள்ளலாம்.

`காரம்தான் நல்லது’ என்ற ஒற்றை வாசகத்துக்கான செய்திகளாக இவற்றை


மாற்றிவிடாமல், புரிந்துகொண்டு செயலாற்றுங்கள். உணவில் வெப்பம் எனும்
பூதத்தை இணைப்பது, உடலில் நீர் எனும் பூதத்தின் நன்மைகளை
உறுதிசெய்யும். இந்த முரண்பாட்டு ஒத்திசைவைப் புரிந்து கொள்வோருக்கு கபம்
பெரிது அல்ல.
வறண்ட பாலைகளில் முளைக்கும் கள்ளிச் செடிகள் செழிப்பான
நீர்த்தன்மையைக் கொண்டிருக்கின்றன. எப்போதும் பனிப் பொழியும்
மலைக்காடுகளின் இலைகள் ஊசி வடிவில் நீர் குறைந்து உயர்கின்றன.
அண்டம் எந்தப் பூதத்தை முன்வைக்கிறதோ, அதற்கு எதிரான பூதத்தை
வெளிப்படுத்துவது படைப்பின் குணம். ஆணும் பெண்ணும் கூடுதல் எவ்வளவு
அழகானதோ அதைப் போல, நீரும் வெப்பமும் கூடுதல் இயல்பானது!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 32
ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

`பூமியில் உள்ள உயிரினங்களின் இரண்டாம் அறிவு நாவு’ என்பது ஆசான்


தொல்காப்பியர் பதிவுசெய்த பரிணாமக்கொள்கையின் செய்திகளில் ஒன்று.
முதல் அறிவு, தொடு உணர்வாகிய உற்றறிதல். நாவால் சுவைத்து அறிதல்
இரண்டாம் அறிவு. சுவைகளின் வழியாக உணவின் தன்மைகளை
அறிந்துகொள்ளும் முறைமைகள் இந்த அறிவில் புதைந்துள்ளன.
மிக எளிமையான சான்றுகளுடன் தொடங்குவோம். ஓர் உணவுப்பொருளை
வாயில் இட்டதும் அதன் ஐம்பூதத்தன்மை முதலில் உணரப்படுகிறது.
குளிர்ச்சியோ வெப்பமோ அதிகம் இருந்தால், நாக்கு துடிக்கிறது; அந்தப்
பொருளை எப்படியாவது வெளியே தள்ளிவிடத் தவிக்கிறது. `என்னால்
தாங்கிக்கொள்ள இயலாத பருவநிலையில் உள்ள பொருட்களை உள்ளே
அனுப்பாதே’ என்பது நாக்கு உரைக்கும் செய்தி. அதிகக் குளிர்ச்சி, சூடு ஆகிய
தன்மைகளுடன் இருக்கும் பொருட்களை அப்படியே வயிற்றுக்குள் திணிப்பது,
உடலின் பருவநிலையில் தவறான மாற்றங்களை உருவாக்கிவிடும். 

அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம் வகைகளை உண்ணும்போது, உடலுக்குள்


வெப்பம் பரவுவதை உணரலாம். மிகையான சூட்டுடன் இருக்கும் பானங்களைப்
பருகும்போது உடல் வியர்ப்பதையும் கண்களில் நீர் பெருகுவதையும்
அறியலாம். இயல்புக்கு மாறான ஐம்பூதத் தன்மையுடன் உள்ளே வரும் எல்லா
பொருட்களையும் உடல் தனது தன்மைக்கு மாற்றுவதற்காகக் கடினமாக
உழைக்க வேண்டியுள்ளது. இவ்வாறான இயல்புக்கு மாறான
பருவநிலைகொண்ட உணவுப் பழக்கங்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்தால்,
உடலின் ஐம்பூதச் சேர்க்கை எதிர்மறையான மாற்றங்களுக்கு உள்ளாகும்.
அதிகக் குளிர்ச்சி உள்ள பொருட்களை நீண்ட காலமாக உட்கொண்டால்,
உடலின் உள்வெப்பம் மிகுந்துகொண்டே இருக்கும். இந்த உள்வெப்பம்தான்
உடலின் நோய் எதிர்ப்பாற்றல். காய்ச்சல் என்பதும், நோய் எதிர்ப்பாற்றலின்
வடிவம்தான். சளி பிடிக்கும்போது எல்லாம் உடலில் மெல்லிய வெப்பம்
பரவுவதைக் கவனிக்கலாம். இந்த வெப்பம் மிக அடிப்படையானது. உணவைச்
செரிக்கவும் உள்வெப்பம் தேவை. ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும்
உணர்ந்துபாருங்கள், உடலின் உள்ளே மெல்லிய வெப்பம் உருவாகிக்
கொண்டிருக்கும். ஏதேனும் விருந்து போன்ற சூழல்களில் கூடுதலான உணவு
உண்டால், வயிற்றுப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும். நமது இயக்கத்துக்கும்
வெப்பம்தான் அடிப்படை பூதம். வெப்பம் குறைந்த உடலின் இயக்கமும்
குறையும். உடலுறவு எனப்படும் புணர்ச்சிக்கும் வெப்பம் இன்றியமையாதது.

வெப்பம் எனும் பூதம், உடலின் தேவைகளுக்கு ஏற்ப உருவாகிறது. தேவைகள்


முடிந்த பிறகு தானே மறைகிறது. ஒவ்வொரு முறை அதிகக் குளிர்ச்சி உள்ள
பொருள் உள்ளே வரும்போதும், அந்தக் குளிர்ச்சியைக் கட்டுப்படுத்தி இயல்பான
பருவநிலையைப் பராமரிப்பது வெப்பத்தின் பணி. ஒருவேளை இந்தப் பணியை
உடலின் வெப்பம் எனும் பூதம் செய்யத் தவறினால், உடல் குளிர்ந்துபோகும்.
குளிர்ச்சியில் இருந்து வெப்பத்தால் மீ ட்டெடுக்கப்படாத உடலில் உயிர் தங்காது.
ஆக, உடல்நலனுக்கு மட்டும் அல்ல உயிர் வாழ்க்கைக்கும் உடலின்
உள்வெப்பம் தேவையானது.
செயற்கையான வகைகளில் குளிரூட்டப்படும் உணவுகள், உடலின்
உள்வெப்பத்தைத் தூண்டிக்கொண்டுதான் இருக்கும். உணவுப் பழக்கங்களில்
அதிகக் குளிர்ச்சி உடைய பொருட்களை நீண்டகாலம் உட்கொண்டால், உடலின்
உள்வெப்பம் தொடர்ந்து தூண்டப்படும். இதன் விளைவாக, உடலின் ஐம்பூத
இயல்பு மாறிவிடுகிறது. குறிப்பாக, வெப்பம் எனும் பூதம் தனது வலிமையை
இழக்கிறது. தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் எதுவும் வலிமை
இழக்கும் என்பது இயற்கை விதி. 

