Professional Documents
Culture Documents
அச்சம், அவமதிப்பு இரண்டும் மனிதனின் இயல்பு நிலையை முடக்கி, ஒருவனை முற்றிலும் செயல்
இழக்க வைக்கும் சக்திகள். பயத்தில், மனம் உறைந்து விடுகிறது. அவமதிப்பில் கூனிக் குறுகி,
ஒடுங்கி அடங்கிப் போகிறது. இவை நம் திறமைகளில் தேக்கங்களையும், முன்னேற்றங்களில்
முட்டுக்கட்டைகளையும் இடுகின்றன . நம் தன்னம்பிக்கையும் தன்மானமும் தடம் புரள்கின்றன,
என்றால் மிகையாகாது. நாம் நமது அச்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தினால் , வாழ்க்கை எனும்
போர்க் களத்தில் வெற்றி வாகை சூடி வலம் வரலாம்...
தயக்கமெனும் தடைக்கல்
பலரின் திறமைக் கதவுகள் திறக்க பெரும் தடையாக இருப்பது தயக்கம் என்கிற தாழ்ப்பாளே. தாழ்வு
மனப்பான்மை, கடந்த கால தோல்விகள், முன்னெடுப்பின் விளைவுகளைப் பற்றிய அச்சம், தம்
திறமையை பற்றிய ஐயம் ஆகியவையே தயக்கத்தின் ஊற்றுக்கண்கள் .
நீட்டிய கரங்களை பற்றிக் கொள்ளவும், தேவை உள்ளவருக்கு உதவிக் கரம் நீட்டவும் பழகிக்
கொள்ளுங்கள்.
சற்றே சிந்திப்போம்…