You are on page 1of 2

இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே

ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா)


மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை
உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன்
இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர்
அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக,


(தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று
உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை
ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை
உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக
நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும்
(அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள்
பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும்
நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
அல்குர்ஆன் 35:12

You might also like