இவ்வாறான குளிர்ச்சி உணவுகளைக் கட்டுப்பாடு இன்றி உட்கொள்வோரின்


உடல்கள், கபம் அல்லது நீர்த்தன்மை மிகுந்தவையாக மாறிவிடும். அதாவது,
வெப்பம் தனது செயல் ஆற்றலைத் தணித்துக்கொள்வதால், உடலில்
நீர்த்தன்மையை அதிகரிக்கிறது. எப்போதும் சளியுடன் வாழும் நிலை
இவ்வாறான உடல்கொண்டோருக்கு உருவாகிறது. நுரையீரல் குளிர்ச்சி
அதிகரித்தால், உடலின் எல்லா மைய உறுப்புகளும் பலவனமடையும்.

நீண்டகாலத்தில் நிகழும் மாற்றங்கள் இவை என்றாலும், காரணங்களைப்
புரிந்துகொள்ளாமல் இருந்தால் இந்த மாற்றங்களைத் தவிர்க்க இயலாது.

அதிகமான சூடு உடைய பொருட்களை அடிக்கடி உட்கொண்டால், உடலின்


நீர்த்தன்மை வற்றுகிறது. உடலின் உள்ளிருக்கும் நீர்தான் தூய்மைப் பணிகளின்
அரணாக உள்ளது. உடல் கழிவுகள் வெளியேறுவதற்கு நீர் தேவை. நீரில்தான்
உயிர்கள் தோன்றுகின்றன. உடலின் உள்ளே இருக்கும் நீர்த்தன்மைதான், உடல்
முழுவதுக்குமான செல்களின் வாழ்க்கைக்கான உணவு தரும். செல்களின்
உள்கட்டமைப்பில் நீர்த்தன்மை மிகுந்திருப்பதைக் கவனிக்கலாம். உடலில்
நீர்தான் பெரும்பகுதியாக இருக்கிறது. நீரின் முக்கியமான இயல்பு
என்னவெனில், அதிகமாகத் தேங்கவும் கூடாது; அதிகமாக வெளியேறவும்
கூடாது. அதிகமான தேக்கம் நோயாகும்; வெளியேற்றம் பலவனமாகும்.

சூடான பொருளைத் தொடும்போது உடலின் உற்றறிவு, ‘இது அதிகச் சூடானது’


என்பதை உணர்த்துகிறது. அதன் அறிவுறுத்தலை மீ றி வாய்க்குள் அந்தப்
பொருளைத் திணிக்கும்போது நாக்கு எச்சரிக்கை செய்கிறது. `என்னால் தாங்க
இயலாத சூட்டுடன் இந்தப் பொருள் உள்ளது’ என்பதை, தனது துடிப்பினாலும்
எரிச்சல் எனும் உணர்ச்சியினாலும் வெளிப்படுத்துகிறது. இந்த இரு
அறிவுகளையும் மீ றி, வயிற்றுக்குள் அதிகச் சூடான பொருட்களைத்
தள்ளும்போது உடல் தொல்லைக்கு உள்ளாகிறது.

உள்ளே வரும் இயல்பு மீ றிய உணவுகளுக்காக உடல்


எதிர்வினையாற்றவேண்டியுள்ளது. அதிகமான சூட்டைச் சமாளிப்பதற்காக
ஒவ்வொரு முறையும் தனது நீர்த்தன்மையைத் தூண்டுவது உடல் வழக்கம்.
நீண்ட காலம் இவ்வாறான எதிர்வினை நீடித்தால், உடலின் பருவநிலையில்
மாற்றங்கள் உருவாகின்றன. உடலின் கழிவு வெளியேற்ற மண்டலங்கள்
கூடுதலாகப் பணியாற்றவேண்டிய நிலை உருவாகிறது. இதனால் அதிக
வியர்வை, அடிக்கடி அல்லது இயல்புக்கு மீ றிய அளவில் சிறுநீர், விந்து நீர்த்தல்,
மாதவிலக்கு உதிரப்போக்கில் மாற்றங்கள் உள்ளிட்டவை நிகழ்கின்றன. 

இப்போதெல்லாம், உணவகங்களில் உண்ணும் வழக்கம் மிக அதிகமாக உள்ளது.


இயல்புக்கு மாறான வகையில் சூடாக இருக்கும் உணவுகளின் எல்லா
தீமைகளையும் உணவகங்களில் அதிகமாக உண்போரிடம் காணலாம். ஒருபுறம்
குளிரூட்டிகளால் உணவகம் முழுவதும் செயற்கையான குளிரில் இருக்கும்.
மறுபுறம் அங்கு பரிமாறப்படும் உணவுகளின் வெப்பம் கூடுதலாக இருக்கும்.
இந்த முரண்பாடு உடலின் இயற்கை விதிகளுக்குப் பொருந்தாது.

தேநீர், குளம்பி (காபி) பழக்கங்களைப் பாருங்கள். சுடச்சுட இவற்றை அருந்துவது


ஒரு பழக்கமாக இருக்கிறது. இந்தப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டியது
இல்லை. ஆனால், எத்தனை முறை இதைச் செய்கிறோம் என்பது
கவனிக்கப்படவேண்டியது. ஒரு நாளில் 10 முதல் 20 முறை தேநீர் போன்ற
சூடான பானங்கள் அருந்துவோர் இப்போது அதிகம். இந்த பானங்களின் உள்ளே
இருக்கும் பொருட்களால் உருவாகும் உடல் மாற்றங்களைப் பற்றி நான்
கூறவில்லை. அவற்றின் மிகையான வெப்பத்தினால் உருவாகும் சிக்கல்களே
அதிகம் என்கிறேன்.

வயிறு அதிகமாகச் சூடானால் நாக்கில் புண்கள் வருவது உண்டு. உடல் தனது


அகநிலையை நம்மிடம் வெளிப்படுத்தும் முறைகளில் இதுவும் ஒன்று. உடலின்
உள்வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரித்தால், நாக்கில் கோழை படருவது
உண்டு. புண்கள், கோழை படருதல் ஆகிய இரு நிலைகளும் உடலின் அகப்
பருவநிலையைக் காட்டும் இரு வேறு அறிகுறிகள். இவை இரண்டும்
பொதுவான ஒரு தகவலைக் கூறுகின்றன. `உடலின் உள்ளே ஐம்பூதச்
சேர்க்கையில் மாறுபாடு உருவாகியுள்ளது’ என்பது அந்தச் செய்தி. நாக்கின்
தகவல்களை முறையாகப் புரிந்துகொண்டால், உடலின் உள்ளே நிகழும் பல
மாற்றங்களை மிக எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

செரிமான ஆற்றல் அதிமாகப் பாதிக்கப்பட்டால், நாக்கில் சுவை மரத்துப்போகும்.


எந்த உணவின் சுவையையும் தெளிவாக உணர முடியாது. மற்றவர்களுக்குக்
கூடுதல் சுவையாகத் தெரிவது, மரத்துப்போனவர்களுக்குக் குறைந்த சுவையாகத்
தெரியும். பிறருக்கு அதிகச் சூடான பானம், இவர்களுக்கு மிதமான சூடாக
இருக்கும். குளிர்ச்சியும் இவ்வாறு குறைவாகவே உணரப்படும். செரிமானச்
சிக்கலின் மிக முக்கிய அறிகுறி இது.

