You are on page 1of 25

நிலவு நேரத்தில் சிறகீ

முன்னுரை

நான் பொறியில் படித்தவன் தமிழ் மேல் பற்று கொண்டவன்


நிறைய கதைகள் படிக்கவில்லை சில நல்ல கதைகள் படித்து உள்ளேன்
இன்னும் சில சுவாரசிய புத்தகங்கள் படித்து எழுத ஆசை வந்ததால் இங்கே
வந்து எழுதுகிறேன்.
எனக்கு வரலாறு கதைகளும் சில மனம் சார்ந்த கதைகளும் பிடிக்கும்
அதலால் சற்று முயற்சிக்க உள்ளேன்
எனக்கு ஆதரவு தாருங்கள். கதைக்குள் பயணிக்கலாம் என்னோடு எனக்கு
வரும் ஒரு நடையில் எழுதி உள்ளேன் சில நேரம் தங்களிஷ் தமிழ் கலந்து
புரியும் படி எழுதி உள்ளேன் உங்களின் ஆதரவும் கடவுள் என்றும் துணை
நிப்பான் என்ற நம்பிக்கை கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன் வாருங்கள்
பயணிக்க....

வணக்கம்! என்னடா இவள் நியூஸ் நிருபர் மாறி வணக்கம் சொல்லுறா


நினைக்கலாம் நீங்க என் என்றால் இப்பொழுது அவர்கள் தான் இதை பயன்
படுத்துகிறார்கள் வேறு யாரும் இந்த வார்த்தையை பயன் படுத்துவது
இல்லை அவ்வளோவாக.

அதனால் நான் மறுபடியும் அதை சொல்லி ஆரம்பிக்க நினைத்தேன்.


வணக்கம்!
என் பெயர் ஜனனி ! எனக்கு வயது இருபத்து நான்கு!
  இப்போ நான் ஒரு கோமா நோயாளி என்று சொல்கிறார்கள்.இங்கு
இருக்கும் மருத்துவர்கள் என்னை சுற்றி நிறைய படுக்கைகள் உள்ளது
நிறைய நோயாளிகள் உள்ளன போலும் உள்ளது  சத்தம் கேட்கிறது சுற்றி.
  நான் இங்கு வந்து ஒரு இரண்டு நாள் ஆகி இருக்கும் என் கண்கள் திறக்க
முடியவில்லை ஆனால் சத்தம் கேட்கிறது அந்த சத்தங்கள் சுற்றி
நோயாளிகள் சத்தம் தான் எப்படி சொல்கிறாள் என்று எண்ணுவிற்கள்!
நீங்கள் நான் சொல்கிறேன். என்னை சுற்றி மருந்து  வாசனையும்,அய்யோ
,அம்மா, வலிக்குது , சாப்டியா,விசாரிக்க வந்த உறவுகள் உள்ளே ஒன்று
வைத்து கொண்டு வெளியே ஒன்று சொல்கிறார்கள், இதற்கு மேலாவது
சுதானமா இருப்பா என்று சொல்லி செல்கிறார்கள் மற்றவர்கள்.
 
  ஆனால் நான் எப்படி இங்கே வந்தேன் என்று தெரியுமா
உங்களுக்கு?சொல்கிறேன் கேளுங்கள் எனக்கு இப்பொழுது கொஞ்சம்
சந்தோஷமும் இருக்கு கோபமும் இருக்கு என் என்றால் அதற்கு காரணம்
என் பக்கத்தில் இருக்கும் ஒரு ஆண் தான்!!!.

இவர் யாரு என்றும் தெரியாது எனக்கு! இரண்டு நாள் முன்னாடி வரை !


இவர் பெயர் என்னவென்றும் தெரியாது.
ஆனால் இவரை நான் காதலிக்கிறேன்!
  இவரும் என்னை காதலிக்கிறார்! என்று எனக்கு தெரியும்.
  ஆனால் இவர்கும் நான் தான் என்று தெரியாது. இவருக்கும் என்னை
தெரியாது இன்னுமும்.

புரியவில்லை அல்லவா! என் காதல் கதை கொஞ்சம் குழப்மும் கொஞ்சம்


வித்தியாசமும் உள்ளது.

அதை முதலில் இருந்து சொல்கிறேன் தெளிவாக! இரண்டு வருடம்


பின்னே செல்வோம் வாருங்கள் .

என் ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமம் அந்த கிராமம்


பெயர் கரிசல்காடு . இந்த திருவண்ணாமலை பற்றி சில வார்த்தைகள்
சொல்லித்தான் ஆக வேண்டும் .
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில்
இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். திருவண்ணாமலை
மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். இந்நகருக்கு, திருவருணை
மற்றும் திருஅண்ணாமலை எனும் பெயர்களும் உண்டு. புனித நகரமாகக்
கருதப்படும் இந்நகரில், புகழ்பெற்ற (நினைத்தாலே முக்தி தரும் ஏழு
நகரங்களில் ஒன்றான) அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.

திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே


நகரமைத்து வாழ்ந்து வருகின்றனர். இது "மதுரை" நகரினைவிட
பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது.
 
திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான
நகரங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க
இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன்
திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய
முடிகின்றது.

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக்


காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு
முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக
விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழில் சிறந்து
விளங்கியது.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது.


இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் ? என்று
சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார்.
அவருடைய அடியைத் தேடி, திருமால் வராக அவதாரம் எடுத்துப்
பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா, சிவபெருமானின் முடியைத் தேடி,
அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும்
சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது
இத்தலத்தின் தலப் புராணமாகும் என்கிறார்கள்.
திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை
பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில்
கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப்
பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த
விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில்
கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில்
சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள்
வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம்
ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.

சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக


திருவண்ணாமலை உள்ளது.

திருவண்ணாமலை மலை ஓர் இறந்த எரிமலையாகும். பல


நூற்றாண்டுகளுக்கு முன் இது வெடித்து, இதன் தீக்குழம்பு, நீரில் தோய்ந்து
உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்கள்.

இத்தனை பெருமைகளும் சில ஆச்சரியக்களும் சில இரகசியக்களும் சில


வினோதம்க்களும் உள்ள ஒரு ஊரில் வாழ்கிறேன் நான்.

அதில் இரு வினோதமும் எனக்கு நடந்தது இருக்கலாம் போலும் உள்ளது .

