You are on page 1of 23

மானச யோகம்

ஸ்ரீ குருவே நமஹ

வாழ்க்கையின் குறிக்கோள் - பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியார்

அவனியில் வாழும் உயிர்கள் யாவும் ஒரு நாள் பிறந்து ஒரு நாள் மறைந்து
போகின்றன என்பதைக் கண்கூடாகக் காணும் , அறிவு செயல்பட வாழும்
ஒரு அறிவாளி " மறைய வேண்டிய ஒன்று ஏன் தோன்ற வேண்டும் ,
தோன்றுமுன் இருந்தது எங்கே , பின் மறைந்து போவது எங்கே ? என்று
ஐயமுறாமல் இருக்க மாட்டான். இக்காலத்தில் மனிதர் தமக்கு புறத்தேயுள்ள
அனைத்தையும் ஆராய்ந்து , பயன்படுத்தும் வேலைகளில் முனைந்துள்ளனர்.
ஆனால் பழங்காலத்தில் பெருமக்கள் தமக்கு புறம்பே ஆராய்வதை விடுத்து,
தம்மை, தம் அகத்தின் அமைப்பை, இயக்க முறையை ஆராயத் தொடங்கி,
அதன் சம்பந்தமான பல அரிய உண்மைகளை கண்டார்கள். அந்த
உண்மைகளில் சிலவற்றையாவது இன்றைய மனிதர்கள் அறிய
முற்படுவார்களானால், இப்போது மனிதன் கண்டு பிடித்துவரும் மிகப்பெரிய
பெளதிக உண்மைகள், கருவிகள் , பொறிகள் யாவும் மனிதன் நலமாக வாழ
தேவையற்றவை என்பதை அறிந்து கொள்வார்கள்.

எறும்பு முதல் யானை ஈறாக உயிர்களனைத்தும் வாழும் வாழ்க்கையை


சூக்குமமாக கண்டறிந்த முன்னோர்கள் " உயிர் வாழ்க்கையின் குறிக்கோள்
யாது?" என்பதை கண்டறிந்தார்கள். உயிர்களின் வாழ்க்கை எத்தகையதாயினும்
அது ஓர் இன்பத்தை. நலத்தை, திருப்தியை, அமைதியை, பெறுவதற்காகவே
உள்ளது என்பதை அனுபவமாக கண்டறிந்தார்கள்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ராஜயோகி
ராஜமோகன் திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

வாழ்க்கையின் குறிக்கோள் - பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியார்

உயிர் வாழ்க்கையின் இந்த அடிப்படை தத்துவத்தை கண்ட பெரியவர்களின்


முன் எழுந்த இரண்டாவது ஐயம் உயிர்கள் எல்லாமே துன்பத்திலிருந்து
விடுபடவும், இன்பத்தை பெறவுமே வாழ்கின்றன, வாழ்க்கை காரியங்களை
புரிகின்றன, ஆனால் அவை செய்யும் காரியங்களின் முடிவாக அவை
எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பெறாமல் போவது ஏன்?

இப்படி துன்பத்திலிருந்து விடுதலைபெற்று, இன்பத்தை அனுபவிப்பதற்கென்றே


வாழும் உயிர் வாழ்க்கையில் அவைகள் எதிர்பார்த்த முடிவுகளுக்கு மாறான
முடிவுகள் உண்டாக காரணமென்ன ?

இவ்வாராய்ச்சியின் இடையில் அவர்களுக்கு கிடைத்த மற்றொரு விளக்கம்,


இவ்வுலகில் இதுவரை பிறந்த மனிதர்கள், இனி பிறக்கப் போகும் மனிதர்கள்,
பிறந்த, பிறக்கப் போகும் உயிர்கள், தோன்றிய தோன்ற போகும் தாவரங்கள்
இவை பார்வைக்கு ஒன்றுபோலிருந்தாலும், உண்மையில் இரண்டு
மனிதர்களோ, தாவரங்களோ ஒன்றாயிருந்ததில்லை; இருக்கப்
போவதுமில்லை.

அப்படியானால் உயிருள்ள ஜீவன்களினுடையவும், உயிரற்ற


பொருட்களினுடையவும் இவ்வேற்றுமைகளுக்கு அடிப்படை காரணம் என்ன?
சிறப்பாக நாம் இங்கு மனிதர்களின் வேற்றுமைகளுக்கான காரணங்களை
மட்டும் ஆராய்வோம். அதை புரிந்து கொண்டால் மற்றவைகளை புரிந்து
கொள்வது எளிதாயிருக்கும்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ராஜயோகி
ராஜமோகன் திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

வாழ்க்கையின் வேற்றுமைகள் - பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியார்

