by Surya Prakash Phone Number: 9629375853, 7824942434 E-mail: dprakash022@gmail.com, sp.tamilfilmdirector@gmail.com இரவு நேரத்தில் கிராமத்தில் மக்கள் அனைவரும் நெருப்பு பந்தம் மற்றும் கட்டைகளை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள். அனைவரும் எதையோ தேடிக்கொண்டு ஓடுகின்றார்கள. Camera freeze ஆகி flashback. ஊரில் தாத்தா பாட்டி வானத்தை பார்த்துக்கொண்டு எதையோ பார்த்து காத்திருப்பது போல் வானத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஊரில் பெண்கள் வெகுதூரம் நடந்து சென்று தண்ண ீர் கொண்டு வருகின்றார்கள். ஊர் மக்கள் அனைவரும் ஊர் தலைவரிடம் சென்று தண்ண ீர் பந்தத்தை தீர்ப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்கின்றார்கள். ஊர் கட்டுப்பாடுகளால் ஊர்மக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியே செல்ல முடியாமல் இருக்கின்றார்கள். சிலநாள் கழித்து அவருக்கு பெண் பார்ப்பதற்காக ஒரு சாமியார் வந்து கொண்டு இருக்கின்றார். அவர் அவர் இருக்கும் மக்களை பார்த்து என்ன பிரச்சனை ஏன் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தங்கள் ஊரில் மழை பெய்து பல வருடம் ஆகிறது என்று அனைத்து ஊர் மக்களும் கூறுகின்றார்கள். இந்த சாமியார் அவரைப்பார்த்து நான் ஒரு சாமியாரை சொல்கிறேன் அந்த சாமியாரை பார் அவர் தங்கள் பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு வழி கூறுவார் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார். ஊர் மக்கள் மற்றும் ஊர் தலைவர் அனைவரும் சாமியார் இருக்கும் இடத்திற்கு செல்கின்றார்கள். அங்கு சாமியார் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்கின்றார். அவர் தனது சிஷ்யனிடம் மக்கள் அனைவருக்கும் தீர்த்தம் கொடுக்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்று விடுகின்றார். சாமியார் தனது சிஷ்யனிடம் மரத்திற்கு பின்னால் உள்ள கிணற்றில் இருக்கும் தண்ண ீரை எடுத்து அனைவருக்கும் தீர்த்தமாய் கொடு என்று கூறுகின்றார். அந்த சிஷ்யன் பின்னால் சென்று சமைத்து வைத்திருக்கும் ரசத்தை எடுத்து அனைவருக்கும் தீர்த்தமாக கொடுக்கின்றான். ஊர் மக்கள் அனைவரும் அதை குடித்து விட்டு இதை அடிக்கடி குடிப்பது போல் சுவையை உணர்கின்றார்கள். இப்பொழுது அஸ் சாமியார் உள்ளே இருந்து வெளியே மக்களை பார்ப்பதற்கு வருகின்றார். அனைவரையும் பார்த்து தீர்த்தம் குடித்து விட்டீர்களா என்று கேட்கின்றார். அதில் ஒரு பெண் தீர்த்தம் ரசம் போலிருக்கிறது என்று கூறினாள். உடனே சாமியார் சசியைப் பார்த்து என்னடா கொடுத்த என்று கேட்டார். அவன் பின்னால் சமைத்து வைத்திருந்த பாத்திரத்தில் இருந்து எதையோ எடுத்து கொடுத்தேன் என்று கூறுகின்றான். பின் அப்பெண் கேட்ட பதிலுக்கு சாமியார் லாவகமாக சமாளிக்கிறார். பின் அந்த சாமியார் ஊர் மக்கள் அனைவரையும் வட்டிற்கு ீ சென்று விடுமாறும் ஊர் தலைவரை மட்டும் இருக்க சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டார். அந்த சாமியார் மக்களிடம் காணிக்கையை வாங்கிக் கொண்டுதான் அனுப்பிவிட்டார். ஊர் தலைவர் மற்றும் அவரது ஆட்கள் சாமியாரிடம் அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சாமியார் சோலியை உருட்டுகின்றார். சாமி தங்கள் ஊர் மீ து
