Professional Documents
Culture Documents
ஸங்கீ3 த ரஸிகே – ஸங்கீத ஶாஸ்த்ரத்தில் நிரம்ப ப்ரியத்தை உடையவள். "ஸரிகமபதநி தாம் நிரதாம்"
என்பார் காளிதாஸர். அம்பிகையை வீணா கானத்தில் ப்ரியம் உடையவளாக அனேக புராண, தந்த்ரங்களில்
கூறியிருக்கின்றது. வீணாதாரியாக ராஜஶ்யாமளா ஸ்வரூபத்திலும், ஸாக்ஷாத் ஶ்ரீமஹாஶோடஸி
ஸ்வரூபத்தில் அம்பாள் விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஸங்கீத மும்மூர்த்திகள் (ஶ்யாமா ஸாஸ்த்ரிகள்,
முத்துஸ்வாமி தீக்ஷிதர், த்யாக ப்ரஹ்மம்) மூவருமே ஶ்ரீவித்யா உபாஸகர்கள் என்பதும், மூவரும்
ஸங்கீதத்திலேயே ஶ்ரீவித்யோபாஸனை செய்து ஶ்ரீபராஶக்தியின் தாதாத்ம்யத்தை அடைந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
நிஷ்களமாக விளங்கும் பூர்ண ப்ரஹ்மமே ஶ்ரீலலிதை. மாயைக்கு அப்பாற்பட்ட பூரண சைதன்யம். ஸாக்ஷாத்
ஶ்ரீகமலாம்பாளின் ஸ்வரூபம் இதுவே. இந்த ஸ்வரூபத்தையே பராஸம்வித், சித், ஸம்வித், பராத்ரிபுரா
என்றெல்லாம் தந்த்ர ஸாஸ்தர் ங்கள் கூறுகின்றது.
இந்த பூர்ண சைதன்யம், உலகை உண்டாக்க விரும்பி காமகலையானது. அதாவது ப்ரகாஶ விமர்ஶ
ஶக்திகளாகப் பிரிந்து, பின் காமகலையானது.
அந்த காமகலையிலிருந்து மாயா தத்வம் தோன்றியது. அந்த மாயா தத்வத்தில் காமகலை உலகை
உண்டாக்க வேண்டும் என்ற இச்சையுடன் ப்ரவேஶித்து ஶ்ரீபுவனேஶ்வரி எனும் வடிவம் தாங்கியது.
இப்படி உலக வ்யவஹாரத்திற்காக லீலா மாத்ரமாக அம்பாள் அனேக வடிவங்களைத் தாங்கி விளங்கிய
போதும், அவள் ஸர்வத்திற்கும் ஆதியானவள். அதாவது மாயைத் தாண்டி விளங்கும் பூரண பேரறிவே
மயமானவள்.
காமாக்ஷி சரணம்