உயிரினங்களின் வேற்றுமைக்கு அடிப்படை காரணம் என்ன? என்ற கேள்விக்கு


கிடைக்கும் சில விடைகளையும் அவற்றின் உண்மைகளையும் ஆராய்வோம்.
" வேற்றுமைகள் காரணம் அவரவர் வினைப்பயன், கர்மா வினை " என்று ஒரு
சமயம் கூறுகிறது. ஒவ்வோர் உயிரின் வினைப்பயனும் ஏன் மாறுபட்டிருக்க
வேண்டுமென்றால், அது அவரவர் உடல், மனங்களால் செய்த கர்மத்தில்
வேற்றுமையை அடிப்படையாய்க் கொண்டதென்கிறார்கள். மறுபடியும்
கேள்வி அப்படியேதானிருக்கிறது. உயிர்கள் உடல், மனங்களால் வேறுபட்ட
கர்மங்களை ஏன் செய்ய வேண்டும்? முதன் முதலாக கர்மம் செய்த போதே
வேற்றுமை உண்டாயிற்றென்றால், அப்போது வேற்றுமை உண்டாக
காரணமென்னவென்றே கேள்வி எழுகிறது. இந்த அளவில் கர்மவாதி சரியாக
விடை சொல்ல முடியாமல் நின்றுவிடுகிறார்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ராஜயோகி
ராஜமோகன் திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

வாழ்க்கையின் வேற்றுமைகள் - பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியார்

வேற்றுமைகளின் அடிப்படை - ' கடவுள்' என்றொரு சமயவாதி கூறுகிறார்.


கடவுள் ஒருவனை ஏழையாகவும், மற்றொருவனை பணக்காரனாகவும் ஏன்
படைக்க வேண்டுமென்றால், அது அவருடைய விருப்பம், ஒருவனை
ஏழையாக படைக்க விரும்பினார்; மற்றொருவனை பணக்காரனாகவும்
படைக்க விரும்பினார்; படைத்தார், - இதுதான் அவருடைய லீலையென்கிறார்.
இக்கூற்றை கூறுபவர் காரண காரியவாதத்தை சிறிதும் அறியாதவராக
இருக்க வேண்டும். ஏனென்றால் பிரபஞ்சத்தில் சடப் பொருள்களில்
நடைபெறும் காரியங்கள் கூட, ஒரு காரணத்தை கொண்டுதான்
நடைபெறுகின்றது என்பதை விஞ்ஞானம் நிரூபிக்கிறது. மனிதன் ஒன்றை
விரும்புவதற்கும், ஒன்றை வெறுப்பதற்கும் காரணம் இருக்கிறது. ஒரே
பொருளை ஒருவன் விரும்பவும், மற்றவன் வெறுக்கவும் செய்யக் காரணம்
இல்லாமல் இருக்குமா? அதனால் கடவுள் மனிதரில் வேற்றுமையைப்
படைக்க தகுந்த காரணம் இருக்க வேண்டும். அவருக்கு விருப்பங்கள்
பல்வேறு வகைகளாக உண்டாக நிச்சயமாய்க் காரணம் இருக்க வேண்டும்.
கடவுளின் இச்சையை காரணமாக கூறுபவர், அவ்விச்சை பல்வேறாக
உண்டாவாதற்கு காரணம் கூற முடியாமல் பின்வாங்கி விடுகிறார்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ராஜயோகி
ராஜமோகன் திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

வாழ்க்கையின் வேற்றுமைகள் - பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியார்

ஒருவன் ஏழையாக பிறப்பதும், மற்றொருவன் பணக்காரனாகப் பிறப்பதும்


தற்செயலாக நடப்பவை, இதற்கு எதுவும் எவரும் காரணமில்லை, என நாத்திக
நண்பர் ஒருவர் நவில்கிறார். இவரும் பிரபஞ்ச நடைமுறையின், விஞ்ஞான
கோட்பாட்டின் விவரம் புரியாதவரென்று கொள்ளவேண்டும். ஏனென்றால்
பிரபஞ்சத்தில் எதுவும் தற்செயலாக நடைபெறுவதில்லை. ஒரு பத்து பைசா
நாணயத்தை சுண்டிவிட்டால் அது பூ பக்கமோ, தலைப்பக்கமோ விழுவது
தற்செயல் என்று இந்நண்பர் கூறுவார். ஆனால் விஞ்ஞானம் இதை
ஒத்துக்கொள்ளாது, நாணயத்தை சுண்டியவன் நின்றநிலை, பூமியில் இருந்து
அவன் கை உயர்ந்திருந்த அளவு, அக்கையில் முதலில் நாணயத்தை
வைத்திருந்த பக்கம், சுண்டிய வேகம், காற்றழுத்த மண்டலத்தின் வேகம்,
பூமியின் ஆகர்ஷண வேகம் இவ்வளவும் இந்த மாதிரியில் இருந்ததால்
நாணயத்தின் இந்த பக்கம் விழுந்தது. இவற்றுள் எது மாறுபட்டிருந்தாலும், அது
வேறுபக்கமாக விழுந்திருக்கலாம் என்று விஞ்ஞானி கூறுவார். இதேபோல்
நாத்திக நண்பர் ' தற்செயல்' என்று சொல்லும் எல்லாமே தகுந்த பல
காரணங்களின் அடிப்படையில்தான் நடைபெறுகின்றன என்பதை அறியலாம்.
ஆகையால் இந்த நண்பரின் கூற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மனிதரில் வேற்றுமை காணப்படுவதற்கு அவரவர் பிறந்த போது ஏற்படும்


கிரக நிலைகளே காரணம் என சோதிட வல்லுநர் கூறுகிறார். ஒருவன் நல்ல
கிரக இருக்கும்போது பிறந்து நலன்களை அனுபவிக்க, வேறொருவன் கெட்ட
கிரக நிலைகளின்போது பிறந்து தீமைகளை அனுபவிக்க காரணமென்ன
என்று கேட்டால், சோதிடரும் அது அவரவர் முற்பிறவிகளில் செய்த
கர்மத்தை பொறுத்தது என்று சொல்லி முடிவு காணாத இடத்துக்கே சென்று
முடிக்கிறார்.

