You are on page 1of 1

திருமந்திரம் - ஐந்து கரத்தனை

ஐந்து கரத்தனை1 யானை முகத்தனை


இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. (விநாயகர் காப்பு)

ஐந்து கரத்தனை - ஐந்து கைகளையும்


யானை முகத்தனை - யானை முகத்தையும்
இந்தின் – சந்திரனது (இந்து – சந்திரன்)
இளம்பிறை போலும் - இளமை நிலையாகிய பிறைபோலும் (crescent shaped)
எயிற்றனை - தந்தத்தையும் உடையவரும் (எயிறு - tusk of an elephant)
நந்தி மகன்தனை - சிவபிரானுக்குப் புதல்வரும் (நந்தி – சிவன்)
ஞானக் கொழுந்தினைப் - ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய
விநாயகப் பெருமானை (கொழுந்து – சுடர்)
புந்தியில் வைத்து - உள்ளத்தில் வைத்து (புந்தி has 2 meanings - புத்தி, மனம்)
அடி போற்றுகின்றேனே - அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

குறிப்பு: திருமூலர் தமது நூலை “ஒன்றவன் றானே” எனத் தொடங்கினார் என்பது


சேக்கிழார் திருமொழியாதலின், இது, பிற்காலத்தில் இந்நூலை ஓதுவோர்
தாம்முதற்கண் ஓதுதற்குச் செய்து கொண்டது என்க.

1
In a few texts this verse starts with அந்தி நிறத்தனை

You might also like