  நான்  காலேஜ் இரண்டாம்  வருடம்  விவசாய படிப்பு படிக்கிறேன் எனக்கு


விவசாயம் பிடிக்கும் ரொம்பவும். என்னப்பா ஒரு விவசாயி இரண்டு ஏக்கர்
நிலம் இருக்கு எங்களிடம் . ஒருகினைந்த விவசாய செய்கிறோம்
நாங்கள்.நல்ல அன்பான குடும்பம் நல்ல பாத்துபாங்க என்னை
எப்பொழுதும் அப்பா ரொம்ப பாசம் காட்டுவார் என் மேல்  ஃபேமிலி காக
அவங்க சொல்லுகிற பையன தான் திருமணம்  பண்ணலாம் முடிவு லே
இருக்கிறேன்.இப்படியே போச்சு என் வாழ்க்கை. காலேஜ் போன பிறகு
நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.என் நண்பர்கள் நிறைய பேர்  லவ்
பண்ணி ஊர் சுற்றுவார்கள் தினமும். ஆனால் எனக்கு அதுல உடன்பாடு
இல்லை. என்னை பொறுத்த வரிக்கும் கல்யாணம் செய்த பிறகு என்
மன்னன் வுடன்  வரும் காதலே உண்மை என்று நம்புகிறேன்  இப்ப வரை.
   என் வாழ்கையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது நன்றாக
எல்லா நாட்களும் இப்படியே .
   இது எல்லாம் மாறியது அந்த ஒரு நாள் வந்தது  அது வரமா சாபமா என்று
தெரியாத  நாள் ஒன்று.      இப்படி நார்மல் வாழ்க்கை தான் . ஒரு நாள் அந்த
நாள் தேதி குட மறக்க முடியாது 13/08/2018 அதற்கு காரணம் அன்று என்
பிறந்த நாளும்,  அன்று ஒரு ஒன்பது மணி அளவில்  எங்க விட்டில்
அனைவரும்  சிக்கிறம் உறங்கி விடுவார்கள்.
    நான் இருக்கிறது ஒரு கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்  வழக்கம்
போல அங்கு உள்ள கிராமங்களில் எல்லோரும்  8.30 மணி அளவில்
உறங்க சென்று விடுவார்கள். நானும் கண் முடி உறங்க ஆரம்பித்தேன்
என்னை சுற்றி முழுவதும் அமைதியாக இருந்தது .
   
அப்பொழுது திடீர் என்று ஒரு குரல் கேட்டது! அதுவும் ஒரு ஆன் குரல்!
"எங்கடி இருக்க கொஞ்சம் சிக்கிரம் வா!!  என் வாழ்கையில்!!" என்று
முடித்தது.
அந்த குறள் நான் பதறிப் போய் முழித்து பார்த்தால் யாரும் இல்லை!
வெளியில் சென்று பார்த்தாலும் யாரும் இல்லை அங்கேயும் .அது மட்டும்
இல்லை! அந்த குறள் ரொம்ப பக்கத்தில் கேட்டது போலே இருந்தது.
ஒன்றும் புறியதவாலாய் யோசித்து கொண்டே முழித்து இருந்தேன்
அன்று.
அதே குறள் மறுபடியும் கேட்டது என்னவென்றால் " என்னை தனிமை
ரொம்பவும் ஆளுகிறது உன் நினைவாலே உயிர் வாழ்கிறேன் இந்த நாள்
வரை உயிரே என்னை வந்து சிக்கிரம்
சேர்வாயக" என்று முடிந்தது. நான் எவண்டா அது யாரு மறைந்து இருந்து
குறள் கொடுப்பது என்றுளாம் சொல்லினேன் அப்பொழுதும் யாரும் வர
வில்லை குரலும் வர வில்லை.
எழுந்து போய் என் அப்பாவிடம் கூறினேன் அவர்கள் எங்களுக்கு எதும்
சத்தம் வரவில்லை என்றார் எனக்கு ஒன்றும் புரியவில்லை எதவாது
கணவு கண்டு இருப்பமா போய் தூங்கு மா என்றார்.

நான் அன்றும் முழுவுதும் உறங்காமல் அந்த குரலை பற்றியும் அந்த குரல்


சொன்ன வார்த்தையும் யோசித்து கொண்டே இருந்தேன்.

அடுத்த நாளும் வந்தது ஒன்பது மணி தாண்டியது மறுபடியும் அந்த குரல்


கேட்டது இன்னிக்கி வேற ஒன்னு சொல்லுகிறான்.
அவன் " நீ இப்ப எங்க இருக்க உண்ண இப்பயே பாக்கனும் போல இருக்கு
இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ண " டக்குனு கண் திறந்து பார்த்த
யாரும் இல்ல மணி பார்த்தா ஒன்பது அறை ஆகுது எல்லாம் தூங்கிடாங்க
ஆனா எனக்கு அந்த குரல் கேட்டது எனக்கு நானே ஏதோ கனவா  இது
ஒன்றும் புரியாமல் மறுபடியும் கண் இருக்க முடி  உறங்க பார்த்தேன்
மறுபடியும் குரல் கேட்குது
" உன்னால பதில் சொல்ல முடிலலே லே " என்று சொன்னான்.

அப்படினு மறுபடியும் பயத்தில் எழுந்து பார்த்தா யாரும் இல்ல வெளியே


போய் பார்த்தேன் மெல்ல போனேன் எங்கேயும் யாரும் இல்ல ஆனா குரல்
கேகுது  எப்படினே தெரியவில்லை குழப்பத்தில் தூங்காம இரவு
முழுவதும் கடந்தது அன்றும்.

அடுத்த நாள் விடிஞ்சது விட்ல அம்மா அப்பா கிட்ட சொன்ன யாரும்


பெரிசா கண்டுகல எதவாது காத்து கருப்பா இருக்கும் சொல்லிட்டாங்க
அப்ரோ காலேஜ் போய் தூக்கம் தா வந்துச்சு ஒரு டீச்சர் பார்த்து get out
என்று இங்கிலீஷ் லே சொல்லி முடித்தார். நான் வெளியே வந்து என்
பக்கத்து கிளாஸ் வெண்ணிலா கிட்ட சொன்னேன் நைட் எனக்கு ஒரு குரல்
கேட்டுச்சு அவளும் கண்டுகள ஏதாவது கனவா இருக்கும் டி சொல்லிட்டா.