வேற்றுமைகள் அன்னையின் கர்ப்பவாசத்தில் உண்டாகின்றன என உடற்கூறு


வல்லுநர் கூறுகிறார். அன்னையின் கர்ப்பத்தில் வேற்றுமைகளுண்டாக,
வேற்றுமை கொண்ட கர்ப்பத்தில் பிறக்க என்ன காரணம் என்பதை இவரால்
விளக்க முடியாமல் விழித்து நிற்கிறார்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ராஜயோகி
ராஜமோகன் திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

வாழ்க்கையின் வேற்றுமைகள் - பரமகுரு ஸ்ரீ பண்டிட் கண்ணையா யோகியார்

இப்படி மனிதரில், உயிர்களின் வேற்றுமை காணப்படுவதற்கு உலகில்


என்னென்ன காரணங்கள் பொதுவாக கூறப்படுகின்றனவோ, அவையெல்லாம்
ஆராய்ச்சிக்கு ஒவ்வாததாக, தர்க்க வாதத்துக்கு பொருந்தாததாக, விஞ்ஞான
உண்மைக்கு புறம்பானதாக, பிரபஞ்ச நடைமுறை நியமத்துக்கு மாறுபட்டதாக
இருக்கக் காணலாம். ஒரு மரத்தின் மேல்முக வளர்ச்சிக்கு, அதன் கண்ணுக்கு
தெரியாத வேர் பகுதி காரணமாவதை போல், உயிரினங்களின்
வேற்றுமைகளுக்கு அடிப்படை காரணம் புலன்களுக்கு அப்பாற்பட்டதோர்
சூக்கும தத்துவம் என்பதை பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இம்மறைமுகக் காரணம் யாது என்று கண்டறிவதற்க்கு முன்னால்
இவ்வேற்றுமைகள் செயற்படுவது எதன் வழியாக என்பதை புரிந்து கொள்ள
முயற்சி செய்வோம். இது தெரிந்தால் வேற்றுமைகளின் காரணத்தை எளிதாக
புரிந்து கொள்ளமுடியும் .

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ராஜயோகி
ராஜமோகன் திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனமும் வாழ்க்கையும் - ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியார்

பிறப்பதற்கு முன் ஏற்பட்டதோ, பிறந்தபின் ஏற்பட்டதோ, கடவுள்


கொடுத்ததோ, கர்மவினையளித்ததோ, கிரகங்கள் விளைவித்ததோ,
வேறெதனாலுண்டானதோ மனித வாழ்க்கையின் உயர்வு, தாழ்வுகள்; நன்மை
தீமைகள் அவனில் செயல்பட "மனிதன் " என்ற சொற்பொருளில்
கலந்திருக்கும் பல கருவிகளில் ஒரு கருவிதான் முக்கிய காரணம்; அந்தக்
கருவி " மனம் " என்பது கடவுள் மனிதனுக்கு நன்மையையோ, தீமையையோ
செய்ய விரும்பினால், அவன் மனதில் அதற்கான வழியில் அவனை
செயல்படுத்துவதற்கான எண்ணங்களை எழுப்புவதன் மூலம் அதைச் செய்ய
முடியும். கிரகங்கள் மனிதனுக்கு நன்மையையோ, தீமையையோ அளிக்க
வேண்டுமானால் அதற்கு தகுந்தபடி அவனை செயல்படுத்தும் எண்ணங்களை
அவன் மனதில் எழுப்புவதன் மூலமாகத்தான் அளித்தாக வேண்டும்.
அதிஷ்டமோ, பாக்கியமோ, தற்செயலோ, நியமமோ வேறு எந்தக்
காரணமாகயிருந்தாலும் மனிதனுக்கு அவன் மனதின் வழியாகத்தான் நன்மை
தீமைகளை செய்தாக வேண்டும். மனமில்லாத உடலில், ஆன்மா
மட்டுமிருந்தாலும் ( இருக்காது - இருப்பதாக வைத்துக் கொண்டாலும் )
உடலில் எதுவும் நடைபெறாது - பிணம் போல்தான் இருந்தாக வேண்டும்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ
ராஜயோகி ராஜமோகன் குருவே திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனத்தின் இலக்கணம் - ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியார்

மனம் எல்லோரிடத்தும், எப்போதும் செயல்படுகிறது. அதுவே மனிதனின்


வாழ்க்கையின் அடிப்படையாய் இருக்கிறது. மனிதன் செய்யும்
உடற்காரியங்களனைத்தும் முதலில் மனதில் செய்யப்படுகின்றன;
மனிதனுடைய கண்டுபிடுப்புகளனைத்தும் முதலில் மனதில்தான்
தோன்றுகின்றன; இன்ப, துன்பங்களுக்கு இருப்பிடம் மனம்,
வெளியுலகத்திலிருந்து மெய், வாய், கண், மூக்கு, செவிகளாகிய ஐம்பொறிகளின்
வழியாக உட்புகும் ஒலி, ஒளி, சுவை, நாற்றம், ஊறு முதலிய ஐம்புலன்களின்
உணர்வுகளை ஆன்மாவுக்கு அறிவிப்பது மனம். மனித உடலில் உயிர்
சஞ்சரிப்பது மனத்தால்தான். இப்படி மனிதனின் அனைத்துக்கும்
ஆதாரமாயிருக்கும் மனத்தை பற்றி மனிதன் அறியவில்லை என்பது
விந்தையாயிருக்கிறதல்லவா ?

