பின்னையுந் தேவரீர் இந்தப் பூலோகத்திலே எனக்காக வந்து மனுஷாவதாரஞ்
செய்து பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்ததினாலே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. மேலும் உம்முடைய திருமரணத்தினாலே வந்த அளவில்லாத பலனை எனக்கு ஞானஸ்நானத்தின் வழியாகக் கொடுத்தருளின ீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
ஞானஸ்நானம் பெற்றபிற்பாடு நான் அநேகமுறை பாவங்களைச் செய்திருக்க
அந்தப் பாவங்களையெல்லாம் பாவசங்கீ ர்த்தன மூலமாகப் பொறுத்து, தெய்வக ீ போசனமாகிய நற்கருணையுங் கொடுத்து, எனக்கொரு காவல் சம்மனசையுங் கட்டளையிட்டு, இவை முதலான எண்ணிக்கைக்குள் அடங்காத சகாய உபகாரங்களைச் செய்து கொண்டு வருகிறதினாலேயும், விசேஷமாய் இந்த இராத்திரி காலத்திலே என்னாத்துமத் துக்குஞ் சரீரத்துக்கும் யாதொரு பொல் லாப்பு இல்லாமற் காத்திரட்சித்ததினாலே யும், என்னாற் கூடியவரையில் நன்றி யறிந்த மனதோடு தேவரீரை வணங்கித் தோத்திரஞ் செய்கிறேன். சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
சர்வத்துக்கும் ஆண்டவரே, தேவரீர் என் சரீரத்தையும் பஞ்சேந்திரியங்களையும்
அவை களிலே உண்டான தத்துவங்களையும் என் ஆத்துமத்தையும் அதிலேயுள்ள புத்தி நினைவு மனதென்கிற மூன்று புலன்களாகிய உள் ளிந்திரியங்களையும் எனக்குக் கொடுத்தருளி ன ீரே. இவை எல்லாந் தேவரீருக்குப் பிரியமாயிருக்கிறதற்குச் சேசுநாதர் செய்த புண்ணியங்களோடேயுஞ் சகல அர்ச்சியசிஷ்டர்களுடைய தேவ வசீகரமான காணிக்கைகளோடேயுந் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். ஆனபடியினாலே இப்பொழுது துவக்கி மரணபரியந்தம் நான் செய்யும் தரும காரியங்கள் எல்லாத்தையுந் தேவரீருக்குத் தோத்திரமாக ஒப்புக்கொடுக்கிறேன்.
திருச்சபையின் கட்டளை, உத்தம மனஸ்தாப மந்திரஞ் சொல்லவும். சர்வேசுரா சுவாமீ , தேவரீர் அருளி செய்த வேத கற்பனையின்படியே அடியேன் சுமுத்திரையாய் நடக்கத் துணிந்திருக்கிறபடியினாலே என்னிடத்தில் இருக்கிற ஆங்காரங் கோபம் முதலிய விசேஷ துர்க்குணங்களை நீக்கி இன்று அநேக தருமங்களைச் செய்து வாக்கினாலேயுங் கிரிகையினாலேயுந் தாழ்ச்சி பொறுமை கற்பு முதலிய புண்ணியங்களை அடையப் பிரயாசைப்படுவேன்.
இவையெல்லாம் என்னுடைய பலத்தினாலே கூடாதே, பரிசுத்த தேவ மாதாவே,