Professional Documents
Culture Documents
Mukthi
Mukthi
1)salokyam
2)saroopyam
3)sarshtyam
4)saroojyam
5) kaivalyam
1) Saw swastika in my dhyanam after swastika saw perumal andal……..So from here what I understood
is perumal is having chakra in his right hand. From top view if u see chakra it symbolizes swastika shape.
இந்தச் சின்னத்தில் இருக்கும் எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிப்பதாகவும், அந்த திசைகளிலிருந்து
புறப்படும் சுப காரிய தடையை உண்டாக்கும் சக்திகளை ‘ஸ்வஸ்திக்’ தடுப்பதாகவும் ஐதீகம் உண்டு. இந்திய
ஆன்மிக பண்பாட்டு ரீதியாக, வீட்டின் தலைவாசல், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வைக்கும்
இடங்கள், பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, கணக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், வழிபாட்டுக்குரிய தலங்கள்
ஆகிய சகல இடங்களிலும் ‘ஸ்வஸ்திக்’ வடிவ சின்னம் பயன்படுத்தப்படுகிறது.
வரையும் முறை :
இரண்டு வகைகள் :
ஸ்வஸ்திக் சின்னமானது வலப்புற சுற்று மற்றும் இடப்புற சுற்று ஆகிய இரண்டு நிலைகளில்
பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, மங்களமான சக்திகளை ஈர்க்கக்கூடிய வலப்புற சுற்று அமைந்த
(அதாவது கடிகார முள் சுற்றுவதுபோல) சின்னம்தான் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு
மாறாக, இடப்புற சுற்றாக (கடிகார முள் சுற்றுவதற்கு எதிர்ப்புறமாக) பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திக் சின்னம்
தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை பெற்றதாக கருதப்படுகிறது. அதனால், சின்னத்தை வரையும்போது
கவனமாக இருப்பது அவசியம்.
பழங் காலங்களில் மன்னர்கள் போர் புரிய சென்ற வழிகளில், ‘ஸ்வஸ்திக்’ வடிவ கோலங்கள் போடப்படும்
சம்பிரதாயம் இருந்து வந்துள்ளது. சகல தேவதைகளும் அமரும் சின்னமாக இது கருதப்பட்டதால், வீடுகளில்
நடக்கும் சுப நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் ஸ்வஸ்திக் கோலங்கள்
போடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது தெய்வங்கள் வந்து அமரும் இடமே ‘ஸ்வஸ்திக்’ என்றும்
கருதப்பட்டது. ‘ஸ்வஸ்தி’ என்ற சொல்லுக்கு இடையூறுகள் இல்லாத தன்மை என்று அர்த்தம் உண்டு.
திருச்சி, மணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை திருத்தலத்தில் 1200 ஆண்டு களுக்கு முற்பட்ட
ஸ்வஸ்திக் வடிவ திருக் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தந்தி வர்மன் ஆட்சி காலத்தில் கம்பன் அரையன்
என்பவரால் அமைக்கப்பட்ட இந்த கிணறு நான்கு பக்கமும் படிகளை கொண்டது. காரியத்தடையால்
வருந்துபவர்கள் மேற்கண்ட தலத்தின் மூல தெய்வத்தை தரிசித்து, ஸ்வஸ்திக் குளத்தின் தீர்த்தத்தை
தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் மங்களங்களை அருளும் தெய்வீக சக்தியின்
உதவியால் வாழ்க்கையில் புதிய பாதைகள் தென்படும் என்றும் ஆன்றோர்கள் வழிகாட்டியுள்ளனர்.
விநாயகர் சின்னம் :
விநாயக சக்கரமாக கருதப்படும் ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவில் பசு நெய் தீபத்தை, குபேர திக்கான
வடக்கு திசையை நோக்கியும், மற்ற நான்கு கோடுகளின் முடிவில், நான்கு பசு நெய் தீபங்களை நடுவில்
உள்ள தீபத்தை பார்த்தவாறு ஏற்றி வைத்து வழிபட்டு வருவதன் மூலம், வியாபார விருத்தியும், புதிய
நுட்பங்களை கடைப்பிடிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். மேலும், தொழில்
மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் நல்ல வேலையாட்கள் கிடைப்பதற்கும் மேற்கண்ட வழிமுறை பயன்படும்
என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட வழிமுறையை வீடுகளில் கடைப்பிடிக்கலாம்.