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ
ராஜயோகி ராஜமோகன் குருவே திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனத்தின் இலக்கணம் - ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியார்

முதலில் மனம் என்பதென்ன என்று சற்று ஆராய்வோம். உடற்கூறு


வல்லுநர்கள் " மூளைதான் மனம் " என்று ஏமாளிகளை ஏமாற்றும் கூற்றைக்
கூறிவிடுகிறார்கள். மூளையில்லாத உடலில் மனம் செயல்படாது. மூளையின்
ஒரு பகுதி கெட்டுவிட்டால் மன இயக்கத்தின் சில தன்மைகள் செயல்படா,
இதைக்கொண்டு உடற்கூறு வல்லுநர்கள் கூற்று சரியாகதானிருக்க
வேண்டுமெனப் பலர் நம்பி விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால்,
வணையையே
ீ இசையாக சொல்வது போலிருக்கிறது. ஏனென்றால்
வணையில்லாமல்
ீ இசை ஒலிக்காது. வணையின்
ீ ஒரு கம்பி அறுந்து
விட்டாலோ, விறைப்பு தன்மை தளர்ந்து விட்டாலோ, இசையின் சில
பகுதிகளை இசைக்க முடியாதென்பது போலிருக்கின்றது. இது எவ்வளவு
பொய்யென்பதை அனைவரும் அறிவர். இசையை இசைக்க நல்ல முறையில்
அமைந்த வணை
ீ தேவைதான். வணையில்லாமல்
ீ வணாகானத்தை
ீ இசைக்க
முடியாதுதான். இதனால் இசைக் கலைஞனால் மீ ட்டப்படாமல் வணை

தானாக இசைக்குமென்று சொல்லமுடியுமா? வணை
ீ கெட்டிருந்தால் இசைக்
கலைஞனால் சரியாக இசையை இயக்க முடியாதென்பது உண்மைதான்.
இதனால் வணையின்
ீ அமைப்புதான் இசையெனலாமா? இதேபோல்
மனமெனும் கருவி செயல்பட மூளை தேவைதான், மூளையின்
வழியாகத்தான் மனம் செயல்பட வேண்டும். மூளை கெட்டிருந்தால் மன
இயக்கம் சரியாக செயல்பட முடியாதுதான். இதைக்கொண்டு மூளையை
மனமென்பது, இசைக்கருவியையே இசையென்பது போலாகும்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ
ராஜயோகி ராஜமோகன் குருவே திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனத்தின் இலக்கணம் - ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியார்

மனிதன் என்ற ஸ்தூல உருவம் கண்களுக்கு தெரியும் உடலுறுப்புகளை


கொண்டது மட்டுமல்ல கண்களுக்கு தெரியாத மனம், புத்தி, சித்தம், அகங்காரம்,
ஆன்மா என்ற பல சூக்கும பொருள்களையும் கொண்டது என்பதை தொன்று
தொட்டு ஆன்மவாதிகள் கூறி வந்திருக்கிறார்கள். உடல் உறுப்புகளின்
அமைப்பு, செயல்முறை, பயன் முதலியவைகளை உடல்கூறு வல்லுநர்கள்
அறிந்து சொல்வது போல் இச்சூக்கும கருவிகளின் செயல்முறை,
ஒன்றுக்கொன்றுள்ள தொடர்புகள், அவர்கட்கும், சட உடலுக்கும் உள்ள
தொடர்புகள் முதலியவை பற்றி அகக்கண்களை திறந்தவர்கள்
அதைக்கொண்டு, பகுத்தறிந்து விளக்கியிருக்கிறார்கள். ஆகவே, மனம் என்பது
சடப்பொருள் அல்ல. அது ஒரு சூக்கும பொருள் என்பதை புரிந்து
கொள்வோம்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ
ராஜயோகி ராஜமோகன் குருவே திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனதின் இயக்கம் - ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியார்

கண்ணல்ல, கண் வழி மனம் பார்க்கிறது; கேட்பது காதல்ல காது வழி மனம்
கேட்கிறது; முகர்வது மூக்கல்ல, மூக்கு வழி மனம் நுகர்கிறது. மனத்தை
பொறுத்தவரை பார்ப்பது, கேட்பது, முகர்வது என்று சொல்லும்போது அந்தந்த
வடிவாக மனம் திரிந்து நிற்கிறது. அப்போது அதை கண்டு நம் அறிவு
இன்னதென அறிகிறது என்று பொருள் கொள்ள வேண்டும். ஐம்பொறிகளின்
வழியே வெளியுலகிலிருந்து வரும் ஒலி, ஒளி முதலியவைகளின் வடிவமாக
மனம் திரிந்து நிற்பதைத்தான் நினைப்பு அல்லது எண்ணம் என்கிறோம். மனம்
எண்ணுகிறது, நினைக்கிறது என்றால் அது பொறிகள் மூலம் வந்த சப்த -
ஸ்பர்ச- ரூப ரச - கந்தங்களின் வடிவாக திரிந்து நிற்கிறது என்று பொருள்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ
ராஜயோகி ராஜமோகன் குருவே திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
எமது ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியாரின் மானச யோகம்
புத்தகத்தின் சில பதிவுகள்