பொழுதும் போச்சு வழக்கம் போல சாப்டு தூங்க போனேன் அப்ப மணி


ஒன்பது பயத்தில் முழிச்சு இருந்த! அப்பயும் அந்த குரல் கேட்டது இணிக்கி
வேற வார்த்தைகள் வந்துச்சு.

" உண்ண கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியாம காலம் கடந்து


விடுமோ என்று பயம் அதிகம் ஆகுது மா எங்க இருக்கமா நீ உண்ண
இப்பயே பாக்கனும் போல இருக்கு " என்று முடிந்தது எனக்கு ஒன்னும்
புரில யாரும் பக்கத்துல இல்ல ஆனா குரல் மட்டும் கேட்குது! நான் ஒரு
வேலை  பேய் யா இருக்குமா யோசிச்ச ஒரு கணம். பேய்யா இருந்தா என்
இதை எல்லாம் சொல்ல போகிறது என்று ஒரே குழப்பமா இருக்கு!
யாருகிட்ட சொன்னாலும் நம்பல என்னை!  இப்படியே போச்சி என்
இரவுகள்.
ஆனால் அந்த குரல் தினமும் இரவு  கேட்கும் சில நாள் எந்த குரலும்
கேக்காது சில நாள் அந்த குரல் என்னிடம் பேச முயற்சிப்பது போல்
இருக்கும்.
அந்த குரல் ஆனா என்னாலே திருப்பி பதில் சொன்னாலும் கேளாது
போலும் உள்ளன. அதே குரல் கெக்குது வேற கேள்வி வரும் சில நேரம்
பொலம்புற மாறி இருக்கும் சில நேரம் காதல் பத்தி சில நேரம் வாழ்க்கை
பத்தி சில நேரம் என்ன பத்தி வர்ணிக்கிற மாறி இருக்கும் அப்படி அந்த
குரல் சொன்னது எல்லாம் நிறைய இருக்கு.

போக போக எனக்கும் பழகி போனது அந்த குரல் சொல்வதை  சிலவற்றை


நான்  எழுதியும்  வச்சி இருக்கிறேன் அதில் ரொம்ப பிடித்தது நிறைய
இருக்கு. நான் புரிந்து கொண்டது என்ன வென்றால் .
அந்த குரல் தன் வருங்கால மனைவி நினைத்து பேசுகிற மாறி இருக்கும்
சில நேரம் அந்த குரல் என்னை சிறகி (siragi) என்றே சில நேரம் குறிப்பிடும்.
அந்த குரல் மேல் போக போக எனக்கும் காதல் வந்தது எண்ணெரால் சில
வரிகள் அவன் சொல்வது அற்புதமாக இருக்கும் என்னை அறியாமல்
அவன் என் மேல் வைத்து இருக்கும் காதல் புரிய ஆரம்பித்தது. 
அந்த குரல் சொல்லியதை சிலவற்றை சொல்ல முயற்சிக்கிறேன் நான்.

ஒரு நாள் அதே மணி ஒன்பது மேல் அந்த குரல்.

"நான் உன்னை பார்த்தது இல்லை இதுவரைக்கும் ஆனாலும் எனக்கு


உண்னை பிடிக்கும் எனக்கு ரொம்ப உண் நினைப்பாவே இருக்கு
எப்பொழுதும்!
என்னை பற்றி நீ  எதையாவது யோசிச்சி இருக்கியா என்றாவது நான் யார்
தெரியுமா என் பெயர் தெரியுமா ?
எனக்கும் உண் பெயர் தெரியாது தான் ஆனாலும் உன்னை பிடிக்கும்".
என்று முடிப்பான் சில நேரம் இவன் பேசுவது கேட்டால் நன்றாக இருக்கும்
சில நேரம் யார இவன் அடிகணும் போலும் இருக்கும் .

ஒரு நாள் அந்த குரல் எனக்கு பெயர் வைத்தது "சிறகீ " என்று இனிமேல்
உன்னை சிறகி என்றே அலைப்பேன் என்று கூறியது அந்த குரல்.

ஒரு நாள் அந்த குரல் ஒரு கதையே சொல்லியது அதை கேட்டு தான் நான்
உடைந்தென் போலும் உள்ளது.
அந்த குரல் சொல்ல ஆரம்பித்தது
நான் இன்று ஒரு கதை படித்தேன் சிறகீ
அதை உன்னிடம் சொல்லவே முயற்சிக்கிறேன் அந்த நிலவை பார்த்து
உன்னை நினைப்போடு உன்னிடம் பேசுவதாக எண்ணி படிக்க
அரம்பிகிரென் சிறகீ ..
"ஒரு_முதியோரின் டைரியில் எழுதி  இருந்த ஒரு கதை. இது பெயரே இது
தான் சிறகீ

