You are on page 1of 1

சர, ஸ்திர, உபய ராசிகள் லக்னமாக பிறந்த ஜாதகன் பலன்கள்

12 ராசிகளும், சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி,


மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகள் ஆகும்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும்.
இவற்றை இலக்கணமாக பெற்ற ஜாதகர்களின் பலன்களை பார்ப்போம்.
சரம்:-- சர ராசியில் பிறந்த ஜாதகனுக்கு 11--ம் இட அதிபதியான லாபாதிபதியால் நற்பலன்கள் இல்லை. ஏனெனில்,
அவன் தசா காலங்களில் வீடு, பொருள் நஷ்டமும், அரசாங்க பகையும் உண்டாகும். இந்தப் பலன்கள் ஏற்படாமல்,
செல்வம் போன்ற யோகப் பலன்களை அளித்தாலும், வியாதிகளை உண்டாக்கும். இதனால் ஜாதகன் பெற்ற தனங்கள்
அழியலாம். எனினும் லாப ஸ்தானாதிபதி, 1, 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மையான
பலன்களையே தருவார்.
ஸ்திரம்:-- ஸ்திர ராசி லக்னமாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு நன்மை செய்யும் பாக்கிய ஸ்தானாதிபதியான 9--ம் இட
அதிபதியால் தீமையே உண்டாகும். அதே சமயத்தில் பாக்கியாதிபதி, 1, 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் நின்றால்
அரசாங்க நன்மை முதலான யோகங்கள் உண்டாகும். மற்ற இடங்களில் நின்றால் பிரயோசனம் இல்லை. நற்பலன்கள்
உண்டாவதில்லை. எடுத்த தொழிலில் முற்றுப்பெறாமல் தடை உண்டாகும்.
உபயம்:-- உபய ராசியில் ஜெனித்த ஜாதகருக்கு கேந்திர ஸ்தானங்களில் 7-ம் அதிபதி நற்பலன்களை தரமாட்டார்.
ஊழ்வினையின் காரணமாக பூமியில் பல தொல்லைகளை அடைவார். போதுமான வருமானம் இல்லாமல் செய்யும்
தொழிலில் முன்னேற்றம் கிடைக்காமல் பண விரயமும் ஏற்படும். அரசாங்க பகையும் உடல் உபாதையும் உண்டாகும்.
அதே சமயத்தில், மற்ற கிரகங்களின் பலத்தைப் பொறுத்து மேற்கண்ட கெட்ட பலன்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்பு
உண்டு.
இன்னும் சில சிறப்புப் பலன்களை அறியலாம். அதாவது,
பிரகஸ்பதியான குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய ஸ்தானங்களில் குருவுடன், சூரியன் மற்றும்
ராகு அல்லது கேது நிற்க அந்த ஜாதகனுக்கு தோஷம் எதுவும் ஏற்படாது.
லக்னாதிபதி ஆட்சி மற்றும் உச்சம் பெற்று அமர்ந்து இருந்தாலும் பாவ கிரகங்கள் பார்வை பெற்றால், அவன்
வீட்டில் களவு போகும்; பண விரயங்கள் ஏற்பட்டு பிறர் கையை நம்பி வாழும் நிலை ஏற்படும். அரசாங்கத்தால் பங்கம்
ஏற்படும்; கூட்டுத்தொழில் செய்தால் அவர்களின் உறவும் அறிந்து பிரிவர்; பலவகைகளிலும் துன்பங்கள் உண்டு

You might also like