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனதின் இயக்கம் - ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியார்

மற்றொரு வகை நினைப்புத்தன்மையை , எண்ண முறையை ஆராய்வோம் .


இதை புரிந்துகொள்ள மனிதன் செயல்படும், சித்தம் என்று ஆன்றோர்கள்
சொல்லும் மனத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதைப்பற்றி
விவரமாக பின்னால் விளக்குவோம். தற்போதைக்கு மனிதன் தன் கவனம்
கொண்டு பார்க்கும், கேட்கும், படிக்கும், செய்யும் செயல்களனைத்தின் பிரதி
வடிவங்கள் சம்ஸ்காரம் அல்லது வாசனைகள் என்ற பெயரில் அவன்
சித்தத்தில் குடியிருக்கின்றன. மனிதன் தன் பழங்கால சம்பவம் எதையாவது
நினைவுகூர ஞாபகப்படுத்த விரும்பும்போது தன் உணர்வை இக்கருத்துடன்
சித்தத்தில் ஊன்றி நின்றால், அச்சம்பவ வடிவங்கள், முன்பு நடந்தவை போன்ற
அதே நிலையில் முன் மனதில் அவ்வடிவங்களாக திரிந்து நிற்கிறது. மனதின்
இத்திரிபை தான் ஞாபகப்படுத்தல் என்கிறோம். ஞாபகப்படுத்தி அறிதல் என்பது
சித்தத்தில் பதிந்துள்ள பழைய சம்பவங்களின் வடிவங்கள் மறுபடி மனதில்
தாக்க, மனம் அதே வடிவங்களாக திரிந்து நிற்றல் என பொருள்.

ஆத்ம ஞான யோக சபா குருவான ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ
ராஜயோகி ராஜமோகன் குருவே திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனதின் இயக்கம் - ஸ்ரீ பரமகுரு பண்டிட் கண்ணையா யோகியார்

இதுவரை நாம் விளக்க முயன்றது எல்லாம் மனம் ஒரு சூக்கும சக்தி, அது
மூளையின் வழியாக நினைத்தல் அல்லது எண்ணல் என்ற இயக்கமாக
இயங்குகிறது. மனதின் எண்ணம், இயக்கம் என்பது திரிந்து நிற்கும்
நிலைகளாகும். இத்திரிபு நிலை ஞான இந்திரிய, கர்ம இந்திரிய, புத்தி,
சித்தங்களின் தூண்டுதல்களால், மனதானது கர்ம இயக்கம், நினைவு கூர்தல்,
விசாரித்து புதுமைகளை கண்டுபிடித்தல், கற்பனை செய்தல், கனவு காணல்,
தூக்கத்தில் உடலை இயக்கி கொண்டிருத்தல் என்ற செயல்களை நடத்தி
கொண்டிருக்கிறது என்பதையே எடுத்து காட்டுகிறது.

பொதுவாக விழிப்பு நிலையில் நாமாகவே, சில பல வழிகளில் மனத்தினை


பற்றி இயக்குகிறோம். சிலசமயம் நமக்கு முக்கியமாய் மனதால் யோசிக்க
வேண்டியது ஒன்றுமில்லை. அப்போது சும்மாயிருக்க விரும்புகிறோம்.
ஆனால், மனம் பலப் பல எண்ணங்களை எண்ணிக்கொண்டேயிருக்கிறது.
இதை நாம் கவனித்து கொண்டிருக்கிறோம். முதல் தன்மையில் இதற்கு
சங்கற்பம் எனப்பெயர். இரண்டாவது தன்மையில் தாமாக இயங்கும்
மனதினை கண்காணித்து கொண்டிருக்கிறோம், இதற்கு விகற்பம் எனப்பெயர்.
ஆக, இந்த இருவகை இயங்கங்களை பற்றியும் நினைவில்
வைத்துக்கொள்ளவேண்டும் .

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம்

ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன் குருவே திருவடி


சமர்ப்பனம்

தொடரும் ...
மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

சங்கற்ப விகற்பங்கள் - பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

சென்ற பகுதியில் மனதிரிபுகள் இருவகைகளில் நடைபெறுமென கண்டோம்.


ஒன்று, நாமாக மனதினை இயக்கி செயல்படுத்துவது. இது சங்கற்பமெனப்படும்.
மற்றது மனம் தாமாக இயங்குவதை நாம் காண்பது இது விகற்பமெனப்படும்.

நாமாக நினைக்காத போது, மனம் தானாக இயங்கும்போது, அது


இயங்குமுறையின் முதல் தத்துவம்.