கோபமாக இருப்பதாக அவர் கூறுகின்றார். அந்தக் கோபம் தீர என்ன செய்ய வேண்டும் என்று ஊர் மக்கள் கேட்கின்றார்கள். அவர் அந்த சாமியார் மீ ண்டும் சோலியை உருட்டுகின்றார். ஒரு கன்னிப் பெண்ணுக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து விட்டாள் ஊரில் மழை பெய்யும் என்று அந்த சாமியார் கூறுகின்றார். ஊர் மக்கள் அனைவரும் கடுகைத் எங்கே செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சாமியார் கழுதை உங்களைத் தேடி வரும் என்று கூறுகின்றார். அனைவரிடமும் காசு வாங்கிக்கொண்டு அவர்களை செல்லுமாறு சாமியார் கூறிவிட்டார். ஒரு சிஷ்யன் கேட்கின்றான் கழுதை எப்படி சாமி அவங்க ஊருக்கு தானா போகும். சாமி யார் சொல்கின்றார் கழுதை எப்படி அவங்க இருக்க ஊருக்கு தானா போகும் நாமதான் பொய் அந்த ஊருக்குள்ள கழுதையே விட்டுட்டு வர வேண்டும். இரவு நேரம் ஆகின்றது அந்த சிஷ்யன் கழுதையை எடுத்துக்கொண்டு ஊர் தலைவர் வட்டில் ீ வாசல் முன் கட்டிவிட்டு செல்கின்றான். பின் அவன் கழுதையை கத்துவதற்கு ஏதோ செய்துவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறான். கழுதை கத்துகிறது. ஊர் மக்கள் அனைவரும் கழுதையின் முன் வந்து நிற்கின்றார்கள். அனைவரும் கழுதையின் காலில் விழுகிறார்கள். பின் சாமியார் சொல்கின்றான் ஊர் மக்கள் அனைவரும் முட்டாள்தனமாக இப்பொழுது கழுதையின் காரியம் பொழுது குண்டாக இருப்பார்கள் என்று சிரிக்கின்றான். போடி முட்டாள் மக்கள் இருக்கும் வரை நம் மலைபோன்ற சாமியார் நினைத்துக் கொண்டிருப்பார்கள் அதேபோல் நல்லா சம்பாதித்துக் கொண்டு இருப்பார்கள். இப்பொழுது ஊர் மக்கள் அனைவரும் சாமியார் முன் வந்து அவரை வணங்கி தாங்கள் சொல்வது பொருட்களை தேடித் தேடி வந்து விட்டது என்று கூறி விட்டு ஆனந்தமாக செல்கின்றார்கள். இப்பொழுது ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கு கழுதையை கல்யாணம் செய்து வைக்க வேண்டும். அந்தக் கன்னிப் பெண்களில் ஒருவர்தான் ஹீரோயின். ஹீரோவும் ஹீரோயினும் காதலித்து கொண்டு இருப்பார்கள். இப்பொழுது ஹீரோ அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பதட்டமாக கொண்டிருக்கின்றான். ஊர் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் கூறிக்கொண்டு கன்னிப்பெண்கள் பெயரை சீட்டில் எழுதிக் கொண்டு குலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதில் முதலில் ஒரு பெண் சரண்யா அவள் பெயர் வருகின்றது. அவள் பெயர் சொன்னவுடன் அவள் மயங்கி விழுகிறாள். என்ன என்று பார்த்தால் அவள் கர்ப்பமாக இருப்பாள். சாமியார் என்ன சொல்வதென்றால் அந்த ஊர் மக்கள் எந்த பெண்ணை தேர்ந்து எடுக்கின்றார்களோ அந்த பெண்ணை தேர்ந்தெடுத்த பின் மழை பெய்யும் என்பது உறுதி என்று அவர் கூறுவார். இரண்டாவதாக சீட்டை குலுக்கி போட்டு பாப்பாத்தி என்ற பெண் வருவாள். ஊர் மக்கள் அனைவரும் காத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மழை பெய்யாது. வேறு பெண்ணை தேர்வு செய்வார்கள். அவள்தான் ஹீரோயின் கற்பகம். அவள் பெயரை எடுத்தவுடன் இடி இடிக்க ஆரம்பித்துவிடும். மழை பெய்யத் தொடங்கி விடும். ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆனந்தத்துடன் இருப்பார்கள். ஒருபுறம் கதையின் ஹீரோ சோகமாக இருப்பான். அவன் எப்படியாவது ஹீரோயினை காப்பாத்தி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருப்பான்.
INTERMISSION
இப்பொழுது ஒன்று ஹீரோயின் கன்னி கழிய வேண்டும் அல்லது
கழுதையை கடத்த வேண்டும் அப்பொழுதுதான் திருமணம் நடக்காது. ஹீரோவும் அவனது நண்பர்களும் சிந்தனை செய்து கொண்டே இருப்பார்கள். இறுதியில் அந்தப் பெண்ணுக்கு கன்னி கழிப்பது முடியாத காரணம் என்று கண்டு பிடிப்பார்கள். ஏன் என்றால் அந்தப் பெண்ணை சுற்றி எப்பொழுதும் பெண்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் அதனால் அவளை கன்னி கழிய வைப்பது முடியாத காரியம். அதனால் அவர்கள் கழுதையை கடத்தி செல்ல முடிவு செய்வார்கள். இறுதியில் அவர்கள் கழுதையை கடத்தினார்களா கழுதைக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்ததா கிராமத்தின் மூடநம்பிக்கை தீர்ந்ததா அதேபோல் இந்த கிராமத்தில் இறுதியாக மழை பெய்யுதா இல்லையா இறுதியில் ஹீரோவும் ஹீரோயினும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் முடிவு.