நாக்கில் கசப்புச் சுவை உருவானால், பித்தம் மிகுந்துள்ளது எனப் பொருள்.


சுவையே இல்லாத கோழை நாக்கில் ஊற்றெடுத்தால், உடலில் கபம் மிகுந்து
வெளியேற வழியின்றித் தேங்கிவிட்டது எனப் பொருள். 

நாக்கு எனும் இரண்டாம் அறிவு, சுவைகளின் வழியாகவும் பொருட்களின்


பருவநிலைகளின் வழியாகவும் உடலுக்குப் பணியாற்றுகிறது. எவருடைய
நாக்கு, சுவைகளையும் உணவுப்பொருளின் பருவநிலைகளையும் தெளிவாக
உணர்கிறதோ, அவருடைய உடல் சிறப்பான இயக்கத்தில் உள்ளது எனப்
பொருள்.

பசிக்கும் வரை உண்ணாமல் இருத்தல் நாவின் உணர்வைச் சீராக்கும் மிக


எளிய வழி. ஏதேனும் ஒரு காரணத்துக்காக நோன்பு இருந்துவிட்டு உணவு
உட்கொள்ளும் அனைவருக்கும் நாவின் சுவை உணர்வு மிகச் சிறப்பாக
இருக்கும். நோன்பு இருக்கும்போது உடலின் வெப்ப ஆற்றல் இயற்கையான
வழிகளில் தூண்டப்படுகிறது. தேங்கிக்கிடந்த காற்று, நீர் ஆகியவை உள்வெப்பத்
தூண்டலால் வெளியேற்றப்படுகின்றன. விளைவாக, உடலின் பருவநிலை
சீரடைகிறது. 

பசிக்கும்போதெல்லாம் நீர் அல்லது நீர் உணவுகளை அருந்துவது நோன்புக்


காலத்தின் வழக்கங்களில் ஒன்று. இந்த வழக்கத்தினால், உடலின்
நீர்த்தன்மையில் பற்றாக்குறை உருவாகாமல் இருக்கிறது. ஒருபுறம் பசியினால்
தூண்டப்படும் வெப்பம். மறுபுறம் உணவாக வழங்கப்படும் நீர்மங்கள் என்ற
இனிய முரண்பாடு, உடலின் கழிவுகளை அகற்றி வசுகிறது.
ீ வாதம், பித்தம், கபம்
ஆகிய மூன்று மூலங்களின் கழிவுகளும் நோன்பில் வெளியேறுகின்றன.

நோன்பின்போது நன்கு பசிக்கையில் பருகும் பழச்சாறு நாவில் அமுதமாகிறது.


நல்ல பசியில் இருக்கும்போது இனிப்பான பழச்சாறு நாவில் பட்டதும், உடல்
எங்கும் கிளர்ச்சி அடைவதை உணர முடியும். இனிப்புச் சுவையில், உடனடி
இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் உள்ளது. மயக்கம், படபடப்பு, சோர்வு,
நீண்ட நேரப் பட்டினி ஆகியவற்றின்போது இனிப்புச் சுவையுள்ள பானங்களைத்
தருவது இதனால்தான். இனிப்பு, உடனடி செயல்பாட்டுக்கான ஆற்றல்களைத்
தனக்குள் பொதித்துள்ள சுவை.

பட்டினிக்குப் பிறகு பருகும் பானத்தில் கசப்பு இருந்தால், நாக்கு அதைப்


புறக்கணிக்கும். புளிப்பு இருந்தால், அதை ஒதுக்கிவைக்கும். துவர்ப்பு இருந்தால்,
சிறிது சங்கடத்துடன் அனுமதிக்கும். உவர்ப்பு இருந்தால் மிகக் குறைவாக
அனுமதிக்கும். மீ றி அனுப்பினால், தொண்டைக்குழிக்கும் கீ ழே இறங்கியதும்
வாந்தியாக வெளியேற்றப்படும். இனிப்பான பானத்தையோ நாக்கு வாரி
அணைத்து உள்ளிழுக்கும்.

நாக்குக்கு எல்லாம் தெரியும். நாக்குக்குத் தெரியாத எதுவும் வயிற்றுக்குத்


தெரிவது இல்லை. நாக்குதான் இந்த உடலாகிய கோயிலின் வாயிற்காவலர்.
இந்தக் காவலரை மீ றி எந்தத் தீங்கும் உள்நுழைந்துவிடாத வகையில்
ஒவ்வோர் உடலும் படைக்கப்பட்டுள்ளது.

`சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்வுகளையும் அவற்றின்


வகை அறிந்து தெளிந்தவர்களுக்குத்தான் இந்த உலகம்’ என்பது ஆசான்
வள்ளுவர் வாக்கு. 

ஐந்து அறிவுகளையும் வகைப்படுத்திய அவர், சுவையை முதன்மைப்படுத்தினார்.


ஒவ்வோர் அறிவின் பின்னாலும் இருக்கும் மறைபொருட்களை
அறிந்துகொள்ளும்போது அண்டம் நமக்கு எதிரே விரிந்து தனது இயல்புகளை
வெளிக்காட்டுகிறது. அது ஒரு பெரும் பயணம்.

நாக்கின் உணர்வு அறிந்து உணவு உட்கொள்ளும் எளிய வழக்கத்தை


மேற்கொண்டால், அந்தப் பயணத்தைத் தொடங்கிவிடலாம்.

- திரும்புவோம்...
ஆயிரம் சூரியன் ஆயிரம்
சந்திரன் ஒரே ஒரு பூமி - 33
ம.செந்தமிழன் - படங்கள்: தேனி ஈஸ்வர்

`துவர்’ எனும் சொல்லுக்கு `சிவப்பு' என்றோர் அர்த்தம் உண்டு. செம்மண்


நிலத்தை, `துவர் நிலம்’ என்று அழைப்பது உண்டு. துவரை எனும் பருப்பு வகைத்
தாவரம், பெரும்பாலும் செம்மண் நிலப்பகுதிகளில் விளையக்கூடியது. துவர்ப்பு
சுவைகொண்ட உணவு மற்றும் மருத்துவப் பொருட்களில் கணிசமானவை,
சிவப்பு வண்ணத்தின் சாயலைப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். 

