Professional Documents
Culture Documents
13ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
13ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
வரலாறு
-
பாகம்-13
-
இளம் வயதிலேயே தனது கூரிய அறிவினால்
பிறர் செயல்களுக்கான அடிப்படை நோக்கத்தை
அவனால் அறிந்து கொள்ள முடிந்ததாகக்
கண்டோம். பள்ளியில் படிப்பதும் தேர்ச்சி பெற்று
பட்டங்களைப் பெறுவதும் பணம்
சம்பாதிப்பதற்காக மட்டுமே என்பதை அவன்
கண்டு கொண்டான். உலகியல்
இன்பங்களுக்காக இத்தகைய
பயிற்சிகளைிலும் முயற்சிகளிலும் தங்கள்
சக்தியைச் செலவிடுகின்ற யாரும் தன்
தந்தையைப்போல் சக்திவாதியாகவோ
ஒழுக்கசீலராகவோ தர்மநிதிஷ்டராகவோ
இருக்க முடியாது என்பதில் உறுதியாக
இருந்தான்.
தன்னலம் கண்ணை மறைக்க மண்ணுக்கும்
பொன்னுக்கும் அடித்துக்கொண்டு சில
குடும்பங்கள் தங்களுக்கள் வீடு, நிலம்
முதலியவற்றை அளந்து பிரித்து, இந்தப்பக்கம்
என்னுடையது, அந்தப்பக்கம் உன்னுடையது
என்றெல்லாம் சண்டையிட்டுப் பகைவர்களாவர்.
ஒரு வேளை ஓரிருநாட்கள் அவற்றை
அனுபவித்து விடுவர்.
ஆனால் அந்தோ! சாவு அவர்களைக் கொண்டு
போய்விடும். இவற்றையெல்லாம் கண்முன்
கண்டிருக்கிறான் கதாதரன். எல்லா
துன்பங்களுக்கம் அடிப்படைக்காரணம் பணமும்
புலனின்ப ஆசையுமே என்பது அவனுக்குத்
தெள்ளத்தெளிவாகப் புரிந்திருந்தது.
அத்தகைய பணத்தைச் சம்பாதிப்பதற்கான
கல்வியை அவன் வெறுத்து ஒதுக்கியதில்
என்ன வியப்பு இருக்கிறது? பக்தியையே
வாழ்க்கையின் தலையாய குறிக்கோளாகக்
கருதினால் அவன் தந்தையைப்போல்
வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளான
சாதாரண உடை, எளிய உணவு இவற்றில் திருப்தி
கண்டான். எனினும் நாள்தோறும் சிறிதுநேரம்
பள்ளி சென்று வரத்தவறவில்லை. பிற
மாணவர்கள் மீது அவன் வைத்திருந்த அன்பே
அதற்குக்காரணம் .
ஸ்ரரீ குவீரரின் பூஜையிலும் வீட்டுவேலைகளில்
தன் தாய்க்கு உதவுவதிலும் நீண்ட நேரத்தைக்
கழித்தான்.
கதாதரன் இவ்வாறு வெகுநேரத்தை வீட்டில்
கழித்ததால் கிராமத்துப் பெண்களுக்கு
அடிக்கடி அவனைச் சந்திக்கும் நல்வாய்ப்பு
கிடைத்தது.
வீட்டுவேலைகள் முடிந்ததும் பெண்கள் வந்து,
அவனிடம் பாடவோ பக்தி நூல்களைப்
படிக்கவோ சொல்வார்கள். கதாதரனும்
தன்னால் முடிந்த அளவு அவர்களின் ஆவலை
நிறைவேற்றுவான். தாய்க்கு உதவுவதில்
கதாதரன் மும்முரமாக இருந்தால், புராணங்கள்
வாசித்துக் காண்பிக்கவோ பாடவோ அவனுக்கு
நேரம் கிடைக்கவேண்டும். என்பதற்காக
அந்தப்பெண்களே அந்த வேலைகளை எல்லாம்
செய்வதும் உண்டு. இது ஓர் அன்றாட
நிகழ்ச்சியாகி விட்டிருந்தது.
கதாதரனின் பாடல்களையும் வாசிப்பையும்
நீண்ட நேரம் கேட்க வேண்டும் என்பதற்காக
வீட்டு வேலைகளை வேகவேகமாக
முடிப்பார்களாம் கிராமப்பெண்கள்! அந்த
அளவுக்கு அவர்களைக் கவர்ந்திருந்தான்
கதாதரன்.
https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link