Professional Documents
Culture Documents
17ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
17ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-17
-
தட்சிணேசுவரக் காளிகோயில்
................ஃ..................ஃ.......
ராணி ராசமணி
கல்கத்தாவின் தென்பகுதியில் ஜான்பஜார் என்ற
இடத்தில் ராணிராசமணி என்ற புகழ்பெற்ற பெண்மணி
ஒருவர் வாழ்ந்து வந்தார். நாற்பத்து நான்காம் வயதில்
விதவையாகிவிட்ட அவருக்கு நான்கு புதல்வியர்
இருந்தனர். கணவரான ராஜசந்திர தாஸன் மிகப்பெரிய
சொத்துக்கு வாரிசாகியிருந்தார் அவர். அந்தச்
சொத்தைச் சிறப்பாக நிர்வகித்து, கறுகிய காலத்தில்
அதனை மேலும் பெருகச்செய்தார். இதனால்
கல்கத்தாவாசிகள் அவரைப் பற்றி நன்கு
அறிந்திருந்தனர். புகழுடன் அனைவரின் நன்மதிப்பையும்
பெற்றிருந்தார் ராணி. செல்வச்செழிப்பு வாய்ந்தவராக
இருந்தார் என்பதனால் மட்டுமின்றி, அவரிடம் விளங்கிய
கடவுள் நம்பிக்கை, வீரம், ஏழைகளிடம் எல்லையற்ற
கருணை, வரையறையன்றி தானம் அளித்தல் போன்ற
நற்குணங்களுக்காகவும் அவரை அனைவரும்
கொண்டாடினர்.
மீனவக் குடும்பத்தில் பிறந்திருந்த அவர்
உயர்பண்புகளாலும் அறச் செயல்களாலும் ராணி என்ற
அடைமொழிக்குத் தகுதி வாய்ந்தவராக விளங்கினார்.
ஜாதிவேறுபாடு இன்றி அனைத்து மக்களின் ஒருமித்த
உள்ளன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். நாம்
குறிப்பிடும் இந்தத் தருணத்தில் ராணியின் நான்கு
புதலிவிகளுக்கும் திருமணமாகி குழந்தைகளும்
இருந்தன. ராணியின் மூன்றாவது மகள்
தலைப்பிரசவத்தின் போது ஆண்குழந்தையைப்
பெற்றுவிட்டுக் காலமாகி விட்டாள். இதனால் மூன்றாவது
மருமகனான மதுரநாதர் குடும்பத்தைவிட்டு விலகிச்
செல்லக்கூடும் என்று அஞ்சிய ராணி தன் நான்காவது
மகளான ஜகதம்பாவை அவருக்குத் திருமணம் செய்து
வைத்து தம்முடனேயே இருக்குமாறு செய்திருந்தார்.
ராணியின் நான்கு புதல்விகளின் வாரிசுகள் இன்றும்
வாழ்ந்து வருகின்றனர்.
ராணியின் காளி பக்தி
காசிக்குச்சென்று விசுவநாதரையும்
அன்னபூரணியையும் தரிசித்து சிறப்பு வழிபாடுகள்
செய்ய வேண்டும் என்ற பேராவல் ராணியின் மனத்தில்
நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்காகப் பணமும்
சேர்த்து வைத்திருந்தார். திடீரென்று கணவர்
காலமானதால் நிர்வாகப்பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக் காசி
யாத்திரையைத் தள்ளிப்போட நேர்ந்தது. அந்த
அக்கட்டான வேளையில் அவரது மருமகனான
மதுராநாதர் அவருக்குப் பல வகைகளிலும் உதவியாக
இருந்தார். இப்போது அவர் உதவ முன் வந்ததன்
காரணமாக, ராணி காசிக்குச் செல்ல மீண்டும் 1847-
ஆம் ஆண்டில் ஆயத்தமானார். பயண ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. ஆனால் புறப்படுவதற்கு முந்திய நாள்
இரவில் காளி ராணியின் கனவில் தோன்றி, நீ
காசிக்குச்செல்ல வேண்டியதில்லை.
கங்கைக்கரையில்அழகியதோர் இடத்தில் என் உருவைப்
பிரதிஷ்டை செய்து நாள்தோறும் எனக்கு நைவேத்திய
வழிபாட்டிற்கு ஏற்பாடு செய். நான் அங்கு எழுந்தருளி
உன் பூஜையை ஏற்றுக்கொள்வேன் என்று
பணித்தருளினாள். பக்தியே உருவான ராணியும் இந்தக்
கட்டளையால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
காசிக்குச்செல்லும் திட்டத்தைக்கைவிட்டு, தாம் சேர்த்து
வைத்த பணம் முழுவதையும் இந்தப் புனிதப் பணியில்
செலவழிக்க உறுதி பூண்டார்.
காளிகோயில் கும்பாபிஷேகம்-
குருதேவரின் கங்காபக்தி-
https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link