திருமணமாகி 35வருடங்கள் . அவருக்கு 61வயது. கடந்த மாதம்


ஓய்வுபெற்று வட்டில்
ீ மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.
வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே...
ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என
சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்...
இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச
முடிகிறது.. வட்டில்
ீ எது எங்க இருக்கு என அறியமுடிகிறது...
வட்டு
ீ வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்...
மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும்
சுறுசுறுப்பாக இருந்தால்...
வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..
ஆமா... ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு
காலமாச்சு...
அவளும் உட்கார அவள் கையை பற்றி... ஏதோ பேச வந்தவர்... அவள் கை
சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்..
முகங்கள் சுருங்கியது... கண்கள் கலங்கியது.. அம்மு என்னது.. கை பூரா
வெட்டுக்காயமா இருக்கே... நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா
இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்துவரும்போது பட்டு மாதரி
இருந்தாயே.. உன் கை பளபளப்பா வழுவழுப்பா இருந்ததே என
நிமிர்ந்தார்...
அவள் மெல்லிய சிரிப்புடன்
நா எதை என்னவென்று சொல்ல.. 35 வருசதில சமையல்ல எண்ணெய்
தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி
கீ றியிருக்கலாம்... அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு
பட்டிருக்கலாம்... இப்படி எதேதோ நடந்திருக்கும்... என்றால்... மெல்லிய
கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ண ீர் வடிந்தது...
என்னம்மு சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம்
மாதிரி என்று அதிர்ந்தார்...
நீங்க என்னய வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு
முன்னாடி ஒரு நாள் கூறின ீங்க... நானும் எடுத்துவர போனேன் கவர் கீ ழ
விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே
வந்தீங்க... அதான் சூடா இருந்தது என்றாள்...
இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே.. அம்மு...
நா சொல்லலதாங்க... எந்த காயத்தையும் நா சொல்லலங்க... அப்ப நா
சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவங்க
ீ பொறுப்பில்லையா ...
பார்த்து நடக்கமாட்டியா... என.. என்றாள்
என் கண்களில் கூட படலயே அம்மு இதெல்லாம்... என்றார் வலி நிறைந்த
குரலில்..
என்னை நீங்க அருகில சந்திக்கிறதே இரவு இருட்டில தானே அதுகூட சில
நிமிடம்தான்
அப்ப எப்படிங்க என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றாள்...
அம்மு... அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நா இப்படி ஓடாய்
உழைத்தேன் பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினன்..
உன்னயும் ஒரு குறையும் இல்லாம பார்த்தேன்... என்றார்..
உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது என்
மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க...
என்னய மன்னிச்சிடு அம்மு... பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக
இருந்துவிட்டேன்..
என்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்...
எனக்கொரு ஆசைங்க... அத இப்பவாவது கேக்கமுடியுமா ... என்றாள் குரல்
சுருதி குறைவாக...
கேளு அம்மு... என்றார்
நாம திருமணமான புதிதில சில நாட்கள் நா உங்க மடியிலயும் நீங்க என்
மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்... அப்புறம் 35 வருசமா
தலையனிலதான் நாம தலை வைத்து படுத்திருக்கம்... இப்ப உங்க மடியில
கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா... என அம்மு கேக்க அவருக்கும்
அம்முக்கும் கண்கள் கலங்கியே விட்டது... அவளை அணைத்து தன்
மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.
மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு
வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை....
இதே போல்தான் பெரும்பாலும் எல்லா பெண்களின் வாழ்வும்..
திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல
உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது...
எத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின்
மனக்குறைகளை கேக்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்...
ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை
கீ றல்கள் காயங்கள் இருக்கும் என...

இவை ஏன் வந்தது என கேளுங்கள்...


அவளின் மனக்காயம் வெளிவரும்
என்று அந்த கதை முடிந்தது. அந்த குரல் கடைசியாக முடியும் நேரத்தில்
உன்னை கடைசி வரை சந்தோஷமாக நன்றாக பார்த்து கொண்டே இருக்க
ஆசை சிறகீ என்று முடிந்தது!. சத்தமும் அதற்கு அடுத்து கேக்க வில்லை.
ஆனால் எனக்கு அந்த கதை ஒரு மாறி உழுக்கியது என்னை! சொல்ல
வார்த்தை இல்லாமல் திகைத்தேன் அந்த கணம் அவனை நேரில்
பார்க்கவே ஆசை பட்டேன்.

இப்படியே சென்றது என் இரவுகள் அடுத்து என் மூன்றாம் ஆண்டு


செமஸ்டர் களும் வந்தது .
சில நாள் அந்த குரல் அவன் எழுதிய கவிதை லாம் சொல்லும் நான் அந்த
குரலுகே அடிமை ஆகியே போனேன் போக போக என்னை மறந்து காத்து
கிடந்தேன் அந்த குரலுகாக.

சில கவிதைகள் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்! அவன் மேல்


அளவு கடந்த காதலும் வைக்க வும் அன்பும் பாசமும் சில நேரம் அதிகம்
ஆகியது அந்த குரல் மேலும் அவன் மேலும்.

சில கவிதைகள் அந்த குரல் சொல்லியது

...சிறகியே
எந்த தீ பழக்கமும்
இல்லை
என்னிடம்
இந்த நொடி வரை
ஆனால் உண்  பார்வை
பட்டதும் ஏற்படும் போதை
தீ  போதும்
நானோ கன் மூடி சாயும் வரை.....

....சிறகியே
வலி போக்குலே சுரியனா தேயிது
மனசோ அடி ப்பட்ட
பாம்பு போல சுறுளுது வயசு
நீல
நிலவா நிலவா நீ  நிலா வா
வானம் பூமி எங்கும் காண இருக்க
நீயோ எங்கோ இந்த புவியிலே
இந்நேரம் பறக்க
நான் உன்ன தேடி
தனி திசையில்
பறக்கிறேன்..

இப்படி லா என்னை நினைச்சு ஒருத்தன் கவிதை எழுதுவான யாரும் எதிர்


பார்த்து இருக்க மாட்டார்கள்! என்? எந்த பெண்ணும் எதிர் பார்த்து இருக்க
மாட்டார்கள் இந்த உலகத்தில் இப்படி ஒருத்தன் நேசிப்பான் என்று.
பெரியார் ஆச்ரியம் எனக்கு இது.
ஒருத்தர் ஒருத்தரை  பார்க்காமல் இந்த அளவு ஒருத்தன் காதல் செய்ய
முடியுமா என்று நான் எதிர் பார்க்க வில்லை.

இவனை பார்க்க எனக்கும் ஆசை வந்தது. ஆனால் எப்படி தெரியவில்லை


என்று வறுத்த பட்டு இருந்தேன் சில நாள்.

அவன் குரல் கேக்கவே சில நாள் காத்து கொண்டு இருப்பேன். சில நாள்
அந்த குரல் பேசும் போது நான் பதில் சொல்வது போல் ச்சுமா நினைத்து
பேசி பார்பேன் தனியாக.

அதை ஒரு நாள்! என் அம்மா பார்த்து! பொண்ணுகு ஏதோ பிடிச்சி கிச்சிங்க
எங்கனா குட்டி போய் காட்டனும் இப்பல்லாம் தனியா பொலம்புறா
இப்படியே பொச்சினா யாரும் திருமண பணிக்க மாட்டாங்க இவள என்று
அப்பாவிடம் சொல்லினார் என் அம்மா.

அதற்கு அடுத்து என் அப்பா என்னை அழைத்து கொண்டு தனியா கேட்டார்!


என்ன ஆச்சுமா உனக்கு சொல்லு என்றார்.
என் அப்பா ஒரு விவசாயி என்று மட்டும் உங்களிடம் சொல்லினென்
அல்லவா ஆமாம். இவர் பொறியில் படித்தவர் மாதம் நற்பது ஆயிரம்
சம்பளம் வாங்கி இருந்தவர் விவசாயம் மேல் உள்ள ஆர்வ்வதினால்
விவசாயத்தில் இறங்கி விட்டார். பொறுமை சாலி நல்ல திறமை மிக்கவர்
இவர்.