ஆவாரை, நாவல், ஆலங்குச்சி, வேலங்குச்சி, நெல்லிக்குச்சி, பூலாங்குச்சி (புதர்ச்


செடி வகை), துவரைச் செடி, மாதுளை, கொய்யா இலை, கடுக்காய்,
கொடுக்காய்ப்புளி ஆகியவை நமது மரபு மருத்துவத்தில் முதன்மைப்
பட்டியலில் உள்ளவை. இவை அனைத்தும் சிவப்பு, வெளிர்சிவப்பு வண்ணம்
கலந்தவை. கொய்யா இலையும் கடுக்காயும் தமது வளர்ச்சிப்போக்கில் சிவப்பு
வண்ணத்துக்கு மாறி, பச்சையாக மாறுபவை. துவர்ப்புச் சுவைக்கும் சிவப்பு
வண்ணத்துக்குமான உறவு இயற்கையின் போக்குகளில் ஒன்று. இந்தப்
போக்குக்கு, விதிவிலக்குகள் இருக்கலாம். ஐம்பூதக் கொள்கைக்கும்
சுவைகளுக்குமான உறவைக் காணும் பயணத்தின் தொடக்கத்துக்கு எனது
ஒப்பீடு பயன்படும் என நினைக்கிறேன். 

துவர்ப்புச் சுவை என்பது, வெப்பமும் காற்றும் இணைந்து உருவாவது. உடலில்


உள்ள நீரைக் கட்டுப்படுத்துவதில், துவர்ப்புச் சுவை மருத்துவக் குணத்துடன்
பணியாற்றுகிறது.

பலர் அறிந்த பழக்கத்தில் இருந்து தொடங்குவோம். நீரிழிவுநோயின்


தீவிரத்தைத் தணிப்பதற்காக, ஆவாரைப்பூ, நாவல் கொட்டை ஆகிய
இரண்டையும் உட்கொள்ளும் வழக்கம் நமது மரபில் உள்ளது. இந்த இரண்டும்,
சிவப்பு வண்ணம்கொண்டவை; துவர்ப்புச் சுவை கலந்தவை. 

வாழ்க்கைமுறையில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்யாவிட்டால், உடலின்


ஐம்பூதச் சமநிலை பாதிக்கப்படும். காற்று, வெப்பம் ஆகியவை குறைந்த பிறகு,
நீர்த்தன்மை அதிகரித்த உடல்கள் `நீரிழிவு' எனும் சிக்கலை உடலுக்குள்
தக்கவைக்கின்றன. பொதுவான மந்தநிலையை, இவ்வாறான உடல்கொண்ட
மனிதர்களிடம் காணலாம். விரைந்து செயலாற்ற இயலாமை, அதிகத் தூக்கம்,
பகலில் சோம்பல், பசியின்மை அல்லது குறைந்த பசி போன்றவை
இவ்வாறானவர்களிடம் காணப்படும் பொதுவான அறிகுறிகள்.

துவர்ப்புச் சுவையில் உள்ள வெப்பமும் காற்றும் உடலுக்குள்


செயலாற்றும்போது, இந்த நிலையில் நல்ல மாற்றம் உருவாகிறது. ஆவாரைப்பூ,
நாவல் கொட்டை ஆகியவற்றைக் காய்ச்சி, சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அல்லது
பனைவெல்லம் சேர்த்துப் பருகும்போது, உடலில் நடக்கும் மாற்றங்களைக்
கவனிப்போம்.

உடலின் வெப்பநிலையில் திடீர் உயர்வு உருவாகிறது. காற்றின் வேகமும்


அளவும் அதிகரிக்கின்றன. இதனால், உடலில் தேக்கமடைந்துள்ள நீர்க்கழிவுகள்
விரைவாக வெளியேறுகின்றன. ஐந்து முறை சிறுநீர் கழிக்கவேண்டிய
நிலையில் உள்ளவர், ஒரே முறையில் தனது சிறுநீர்த் தேக்கத்தை
வெளியேற்றுகிறார். உடலின் வெப்பநிலையில் நல்ல உயர்வுநிலை
ஏற்பட்டதால், நீர் கட்டுப்படுகிறது. காற்றின் சுழற்சி வேகம் முன்பைக் காட்டிலும்
அதிகமாக இருப்பதால், உடலின் உள்வெப்பம் விரைவில் குறையாமல்
தக்கவைக்கப்படுகிறது.

ஆவாரையும் நாவல்கொட்டையும் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் என்பது என்


கருத்து அல்ல. `நீரிழிவு என்பது, நோய் அல்ல; உடலின் தற்காலிகச் சீர்கேடு'
என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். துவர்ப்புச் சுவைகொண்ட இரு
மருந்துணவுகளால் உடலின் நீர்த்தன்மையில் உருவாகும் மாற்றங்களை இங்கே
விளக்குகிறேன். மருத்துவக் குறிப்புகளை மனப்பாடம் செய்யாமல், நமது
மரபுக்கொள்கைகளின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில்
இவற்றைப் புரிந்துகொள்ளுங்கள்.

உடல் முழுவதும் ஓடும் ரத்தம் சீராக இருக்க வேண்டுமானால், உடலில் உள்ள


காற்றின் அளவும் வேகமும் சரியாக இருக்க வேண்டும். காற்று மிகுந்த உடலில்
ஓடும் ரத்தம் கொதிப்படைகிறது. இந்த நிலையை `ரத்தக்கொதிப்பு' என்பர். நவன

மருத்துவம் கூறும் ரத்த அழுத்தம் வேறு, நமது மரபில் உள்ள ரத்தக்கொதிப்பு
வேறு. உடலுக்குள் சுழலும் காற்றின் வேகம் தணியவே இல்லையெனில், ரத்த
நாளம் வெப்பமடைந்து ரத்தம் கொதிக்கும். நாளடைவில், இதயம் உள்ளிட்ட
முக்கிய உறுப்புகள் பாதிப்படையும் என்பது, நம் மரபு மருத்துவக் குறிப்பு.

காற்று சுழன்றுகொண்டே இருந்தால் வெப்பம் உருவாகும் என்பதை, பூமியில்


காண முடிகிறது அல்லவா! கடும்கோடையில் மரங்கள்கூட அசையாத
வகையில், காற்றின் வேகமும் அளவும் குறைவாக இருக்கின்றன. குறைந்த
அளவு காற்று, குறிப்பிட்ட ஒரு பகுதியில் தேக்கமடைந்து அங்கேயே
சுழல்கிறது. இதனால் அந்தப் பகுதி சூடாகிக்கொண்டே இருக்கிறது. வேறு
பகுதியில் இருந்து காற்று வசினால்தான்,
ீ வெப்பம் தணிகிறது. கடற்காற்று,
நிலப்பகுதியில் வசினால்தான்
ீ இவ்வாறான வறண்ட நிலை மாறும். ஆக, ஒரு
பகுதியில் உள்ள காற்று அங்கேயே சுழன்றால் வெப்பம் உருவாகும் என்பது
இயற்கை விதி.