அதாவது நாம் விழிப்புநிலையில் எதைப்பற்றி ஆழ்ந்த அக்கறையுடன்,


கவலையுடன் மனத்தினை இயக்கு வித்தோமோ அந்த இயக்கத்தின் படி
மனம் இயங்க தொடங்கும். குடும்ப சம்பந்தமான சிக்கலை தீர்க்க முடிவு
தெரியாமல் சில காலமாக அதைப்பற்றியே நினைத்து வந்து
கொண்டிருந்தால், நாமாக மனதினை வேறு விஷயத்தில் இயக்காத
போதெல்லாம் மனம் இதுபற்றி இதற்கு முன் நாம் நினைத்த எண்ணங்களை
நினைக்க தொடங்குகிறது. சிலமணி நேரத்திற்கு முன்பாக ஏதாவதொரு
எதிர்பாரா சம்பவம் தம் மனத்தினைப் பற்றி உலுக்குவதாக நடந்தேறிவிட்டது,
அந்த எண்ணத்திலிருந்து மனதினை மாற்ற முயற்சி செய்கிறோம்,
முடியவில்லை. அதே எண்ணம் மனதில் தொடர்ந்து எழுந்து
கொண்டிருக்கிறது. ஓயாத கவலை, ஆழ்ந்த வருத்தம் , நெடிய யோசனை,
காதல் பிரிவினை, கதை தொகுப்பின் கோர்வை, செயலின் அந்தாரி, புதுமை
கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி போன்ற நிலைகளில் மனம் இப்படி இயங்க
தொடங்குகிறது.

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
குருவே திருவடி சமர்ப்பனம்

தொடரும் ...
மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

சங்கற்ப விகற்பங்கள் - பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

மனிதன் விகற்ப இயக்கத்தின் மற்றொரு மாபெரும் தத்துவம், மனம் தானாகத்


திரிபுகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுற்றுப்புறம் இருப்பவர்கள்
உணர்வு கொண்டு எதையாவது நினைப்பார்களானால், அந்த நினைப்பு
அலைகள் இந்த மனதை தாக்கி, இதில் அதே நினைப்புகளை
உண்டாக்குவதுண்டு. தன்னிச்சையாக மனதில் எழும் எண்ணங்களையெல்லாம்
நாம் கவனித்து, இந்த எண்ணம் ஏன் உதித்தது. இதன் அடிப்படை யாது? என்று
ஆலோசித்து வந்தால் அவைகளில் பல நம்மை சுற்றியுள்ளவர்கள் அப்போது
பலமாக நினைத்து கொண்டிருந்த நினைப்புகளாயிருக்க காண்போம். பரீட்சித்து
பார்த்தால் இது சரியென்பது விளங்கும்.

இந்த அடிப்படை தத்துவத்தின் பேரில்தான் பிறர் மனத்தில் நம்


எண்ணங்களை பதிப்பிக்கும் இரகசியங்கள் அடங்கியுள்ளன. ஆகவே,
தன்னிச்சையாக செயல்படும் மனதில் பிறர் எண்ணங்கள்
பிரதிபலிக்குபென்பதை இப்போது தெரிந்து கொள்வோம். தாயாரின் நேர்
பராமரிப்பில் இல்லாத குழந்தை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது போல்,
நம் உணர்வின் கைப்பிடி தளர, தன்னிச்சையாக இயங்கும் மனதில்
பிறருடைய ( நல்ல, கெட்ட ஆவிகள், தெய்வங்கள், மகான்கள்
போன்றோர்களின்) எண்ணங்கள் பிரதிபலிப்பதுண்டு.

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
திருவடி சமர்ப்பனம்

தொடரும் ..

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனமும் கர்மாவும் - பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

முதலில் கர்மா என்பதென்ன? அது எப்படி மனிதனை தொடர்கிறது; எப்படி


பயனளிக்கிறது என்பதை புரிந்து கொள்வோம். " கர்மம்" என்றால் " செய்கை"
என்று பொருள். மனிதன் தன் மனத்தால், வாக்கால், உடலால் கர்மங்களை
புரிகிறான். இக்கர்மங்கள் சுபகர்மங்கள் , அசுபகர்மங்கள் என இருவகைப்படும்.
தனக்கும், பிறர்க்கும் நன்மை உண்டாகும்படி செய்யப்படுபவை சுபகர்மங்கள்,
தீமை பயக்கும்படி செய்யப்படுபவை அசுபகர்மங்கள். கர்மங்கள் செய்து
முடித்தவுடன் கர்மா இயக்கம் முடிந்து விடுகிறது. ஆனால் அதன் சமஸ்காரம்,
வாசனை முடிந்து, அழிந்து விடுவதில்லை. அது உள்மனமாகிய சித்தத்தில்
உறைந்து நின்று, சமயத்தில் மறுபடியும் அதே இயக்கத்தை உண்டாக்கி
நினைவுகூரச் செய்கின்றது

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
திருவடி சமர்ப்பனம்

தொடரும் ..

