Professional Documents
Culture Documents
15ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
15ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
வரலாறு
-
பாகம்-15
பல விஷயங்களிலும் பிரசன்னாவின்
அறிவுரையைக்கேட்டு நடக்கும் படி பிற்காலத்தில்
அன்னை சாரதாதேவிக்கு குருதேவர் கூறியது
உண்டு. பக்தைகளுக்கும் அடிக்கடி அவர்
பிரசன்னாவைப் பற்றி கூறுவதுண்டு.
பிரசன்னாவுக்கு கதாதரனிடம் உள்ளார்ந்த அன்பு
இருந்தது. அவள் அவனைக் கடவுளாகவே
கருதினாள்.
கள்ளங்கபடமற்ற உள்ளம் கொண்ட அவள்
அவனிடமிருந்து கதைகளையும்
பக்திப்பாடல்களையும் கேட்டுப் பரவசம்
அடைந்தாள்.
.விசாலாட்சி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த
பெண்களிடம் கதாதரன் ” நானும் உங்களுடன்
வருகிறேன்” என்று சொன்னான். அவன்
வெகுதூரம் நடக்க வேண்டியிருக்குமே என்று
கவலையுற்ற அந்தப்பெண்கள்
அவனைத்தடுத்தனர். கதாதரன் அவர்களின்
சொல்லைக் கேளாமல் அவர்களுடன் நடக்கத்
தொடங்கினான். அந்தப் பெண்களும் மகிழ்ந்தனர்.
துருதுருவென்று எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்
குழந்தையை யார்தான் விரும்ப மாட்டார்கள். அவன்
பாடுவதைக் கேட்கவும் அவர்கள் விரும்பினர்.
அப்படியே அவனுக்கு பசியெடுத்து விட்டால் கூட,
கோயிலிலிருந்து திரும்பி வரும் போது பால் முதலிய
பிரசாதங்கள் இருக்கவே செய்யும்.ஆகவே
கதாதரன் தங்களுடன் வருவதை அவர்கள் ஏன்
மறுக்கவேண்டும்? ஏன் கோபப்பட வேண்டும்?
இதைப்பற்றியெல்லாம் சற்று யோசித்த பின்
அந்தப்பெண்கள் தயக்கமின்றி கதாதரனையும்
அழைத்துச் சென்றனர். கதாதரனும் அவர்கள்
எதிர்பார்த்தபடியே கதைகள் கூறுவதும்
பாடுவதுமாக உற்சாகத்துடன் சென்றான்.
விசாலாட்சியைப் பற்றிய கதாதரனின்
பாடல்களைக்கேட்டவாறே எல்லோரும்
வயல்வெளியைக் கடந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத நிகழ்சச் ி ஒன்று நடந்தது.
கதாதரனின் பாடல் திடீரென்று நின்றது. அவன்
சிலை போல் நின்றுவிட்டான். அவனது உடல்
விறைத்து உணர்ச்சியற்று விட்டது.விழிகளிலிருந்து
கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அந்தப்
பெண்கள் அவனைப் பலமுறை
அழைத்துப்பார்த்தனர். அவனிடமிருந்து பதில் ஏதும்
வரவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது? ஏன்
நேர்ந்தது? எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை.
ஒரு வேளை நீண்ட தூரம் நடந்து பழக்கமில்லாத
பிஞ்சுப் பாலகன் வெயிலில் இவ்வளவு தூரம்
நடந்ததால் களைத்து மயக்கமடைந்து விட்டானோ
என்று அஞ்சிய அவர்கள், குளத்திலிருந்து
தண்ணீர் கொண்டு வந்து அவன் தலையிலும்
முகத்திலும் சிறிது தெளித்துப்பார்த்தனர்.
ஆனாலும் அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.
அந்தப்பெண்களின் கவலை அதிகமாயிற்று. இவன்
மூர்சசை
் தெளிவதற்கு என்னவழி? இவனது
நினைவு திரும்பாவிட்டால் கோவிலுக்கு சென்று
தேவிக்கான நேர்த்திக்கடனைச் செலுத்த
முடியாது. அந்தப் பெண்கள் குழம்பினர். இந்த
நிலையில் அவனை எவ்வாறு வீட்டுக்குக்கொண்டு
போவது? நேர்த்தி கடனையே மறந்து விட்டு எல்லாப்
பெண்களும் கதாதரனைச்சுற்றி அமர்ந்து
விசிறுவதும் தண்ணீர் தெளிப்பதும் மீண்டும்
மீண்டும் அவன் பெயரைச் சொல்லி அழைப்பதுமாக
இருந்தனர். இவ்வாறு சிறிது நேரம் சென்றது.
தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP
https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link