நானும் சொல்லிநேன் அதனால் அவரிடம் அப்பா அன்றே நான்


சொல்லிநேன் அல்லவா எனக்குள் ஒரு குரல் கேட்குது என்று இரவு
ஒன்பது மணி அளவில் கேட்டுகிட்டே இருக்கு அப்பா என்றேன்.
அந்த குரல் என்ன சொல்லுது மா என்றார்.
நான் தயக்கத்ததுடன் சொல்ல தயங்கினேன். அவர் பயம் எதும் படாமல்
சொல்லு மா நான் என்ன செய்ய போகிறேன் என்றும் நான் உனக்கு
துணையாக இருப்பேன் உன் முடிவிலும் என்றும்  என்றார் !அதற்கு மேல்
நானும் சொல்லிநேன் தேய்ரியமாக அவரிடம் முதலில் இருந்து. அவரும்
ஆச்சர்ய பட்டார் பிறகு எல்லாம் கேட்டு கொண்டு பின்பு அவருக்கு தெரிந்த
ஒரு மருத்துவரிடம் கொண்டு சென்றார் என்னை.

அங்கே சென்றேன் நானும். அந்த மருத்துவர் பார்க்க  கொஞ்சம் சித்தர்


போலும் இருந்தார்.அவர் அறை முழுவதும் நிறைய புத்தகம் ,சித்தர்
படங்கள் இருந்தன.

அந்த மருத்துவர் பெயர் ஒரு பலகையில் இருந்தது அவர் பெயர் " அம்புலி
மருதன்" .

பிறகு அந்த அம்புலி மருத்துவர் என் அப்பாவை வெளியே நிற்க


சொன்னார்.
என் அப்பாவும் வெளியே சென்றார் போகும் போது அவரிடம் என்ன
கேட்டாலும் சொல்லு எதையும் மறைக்காமல் என்று சொல்லி விட்டு
சென்றார்.

பிறகு அந்த சித்தர் என்னிடம் கேட்டார் உன் அப்பா சில வற்றை


சொல்லினார் என்னிடம் உனக்கு சொல்ல விருப்பம் என்றால் சொல்லுமா
தயங்காமல் என்றார்.

நான் தயங்கியவாறே சொல்ல ஆரம்பித்தேன் மறுபடியும் அவர்


முழுவதும் கேட்டு விட்டு அவர் முகத்தில் பெரிய ஆச்சர்யம் இல்லை
போல் இருந்தது , ஒரு விதமான சிந்தனையும் ,சிரிப்பும் இருந்தது அவர்
முகம் முழுவதும்.

பிறகு அவர் என் அப்பாவை கூபிட்டு நான் பேசி விட்டேன் உங்கள்


மகளிடம். இன்று போய் நாளை வாருங்கள் எல்லாம் சரி ஆகிவிடும்
என்றார் சிறு புன்னகையுடன் அந்த அம்புலி மருத்துவர்.

பிறகு அந்த நாள் அப்படியே போனது இரவும் ஆனது அண்ணிகும் அந்த


குரல் பேசியது ஏதோ ஒரு சிறு கதையா இலை நடப்பதை பற்றியா விளங்க
வில்லை.

அந்த குரல்

"காலம் என்ற தலைப்பில் ஆரம்பித்தது

அவள்...

20 வயதில்
அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்...

30 வயதில் அவளைத்தவிர அனைத்து பெண்களும் தேவதையாக


தெரிவார்கள்...

ஆனால் 40 வயதில் அவளது அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்...

50 வயதில் அவளைத்தவிர தன்னை யாரும் நேசிக்கமாட்டார்கள் என


உணருவான்...

60 வயதில் அவள் இல்லாத நாளில் அனைத்தையும் இழந்தவனாய்


இருப்பான்...
70 வயதில்
அவள் தாய் ஆவாள்...
இவன் சேய் ஆவான்...

இறுதியில் அவளில்லாத நாட்களை நரகமாக கழித்து தனிமையை


வெறுத்தவனாய் இறப்பான்...

அவள்தான் மனைவி என்று முடித்தான் அந்த குரல் பின்பு


இருக்கும்போதே மனைவியை நேசித்து வாழ்க்கையில்
இனிதே பயணியுங்கள் என்று முடிந்தது.

எனக்கும் ஒன்றும் புரியவில்லை இவன் நிறைய புத்தகம் படிபவனாய்


இருப்பான் போலும் தோன்றும் சில நேரம்.

ஆனால் இது எல்லாம் அவன் என்னை நினைத்து பேசும் போது மட்டும்


தான் கேட்கும் எனக்கு போலும் தோன்றுகிறது.

அடுத்த நாள் வந்தது அந்த மருத்துவரிடம் சென்றோம்.

அன்றும் அம்புலி மருத்துவர் அப்பாவை வெளியே நிற்க சொன்னார்.

பிறகு என்னை அவர். அவர் புத்தக அறை குட்டி சென்றார்.

அங்கு ஒரு மேசை மீ து அமர சொன்னார்


நான் இப்பொழுது உன்னிடம்  சொல்லுவது சில விசயம் நம்ப முடியாது
போல் தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. நான் சொல்வதை
கவனமாக கேள் என்றார்.
பிறகு ஆரம்பித்தார்! உனக்கு நடப்பவை இப்பொழுது நடப்பது போல் 
ஏற்கனவே சில காலங்களில் சில சமயங்களில் நடந்து இருக்கு என்றார்.

என்ன சொல்றீங்க என்றேன்! அவர் அடுத்து சொல்ல ஆரம்பித்தார் போலும்


புத்தகத்தை பார்த்து சொன்னார்! இதை பற்றி சில கல்வெட்டுகளில்
உள்ளது அந்த காலத்தில் அதவாது கி மூ கி பி முன் இப்படி சில பெற்கு
நடந்து இருக்கு.

இது என் நடக்குது என்று சொல்ல தொடங்கினார்.

கடவுள் மனிதனை படைத்தார்!


அவனுக்கு எழு ஜென்மம் என்று முடிவு செய்தார்!
பிறகு அந்த அந்த ஜென்மங்களிள்
யார் யார் துணை(துணை மாணவியை குறிக்கும்) வரும் என்று எழுதி
வைப்பார் அது போல தான் இது.

