Professional Documents
Culture Documents
18ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
18ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
வரலாறு
பாகம்-18
காளியின் அர்ச்சகராக
-
கதாதரனைக் கண்டது முதலே மதுர்பாபு
அவரிடம் மிகவும் ஈர்க்கப் பட்டிருந்தார். கனிவான
பார்வை, மென்மையான இயல்பு, நற்பண்பு,
இளவயது இவையனைத்தும் இணைந்து கோவில்
கும்பாபிஷேகம் நடைபெற்ற சில வாரங்களிலேயே
மதுர்பாபுவின் இதயத்தில் கதாதரருக்கு ஒரு
தனியிடத்தை அளித்திருந்தார்.
நமது வாழ்நாள் முழுவதும் யாருடன் நெருங்கிய
தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று
இருக்கிறதோ, அவரைக்காணும் முதல்
சந்திப்பிலேயே இனம் புரியாத உணர்ச்சி ஒன்று
அவருடன் நமக்கு ஒரு பிணைப்பை உண்டாக்கி
விடுவதை நாம் அறிவோம். முற்பிறவி தொடர்பை
ஒட்டிய எண்ணங்களின் தொடர்ச்சியே
இத்தகைய கவர்ச்சிக்குக் காரணம் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன. பின்னாளில்
குருதேவருக்கும் மதுர்பாபுவுக்கும் இடையே
நிலவிய ஆழ்ந்த அன்பின் பிணைப்பை நாம்
எண்ணும் போது, அவர்களிடையே ஏற்பட்டதும்
இத்தகைய கவர்ச்சி தான் என்பது தெரிகிறது.
https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link