உடலுக்குள் மிக அதிகமானோரின் நோய்களுக்கு இந்தக் காற்றுச் சுழற்சி


காரணமாகிறது. இரைப்பை, பெருங்குடல் ஆகிய இரு உறுப்புகளில்
தேக்கமடைந்துள்ள காற்றுதான் பல நோய்களுக்கு மூலக்காரணம். பசிக்காமல்
திணிக்கப்படும் உணவும், முறையற்ற உணவும், இயற்கைக்கு மாறான
நேரங்களில் உண்ணப்படும் உணவும் வயிற்றில் காற்றை உயர்த்தும். இரைப்பை
முதல் பெருங்குடல் வரையிலான மிக நீண்ட பகுதிகளில் இந்தக் காற்று
சுழலும். பெருங்குடலில் சேகரமாகும் மலக்கழிவுகள் முறையாக வெளியேறாத
நிலையில் அங்கே உருவாகும் காற்று, மிக மோசமான விளைவுகளை
ஏற்படுத்தும். மலக்காற்றின் வெப்பநிலை இயல்பாகவே கூடுதலாக இருக்கும்.
மலத்தேக்கத்தின் விளைவாக உருவாகும் காற்று பெருங்குடலுக்குள் சுழன்றால்,
அந்த வெப்பம் பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும்.

இவ்வாறான நிலைகளில், உடலில் உள்ள காற்றின் வேகத்தையும் அளவையும்


குறைக்கும் வகையிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

மலச்சிக்கல், செரிமானக்கோளாறு  போன்றவற்றுக்கு, நல்ல உணவுப் பழக்கம்


மிகச் சிறந்த தீர்வு தரும். இதை `ஏழு நாள் பத்தியம்' என அழைக்கலாம்.
பசிக்கும்போது கஞ்சி, ரசம், குழம்பு இல்லா உணவுகளை மட்டும் உண்பதுதான்
இந்தப் பத்தியமுறை. அரிசி, சிறுதானியங்கள் என எவற்றிலும் கஞ்சி
வைக்கலாம். கஞ்சியில் சீரகம், பூண்டு, மிளகு சேர்த்தல் நல்லது. கஞ்சிக்கு,
பிரண்டைத் துவையல், கறிவேப்பிலைத் துவையல், காய்கறிக் கூட்டு ஆகியவை
மிகச்சிறந்த துணை உணவுகள். ரசம் (சூப்) வகைகளைக் குழம்புக்குப் பதிலாக
உணவில் சேர்ப்பது, பத்திய உணவின் மற்றொரு முறை. 

மதிய உணவு நேரத்தில் கடுமையான பசி இருந்தால், கஞ்சி குடிப்பது போதாது.


அப்போது சோறு, ரசம் ஆகியவற்றை உணவாக்கிக் கொள்ளலாம். அதாவது
குழம்புக்குப் பதில், ஏதேனும் ஒரு ரசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
முருங்கைக்கீ ரை ரசம் மிக மிகச்சிறப்பு. உங்களுக்குப் பிடித்த காய்கறிகளிலும்
ரசம் வைக்கலாம். புலால் உண்போர், ஆட்டிறைச்சி ரசம் உண்ணலாம்.

இரவுப் பசிக்கு, இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட


உணவுகளை உண்பது நல்லது. இல்லையெனில், அரிசிச் சோறு உண்பதும்
போதுமானது.
இந்தப் பத்தியத்தில், குழம்புகளைத் தவிர்க்கிறோம்; புளி, பருப்புகள், பிற
மசாலாக்கள், அதிகப்படியான எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கிறோம்.
இவற்றைத் தவிர்த்தாலே, உடலின் ஐம்பூதச் செயல்பாடு சீராகிவிடும். இந்தப்
பத்தியத்தை ஏழு நாட்கள் கடைப்பிடிக்கும்போது, பசி சீரடையும்; செரிமானம்
மேம்படும்; வயிற்றில் சேகரமாகி இருந்த மலம், நீர், காற்று ஆகியவை
வெளியேறும்.

உடலில் உள்ள காற்றின் சுழற்சி சீரடைய இந்தப் பத்தியம் உறுதுணையாக


இருக்கும். பத்தியக் காலத்தில் நாம் தவிர்க்கும் பொருட்கள் தீமைகளை
விரட்டும். உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருட்கள், நன்மைகளைப் பெருக்கும்.
குறிப்பாக, ரச வகை உணவுகள், மிளகு, சீரகம், பூண்டு போன்ற பொருட்களை
உடலில் கூடுதலாக இணைக்கின்றன. ஐம்பூதச் சீர்நிலை உருவாவதில், இவை
முக்கியப் பங்காற்றுகின்றன.

இவ்வாறான பத்தியக் காலத்தை, மாதம் ஏழு நாட்கள் என்ற வகையில்


தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். உடல் சீராகும் வரை இந்தப் பத்தியம் உதவியாக
இருக்கும். 

பல் துலக்குவதற்கு நமது மரபில் கடைப்பிடிக்கப்படும் பொருட்களைப்


பாருங்கள். ஆலங்குச்சி, வேலங்குச்சி, பூலாங்குச்சி, ஆவாரைக் குச்சி, வாத
முடக்கிக்குச்சி (வாத நாராயணன்). இவற்றில் வேப்பங்குச்சியைத் தவிர, மற்ற
அனைத்தும் துவர்ப்புச் சுவை உடையவை. 

பல் துலக்கப் பயன்படும் பொடி வகைகளில் சிலவற்றைக் காண்போம். கடுக்காய்


பொடி, நெல்லிக்காய் பொடி, செங்கல் பொடி, சாம்பல் பொடி. இவை அனைத்தும்
துவர்ப்புச் சுவைகொண்டவை. நெல்லிக்கொட்டைகளைக் காயவைத்து
அரைத்தால், அவை துவர்ப்பு கலந்த இனிப்புடன் இருக்கும். 

பல் துலக்கும்போது துவர்ப்புச் சுவை உடலுக்குள் செல்வது நல்லது. ஏனெனில்,


நமது உணவில் துவர்ப்புச் சுவைகொண்ட உணவுப் பொருட்களின் எண்ணிக்கை
குறைவு. நீர்த்தன்மை மிகுந்திருக்கும் எல்லா இடங்களிலும் நுண்ணுயிரிகளின்
பெருக்கம் அதிகமாக இருக்கும். வெப்பமும் காற்றும் துவர்ப்புச் சுவையின்
இயல்பு என்பதால், நீரைக் கட்டுப்படுத்த அது சிறந்த சுவை. வாய் முதல் வயிறு
வரையிலான நுண்ணுயிரிப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் `பல்
துலக்குதல்' எனும் செயல்முறை. பற்களையும் ஈறுகளையும்
வேதிப்பொருட்களைக்கொண்டு தேய்த்துவிட்டு, கண்ணாடியில் பற்களின்
வெண்மையைப் பார்க்கும் வேடிக்கை அல்ல. ஆகவேதான் துவர்ப்புச்
சுவைகொண்ட `ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற பழமொழியைப்
பதிவுசெய்தது நம் மூத்த தலைமுறை.

பல்வலி அதிகமாக இருக்கும்போது, கொய்யா இலைகளைக் கொதிக்கவைத்து,


அந்த நீரை வாயில் ஊற்றிக் கொப்புளித்தால், பல்வலி உடனடியாகக் குறையும்.
சிறுநீர்ச் சுருக்கு ஏற்பட்டு வலியால் அவதிப்படும்போது, கொட்டைப்பாக்குத்
துகளை மென்றால், நீர்ச்சுருக்கு வலி தணியும். 