சிலருக்கு சில ஜென்மங்களிள் துணை மாறும்! சிலருக்கு சில


ஜென்மங்களிள் துணையே இருக்காது! ஆனால்! கோடி கோடியில் யாரோ
ஒரு சிலர்  மட்டுமே இது அமையும் எழு ஜென்மம் கொண்டு  துணையும்
ஒருத்தியாக இருப்பாள். அந்த ஆச்சரியம் நடக்கும் எப்பொழுதாவது.

இப்பொழுது உங்களது ஆறு ஜென்மம் நிறைந்தது.இன்னும் ஒரு


ஜென்மத்தில் இருக்கிறீர்கள் உனக்கு ஒரு குரல் கேக்கிறது என்று
சொல்லுகிறாய் அல்லவா. அவன் வேறு யாரும் இல்லை உன்னுடன் ஆறு
ஜென்மம் வாழ்ந்த ஒருவன் அவன் குரல் தான் உனக்கு கேட்கிறது.
இந்த குரல் மூலமாக நீ அவனை சேருவாய் என்றார்.

இதை கேட்டு கொண்டு கொஞ்சமாக பேச வாய் திறந்தேன் நான் எப்படி


இவ்வொலோ உறுதியாக சொல்கிறீர்கள் என்றேன். அதற்கு நான் முன்பே
சொல்லிநேன் அல்லவா சில காலகட்டத்தில் இது நடந்து உள்ளது என்று
ஆமாம் சொன்னிங்க அதில் ஒரு கால கட்டத்தில் நடந்ததை கூறுகிறேன்
கேள்.

ஒரு இரண்டாயிரத்து ஐந்நூறு(2500) ஆண்டுகளுக்கு முன்பு இராஜ


காலகட்டத்தில் தெற்கு நாட்டு தெலுங்கு இளவரசிக்கு ஒருத்தி இருந்தால்
அவள் பெயர்! 'Nayakuralu Nagamma Nayaki'.. அவளுக்கும் உன்னை போல
குரல் கேட்டது அந்த நாளில் ஆனால் அவளுக்கு அது புரியவில்லை அந்த
குரல் தமிழ் நாட்டில் சேர்ந்த ஒரு இளவரசன் அவர் பெயர் "தேவ மருதன்".

அந்த தெற்கு நாட்டு இளவரசி அவளும் உன்னை போல் பயந்தாள்


யோசித்தால் பிறகு என்னதான் என்று அந்த காலத்தில் உள்ள ஒரு
மும்மொழி தெரிந்த ஒரு கவி பாடுவன் அழைத்து அந்த குரல் சொன்னதை
சொல்லி!அவர்டம் என்னவென்று கேட்டு அறிந்தால். அது தமிழ் மொழி
என்று அந்த குரல்.

இது எப்படி உங்களுக்கு தெரியும் அது என் குடும்ப ரகசியம்! என்ன


சொல்கிறீர்.

ஆமாம் அவர் என் முதாய்யர் அவர் அவர் வம்சா வழியில் வந்தவன் நான்
என் குடும்பத்தை சேர்ந்த சில பேற்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.

அந்த கடவுள் எப்படி எல்லாம் இன்னைகிரான் என்று சிரித்தார் மனசுக்குள்


நினைத்து.

பிறகு அவர் என்னை! ஜனனி உனக்கு வேறு ஏதாவது கேள்வி இருக்கா


என்றார்.

ஆமாம் எனக்கு ஒரு விவரம் வேண்டும் சொல்கிறீர்களா என்றேன்.


அவரும் சரி என்றார் பிறகு நான் சொன்னதை உன்னை தவிர வேறு
யாருக்கும் தெரிய கூடாது என்றார்.

நானும் சரி என்றேன் பிறகு சொல்லுங்கள் என்று ஒரு கேள்வி


எழுப்பினேன்.

அந்த காலகட்டத்தில் அந்த இளவரசி எப்படி இந்த தேவமருதன் உடன்


சேர்ந்தார் நேரு தெரியுமா என்றேன் நான்.

அதற்கு அவர் கூறினார். அதை பற்றி மிக சரியான குறிப்பு இல்லை


எங்களிடம் என்றார்.பிறகு அவர் முன்னோர்கள் கூறிய சிலவற்றை
சொல்ல தொடங்கினார் மேலும் அந்த இளவரசி அந்த குரல் சொல்வதை
எல்லா வற்றையும் ஆள் வைத்து எழுதி வைத்து கொல்வாளம்.
பிறகு ஒரு நாள் அந்த குரல் ஏதோ ஒரு இடம் போவதாக தெரியாமல்
அறிவித்தது.அவள் எழுதி வைத்து இருப்பதை ஆராய்ந்து சில பேர்
சொன்னார்கள் பிறகு அவள் அந்த இடம் தேடி சென்று அடைந்தால் அந்த
இளவரசனை என்று சொல்லி முடித்தார்.

பிறகு நான் பெரும் யோசனையுடன் விட்டுக்கு சென்றேன்.

வட்டுக்கு
ீ சென்று நான் எழுதியது எல்லாம் எடுத்து பார்த்தேன் ஒன்றும்
கிடைக்க வில்லை எனக்கு.

பிறகு பொறுமையாக யோசித்து பார்த்தேன்.அவன் அந்த குரல் வாரத்தில்


ஒரு நாள் கண்டிப்பாக பேசாது என்னிடம் அந்த நாள் வியாழன் கிழமை.
அதுக்கு அடுத்த நாள் வெள்ளி கிழமை அவன் என்னிடம் உலரி பேசும்
பொது! ஒரு வாட்டி அந்த குரல் சொல்லியது! நீ என்னுடன் சிக்கிரம்
சேரவேண்டும் என்று கோயில் சென்று வந்தேன் நேற்று என்றான்.பிறகு
அந்த கோயில் பத்தி சொல்லி இருக்கிறான் அவன்.

அதை நான் எழுதியும் வைத்து உள்ளேன்.


