Professional Documents
Culture Documents
24ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
24ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
வரலாறு
பாகம்-24
-
சாதனையும் தெய்வப்பித்தும்
--
அன்னையின் திருக்காட்சி தந்த பேரானந்தத்தில்
திளைத்திருந்த குருதேவரால் சில நாட்கள் வேறு
எந்தப்பணியிலும் ஈடுபட முடியாமல் போயிற்று.
பூஜை முதலான எந்தக்கடமைகளையும்
முறையாக அவரால் செய்ய இயலவில்லை.
வேறொருவரின் உதவி யுடன் ஹிருதயரே
இவற்றைச் சமாளித்து வந்தார்.
குருதேவரின் இந்த நிலைக்குக் காரணம்
மூளைக்கோளாறு என்று கருதிய ஹிருதயர்
அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பூகைலாஸ்
என்ற செல்வந்தரின் வீட்டு வைத்தியரை ஏற்பாடு
செய்தார்.
ஆனால் குணமடைவதற்கான அறிகுறி எதுவும்
தென்படவில்லை. எனவே காமார்புகூருக்குச்
செய்தி அனுப்பி குருதேவரிடம் தாயாருக்கும்
சகோதரருக்கும் விவரங்களைத்
தெரியப்படுத்தினார்.
கடவுள் காட்சிக்காக ஏங்கி, அதனால் புறவுலக
நினைவை இழந்த நாட்களைத் தவிர மற்ற
நாட்களில் குருதேவரே பூஜைப் பணிகளைச்
செய்ய முயன்றார்.
தமது பூஜை தியான வேளைகளில்
அனுபவங்களைப் பற்றி குருதேவர் கூறியதாவது,
மண்டபக்கூரையின் சுற்றுச்சுவரிலுள்ள தியான
நிலை பைரவரின் திருவுருவத்தைச்சுட்டிக்காட்டி
நான் என் மனத்திடம், மனமே நீயும் இந்த
பைரவரைப்போல் எவ்விதச் சலனமுமின்றி
அன்னையின் திருவடித் தாமரைகளை
தியானிக்க வேண்டும் என்று
சொல்லிக்கொள்வேன்.
தியானிக்க அமர்ந்த உடனே என் கால்களில்
தொடங்கி மேலே உள்ள உடம்பின் மூட்டுகள்
அனைத்தையும் யாரோ ஒன்றன்பின் ஒன்றாகச்
சாவிபோட்டு பூட்டுவது போலிருக்கும். சாவியைத்
திருப்பவது போன்ற கட்கட் ஒலி கூட எனக்குத்
தெளிவாகக்கேட்கும்.
அதன் பின்னர் நான் விரும்பினால் கூட உடம்பை
அங்கும் இங்கும் அசைக்க முடியாது.
அமர்ந்திருக்கின்ற நிலையையும் மாற்ற இயலாது.
விரும்பிய வேளையில் தியானத்திலிருந்து
எழுந்திருக்கவும் முடியாது.மீண்டும் அந்தகட்கட்
ஒலியுடன் தலையிலிருந்து கால் வரையுள்ள
பூட்டப்பட்ட மூட்டுகள் அனைத்தும் திறக்கும்
வரை என்னால் தியானத்திலிருந்து எழ முடியாது.
தியான வேளையில் நான் கண்ட காட்சிகள் தாம்
எத்தனை எத்தனை!
தியானிக்கும்போது ஆயிரமாயிரம் மின்மினிப்
பூச்சிகள் சேர்ந்து பறப்பது போன்ற ஒளிக்கூட்டம்
என் முன் தோன்றும்.
சில வேளையில் வெண்பனிப் படலம் போன்ற
ஒளிவெள்ளம் என்னைச்சுற்றி நாற்புறம் பரந்து
படர்ந்திருப்பதைக் காண்பேன்.
வேறு சிலவேளைகளில் அனைத்துப்
பொருட்களிலும் வெள்ளியை
உருக்கிவிட்டாற்போல் ஒளி பிரகாசிப்பதைப்
பார்ப்பேன்.
பொதுவாக இத்தகைய காட்சிகள் நான்
கண்களை மூடிக்கொண்டிருந்தபோது மட்டும்
தான் தோன்றும்.
சிலவேளைகளில் கண்களைத் திறந்து
வைத்திருந்த போதும் நான் கண்டதுண்டு. நான்
கண்ட காட்சிகள் என்னவென்றும் எனக்குத்
தெரியவில்லை.
இத்தகைய காட்சிகளைக் காண்பது நன்மையா
தீமையா என்பதும் புரியவில்லை.
குழம்பிய நான் அன்னை காளியிடம், அம்மா
எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது.
எதுவும் புரியவில்லை. உன்னை அழைப்பதற்கான
மந்திரங்களோ தந்திரங்களோ எனக்குத்
தெரியாது. அம்மா உன்னை நான் எப்படி
வந்தடைவேன் என்பதை எனக்குக் கற்பித்து
அருள்வாய். நீ கற்பிக்காவிட்டால் எனக்கு வேறு
யார் கற்றுத்தருவார்கள்? அம்மா, உன்னைத் தவிர
எனக்கு வேறு யார் அடைக்கலம். என்று
மனமுருகிப் பிராத்திப்பேன்.
ஒரு மித்த மனத்துடன் என் இதய வேட்கையைச்
சொல்லிப் பரிதாபமாக அழுவேன்.
இந்த நாட்களில் குருதேவரின் பூஜை, தியானம்.
போன்றவற்றில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன.
குழந்தை தாயிடம் கொண்டிருப்பது போல்
அன்னை காளியிடம் அவர் வைத்திருந்த
நம்பிக்கை, தன்னை மறந்த நிலை இனிமை
இவற்றைப் பிறருக்குப் புரிய வைப்பது கடினம்.
அவரது செயலில் வயதின் முதிர்ச்சியோ,காலம்,
இடம் ஆகியவற்றைப் பற்றிய உணர்வோ,
இதைச்செய்ய வேண்டும், இதைச்
செய்யக்கூடாது என்கின்ற விதிமுறைகளோ
எதுவும் தென்படவில்லை.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு
அதற்கேற்றவாறு செயல்பட்டதாகவும்
தெரியவில்லை. ஆனால் அவரது செயல்கள்
அனைத்திலும் இழையோடி நின்ற ஒன்று
பரிபூரண சரணாகதி.தமது நான் உணர்வையும்
சிறிய ஆசைகளையும் அன்னையின் தெய்வீக
மகாசங்கல்பத்தில் ஒன்றுபடுத்திக்கொண்டு
தம்மை முற்றிலும் அவளது கருவியாக
எண்ணியே அவர் செயல்பட்டார்.
அம்மா, எனக்குப் புகலிடம் நீயே, என்னை
ஏற்றுக்கொண்டு வழிநடத்துவாய், தாயே,
என்பதே அவரது இதயபூர்வமான
பிராத்தனையாக இருந்தது.
தொடரும்..
-
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP
https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link