மாதவிலக்குப் போக்கின்போது தாங்க முடியாத வலி ஏற்படுவது உண்டு.


அவ்வாறான சூழல்களில் மாதுளைப் பிஞ்சுகளை மென்று தின்றால், வலியின்
தீவிரம் குறையும். பிஞ்சு மாதுளை, சிறந்த துவர்ப்புச் சுவையுடன் இருக்கும்.
நாட்டு மாதுளையின் பழுப்பு நிற மென் தோல் துவர்ப்பாக இருக்கும். கருப்பைச்
சிக்கல்களுக்கு இது அருமருந்து. நவனம்
ீ கண்டறிந்த சீமை மாதுளைகளில்
இந்த மென் தோல் மிகக் குறைவாக உள்ளது.

இந்தத் தொல்லைகள் அனைத்தும், நீரின் தன்மையில் சீர்கேடு ஏற்படுவதால்


வருபவை. துவர்ப்புச் சுவையுடைய பொருட்கள், இந்த வலிகளுக்கான சிறந்த
மருந்துகளாக அமைகின்றன. 

மலச்சிக்கல் அதிகமாக உள்ளவர்கள், கடுக்காய்த்தூளை இளஞ்சூடான நீரில்


கலந்து இரவு பருகினால், காலையில் மலப்போக்கில் முன்னேற்றம் கிடைக்கும். 

வாழைப்பூவின் துவர்ப்பு மிகச் சிறப்பானது. வாரம் ஒருமுறை வாழைப்பூ கூட்டு


உணவில் சேர்ப்பது, துவர்ப்பின் நலன்களை உடலுக்கு வரவேற்கும் பழக்கம். 

துவர்த்தல் என்றால், நீரை அகற்றுதல் என்று பொருள். இதுதான் ‘தலை


துவட்டுதல்’ எனும் வழக்காக மருவியது. வெப்பமும் காற்றும்தானே நீரை
அகற்றும்! ஐம்பூதக் கொள்கையும் தமிழும் பின்னிப்பிணைந்தவை.
நம் மொழியின் ஒரு சொல்லைக்கொண்டு ஓர் அகராதியே எழுதலாம்.

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 34
ம.செந்தமிழன் - படங்கள்: வி.பால் கிரேகோரி

`அனைத்தையும் உள்ளடக்குதல்' என்றொரு குணம் உண்டு. ஆகாயமாகிய


வான்வெளியைப் பாருங்கள். அது, அனைத்தையும் உள்ளடக்கிக்கொண்டுள்ளது.
ஆனாலும், ஐம்பூதங்களில், வெளி (ஆகாயம்) என்ற தனி ஒரு பூதமாகவும் அது
உள்ளது. `யாவையும் எனதுள்ளே இருக்கின்றன; ஆயினும் எனக்கெனத் தனி
குணம் உண்டு’ என்பது இறையியல்பு. மனம்தான் உடலை உள்ளடக்கி
வைத்துள்ளது. ஆனாலும், மனதுக்கெனத் தனித்தன்மை உண்டு. 

சுவைகளில் `உவர்ப்பு’ இவ்வாறான பெருங்குணம் கொண்டது. உப்பின் சுவையை


நம் மொழியில் `உவர்ப்பு' எனக் குறிப்பது மரபு. அறு சுவைகளில் மற்ற ஐந்து
சுவைகளையும் உவர்ப்புச் சுவை உள்ளடக்கியுள்ளது. அதேவேளை, தனக்கெனத்
தனிச்சுவை அடையாளத்தையும் பல்வேறு பண்புகளையும் கொண்டிருக்கிறது. 
உணவின் வழியாக எல்லா சுவைகளும் உடலுக்குள் செல்கின்றன. ஒவ்வொரு
சுவைக்கும் ஐம்பூத இயல்பு உள்ளது. இந்த அனைத்து பூதங்களையும் அல்லது
சுவைகளையும் செரித்த பிறகே அவற்றின் மீ தங்களை உடல் உவர்ப்புச்
சுவைக்கு மாற்றுகிறது. சிறுநீர், வியர்வை, கண்ண ீர் ஆகியவை உவர்ப்பானவை.
விந்து நீர் உவர்ப்புச் சுவை கலந்தது. உடலின் பெரும்பகுதி வெளியேற்றங்களில்
உவர்ப்புச் சுவை இருப்பதைப் புரிந்துகொண்டால், பூமியின் குணத்தையும்
உடலின் இயல்புகளையும் ஒருசேர அறிந்துகொள்ளலாம்.

பூமியின் பெரும்பகுதி கடல் நீராக உள்ளது. பூமியின் உள்ளும் புறமும் சுழலும்


ஐம்பூதங்கள் அனைத்தையும் உள்வாங்கிச் செரிப்பதில் கடலுக்குத்தான் முதல்
இடம் வழங்கப்பட்டுள்ளது. கடல் நீர், யாவையுமாக இருக்கிறது; தனக்கென்ற
அடையாளங்களையும் வைத்துக்கொள்கிறது. பூமியின் காற்றைச் சுத்திகரிப்பதில்
கடல் முதல் இடம் வகிக்கிறது. பூமியின் வெப்பத்தைத் தாங்குவதில் கடலுக்கு
முதல் பொறுப்பு உள்ளது. பூமியின் நீரை அல்லது மழையைச் சீராக்கி
வைப்பதில் கடல் முன்னிலை பெறுகிறது. பூமியின் நிலத்தை வடிவமைப்
பதிலும் கடலுக்குத்தான் முதல் அதிகாரம் உள்ளது. நிலப்பகுதிகளின் வரை
படத்தை அது மாற்றிக் கொண்டே இருக்கிறது. கடல் தள்ளி நின்றால் ஒரு
வரைபடம்; உள்ளே வந்தால் வேறு படம். பூமியின் ஐம்பூதச் சமநிலையில்
கூடுதல் வலிமையைக்கொண்டுள்ளது கடல். அதனால்தான் அது உவர்ப்புச்
சுவையுடன் இருக்கிறது.