அவன் அந்த கோயில் அழகு பத்தியும், அங்கு இருக்கும் சிலவற்றை
பற்றியும், அங்கு உள்ள சாமி பத்தியும் சொல்லி உள்ளான், அவன்
சொல்வதை வைத்து நான் வரைவதற்கு முயற்சி செய்து பார்த்தேன் பிறகு
ஒரு வடிவம் வந்தது.
அந்த கோயில் நான் எங்கயோ பார்த்தது போல் இருந்தது ஆனால் ஞாபகம்
வரவில்லை பின்பு வலைத்தளம் மூலம் முயற்சித்து பார்த்து கண்டு
பிடித்தேன் அது !!!

அதாவது அந்த கோவில் பெயர்


"ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்" என்று அழைப்பார்கள்
அதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு
"ரங்கநாத பெருமாள் கோயில்" என்று இது இந்தியா,
தமிழ்நாடு,சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது
திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில்
உள்ள ஒரு கோவிலாகும். இக்கோயிலானது திராவிடக் கட்டிடக்கலை
கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது,
பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரங்கநாத பெருமாள் மகாபலிச் சக்ரவர்த்தி மற்றும் ஆழ்வார்களுக்கு
முற்பட்டவராக நம்பப்படுகிறது. தினசரி ஆறுகால பூஜைகள் மற்றும்
ஆண்டுக்கு சுமார் 12 திருவிழாக்கள் நடைபெறுகிறது.
வேறு ஒரு கதைப்படி இந்த இடத்தில் சூரகீ ர்த்தி என்ற குழந்தையில்லாத
ஒரு மன்னன் குழந்தை வரம்வேண்டி விஷ்ணுவை வேண்டி குழந்தைப்
பேறு பெற்றார். இந்த இடத்தில் விஷ்ணுவை வேண்டி சாபவிமோசனம்
பெற புஷ்கரணி என்ற குளமானது சந்திரனால் நிறுவப்பட்டது.
இக்கோயிலின் ராஜகோபுமானது உயரம் குறைந்த மொட்டை கோபுரமாக
உள்ளது. மேலும் கோயிலானது உயரமான கருங்கல் சுவர்களால்
சூழப்பட்டுள்ளது.அது மட்டும் இல்லை கருவறையில் உள்ள
ரங்கநாதபெருமாள் உருவமானது சயன கோலத்தில் 29 ft (8.8 m) சுதையில்
உருவானவரே என்றாலும், தைலக்காப்பு எல்லாம் இல்லாமல் அழகாக
இருக்கிறார். இவர் நீட்டிப் படுக்க இருபத்து நான்கு அடி நீளம் உள்ள
படுக்கை வேண்டியிருக்கிறது. அத்தனை பெரிய வடிவத்தார்.
தலைப்பகுதியில் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளுடன் குடையாக
உள்ளது. சீதேவியின் மடியில் தலை சாய்த்துப் பூதேவி அடி வருடப்
பள்ளிக்கொள்கிறார். மேலும் தலைப்பகுதியில் கருடன் வணங்கிய
கோலத்தில் உள்ளார்.
கோயிலின் தென் கிழக்கு மூலையில் செங்கல்லால் கட்டப்பட்ட
வரலாற்றுகால தானிய சேமிப்புக் களஞ்சியம் உள்ளது. இந்தக்
களஞ்சியமானது திருரங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்
கோவில் மற்றும் பாபநாசம் பாலைவனநாதர் கோவில்களில் உள்ளது
போல உள்ளது. இது கோயிலுக்கு விவசாயிகள் அளிக்கும் தாணியங்களை
சேமித்து வைக்க கட்டப்பட்டிருக்கிறது.

இவை எல்லாம் நான் என் சொல்கிறேன் என்றால் அவன் சொல்லியது ஒரு


களஞ்சியம் அதாவது பழங்காலக் களஞ்சியம் இங்க இருக்கு அதை
வைத்து தான் நான் வரைந்தேன் இந்த கோயிலே இந்த பழங்காலக்
களஞ்சியம் இங்கு மட்டுமே கோயில் கூள்ளே உள்ளது.அப்பொழுது அவன்
வியாழன் கிழமை ஆனால் இந்த கோவில் வருவான் போலும் என்று
தோன்றியது.அடுத்த இரண்டு நாளில் வருகிறது வியாழன் கிழமை.நான்
அந்த ரெண்டு நாள் பெரும் ஆர்வத்துடன் காத்து கிடந்தேன்.அந்த இரண்டு
நாளும் பொறுமையாக ரெண்டு மாதம் களிப்பது போல் போனது எனக்கு
அந்த வியாழன் கிழமை வந்தது.ஆனால் எனக்கு ஒரு சின்ன யோசனை
நேரில் பார்த்து எப்படி கண்டு பிடிப்பது தெரிய வில்லை அவனை.அவன்
குரல் மட்டும் தானே தெரியும் என்று யோசித்து நின்று சிந்தித்தேன் பின்பு
இருந்தாலும் நேரில் சென்று பார்த்து கொள்வோம் என்று சென்று
கிளம்பினேன் வட்டை
ீ விட்டு.
காலையில் இருந்து காத்துகிட்டு இருந்தேன் ஆனாலும் யாரும் வர
வில்லை எல்லாம் வயசு ஆனவர்கள் சில என் வயது பெண்களும்
வந்தார்கள்.பிறகு சாங்கியலம் ஆனது யாரும் வரவில்லை பின்பு திடீர்
என்று ஒரு எழு அடவர் வந்தார்கள் உள்ளே எனக்கு ஒன்றும் புரியவில்லை
அவர்கள் போய் சாமி பார்த்து வந்தார்கள் பின்பு கோயில் விட்டு செல்ல
முயந்தார்கள் அனைவரும். நான் இது வேலைக்கு ஆகாது என்று
சோகமாக கோயிலில் இருந்த வாசல் வந்தேன்.பிறகு அந்த எழு ஆடவர்
கூட்டத்தில் இருந்து ஒருவன் மட்டும் பழங்காலக் களஞ்சியம் நோக்கி
ஓடினான் சற்று நேரம் அமர்ந்து வருகிறேன் என்று அவர்களிடம் சொல்லி
சென்றான் என்னை கடந்து சொல்லி கொண்டே!!!!!! அப்பொழுது அந்த குரல்
நான் இத்தன நாள் கேட்ட குரல் அவனது அது அவன்தான் என்றேன் என்
மனசிடம் சொல்லி சந்தோஷ பட்டேன். அவன் அந்த
பழங்காலக் களஞ்சியம் நோக்கி ஓடி அமர்தான்.நானும் கிட்ட செல்லலாம்
என்று என் கால் நகுத்திந்நேன் என் கால் வாசல் பாறை இடுகில் மாட்டியது
தடு மாறி கீ ழே விழுந்தேன். அப்பொழுது திடீர் என்று பேய் காத்தும்,
மழையும், இடியும் எங்கு இருந்து வந்தது தெரிய வில்லை என் பக்கத்தில்
இருந்த ஒரு முட்டம் வாசலின் மேல் விழுந்தது ஒரு இடி டப் டப் என்று
சத்தம் போட்டு கொண்டே அது விழுந்த பாறையில் இருந்து ஒரு பெரிய
கல் என் மண்டையில் விழுந்தது பிறகு அவன் என்னை ஓடி வந்து
தூக்கினான்.அவனிடம் அந்த அறை மயக்கத்திலும் நான் சொன்னது
இரண்டு வார்த்தை நான் உன்னை தேடியே இங்கு வந்தேன் என்று சொல்லி
கன் முடினேன் அவன் முகம் பார்த்து கொண்டே.

