You are on page 1of 14

பாடல் எண் : 01

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்


பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை
உடுத்தியவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று
உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால்
உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின்
இடர்களை நீக்கி அருள் வாயாக.

பாடல் எண் : 02
கனைத்தெழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல்
நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை
மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும்
அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

பாடல் எண் : 03
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன்
நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்ல வந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, "என்
அடியவன் உயிரைக் கவராதே" என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும்,
நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

பாடல் எண் : 04
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்த இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதிதேவியைத் தன் திருமேனியின் ஓர்
பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய
திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே,
நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

பாடல் எண் : 05
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவவேடம் தாங்கியவர்களும். பாரிடை
வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும்
பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது
திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் அடியவர்களின் இடர்களைப் போக்கி
அருள்வாயாக.

பாடல் எண் : 06
விருத்தனாகிப் பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங்கொண்டும், வேதங்கள்
நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள
பெருமானே, கலைஞானங்கள் மெய் ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய உன் அடி இணைகளைப் பரவி
ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

பாடல் எண் : 07
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி,
எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை
கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக்
கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை
விரும்பி அணியும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

பாடல் எண் : 08
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலையின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின் மேல்
விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு
மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய
அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே
ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

பாடல் எண் : 09
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயா பீடம் என்ற
யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ் பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள
இடமெங்கும் தேடு மாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது
கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன் போன்ற திருவடி நீழலில் வாழும்
அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

பாடல் எண் : 10
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

பொருள் விளக்கம் :
கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும்
சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள்.
அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு,
தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின்
இடர்களைப் போக்கி அருள்வாயாக.

பாடல் எண் : 11
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.

பொருள் விளக்கம் :
மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடை முடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை,
பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய
ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்நது
் உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட
வல்லவர்களின் பாவங்கள் விலகும்.

1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்    


        
பண் -  குறிஞ்சி        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    வாசி தீரவே, காசு நல்குவீர்    
    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.    1.92.1
        
    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்    
    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.    1.92.2
        
    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்    
    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.    1.92.3
        
    நீறு பூசினீர், ஏற தேறினீர ்    
    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.    1.92.4
        
    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்    
    நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.    1.92.5
        
    பிணிகொள் சடையினீர,் மணிகொள் மிடறினீர ்    
    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.    1.92.6
        
    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்    
    கங்கை முடியினீர,் சங்கை தவிர்மினே.    1.92.7
        
    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்    
    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.    1.92.8
        
    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர ்    
    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.    1.92.9
        
    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்    
    வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.    1.92.10
        
    காழி மாநகர், வாழி சம்பந்தன்    
    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.    1.92.11
        
        
    திருச்சிற்றம்பலம்.    

1. மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்

கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

2. மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்


துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

3. வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்

துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்

தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

4. ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்

கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்

கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

5. மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்

தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

6. மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

அடலானே றூரும் அடிக ளடிபரவி

நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

7. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்


கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்

ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

8. தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்

கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்

கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

9. நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்

உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்

கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்

பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

10. உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்

கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

1. கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்

ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்

வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.


வாழ்க அந்தணர்
வானவர் ஆனினம்
வீழக
் தண்புனல்
வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்
லாம்அரன் நாமமே
சூழ்க வையக
முந்துயர் தீர்கவே.  1

அரிய காட்சிய
ராய்த்தம தங்கைசேர்
எரியர் ஏறுகந்
தேறுவர் கண்டமுங்
கரியர் காடுறை
வாழ்ககை
் ய ராயினும்
பெரிய ராரறி
வாரவர் பெற்றியே.  2
வெந்த சாம்பல்
விரையெனப் பூசியே
தந்தை யாரொடு
தாயிலர் தம்மையே
சிந்தி யாஎழு
வார்வினை தீர்பப் ரால்
எந்தை யாரவர்
எவ்வகை யார்கொலோ.  3

ஆட்பா லவர்க் கருளும்


வண்ணமும் ஆதிமாண்புங்
கேட்பான் புகில்அள
வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங்
குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்
றிவைகேட்க தக்கார்.  4

ஏதுக்க ளாலும் எடுத்த


மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்
டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர்
மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே
வந்து சார்மின்களே.  5

ஆடும் மெனவும் அருங்கூற்றம்


உதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது
பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும்
மெனக்கேட்டீ ராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது
நாட்ட லாமே.  6
கடிசேர்ந்த போது மலரான
கைக்கொண்டு நல்ல
படிசேர்நத
் பால்கொண்டங் காட்டிடத்
தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட
முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார்
சொலக்கேட்டு மன்றே.  7

வேத முதல்வன் முதலாக


விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவர்
ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே
முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை யென்றே
கலிக்கோவை சொல்லே.  8

பாராழி வட்டம் பகையால்


நலிந்தாட்ட ஆடிப்
பேராழி யானதிடர் கண்டருள்
செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங்
கொண்ட வர்ககு
் ப்
போராழி யீந்த புகழும்
புகழுற்ற தன்றே.  9

மாலா யவனும் மறைவல்ல


நான் முகனும்
பாலாய தேவர்பக ரில்லமு
தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க்
கரிதா யெழுந்த
ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள்
செய்த தாமே.  10
அற்றன்றி அந்தண் மதுரைத்
தொகை யாக்கினானுந்
தெற்றென்று தெய்வந் தெளியார்
கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும்
பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான்
பெருமானு மன்றே.  11

நல்லார்கள் சேர்புகலி ஞானசம்


பந்தன் நல்ல
எல்லார் களும்பரவும் ஈசனை
யேத்து பாடல்
பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ்
சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும்
வல்ல ரன்றே.  12

பொன்செய்த மேனியினீர்
புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
எரித்தீரமு
் து குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்
பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
அடியேனிட் டளங்கெடவே.  1

உம்பரும் வானவரும்
உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித்
திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள்
பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீர்
அடியேனிட் டளங்கெடவே.  2

பத்தா பத்தர்களுக்
கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே
முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண்
பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே.  3

மங்கையோர் கூறமர்ந்தீர்
மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர்
திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை
குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய்
அடியேனிட் டளங்கெடவே.  4

மையா ரும்மிடற்றாய்
மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே
திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே
ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே.  5

நெடியான் நான்முகனும்
இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச
முதுகுன்ற மமர்ந்தவனே
படியா ரும்மியலாள்
பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் *தந்தருளீர்
அடியேனிட் டளங்கெடவே.
(* தந்தருளாய் என்றும் பாடம்)  6

கொந்தண வும்பொழில்சூழ்
குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர்
சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள்
பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய்
அடியேனிட் டளங்கெடவே.  7

பரசா ருங்கரவா
பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர
முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள்
பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே.  8

ஏத்தா திருந்தறியேன்
இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம்
முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள்
பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய்
கொடியேனிட் டளங்கெடவே.  9

பிறையா ருஞ்சடையெம்
பெருமான் அருளாயென்று
முறையால் வந்தமரர்
வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில்
வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்
கெளிதாஞ்சிவ லோகமதே.  10

You might also like