உடல் எனும் அண்டத்திலும் உப்பு நீர்தான் மிகுதியாக இருக்கிறது. உடலின்


உள்ளே வரும் காற்று, உணவு, நீர் ஆகியவற்றைச் சீரான நிலையில்
வைத்திருப்பதில் உவர்ப்பாகிய உப்புச் சுவைக்குத்தான் முக்கியப் பங்கு உள்ளது.
ஆகையால்தான் உணவில் உப்புச் சுவையை மட்டும் குறைந்தளவில்
சேர்க்கிறோம். உள்ளே வரும் எல்லா உணவில் இருந்தும் உப்பைப் பிரித்து
எடுக்கும் வல்லமை நம் உடலுக்கு உண்டு. உப்பைப் பிரிக்கும் பணி உடலைப்
பொறுத்தவரை பொறுப்பு வாய்ந்த பெரும்பணி. 
உடல் உவர்ப்புச் சுவையைப் பிரித்து வெளியேற்றுவதும், கடல் நீர்
நிலத்துக்்குள் புகாமல் பாதுகாப்பதும் ஒன்று. உடலில் சேகரமாகும் உவர்ப்புச்
சுவையைப் பிரிப்பதில் சுணக்கம் இருந்தால், உடலின் செல்களுக்குள் உள்ள
நீரும் உவர்ப்புமிகுந்ததாகிவிடும். நாளடைவில், உவர்ப்புச் சுவை உடலில்
ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். உவர்ப்பின் ஆதிக்கம் என்றால், நுண்ணுயிர்ப்
பெருக்கத்தைக் கட்டுப்படுத்திவைப்பது. அதாவது, உவர்ப்புச் சுவையில்
நுண்ணுயிரிகள் பெருக்கம் குறையும். ஊறுகாய், இறைச்சி, மீ ன் ஆகியவற்றில்
உப்பு சேர்ப்பது அந்தப்பொருட்களில் நுண்ணுயிர் பெருகக் கூடாது
என்பதற்காகத்தான். உவர்ப்புச் சுவையை அதிகமாகச் சேர்த்துக்கொண்ட உடலின்
வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இந்த நிலை நீடிக்கக் கூடாது. ஒருவேளை,
நீடித்தால் உடலில் உயிர் தங்காது.

எல்லா சுவைகளையும் தனக்குள்  அடக்கிவைத்துள்ள உவர்ப்புச் சுவை, நம்


உடலுக்குள் நின்று நிலைப்பது நல்லது அல்ல. எது எல்லாவற்றையும் தனக்குள்
அடக்கிக் கொண்டுள்ளதோ, அதை ஓரிடத்தில் அடைக்க முடியுமா என்ன?
அப்படி அடக்க நினைத்தால், அடக்கி வைக்கப்படும் இடமே அழியும் அல்லவா.
இதுதான் உவர்ப்பின் சிறப்பு.

கணக்கு இல்லாத அளவுகளில் உவர்ப்புச் சுவை, உடலுக்குள் வருகிறது.


உவர்ப்புச் சுவையின் தாக்கம் இல்லாத ஒரே ஓர் உணவும் பூமியில் இருக்காது.
உப்பு எனும் ‘குணத்தைப்’ பற்றிய நவன
ீ மருத்துவப் பாடங்களுக்கும் என்
கருத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. நான் கூறுவது ஐம்பூதக்கொள்கையின்
அடிப்படையிலான சுவைத்தன்மையை. அந்த வகையில், பொருளின்
குணத்தைவிட, சுவை முக்கியம். விந்துநீரின் உட்பொருட்களில் சர்க்கரை
அதிகமாக உள்ளது. ஆனால், அதன் சுவை உவர்ப்பாக உள்ளது. இதுதான் நீங்கள்
கவனிக்கவேண்டிய பாடம். உட்பொருளைக் காட்டிலும் சுவைக்கு ஆற்றல்
மிகுதி.
`நீர் என்ன சுவையில் இருக்கும்?’ எனக் கேட்டால் பதில் கூறிவிடலாம். அந்தப்
பதில் கடல் நீருக்குப் பொருந்தாது.  ஆகவேதான் உடலுக்குள் வரும் எல்லா
உணவுகளிலும் உவர்ப்புச் சுவை உண்டு என்கிறேன். இந்த அளவு மிகுதியாக
உவர்ப்பு உள்ளே வருவதால் அதன் வெளியேற்றமும் கூடுதலாகத்தான் இருக்க
வேண்டும். உவர்ப்புச் சுவை எந்த அளவுக்கு வெளியேறுகிறதோ, அந்த அளவுக்கு
உடலில் நீர் குறையும். நாம் நீர் அருந்த வேண்டும். நீர் அருந்தியதும் மீ ண்டும்
உவர்ப்பு வெளியேறும். இப்போது பசி எடுக்கும். நாம் உணவு உண்ண வேண்டும்.

மிகையான காற்றும் வெப்பமும் இருந்தால் அல்லது நீர் இருந்தால் உடல்


திணறும், பசிக்காது. காற்று, வெப்பம், நீர் ஆகிய இந்த மூன்று பூதங்களையும்
வெளியேற்றும் வல்லமை உவர்ப்புக்கு உண்டு. வியர்வை, சிறுநீர் ஆகிய
இரண்டின் வழியாகவும் மிகையாக இருந்தவை வெளியேற்றப்படும். நீர்
வெளியேற்றமும் நடந்துவிட்டதால் உடலில் நீர்ச்சத்து குறையும். இந்தத்
தகவலை தாகம் எனும் உணர்வு நம்மிடம் தெரிவிக்கும். நாம் நீர் பருக
வேண்டும். இப்போது, நீர்த்தன்மையில் சீரானநிலை உருவாகிவிடுகிறது. சிறிது
நேரத்தில் உடலின் உள்வெப்பம் அதிகரிக்கிறது. இதுதான் பசியை
அழைத்துவரும் செயல்பாடு. 

இந்த விளக்கத்தை இங்கே குறிப்பிடக் காரணம், `தாகம் எடுத்தால் எங்கள்


குளிர்பானத்தைப் பருகுங்கள்’ என்ற மூடத்தனம் இப்போது பரப்பப்படுகிறது. இது
பல்வேறு சிக்கல்களை வரவழைக்கும் பழக்கம். தாகம் எடுத்தால் தண்ண ீர்தான்
அருந்த வேண்டும். தவித்த உடலுக்கு தண்ண ீர்தான் அமுதம். நீருக்குப் பதிலாக,
பழச்சாறு, இளநீர், பதநீர் போன்றவையும் அருந்தக் கூடாது. இவை எல்லாம்
உடலுக்கும் சூழலுக்கும் நன்மை தருபவைதான். ஆனால், தாகம் எனும்
உணர்வுக்கான மரியாதையை இ்ந்தப் பொருட்களால் தர முடியாது.

உடலில் சேர்ந்திருந்த உவர்ப்பு வடிவக் கழிவுகளை வெளியேற்றவும், அவ்வாறு


வெளியேற்றிய பிறகு உருவாகும் வறட்சியைச் சமாளிக்கவும்தான் தாகம்
எடுக்கிறது. அந்த நேரத்திலும் ஏதேனும் நிறுவனத் தயாரிப்பு பானங்களைப்
பருகினால், உடலில் மிகுதியாக நஞ்சுதான் சேரும். மரபு வழிப்பட்ட இளநீர்
போன்ற பானங்களிலும் பலவகைச் சத்துகள் உள்ளன. அந்தச் சத்துகளை
எல்லாம் செரிப்பதற்கான சூழல் உடலில் இருக்காது. தாகம் எடுக்கும்போது `நம்
உடல் பழைய கழிவுகளை வெளியேற்றும் பணியில் உள்ளது. ஆகவே, புதிய
உணவுகளை உள்ளே தள்ள வேண்டாம்’ என்ற தகவலைப் புரிந்துகொள்ள
வேண்டும். 

