Professional Documents
Culture Documents
கல்வி வளர் தமிழ்
கல்வி வளர் தமிழ்
(பேச்சுப்போட்டி)
சான்றோர்களே,
படிக்காமல் இருப்பதனை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்கின்றார் பேரறிஞர் பிளாட்டோ. ஒரு மனிதன்
கல்வியை கற்காமல் இருப்பானானால் அவனது பிறப்பிற்கே எந்த வித அர்த்தமும் இல்லை.
கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் வாக்கு. பிச்சை எடுத்து
அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள
வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே
உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும்
மனிதனை உருவாக்கும் கல்வியே மகத்தானது. அத்தகைய கல்வியே நன்மை, தீமைகள் குறித்து சுயமாகச்
சிந்திக்கவும், பிறர் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாகவும், தன் காலில் தானுான்றி நிற்கவும் உதவும் என்பார்
சுவாமி கற்றோர் மிளிர்வர், தேசம் உயரும். 'கேடுஇல் விழுச் செல்வம் கல்வி' எனும் வள்ளுவர் வாக்கு
நிலைத்து நிற்கும்இதனையே “இன்று உலகத்தை மாற்றக் கூடிய ஒரு ஆயுதம் உள்ளது, அதன் பெயர் கல்வி”
என்று நெல்சன் மண்டேலோ குறிப்பிடுகின்றார்.
ஆன்றோர்களே,