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனமும் கர்மாவும் - பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

சித்தம் என்பதுதான் உண்மையான மனம்; பொதுவாக நாம் மனம் என்று


கூறுவது அதன் சிறு வெளியமைப்பையே. ஆமையின் உடலுக்குள்ளிருந்து
கால்கள் நீள்வது போல், சித்தத்தில் இருந்து நீள்வதுதான் சாதாரண மனம்.
நீண்ட ஆமையின் கால்கள் அதன் மேல் படும் கல் முதுலியவைகளுக்கு தக்க
இயங்குவது போல், சித்தத்தின் வெளிப்பாடாகிய முன் மனம், புறமனம் முன்
சொன்ன காரணங்களை கொண்டியங்குகிறது. ஆமை தனக்கு
விருப்பமானபோது நீட்டிய கால்களை உள்ளே இழுத்து அடக்கி கொள்வதை
போல சித்தம் மனதின் இயக்கத்தை வேண்டும் போது தன்னில் ஒடுக்கி
கொள்ளும். இது முன் மனம் அடங்கிய நிலையாகும். இந்த சித்தத்தின்
செயல்களை கட்டுப்படுத்துவதுதான் யோகம் என்று பதஞ்சலி யோகம்
கூறுகிறது. சித்தம் கட்டுப்படும் போது, சாதாரண மனம் வெளிச்சென்றிருக்காது,
அது சித்தத்துள் ஒடுங்கி போயிருக்கும்.

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
திருவடி சமர்ப்பனம்

தொடரும் ..

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனமும் கர்மாவும் - பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

சித்தமானது, மனிதன் முக்கருவிகளால் செய்யும் அனைத்தையும் வாசனா


வடிவில் பதித்து கொண்டு , அவன் இறக்கும் போது அதுவும் அவன் கூடவே
செல்கிறது. மறுபடி குறித்த இடத்தில் அவன் பிறப்பதற்கு அடிப்படையாக
இச்சித்தத்தின் வாசனைகளே காரணமாகின்றது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட
நாடாவில், முதலில் செய்யப்பட்ட ஒலிகள் தான் ஒலிக்கும், அதை போல
சித்தத்தில் முன்பு பதிந்த சமஸ்காரங்களின்படிதான் பிறவி உண்டாகும்.
இதைத்தான் கர்மவசம் என்று சொல்கிறோம். கர்மா என்பது சித்தத்தில்
பதிந்துள்ள வாசனைகள் அல்லது சமஸ்காரங்களே ஆகும். சித்தம்
நேர்முகமாய் உடலை இயக்காமல் தான் வெளிப்பாடாகிய மனத்தை
கொண்டுதான் இயக்குகிறது.

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
திருவடி சமர்ப்பனம்

தொடரும் ..

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனமும் சித்தமும் - பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

மனம் என்பது சித்தத்தின் வெளிப்பாடே என்று கண்டோம். இப்போது


முன்மனத்துக்கும், உள்மனமாகிய சித்தத்துக்கும் உள்ள தொடர்புகளை
ஆராய்வோம். ஞாபகப் படுத்துதல் என்பது சித்த சமஸ்காரம், மனதை தூண்டி
அதில் நடைபெற்ற பழைய சம்பவங்களை அப்படியே திரிபு நிலையில்
வெளிப்படுத்துதல் என்பதை கண்டோம். எவ்வளவு தூரம் மனிதன்
தேவையான சித்தவாசனைகளை செயல்படுத்தி, மனதை தாக்கச் செய்ய
முடியுமோ அவ்வளவும் ஞாபகசக்தி படைத்தவன் என்றும், மிக்கப்
பிரயாசையின்பேரிலும் குறித்த ஒரு சமஸ்காரத்தை செயல்படுத்தி
மனநிலைக்கு கொண்டுவர முடியாதவனை ஞாபகசக்தி குறைந்தவன் என்றும்
சொல்கிறோம்.

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
திருவடி சமர்ப்பனம்

தொடரும் ..

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனமும் சித்தமும் - பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

சித்தம், தன்னில் உரையும் வாசனைகளின்படி மனதினை இயக்கி


செயல்படுத்த முயலுகிறது. ஆனால் ஐம்பொறிகளும், தற்போதைய கல்வியும்
அதற்கு மாறுபட்ட முறையில் மனதினை தாக்கி இயக்க முயல்கின்றன.
இந்நிலையில் எதை செய்வதென்ற முடிவு தெரியாமல் அறிவு திகைக்கிறது.
இதையே இருமனப் போராட்டம் என்று அழைக்கிறோம். இதில் அறிவு
புலன்வழி, கல்வி வழி மன இயக்கத்தை மேற்கொண்டு செயல்பட்டால், பல
சமயங்களில் துன்பமும், துயரமும் முடிவாக கிடைக்கும். சித்தத்தின் வழி
செயல்பட்டாலும் பல சமயங்களில் இப்படியாகும். இத்தகைய இருமனப்
போராட்டம் எல்லோரிலும், பல சமயங்களில் நடந்து கொண்டேயிருக்கிறது.
ஆனாலும் அதை சீர்த்தூக்கி, செயல் முறை அறிவை யாரும் பெறுவதே
இல்லை. இங்கு சித்தத்தின் தூண்டுகோல் பழைய சமஸ்காரத்தின்
அடிப்படையில் அமைந்தது, மனதின் தூண்டுகோல் அப்போதைய
சூழ்நிலையை , சமூகநீதியை அடிப்படையாக கொண்டது.
அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா
குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
திருவடி சமர்ப்பனம்

தொடரும் ..

மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனமும் சித்தமும் - பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

எந்தெந்த வாசனை எவ்வெப்போது செயல்படும் என்பதை காணுமுன் கர்மா ,


விதி, மனதின் வழியாகதான் மனிதனுக்கு பயன் கொடுத்தாக
வேண்டுமென்பதை முதலில் புரிந்து கொள்வோம். மனதில் எண்ணம் உதித்த
போதும் மனிதன் அதன்படி செயல்பட மறுத்திருந்தால், கர்மம்
பயனளித்திருக்க முடியாது. அதே போல் சித்தம் மனதில் எண்ணத்தை
உண்டாக்க முடியாதபடி மனக்கவனத்தை ஒருவன் கட்டு படுத்தியிருந்தால்
அப்போதும் கர்மம் பயனளித்திருக்க முடியாது. அதனால் கர்மம், வினை
மனதின் வழியாகத்தான் மனிதனுக்கு பயனளிக்கிறது என்பதை தெளிவாக
புரிந்து கொள்ள வேண்டும்.

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
திருவடி சமர்ப்பனம்

தொடரும் ..
மானச யோகம்
ஸ்ரீ குருவே நமஹ

மனமும் சோதிடமும்- பரமகுரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகியார்

மானசீக வித்தையின் ஒரு பெரும் இரகசியத்தை யாவரும் புரிந்து கொள்ள


வேண்டும். பூர்வ ஜென்மங்கள் செய்த கர்ம பலன்களை மட்டும் மனிதன்
இப்பிறவியில் அனுபவித்து வரவில்லை. இப்போது இப்பிறவியில் செய்யும்
பல கர்மங்களின் பலன்களையும் உடனுக்குடன் அனுபவிக்கிறான். நெருப்பில்
கை வைத்தால் சுடும், சுடட்டும் பார்க்கலாம் என்று ஒருவன் நெருப்பில் கை
வைத்தால் உடனே அவன் கையில் கொப்புளம் வரும். அதனால்
எரிச்சலையும் வலியையும் அனுபவித்தே ஆக வேண்டும். இது பூர்வ
வினைப்பயனல்ல. இப்போதைய வினைப்பயன்.

இன்றைய வாழ்க்கை முறையமைப்பில் மனிதன் தன் பூர்வ ஜென்ம


வினைப்பயனை ஓரளவு அனுபவித்தால் இப்போதைய கர்ம பயனைத்தான்
அதிகமாக அனுபவித்து வருகிறான். இவ்வனுபவங்கள் அவனுக்கு
பெரும்பாலும் தீமையையே உண்டாக்குபவையாகின்றன. எதுவும் மனதின்
வழியாகத்தான் செயல்பட்டாக வேண்டியதால் இப்போதைய கர்ம பலன்களும்
அவனுக்கு தவறான மன எண்ணங்களால் விளைகின்றன. இப்படி விளைய
செய்யும் சாதனைகளில் ஒன்றே தற்கால சோதிட அமைப்பு.

சோதிடத்தின் அ - ஆ - தெரியாதவர்கள் தம்மை சோதிடர்கள் என்று


சொல்லிக்கொண்டு, அண்டி வருபவர்களை பல தவறான கருத்துக்களை
புகுத்தி விடுகிறார்கள். இதன் பலனாக தேவையில்லாத பல இன்னல்களுக்கு
மக்கள் உள்ளாகிறார்கள். (இது இன்றைய பல போலி குருமார்கள் மற்றும்
ஆன்மிகவாதிகளுக்கும் பொருந்தும்)

இப்படி போலி சோதிடர்களால் பரிமாறப்படும் போலி பலன்களும்


விளைவுகளும் மனதின் மூலமாகத்தான் செயல்படுகின்றன. ஒரு சோதிடர் "
உனக்கு ஏழரை நாட்டு சனி வந்திருக்கிறான், பயங்கர விளைவுகளை
உண்டாக்குவான்" என்று சொன்ன போதிருந்து, தன் மனதில் சிறிதும் தீய
எண்ணத்துக்கும், பயத்துக்கும் இடந்தராமல் நல்லதையே உறுதியாக பற்றி
நிற்பானானால் உண்மையாக வரும் ஏழரை நாட்டானும் அவனை ஒன்றும்
செய்து விட முடியாது.

ஆனால் சாதாரண மனம் படைத்த யாரும் அவ்வளவு எளிதாக கிரக


பிரபாவங்கள், கர்ம பிரபாவங்கள் தாக்கா அளவுக்கு தம் மனதை
உறுதிப்படுத்தி , கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள முடியாது. நல்ல மன உறுதி,
மனக்கட்டுப்பாடும் உடையவர்களை கிரகங்கள் அவ்வளவாக பாதிக்க முடியா.

அகஸ்திய மஹரிஷியின் மூல சபையான ஆத்ம ஞான யோக சபா


குருமண்டலம் ஸ்ரீ தனலட்சுமி அம்பா சமேத ஸ்ரீ ராஜயோகி ராஜமோகன்
திருவடி சமர்ப்பனம்

தொடரும் ..

You might also like