பதநீர், இளநீர் போன்றவை எல்லாம் வெயிலில் சோர்வடைந்த சூழலுக்கான


ஊட்டச்சத்துகள் நிறைந்தவை. இவற்றை உணவுக்குப் பதிலாகவும் நீருக்குப்
பதிலாகவும் உட்கொள்ளக் கூடாது. மாறாக, பசி, தாகம் இரண்டும் இல்லாத
நிலையில் அருந்த வேண்டும். இளநீரில் உள்ள ஊட்டச்சத்துகளை மட்டும்
மனப்பாடம் செய்துவிட்டு, ‘இளநீர் நல்லது’ என்ற குறுக்குவழிப் புரிதலுக்கு
ஆட்பட்டோர் இப்போது அதிகரித்துள்ளனர். உடலுக்குத் தேவை இல்லாத
நேரங்களில் அல்லது உடல் ஒவ்வாமையை வெளிப்படுத்தும் சூழல்களில்
இளநீர் அருந்தினால் மிக மோசமான விளைவுகள் உருவாகும். நிறுவனத்
தயாரிப்பு பானங்களை எல்லாம் வாழ்க்கையில் இருந்தே
வெளியேற்றிவிட்டால், உடலுக்குள் இருக்கும் ஐம்பூதங்களும் உங்களைக்
கையெடுத்து வணங்கும். 

இப்போதைய நவன
ீ சமூகத்தின் அன்றாடத்தைக் கவனியுங்கள். வியர்வையே
இல்லாத சூழலை உருவாக்கப்பட்டுள்ளது. வியர்வை வழியாக
வெளியேறவேண்டிய உவர்ப்பு எனும் பெருங்கழிவுக்கு இந்த வாழ்வியலில்
உள்ள மாற்று ஏற்பாடு என்ன?  எப்போதும் குளிரில் வாழும் வகையில்
பனிக்கரடிகளும் பாண்டா கரடிகளும் படைக்கப்பட்டுள்ளன. ஆகையால்தான்
அவற்றின் உடல் உரோமங்களால் மூடப்பட்டுள்ளது. மனிதகுலத்தின்
சிறுபான்மையினர்தான், குளிர் நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களது தோலில்
உள்ள வெண்மைதான் அவர்களுக்கான வெப்பத்தைத் தரும் பாதுகாப்பு அரண்.

தமிழ்நாட்டில் வாழும்போதும் குளிரில் இருக்க வேண்டிய தேவை என்னவெனச்


சிந்தியுங்கள். வியர்வைக்கான வாய்ப்பு எப்போதாவது உருவானாலும்,
வியர்வையை இழிவாகக் கருதும் போக்கு வளர்ந்துவிட்டது. வியர்வையையும்
அதன் துர்நாற்றத்தையும் விவரிக்கும் விளம்பரங்கள் வருகின்றன. வியர்க்காமல்
இருப்பதற்கான சோப்புகள், பூச்சுகள் (Creams) நவன
ீ மனிதர்களின் அலமாரிகளில்
கொலுவற்றிருக்கின்றன.
ீ இந்தப் பொருட்களின் தயாரிப்பில் சேர்க்கப்படும் வேதி
நஞ்சுகளைப் பற்றி எழுதினால், வேறு வேலையே பார்க்க முடியாத அளவு
எழுதவேண்டியிருக்கும். ஆனால், இந்தப் பொருட்களின் துணையுடன்
வியர்வையைத் தேக்கிவைத்தால் உடலின் உள்ளே தடுத்து வைக்கப்படும்
உவர்ப்பின் தீமைகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.

உவர்ப்புச் சுவைமிக்க நீர்க்கழிவுகளை உடலில் தேக்கினால், அதிகமாகப்


பாதிப்படையும் முதல் உறுப்பு மண்டலம் சிறுநீரகம். உவர்ப்பை
வெளியேற்றுவதையே தன் வாழ்நாள் பணியாகச் செய்யும் உறுப்பு மண்டலம்
இது. வியர்வையை அனுமதித்துவிட்டால், சிறுநீரகங்களின் சுமை குறைகிறது.
சிறுநீராக அனுப்பத்தக்க உவர்ப்புப் பொருட்களை மட்டும் பிரிப்பதில் அவை
கவனம் செலுத்தும். மனிதர்களின் வியர்வைத் தடுப்புச்செயல்களால், உடலின்
உள்ளே உவர்ப்பு நீர்க்கழிவு அதிகரிக்கிறது. இந்தக் கழிவுகளைச் சிறுநீரகங்கள்
மிகுந்த சிரமத்துடன் வெளியேற்றுகின்றன. 
குளிரூட்டப்பட்ட அறைகளில் இருக்கும்போது அடிக்கடி சிறுநீர் வருவது
இதனால்தான். வெப்பம் மிகுந்த இடத்தில் இருந்தால் அதிக தாகம் எடுக்கும்,
அதிக நீர் பருகினால் அதிக சிறுநீர் கழியும். இது இயற்கையின் இயல்புப்படி
நிகழும் செயல்முறை. குளிர்ச்சியான அறைகளில் இருக்கும்போது, உடலின்
உள்வெப்பம் தூண்டப்படும். புறத்தில் இருந்து எந்த பூதம் மோதுகிறதோ, அதற்கு
எதிரான பூதத்தை உருவாக்குவது உடலின் இயல்பு என்பதை முந்தைய
பகுதிகளில் குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் உள்வெப்பம் அதிகமானால்,
உடலின் உள்ளே இருக்கும் நீர்மக் கழிவுகள் வெளியேறத் தொடங்குகின்றன.
இந்தக்கழிவுகள் எல்லாம் மென்மையான திடப்படிமங்களாக உடலின்
உட்சுவர்களில் இருப்பவை. திடீரென உருவாகும் உள்வெப்பத்தில் இவை
உருகுகின்றன. புறத்தில் குளிர்ச்சி இருப்பதால் வியர்வையாக வெளியேற்ற
முடியாது. ஆகவே, இந்தக்கழிவுகள் சிறுநீரகத்தை அடைகின்றன. இப்போது
சிறுநீரகம் தேவையே இல்லாமல் கூடுதல் பணிகளைச் சுமக்கிறது.

தாகம் எடுத்தால் நீர் பருகுதல், சோர்வாக இருக்கையில் இயற்கை பானங்கள்


அருந்துதல் ஆகிய நடவடிக்கைகளின்போது உருவாகும் நீர்மத்தைச்
சிறுநீரகமும் தோல் மண்டலமும் நீராகவும் வியர்வையாகவும் வெளியேற்றி
விடுகின்றன. ஆனால், குளிரூட்டப்பட்ட அறைகளால் உருவாகும் நீர்க்கழிவுகள்
இவ்வாறான இயற்கை நிகழ்வுகள் அல்ல; விபத்து போன்றவை. வாழ்க்கையில்
விபத்து நேரலாம். விபத்தை மட்டுமே விதியாக மாற்றிக்கொள்ளக்
கூடாதல்லவா!

- திரும்புவோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம்


சந்திரன் ஒரே ஒரு பூமி - 35

You might also like