அதன் பிறகு முதலில் கோமாவில் உள்ளேன் என்று சொன்னேன் அல்லவா


அதற்கு இதுதான் காரணம்.ஆனாலும் இவன் பக்கத்தில் இருக்கிறான்.
அவன் என்னை விட்டு போகவில்லை.என் என்றும் எனக்கும் தெரிய
வில்லை என்று என்னிடம் நானே பேசி கொண்டு இருக்கிறேன்.எப்பொழுது
கன் முழிபேன் என்று தெரிய வில்லை.பிறகு திடீர் என்று ஒரு இடி சத்தம்
கேட்டு கண் திறந்தேன் என் அப்பா அம்மா எல்லாம் சந்தோஷத்தில்
அழுதார்கள். நான் என் அப்பா ஒரு மூன்று நாள் தானே ஆச்சி அதுக்கு
போய் இப்படி அழுகிறிர்கலே என்றேன் அவர் அடுத்து பேசினார் என்னமா
சொல்றே நீ கண் முடி மூன்று மாதம் ஆயிருச்சு என்றார்.நான்
அப்பொழுததான் உணர்தேன் சுய நினைவு இல்லாமல் உளறி இருக்கேன்
என்று எனக்கு மூன்று நாள் போல் இருந்தது இவர்களுக்கு மூன்று மாதம்
என்று முழிதென். பிறகு விட்டுகு சென்ற பிறகு ஒரு மாதம் கழித்து
அப்பாவிடம் என்னை யார் மருத்துவமனை செற்றது என்றேன்.அவர் இரு
மா என்றார் நான் சொல்லுங்க என்றேன்.அவர் அங்க விட்டுகுள் போய்
பாரு என்றார். நான் விட்டுகு சென்றால் அங்கே பெரிய அதிர்ச்சி என்னை
பொண்ணு பாக்க வந்து இருக்கிறார்கள்.
எனக்கு சரியான கோபம் வந்தது அப்பா மேலே.பின்பு சேலை மாற்றி
கொண்டு அம்மா மொட்டை மாடி போக சொன்னார்கள்.பெரும் கோபம்
வெறுப்புடன் சென்றேன் மேலே பிறகு அங்கு ஒரு ஆச்சரியம் அந்த குரல்
சொந்தக்காரன் மேலே நிக்கிறான் எனக்கு சந்தோஷத்தில் துள்ளி குதித்து
அழுதேன்.

அவன் அழுவாதிங்க என்று சொன்னான்.


உங்கள் விட்டில் உங்கள் அப்பா எல்லாம் சொன்னார் என்னிடம் உங்களை
பற்றி.
நான் சற்று நிதானமாகி அவரிடம் கேட்டேன்? உங்கள் குரல் கேக்க
எத்தனை நாள் என்னை அலைய விட்டீர்கள். அவன் சிரித்த படி நான்
மட்டுமா நீங்களும் தான் என்றான்.

என்ன சொல்கிறீர்கள் ஆமாம் நீங்கள் பேசியது ஒரு நாள்


கேட்டது.எப்பொழுது என்றேன் அந்த கோயில் வரும் முன்னாடி நாள் இரவு
என்றான்.
உங்கள் பிறந்த நாள் அன்று மட்டும் நீங்கள் பேசியது கேட்டது அன்று
13/08/2019 இதற்கு அடுத்த நாள் தான் நீங்கள் என்னை பார்க்க அந்த
கோவிலில் வருவதாக சொல்லி இருந்திற்கள்.
நீங்கள் கண் முடும் முன்னே நான் உனக்காக தேடித்தான் இங்கே வந்தேன்
என்று சொல்லி கண் முடிநீற்கள் நீங்கள். பிறகு அந்த சம்பவம் அங்கே
நடந்தது நான் பெரிதும் பதறி உங்களை கையில் சுமந்து கொண்டு அந்த
நாள் முழுவதும் அழுது கொண்டே மருத்துவமனையிள் திரிந்த்தேன் நான்.
பிறகு உன் பையில் இருந்து காலேஜ் அட்டை எடுத்து உங்கள் அப்பாவிடம்
கால் பண்ணி சொல்லி வரவழைத்தேன்.பிறகு இங்கே நிற்கிறோம் நாம்
என்றான். நான் பேசுவதுலாம் உங்களுக்கு கெட்டது ஹாமே என்ன என்ன
கேட்டது என்றான் என்னிடம்.நான் நீங்கள் நிறைய பேசின் விட்டீர்கள்
இதற்கு மேல் நான் பேசுவதை கேளுங்கள் என்று சொல்லி முடித்தேன்
அவனிடம். உங்களுக்கு சந்தோஷமா என் கூட சேர போகிறது நினைத்து
என்றான் அவன்.
பின்பு கை கோர்த்து பெரும் மகிழ்ச்சியுடன் தொண்டகியது எங்கள்
வாழ்க்கை இனிதே..............
அவன் கூட சேர்ந்தால் உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன் அந்த குரல்
சொந்தமான பையன் பெயர் இன்னும் சொல்ல வில்லை அல்லவா.
அதாவது இதை எழுதியவர் என்று ஒரு பெயர் போடுவான் ஒருவன் அதை
வைத்து கொள்ளுங்கள்.....

வாசகர்களே நன்றி பிறகு சந்திப்போம்....

எழுதியவர்

ஹரிஷ் குமார். V
(Harish Kumar V)

You might also like